Jump to content

பெண்கள் எப்போது சுதந்திரமாக இருக்க முடிகிறது ?????


Recommended Posts

எங்கப்பா சுதந்திரத்துக்காகப் போராடிய புதுமைப் பெண் சுமே எங்கேஏஏஏஏஏஏஏஎ???????


:D  :D


 

பெண்களைப் பொறுத்த மட்டில் பிறந்த நாள் முதற்கொண்டு வளரும் நாளெல்லாம் பெற்றவரின் கட்டுப்பாட்டின் கீழும், அதன்பின் கணவரின் ஆளுமையின் கீழும் அவர் சார்ந்த மாமனார் மாமியார் போன்றவர்களுக்குப் பயந்தபடியும் பின்னர் பிள்ளைகளுக்குப் பயந்து அல்லது அவர்கள் விருப்பப்படி நடந்து ........தனக்குப் பிடித்தவாறு எப்போது அவளால்  நின்மதியாக சந்தோசமாக வாழ முடிகிறது ????

 

 

சுமே உங்கட மாமியார் வாழை இலை வெட்டிப் போட்டா எண்டு இரவிரவாய் பிளேனிலை ஏத்தி இலங்கைக்கு அனுப்பின கதை எழுதினியள் எல்லோ, நீங்கள் மறந்திட்டியள் நாங்கள் இன்னுமே மறக்கேலையே  :D  :lol: . இப்ப சொல்லுங்கோ யாருக்கு யார் பயம் என்று  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"சுதந்திரம்"
என்பதை நாம் புரியாதவரை அல்லது அதை வரையறுக்க முடியாத வரை 
இதில் தெளிவாக எதையும் எழுத முடியாது.
 
எறும்புகளை எடுத்தால் ராணிக்கு தேவையான அனைத்து உணவு சொவ்காரிய தங்குமிட வசதி 
போன்றவற்றை செய்வதே மற்றைய எறும்புகளின் வேலை.
ஒரு கொலோணியை கட்டி அதை பாதுகாப்பதை எந்த சோம்பலும் இன்றி நாளும் நாலும் செய்யும்.
 
ராணி மற்றைய எறும்புகளின் உழைப்பில் வாழ்ந்துகொண்டு 
முட்டை இடுவது மட்டுமே வாழ்க்கை.
வெளி உலகம் தெரியாது. 
மற்றைய எறும்புகளுக்கு கொலை அச்சுறுத்தல் பிளஸ் உழைப்பு 
ஆனால் வெளி உலகில் வாழ்க்கை. 
 
இதில் எது சுதந்திரம் என்று  நாம்தான்  முடிவு கொள்ள வேண்டும். 
 
மனிதர்களின் வாழ்வு வரையறுக்க படவில்லை 
அதனால் வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதை மறுக்க முடியாது.
இதில் பல ஆண்களும் சிக்கி கொள்கிறார்கள் என்பதையும் ஏற்றுகொள்ள வேண்டும். 
 
பொதுவாக எமது சமூகத்தை பார்த்தால்.
பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதை விட எமது சமூகம் அழுக்கானது என்பதுதான் உண்மை.
எனக்கு இருந்த சுதந்திரம் எனது அக்காவிற்கு இருக்கவில்லை.
இது எங்கள் வீட்டில் மட்டுமல்ல எல்லா வீடிலும் பார்த்திருக்கிறேன்.
நான் சயிக்கிள் எடுத்துகொண்டு போனால் அம்மா அப்பா இருவரும் எங்கு போகிறாய் என்று கேட்பதில்லை 
அக்கா போவதற்கு முன்பே காரணம் கூறித்தான் செல்லும் நிலைமை இருந்தது. 
இது பொதுவாக எல்லா வீட்டிலும் இருந்தது.
இது (செவ்வந்தி அக்கா சொல்லும்) தனிமனித ஒழுக்கமா அல்லது சுதந்திர மறுப்பா என்று 
என்னால் முடிவு செய்ய முடியவில்லை.
எனக்கு தரபட்டது  சுதந்திரமா  அல்லது நான் மனித அழுக்கா என்பதும் கேள்விக்கு உள்ளானது.
தராசில் இரண்டும் ஒரே நிறுவையில் இருக்கவில்லை என்பதுதான் எனது வாதம். 
இதை சமநிலை படுத்த தடையாக இருப்பது சமூகம்தான்.
இன்று இந்தியாவில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு சமூகமே முதல் காரணம்.
பெண்கள் இதில் பாதிப்பு அடைகிறார்கள் என்பதை பார்க்கும்போது....
 
நான் மனித அழுக்கு என்றுதான் என்னால் சொல்ல முடியும்.
மீண்டும் நான் நாமகும்போது அது சமூகம் ஆகிறது. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் கடையில் வாங்கும் பொருள் அல்ல..வீட்டு,வெளிப்புற உறவுகள் தாங்களாக புரிந்து கொண்டு மற்றவர்களது உணர்வுகளுக்கு ஏற்ப நடப்பதை தான் நான் சுதந்திரமாக நினைப்பேன்...நம் பெற்றோர்,உறவுகள் இயற்கையாகவே ஆண் பிள்ளைகளை வேறு விதமாகவும்,பெண் பிள்ளைகளை வேறு விதமாகவும் வளர்த்து விட்டார்கள்..இன்னும் அந்த வரை முறையிலிருந்து சில குடும்பங்கள் மாறுகிறார்கள் இல்லை என்பதும் உண்மை...முன்பு சில விடையங்களை பெற்றோர் கண்டிப்போடு சொல்லும் போது என்ன இவர்கள் எடுத்த எல்லாத்துக்கும் கண்டிக்கிறார்கள் என்று நினைச்சு வெறுப்படைந்த மனம் இப்போ எல்லாம் என்னாச்சும் பேசினால் பேசிட்டுப்  போகட்டும்,செய்துட்டு போகட்டும் என்ற நிலைக்கு வந்துட்டு..

 
கொஞ்சமாவது சுதந்திரம் வேணும் என்று யாரோடும் பழகி கொண்டு இருக்கும் போது அது ஆண்களாகட்டும்,பெண்களாகட்டும் அவர்கள் மற்றவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது. பட்ட கஸ்ரங்களை,வேதனைகளை நாகரீகமற்று இழுத்துப் பேசி மறுபடியும் நோகப்பண்ணும் போது இவர்களை விட பெற்றோரின் கண்டிப்பு  ஒருபடி மேல் என்று தான் சொல்வேன். ஒரு பிள்ளை கெட்டுடக் கூடாது,கண்டவர்களோடு எல்லாம் சேரக் கூடாது,பேசக் கூடாது என்ற கண்டிப்பு வாழ் நாள் நலன் சார்ந்தது அல்லவா...அண்மைய காலங்களில் நான் உணர்ந்த விடையம் இது தான்...சிலருக்கு பிறப்பிலிருந்தே நிறைய விடையங்களில் சுதந்திரமற்ற நிலை தான் அதற்காக எல்லாம் இப்போ கவலைப்படுவது குறைவு...சில மனிதர்களின் குணங்களை யாராலும் மாற்ற ஏலாது...என்னைப் பொறுத்த மட்டில் அன்பாக எந்த விடையத்தை சொன்னாலும்,செய்தாலும் ஏற்றுக் கொள்வேன்..அடக்கு முறை பண்ணினால் தவறை உணரும் மட்டும் மௌனமாகி விடுவேன்..அல்லது கோவம் வேறு விதமாக உணர்த்தபடும்...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் அல்லது ஒருத்தி தன் குடும்பத்திற்க்காக ஆசாபாசங்களை  துறப்பதற்கு பெயர் சுதந்திரமல்ல....  :)

 

அதுக்குப் பெயர் தியாகம் என்று கூறப்போகிறீர்களா ??? அல்லது ???? :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிரகுச்சனை என்றால் இந்தக் கேள்விக்கான பதிலை பெண்கள் மட்டும் தான் சரியாகக் கொடுக்க முடியும். ஏனெனில் இக்கேள்வி பெண்களின் உறவுகள், உணர்வுகள் என்பவற்றுடனும் தன் உள்ளுணர்வுடனும் தொடர்புடையது. சில வேளைகளில் பெண்களின் மனங்களில் இதற்கான பதில் இருந்தாலும் எழுதுவதற்கான மனத்திடம் இருக்கும் என்று நினைக்கவில்லை. அதிலும் ஒரு வாழ்வை அதாவது குழந்தை குடும்பம் பேரக்குழந்தைகள் என்று வாழ்ந்தவர்களால் மட்டுமே இதற்கான பதிலைக் கூறமுடியும். எம் சமூக நிலையும் இதற்கொரு முக்கிய காரணம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே நாங்கள் எழுதியதையும் வாசியுங்கோ :D

நீங்கள் இப்பிடி சொல்லி சுமே அக்காவின் சுதந்திரத்தில் தலையீடு செய்கிறீர்கள் ;)

நீங்கள் எழுதியதை வாசிப்பதும் விடுவதும் சுமே அக்காவின் சுதந்திரம். :p

Link to comment
Share on other sites

நீங்கள் இப்பிடி சொல்லி சுமே அக்காவின் சுதந்திரத்தில் தலையீடு செய்கிறீர்கள் ;)

நீங்கள் எழுதியதை வாசிப்பதும் விடுவதும் சுமே அக்காவின் சுதந்திரம். :p

 

அடபாவியள்  :D மீனாவின் சுதந்திரத்தில் குறுக்கிட்டுக் கொண்டு   :rolleyes:  :D

Link to comment
Share on other sites

 அதிலும் ஒரு வாழ்வை அதாவது குழந்தை குடும்பம் பேரக்குழந்தைகள் என்று வாழ்ந்தவர்களால் மட்டுமே இதற்கான பதிலைக் கூறமுடியும்.

இதால அக்கா என்ன சொல்ல வாறா எண்டால், திருமணம் செய்யாதவர்கள் இந்த திரி பக்கம் எட்டியும் பாக்கவேண்டம். அப்பிடிபார்த்தாலும் கருத்து எழுதாமல் ஓடி போய்விடனும். :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதால அக்கா என்ன சொல்ல வாறா எண்டால், திருமணம் செய்யாதவர்கள் இந்த திரி பக்கம் எட்டியும் பாக்கவேண்டம். அப்பிடிபார்த்தாலும் கருத்து எழுதாமல் ஓடி போய்விடனும். :lol:  :lol:

 

 

பல தடவைகள் நானும் உணர்ந்து கொண்ட ஒரு விடையம்...உணர்வுகள் என்னும் போது ஓரளவுக்கு வளர்ந்த பின் திருமணம் செய்தவர்களுக்கு தான் உணர்வுகள்  பற்றி எழுதக் கூடியதாக இருக்கும் மற்றவர்களுக்கு அவை பற்றிய அறிவு அவ்வளவாக இருக்காது. என்ற பொருள் பட எழுதுவது எல்லாம் மற்றவர்களை உதாசீனம் செய்வது போலத் தான் எனக்கும் மனதுக்கு படுவது உண்டு..என்ன செய்வது..பட்டால் தான் புத்தி வரும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நான் வேண்டுமென்றே உங்கள் பதிவுகளுக்குப் பதில் எழுதாமல் விடவில்லை. நான் ஒரு பரீட்சைக்காகப் படிக்கவேண்டி இருப்பதால் யாழ் களத்துக்கு வருவதைக் குறைத்துள்ளேன். கட்டாயம் மே மாத இறுதியில் மீண்டும் எம் சொற்போரை வைத்துக்கொள்ளலாம். குறை நினைக்க வேண்டாம் உறவுகளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல தடவைகள் நானும் உணர்ந்து கொண்ட ஒரு விடையம்...உணர்வுகள் என்னும் போது ஓரளவுக்கு வளர்ந்த பின் திருமணம் செய்தவர்களுக்கு தான் உணர்வுகள்  பற்றி எழுதக் கூடியதாக இருக்கும் மற்றவர்களுக்கு அவை பற்றிய அறிவு அவ்வளவாக இருக்காது. என்ற பொருள் பட எழுதுவது எல்லாம் மற்றவர்களை உதாசீனம் செய்வது போலத் தான் எனக்கும் மனதுக்கு படுவது உண்டு..என்ன செய்வது..பட்டால் தான் புத்தி வரும்....

 

நான் இதை எழுதும்போது நீங்கள் தவறாக விளங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது என எண்ணிக்கொண்டேதான் எழுதினேன் யாயினி. உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதான் ஆனாலும் அவர்கள் அதை வெளிப்படுத்தவேண்டிய இடம், காலம், நேரம் எல்லாம் வேறுபாடும் அல்லோ. ஒரு அறுபது அல்லது எழுபது வயதுப் பெண்ணின் மனநிலையும் உணர்வும் எமக்கு எப்படி விளங்கும் யாயினி.??? ஓரளவுக்கு நாம் அதை விளங்கியதுபோல் கொள்ளலாமே தவிர நாம் அந்த வயதை எட்டும்போதுதான் அதை எம்மால் முழுதாக விளங்கிக் கொள்ள முடியும். அதுவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுவேறு உணர்வுகளும் எண்ணங்களும் அனுபவங்களும் தான் இருக்குமே தவிர ஒன்றாக இருக்கவே முடியாது. அந்த அர்த்தத்தில்த்தான் நான் எழுதியதே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. :D

 

 

இதால அக்கா என்ன சொல்ல வாறா எண்டால், திருமணம் செய்யாதவர்கள் இந்த திரி பக்கம் எட்டியும் பாக்கவேண்டம். அப்பிடிபார்த்தாலும் கருத்து எழுதாமல் ஓடி போய்விடனும். :lol:  :lol:

 

போட்டுக்கொடுக்க உங்களை மாதிரி ஆக்களைத்தான் தேவை சேவியர். :lol: :lol: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நான் வேண்டுமென்றே உங்கள் பதிவுகளுக்குப் பதில் எழுதாமல் விடவில்லை. நான் ஒரு பரீட்சைக்காகப் படிக்கவேண்டி இருப்பதால் யாழ் களத்துக்கு வருவதைக் குறைத்துள்ளேன். கட்டாயம் மே மாத இறுதியில் மீண்டும் எம் சொற்போரை வைத்துக்கொள்ளலாம். குறை நினைக்க வேண்டாம் உறவுகளே.

 

சுதந்திரமாக பரீட்சை எழுதுங்கோ....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரமாக பரீட்சை எழுதுங்கோ.... :D

 

சுமே இன்னும் பரீட்சையே எழுதவில்லை

எங்களுக்கு எப்படி வகுப்பெடுக்கிறார்...?? :o

(ஏதோ நம்மால முடிந்தது.. :lol:  :D )

Link to comment
Share on other sites

உண்மையில் நான் வேண்டுமென்றே உங்கள் பதிவுகளுக்குப் பதில் எழுதாமல் விடவில்லை. நான் ஒரு பரீட்சைக்காகப் படிக்கவேண்டி இருப்பதால் யாழ் களத்துக்கு வருவதைக் குறைத்துள்ளேன். கட்டாயம் மே மாத இறுதியில் மீண்டும் எம் சொற்போரை வைத்துக்கொள்ளலாம். குறை நினைக்க வேண்டாம் உறவுகளே.

 

 

படிக்கிறதை விட்டிட்டு இதுக்கை என்ன நாட்டியம்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட, சோதினை எண்டால் எல்லா சுதந்திரமும் போயிடுமே....அதுதானே பார்த்தன்...  :rolleyes:

 

off licence certificate exam சரியான ஈசி எல்லோ, அக்கோய்... :)

 
உதுக்குலயும் இதுக்கில ஒரு நாட்டியம்.  :D
 
பிராக்கை விட்டுப் போட்டு, ஓடிப் பொய் இருந்து படியுங்கோவன்.   :lol:
Link to comment
Share on other sites

அட, சோதினை எண்டால் எல்லா சுதந்திரமும் போயிடுமே....அதுதானே பார்த்தன்...  :rolleyes:

 

off licence certificate exam சரியான ஈசி எல்லோ, அக்கோய்... :)

 

உதுக்குலயும் இதுக்கில ஒரு நாட்டியம்.  :D

 

பிராக்கை விட்டுப் போட்டு, ஓடிப் பொய் இருந்து படியுங்கோவன்.   :lol:

நாதம் மாம்ஸ்,

கொத்துரொட்டியை போட்டு திரியின் ரூட்டை மாற்றி விடுவமா?

அவ எச்சாமை எழுதிட்டு வரட்டும்

அக்கா யாழில் வைக்கிற விசப்பரீட்சையை விட கடினமாய் இருக்குமோ? :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.