Jump to content

ஆவிகளும் நாங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

aav_zpsu3ejdg3o.jpg

 

ஆவிகளிலையும் பலவகை இருக்கு  :o

 

இந்த ஆவிகளை எல்லாம் பாக்கப் பாவமாக் கிடக்கு. குமாரசாமி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

anger2-747499.jpg

 

அடுத்த  நாள் அம்மா எங்களுடன் வந்து படுக்கப்போவதாகக் கூறிவிட்டுத் தம்பியின் குடும்பதை அப்பாவின் அறையுள் தூங்கும்படி கூற தம்பியும் பிள்ளைகளும் முதலிலேயே சென்றுவிட்டனர். தம்பியின் மனைவி எம்முடன் கதைத்துவிட்டுப் போனதால் அப்பா தூங்கிய பக்கம் படுக்கவேண்டியதாகிவிட்டது. மேல்மாடியில் என் தங்கை குடும்பமும் என்கணவர் மற்றும் இன்னும் ஒரு மாமா ஆகியோர் தூங்க நான் நின்மதியாக அனைவருக்கும் நடுவில் தூங்கிப்போனேன்.

 

எல்லோரும் தூங்கியிருபார்கள் போல திடீரென விடு விடு ஐயோ என பெரிதாக யாரோ கத்தும் சத்தம். இம்முறை நானே முதலில் அந்தச் சத்தத்தைக் கேட்டதும் திடிக்கிடலோடு மற்ற எல்லாரையும் இருட்டுக்குள் தட்டி எழுப்ப, எல்லோரும் எழும்பி எங்கிருந்து சத்தம் வருகிறது என்று பார்த்தால் மேல்மாடியில் இருந்து வருகிறது.

 

எனக்கு மேல்மாடிக்குப் போகப் பயமாக இருக்க, என்ன பிரச்சனையோ?? ஆராவது போய்ப் பாருங்கோ என்றால் எல்லோரும் நீபோ நீ போ என்று மற்றவரை அனுப்புவதில் குறியாக இருக்க படுத்திருந்த தம்பி என்ன பிரச்சனை.?? நித்திரை கொள்ள விடுறியளே என அலுத்துக்கொண்டு மின்விளக்கைப் போட்டுவிட்டுப் படிகளில் ஏற என்ன நடந்தது என்று அறியும் ஆவலில் மற்றவர் ஒருவிதப் பயத்துடன் பார்த்துக்கொண்டு நிற்க, நானும் பாத்திட்டு  வாறன் என்றபடி அண்ணியும் மேலே போக நானும் துணிவை வரவளைத்துக்கொண்டு படிகளில் ஏற முற்பட படி விளக்கு அணைந்துவிட்டது. உடனே திரும்ப ஓடிவந்து மற்றவர்களுடன் நிற்க்க, அண்ணி இடையில் நின்றுகொண்டு நிவேதா விளக்கைப் போடு என்று கத்துகிறார்.

 

நான் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. தம்பியின் மனைவி சென்று விளக்கைப் போட்டாரே தவிர மேலே படிகளில் செல்ல முற்படவில்லை. நான் கடைக்கண்ணால் திரும்பி மணிக்கூட்டைப் பார்க்க நேரம் ஒன்று நாற்பது. யாரோ படிகளில் வருவது தெரிய பார்த்தால் தம்பி பின்னால் அண்ணி. என்னடா யார் கத்தியது  என்று நான் கேட்கிறேன். மாமாதான் கத்தினவர். என்ன ஏதென்று சொல்லுறார் இல்லை. எல்லாரும் போய்ப் படுங்கோ. விடியக் கதைப்பம் என்று கூற வேறு  வழியின்றி தூங்க முயல்கிறேன்.

 

காலையில் எழுந்து கீழே வந்த மாமாவின் முகத்தில் சிரிப்பு இல்லை. அவருக்கு 65 வயது. மிகத் துணிவானவர். என்ன மாமா நடந்தது என்று நான் கேட்டேன்.

இரவு என் கணவர் இடதுபக்கமும் தங்கையின் கணவர் வலதுபக்கமும் நடுவே மாமாவும் படுத்துத் தூங்கியுள்ளனர். வலது பக்கக் காலை பாதத்தில் இருந்து யாரோ தடவியதுபோல் இருக்க, தங்கையின் கணவன் தான் தூக்கக் கலக்கத்தில் தங்கையின் கால் என்று நினைத்துத் தடவுகிறாரோ என எண்ணியபடி விடு நாடா என்றபடி திரும்பிப் பார்தால் தங்கையின் கணவர் குறட்டைவிட்டபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, மாமாவும் மீண்டும் நேராகப் படுக்க வயிற்றில் பாரம் ஒன்று அழுத்தியபடியே மேல்நகர இவரால் உடலை அசைக்கவே முடியாதபடி பாரம் அழுத்த கைகால்களை அசைக்க எத்தனிக்கிறார் மாமா. முடியாதுபோக பாரம் அழுத்தியபடி இப்ப நெஞ்சிலும் கழுத்திலும் வந்து நிற்க கத்தக் கத்த வார்த்தைகளே வராது தொண்டைக்குள்ளேயே அமுங்க, மாமாவின்  கை இரண்டு மூன்றுதடவை தட்டுப்பட என் கணவர் விளித்து என்ன மாமா என்று கேட்க, கழுத்தின் பாரம் குறைய மாமா ஐயோ விடுவிடு என்று கத்தினதாகச் சொல்ல, நாங்கள் எல்லோரும் சிரிக்கிறோம். உங்களுக்கும் பயம் பிடிச்சிட்டிது என்று என் தம்பி கூற அவருக்குக் கோவம் வருகிறது.

 

உங்களுக்கு விளையாட்டாக் கிடக்கு. சீவன் போப்போகுது என்றே நான் நினைத்துவிட்டேன். நெஞ்சில் ஏறி எதுவோ இருந்துகொண்டு கழுத்தை நெரிக்க ..... எனக்கு இப்பிடி ஒருநாளும் வந்ததில்லை என்றுவிட்டு இருக்க அண்ணி கெட்ட ஆவிகள் இந்த நேரங்களில் யாரின் உடலில் போகப் பாக்கும். நல்லகாலம் மாமா தப்பிவிட்டார் என்று கூற, பூருற ஆவி ஏன் அண்ணி சத்தம் போடாமல் பூராமல் அவற்றை கழுத்தில கை வைச்சது என்று கேட்க, அண்டைக்கு உனக்கு நடந்ததும் அப்ப பொய்யாகத்தான் இருக்கவேணும் என்று என் வாயை அடைக்க நான் ஒன்றும் கூற முடியாது நின்றேன்.

 

 

இன்னும் இருக்கு

Link to comment
Share on other sites

இறந்த வீடுகளுக்கு சில evil ஆவிகளும் வந்து போவினமாம்.. :unsure: அதில் ஒன்றின் வேலையாக இருக்கலாம்.. desismileys_3028.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு அவசரப்படுவதே தொழிலாகிவிட்டது கொஞ்ச நாட்களாக.

 

வணக்கம் சுமே.....

 

எனக்கு 

உங்கள் அப்பா இறக்கும்வரை

அவரையோ தங்களையோ தெரியாது.

 

ஆனால் அவர் இறந்திபின் தான் அவரை அறியமுடிந்தது

அவர் எம் சொத்து என்பது தெரியவந்தது...

 

இந்தக்கதையை நீங்கள் தொடக்கும் போதும்

அதற்காக போட்ட படத்தையும் பார்த்தபோது

அவர்மீதான எமது விம்பத்தை இவை மாற்றிவிடக்கூடும் எனத்தோன்றியது

சில விடயங்களுக்கு அவசரப்படத்தான் வேண்டும்

உங்களது தொடர்ச்சியான எழுத்துக்களுக்கும்

படங்களுக்கும் பின்

தற்பொழுது உங்களது அப்பா என் கண்முன் ஆவியாக மட்டுமே உள்ளார்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுமே.....

 

எனக்கு 

உங்கள் அப்பா இறக்கும்வரை

அவரையோ தங்களையோ தெரியாது.

 

ஆனால் அவர் இறந்திபின் தான் அவரை அறியமுடிந்தது

அவர் எம் சொத்து என்பது தெரியவந்தது...

 

இந்தக்கதையை நீங்கள் தொடக்கும் போதும்

அதற்காக போட்ட படத்தையும் பார்த்தபோது

அவர்மீதான எமது விம்பத்தை இவை மாற்றிவிடக்கூடும் எனத்தோன்றியது

சில விடயங்களுக்கு அவசரப்படத்தான் வேண்டும்

உங்களது தொடர்ச்சியான எழுத்துக்களுக்கும்

படங்களுக்கும் பின்

தற்பொழுது உங்களது அப்பா என் கண்முன் ஆவியாக மட்டுமே உள்ளார்.

நன்றி.

 

அப்ப உங்களுக்கு நான் எழுதுவது விளங்கவில்லை என்று அர்த்தம்.  எதுக்கும் ஓட ஓட வாசிக்காது மற்றவர்கள் எழுதியதையும் நான் அதற்கு எழுதியதையும் வாசித்தால் வடிவா விளங்கும் :D அப்பா ஆவியாக வந்தவர் என்றோ வருவார் என்றோ எங்காவது கூறியிருக்கின்றேனா??? அவர் எனக்கு முதலில் அப்பா. அவர் இருக்கும்போதே எப்படி வாழ்ந்தவர் என்பது உங்களிலும் விட எனக்கும் அவருடம் பழகியவர்களுக்கும் தெரியும். என் அப்பாவிடம் அன்பும் மரியாதையும் என்னைவிட மற்றவர்களுக்கு அதிகமாக இருந்துவிட முடியுமா ????

அப்பாவை நீங்கள் ஆவியாகப் பார்ஹத்தால் அது உங்கள் மனதின் கோளாறு

இறந்த வீடுகளுக்கு சில evil ஆவிகளும் வந்து போவினமாம்.. :unsure: அதில் ஒன்றின் வேலையாக இருக்கலாம்.. desismileys_3028.gif

 

இதையாவது வாசியுங்கள் விசுகு அண்ணா

 

Link to comment
Share on other sites

எதுக்கும் வீட்டில இரண்டு மூன்று இடத்தில கமராக்களை பொருத்தி விடுங்கோ 
சுவாரசியமா எதுவும் தட்டுப்பட்டா யுடிய்யுப்பில போட்டு லைக் அள்ளலாம். 
 
 
ஒருவேளை உங்களுக்கு தெரியாமல் உங்கட வீட்டை வேறு யாரும் வசிக்கிறார்களோ தெரியாது. கீழ் வீடியோவில இருப்பவர் வீட்டை அவருக்கே தெரியாமல் ஒரு நபர் வாழ்ந்திருக்கிறார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவி பற்றி நினைத்து தூங்கினால் அப்படிப்பட்ட அனவுகளும் வரும் அக்கா ஆனா ஆவீ இருக்கா இல்லையா எனக்கு தெரிந்தாகணும்

ஏனென்றால் நான் இருக்குற இடத்தில உயிர் இருந்தும் பயம் உறுத்தும் ஆவிகள் சுற்றி திரிகின்றன அக்கா :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எதுக்கும் வீட்டில இரண்டு மூன்று இடத்தில கமராக்களை பொருத்தி விடுங்கோ 
சுவாரசியமா எதுவும் தட்டுப்பட்டா யுடிய்யுப்பில போட்டு லைக் அள்ளலாம். 
 
 
ஒருவேளை உங்களுக்கு தெரியாமல் உங்கட வீட்டை வேறு யாரும் வசிக்கிறார்களோ தெரியாது. கீழ் வீடியோவில இருப்பவர் வீட்டை அவருக்கே தெரியாமல் ஒரு நபர் வாழ்ந்திருக்கிறார்.
 

 

 

இருக்கும் இருக்கும் :(

 

ஆவி பற்றி நினைத்து தூங்கினால் அப்படிப்பட்ட அனவுகளும் வரும் அக்கா ஆனா ஆவீ இருக்கா இல்லையா எனக்கு தெரிந்தாகணும்

ஏனென்றால் நான் இருக்குற இடத்தில உயிர் இருந்தும் பயம் உறுத்தும் ஆவிகள் சுற்றி திரிகின்றன அக்கா :rolleyes: :rolleyes:

 

சுற்றித்திரியிர ஆவியை நான் பாக்காமல் சொல்ல ஏலாது முனிவர்

 

Link to comment
Share on other sites

என்னை பொறுத்தவரை ஆவிகள் பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை பிழை என சொல்லவில்லை.
 
நித்திரை கொள்ளும்போது தலைக்கு கீழை இரும்பு சாமான் ஒண்டை வைத்துகொண்டு படுத்தால் உந்த பேய் பிசாசு எல்லாம் வராது எண்டு சொல்லுறவை. ஒருக்கா அப்படி ட்ரை பண்ணி பாருங்கோ.  :icon_idea:
 
நான் இருக்குது எண்டு நம்பிற ஒரே ஆவி நீர் ஆவி.  :D  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆவி பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு இருக்கு .

.

..

.

.

.

.

..

.

.

..

.

.

.

..

.

.

இவவை கொண்டுவந்து பாடாவிட்டால் எல்லாம் சரி வரும் .

 

 

 

 

 

 

அவ்ஸ் ல் சூப்பராய் பாடுபவர் 11120540_1614931618723095_68711659985363

சுமோ அக்கா உங்களிற்கு மாத்திரம் பேய் படம் போட தெரியுமோ  நாங்களும் போடுவிம்ல எப்படி நல்ல இருக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீனா . ஆவிகள் பேய்கள் காணப்படுகின்ற வீடுகளில் சத்தமாக இவவின் பாட்டை போடவும் அல்லது சுமே அக்காவும் சேர்ந்து பாடினால் முழுபலன் கிடைக்கும் ஒரு நூறு வருடத்திட்க்கு அந்த வீடுகளில் ஆவி,பேய்கள் மறந்தும் தலை வைச்சு படுக்காதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்னை பொறுத்தவரை ஆவிகள் பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை பிழை என சொல்லவில்லை.
 
நித்திரை கொள்ளும்போது தலைக்கு கீழை இரும்பு சாமான் ஒண்டை வைத்துகொண்டு படுத்தால் உந்த பேய் பிசாசு எல்லாம் வராது எண்டு சொல்லுறவை. ஒருக்கா அப்படி ட்ரை பண்ணி பாருங்கோ.  :icon_idea:
 
நான் இருக்குது எண்டு நம்பிற ஒரே ஆவி நீர் ஆவி:D  :D

 

 

அப்ப எதுக்கு இரும்புத் துண்டு எல்லாம் தலைக்குக் கீழே ????

 

நன்றி மீனா . ஆவிகள் பேய்கள் காணப்படுகின்ற வீடுகளில் சத்தமாக இவவின் பாட்டை போடவும் அல்லது சுமே அக்காவும் சேர்ந்து பாடினால் முழுபலன் கிடைக்கும் ஒரு நூறு வருடத்திட்க்கு அந்த வீடுகளில் ஆவி,பேய்கள் மறந்தும் தலை வைச்சு படுக்காதுகள்.

 

இது நல்ல பிஸ்நெஸ். :lol: யாரின் வீடுகளில் ஆவி வந்தால் என்னைக் கூப்பிடுங்கள் விரட்ட. மிகச் சொற்ப தொகையே அறவிடப்படும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D  :lol:

 

ஐயோ

Link to comment
Share on other sites

அப்ப எதுக்கு இரும்புத் துண்டு எல்லாம் தலைக்குக் கீழே ????

ஆவி பேய் பிசாசு என்பவை இருக்குது எண்டு நம்புற ஆளுகளுகுதான் இரும்புத்துண்டு. நம்பாத ஆளுகளுக்கு ஒண்டும் தேவை இல்லை. நானும் ஒருக்காலும் இரும்புத்துண்டு பாவிக்கவில்லை. ஆனால், இரும்புத்துண்டு வைத்துக்கோண்டு படுத்தும் ஆவி வந்தால் நான் பொறுப்பு இல்லை. :lol:  :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதக் கடைசியில் மீண்டும் தொடர்வேன். அதுவரை பொறுங்கள் :)

Link to comment
Share on other sites

ஆவிகள் ஹொலிடே போகுது போல இருக்கு  :D  :D  :D

 

ஆவிகளுக்கு பரீட்சை என்று ஒரு கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆவிகளுக்கு பரீட்சை என்று ஒரு கதை

 

 

இல்லை, இல்லை கதையை வாசிச்ச எல்லார்ட வீட்டையும் வந்து கதையின் கருத்தை கேட்கப்போறாங்களாம்.

எதுக்கும் எல்லாரும் கதவை இறுக பூட்டி வையுங்கோ . நடு இரவில தான் வருவாங்க .

அது சரி , கதவ பூட்டினாலும் அவங்களால உள்ளே வர முடியுமே தானே ?

Link to comment
Share on other sites

அடபாவிகள்  :D அந்த அப்பாவி ஓட்டை வாய்ப் பிள்ளையை ஆவியாக்கீட்டீர்களே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதக் கடைசியில் மீண்டும் தொடர்வேன். அதுவரை பொறுங்கள் :)

 

அதுவரை ஆவிகளே எங்களுக்கு கதை சொல்லுறது ?ஆவிகளும் நீங்களும் ....... :D

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 06/05/2015 at 0:25 PM, putthan said:

 

 

அதுவரை ஆவிகளே எங்களுக்கு கதை சொல்லுறது ?ஆவிகளும் நீங்களும் ....... :D

அட நானே கதை சொல்லுறது எண்டிட்டு மறந்திட்டனே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.