Jump to content

வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது . ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற நாம் படும் பாடு இருக்கிறதே, ஐயகோ, அவற்றை நாம் வெறுமனியே வார்த்தைகளால் கூறி முடிக்க முடியாது . அது சிறு செயலாகவும் இருக்கலாம் அல்லது ஒரு பெரிய பொறுப்பை ஏற்று அப்பணியை செவ்வனவே செய்து முடிக்க வேண்டியும் இருக்கலாம் .

 

ஒவ்வொரு முயற்சிக்கும் முதல்படி நாம் அப்பணியை நாம் எப்படி செய்து முடிக்க வேண்டும் என்று எம்முள்ளேயே ஒரு திட்டம் இயல்பாகவே தோன்றிவிடும் . அப்பணியை செய்து முடிக்கும் வரை எமது உள்ளமும் அமைதியின்றி அல்லலுறும் . நிம்மதியின்றி அடிக்கடி செய்து முடிக்க வேண்டிய அப்பணியை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டியும் இருக்கும் .

 

ஆனால் எத்தனையோ இடர்பாடுகளின் பின் தீவிர முயற்சி தோல்வி பெற்றால் அது தரும் ஏமாற்றம் மனதிற்கு எவ்வளவு கஷ்டத்தை தரும் என்பது வெறும் வார்த்தைகளால் மட்டும் விபரிக்க முடியாது .

 

ஆனால் அதே முயற்சி படாது பாடு பட்டு இறுதி நிமிடம் வரை வெற்றி பெற முடியாது என்ற நிலையில் ஏதோ தெய்வாதீனமாகவோ அல்லது அதிசயமாகவோ வெற்றி பெரும்பொழுது கிடைக்கும் சந்தோஷம் உண்மையிலேயே பெறுமதியானது. ஆனால் இவ்விரு உணர்ச்சிகளுமே நிலையில்லாதது என்பதை நாம் நிச்சயம் ஒப்புக்கொள்ளத தான் வேண்டும்.

 

நான் இங்கு குறிப்பிடுவது நாம் வாழ்வில் சந்திக்கும் சிறு சிறு முயற்சிகளையே. உதாரணத்துக்கு நான் நேற்று அனுபவப்பட்ட ஒரு சிறு சம்பவம் தான் என்னை இதை எழுதவே தூண்டியது .

 

ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு உடை வடிவமைத்து தரும்படி என்னிடம் கேட்கப்பட்டது . நானும் 20 நடன மாணவிகளுக்கு உடை வடிவமைத்து அதை தைப்பித்தும் தர உற்சாகத்துடன் முன் வந்தேன். ஆனால் நான் பொறுப்பெடுத்த நேரம் தொடக்கம் தொடர்ந்து பல இடர்களை சந்திக்க வேண்டியிருந்தது .

 

அதாவது மாணவிகளின் அளவு எடுக்கப்பட்டு தர மிகவும் கால தாமதாமாகி விட்டது . அது மட்டுமின்றி புதுவருட பண்டிகை விடுமுறை நெருங்கிய நேரத்திலேயே அம்மாணவிகளின் அளவு விபரங்கள் என் கையில் கிட்டியது . நடன உடைகளை நான் இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்ளவதே எனது எண்ணமாக இருந்தது . நான் வடிவமைத்த உடை இலங்கையில் தைப்பிப்பது சிக்கனமாகவும் மிகவும் நுணுக்கத்துடன் தரமாக செய்யவும் ஏதுவாக இருக்கும். ஆனால் கால அவகாசம் மிகவும் குறைவாக இருந்தது.

 

எப்படியாயினும் இவ் உடைகளை திறம்பட செய்வித்து முடிக்கலாம் என நம்பினேன் . அடுத்த இடரை பணம் அனுப்புவதில் சந்தித்தேன் . நான் அனுப்ப முற்பட்ட வேலை ஈரோ பண வீக்கத்தால் மிகவும் குறைந்தளவிலேயே இலங்கை ரூபாவை பெற முடிந்தது .ஒருவாறு தைப்பித்த உடைகளை எமக்கு அஞ்சல் மூலம் இலங்கையிலிருந்து  அனுப்பும்பொழுது, அங்கே முகவரியை தவறுதலாக அனுப்பி விட்டார்கள் .

 

இத்தனைக்கும் நடன நிகழ்ச்சி அரங்கேற இன்னும் மூன்று நாட்களே இருந்தன . நானும் நாள் தோறும் உடைகள் கிடைக்கும் என்று காத்திருந்து பின் ஏமாற்றத்துடன் எங்கு அஞ்சலில் அனுப்பிய உடைகள் என்று ஆராய்ந்த பொழுது அப்பொதி கிழக்கு ஜெர்மனியில் சுங்க அலுவலர்களிடம் இருப்பதாக கேள்விப்பட்டேன் . அவர்கள் அப்பொதியை வைத்திருந்து கடைசியாக நடன நிகழ்ச்சி நடக்கும் நாளாகிய சனிக்கிழமை அதிகாலையே விடுவித்து அனுப்பினார்கள் .

 

அப்பொதி எமது இடத்திற்கு அருகிலுள்ள கிளையை வந்து சேர்ந்தது மதியம் 1 மணியளவிலேயே . DHL  கிளையை வந்தடைந்தாலும், திங்கட்கிழமையே எம்மை வந்து சேரும் என்று அறியத்தந்தார்கள் . அது மட்டுமின்றி DHL ன் கணணி செயற்பாடுகள் அன்று துரதிர்ஷ்டமாக செயல் இழந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள் . தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய ஒரு ஐரோப்பிய நாட்டில் கணணி செயற்பாடு தடைப்பட்டிருப்பது என்பது என்னால் நம்பவே முடியவில்லை .

 

ஆனாலும் அது உண்மையாகவே இருந்தது. எனக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி . ஏதோ இம்முயற்சி எப்படியும் தோல்வியில் முடிய வேண்டும் என விதி கங்கணம் கட்டிக்கொண்டு நின்றது போலிருந்தது .எனக்கு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அம்மாணவிகளை நினைக்கும் பொழுதுதான் மிகவும் கவலையாக இருந்தது.  நிகழ்ச்சி நடந்து முடிந்தபின்னர் நடன உடைகளை மாணவிகளிடம் கொடுத்து என்னப் பயன்?

 

என்னிடம் வழங்கப்பட்ட பொறுப்பை நான் சரியாக செய்து முடிக்காவிட்டால் என் பெயர் என்னவாவது ? மிகுந்த ஏமாற்றத்துடன் மூன்று மணித்தியாலகங்கள் பொதிகள் வந்தடையும் DHL ன் கிளையில் காத்திருந்த பின் இனியும் காத்திருக்க முடியாது என்ற தீர்மானத்திற்கு வந்தேன் . என் மகளும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தாள் . அவளின் சோகம் என்னை மிகவும் தாக்கியது .

 

சரி , இனி கிளம்பும் நோக்கத்துடன் அங்கிருந்த அலுவலகரிடம் சென்ற வேளை என்ன அதிசயமோ அவர்கள் வரிப்பணம் என்னிடம் பின்னர் அறவிடுவதாகவும் தாம் அப்பொதியை கண்டுபிடித்து விட்டதாகவும் என் கையில் தந்தார்கள் . என்னால் நம்பவே முடியவில்லை. சினிமாக்களில் தான் கிளைமாக்ஸ் போன்று கடைசி நிமிடங்களில் திருப்புமுனை அமையும் . நிஜவாழ்விலுமா ?  

 

எனக்கு அந்த T.M சௌந்தராஜன் பாடிய கிடைக்கும் என்றால் கிடைக்காது , கிடைக்காது என்றால் கிடைத்து விடும் என்ற பழைய பாடல் தான் ஞாபகம் வந்தது .

 

 

ஆனால் இரு நாள் கழிந்த பின்னர் இச்சம்பவமே அப்படி பெரிதாக இருந்தது போல் இல்லாமல் நினைவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போவது போல் உணர்கிறேன். அன்று மிகவும் முக்கியமாக இருந்தது இன்று பெரிதாக இல்லை.

 

உண்மை  வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது. இன்று நாம் எல்லாவற்றிலும் முக்கியம் என்று கருதுவது நாளை மிக சர்வ சாதாரணமாக போய் விடுகிறது . எதுவுமே நிலையில்லை போலும் . என்றாலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் திறம் பட செய்ய முன் வந்தால் இறுதியில் எத்தனை இடர் வந்தாலும் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என்பதே உண்மை.

 

Link to comment
Share on other sites

அக்கோய்!கனக்க எழுதுறியள் வடிவாய் பந்தி பிரித்து பந்தியளுக்கிடையில் இடை வெளி விட்டு எழுதுங்கோ :) , பார்த்தால் வாசிக்க விருப்பம் வரவேணும்  :D இப்படிக் குப்பையாய் ....  :rolleyes:  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கோய்!கனக்க எழுதுறியள் வடிவாய் பந்தி பிரித்து பந்தியளுக்கிடையில் இடை வெளி விட்டு எழுதுங்கோ :) , பார்த்தால் வாசிக்க விருப்பம் வரவேணும்  :D இப்படிக் குப்பையாய் ....  :rolleyes:  :D 

 

இப்ப சரியா மீனா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்ப இப்படிப் பல சம்பவங்கள் எம்மைக் கடந்து போகின்றன , பின் நாம் அவற்றைக் கடந்து நினைவலைக்குள் புதைத்து விட்டுப் போய் விடுகின்றோம்...!

 

அப்படியோர் சம்பவத்தைக் குறிப்பிட்டது சுவாரசியமாய் இருந்தது மீராகுகன் ....!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பப்ப இப்படிப் பல சம்பவங்கள் எம்மைக் கடந்து போகின்றன , பின் நாம் அவற்றைக் கடந்து நினைவலைக்குள் புதைத்து விட்டுப் போய் விடுகின்றோம்...!

 

அப்படியோர் சம்பவத்தைக் குறிப்பிட்டது சுவாரசியமாய் இருந்தது மீராகுகன் ....!! :)

 

நன்றி சுவி . அன்று பட்ட பாட்டுக்கு இன்று மறந்தே போச்சுது .

மீண்டும் அதை நினவு கூறுகையில் எனக்கு அச் சம்பவம் மிகவும் சுவாரசியமாக இருந்தது .

அது தான் என் எண்ணத்தை அப்படியே எழுத்தில் பதிவு செய்தேன் .

Link to comment
Share on other sites

நிகழ்வுக்கு எப்படியோ உடைகள் வந்து சேர்ந்ததால் அந்நினைவுகள் படிப்படியாக அழிந்து விடுகின்றன.உடை நேரத்துக்கு வராமல் இருந்து பிள்ளைகளின் பெற்றோரிடம் திட்டு வாங்கி இருந்தீர்கள் எனில் நீண்ட நாட்களுக்கு நினைவு இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிகழ்வுக்கு எப்படியோ உடைகள் வந்து சேர்ந்ததால் அந்நினைவுகள் படிப்படியாக அழிந்து விடுகின்றன.உடை நேரத்துக்கு வராமல் இருந்து பிள்ளைகளின் பெற்றோரிடம் திட்டு வாங்கி இருந்தீர்கள் எனில் நீண்ட நாட்களுக்கு நினைவு இருந்திருக்கும்.

 

முற்றிலும் உண்மை . நல்ல வேளை தப்பித்தேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அதாவது மாணவிகளின் அளவு எடுக்கப்பட்டு தர மிகவும் கால தாமதாமாகி விட்டது . அது மட்டுமின்றி புதுவருட பண்டிகை விடுமுறை நெருங்கிய நேரத்திலேயே அம்மாணவிகளின் அளவு விபரங்கள் என் கையில் கிட்டியது . 

எந்த வேலைக்கும் முடிவு எல்லை என்ற ஒன்று மிக முக்கியம். மேல் குறிப்பிட்ட இடத்தில உள்ள பிழையால் உங்களுக்கு வேண்டாத தலைவலி.அவ்விடத்தில் நான் இருந்தால் நிச்சயமாய் ஏலாது என சொல்லி விட்டு விடுவன்.விமான பொதி (air cargo) சிறிது காலம் வேலை இப்படியான   பிரச்சினை நிதமும் மண்டைக்குள் தண்ணி ஓடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த வேலைக்கும் முடிவு எல்லை என்ற ஒன்று மிக முக்கியம். மேல் குறிப்பிட்ட இடத்தில உள்ள பிழையால் உங்களுக்கு வேண்டாத தலைவலி.அவ்விடத்தில் நான் இருந்தால் நிச்சயமாய் ஏலாது என சொல்லி விட்டு விடுவன்.விமான பொதி (air cargo) சிறிது காலம் வேலை இப்படியான   பிரச்சினை நிதமும் மண்டைக்குள் தண்ணி ஓடும். 

 

அடுத்த முறை கவனமாக இருப்பேன் . நன்றி அறிவுரைக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மீரா குகன்..

 

ஒரு செயலில் இறங்கும் போதே அதன் செயற்பாட்டு தளத்தில் வரும் சிரமங்களையும் அனுபவங்களையும் பெறமுடியும்.

 

அந்தவகையில் உங்களுடைய அனுபவம் 

அடுத்த முயற்சிகளுக்கு பெரிதும் உதவும்...

எனவே பின்னடைவுகளைக்கண்டு அல்லது இடையூறுகளைக்கண்டு தங்களது முயற்சிகளை நிறுத்திவிடாதீர்கள்

தங்களது பணிகள் தொடரவாழ்த்துக்கள்..

 

அடுத்த பணிகளுக்கு எம்மவரின் இந்த முயற்சிக்கு வாய்ப்பைக்கொடுங்கள்..

எமக்காக தம்மைத்தந்தவர்களது முயற்சி.

வளர்த்துவிடவேண்டியது எம் எல்லோரது கடமையாகும்.

நன்றி...

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/153430-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மீரா குகன்..

 

ஒரு செயலில் இறங்கும் போதே அதன் செயற்பாட்டு தளத்தில் வரும் சிரமங்களையும் அனுபவங்களையும் பெறமுடியும்.

 

அந்தவகையில் உங்களுடைய அனுபவம் 

அடுத்த முயற்சிகளுக்கு பெரிதும் உதவும்...

எனவே பின்னடைவுகளைக்கண்டு அல்லது இடையூறுகளைக்கண்டு தங்களது முயற்சிகளை நிறுத்திவிடாதீர்கள்

தங்களது பணிகள் தொடரவாழ்த்துக்கள்..

 

அடுத்த பணிகளுக்கு எம்மவரின் இந்த முயற்சிக்கு வாய்ப்பைக்கொடுங்கள்..

எமக்காக தம்மைத்தந்தவர்களது முயற்சி.

வளர்த்துவிடவேண்டியது எம் எல்லோரது கடமையாகும்.

நன்றி...

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/153430-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92/

 

இவர்களைப் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல . நிச்சயமாக எம்மவரிடம் பணியை கொடுப்பது எனக்கு மகிழ்ச்சியை தரும் .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.