Jump to content

உங்கள் மனைவி பொட்டு அணியாமல் இருப்பதை அனுமதிப்பீர்களா?


Recommended Posts

1. உங்கள் மனைவி பொட்டு அணியாமல் இருப்பதை அனுமதிப்பீர்களா?

2. உங்கள் மனைவி ஒட்டுப்பொட்டு வைப்பதை அனுமதிப்பீர்களா?
 
குறிப்பு:
 
கவனம் இரண்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளது, பதில்களை வினா இலக்கத்துடன் பதியவும்

சலுகை:

ஒரு கேள்விக்கு பதில் அளிப்பவர்கள், அடுத்த கேள்விக்கு பிந்தியும் பதிலளிக்கலாம்

Link to comment
Share on other sites

1) நாங்கள் என்ன அனுமதிக்கிறது.. அவையளே வேலை நாட்களில் வைக்கிறதில்லை.. :lol:

2) வைபவங்களுக்கு மட்டும் ஒட்டுப் பொட்டு. (கோயிலுக்குப் போனால் குங்குமப்பொட்டு..) :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. உங்கள் மனைவி பொட்டு அணியாமல் இருப்பதை அனுமதிப்பீர்களா?

2. உங்கள் மனைவி ஒட்டுப்பொட்டு வைப்பதை அனுமதிப்பீர்களா?

 

குறிப்பு:

 

கவனம் இரண்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளது, பதில்களை வினா இலக்கத்துடன் பதியவும்

சலுகை:

ஒரு கேள்விக்கு பதில் அளிப்பவர்கள், அடுத்த கேள்விக்கு பிந்தியும் பதிலளிக்கலாம்

 

 

உண்மையைச்சொன்னால்

அதையெல்லாம் நான் பார்ப்பதில்லை

பார்க்க எனக்கு நேரமில்லை...

அது அவரவர் விருப்பம்..

 

இந்தக்கேள்விக்குப்பின்னர் தான் யோசித்துப்பார்த்தேன்

வேலைக்குப்போவதால் அநேகமாக பொட்டு வைக்கமாட்டார்

எம்மவர்களின்  விழாக்களுக்கு போகும் போது மட்டும் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வார்..

 

(அநேகமாக புலம் பெயர் தேசங்களில் இது தான் நடைமுறை என நினைக்கின்றேன்)

 

ஆனால் மனைவிக்கும் பெண் பிள்ளைகளுக்கும் கடுமையான ஒரு  உத்தரவுண்டு

காதில்  தோடு போடாது எனக்கு முன்னுக்கு வரக்கூடாது

இரவு நித்திரைக்கு போகும் போது களட்டி வைத்துவிட்டாலும்

எனக்கு முன் வரும் போது போட்டுக்கொண்டு தான் வருவார்கள்..

பெண்கள் எப்பொழுதும் யொலித்துக்கொண்டிருக்கணும் என்பது என் விருப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் கட்டாயம் போட்டு வைக்க  வேண்டும் என எனது ஆதங்கத்தைத் தெரிவிக்க இருக்கின்றேன். :D

Link to comment
Share on other sites

இதுக்கு எல்லாமா ஆத்துக்காரரை கேட்டிட்டு இருப்போம், தாலியையே கழட்டி வைக்க சொல்லிட்டினமாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பெண்கள் கலாச்சார அடையாளங்களை சுமக்கும் கழுதைகளாக இருப்பது எனக்கு ஒருபோதும் பிடிப்பதில்லை.
பொட்டு வைப்பதில் ஏதேனும் பலன் இல்லாவிடின் 
அதை சும்மா வைத்துகொண்டு திரிய வேண்டும் என்று நான் எண்ணுவதில்லை.
தலைமயிர் வளர்ப்பதிலும் எனக்கு ஒரே எண்ணம்தான்.
கட்டையான தலைமுடி கூடுதலான சுதந்திரம் என்றால் வெட்டிவிட வேண்டும்.
 
அழகுக்கு மெருக்கூட்டல் எனும் அர்த்தத்தில் 
எப்போ தேவை படுகிறதோ அப்போது வைத்து கொள்ளலாம். 
Link to comment
Share on other sites

1. உங்கள் மனைவி பொட்டு அணியாமல் இருப்பதை அனுமதிப்பீர்களா?

 

என்னைக் கேட்டு மனைவி பொட்டு வைக்கவில்லை. பொட்டு வைத்துவிட்டு, பொட்டு வைக்காமல் விட்டால், அது நிச்சயமாக எனது மனதுக்கு கஸ்டமாகத்தான் இருக்கும். அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் இதுவரை ஏற்படவில்லை. ஏற்பட்டால் அதை என்னை உசாதீனப்படுத்துவதாகக் கருதி, அதன் எதிர்தாக்கத்தை எனது செயற்பாடுகளில் காண்பிப்பேன் என நினைக்கிறேன்.

2. உங்கள் மனைவி ஒட்டுப்பொட்டு வைப்பதை அனுமதிப்பீர்களா?

 

ஒட்டுப்பொட்டுத்தானே கெதி.. அது இப்ப நெற்றியில மட்டும் இல்லாமல், 'பாத்ரூம்' சுவரளையும் பதம் பார்க்குது.  :o  :lol: 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு அழகாக தெரிகிறது. அதனால் பெண்கள் பொட்டு அணிவது அழகு என்றே படுகிறது. அழகென்று விரும்பாதவர்கள் அணிவதை தவிர்க்கலாம்.

 

மருதங்கேணி அண்ணன்.. நீங்கள் பெண்கள் மீதான கலாசார திணிப்பை எதிர்க்கிறீர்களா.. அல்லது ஒட்டுமொத்த மனித கலாசார வடிவங்களையும் எதிர்க்கிறீர்களா. அப்படி என்றால் மனிதன் உரிஞ்சு போட்டு காட்டுக்குள் தான் வாழனும். வசதி எப்படி. சும்மா... சும்மா.. வைக்கிற பொட்டிலும்.. போடுற தாலியிலும் பெண்களின்.. வீரம்.. ஆளுமை.. அடக்கப்படுகுது என்ற பசப்பு பிரச்சாரங்களில் நம்பிக்கை இல்லை.

 

எத்தனையோ முஸ்லீம் பெண்கள்.. முஸ்லிம் அடையாளத்தோடு ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள். பொட்டை கழட்டி வைச்சால்.. தாலியை கழட்டி வைச்சால் தான் மூளை சிந்திக்கும் என்று சொல்லுதா..?! விரும்பிறவை அணியலாம். விரும்பாதவை தவிர்க்கலாம். அது அவரவர் சுய விருப்பம். அதைவிட்டு பொட்டும் தாலியும் தான் பெண்களுக்கு சுமை என்பது.. சுத்தப் போலித்தனமான.. ஒரு ஆழ்ந்த சிந்தனையும் அற்ற வாதம். :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இப்போது பொட்டுக் காலமாக்கும்.

அனுமதி கொடுக்க அடிமைகளையா தமிழ் ஆண்கள் வைத்திருக்கின்றார்கள்? இப்படியான கேள்விகளே பிழை.

Link to comment
Share on other sites

யாழில் இப்போது பொட்டுக் காலமாக்கும்.

அனுமதி கொடுக்க அடிமைகளையா தமிழ் ஆண்கள் வைத்திருக்கின்றார்கள்? இப்படியான கேள்விகளே பிழை.

வைச்சிருக்குறவைக்கு பொட்டு என்ன பூவென்ன......

இங்கு அழகான குடும்பத்தில் இருபவர்களிடம் தான் கேள்வி

தமிழ் கலாச்சாரத்தை பேணுவதே நோக்கம் ஒழிய இங்கை ஒருத்தரையும் அடிமைப்படுத்தவில்லை

அன்புக்கட்டளை என்று ஒண்டு இருக்கு தெரியுமோ?

கருத்தெளுதுவதை விட்டு தீர்ப்பு எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறேன்

 

 

 

இப்பதிவில் அழகான கருத்தெளுதிய அனைவருக்கும் நன்றிகள்...உங்களின் ஊக்கம் எங்களுக்கு தேவை

தொடர்ந்தும் எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சாரத்தைப் பேணுகின்றோம் என்ற போர்வையில்தான் இப்படியான பிற்போக்குத்தனமான கேள்விகள் வருகின்றன.

"உங்கள் அழகான குடும்பப் பாங்கான மனைவி பொட்டு அணியாமல் இருந்தால் மனம் வருந்துவீர்களா?" என்று கேட்டிருக்கலாம். அன்புக் கணவன்களது அங்கலாய்ப்பும், உள்ளக்கிடக்கையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கும். :wub:

"அனுமதிப்பீர்களா?" என்ற கேள்வி அழகான குடும்பத்து மனைவி கணவனின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டும் என்ற கருத்தை மறைமுகமாகச் முன்வைக்கின்றது. :icon_idea:

தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மனைவிகளை வைத்திருப்பவர்களும், மனைவிமாரின் கட்டுப்பாட்டுக்குள் பொத்திக்கொண்டு இருப்பவர்களும், ஒருவரும் இல்லாத தனிக்கட்டைகளும் ஓடிவந்து கருத்து வைப்பார்கள் :icon_mrgreen:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேல் கட்டாயம் போட்டு வைக்க  வேண்டும் என எனது ஆதங்கத்தைத் தெரிவிக்க இருக்கின்றேன். :D

 

 

சும்மா ஆதங்கத்தை வெளிப்படுத்தபோய் கடைசியில் உங்கள் நெற்றியில் இரத்த பொட்டை பெறாவிட்டால் சரி.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுப்பொட்டுத்தானே கெதி.. அது இப்ப நெற்றியில மட்டும் இல்லாமல், 'பாத்ரூம்' சுவரளையும் பதம் பார்க்குது.  :o  :lol:

 

சோழியான்.... மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்...... இருப்பது புரிகின்றது. :D

Link to comment
Share on other sites

கலாச்சாரத்தைப் பேணுகின்றோம் என்ற போர்வையில்தான் இப்படியான பிற்போக்குத்தனமான கேள்விகள் வருகின்றன.

"உங்கள் அழகான குடும்பப் பாங்கான மனைவி பொட்டு அணியாமல் இருந்தால் மனம் வருந்துவீர்களா?" என்று கேட்டிருக்கலாம். அன்புக் கணவன்களது அங்கலாய்ப்பும், உள்ளக்கிடக்கையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கும். :wub:

"அனுமதிப்பீர்களா?" என்ற கேள்வி அழகான குடும்பத்து மனைவி கணவனின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டும் என்ற கருத்தை மறைமுகமாகச் முன்வைக்கின்றது. :icon_idea:

தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மனைவிகளை வைத்திருப்பவர்களும், மனைவிமாரின் கட்டுப்பாட்டுக்குள் பொத்திக்கொண்டு இருப்பவர்களும், ஒருவரும் இல்லாத தனிக்கட்டைகளும் ஓடிவந்து கருத்து வைப்பார்கள் :icon_mrgreen:

ஆம் ஒருவரும் இல்லாத தனிக்கட்டைகளுக்கும், இருந்தும் இல்லாமல் இருக்கும் தனிக்கட்டைகளுக்கும்இது குத்துவாதையா தான் இருக்கும்

நீங்கள் கூறும் வசனநடை மாற்றங்கள் வரவேற்கத்தக்கது

மற்றும்படி பின்னுக்கு நிண்டு பார்த்த ஒருபோக்கா தான் விளங்கும்.... கொஞ்சம் சுத்தி வளைச்சு பார்த்தால் எல்லாப்போக்கும் விளங்கும்

புரியாதவிடத்து பூதக்கண்ணாடியின் பிரயோகம் வரவேற்கதக்கது

பூதக்கண்ணாடி என்றவுடன் சிறிய பொட்டு ஞாபகம் வருகுறது, வேலைக்கு செல்லும் போது இதை பாவிக்க முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டு அழகாக தெரிகிறது. அதனால் பெண்கள் பொட்டு அணிவது அழகு என்றே படுகிறது. அழகென்று விரும்பாதவர்கள் அணிவதை தவிர்க்கலாம்.

 

மருதங்கேணி அண்ணன்.. நீங்கள் பெண்கள் மீதான கலாசார திணிப்பை எதிர்க்கிறீர்களா.. அல்லது ஒட்டுமொத்த மனித கலாசார வடிவங்களையும் எதிர்க்கிறீர்களா. அப்படி என்றால் மனிதன் உரிஞ்சு போட்டு காட்டுக்குள் தான் வாழனும். வசதி எப்படி. சும்மா... சும்மா.. வைக்கிற பொட்டிலும்.. போடுற தாலியிலும் பெண்களின்.. வீரம்.. ஆளுமை.. அடக்கப்படுகுது என்ற பசப்பு பிரச்சாரங்களில் நம்பிக்கை இல்லை.

 

எத்தனையோ முஸ்லீம் பெண்கள்.. முஸ்லிம் அடையாளத்தோடு ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள். பொட்டை கழட்டி வைச்சால்.. தாலியை கழட்டி வைச்சால் தான் மூளை சிந்திக்கும் என்று சொல்லுதா..?! விரும்பிறவை அணியலாம். விரும்பாதவை தவிர்க்கலாம். அது அவரவர் சுய விருப்பம். அதைவிட்டு பொட்டும் தாலியும் தான் பெண்களுக்கு சுமை என்பது.. சுத்தப் போலித்தனமான.. ஒரு ஆழ்ந்த சிந்தனையும் அற்ற வாதம். :icon_idea::)

குளிர்நாட்டுக்கு வந்தாலும் பெண்கள் சேலை அணிய வேண்டும் 
ஆண்கள் வெள்ளைக்காரன் என்ன அணிகிறானோ ? அப்படியே வசதியை கைப்பற்றி விட வேண்டும் எனும் எண்ணம் 
ஒரு ஆணாதிக்க சிந்தனை.
ஏன் மேற்கு நாடுகளில் காலியான வீடுகளுக்கு பெண்கள் குளிருக்கேற்ற ஆடை அணிய முடியாது?
அல்லது ஆண்கள் எல்லோரும் வேட்டி கட்ட முடியாது ? 
 
மனிதனின் முன்னேற்றத்திற்கு எது தடையாக இருக்கிறதோ அது இடைவழியில் கைவிடபட்டே ஆகும்.
அதற்காக எல்லாம் காட்டுக்கு போக தேவை இல்லை.
பெருகிவரும் மனித இனம் 
அழிந்து வரும் இயற்கை வளங்கள்  
புதிய தொழினுட்பங்கள் என்பன 
மனித வாழ்வை வடிவமைப்பதில்  பெரும் பங்காற்றி கொண்டு இருக்கின்றன.
 
திருப்பதிக்கு ஒன்லைனில் அர்ச்சனை செய்கிறார்கள்.
நீங்கள் கிரெடிட் கார்டை இழுத்துவிட்டால் அங்கு அர்ச்சனை நடக்கும்.
மாதவிலக்கு என்று பெண்கள் அர்ச்சனை செய்யமுடியவில்லையே என்று கவலை பட தேவை இல்லை 
க்ரெடிட் கார்டு இருந்தால் ஐ போனில் பாத்ரூமில் இருந்தே இழுத்துவிடலாம். 
 
நாடு ஒத்து வராதவர்கள் காட்டு பக்கம் நகர்ந்து கொள்ளலாம் 
எல்லோரும் நகர தேவை இல்லை.
நிர்வாணமாக கொஞ்ச நேரம் அலைவதால் தமக்கு பல பாரங்கள் குறைந்து மனம் சுகம் அடைவதாக கூறிக்கொண்டு 
நிர்வாண கடற்கரைகளில் இப்போ அதிகம் பேர் கூடுகிறார்கள்.
ஆடைகளை களைந்து திரிவதால் காட்டுக்கு போக வேண்டும் என்று இல்லை.
கலாச்சாரத்தை ஒரு சுமையாக சுமக்க தொடங்கினால் 
யாரும் இறக்கி வைக்கத்தான் யோசிப்பான். 
 
ஆணோ 
பெண்ணோ 
வாழ்வை ஒரு இயல்பு நிலையில் வாழ்ந்து மகிழ்வோடு சாகவேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.
 
ஊருக்கும் பிடிக்கும் என்பதனால் 
செடில் குத்தி காவடி ஆடும் கழுதைகளாக மனிதன் இருந்தால் ...?
கடவுளுக்குதான் அவமானம்.
இதை விட சற்று கூடுதலான அறிவை இவர்களுக்கு கொடுக்க முடியாதா ?
என்று கடுவுளைதான் ஏளனமாக பார்ப்பார்கள். 
 
pb-110801-beach-crowd-7a.photoblog900_ep
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆணோ 
பெண்ணோ 
வாழ்வை ஒரு இயல்பு நிலையில் வாழ்ந்து மகிழ்வோடு சாகவேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

 

 

இந்தப் பொதுமைப்பாட்டை விட்டு விலகி பெண்கள் தான் ஏதோ எல்லா கலாசார பாரங்களையும் சுமக்கிறார்கள் என்பது போல அமைந்த தங்கள் முன்னைய கருத்தில் இருந்து பின்னையது  நிறைய திருந்தி இருக்கிறது.

 

பொட்டு தாலி.. மோதிரம்.. கூலிங்கிளாஸ்.. ஆடை... அடுப்படி.. இதெல்லாம்.. அவரவர் விருப்பு. பெண் விரும்பினால் செய்யலாம்.. இல்லது விடலாம். ஆண் விரும்பினால் செய்யலாம்.. இல்லது விடலாம்.

 

அழகாக இருக்கிறது என்று சொல்ல எல்லோருக்கும் சுதந்திரமுள்ளது. அதை ஆக்கபூர்வமாக கருத்தில் எடுக்க விரும்பிறவை எடுக்கலாம்.. இல்லது விடலாம்.

 

கடற்கரையில் காத்து வாங்க விரும்பிறவை அங்க வாங்கட்டும்.. காட்டில வாங்க விரும்பிறவை அங்க வாங்கட்டும். இதில திணிப்பு.. பாரம் என்பது எல்லாம்.. தேவையற்ற பதங்கள். உங்களுக்கு விரும்பினதை உங்கள் சொந்த சிந்தனை நிமித்த.. நீங்கள் செய்ய கடைப்படிக்க சந்தர்ப்பம் உள்ள நிலையில்.. அதைச் செய்யாமல்.. கலாசாரம் திணிக்குது.. நாகரிகம் திணிக்குது.. சமூகம் திணிக்குது என்று கூப்பாடு போடுவதில் பயனில்லை என்பது தான் எங்கள் கருத்தாக்கம் இங்கு ஆகும். ஒருவருடைய சிந்தனைக்கு செயலுக்கு.. பொட்டு தடை போட முடியாது.  :lol::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருது இது ஆணாதிக்க சிந்தனை இல்லையா

image.jpg

வெள்ளையின்ட கலியாண வீட்டிற்கு இன்னும் போகல போல

Link to comment
Share on other sites

சோழியான்.... மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்...... இருப்பது புரிகின்றது. :D

 

https://www.youtube.com/watch?v=NaeKkH0hPus

:o  :icon_idea:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.