Jump to content

டெல்லி, வட இந்திய நகரங்களில் கடுமையான நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7. அலகுகளாக பதிவு!!


Recommended Posts

டெல்லி, வட இந்திய நகரங்களில் கடுமையான நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7. அலகுகளாக பதிவு!!

 

டெல்லி: டெல்லி உட்பட வட இந்தியா நகரங்களில் இன்று பகல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.

 

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி சுட்டெரிக்கும் வெயிலில் சாலைகளில் குவிந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகள் பதிவாகி இருந்தது. நேபாளத்தின் பொகாரா அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/major-earthquake-strikes-north-india-225457.html


தமிழகம், ஒடிஷா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது

Read more at: http://tamil.oneindia.com/


நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பயங்கர சேதம்

 


தி.நகரில் அலுவலகங்களில் இருந்து ஏராளமானோர் வெளியேறினர்

 


கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் ரயில்கள் ஆங்காங்கே சிறிது நேரம் நிறுத்தப்பட்டன

 


நேபாளத்தில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் பயங்கர நிலநடுக்கம்!

 


காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டது

 


சென்னையிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது...

 


சென்னையிலும் லேசான நிலநடுக்கம்... மக்கள் பீதி! 

 

சென்னை: சென்னை நகரின் சில பகுதிகளில் இன்று மக்கள் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் ஒரு சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 4 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. டெல்லியில் 45 வினாடி இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னையிலும் இன்று காலை 11.30 மணியளவில் லேசான நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்துள்ளனர்.

 

பாரிமுனை, கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சில விநாடிகளே அதிர்வு இருந்ததாக நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். மிக மிகச் சிறிய அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டாலும் தி.நகரில் அலுவலகங்களில் வேலை செய்தவர்கள் உடனடியாக தங்களின் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். பொருட் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை.

 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tremors-felt-chennai-225459.html

Link to comment
Share on other sites

நேபாளத்தை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்- பயங்கர சேதம்! விமான நிலையம் மூடல்!!

24l3nuw.jpg

காத்மண்டு: நேபாள நாட்டில் இன்று மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் பயங்கர சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதிர்வுகள் ஏற்பட்ட உடன் உடனடியாக காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

 

நேபாளத்தை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்- பயங்கர சேதம்! விமான நிலையம் மூடல்!! நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு நகரின் மேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு இன்று முற்பகல் 11.44 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவாகி இருந்தது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலநடுக்கத்தால் காத்மண்டு உள்ளிட்ட பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இதில் பயங்கர சேதம் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்மண்டு விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. நேபாளம் முழுவதும் செல்போன் சேவை முடங்கிப் போனது. இந்நிலநடுக்கத்தால் அண்டை நாடான இந்தியாவின் டெல்லி உட்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/international/strong-earthquake-strikes-nepal-225460.html

Link to comment
Share on other sites

நிலநடுக்கத்தில் புதையுண்டது காத்மண்டுவின் 19-ம் நூற்றாண்டு “தரகரா” கட்டிடம்! 50 பேர் கதி என்ன?

jpx5vo.jpg

காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மண்டுவில் இருந்த19-ஆம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டிடமான "தரகரா" டவர் முழுமையாக இடிந்து விழுந்தது. அக்கட்டிடத்தில் இருந்த 50 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. நிலநடுக்கத்தில் புதையுண்டது காத்மண்டுவின் 19-ம் நூற்றாண்டு “தரகரா” கட்டிடம்! 50 பேர் கதி என்ன?

 

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இன்று முற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7. 9 அலகுகளாக பதிவானது. நிலநடுக்கத்தில் புதையுண்டது காத்மண்டுவின் 19-ம் நூற்றாண்டு “தரகரா” கட்டிடம்! 50 பேர் கதி என்ன? இந்த நிலநடுக்கம் நேபாளத்தை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்தக் கடுமையான நிலநடுக்கத்தினால் காத்மண்டு உள்ளிட்ட பல இடங்களில் கட்டிடங்கள், கோவில்கள் இடிந்து விழுந்தன.

15zibd3.jpg

காத்மண்டுவின் அடையாளமாக இருந்த 19ஆம் நூற்றாண்டு பழமையான கட்டிடமான "தரகரா" என்ற 9 மாடிக் கட்டிடமும் முழுமையாக இடிந்து விழுந்தது. இக்கட்டிடத்திற்குள் இருந்த 50க்கும் மேற்பட்டோரும் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பீஸ்மன் டவர் என்றும் அழைக்கப்படும் இக்கட்டிடம் 61.88 மீட்டர் உயரமானது. காத்மாண்டுவின் சுந்தரா என்னும் மையப்பகுதியில் 1832 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டிடம் அதன் கட்டிடக் கலைக்காக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/international/bhimsen-tower-collapsed-kathmandu-225467.html

Link to comment
Share on other sites

நில நடுக்கத்தால் பீகாரில் 3 பேர் சாவு.. மேற்கு வங்கத்தில் 50 பேர் படுகாயம் 

 

பாட்னா: பீகார் மாநித்தின் தர்பங்கா நகரில் இடிபாடுகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 50 பேர் படுகாயமடைந்தனர். நில நடுக்கத்தால் பீகாரில் 3 பேர் சாவு.. மேற்கு வங்கத்தில் 50 பேர் படுகாயம் நேபாளத்தை மையமாக கொண்டு தாக்கிய பலம் வாய்ந்த நில நடுக்கத்தின் பாதி்ப்பு பிகார் மாநிலத்தில் கடுமையாக இருந்தது.

 

அம்மாநிலத்தின் தர்பங்கா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளேயிருந்த 2 பேர் உயிரிழந்தனர். அதேபோ ஜலபைகுரி பகுதியிலும் ஒருவர் உயிரிழந்தார். நில நடுக்கத்தால் பீகாரில் 3 பேர் சாவு.. மேற்கு வங்கத்தில் 50 பேர் படுகாயம் மேற்கு வங்கத்தின் சிலுகுரி நகரில் கட்டிடம் இடிந்ததில் 50 பேர் படுகாயமடைந்தனர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/50-persons-have-been-injured-at-siluguri-west-bengal-225469.html

Link to comment
Share on other sites

நிலநடுக்கத்தால் இமய மலை சிகரங்களில் பனிச்சரிவு அபாயம்.. நதிகளில் வெள்ளப்பெருக்கு ஆபத்து

 

டெல்லி: நில நடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மிக தீவிரமாக தாக்கியுள்ளது. அதன் தாக்கம், இந்திய வட மாநிலங்களிலும் உணரப்பட்டது.

 

இந்தியா-நேபாள் நடுவே உள்ள இமயமலை சிகரமான எவரெஸ்டில் பனிப்பாறைகள் அதிகம் காணப்படுகின்றன. நிலநடுக்கத்தால் இமய மலை சிகரங்களில் பனிச்சரிவு அபாயம்.. நதிகளில் வெள்ளப்பெருக்கு ஆபத்து இமயம் ஆடியதால் பனி சரிவு ஏற்பட்டு பெரும் அழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

 

எனவே இதை இந்திய பேரிடர் மீட்பு குழுவினர் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இமயமலை அடிவாரத்திலுள்ள மக்கள், நதியோரங்களிலுள்ள மக்கள் அங்கிருந்து கிளம்பி செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் பனி உருகி, நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/nepal-quake-triggers-avalanches-mount-everest-region-225468.html

Link to comment
Share on other sites

டெல்லிக்கு சேதாரம் பத்தாது. :blink::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தைத் தாக்கிய பாரிய நிலநடுக்கம், இந்தியாவின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் தாக்கம்

kathmandu-earthquake-300x210.jpg

பாரிய நிலநடுக்கமொன்று இன்று காலை நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு உள்ளிட்ட பலபகுதிகளையும் தாக்கியுள்ளது. பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ள 7.9 புள்ளி றிச்டர் அளவிலான இந்தப் பூமியதிர்வு இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உணரப்பட்டுள்ளது மட்டுமன்றி அழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

 

நேபாளத்திலும், இந்தியாவிலும் இதனால் பலர் காயமடைந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றபோதிலும், உயிரிழப்புக்கள் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்களின்படி, சுமார் 7.9  புள்ளி றிச்டர் அளவு நிலநடுக்கம் தலைநகர் காத்மண்டுவிற்கும், பொக்காரா நகருக்கும் இடையிலான நிலப்பரப்பைத் தாக்கியிருப்பதாகத் தெரியவருகிறது.

நேபாளத்தில் அநேக பகுதிகளை இந்தப் பூமியதிர்வு தாக்கியிருப்பதாகவும், குறிப்பாக உலகின் புராதன இடங்களில் ஒன்றென யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட டரஹரா கோபுரம் இதன் தாக்கத்தினால் சின்னாபின்னமடைந்திருப்பதாகவும், இன்று விடுமுறை தினம் என்பதால் அநேகர் இடுபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

Kathmandu1.jpgKathmandu2l.jpg

இதேவேளை, இந்தியாவின் பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் இந்தப் பூமியதிர்வு சுமார் ஒரு நிமிடத்திற்கு உணரப்பட்டிருக்கிறது. இதனால் கட்டங்கள் பல சேதமடைந்திருப்பதாகத் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

“நாங்கள் இந்த இயற்கை அழிவு குறித்த விபரங்களை முழுமையாக அறியும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டிருக்கிறோம். உள்நாட்டிலும், நேபாளத்திலும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடி உதவிச்சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம்,” என்று இந்தியப் பிரதமர் தனது டூவிட்டர் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு நேபாளத்தை மோசமான பூமியதிர்வு தாக்கியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டிருந்தனர். இதற்கு முன்னர் 1934 ஆம் ஆண்டு இடம்பெற்ற பூமியதிர்வில் நேபாளம் சிக்கிச் சின்னாபின்னமாகியிருந்தது.

 

http://www.colombomirror.com/tamil/?p=4108

Link to comment
Share on other sites

நிலநடுக்கம்: 400 பேர் பலி, பழமை வாய்ந்த தர்காரா டவர் முழுமையாக இடிந்து வீழ்ந்தது
 
nepale1_CI.jpg

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக 400 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது.

இதன் பாதிப்பு இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டன.

நேபாளத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்காரா டவர் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. பல வீடுகளின் சுவர்கள் விரிசல் அடைந்து இடியும் நிலையில் உள்ளன. மேலும் தர்காரா டவர் இடிபாடுகளில் பலர் சிக்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119035/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

கோரத்தாண்டவம்...நேபாள நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 700ஐ எட்டியது! ரிக்டரில் 7.9 ஆக பதிவு!!

 

காத்மண்டு: நேபாள நாட்டில் இன்று மிகவும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் சுமார் 700 பேர் உயிரிழந்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. கோரத்தாண்டவம்...நேபாள நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 700ஐ எட்டியது! ரிக்டரில் 7.9 ஆக பதிவு!! நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு நகரின் மேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு இன்று முற்பகல் 11.44 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 அலகுகளாகப் பதிவாகி இருந்தது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலநடுக்கத்தால் காத்மண்டு உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள், கோவில்கள் இடிந்து விழுந்து மண்ணோடு மண்ணாக புதைந்தன. காத்மண்டு நகரமெங்கும் புழுதிப் படலமாகத்தான் இருக்கின்றன. சாலைகள் பாளம் பாளமாக வெடித்து கிடக்கின்றன... கோரத்தாண்டவம்...நேபாள நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 700ஐ எட்டியது! ரிக்டரில் 7.9 ஆக பதிவு!! காத்மண்டுவில் புகழ்பெற்ற 9 மாடி தரகா டவர், பதானில் தர்பார் ஸ்கொயர் ஆகியவை தரைமட்டமாகிப் போகின. தற்போதைய நிலையில் பலியானோர் எண்ணிக்கை 449ஆக அதிகரித்துள்ளது. காத்மண்டு விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.

 

நேபாளம் முழுவதும் செல்போன் சேவை முடங்கிப் போனது. நிலநடுக்கத்தால் படுகாயமடைந்தோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பலமுறை ஏற்பட்ட நிலநடுக்க பின் அதிர்வுகளால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். கோரத்தாண்டவம்...நேபாள நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 700ஐ எட்டியது! ரிக்டரில் 7.9 ஆக பதிவு!! 1934ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தில் காத்மண்டு நகரம் பேரழிவை சந்தித்தது. இந் நிலநடுக்கத்தால் அண்டை நாடான இந்தியாவின் டெல்லி உட்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை இந்நிலநடுக்கத்தால் தற்போது வரை 700 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது

 

Read more at: http://tamil.oneindia.com/news/international/strong-earthquake-strikes-nepal-225460.html

Link to comment
Share on other sites

நேபாளத்து நிலநடுக்கத்தால் திபெத்தும் கிடுகிடுத்தது... 

 

லாஸா: நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம் மற்றொரு இமயமலை நாடான திபெத்தையும் கிடுகிடுக்க வைத்திருக்கிறது. நேபாளத்தில் ரிக்டரில் 7.9 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

 

பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். நேபாளத்து நிலநடுக்கத்தால் திபெத்தும் கிடுகிடுத்தது... இந்த நிலநடுக்கம் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவின் திபெத் பகுதியிலும் உணரப்பட்டது. சீனாவின் நிலநடுக்க அளவுப்படி நேபாளத்தில் 8.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. திபெத் தலைநகர் லாஸா, சிகத்ஸ், கியிராங் உள்ளிட்ட பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. சீனா-நேபாள எல்லையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Read more at: http://tamil.oneindia.com/news/international/nepal-s-earthquake-felt-tibet-225486.html

Link to comment
Share on other sites

நிலநடுக்கத்தில் நேபாள இந்திய தூதரக சுவர் இடிந்து ஊழியர் மகள் பலி: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

 

டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதில் தூதரக ஊழியரின் மகள் பலியாகி உள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் இன்று ரிக்டரில் 7.9 அலகுகளில் பயங்கர நிலநடுக்கம் பதிவானது. இதில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

zj87tj.jpg

நூற்றுக்கணக்கான கட்டிடங்கள், கோவில்கள் தரைமட்டமாகி உள்ளன. நிலநடுக்கத்தில் நேபாள இந்திய தூதரக சுவர் இடிந்து ஊழியர் மகள் பலி: சுஷ்மா ஸ்வராஜ் தகவல் இந்நிலையில் காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் தூதரக ஊழியர் மதன் என்பவரது மகள் பலியாகி உள்ளார் என்று ட்விட்டரில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/nepal-quake-indian-embassy-complex-collapses-one-dead-225484.html

Link to comment
Share on other sites

நேபாள நிலநடுக்க எதிரொலி: எவரெஸ்ட் பனிப்பாறைச் சரிவுக்கு 8 பேர் பலி
 

 

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் எவரெஸ்ட் சிகரம் பகுதியில் பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டு அதில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் நிறைய பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறைய காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

 

மலையேறும் வீரர்களுக்கு மிகவும் அபாயகரமான பகுதியாகக் கருதப்படும் கும்பு ஐஸ்ஃபால் மற்றும் அடிவார முகாம் பகுதிக்கு இடையே பனிப்பாறை சரிவு ஏற்பட்டது. இங்குதான் மலையேறும் வீரர்கள் முகாமிடுவது வழக்கம், மிகவும் அபாயகரமான பகுதி, என்று நேபாள் மலையேறு கூட்டமைப்பின் ஆங் ஷெரிங் என்பவர் தெரிவித்தார்.

 

நேபாள் மலையேறு துறை அதிகாரி ஞானேந்திர ஷ்ரேதா கூறும் போது, “8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எண்ணிக்கையில் வராத பலர் மாயமாகியுள்ளனர். அடிவார முகாமில் 30 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் எவரெஸ்டின் பிற பகுதிகளிலும் கடும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

 

இது குறித்து டென்மார்க்கை சேர்ந்த மலையேறு வீரர் கார்ஸ்டன் லிலிலுண்ட் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: பனிச்சரிவில் பலர் தூக்கி அடிக்கப்பட்டு கால்கல் கைகள் என எலும்பு முறிவு ஏற்பட்டோரை நாங்கள் பார்த்து வருகிறோம். அடிவார முகாம்கள் சில பனிச்சரிவில் அடியில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

இவரும் பெல்ஜிய சகாவுமான ஜெல் வெய்ட் என்பவரும் 5,000 மீ உயரத்தில் கும்பு ஐஸ்ஃபால் அருகே அடிவார முகாமில் பூகம்ப தருணத்தில் இருந்துள்ளனர்.
 

http://tamil.thehindu.com/india/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/article7141418.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மருமனின் குடும்பமும் நேபாளம் தான்.

என்ன நடந்ததோ தெரியவில்லை?

Link to comment
Share on other sites

நேபாளம், வட இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய நிலஅதிர்வு- சிறிலங்காவுக்கு பாதிப்பில்லை APR 25, 2015by இந்தியச் செய்தியாளர்in செய்திகள்

earth-quake-3-300x200.jpgநேபாளத்திலும், வட இந்தியாவிலும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ள நில நடுக்கத்தினால் சிறிலங்காவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல்11.45 மணியளவில் நேபாளத்தில் காத்மண்டு நகருக்கு 50. கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த, 7.9 ரிச்டர் அளவுகோல் நிலஅதிர்வு, நேபாளத்தையும் வட இந்தியாவையும் உலுக்கியது. மீண்டும் 12.20 மணியளவில் 6.6 ரிச்டர் அளவு கோல் நில அதிர்வு பதிவானது.

இதனால், அலறிடியத்துக் கொண்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளிலும் வெளிகளிலும் தஞ்சமடைந்தனர்.

நேபாளத்தில் இந்த நிலஅதிர்வினால் 449 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், பல நூறு பேர் காயமுற்றதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட இந்திய மாநிலங்களிலும், இந்த நிலஅதிர்வினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி, வாரணாசி, ராஞ்சி, ஜெய்பூர், கொல்கத்தா, குவஹாத்தி, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் இந்த நில நடுக்கத்தினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

earth-quake-2.jpg

earth-quake-3.jpg

earth-quake-5.jpg

earth-quake-1.jpg

நேபாளத்தில் இந்த நிலநடுத்தினால். புராதன சின்னங்களாக, கட்டடங்கள் பலவும் முற்றாக அழிந்துள்ளன.

19ம் நூற்றாண்டு தாரகா கோபுரம் முற்றாக இடிந்து விழுந்துள்ளதுடன் அதற்குள் 50 வரையிலான சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.

யுனெஸ்கோவினால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட டாபர் சதுக்கமும், முற்றாகத் தரைமட்டமாகியுள்ளது.

நேபாளத்திலும், வட இந்தியாவிலும் இருந்த பழைமை வாய்ந்த புராதனச் சின்னங்களான கட்டடங்கள், கோவில்கள் அழிந்து போயுள்ளன.

இதற்கிடையே நேபாளத்தில் மையம் கொண்டிருந்த நில அதிர்வினால் சிறிலங்காவுக்குப் பாதிப்பு இல்லை என்றும், தரையில் நில அதிர்வு ஏற்பட்டதால், சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றும் சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2015/04/25/news/5566

 

Link to comment
Share on other sites

நிலநடுக்கத்தின் தாக்கத்தை எப்படி சாமாளிக்கும் நேபாளம்?

 

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு அடுத்து என்ன எனும் கேள்விகள் எழுந்துள்ளன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அரசு கூறினாலும், அவற்றை செய்ய அரசு சிரமப்படுகிறது என்று உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

உடனடி நிவாரண நடவடிக்கைகளை அளிக்க இந்தியா முன்வந்துள்ளது.

இந்நிலையில் இந்தப் பேரழிவின் தாக்கத்தை நேபாளம் எப்படி சமாளிக்கும் என்பது குறித்து, நேபாளத்தின் அரசியல், சமூகப் பொருளாதார விஷயங்கள் குறித்த ஆய்வுகளை செய்துள்ளவரும், தொடர்ந்து அவை குறித்து எழுதி வருபவருமான டாக்டர் ராஜாமோகன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கே கேட்கலாம்.

 

 

 

 

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2015/04/nepalrajamohan_150425_nepal_rajamohan_au_bb.mp3

Link to comment
Share on other sites

1934க்கு பிறகு நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம்; நில அதிர்வு தொடரும் என எச்சரிக்கை

 

ஐதராபாத்: நேபாளத்தை சீர்குலைத்த இன்று 7.9 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பம் சுமார் 900 பேரை பழிவாங்கியது. பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த பூகம்பம், நேபாள பிராந்தியத்தில் கடந்த 1934க்கு பிறகு ஏற்பட்ட கடுமையான பூகம்பம் என தேசிய புவியியல் மையம் கூறியுள்ளது. மேலும் பூகம்பத்திற்கு பின் ஏற்படும் நில அதிர்வுகள் அடுத்த 15 நாட்கள் வரை ஏற்படும் எனவும் கூறியுள்ளது.

 

இது தொடர்பாக மூத்த விஞ்ஞானி ஆர் கே சத்தா கூறுகையில், மேக்னிடியூட் அடிப்படையில் கணக்கிட்டதில், இன்று நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் மிகப்பெரிய பூகம்பம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் ஏற்படும் நில அதிர்வுகள் 10 முதல் 15 வரை உணரலாம். இது குறைந்த அளவில் தான் இருக்கும்.

இன்று காலை, 11.41 மணியளவில் காத்மாண்டுவின் வட மேற்கு பகுதியில் 80 கி.மீ., தூரத்தை மையமாக வைத்து ஏற்பட்ட பூகம்பத்தை தேசிய புவியியல் மையம் ஆய்வு செய்தது. அப்போது மாலை 4.30 மணி வரை, 5 முதல் 6.6 ரிக்வர் அளவில் பூகம்பத்திற்கு பிந்தைய நில அதிர்வுகள 15 முறை உணரப்பட்டது என கூறினார்.

கடந்த 1934ம் ஆண்டு நேபாளம் பீகார் எல்லையில் 8.4 ரிக்டர் அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டதாகவும், அதற்கு பின் தற்போது தான் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது எனவும் அவர் கூறினார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1238743

Link to comment
Share on other sites

காத்மாண்டு: நிலநடுக்கம் குறித்து நேபாள நாட்டு மக்களிடையே நிலவும் ஒரு செவிவ்வழிக் கதை மீண்டும் உண்மையாகி நிரூபணமாகியுள்ளது. நேபாளத்தை பொருத்தளவில், நீண்ட நூற்றாண்டுகளாகவே, மக்கள் மத்தியில் ஒரு செவிவழிச் செய்தி உலவிவருகிறது. அதாவது, ஒவ்வொரு 80 வருடங்களுக்கு ஒருமுறையும், நேபாளம் மிகப்பெரிய நிலநடுக்கத்தை சந்திக்கும்..என்பதுதான் அந்த செவிவழிச் செய்தியாகும். இதேபோல 1934ம் ஆண்டு, நேபாளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளம்-பீகார் நிலநடுக்கம் என்று அது அழைக்கப்பட்டது. இந்த பெரிய நிலநடுக்கத்தில், 12 ஆயிரம் பேர் நேபாள நாட்டில் உயிரிழந்தனர். இந்தியாவில் 7 ஆயிரம் பேர் இறந்தனர். இதன்பிறகு சிறிய அளவில் பலமுறை நேபாளத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அவை கிடையாது. இந்நிலையில், நேபாள நாட்டு மக்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாகவே நில நடுக்க பீதி அதிகரிக்க தொடங்கியது. அதிலும், முதியவர்கள் எப்படியும் பெரிய நிலநடுக்கம் வந்தே தீரும் என்று எச்சரித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில்தான், 2011ம் ஆண்டு பெரிய ஒரு நிலநடுக்கம் நேபாளத்தை தாக்கியது. 6.9 என்ற ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானாலும், அதிருஷ்டவசமாக உயிரிழப்பு 11 பேருடன் முடிந்தது. பெரும்பாலான நேபாள இளைஞர்கள் தாங்கள் பெரிய பாதிப்பில் இருந்து தப்பிவிட்டதாக நம்பினர். ஆனால் முதியவர்களோ, பெரிய அளவுக்கு பாதி்பை ஏற்படுத்தும் நில நடுக்கம் வந்தே தீரும் என்று கூறிக்கொண்டிருந்தனர். இன்று நேபாளத்தை தாக்கியது அதுபோன்ற பெரிய நிலநடுக்கமாகும். ஏனெனில், ரிக்டர் அளவுகோலில் இது 7.9 ஆக பதிவாகியுள்ளது. 1934ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும். அதேபோல மக்கள்தொகை பெருக்கம் காரணமாக, உயிர்பலி எண்ணிக்கையும், 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அறிவியல் என்ன சொல்கிறது? நேபாள நாட்டு மக்களுக்கு தலைமுறை தலைமுறையாக இதுபோன்ற ஒரு தகவல் கடத்தப்படுவதன் பின்னணியில் அறிவியல் உண்மையும் உள்ளது. அதாவது, இந்திய புவித்தட்டு, எப்போதுமே யூரோஏசியன் புவித்தட்டை அழுத்தியபடி மேலே எழும்பிக் கொண்டுள்ளது. எனவேதான், இமயமலை ஆண்டுக்கு 1 செ.மீ அளவுக்கு வளர்ந்து கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள். பல ஆண்டுகளாக தொடரும் இந்த அழுத்தத்தை, ஒரு நிலநடுக்கத்தின் மூலம், குறைத்துக்கொள்வது பூமியின் இயல்பு என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த காலகட்டத்தை நேபாள நாட்டு பெரியவர்கள் கணித்துதான், செவிவழியாக சொல்லி வந்துள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/international/nepal-earthquake-has-the-myth-80-years-come-true-225485.html

Link to comment
Share on other sites

டெல்லிக்கு சேதாரம் பத்தாது. :blink::D

நாளைக்கு இது நீங்கள் இருக்கும் நாடுகளிலும் நடக்காது என்பதுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
Link to comment
Share on other sites

நாளைக்கு இது நீங்கள் இருக்கும் நாடுகளிலும் நடக்காது என்பதுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

உண்மை.. இதைவிட அதிகமாகக்கூட இருக்கலாம்.. குறிப்பாக மேற்குப் பகுதியில்.. ஆனாலும் டெல்லிக்கு சேதம் பத்தாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு இது நீங்கள் இருக்கும் நாடுகளிலும் நடக்காது என்பதுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

நாங்க பார்க்காத அழிவா முக்கிய அழிவு எமக்கு டில்லியால் நடாத்தபட்டது இந்த வலி ஆயிரம் வருடங்கள் போனாலும் மாறாது.

ஒரு சிங் மற்றைய சிங்கிடம் பொட்கோவிலில் நடந்ததை மன்னிப்பம் மறப்பம் என சொன்னால் சொன்ன சிங்கின் தலை இருக்காது அது அவர்களின் இன பற்று கொஞ்சமாவது சோத்திலை உப்பு போட்டு சாப்பிட பழகி இருக்கணும் .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை.. இதைவிட அதிகமாகக்கூட இருக்கலாம்.. குறிப்பாக மேற்குப் பகுதியில்.. ஆனாலும் டெல்லிக்கு சேதம் பத்தாது.

 

விடாக்கண்டன்  :D

Link to comment
Share on other sites

பூகம்பத்தின் போது 388 கனடியர்கள் நேபாலில் இருந்துள்ளனர்.கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,400 ஆக உயர்வு.  

 

கனடா- வெளியுறவுத்துறையினரின் கணிப்பின் பிரகாரம் ஒரு மதிப்பீட்டளவில் 388 கனடியர்கள் நேபாலில் இருந்துள்ளனர் என பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களுள் முன்னாள் நியு பிறவுன்ஸ்விக் என்டிபி தலைவர் எலிசபெத் வெயிரும் ஒருவராவார்.

வேல்ட் விசன் கனடா குழந்தை பாதுகாப்பு ரோறொன்ரோ நிவாரண பணியாளர் றீனா வொஹ்ரா நிலநடுக்கம் தாக்கிய சமயத்தில் காட்மண்டுவிலிருந்து 20-கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பழமை வாய்ந்த நகரமான பாக்ரபுர் சென்றிருந்தார்.

இவர்கள் இருவரும் பூகம்பத்தின் அதிர்வுகளை உணரந்து ஆட்டம் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

காட்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் இவர்கள் நாடு திரும்ப முடியாத  நிலையில் உள்ளனர்.

நேபால் மக்கள் நெருக்கமாக வாழும் காட்மண்டு பள்ளதாக்கில் கிட்டத்தட்ட 1,400 மக்கள் இந்த பூகம்பத்தால் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி Stephen Harper வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உறவுகளை இழந்தவர்களிற்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

கனடியர்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள உள்ளாட்சி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பேரழிவிற்கு உதவுவதற்கான சரியான வழி வகைகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கனடியர்களிற்கு உதவுவதற்காக ஒட்டாவாவிலுள்ள அவசர கண்காணிப்பகம் மற்றும் பதில் மையம், மற்றும் வெளிநாட்டு கனடிய அதிகாரிகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார துறை பேச்சாளர் தெரிவித்தார்.

can4-600x338.jpg

can21-600x331.jpg can31-600x405.jpg can41-600x392.jpg can5-600x434.jpg can6-600x450.jpg can7.jpg can8-600x337.jpg  can9-600x338.jpg can10.jpg  can111.jpg can121.jpg

 

- See more at: http://www.canadamirror.com/canada/41712.html#sthash.nBKudEDP.dpuf

நில நடுக்கத்தில் இந்தியாவில் மட்டும் இதுவரை 38 பேர் பலி

Link to comment
Share on other sites

பசுபதிநாதர் ஆலயம் தப்பியது
 

 

நேபாளத்தில் நேற்று நேரிட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கோயில்கள், புராதன சின்னங்கள் அழிந்தன. இதில் அதிசயிக்கத்தக்க வகையில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பசுபதிநாதர் கோயில் எவ்வித சேதமுமின்றி தப்பியது.

காத்மாண்டுவில் அமைந்திருந்த யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமான தர்பார் சதுக்கம், புராதன சின்னமாக திகழ்ந்த தரஹரா கோபுரம் ஆகியவை இடிந்து தரைமட்டமாகின. எனினும் காத்மாண்டுவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இந்த கோயில் யுனெஸ்கோவின் புராதன சின்னம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article7141616.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லிக்கு சேதாரம் பத்தாது. :blink::D

 

உண்மைதான்....

டெல்லியில்... 10-15 ரிக்டரில், நிலம் அதிர்ந்து இருக்கலாம். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.