Jump to content

இலைகள் தளிர்க்கின்றன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11164597_10203196245740561_7804170586491

 

நிர்வாண மரங்கள்

கிளைகள் தளிர் நிறைக்க

இலையாடை அணிந்து

தம்மை அழகாக்க

ஆயத்தமாகின்றன 

 

பூமியின் காதலன்

நிதம் கதிர் பரப்பி 

தூங்கிக் கிடக்கும்

வேர்களைத் தட்டி எழுப்ப 

கிளைகள் எங்கணும்

மகிழ்வின் துடிப்பில்

மொட்டுக்கள் பூக்களாகி 

மாலை கட்டி நிற்கிறது மரம் 

 

மறைந்து வாழ்ந்த பறவைகள் 

மரங்களில் அமர்ந்து

மகிழ்வாய்க் காதல் செய்ய

மன நிறைவாய் தளிர்கள்

நாளும் பொழுதும் விரிந்து

நாட்டியமாடும் மங்கையராய்

நடை பரப்பி நிதம் 

நகைக்க வைக்கின்றன

 

பார்க்கும் இடம் எங்கும்

பச்சை வண்ணம் காண

பசுமை கொண்ட மாந்தமனம் 

மனதெங்கும் மகிழ்வோடு

துன்பங்களைத் தூர வைத்து

இயற்கை எழிலை எல்லையின்றி

எங்கும் நிரப்பிக்கொள்ள

போதும் இன்று என எண்ணித்

கதிர்க் குடை சுருக்கக் கதிரவன்

காலம் பார்த்திருக்கிறான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமியின் காதலன்

நிதம் கதிர் பரப்பி

தூங்கிக் கிடக்கும்

வேர்களைத் தட்டி எழுப்ப

கிளைகள் எங்கணும்

மகிழ்வின் துடிப்பில்

மொட்டுக்கள் பூக்களாகி

மாலை கட்டி நிற்கிறது மரம்

 

 

வசந்தத்தை வரவேற்கும் அழகு , அழகாயிருக்கு...!  :)  :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11164597_10203196245740561_7804170586491

 

நிர்வாண மரங்கள்

கிளைகள் தளிர் நிறைக்க

இலையாடை அணிந்து

தம்மை அழகாக்க

ஆயத்தமாகின்றன 

 

பூமியின் காதலன்

நிதம் கதிர் பரப்பி 

தூங்கிக் கிடக்கும்

வேர்களைத் தட்டி எழுப்ப 

கிளைகள் எங்கணும்

மகிழ்வின் துடிப்பில்

மொட்டுக்கள் பூக்களாகி 

மாலை கட்டி நிற்கிறது மரம் 

 

மறைந்து வாழ்ந்த பறவைகள் 

மரங்களில் அமர்ந்து

மகிழ்வாய்க் காதல் செய்ய

மன நிறைவாய் தளிர்கள்

நாளும் பொழுதும் விரிந்து

நாட்டியமாடும் மங்கையராய்

நடை பரப்பி நிதம் 

நகைக்க வைக்கின்றன

 

பார்க்கும் இடம் எங்கும்

பச்சை வண்ணம் காண

பசுமை கொண்ட மாந்தமனம் 

மனதெங்கும் மகிழ்வோடு

துன்பங்களைத் தூர வைத்து

இயற்கை எழிலை எல்லையின்றி

எங்கும் நிரப்பிக்கொள்ள

போதும் இன்று என எண்ணித்

கதிர்க் குடை சுருக்கக் கதிரவன்

காலம் பார்த்திருக்கிறான

 

இவ்வளவு நாட்களாக யாரைப் பார்த்தாலும் ஊர்க் கதை தான்.அவ்வளவோ குளிர்.

 

இப்போ குளிர் குறைந்து மரங்கள் துளிர்விட ஊரையே மறந்துடுவோம்

 

இனி அடுத்த வருடம் குளிர் வரும் போது தான் ஊர் ஞாபகம் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த காலம்

 

கதிரவனின் காலக்

கொடுமையில்
பாறைகளாகிய

உறைபனி விரிப்புக்கள்
மெல்ல மெல்லத் தன்

வீரியத்தை இழந்து
தன் விழுதுகளை

பூமி மீது நீட்டுகின்றன. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி சுவியண்ணா, ஈழப்பிரியன், வாத்தியார்.


இவ்வளவு நாட்களாக யாரைப் பார்த்தாலும் ஊர்க் கதை தான்.அவ்வளவோ குளிர்.

 

இப்போ குளிர் குறைந்து மரங்கள் துளிர்விட ஊரையே மறந்துடுவோம்

 

இனி அடுத்த வருடம் குளிர் வரும் போது தான் ஊர் ஞாபகம் வரும்.

 

வேறு என்னதான் வழி சுவைப்பிரியன் ?? ஒரேயடியாக மறந்துபோகாமல் அப்பப்பவாவது ஊர் நினைவில் வருகிறதே :D
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி சுவியண்ணா, ஈழப்பிரியன், வாத்தியார்.

 

வேறு என்னதான் வழி சுவைப்பிரியன் ?? ஒரேயடியாக மறந்துபோகாமல் அப்பப்பவாவது ஊர் நினைவில் வருகிறதே :D

 

 

என்ன சுமே கூட எடுத்திட்டியளோ?

 

சுவைப்பிரியனுக்கும் ஈழப்பிரியனுக்கும் வித்தியாசம் தெரியல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்குள் 'புதைத்திருக்கும்' கருத்து அருமை!

 

ஒரு வட்டத்தில் பயணிக்கும் இயற்கை, ஒரு மனிதனது வாழ்வை மட்டும் ஒரு வட்டத்தில் நகர்த்துவதில்லை!

 

ஒரு இளமை... ஒரு நடுத்தர வயது.. ஒரு முதுமை...அவ்வளவு தான்!

 

ஒன்று முடிந்தபின்.. அதை மீண்டும் அடைய முடியாத ' வக்கிர நிலை' !

 

ஆனால் பருவகாலங்களின்... 'வசந்தம்' மீண்டும் , மீண்டும் வரும்! :o

 

தொடர்ந்து கவியுங்கள்!

Link to comment
Share on other sites

வசந்த வருகைக்கு கட்டியம் கூறும் கவிஞர்  

மெசொபொத்தேமியா சுமேரியருக்கு

பாராட்டுக்கள்.  உங்களுக்கு எனது அன்பான வசந்த வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுமே கூட எடுத்திட்டியளோ?

 

சுவைப்பிரியனுக்கும் ஈழப்பிரியனுக்கும் வித்தியாசம் தெரியல.

 

அய்யோ தெரிஞ்சு போச்சோ ?? :lol:

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புங்கை, பொயற், தமிழினி, இணையவன்

இதை என்னாலேயே கவிதை என்று கொள்ள முடியவில்லை. பெரியமனதுடன்   வந்தவர்களுக்கு நன்றி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதிர்க் குடை சுருக்கக் கதிரவன்

காலம் பார்த்திருக்கிறான்

 

முத்தான கவிதைக்கு முத்தாய்ப்பான வரிகள். வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி சேயோன்


வசந்த வருகைக்கு கட்டியம் கூறும் கவிஞர்  

மெசொபொத்தேமியா சுமேரியருக்கு

பாராட்டுக்கள்.  உங்களுக்கு எனது அன்பான வசந்த வாழ்த்துக்கள்

 

அய்யோ அண்ணா மோதிரக் கையால் குட்டு வாங்கலாம். ஆனால் என் நிலை எனக்குத் தெரியும் அண்ணா. மிகைப்படுத்தல்  வேண்டாமே அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தத்தை வரவேற்கும் அழகிய கவிதைக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தீயா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.