Jump to content

டெல்லி, வட இந்திய நகரங்களில் கடுமையான நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7. அலகுகளாக பதிவு!!


Recommended Posts

நேபாளத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கம் 6.7 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.
நேபாளம் தெற்கு கோடாரி எனுமிடத்திலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேபாளம், காத்மண்டிலிருந்து 50 மைல் தூரத்தில் ஆறுமைல் ஆழத்துக்கு அடியில் 7.9 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுமார் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
Link to comment
Share on other sites

நேபாள நிலநடுக்கத்தில் இந்தியத் தூதரக அதிகாரியின் மகள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இதில் அவரது மகள் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்த அதேவேளை அவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கபூர்தரா மார்க் பகுதியில் இந்தியத் தூதரக அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த வளாகத்தில் தூதரக ஊழியர்களின் குடியிருப்பு அமைந்துள்ள அதேவேளை அங்கு நிலநடுக்கத்தால் பல்வேறு வீடுகள் அழிவடைந்துள்ளன.

இந்த அனர்த்தத்தில் இந்தியத் தூதரக அதிகாரியின் குடும்பம் தங்கியிருந்த வீடு தரைமட்டமாகியுள்ளது.

sushma.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/41751.html#sthash.DwA3ZIlQ.dpuf

Link to comment
Share on other sites

நேபாள பூகம்பத்தில் பலியானவர் எண்ணிக்கை 4000ஐ தாண்டியது

 

நேபாள பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4000ஐயும் தாண்டிவிட்டதாக கூறும் அதிகாரிகள், ஆனாலும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 

150427010919_nepal_624x351_n_nocredit.jp
நேபாள பூகம்பம்
 
பூகம்பத்துக்கு பின்னரான பல அதிர்வுகள் தாக்கியதன் காரணமாக, தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மக்கள் தமது வீடுகளுக்கு செல்லாமல், தெருவோர கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர்.
150427021720_nepal_tent_624x351__nocredi
இரவை கூடாரங்களில் கழித்தனர்
 
பூகம்பத்தின் மையப்பகுதியை நோக்கி மீட்பு பணியாளர்கள் செல்லத்தொடங்கியுள்ளனர். சில வீதிகள் தற்போது தடைகள் அகற்றப்பட்டுள்ள திறக்கப்பட்டுள்ளன.
150427072128_nepal_earthquake_damaged_am
மீட்புப் பணி தொடர்கிறது
 
காலநிலை சீரடைந்துள்ளதால், இமயமலையின் அடிவார முகாமில் அகப்பட்டுள்ள காயமடைந்தவர்களை மீட்பதற்காக ஹெலிக்கொப்டர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன.
குடிதண்ணீர் விநியோகம் மிகவும் அவரசரமாக தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடாரங்களும், பிணங்களுக்கான பைகளும் கூடத் தேவைப்படுகின்றன.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 Meter in 30 Sekunden  

Erdbeben in Nepal verschob ganz Kathmandu

 

ein-erdbeben-der-staerke-7-8-erschuetter

Ein Erdbeben der Stärke 7,8 erschütterte am Samstag Nepal - es forderte über 4000 Menschenleben. (Quelle: USGS)

 

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பூமி அதிர்வில்.....

காத்மண்டு நகரம், 30 வினாடிகளில்... 3 மீற்றர் தூரம் நகர்ந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசுபதிநாதர் ஆலயம் தப்பியது

 

 

நேபாளத்தில் நேற்று நேரிட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கோயில்கள், புராதன சின்னங்கள் அழிந்தன. இதில் அதிசயிக்கத்தக்க வகையில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பசுபதிநாதர் கோயில் எவ்வித சேதமுமின்றி தப்பியது.

காத்மாண்டுவில் அமைந்திருந்த யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமான தர்பார் சதுக்கம், புராதன சின்னமாக திகழ்ந்த தரஹரா கோபுரம் ஆகியவை இடிந்து தரைமட்டமாகின. எனினும் காத்மாண்டுவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இந்த கோயில் யுனெஸ்கோவின் புராதன சின்னம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article7141616.ece

ஆட்டுபவனே அவன் தானே ! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுபவனே அவன் தானே ! :lol:

 

நேபாளம்... உலகில் இந்து மன்னாராட்ச்சியை கொண்ட நாடு,

அது, எங்களது போராட்டத்துக்கு, ஆதரவு தந்ததா?

 

சார்க் என்னும்.. குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு.....

இமய மலையே..... சரியும், அளவுக்கு வந்திருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளம்... உலகில் இந்து மன்னாராட்ச்சியை கொண்ட நாடு,

அது, எங்களது போராட்டத்துக்கு, ஆதரவு தந்ததா?

 

சார்க் என்னும்.. குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு.....

இமய மலையே..... சரியும், அளவுக்கு வந்திருக்கு.

நேபாளத்தின் நிலையும்... ஈழத்தமிழரின் நிலை தான்! :o

 

இந்தியா.. நேபாளத்துக்கு மேலையும் ஏறிக் குந்திக்கொண்டிருக்கு! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தின் நிலையும்... ஈழத்தமிழரின் நிலை தான்! :o

 

இந்தியா.. நேபாளத்துக்கு மேலையும் ஏறிக் குந்திக்கொண்டிருக்கு! :icon_idea:

 

"முற் பகல் செய்யின்... பிற்பகல் விளையும்."

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.