Jump to content

திருமணத்திற்கு முன்னர் பாலுறவு சரியா?


Recommended Posts

கட்டுக்கோப்பானவர்கள் கலாச்சாரத்தை கடைப்பிடிப்பவர்கள் திருமணத்திற்கு முன்னரான உடலுறவுகளை விரும்பமாட்டார்கள். இதில் நானும் அடக்கம்.... :)

 

உலக முன்னேற்றம் நாகரீக வளர்ச்சி என குத்திமுறிபவர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம்.  :icon_idea:

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ஐயா :D 
தாங்கள் கலியாணத்துக்கு முன்னம் கலாச்சாரம் கட்டுபாட்டை கடை பிடிச்சியள் பாராட்டுக்கள்.  :lol:
கலியாணத்துக்கு பிறகு மனிசியின் தங்கை பரிமளத்தை கிளப்பினது மட்டும் எந்த கலாச்சாரம் கட்டுபாட்டுக்குள்ளை அடங்கும்?  :D  :icon_idea:
Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
ஆணும் பெண்ணும் காதலிக்கும் போது திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதில் தவறு இல்லை என்று எமது முன்னோர்கள் 
சங்க இலக்கியத்தில் அகத்திணை என்னும் பகுதியில் களவியல் ஒழுக்கம் என்று இதை சொல்கிறார்கள். திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொள்வதை காந்தர்வ மணம் என்று அழகாக சொல்கிறார்கள்.   :D  :icon_idea:
 
இந்த திரியை பார்க்கும் போது தமிழீழ காவல் துறையை ஆரம்பித்து வைக்கும் போது தலைவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. " ஒழுக்கத்தில் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் என்று இருவகை உண்டு. புற ஒழுக்கம் என்பது சமூகம் கலாச்சாரம் உறவினர் நண்பர்கள் காவல் துறை நீதி போன்றவற்றுக்கு பயந்து தப்பு தண்டா செய்யாமல் இருப்பது. அக ஒழுக்கம் என்பது சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதும் மாட்ட மாட்டேன் என்று நிச்சயமாக தெரியும் போதும் தப்பு செய்யாமல் இருப்பது. பெரும்பாலானவர்கள் புற ஒழுக்கத்தை கடை பிடிக்கிறார்கள். அக ஒழுக்கத்தை கடைபிடிப்பது மிகவும் கடினமானது. அதனை கடின பயிற்சி மனகட்டுபாடு மூலம் அடையலாம். நீங்கள் அக ஒழுக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் இலட்சியங்களை அடைய முடியும் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள் என்று தலைவர் சொன்ன போது அவர் எனக்கு கடவுளாக தெரிந்தார். எனது முற்பிறவியில் எனது குருநாதராக இருந்தவர் கூட ஒரு முறை தனது  அக ஒழுக்கம் காரணமாக தனது தொழில் சார் நேர்முக பரீட்சைகளில் சிறந்த பலனை அடைய முடிந்தது என்று சொன்னார். எனது முற்பிறவி குருநாதர் ஒரு முறை தனது வாழ்வில்  எந்த சந்தர்ப்பத்திலும் பொய் சொல்வதில்லை என்பதை தீவிரமாக கடை பிடிப்பதாக சொன்ன போது மானசீகமாக குருவின் பாதங்களில் சரணடைந்து விட்டேன்.  :D  :icon_idea:
 
பிற்குறிப்பு : குருஜி கூட காந்தர்வ மணம் புரிந்ததாக எங்கேயோ சொன்ன மாதிரி இருக்கே.  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஊரிலை ஆணுக்கும் பெண்ணுக்கும் கலியாண பேச்சு முற்று ஆகினாப்பிறகு ஓடிப்பிடிச்சு விளையாட  விடுவினம். :D  :icon_idea:
 
அது 20/25/30/35/40 எண்டாலும் எழுத்து எழுதினாப்பிறகுதான் கிஸ்சிங் டச்சிங் எல்லாம். :wub:
இப்ப என்னடாவெண்டால் 13லையே எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு 15லை பாட்டிமாதிரி கதைக்குதுகள்.30 வயதிலை கிழவன் கிழவி மாதிரி திரியுதுகள். :(
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ஐயா :D
தாங்கள் கலியாணத்துக்கு முன்னம் கலாச்சாரம் கட்டுபாட்டை கடை பிடிச்சியள் பாராட்டுக்கள்.  :lol:
கலியாணத்துக்கு பிறகு மனிசியின் தங்கை பரிமளத்தை கிளப்பினது மட்டும் எந்த கலாச்சாரம் கட்டுபாட்டுக்குள்ளை அடங்கும்?  :D  :icon_idea:

 

 

 

subrahmanyan_2.jpg

 

நாம் உமக்கு காட்சியளித்து அருள்பாலிக்கின்றோம். :lol:  :D

Link to comment
Share on other sites

எதிலும் ஒரு ஒழுங்குமுறையைக் கையாள்வது மனித வாழ்வியலுக்கு உகந்தது. மனிதனைத்தவிர மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் இந்த ஒழுங்குகளை இயற்கையே அளித்து வருகிறது. பாலுறவுக்கான ஒரு ஒழுங்கை மனித இனம் ஒழுங்குபடுத்தியுள்ளது. இந்த ஒழுங்கை ஒரு நாகரீகமாகவும் கருதலாம். ஆனாலும் இந்த நாகரீகத்தைப் பின்பற்றாதவர்கள் அனைவரையும் கெட்டவர்களாகவும் கருதமுடியாது. அதுபோலவே பின்பற்றும் அனைவரையுமே நல்லவர்கள் என்று கருதவும் முடியாது. பள்ளிக்கூடம் சென்று கல்விகற்பது ஒரு ஒழுங்குமுறைக்குள் உள்ளது, இருந்தும்  பள்ளிக்கூடம் சென்று கற்றவர்கள் எல்லோரும் அறிவாளிகளாகவும், கல்லாதவர்கள் அறிவற்றவர்களாகவும் இருப்பதில்லை. 
 
"டண்டணக்கா" சுட்டிக்காட்டியதைப்போல் கெட்டது என்ற கருத்துக்கு உட்பட்டதை அழகுபடுத்திக் காட்டிவிட்டால் வாழ்க்கையும் அழகாகும். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ப்பா வெளி நாட்டு மாப்பிள்ளைகள் எல்லாம் ஈழ பெண்களை கடத்தி செல்கிறார்கள் ஏனோ? அப்ப அங்க இருக்குற பெண்கள் என்ன ?...................... :rolleyes: :rolleyes:

ஏன் அங்க உள்ள பெண்களை திருமணம்  முடிக்க விரும்புவதில்லை அவங்க என்ன வேலி பாய்ந்தவங்களா??

தற்போது ஈழத்தில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பெண்கள் திருமணம் என்ற போர்வையிலும், வெளிநாட்டு மோகத்திலும்

நாங்க சாமியார போகிறோம் அவள் காட்டும் ராட்டாவில் என்ன வாழ்க்கை   daa :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இதுவே நம் பெரியோர்களின் விஞ்ஞானவிளக்கம் :D

இப்புடி இருந்தால் இன்னும் விளங்கும் :icon_idea:

 

15 வயசிலே திருமணமான எம் முன்னோர்கள் என்னன்டு 10-12 பெத்தவை, இல்லை வெள்ளைக்காரனுக்கு ஒவொருநாளும் தானே பாயுது!!!!!

30 வயத்திற்கு பின் பிரசவம் தொடங்கும் பெண்கள் 50வயதில் பல நரம்பியல் நோய்களுக்கு ஆளாவது தெரியாதா?

 

 

ஒரு பெண் / ஆண் பூப்படைந்ததும்.. திருமணத்துக்கு தயாராக முடியாது. ஏன் 16 வயதோடு.. பாலுறவுக்கு தயாராக இருந்தாலும்.. அந்த வயதில்.. கருவைச் சுமக்கும் அளவுக்கு ஒரு பெண் இருக்க வாய்ப்பில்லை. அதற்கான வயதாக.. 20 --- 21 ஐ எடுக்கலாம்.

 

அதேபோல்... 20 வயதில் கல்யாணம் கட்டிறவை.. 30 வயதை தாண்டி 4 வது பிள்ளையை பெத்துக்க முடியுதுன்னா.. ஏன்.. முதலாவது பிள்ளையை பெத்துக்க முடியாது..??!

 

ஒரு ஆண் 40 வயதில்.. 5 வது பிள்ளைக்கு அத்திவாரம் போடுறார் என்றால்.. ஏன் அவர் அந்த வயதில் முதலாவது பிள்ளைக்கு போட முடியாது.

 

எங்கையோ உதைக்குதே லாஜிக்கு. :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ப்பா வெளி நாட்டு மாப்பிள்ளைகள் எல்லாம் ஈழ பெண்களை கடத்தி செல்கிறார்கள் ஏனோ? அப்ப அங்க இருக்குற பெண்கள் என்ன ?...................... :rolleyes: :rolleyes:

ஏன் அங்க உள்ள பெண்களை திருமணம்  முடிக்க விரும்புவதில்லை அவங்க என்ன வேலி பாய்ந்தவங்களா??

தற்போது ஈழத்தில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பெண்கள் திருமணம் என்ற போர்வையிலும், வெளிநாட்டு மோகத்திலும்

நாங்க சாமியார போகிறோம் அவள் காட்டும் ராட்டாவில் என்ன வாழ்க்கை   daa :lol:

 

நாய்க்கு நடுக்கடலுக்கு போனாலும் நக்குத் தண்ணி தான்.. என்பார்கள். அதுபோல் தான் எங்கட மாப்பிள்ளைகள். அவர்களின் அடக்குமுறைக்கு.. சோம்போறித்தனத்துக்கு ஏற்ற ஒன்றைப் பார்த்து அவிழ்த்துக் கொண்டு வருகிறார்கள். அதுங்க வந்து ரெலிபோனும்..ரீவி சீரியலும் என்று அதே ஊரில இருந்து காலம் கழிச்சது போலத் தான் கழிக்குதுங்க. இடையில இரண்டு.. மூன்று குட்டியை போட்டுக்குதுங்க. அவ்வளவு தான்.

 

இந்த வாழ்கை மேற்கின் நாகரீகத்தில்.. ஊறிவிட்ட பெண்களுக்கு சரிவராது. அதுங்க கொஞ்சம் தங்கட விருப்பு வெறுப்புக்கு ஏற்ப வாழ்க்கையை சுதந்திரமாக தீர்மானிக்க நினைக்குதுங்க. அதில தப்பே இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் தெரிவு.

 

முனிவர்ஜீ... ஒன்று ராரா காட்டுதுன்னா.. உங்களை கடவுள் ஆசீர்வதிச்சிருக்கிறார் என்று நம்பிக்கிட்டு.. பதிலுக்கு ராரா பாய் பாய் சொல்லிட்டு.. வாழ்க்கையை தொடருங்கள்.

 

ப்கருக்காக.. வாழ்க்கை இல்லை. எங்கள் வாழ்கை எங்களுக்காக. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு நடுக்கடலுக்கு போனாலும் நக்குத் தண்ணி தான்.. என்பார்கள். அதுபோல் தான் எங்கட மாப்பிள்ளைகள். அவர்களின் அடக்குமுறைக்கு.. சோம்போறித்தனத்துக்கு ஏற்ற ஒன்றைப் பார்த்து அவிழ்த்துக் கொண்டு வருகிறார்கள். அதுங்க வந்து ரெலிபோனும்..ரீவி சீரியலும் என்று அதே ஊரில இருந்து காலம் கழிச்சது போலத் தான் கழிக்குதுங்க. இடையில இரண்டு.. மூன்று குட்டியை போட்டுக்குதுங்க. அவ்வளவு தான்.

 

இந்த வாழ்கை மேற்கின் நாகரீகத்தில்.. ஊறிவிட்ட பெண்களுக்கு சரிவராது. அதுங்க கொஞ்சம் தங்கட விருப்பு வெறுப்புக்கு ஏற்ப வாழ்க்கையை சுதந்திரமாக தீர்மானிக்க நினைக்குதுங்க. அதில தப்பே இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் தெரிவு.

 

முனிவர்ஜீ... ஒன்று ராரா காட்டுதுன்னா.. உங்களை கடவுள் ஆசீர்வதிச்சிருக்கிறார் என்று நம்பிக்கிட்டு.. பதிலுக்கு ராரா பாய் பாய் சொல்லிட்டு.. வாழ்க்கையை தொடருங்கள்.

 

ப்கருக்காக.. வாழ்க்கை இல்லை. எங்கள் வாழ்கை எங்களுக்காக. :):icon_idea:

 

நாம எப்பவும் உஷாரு தெரியும்தானே நெடுக்கண்னை இந்த பொண்ணுங்க எல்லாம் இப்படித்தானே நமக்கு தெரியாததா என்ன :)

 

Link to comment
Share on other sites

யாருக்கும் இதனால் எந்த வித விளைவுகளும் உருவாகாமல் இருந்தால் தப்பில்லை .  உடலால் மட்டும் ஒழுக்கம் இருந்தும் மனத்தால் நிறையபேருடன் அனுபவிப்பது போல் மனதை அலையவிடுவது தான் பெரும்பலனவர்களின் நிலைப்பாடாக உள்ளது ... 
 
இதனை விட ஆசையை அனுபவிப்பதில் தப்பில்லை ... ஆனால் இதன் நல்லது கெட்டவைகள் தெரிந்து இருக்க வேண்டும் ... பெண்கள் கவனமாக இருப்பது நல்லம் .. ஏனெனில் பதிக்கபடுபவர்கள் அவர்கள்தான் .....
 
நம்பிக்கை தன்மை முக்கியம் ... உங்கள் காதலனுடன் என்றால் ... அவன் உங்களை ஏமாற்ற மாட்டன் என்பதற்க்கு என்ன வலுவான காரணம் ஏதும் உண்டா ?  .
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாதாசன் பல இடங்களில் உங்கள் கருத்துக்களைப் பார்த்து சுவற்றில் மண்டையை மோதி இருக்கிறேன்.

ஆனால் நீங்கள் மேலே சொன்னது - ஐ லைக் இட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாருக்கும் இதனால் எந்த வித விளைவுகளும் உருவாகாமல் இருந்தால் தப்பில்லை .  உடலால் மட்டும் ஒழுக்கம் இருந்தும் மனத்தால் நிறையபேருடன் அனுபவிப்பது போல் மனதை அலையவிடுவது தான் பெரும்பலனவர்களின் நிலைப்பாடாக உள்ளது ... 
 
இதனை விட ஆசையை அனுபவிப்பதில் தப்பில்லை ... ஆனால் இதன் நல்லது கெட்டவைகள் தெரிந்து இருக்க வேண்டும் ... பெண்கள் கவனமாக இருப்பது நல்லம் .. ஏனெனில் பதிக்கபடுபவர்கள் அவர்கள்தான் .....
 
நம்பிக்கை தன்மை முக்கியம் ... உங்கள் காதலனுடன் என்றால் ... அவன் உங்களை ஏமாற்ற மாட்டன் என்பதற்க்கு என்ன வலுவான காரணம் ஏதும் உண்டா ?  .

 

 

கவனமாக இருந்தால் யாருடனும் எப்போதும் கலவியில் ஈடுபடலாமா?
மனத்தால் நிறையப்பேருடன் அனுபவிப்பதை விட பிரீதி / குளிசைகளுடன் நிறையப்பேருடன் நேரடியாக இச்சைகளை தீர்த்துக்கொள்ளலாமா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லிருந்தா பாக்குப் போடலாம். :)

Link to comment
Share on other sites

வெள்ளைக்காரர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் செய்யலாம் என்பதல்ல..

இவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். ஒருவேளை குழந்தை பிறக்கும் சூழ்நிலை வந்துவிட்டால் தந்தை என்கிற முறையில் அந்த ஆண் குழந்தைப் பராமரிப்புச் செலவில் ஒரு பங்கை ஏற்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நீதிமன்றம் மூலம் அதை செய்விக்கலாம். அதுக்கும் சரிவராவிட்டால் அரசாங்கமே ஆணின் சம்பளத்தை பிடித்து தாய்க்கு தரவும் வழி உள்ளது. தந்தைக்கு வருமானமே இல்லையென்றால் அரசு பணம் தரும்.

ஆனால் தெற்கு ஆசிய நாடுகளில் குழந்தைக்கோ தாய்க்கோ என்ன பொருளாதாரப் பாதுகாப்பு உள்ளது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லிருந்தா பாக்குப் போடலாம். :)

 

திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா? 

Link to comment
Share on other sites

திருமணத்திற்கு முன்னர் பாலுறவு சரியா?   இல்லை, இல்லை, இல்லை

 

நாங்கள் தமிழர்கள், எங்கு சென்றாலும் எந்த நாட்டில் இருந்தாலும் எமது ஒழுக்கம், பண்பாடு பேணப்பட வேண்டும்!!

"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" - வள்ளுவர் வாக்கு

ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

வெள்ளைக்காரர் என்பவர்கள் ஒன்றும் வேற்றுக்கிரக வாசிகள் இல்லை. Swinging 60s இல்தான் அவர்களும் மாறினார்கள். அதுக்கு முன் அவர்கள் எம்மை விட கட்டுப்பெட்டித்தனமாய் வாழ்ந்தார்கள்.

கஜுராஹோ சிற்பங்களை கண்டு அதிர்ச்சியடைந்த விக்டோரியன் வெள்ளைகள் அதை ஒரு பாவாகாரியம் என்று கருதி புதர் மண்ட விட்டார்கள்.

இப்போதும் யாழ்ப்பாணத்தில் இல்லாத கட்டுப்பெட்டித்தனம் யூ எஸ் சின் பைபிள் பெல்டில் உண்டு.

ஆனால் நீங்கள் சொல்லுவதுபோல் திருமணம் ஆகாமலே single mother ஆகும் கலாச்சாரம் தெற்காசியாவில் (இன்னும்) பரவவில்லை என்பதால் அங்கே தாய்/சேய் பாடு திண்டாட்டம்தான். ஆனால் alimony எனும் paternal child support அந்த காலத்தில் இருந்தே இலங்கை சட்டத்தில் இருக்கு. ஆனாலும் கட்டாயம் social stigma இருக்கும். குறிப்பாக பெருநகரங்களுக்கு வெளியே.

அதுக்குத்தான் பிரபாதாசன் பெண்கள் "கவனமாய்" இருக்க வேணும் ( ரப்பர் வாங்கலியோ ரப்பர்) என்கிறார் :)

குசா அண்ணை,

எல்லாம் நம்பிக்கை/புரிந்துணர்வை பொறுத்தது அண்ணை.

It's complicated, open relationship, இப்படி திருமணத்துக்கு பின்னும் முன்னும் பலவகையில் நடக்குது விளையாட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனா,

ஒருவனுக்கு ஒருத்திதான் தமிழ்கலாச்சாரம் எண்டு காட்டும் ஆதாரம் ஒன்றையேனும் தாருங்கள்?

இல்லை என்பதற்க்கு இதிகாச, புராண, காப்பியங்களில் இருந்து பல உதாரணங்களை என்னால் காட்ட முடியும்.

திருமணத்துக்கு முன் பாலுறவு ( கட்டிக்க போகும் ஒருவனுடன் மட்டும்) இருப்பதில் என்ன ஒழுக்க கேடு இருக்கிறது?

தாலி கட்டுவதற்கு முன் செய்தால் ஒழுக்க கேடு, ஒரு சரட்டை கழுத்தில் மாட்டியபின் அதே ஆளுடன் செய்தால் அது உத்தமித்தனம் என்பது ரொம்ப செயற்கையாய் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரங்களே ஆசிய / இந்து கலாச்சாரங்கள் வாழ்க்கைக்கு நல்லதெண்டு படையெடுக்கிறாங்கள்....எங்கடையள் என்னடாவெண்டால் வெள்ளைக்காரன் கலாச்சாரத்துக்கு காவடி எடுக்குதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளைக்கு பழகிப்பாப்பம்......சரி வரேல்லையெண்டால் வேறையொண்டை பாப்பம். இதுதான் இப்ப லேட்டஸ்......இது இப்பிடியே தொடர்ந்து கொண்டு போகும்... :lol:  :D


அது சரி அதிலை என்ன தப்பு எண்டு கேட்கிற உலகமடா இது.  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை,

மாறாதது என்பது மாறாதது என்கிற வார்த்தை மட்டுமே.

உங்களுக்கு பெண் ஜீன்ஸ் பாண்ட் போடுவது சாதாரணம் - 100 வருடம் முந்திய தமிழர் பரம்பரைக்கு அதுவே தெய்வ குற்றம்.

இப்போ பிக்கினியை பார்த்து நாம் முகம் சுழிக்கிறோம் - மேலாடை என்பதே தமிழ்கூறும் நல்லுலகுக்கு களப்பிரர் காலத்தின் பின்பே அறிமுகமாயிற்று அதுவரை டுபீஸ் பிகினிதான் ( அதுதான் மார்பு கச்சை) எங்கட மூதாதைகள் கட்டினது.

இவ்வளவு ஏன் 50 வருடங்கள் முன்பு வரை கோவணத்துடன் வீதியில் நடப்பது சர்வசாதாரணம் - இப்போ?

குந்தி தேவிக்கு முந்திய ஒரு சிங்கிள் மதர் உண்டா?

திரெளபதைக்கு முந்திய ஒரு multiple sex partners வைதிருந்த பெண் உண்டா?

நேற்றைய நாகரீகம், இன்றைய அநாகரீகம், இன்றைய அநாகரீகம் நாளைய நாகரீகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனா,

ஒருவனுக்கு ஒருத்திதான் தமிழ்கலாச்சாரம் எண்டு காட்டும் ஆதாரம் ஒன்றையேனும் தாருங்கள்?

இல்லை என்பதற்க்கு இதிகாச, புராண, காப்பியங்களில் இருந்து பல உதாரணங்களை என்னால் காட்ட முடியும்.

திருமணத்துக்கு முன் பாலுறவு ( கட்டிக்க போகும் ஒருவனுடன் மட்டும்) இருப்பதில் என்ன ஒழுக்க கேடு இருக்கிறது?

தாலி கட்டுவதற்கு முன் செய்தால் ஒழுக்க கேடு, ஒரு சரட்டை கழுத்தில் மாட்டியபின் அதே ஆளுடன் செய்தால் அது உத்தமித்தனம் என்பது ரொம்ப செயற்கையாய் இருக்கிறது.

கோஷான், நீங்கள் சொல்வது போன்ற ஒரு வாழ்க்கை முறை, புராதன இந்தியாவிலும்.. மற்றும் சில ஆபிரிக்க நாடுகளிலும் இருந்ததாக வாசித்துள்ளேன்!' பின்னர் 'எயிட்ஸ்' போன்ற ஒரு விதமான நோய் பரவியதால் பாரிய அழிவு ஏற்பட்டதாயும், அதைத் தொடர்ந்து... சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலைக்கு.. சமூக அமைப்பு தள்ளப்பட்டதாகவும் அறிந்தேன்! இதுவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரைமுறை உருவாகக் காரணம் என்று சொல்கிறார்கள்!

 

தலைவன், தலைவி, களவுகாதல், காந்தர்வ மணம் எல்லாமே தமிழ் இலக்கியங்களில் இருக்கின்றன! அந்தக் காலத்தில் 'கூட்டுக் குடும்ப' வாழ்க்கை முறை இருந்ததால்.. குழந்தைகள் பிறந்தாலும், அவை அநாதரவாக விடப்படும் சாத்தியங்கள் மிகவும் குறைவாக இருந்தன! இந்த முறை இப்போதும் சில ஆபிரிக்கக் கிராமங்களில் நடைமுறையில் உள்ளதை அவதானித்துள்ளேன்! ஒரு பெண் குழந்தை பெற்றால், அந்தக் குழந்தையின் தகப்பன் யாரென்று தெரியாவிட்டால்.. அந்தக் குழந்தையின் தாய் வழிப் பாட்டனாரின் பெயரை அந்தக் குழந்தை தனது முதன்மைப் பெயராக எடுத்துக் கொள்கின்றது!

 

எமது தற்போதைய சமூக அமைப்பில், திருமணமான உறவுகளே.. உடைந்து போகின்ற கால கட்டத்தில் இப்படியான ' திருமணத்துக்கு முன்பான பாலியல் உறவுகளின்' விளைவுகள் மிகவும் விரும்பத் தகாததாகவே இருக்கும்! ஒரு தரமான ' சமூகக் கொடுப்பனவுத் திட்டம்' கூட எம்மிடம் இல்லை!

 

அத்துடன் இப்படியான உறவுகள் அனுமதிக்கப் பட்டால்... ஒரு சிகரட் தானே .. குடிச்சுப் பாப்பம் எண்ட மாதிரி ஆரம்பித்து.. இறுதியில் ' சிகரட் பழக்கமே' ஒருவரை ஆக்கிரமித்து விடுவது போல... பிற்கால வாழ்வில் ' பிறன் மனை விளைதலே' முடிவாக முடியும்!

 

மற்றும் படிக்கு, அவரவர் வளர்ப்பு முறை, வளரும் சூழ்நிலை போன்றவையே இப்படியான 'திருமணத்துக்கு முன்னரான' உறவுகளைத் தீர்மானிக்கின்றன!

 

எல்லா உறவுகளும் திருமணத்தில் முடிந்துவிட்டால், எமது ஊரில் தற்கொலைகளே இருந்திருக்காது! அதனால் தானோ என்னவோ... ' கவனம்' என்று எமது முன்னோர்கள் சொல்லி வைத்துச் சென்றுள்ளார்கள்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசா அண்ணை ஒரு சைவப் பழமெல்லே, அதுதான் அந்த உதாரணங்கள்.

தவிரவும் திரெளபதை அம்மன் ஒரு பண்டைய தமிழ் சிறு தெய்வம் கூட.

ஈசன் என்று ஒருவர் வருவார் அவரிட்ட கேளுங்கோ சிவனும், குமார தெய்வமும் அம்மனும் கூட தமிழ் கடவுளர்தான் என்பார்.

இதில் சிவனுக்கு 2. குமார தெய்வத்துக்கும் 2.

கண்ணகி - காலத்திலே மாதவியும் அவர் கூட்டமும் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளவே பட்டிருந்தன.

முன்பே சொன்னேன் பாரதி சொல்லும் வதுவை என்பது வேறொண்டும் இல்லை - living togeather தான்.

இப்படி கனக்கச் சொல்லலாம். எதுக்கும் நீங்களும் கொஞ்சம் தேடிப் பாருங்கோவன்.

அருமையான பதிவு புங்கை. பெருமாளின் கேள்விக்கு உங்கள் பதிவே நல்ல பதிலாயும் அமைக்கிறது.

Link to comment
Share on other sites

 

கவனமாக இருந்தால் யாருடனும் எப்போதும் கலவியில் ஈடுபடலாமா?
மனத்தால் நிறையப்பேருடன் அனுபவிப்பதை விட பிரீதி / குளிசைகளுடன் நிறையப்பேருடன் நேரடியாக இச்சைகளை தீர்த்துக்கொள்ளலாமா?

 

செக்ஸ் என்பது நாங்களாகவே உருவாக்கியது   இல்லை அது எங்கள் உடலில் உள்ள ஒரு உணர்வு . அது சிலருக்கு கட்டுக்குள் இருக்கும் , சிலரால் முடியாது ... உதாரணமாக பசியை போல ... சிலருக்கு  அதனை அடக்கி வைக்கும் தன்மை அதிகம் . ஆனால் சிலர் அடிக்கடி பசிக்குது என்று கத்துவார்கள் .....ஏனெனில் அது  உடல் சார்ந்த விடயம் ....
 
எங்கள் கலாசாரத்தில் நல்லதும் உண்டு கெட்டவைகளும் உண்டு .   திறந்த மனதுடன் சொல்லுங்கள் உங்களுக்கு பலரை பர்க்கும் போது மனம் சன்சலப்படுவது இல்லையா ? மனதுக்குள் அழுத்தத்தினை வைத்து கடைசியில் மனம் வெடித்து சாவதனை விட அந்த ஆசையை தீர்ப்பதில் என்ன  தப்பு ...
 
தமிழ் கலாசாரம் என்று என்னத்தை கண்டீர்கள் .... வெளிநாடுகளில் சிவப்பு விளக்கு பகுதிகளை அரசாங்கங்கள் அனுமதித்து இருப்பது ஒரு சிறந்த விடயமே ... ஆசை அதிகம் உள்ளவர்கள்  அங்கு செல்லலாம் .... எங்கள்  இடங்களில் பாருங்கள்  அப்பாவி பெண்களை நாசம் செய்கின்றார்கள் ....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசிக்குது என்பதற்காக சாப்பாட்டுக் கடையில் கொள்ளை அடிக்க முடியாது. அதை தடுப்பது சமூக ஒழுங்கு. அதுபோல் தான்.. பாலியல் என்பது சமூக ஒழுங்குக்கு உட்பட்ட ஒரு உணர்வாக இருப்பதில் பல நன்மைகள் இருக்கிறது.

 

வெள்ளை வெள்ளை என்று உதாரணம் காட்டுகிறோம்.. பெருமளவு வெள்ளைகளும் ஒருவன் ஒருத்தின்னு தான் வாழுதுகள். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு அந்த நிலையை விட்டு விலக வேண்டியவர்கள் அதை இட்டு சஞ்சலப்படாமல் தமக்கு என்ன தேவையோ அதை நோக்கி செயற்படுகிறார்கள். அமெரிக்காவிலும் வேர்ஜினிற்றி பேசப்படுகிறது. காக்கப்படுகிறது. அரேபியாவிலும் அதே. ஆபிரிக்காவிலும் அதே. எம் சமூகம் அதனை கற்பு என்கிறது. பதங்கள் மாறனினாலும் மக்கள் உணர்வுகள்..பாலியல் சார்ந்து ஓர் ஒழுக்கத்தை எதிர்பார்க்கிறது.

 

பாலியலையும் பசியையும் ஒப்பிடுவதை நான் சரியென்று கொள்ளமாட்டேன். பசி என்று குழந்தை அழுகிறது. பாலியல் என்று அது அழுவதில்லை. இயற்கை கூட பாலியலை.. ஒரு கால எல்லைக்குள் கட்டுப்படுத்த நினைக்கின்ற போது.. நாம் ஏன் எல்லை மீறணும்..?! அங்கு ஒரு ஒழுக்கத்தைப் பேணுவது பல சமூக தனி நபர் பாதுகாப்புக்கும் ஒழுங்குக்கும் உதவும் என்பது எங்கள் தனிப்பட்ட கருத்தாகும். அதையே நாங்க கடைப்பிடிக்கிறோம். :icon_idea::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.