Jump to content

காற்றில் கலந்த இசை


Recommended Posts

காற்றில் கலந்த இசை 17 - பேரழகின் மர்மப் புன்னகை

டிக் டிக் டிக்

டிக் டிக் டிக்

கொலை, வைரக் கடத்தல், போலீஸ் துரத்தல் என்று ‘க்ரைம் நாவல்கள்’ பாணியில் அமைந்த கதையை வைத்து பாரதிராஜா இயக்கிய திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ (1981). ஃபேஷன் புகைப்படக் கலைஞராகக் கமல் ஹாஸனும், மாடலாக மாதவியும் நடித்திருந்த இப்படத்தில் ராதா, ஸ்வப்னா, நிஷா போன்ற 80-களின் தேவதைகளும் நடித்திருந்தார்கள்.

சரிகாவுக்குக் கவுரவ வேடம். டைட்டிலுக்கு முன்பே கொல்லப்பட்டுவிடுவார். மாடலிங் உலகத்தின் மறுபக்கம், தொழிலதிபர்களின் வித்தியாசமான ஆர்வம், காதல், காமம் என்று பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு முற்றிலும் புது அனுபவத்தைத் தந்தன. மேற்கத்திய இசை மற்றும் பியூஷன் பாணி இசையில் அமைந்த பாடல்களை இப்படத்துக்குத் தந்திருந்தார் பாரதிராஜாவின் இசைத் தோழன் இளையராஜா.

தொடரும் நிழல் உலகத்தின் ஆபத்து அறியாமல் அதில் சிக்கிக்கொள்ளும் கதாபாத்திரங்களின் நிலையை உணர்த்தும் பாடல்கள் திரைப்படங்களில் நிறைய உண்டு. ‘வல்லவன் ஒருவன்’ திரைப்படத்தின் ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ பாடலுக்கு முன்பிருந்தே இவ்வகைப் பாடல்கள் தனி அந்தஸ்தைப் பெற்றவை. அந்த வகையில் மேலடுக்கில் இனிமையும், உள்ளார்ந்த ரகசியத்தின் மர்மமும் புதைந்திருக்கும் பாடல்களைக் கொண்ட படம் இது. படத்தின் தொடக்கத்தில் மாடல் அழகியின் மர்ம மரணம்; அதன் பின்னணியில் இருக்கும் நிழல் உலகம் என்ற பீடிகைக்குப் பின்னர் ஒலிக்கத் தொடங்கும் பாடல் ‘இது ஒரு நிலாக் காலம்’.

ஓபரா கோரஸ் பாணியில் ஒலிக்கும் ஆண் பெண் குரல்களின் சங்கமத்தின் தொடர்ச்சியாக மெல்ல அதிரும் ட்ரம்ஸ், மென்மையாகக் கசியும் கிளாரிநெட், துள்ளலான கிட்டார் என்று இசைக் கருவிகளின் கலவைக்குப் பின்னர் பல்லவியைத் தொடங்குவார் ஜானகி.

மாதவி, ராதா, ஸ்வப்னா ஆகிய மூன்று மாடலிங் அழகிகள் தோன்றும் இப்பாடலில் பெண்கள் தங்கள் தனித்துவம் மற்றும் வசீகரம் குறித்து பெருமிதம் கொள்வது போன்ற பாடல் வரிகளை எழுதியிருப்பார் வைரமுத்து (‘அழகி பார்த்தாலே அருவி நிமிராதோ’). மெலிதான துள்ளலுடன் நகரும் தாளக்கட்டின் மீது நளினமாகப் பரவும் பாடல் இது. ஈர்க்கும் ரகசியக் குரலில் பாடியிருப்பார் ஜானகி.

வாகனங்கள் விரையும் சாலைகளின் விளிம்பில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், கேளிக்கைக் கொண்டாட்டங்களுக்குப் பின்னே இருக்கும் மர்மம், ஐரோப்பிய மணம் வீசும் அழகு சாதனப் பொருட்கள் என்று பல்வேறு படிமங்களின் இசை வடிவமாக உருவாக்கப்பட்ட இந்தப் பாடலின் இடையே டி.வி. கோபாலகிருஷ்ணனின் குரலில் ஒரு ஜதி கோவையைச் சேர்த்திருப்பார் இளையராஜா.

துள்ளும் ட்ரம்ஸுடன் போட்டிபோடும் ‘நாஹ்ருதன.. தீரனன.. தீரனன..’ எனும் அவரது இந்த ஜதி, இப்பாடலுக்குப் புது நிறத்தைக் கொடுக்கும். பின்னர் இதே பாணியில் ‘சின்ன வீடு’ திரைப்படத்தின் ‘அட மச்சம் உள்ள மச்சான்’ பாடலிலும் டி.வி. கோபாலகிருஷ்ணனின் ஜதியைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா.

பாடல் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் டிரம்ஸ், இரண்டாவது சரணம் முடிந்து பல்லவி தொடங்குவதற்கு முன்னதான இடைவெளியில் சற்றே ஸ்தம்பித்து நின்று மீண்டும் ஒலிக்கும். இப்பாடலின் தனிச்சிறப்பு இது. இரண்டாவது நிரவல் இசையில் ஆண் குரலின் சாயலில் ஜானகியின் ஹம்மிங் ஒலிக்கும்.

இசைக் கருவிகளில் நிகழ்த்திய பரிசோதனைகளுக்கு நிகராக ஜானகியின் குரலில் வெவ்வேறு ஒலிகளைக் கொண்டுவந்தவர் இளையராஜா. இளையராஜாவின் கற்பனை வடிவங்களை உள்வாங்கிக்கொள்ளும் திறன் ஜானகியிடமும், ஜானகியின் பன்முகத் தன்மையை உணர்ந்துகொள்ளும் திறன் இளையராஜாவிடமும் இருந்தது. இருவரின் இந்தப் பரஸ்பரப் புரிதல் தமிழர்களின் ரசனைக்கு ராஜ விருந்து படைத்தது.

கிட்டத்தட்ட இதேபோன்ற மர்மங்கள் நிறைந்த ‘பார்ட்டி சாங்’காக ஒலிக்கும் ‘நேற்று இந்த நேரம் ஆற்றங்கரையோரம்’ பாடலை லதா ரஜினிகாந்த் பாடியிருப்பார். இப்படத்தின் ஒரே டூயட் பாடல் ‘பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே’. ஜேசுதாஸும் ஜென்ஸியும் பாடிய இப்பாடல், பரதநாட்டியத்துக்கான ஜதியுடன் தொடங்கும். பாடலின் தொடக்கத்தில் கர்நாடக இசைப் பாணியில் மிருதங்கத்தின் தாள நடைக்கேற்ப `ஐ லவ் யூ’ என்று பாடுவார் ஜேசுதாஸ்.

இப்பாடல் காட்சியில் பரதநாட்டியமாடும் மாதவியின் அகன்ற கண்கள் காட்டும் பாவங்களில் மயங்கும் கமல் ஹாஸன் செயலற்று அமர்ந்திருப்பார். கர்நாடக இசையையும் மெல்லிசையையும் கலந்து உருவாக்கிய இப்பாடலில் குழையும் வயலின் இசையை ஆங்காங்கே இழைய விட்டிருப்பார் இளையராஜா.

இப்படம் ‘கரிஷ்மா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. புகழ்பெற்ற இசைமேதை ஆர்.டி. பர்மன் இசையமைத்திருந்தார். எனினும் ‘டிக் டிக் டிக்’ படத்தின் பாடல்களுக்கு இணையாக ஒரு பாடலைக்கூட அவரால் தர முடியவில்லை. கதைக் கருவுக்கு இணையான இசையை உருவாக்குவதில் இளையராஜாவுக்கு இருக்கும் ஈடுபாடுதான் இப்படத்தின் பாடல்களைத் தனித்துவத்துடன் மிளிரச் செய்கிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-17-பேரழகின்-மர்மப்-புன்னகை/article7536555.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

காற்றில் கலந்த இசை 11: தொன்ம நகரத்தின் தேவகானம்

kki_2460770f.jpg
 

திரைப்படங்கள் அடைந்த தோல்வி காரணமாகப் பரவலாக அறியப்படாமல் போன நல்ல பாடல்கள் பல உண்டு. குறிப்பாக, பெயர் தெரியாத படங்களின் பாடல்களாக நினைவுகளில் பதிவாகிவிட்ட இளையராஜாவின் அற்புதமான பாடல்கள் ஏராளம். இதுபோன்ற பாடல்களைக் கேட்கும்போது, யாரும் அறியாத ரகசிய வனத்தைக் கண்டடையும் மனக்கிளர்ச்சி நம்முள் ஏற்படும். நூலகத்தில் பலர் கண்ணிலும் படாத அலமாரியில் வாசகர்களுக்காகக் காத்திருக்கும் புத்தகங்களைப் போன்றவை இப்பாடல்கள்.

இன்று மெய்நிகர் புதையலைப் போல ஏராளமான விஷயங்களைக் கொண்டிருக்கும் இணையத்தில் இதுபோன்ற பாடல்கள் பார்க்க, கேட்க கிடைக்கின்றன. காலத்தின் நிறம் ஏறிய பழைய புகைப்பட ஆல்பங்களைப் புரட்டிப் பார்க்கும் அனுபவத்தைத் தரும் பாடல்கள் இவை. அந்த வரிசையில் இடம்பெறும் பாடல், ‘எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ.’ இடம்பெற்ற திரைப்படம் ‘இது எப்படி இருக்கு’. கருப்பு-வெள்ளைத் திரைப்படம் இது.

குமுதம் இதழில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘அனிதா இளம் மனைவி’எனும் தொடர்கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 1978-ல் வெளியானது. ஆர். பட்டாபிராமன் இயக்கிய இப்படத்தில் நாயகி பாத்திரத்தில் தேவி நடித்திருந்தார். கமல், ரஜினி போன்ற இளம் நடிகர்களின் வருகைக்குப் பிறகு சந்தை மதிப்பை இழக்கத் தொடங்கிய நடிகர்களில் ஒருவரான ஜெய்சங்கர்தான் படத்தின் நாயகன்.

சற்று ஜீரணிக்க முடியாத நடிகர் தேர்வுதான். சுஜாதாவின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட எந்தப் படமும் அவர் மனதுக்குத் திருப்தி தராதது. இதை அவரே பல முறை குறிப்பிட்டிருக்கிறார் (அவர் திரைக்கதை, வசனம் எழுதிய படங்கள் இதில் அடங்காது). அந்த வகையில் யாருடைய நினைவிலும் நிற்காத படமாக வந்துசென்ற இப்படத்தில், இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடல் மட்டும் தனித்த அழகுடன் மிளிரும்.

‘லாலா..லாலலா..’ என்று தொடங்கும் எஸ்.ஜானகியின் ஹம்மிங்கைத் தொடர்ந்து வானில் இருந்து இறங்கிவரும் வயலின் இசையைத் தந்திருப்பார் இளையராஜா. புராதன நகருக்கு வெளியே சாலையைப் பார்த்தபடி நிற்கும் மரங்களின் இலைகளை அசைக்கும் காற்றாக ஒலிக்கும் இசை அது. அந்த இசையின் முடிவில், பாடலின் பல்லவியைத் தொடங்குவார் ஜானகி.

குரலாலேயே இயற்கையை அளக்க முயல்கிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அவரது குரல், வானில் மிதந்து மெல்ல இறங்கிவரும். புல்லாங்குழல், வயலின் கலவையாக சில விநாடிகள் ஒலிக்கும் நிரவல் இசையைத் தொடர்ந்து அனுபல்லவியைத் தொடங்குவார் ஜேசுதாஸ். ‘பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை நாணம் கொள்ள…’ என்று தொடங்கி ‘எங்கும் நிறைந்த இயற்கையின் சுகம்’தரும் பல்லவியுடன் இணைந்துகொள்வார்.

பெண் குரல்களைக் குயில் குரல்களைப் போல் ஹம்மிங் செய்ய வைக்கும் பாணியை இளையராஜா புகுத்திய பாடல்களில் இப்பாடல் முதன்மையானது என்று சொல்லலாம். குயில் போலவே ஒலிக்கும் புல்லாங்குழல் இசையைத் தொடர்ந்து அந்த ஜாலத்தை இளையராஜா ஜானகி இணை நிகழ்த்திக் காட்டியிருக்கும். ‘குகுகுக்கூ… குகுகுக்கூ…’ என்று தொடங்கும் ஜானகியின் ஹம்மிங்குடன் மற்றொரு அடுக்கில் சற்று தாழ்ந்த குரலில் இதே ஹம்மிங்கை மற்றொரு பெண்குரல் பாடும் (அதுவும் ஜானகியின் குரல்தான்).

இந்த ஹம்மிங்கைத் தொடர்ந்து பரவசமூட்டும் வயலின் கோவை ஒன்று குறுக்கிடும். பாடிக்கொண்டே பறந்து செல்லும் குயில்கள் மஞ்சள், சிவப்பு, செம்பழுப்பு வண்ணக் கலவையாக விரிந்து செல்லும் வானைக் கடந்து செல்வது போன்ற காட்சிப் படிமம் மனதில் தோன்றி மறையும்.

சுமார் ஆறு நிமிடங்கள் கொண்ட இப்பாடலின் ஒவ்வொரு நொடியிலும் எதிர்பாராத ஆச்சரியங்களை வைத்திருப்பார் இளையராஜா. வழக்கம்போல இரண்டே சரணங்கள் கொண்ட இப்பாடலின் நிரவல் இசைக் கோவைகள் பல விநாடிகள் நீளம் கொண்டவை. பெரிய கேன்வாஸில் பிரம்மாண்டமான ஓவியத்தை வரையும் ஓவியன், ஆங்காங்கே ஓவியத்தின் அழகை ரசித்து ரசித்து மேலும் செழுமைப்படுத்துவதுபோல், நிரவல் இசைக்கோவையின் நீளத்தை அதிகரித்துக்கொண்டே செல்வார் இளையராஜா.

இரண்டாவது சரணத்தில் வீணை இசையைத் தொடர்ந்து வரும் புல்லாங்குழல் இசை, எங்கோ ஒரு தொலைதூரக் குளிர்ப் பிரதேசத்தைக் கடந்து செல்லும் மேகத்தைப் போல் மிதக்கும். சரணத்தில், ‘தேனாக…’ என்று வானை நோக்கி உயரும் ஜேசுதாஸின் குரலுடன், ‘லலலல..லலல..லலல’ என்று சங்கமிக்கும் எஸ். ஜானகியின் ஹம்மிங் இந்தப் பாடலுக்கு ஒரு தேவகானத்தின் அழகைத் தரும். அத்தனை துல்லியமான இசைப் பதிவாக இப்பாடல் இப்போது கிடைக்கவில்லை. ஆனால், தெளிவற்ற ஒலிவடிவில் இருப்பதே இப்பாடலுக்கு ஒரு தொன்மத் தன்மையைக் கொடுக்கிறது.

பி. சுசீலா பாடும் ‘தினம் தினம் ஒரு நாடகம்’என்றொரு பாடலும் இப்படத்தில் உண்டு.

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-11-தொன்ம-நகரத்தின்-தேவகானம்/article7382471.ece?widget-art=four-all

https://www.youtube.com/watch?v=4qoH8SOBJZk

என்றும் மனதைவிட்டு அகலாத பாடல்..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காற்றில் கலந்த இசை 18: வன தேவதைகளின் விருப்பப் பாடல்

raja_2518764f.jpg

மாலைக்கும் இரவுக்கும் இடைப்பட்ட நேரம். குளிர்காற்று வருடும் வனப் பாதை ஒன்றில் ஊர்ந்து செல்கிறது வாகனம். அதன் விளக்கொளியில் கரும்பச்சைக் குவியல்களாகத் தெரிகின்றன புதர்க் காடுகள். வனத்தின் மவுனத்தைக் கலைத்தபடி குளிர்க்காற்றுடன் கலந்து பரவத் தொடங்குகிறது வாகனத்தின் மியூசிக் சிஸ்டத்திலிருந்து ஒலிக்கும் அந்தப் பாடல்.

‘ராசாவே ஒன்ன நான் எண்ணித்தான்’. அருகில் எங்கோ ஒரு மலைக் கிராமத்துப் பெண் தனது காதலனை நினைத்துப் பாடிக்கொண்டிருக்கிறாள் என்று நினைக்க வைக்கும் உயிர்ப்பான பாடல் இது. வி.சி. குகநாதன் இயக்கத்தில் ரஜினி, தேவி, ப்ரியா நடித்த ‘தனிக்காட்டு ராஜா’ (1982) படத்தில் இடம்பெற்றது. ஜெய்சங்கர், ஆர்.எஸ். மனோகர், செந்தாமரை, சங்கிலி முருகன், விஜயகுமார் என்று ஏகப்பட்ட வில்லன்களை எதிர்த்து நிற்கும் கோபக்கார இளைஞன் பாத்திரத்தில் நடித்திருப்பார் ரஜினி. இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. ரஜினியின் காதலியாக வரும் தேவி, அவரைக் காப்பாற்ற வில்லன் ஜெய்சங்கரை மணந்துகொள்வார். வெற்றி பெறாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்பவர்கள் உண்டு.

குளிர்க் காற்றை ஊடுருவிச் செல்லும் கூர்மையான குரலில் எஸ்.பி. ஷைலஜா பாடிய பாடல்களில் ‘ராசாவே உன்ன நான் எண்ணித்தான்’ பாடலும் ஒன்று. பாடலின் தொடக்கத் தில் ஜலதரங்கமும் புல்லாங்குழலும் இணைந்த இசைக் கலவையைக் கரும் பாறையில் பட்டுத் தெறிக்கும் சாரலாக ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மழை ஈரம் படிந்த குன்றின் மீது வரிசையாக வைக்கப்பட்ட விளக்குகளின் காட்சியை மனதுக்குள் எழுப்பும் இசை இப்பாடல் முழுவதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.

காதலனின் நினைவில் நாயகி பாடும் இப்பாடல் முழுவதும் அவளது தோழிகளின் ஆறுதல் மொழியாகப் பெண் குரல்களின் ஹம்மிங் பயன்படுத்தப்பட்டிருக்கும். ‘ராசாவே’ எனும் பல்லவியின் முடிவில் நாயகியின் காதல் மனதுக்கு வாழ்த்துச் சொல்லும் தோழிகளின் ஹம்மிங் ஒலிக்கத் தொடங்கும். ‘தனதம் தம்தம் தம்தம் தம்தம்’ எனும் அந்த ஹம்மிங் செறிவான மரங்கள் அடர்ந்த வனப் பாதையில் ஒரு கற்பனை உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும். துல்லியமான ஒலியமைப்பில் மெலிதான தாளக்கட்டும் கிட்டார் இசையும் துணைக்கு வரும். குளிர்ந்த ஓடையின் நீர்ப்பரப்பில் மிதக்கும் கிட்டாரை மீட்டி ஒலிப்பதிவு செய்திருப்பார்களோ என்று தோன்றும் அளவுக்கு கிட்டார் கம்பிகளின் வழியே ஈரத்தைக் கசிய விட்டிருப்பார் இளையராஜா.

‘மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்துக்கிட்டேன்’ எனும் வரியில் பெண் மனதின் காதல் பிரார்த்தனையை எளிய மொழியில் சொல்லியிருப்பார் வாலி. வன தேவதைகள் எனும் விஷயம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உங்கள் வாகனத்தில் ஒலிக்கும் இப்பாடலை அடர்ந்த மரங்களுக்குப் பின்னே வலம் வரும் அந்தத் தேவதைகள் ரசித்துக்கொண்டிருக்க வாய்ப்புண்டு. இப்பாடல் உருவாக்கும் கற்பனை வனத்துக்கும் பாடல் படமாக்கப்பட்ட விதத்துக்கும் அத்தனை பொருத்தம் இருக்காது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஒலிப்பதிவின் புதுமைக்கு உதாரணம் என்று சொல்லத்தக்க மற்றொரு பாடல் ‘சந்தனக் காற்றே’. எஸ்.பி.பி. – ஜானகி ஜோடியின் மாஸ்டர் பீஸ் பாடல்களில் ஒன்று இது. மேற்கத்திய இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்பாடலும் அடர்ந்த வனத்தின் சித்திரத்தைக் கண் முன் நிறுத்தும். நெடிய மரங்களுக்கு நடுவே, முகத்தில் அறையும் சிலீர் காற்றைக் கிழித்துக்கொண்டு பைக்கை ஓட்டிச் செல்லும் உற்சாகத்தைப் பிரதிபலிக்கும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும். வனப் பகுதியில் உலவச் செல்லும் நகரவாசியின் கண்களுக்குப் படும் காட்சிகளின் இசை வடிவம் என்று இப்பாடலைச் சொல்லலாம். வனப் பாதைகளில் பகல் நேரத்தில் ஒலிக்கும் சில்வண்டுகளின் ரீங்காரத்தின் சாயலை இப்பாடலில் உணர முடியும். பல்லவி மற்றும் சரணங்களின் முடிவில் எஸ்.பி.பி.-ஜானகி குரல்கள் சங்கமித்துக் கரைவதைப் போல் ஒலிப்பதிவை வடிவமைத்திருப்பார் இளையராஜா. ‘நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே’ எனும் வரி வாலியின் அற்புதக் கற்பனை.

உள்ளூர்ப் பண்ணையாரான ஜெய் சங்கரின் அடக்குமுறைக்கு எதிராக விவசாயிகளை ஒன்றுதிரட்டி ரஜினி பாடும் ‘கூவுங்கள் சேவல்களே’ எழுச்சியூட்டும் இசையும் புரட்சிகரமான பாடல் வரிகளும் கொண்ட பாடல். வயலின்கள், ட்ரம்பெட் இசையுடன் அதிரும் தாளக்கட்டுடன் தொடங்கும் பாடல் இது. ஆவேசத் துடிப்புடன் எஸ்.பி.பி. பாடியிருப்பார். ‘திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து தலை எண்ணெய்க்கும் வக்கு இல்லை’ என்ற வரிகளில் ஏழை மக்கள் மீது நாயகன் காட்டும் கரிசனத்தைப் பதிவுசெய்திருப்பார் வாலி. இப்பாடலின் தொடக்க இசை, வானொலி நிகழ்ச்சியொன்றின் முகப்பு இசையாகப் பயன்படுத்தப்பட்டது.

இப்படத்தில் ‘நான்தான் டாப்பு’, ‘நான்தாண்டா இப்போ தேவதாஸ்’ ஆகிய இரண்டு பாடல்களும் உண்டு.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-18-வன-தேவதைகளின்-விருப்பப்-பாடல்/article7562724.ece?widget-art=four-rel

 

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 19: ஓடையில் உறைந்திருக்கும் கண்ணீர்

aval_2527175f.jpg

தமிழின் ஆகச் சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியலிட்டால் முதல் ஐந்து இடங்களுக்குள் வரக்கூடிய படம் ‘அவள் அப்படித்தான்’ (1978). ருத்ரய்யா இயக்கியிருந்த இப்படத்தில் கமல் ஹாசன், ரஜினிகாந்த், ப்ரியா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வாழ்க்கை முழுவதும் வஞ்சகத்தையும் ஏமாற்றத்தையும் மட்டுமே சந்தித்த நாயகி, ஆண்களை முற்றிலுமாக வெறுப்பவள். பரிதாப உணர்ச்சி காதல் அல்ல என்று தன்மானத்துடன் வாழும் பெண்ணின் வாழ்க்கையை மிகையில்லாமல் பதிவுசெய்த படம் இது.

கதை சொன்ன விதத்தில் இருந்த முதிர்ச்சி அன்றைய ரசிகர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது எனலாம். பின்னர், விமர்சனங்கள் வாயிலாகப் புரிந்துகொள்ளப்பட்டு மெல்ல மெல்ல வெற்றியடைந்தது இப்படம். நாடகப் பாங்கிலான எந்த முத்திரையும் இல்லாமல் இயல்பான மனிதர்களைத் திரையில் பார்க்கும் அனுபவத்தை இப்படம் வழங்கியது. மனித உறவுகளின் சிடுக்குகளை, நுட்பமான வலைப் பின்னல்களை, வெடிக்கக் காத்திருக்கும் மனதின் ஊசலாட்டங்களைத் தனது இசை மொழியில் அற்புதமாகப் பதிவுசெய்திருந்தார் இளையராஜா. குறைந்த இசைக் கருவிகளைப் பயன்படுத்தி உணர்ச்சிபூர்வமான இசை வடிவங்களை உருவாக்கியிருந்தார்.

விம்மிக் கொண்டிருக்கும் மனதை வருடிக் கொடுக்கும் மயிலிறகைப் போன்ற பாடல்களைக் கேட்கும்போது மனதின் பாரம் லேசாகி மிதக்கத் தொடங்கும். முள் குத்திய பாதத்தை வருடியபடி அதன் மெல்லிய வலியை ரசிப்பதைப் போல், வலி நிறைந்த நினைவுகளை ஆற்றுப்படுத்தும் தன்மை கொண்ட பாடல்களைக் கேட்டபடி அசைவற்று அமர்ந்திருப்பதும் தனி அனுபவம்தான். அப்படியான அனுபவத்தைத் தரும் பாடல் கங்கை அமரன் எழுதிய ‘உறவுகள் தொடர்கதை’.

மனதைப் போர்த்தியிருக்கும் துயரப் படலத்தை மெல்ல விலக்கியபடி காற்றில் பரவுவதுபோன்ற பியானோ இசைத் துளிகளுடன் பாடல் தொடங்கும். நாயகியின் துயர அனுபவங்களைத் தனதாக்கிக்கொண்டு, இசை வழியே ஆறுதலை வழங்கும் குரலுடன் பாடியிருப்பார் ஜேசுதாஸ். ‘இனியெல்லாம் சுகமே…’ எனும் வரிகளைத் தொடர்ந்து பனிப்புகையின் சுருள் திரள் ஒன்று நம்மை உரசியபடி நகர்ந்து செல்வது போன்ற மென்மையுடன் புல்லாங்குழலை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. நகரும் கண்ணாடி இழைத் திரையைப் போன்ற தூய்மையுடன் கூழாங்கற்களின் மீது வழிந்தோடும் ஓடையை உருவகப்படுத்தும் இசைக் கலவை, புல்லாங்குழல் இசையைத் தொடரும்.

‘வேதனை தீரலாம்… வெறும் பனி விலகலாம்’ எனும் வரி ஒலிக்கும்போது அந்த வார்த்தைகளின் நம்பகத்தன்மையை ஆமோதிப்பதைப் போல், கிட்டார் இசை மெலிதாக ஒலிக்கும். இரண்டாவது சரணத்தில், ‘நதியிலே புதுப்புனல்… கடலிலே கலந்தது’ எனும் வரி ஒலிக்கும்போது இதே கிட்டார் இசை, பாறையில் பட்டுத் தெறிக்கும் ஸ்படிக நீரின் துளியைப் போல் சிதறும்.

அமைதி, பாந்தம், அரவணைப்பு என்று அன்பின் வெவ்வேறு வடிவங்கள் இப்பாடலின் ஒவ்வொரு அணுவிலும் கலந்திருக்கும். எனினும் படத்தில் இப்பாடலைப் பாடும் சிவச்சந்திரன், பின்னர் ப்ரியாவின் ஆன்மாவைத் தனது வார்த்தைகளால் சிதைத்துவிடுவார். பிற்பாடு அவர் மாறிவிடுவார் என்பதற்கான எந்தத் தடயமும் இப்பாடலில் இருக்காது. ஆறுதல் தேடி அலையும் மனது, மனிதர்களின் விசித்திரப் போக்கைக் கணிக்கத் தவறுவதிலும், மீண்டும் மீண்டும் காயப்பட்டுக்கொள்வதிலும் ஆச்சரியமில்லை. அந்த வகையில் இப்பாடலில் இழைந்தோடும் தூய அன்பே மிகப் பெரிய வலியாக அமைந்துவிடும்.

‘உறவுகள் தொடர்கதை’, ‘மனதில் என்ன நினைவுகளோ’, ‘வான் நிலா நிலா அல்ல’, ‘என்னுள்ளில் எங்கோ’ போன்ற அற்புதமான பாடல்களில் தோன்றும் அதிர்ஷ்டம் வாய்த்ததற்கு சிவச்சந்திரன் செய்த புண்ணியம் என்னவென்று தெரியவில்லை.

இந்திய நடிகர்களில் கமல் ஹாசன் அளவுக்குக் குரல் வளமும் இசை நுணுக்கமும் கொண்டவர்கள் மிகக் குறைவு. முற்றிலும் புதிய அனுபவத்தைத் தரும் பிரத்யேகக் குரல் அவருடையது. இப்படத்தில் அவர் பாடியிருக்கும் ‘பன்னீர் புஷ்பங்களே’ பாடலை கஜல் பாணியில் இசையமைத்திருப்பார் இளையராஜா. கசப்பான அனுபவங்களை எதிர்கொண்ட பெண்ணின் மனப் போராட்டத்தையும், பெண்ணின் ஒழுக்க விதிகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஆண் மையச் சமூகத்திடம் இருப்பதையும் கவலையுடன் அலசும் நாயகனின் மனப்பதிவு இப்பாடல்.

நிரவல் இசைக்கோவையில் துயரம் தோய்ந்த மனதின் விசும்பலை வெளிப்படுத்தும் வீணையை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. சரணங்களின் வரிகளுக்கு இடையில் கசியும் ஒற்றை வயலின், உறைந்த கண்ணீரை வழியச் செய்துவிடும். பெண்ணின் வலியைப் புரிந்துகொண்ட ஆண் மனசாட்சியின் ஓலத்தை மென்மையான பாடலாகக் கேட்கும் அனுபவத்தைக் கமலின் குரல் பதிவுசெய்திருக்கும்.

இப்படத்தில் எஸ். ஜானகி பாடிய ‘வாழ்க்கை ஓடம் செல்ல’ பாடலைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். நினைத்துப் பார்க்க முடியாத கடந்த காலமும், நிச்சயமற்ற எதிர்காலமும் இரு பக்கமும் அழுத்த. நிகழ்காலத்தில் தடுமாறி நிற்கும் பெண்ணின் மனப் போராட்டத்தைப் பிரதிபலிக்கும் பாடல் இது. இரண்டாவது நிரவல் இசையில், குழப்பமான மனநிலையும் இயலாமையும் கலந்த உணர்வை இசைக் கருவிகளின் மூலம் உருவாக்கியிருப்பார் இளையராஜா. உணர்வுபூர்வமான இசைக் கலைஞனுக்கே உரிய படைப்புத் திறனின் ஒரு துளி அது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-19-ஓடையில்-உறைந்திருக்கும்-கண்ணீர்/article7587718.ece

 

 

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 20 - கடந்த காலத்திலிருந்து ஒலிக்கும் குரல்

உள்படம்: பாடகி ஜென்ஸி

உள்படம்: பாடகி ஜென்ஸி

சில படங்களின் தலைப்பே அற்புதமான மனச்சித்திரத்தை உருவாக்கக்கூடியதாக அமைந்துவிடும். ‘நிறம் மாறாத பூக்கள்’ (1979) ஓர் உதாரணம். சுதாகர், ராதிகா, விஜயன், ரதி நடித்த இப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இரண்டு காதல் ஜோடிகள்; காதலில் பிரிவு; புதிய உறவு என்று செல்லும் இப்படத்தில் நுட்பமான உணர்விழைப் பின்னல்களைக் கொண்ட பாடல்களை உருவாக்கியிருந்தார் இளையராஜா.

இழந்த காதலின் வசந்தகால நிலப்பரப்புக்குச் சென்று, வருடிச் செல்லும் காற்றில் மனத்தின் ரணங்களைக் காயவைத்துக் கொள்ளும் உணர்வை ஏற்படுத்தும் பாடல்களில் ஒன்று ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’. ஜென்ஸி, எஸ்.பி. ஷைலஜா, மலேசியா வாசுதேவன் என்று மூன்று அற்புதக் குரல்களின் சங்கமம் இப்பாடல்.

வெறும் இசைக் கருவிகளின் தொகுப்பாக மட்டும் இல்லாமல், மனித உணர்வுகளின் மெல்லிழைகளால் இழைக்கப்பட்ட பாடல் இது. கடந்த காலத்திலிருந்து ஒலிக்கும் குரலாக ஜென்ஸியின் ஹம்மிங், சருகுகளை அள்ளிக்கொண்டு வரும் காற்றைப் போல மனதின் பல்வேறு உணர்வுகளைத் திரட்டிக்கொண்டே பரவிச் செல்லும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் ஏதுமற்ற, சிறிய பூச்செடிகள் நிறைந்த பரந்த நிலத்தில் நம்மை அள்ளிச் சென்று நிறுத்திவிடும் அந்த ஹம்மிங். முற்றிலும் சோகமயமாக்கிவிடாமல், கைவிட்டுப்போன காதலின் இனிமையான தருணங்களும், துயரம் தோய்ந்த நிகழ்காலமும் இனம் பிரிக்க முடியாதபடி கலக்கும் சுகானுபவத்தை இசைக் குறிப்புகளால் எழுதியிருப்பார் இளையராஜா.

நிரவல் இசைக் கோவைகளும், கேட்பவரின் கற்பனை மொழியும் தெளிவற்ற உருவகங்களைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வதை இப்பாடல் முழுதும் உணர முடியும். முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் புல்லாங்குழல், சிறிய மேடுகளில் மலர்ந்திருக்கும் சிறு பூக்களை வருடியபடி திசைகளற்று படர்ந்து செல்லும் தென்றலை உணர வைக்கும். குரல் சென்றடைய முடியாத தொலைவின் சாலையில் செல்லும் தன் அன்புக்குரியவரை அழைக்க முடியாமல் பரிதவிக்கும் மனதின் விசும்பலாகவும் அது ஒலிக்கும்.

’மனதில் உள்ள கவிதைக் கோடு மாறுமோ’ எனும் கண்ணதாசனின் வரிகள், சோக நாடகத்தின் ஆன்மாவை வலியுடன் பதிவுசெய்திருக்கும். பிரிவின் வலிகளால் முதிர்ச்சியடைந்திருக்கும் இளம் மனதின் வெளிப்பாடாக உணர்வுபூர்வமாகப் பாடியிருப்பார் ஜென்ஸி. ‘என் பாட்டும் உன் பாட்டும்’ எனும் வார்த்தைகளைத் தொடர்ந்து, மிகக் குறுகிய இடைவெளிக்குப் பின் ‘ஒன்றல்லவோ’ என்று ஜென்ஸி பாடும்போது அவரது குரலில் சிறிய தேம்பல் தொனிக்கும். பாடலின் இரண்டாவது சரணத்தைத் தொடரும் எஸ்.பி. ஷைலஜா தனது வழக்கமான துல்லியத்துடன் பாடியிருப்பார். மேகத்தை நோக்கி எறியப்பட்ட குரலோ என்று தோன்றும்.

‘எழுதிச் செல்லும் விதியின் கைகள்’ எனும் கவிதை வரியில், வார்த்தைகளுக்கு வெளியே ஒரு புனைவுச் சித்திரத்தை வரைந்திருப்பார் கண்ணதாசன்.

தொடர் ஓட்டத்தைப் போல், ஷைலஜாவிடமிருந்து சோகத்தை வாங்கிக்கொண்டு பாடலைத் தொடர்வார் மலேசியா வாசுதேவன். மூன்றாவது நிரவல் இசையின் முடிவில் ஒலிக்கும் கிட்டார், ஆணின் மனதுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் துயரம் வெளியேறத் தவிப்பதைப் பிரதியெடுத்திருக்கும். ‘மலையின் மீது ரதி உலாவும் நேரமே’ எனும் வார்த்தைகள் உருவாக்கும் கற்பனை வார்த்தையில் அடங்காதது. பூமிக்கும் மேகத்துக்கும் இடையில், அந்தரத்தில், வானுலகத்தின் தேவதை நடந்து செல்வதாக மங்கலான சித்திரம் தோன்றி மறையும். காதல் அனுபவமே இல்லாதவர்கள் கேட்டால்கூடக் கண்களின் ஓரம் நீர் துளிர்க்க வைக்கும் பாடல் இது.

‘இரு பறவைகள் மலை முழுவதும்’ பாடல் ஜென்ஸியின் மென் குரலும் இளையராஜாவின் இன்னிசையும் சரிவிகிதத்தில் வெளிப்பட்ட படைப்பு. கரு நீல வானின் பின்னணியில் கரும்பச்சை நிறத் தாவரங்கள் போர்த்திய மலைகளைக் கடந்து பறந்துசெல்லும் பறவைகளைக் காட்சிப்படுத்தும் இசையமைப்பை உருவாக்கியிருப்பார் இளையராஜா. ‘இது கண்கள் சொல்லும் ரகசியம்’ எனும் வரியில் ‘ரகசியம்’ எனும் வார்த்தையை ஜென்ஸி உச்சரிக்கும் விதம், ஒரு பாடகியின் குரலாக அல்லாமல், மனதுக்குப் பிடித்த தோழியின் பேச்சுக் குரலின் இயல்பான கீற்றலாகவே வெளிப்பட்டிருக்கும்.

முதல் நிரவல் இசையில், இயற்கையின் அனைத்து வனப்புகளும் நிறைந்த பிரதேசத்தின் இரண்டு மலைகளுக்கு இடையில் வயலின் தந்திக் கம்பிகளைப் பொருத்தி இசைப்பது போன்ற இனிமையுடன் ஒற்றை வயலின் ஒலிக்கும். இரண்டாவது நிரவல் இசையில், பொன்னிறக் கம்பிகள் பொருத்தப்பட்ட கிட்டாரிலிருந்து வெளிப்படும் ஒலிக்கீற்றுகளைப் போன்ற இசையை உருவாக்கியிருப்பார் இளையராஜா.

‘எங்கெங்கு அவர் போல நான் காண்கி(ர்)றேன்’ என்று பாடும்போது ஜென்ஸியின் குரலில் ஒரு அன்யோன்யம் கரைந்திருப்பதை உணர முடியும். பலரது மனதில் வெவ்வேறு முக வடிவங்களாக ஜென்ஸியின் குரல் நிலைத்திருப்பதின் ரகசியம் இதுதான்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-20-கடந்த-காலத்திலிருந்து-ஒலிக்கும்-குரல்/article7615175.ece

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

காற்றில் கலந்த இசை 21: மருகும் மனதின் மர்மப் பாடல்

yu_2543768g.jpg

புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் ஸ்ரீகிருஷ்ண அலனஹல்லி எழுதிய நாவல் ‘பரசங்கட கெண்டதிம்மா’. கல்வியறிவு கொண்ட பட்டணத்துப் பெண், கிராமத்து வியாபாரியைத் திருமணம் செய்துகொண்ட பின்னர் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்களையும், திருமண பந்தத்துக்கு வெளியில் மலரும் காதலையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்நாவல், 1978-ல் அதே பெயரில் கன்னடத் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம், சிவகுமார், தீபா நடித்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’(1979). சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் மலையடிவார கிராமம் ஒன்றில் நிகழும் கதையாக உருவாக்கப்பட்ட படம் இது.

இளையராஜாவின் இசையில் வாணி ஜெயராம் பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், நுட்பமான உணர்வுகளின் தொகுப்பாகத் தான் இசையமைத்த பாடல்களை வாணி ஜெயராமுக்கு வழங்கியிருக்கிறார் இளையராஜா. அவற்றில் ஒன்று, இப்படத்தில் இடம்பெறும் ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’. ரவிக்கை, உள்பாவாடை போன்ற பட்டணத்து உடைகளை அணியும் பழக்கம் கொண்ட தீபா, நாகரிகத்தின் மாற்றங்களை விரும்பாத கிராமத்தினரின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்வார்.

ஆங்கிலேய அதிகாரியின் உதவியாளரான சிவச்சந்திரன் அணியும் உடை, பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள், பழக்க வழக்கங்களால் கவரப்படும் தீபா ஒரு கட்டத்தில் திருமண உறவைத் தாண்டும் சூழல் உருவாகும். மருகும் மனமும், புதிய துணையைத் தேடும் பேராவலும் ஒன்றுடன் ஒன்று மோத, சிவச்சந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் தீபா அமர்ந்து செல்லும்போது பின்னணியில் ஒலிக்கும் பாடல் இது. மனதின் விசித்திரப் போக்கைப் பிரதிபலிக்கும் இசையால் இப்பாடலுக்கு அமரத்துவத்தை வழங்கியிருப்பார் இளையராஜா.

திருமணமான பெண்ணும், அந்நிய ஆணும் பழகுவதை மவுனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் இயற்கையின் ஒலி வடிவம் என்றும் இப்பாடலைச் சொல்லலாம். முதல் நிரவல் இசையில், தவறு செய்யத் தயங்கும் பெண் மனதின் ஊசலாட்டத்தைக் கண்டு பரிதாபம் கொள்ளும் இயற்கையின் ஓலமாக சாரங்கியை ஒலிக்கவிட்டிருப்பார் இளையராஜா. அதைத் தொடர்ந்து ஒலிக்கும் புல்லாங்குழல், புலம்பித் தீர்க்கும் பெண்ணின் மன அதிர்வுகளை உருவகித்திருக்கும். கஜல் பாணியில் மென்மையாக அதிரும் தபேலா தாளத்தின் மீது வாணி ஜெயராமின் குரலும், இசைக் கருவிகளின் படலமும் பரவிச் செல்லும். இரண்டாவது நிரவல் இசையும் அது காட்சிப்படுத்தப்பட்ட விதமும், தமிழ் சினிமாவில் மிக அரிதாக நிகழும் அதிசயங்கள் எனலாம்.

சாலையோர மரங்களின் ஊடே பாயும் மாலைச் சூரியனின் கதிர்களைக் கடந்து அந்த மோட்டார் சைக்கிள் முன்னேறிச் செல்லும். அந்தப் பயணம் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை முடிவுசெய்துவிட்ட விதி, சில சமயம் அவர்களுக்கு முன்னால் சென்று வழிகாட்டுவது போலவும், சில சமயம் பின்தொடர்ந்து சென்று கண்காணிப்பதைப் போன்றும் அமைக்கப்பட்ட காட்சி அது. அமானுஷ்யமான அந்தச் சூழலைத் தனது இசை மூலம் உணர்த்தியிருப்பார் இளையராஜா.

வயலின் இசைக் கற்றையும் புல்லாங்குழலின் முணுமுணுப்பும் கலந்து நீளும் அந்த இசைக்கோவை வாழ்க்கையின் மர்மத்தை பூடகமாகச் சொல்வது போல் இருக்கும். மர்மமான அந்தச் சூழலைத் தணிக்கும் தொனியில், அந்த இசைக்கோவையின் முடிவில் சிதார் இசை சேர்ந்துகொள்ளும். ‘போதையிலே மனம் பொங்கி நிற்க’ எனும் ஒரு வரியில் அந்தச் சூழலின் சாரத்தைப் பதிவுசெய்திருப்பார் கங்கை அமரன்.

மலையோர கிராமங்களின் வழியே பட்டணத்துக்குச் சென்று பொருட்களை வாங்கிவந்து விநியோகிக்கும் செம்பட்டை (சிவகுமார்), களைப்பு தீர பாடும் பாடல், ‘வெத்தல வெத்தல வெத்தலயோ’. ‘விவரம் அறிந்த’வர்களின் குதர்க்கப் பேச்சுகளைப் புரிந்துகொள்ள முடியாத அப்பாவிக் குரலில் இப்பாடலைப் பாடியிருப்பார் மலேசியா வாசுதேவன். அதேபோல், தயிர் விற்கும் பெண் பாடும் பாடலைப் பிரதியெடுத்து ஊர் மக்கள் முன் செம்பட்டை பாடிக்காட்டும் ‘மாமே(ன்) ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான்’ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும், எஸ்.பி. ஷைலஜாவும் பாடியிருப்பார்கள். நகரங்களிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் கிராமத்தின் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பாடல்கள் இவை.

தன் மனைவியைப் பற்றிய அவதூறு களைக் கேட்டு உடைந்து போயிருக்கும் செம்பட்டையனைப் பாடச் சொல்லிக் கேட்பான், ஊர்ப் பெரியவரின் மகன். மனதைக் குடைந்துகொண்டிருக்கும் வலியைக் கரையவிட்டபடி அவன் பாடும் பாடல் ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி.’ மலையடிவாரக் குளிரைப் போர்த்தியிருக்கும் அந்தக் கிராமத்தின் இரவைத் துளைத்துக்கொண்டு ஒலிக்கும் அப்பாடலைக் குறைவான இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கியிருப்பார் இளையராஜா. உடுக்கை ஒலியின் பின்னணியில் எஸ்.பி.பி. தரும் ஹம்மிங் இரவில் ஊரைக் கடந்து செல்லும் ஒற்றை ஓலத்தைப் போல் ஒலிக்கும். மனதிலிருந்து வேதனைகளைப் பிடுங்கியெறிய முயற் சிக்கும் அப்பாவியின் மனப் பிரதி அது.

yu_jpg1_2543767g.jpg

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-21-மருகும்-மனதின்-மர்மப்-பாடல்/article7640983.ece?ref=relatedNews

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை-22 கடற்கரையில் வீசும் இசைத் தென்றல்

isai_2552019f.jpg

பொதுவாக ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டால், தனது காதலின் நினைவுகளைக் கைவிட்டுக் குடும்ப வாழ்வில் ஈடுபடுவதுபோல் சித்தரித்த திரைப்படங்களுக்கு மத்தியில், கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு, தனது காதலனின் நினைவாகவே வாழ்ந்து மடியும் பெண்ணைப் பிரதானமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘ஆனந்த ராகம்’(1982). பரணி இயக்கிய இந்தத் திரைப்படத்தில் சிவகுமார், ராதா, சிவச்சந்திரன் நடித்திருந்தார்கள். ஆதரவற்ற மீனவ இளைஞராக வரும் சிவகுமாருக்கும், அவரது நண்பர் சிவச்சந்திரனின் தங்கை ராதாவுக்கும் இடையில் மலரும் காதலைப் பற்றிய கதை. தென்னங்கீற்றின் தென்றல் தவழும் மீனவ கிராமத்தில் நிகழும் இந்த எளிய கதைக்குத் தனது உயிர்ப்பான இசை மூலம் காவிய அந்தஸ்தைத் தந்தார் இளையராஜா.

படத்தின் தொடக்கத்தில் வரும் ‘கடலோரம் கடலோரம்’ பாடலை ஜேசுதாஸும், இளையராஜாவும் பாடியிருப்பார்கள். எல்லையற்று விரிந்துகொண்டே செல்லும் கடல் அன்னையின் புகழ் பாடும் இந்தப் பாடலை உற்சாகமாகப் பாடியிருப்பார்கள் இருவரும். மாலை நேரச் சூரிய ஒளியின் பின்னணியில் பொன்னிறத்தில் மின்னும் கடலுக்கு முன் படமாக்கப்பட்ட அந்தப் பாடலில், பொங்கும் அலையின் கட்டற்ற வீச்சை இசையாக்கியிருப்பார் இளையராஜா. சின்னச் சின்ன இசைத் துணுக்குகளில் கடல் கண் முன் விரியும்.

இப்படத்தின் மற்றொரு பாடலான ‘மேகம் கறுக்குது… மழை வரப் பாக்குது’ பாடல், கடலோர கிராமத்தின் நாட்டுப்பாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எளிய பாடல். சில்லென்று காற்று வீசும் கடற்கரையில் ஒரு மீனவர் பாடிச் செல்லும் பாடலைத் தொடர்ந்து சிவகுமார் பாடுவார். பாடலை இளையராஜா தொடங்கிவைக்க, கைமாற்றிக்கொள்ளப்படும் மலர் போல அதைச் சுகமாகச் சுமந்தபடி பாடியிருப்பார் ஜேசுதாஸ்.

பாடல் வரிகளே சூழலின் தன்மையை உணர்த்திவிடும் என்று சமாதானமாகிவிடுவதில்லை இளையராஜா. சூழலுக்கு மிகப் பொருத்தமான இசைக்கோவைகளுடன் பாடலை மிளிரச் செய்துவிடும் அந்தக் கலைஞர், இப்பாடலில் சந்தூர், வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை அடக்கமாக ஒலிக்க விட்டிருப்பார். பள்ளி மாணவியான ராதா, அந்த நாட்டுப்பாடலை சிவகுமாரிடமிருந்து கற்றுக்கொண்டு பள்ளி விழாவில் பாடிக்காட்டுவது போல் அமைக்கப்பட்ட காட்சி அது. பாந்தமும் அன்பும் நிறைந்த இளைஞரின் மனதை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் ஜேசுதாஸ். காதல் அரும்பிய மலர்ச்சியில் குதூகலிக்கும் இளம் பெண்ணின் பாவங்களைக் குரலில் காட்டியிருப்பார் ஜானகி.

1967-ல் வெளியான ‘மிலன்’ இந்தி திரைப்படத்தில் முகேஷ் லதா மங்கேஷ்கர் பாடிய ‘சாவன் கா மஹீனா… பவன் கரே சோரு’ பாடலின் தாக்கம் இப்பாடலில் உண்டு என்று சொல்பவர்கள் உண்டு. படகோட்டி ஒருவன் தனது காதலிக்கு நாட்டுப்புறப் பாடலைக் கற்றுத்தருவதைத் தவிர இரு பாடல்களுக்கும் இடையில் வேறு பொருத்தங்கள் இல்லை. காதல் மையம் கொள்ளும் பாடல் என்றாலும், மெல்லிய சோகத்தை மீன்பிடி வலையைப் போல் நெய்திருப்பார் இளையராஜா. காதல் தோல்வியில் சிவகுமார் பாடும் ‘கனவுகளே கலைந்து செல்லுங்கள்’ பாடலை, தனிமையின் துயரம் தரும் வலியுடன் பாடியிருப்பார் ஜேசுதாஸ்.

இப்படத்தின் பிரதானப் பாடல் ‘ஒரு ராகம் பாடலோடு’. ஜேசுதாஸ், ஜானகி பாடிய இப்பாடல் மெல்லிய தென்றலின் வருடலும், கடலலையின் ஸ்பரிசமும் நிறைந்த தேவகானம். அர்ப்பணிப்பான காதல் உணர்வும், ஆழமாக வேர்பிடித்துவிட்ட உறவின் மேன்மையும் நிரம்பிய பாடல் இது. பெண் குரல்களின் ஹம்மிங்குடன் பாடல் தொடங்கும். அந்தக் குரல்களின் கருவி மொழியைப் போல் புல்லாங்குழலும் சேர்ந்து ஒலிக்கும்.

காதலின் மயக்கத்தில் சூழலை மறந்து வேறு உலகத்துக்குள் நுழையும் ஜோடியின் மனப்பிரதிகளாகப் பாடியிருப்பார்கள் ஜேசுதாஸும் ஜானகியும். காதலுக்கு வாழ்த்துச் சொல்லும் தேவதைகளின் குரல் போல், பெண் குரல்களின் ஹம்மிங் ஓரடுக்கில் ஒலித்துக்கொண்டே இருக்கும். பல்லவியைத் தொடர்ந்து ஒலிக்கும் முதல் நிரவல் இசை, தரையிலிருந்து மேலேறிப் பறக்கும் பறவையைப் போல் படரும். சிதார், வயலின்(கள்), புல்லாங்குழல் என்று காதலுக்காகவே படைக்கப்பட்ட இசைக் கருவிகளைப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா.

இரண்டாவது நிரவல் இசையைத் தொடங்கும் சிதார், காதலின் மவுனத்தைக் கலைப்பதுபோல் பரிவுடன் ஒலிக்கும். கைகூடாத காதல் என்பதை உணர்த்தும் விதமாக, பாடல் முழுவதும் மெல்லிய சோகத்தை இழையவிட்டிருப்பார் இளையராஜா. ‘ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்துவந்த சொந்தம்’ எனும் வரியில் ஏழைக் காதலனின் உணர்வுகளைப் பிரதிபலித்திருப்பார் கங்கை அமரன். அந்த வரியைப் பாடும்போது ஜேசுதாஸின் குரலில் காதலையும் மீறிய கழிவிரக்கத்தை உணர முடியும்.

காற்றின் அலைகளில் அசைந்தாடும் சிறகு, மேலும் கீழுமாக ஏறி இறங்குவதைப் போல், பாடலும் அலைபாய்வதை உணர முடியும். கடைசி முறையாகப் பல்லவியைத் தொடங்கும் ஜானகி, ‘ஒரு’, ‘ராகம்’, ‘பாடலோடு’ என்று வார்த்தைகளுக்கு இடையில் சற்று இடைவெளி விடுவார். காதலன் மீதான அன்பின் வெளிப்பாட்டில் திணறும் குரல் அது.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in 
படங்கள் உதவி: ஞானம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை22-கடற்கரையில்-வீசும்-இசைத்-தென்றல்/article7664225.ece?widget-art=four-rel

 

 

 

 

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை- 23: பள்ளிப் பிராயத்துக் கோடைக்காலம்

‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில்...

வளரிளம் பருவத்தைச் சேர்ந்த நாயக நாயகிகளை மையமாக வைத்து ஒரே காலகட்டத்தில் (1981) இரண்டு படங்கள் வெளியாகின. ஒன்று, கார்த்திக், ராதா நடிப்பில் பாரதிராஜா இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லை’. மற்றொன்று சுரேஷ், சாந்தி கிருஷ்ணா நடிப்பில் பாரதி-வாசு இயக்கிய ‘பன்னீர் புஷ்பங்கள்’. பள்ளிப் பருவத்தில் ஏற்படும் காதலைப் பற்றிப் பேசியது ‘அலைகள் ஓய்வதில்லை’. அந்த வயதில் ஏற்படும் காதலுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வியை எழுப்பியது ‘பன்னீர் புஷ்பங்கள்’.

இரண்டு படங்களுக்கும் பொதுவான அம்சம், செறிவான இசைக்கோவைகள் அடங்கிய பாடல்களும், பின்னணி இசையும். இரண்டுக்குமே இசை, இளையராஜா. ’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் ஊட்டி கான்வென்ட் பள்ளியின் பின்னணியில், இயற்கையின் வசீகரப் பிரதேசங்களைத் தனது இசை மூலம் மேலும் அழகூட்டினார். அனைத்துப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார்.

உமா ரமணனின் தனித்த குரலுக்குப் பொருத்தமான பல பாடல்களைத் தந்திருக்கும் இளையராஜா, இப்படத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட வெள்ளம் போன்ற இசைக் கோவை கொண்ட ‘ஆனந்த ராகம்’ பாடலைத் தந்தார். கள்ளமற்ற நட்புடன் பழகும் நாயகிக்கும், எதிர்பாலின ஈர்ப்பின் தாக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் நாயகனுக்கும் இடையில் மெலிதாக அரும்பும் அன்பின் வெளிப்பாடு இப்பாடல். ஆர்ப்பரிக்கும் அருவி நீர் பாறையில் விழுந்து தெறிக்கும்போது மேலெழும் சாரலைப் போல், இசைக் கருவிகளின் கலவைக்கு மேல் உமா ரமணனின் குரல் ஒலிக்கும்.

நிரவல் இசையில், இருவரின் குழப்பமான மனநிலையைப் பிரதிபலிக்கும் இசைக்கோவைகளைத் தந்திருப்பார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் வயலின் தீற்றல்களுக்கு நடுவே, ஷெனாயை ஒலிக்க விட்டிருப்பார். எதிர்பாராத இசைக் கலவை அது. சந்தோஷமான மனநிலையின் பின்னணியில் ஒலிக்கும்

இப்பாடல், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நண்பர்கள் உதவியுடன் நாயகனும் நாயகியும் ஓடிச்செல்லும்போதும் பயன்படுத்தப்பட்டிருக்கும். விடலைக் காதலுக்குப் பின்னணியாக ஒலித்த அதே பாடல், கிளைமாக்ஸ் காட்சியில் அவர்களின் எதிர்காலம் குறித்து கவலையுறும் நடுத்தர வயதினரின் பரிவுடன் ஒலிக்கும். ஒரே இசை வடிவில், அதே குரலில் ஒரு படத்தில் இரண்டு முறை ஒலித்த பாடல் என்பது இதன் தனிச்சிறப்பு. இரவில் கண்ணை மூடி இப்பாடலைக் கேட்பவர்கள் வண்ணங்கள் கரைக்கப்பட்ட நதியில் இழுத்துச் செல்லப்படுவதைப்போல் உணர்வார்கள்.

எஸ்.பி.பி-எஸ். ஜானகி பாடிய ‘பூந்தளிராட பொன் மலர் சூட’ பாடல், அந்த ஜோடியின் மிகச் சிறந்த 10 பாடல்களில் ஒன்று. இளம் காலைப் பொழுதில் புதிதாக மலரும் மொட்டைப் போன்ற மலர்ச்சியான இசையுடன் தொடங்கும் இப்பாடலில், இசைக் கருவிகளுக்கு இணையாக, பெண்குரல்களின் ஹம்மிங்கைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. கண்ணுக்குத் தெரியாத காதல் தேவதைகள் இளம் காதலர்களை வாழ்த்துவதுபோன்ற அலாதியான கற்பனை அது.

பொங்கி வரும் குதூகலத்தை அடக்கிக்கொண்டு அமைதியான தொனியில் பாடியிருப்பார் எஸ்பிபி. அறியாத வயதில் ஏற்படும் குறுகுறுப்பையும், தன் மீது காட்டப்படும் அன்பு ஏற்படுத்தும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் இளம் பெண்ணின் குரல் வடிவமாக ஜானகியின் குரல் ஒலிக்கும். பேஸ் கிட்டாரின் அஸ்திவாரத்தில் வயலின், புல்லாங்குழல், பியானோ என்று இசைக் கருவிகளின் சொர்க்கபுரியையே உருவாக்கியிருப்பார் இளையராஜா. பிரவாகமாகப் பொங்கும் வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையைத் தொடர்ந்து, மவுனத்தின் பின்னணியில் தொலைதூரத்துப் பறவையின் சத்தம் மென்மையாக ஒலிக்கும்.

‘லலலல்லல லலலல்லா’ என்று வசந்த காலத்து தேவதைக் குரல்களின் குரல் அதைப் பின்தொடரும். இந்தப் பாடலில் பங்குபெற்ற ஒவ்வொரு இசைக் கலைஞரும் தனது வசந்த கால நினைவுகளுடன் இளையராஜாவின் இசைக் குறிப்புகளை வாசித்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு பாடலில் இத்தனை இனிமை சாத்தியமேயில்லை!

இயற்கையின் சுகந்தத்தைப் பிரதிபலிக்கும் பல பாடல்களை, மலேசியா வாசுதேவனுக்காகவே இளையராஜா உருவாக்கி யிருப்பாரோ என்று சில சமயம் தோன்றும். அந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கும் பாடல் ‘கோடைகாலக் காற்றே’. பள்ளிப் பருவத்துச் சுற்றுலாவின் குதூகலத்தை அசலாக வெளிப்படுத்தும் பாடல் இது. மவுத்-ஆர்கன் இசையுடன் தொடங்கும் இப்பாடலில், இளம்பிராயத்து நினைவுகளை மீட்டும் கிட்டார் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். மலைப்பிரதேசத்தில் வீசும் கோடை காலக் காற்றின் மிதமான குளுமையுடன் பாடலைத் தொடங்குவார் மலேசியா வாசுதேவன்.

மாணவர்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் பிரதாப் போத்தன் பாடும் பாடல் இது. பொறுப்பும் கண்ணியமும் நிறைந்த ஆசிரியரின் குரல் மலேசியா வாசுதேவனிடம் தொனிக்கும். ஏகாந்தம் தரும் இயற்கையின் அழகைத் தானும் வியந்துகொண்டு, இளம் வயதினரிடம் ரசனையையும் அழகுணர்ச்சியையும் விதைக்கும் நடுத்தர வயது மனதின் வெளிப்பாடு இப்பாடல்.

‘வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ’ எனும் வரியில் அழகான சித்திரத்தைக் காட்டிவிடுவார் கங்கை அமரன். சூரிய ஒளியில் மிளிரும் விளிம்பு கொண்ட மேகங்களுக்குக் கீழே, பசுமையான குன்றுகளில், கவலையற்றுத் திரியும் மாணவப் பருவத்தை நினைவுபடுத்தும் இப்பாடல், இளையராஜா நமக்களித்த அன்புப் பரிசு!

raja_2560541g.jpg

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-23-பள்ளிப்-பிராயத்துக்-கோடைக்காலம்/article7688580.ece?widget-art=four-rel

 

 

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 24: உருவமற்ற காதலின் இசை வடிவம்

ka1_2569144f.jpg
 

‘ராஜபார்வை’. கமலின் 100-வது படம். உணர்வுபூர்வமான கதைப்பின்னலும், இயல்பான பாத்திர அமைப்பும் கொண்ட இப்படம் அப்போதைய ரசிகர்களால் அவ்வளவாக உள்வாங்கிக்கொள்ளப்படவில்லை. நாயகன் வயலின் இசைக் கலைஞன். திரைப்பட இசைக் குழுவில் வாசிப்பவன். கண்பார்வை இல்லாதவன். பின் எப்படிப் படத்துக்கு ‘ராஜபார்வை’ என்று பெயர் வந்தது எனும் இயல்பான கேள்வி எழும். படத்துக்கு இசை இளையராஜா என்பதால், ஒருவேளை அந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம். தலைப்புக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சர்வதேசத் தரத்திலான இசையைத் தந்தார் இளையராஜா. பின்னணி இசையிலும் பாடல்களிலும் வயலின் இசைப் பிரவாகங்கள் பொங்கி வழிந்தன.

படத்தில் கமல், சசிரேகா பாடும் ‘விழியோரத்துக் கனவும் இங்கு கரைந்தோடிடுதே’ பாடல், சொல்லொணாத் துக்கத்தை உணர்த்தும் பாடல்களில் ஒன்று. தங்கள் இருவருக்கும் இடையிலான இடைவெளியை விதியின் இருள் நிறைத்துவிட, செய்வதறியாது தவிக்கும் காதலர்களின் நிலையை விளக்கும் பாடல் இது. வயலின் கலைஞனான கமல், எத்தனையோ உருக்கமான வயலின் இசைக் குறிப்புகளை வாசித்திருப்பார். ஆனால், காதல் தோல்வியின் வலியில் துடித்துக்கொண்டிருக்கும் அவர், ரெக்கார்டிங்கின்போது சக வயலின் கலைஞர் வாசிக்கும் உருக்கமான இசையைக் கேட்டதும் உடைந்து அழுதுவிடுவார். அந்த இசைக் குறிப்பை வாசித்திருக்க வேண்டியது அவர்தான். ஆனால், மனதில் அலைமோதும் உணர்வுகளால், இசையுடன் ஒன்ற முடியாமல் அவர் தடுமாறும்போது வேறொருவர் அதை வாசிப்பார். அந்த ஒற்றை வயலின் இசையிலிருந்தே இந்தப் பாடல் தொடங்கும்.

தேர்ந்த பாடகரைப் போல் அத்தனை உயிர்ப்புடன் பாடியிருப்பார் கமல். இடையில் வரும் ஆலாபனையை அவரும் சசிரேகாவும் பாடும்போது, வார்த்தைகளற்ற புலம்பலின் இசை வடிவத்தைப் போல் இருக்கும். காதலனின் இருப்பை உணர்வதுபோல் மகிழ்ச்சியடையும் காதலி, நிதர்சனத்தை உணர்ந்து உடைந்து அழும் கணத்தில் இன்னொரு முறை ஒற்றை வயலினை ஒலிக்க விடுவார் இளையராஜா. மனிதருக்கு இரக்கமே இல்லையோ என்று தோன்றும்!

ka2_2569145a.jpg

கண் பார்வையற்ற நாயகன், தன் நுண்ணுணர்வின் வழியே அறிந்துவைத்திருக்கும் விஷயங்களை வைத்து, நாயகியின் அழகை வர்ணிக்கும் ‘அழகே… அழகு தேவதை’ பாடல் இப்படத்தின் சிறப்புகளில் ஒன்று. நாயகன் தனது மன உலகின் உருவமற்ற உருவங்களைப் பயன்படுத்தி வார்த்தைகளைக் கோத்துக்கொண்டே செல்வான். மெல்லிய ஹம்மிங்குடன் இப்பாடலை ஜேசுதாஸ் தொடங்கும்போதே கேட்டுக்கொண்டிருப்பவரின் மனம் கிளர்ந்தெழத் தொடங்கிவிடும். கஜல் பாணியிலான தபேலா தாளக்கட்டுடன் வீணை, வயலின், புல்லாங்குழல் இசைக் கருவிகள் உருவாக்கிய இசையிழைகளைக் கோத்துக்கொண்டே செல்வார் இளையராஜா. நகரப் பரபரப்பின் பார்வைக்குத் தப்பி, மரங்கள் சூழ்ந்த பழைய கட்டிடத்தின் ஓர் அறையில் தங்கியிருப்பார் கமல்.

எத்தனையோ மனிதர்கள் வாழ்ந்து சென்ற அடையாளங்கள் அழிக்கப்படாமல் இருக்கும் அந்த அறையின் ஜன்னல்கள், கதவுகளில் வாழ்வின் எச்சம் மிச்சமிருக்கும். அந்த அறையில்தான் மாதவியிடம் இப்பாடலைப் பாடிக்காட்டுவார் கமல். காலம், நிலப்பரப்பு போன்றவற்றின் கூறுகளை உள்வாங்கி இசையமைக்கும் இளையராஜா, இந்தப் பழைய அறைக்குப் பொருத்தமான இசையைத் தந்திருப்பார். ‘மனக் கண்கள் சொல்லும் பொன்னோவியம்’ என்று ஒரே வரியில் முழுப்பாடலின் சூழலையும் சொல்லிவிடுவார் கண்ணதாசன்.

பல கோடி முறைக்கும் மேல் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்களில் ஒன்று ‘அந்திமழை பொழிகிறது’. இளையராஜா, வைரமுத்து, எஸ்.பி.பி., ஜானகி என்று தேர்ந்த கலைஞர்களின் கூட்டணியில் விளைந்த உயர்தர விளைபொருள் இப்பாடல். பார்வையற்ற குழந்தைகளின் பள்ளியில் படித்து வளர்ந்தவரான கமல், அக்குழந்தைகளுடன் சேர்ந்து ‘பனிவிழும் பொழுதினில் இருவிழி நனைந்தது நேற்று’ என்று பாடும்போது, கண்களை நீர் மறைக்க நின்று பார்த்துக்கொண்டிருப்பார் மாதவி. பரிவும் காதலும் பெருகப் பெருக, அவரது மனம் வேறொரு உலகை நோக்கி மேலெழுவது போன்ற காட்சியமைப்பு அது. மிருதங்கத்தின் மாலை நேரத்து மேகங்களில் உலவும் தேவதைகளின் குரல்கள் ஒலிக்க, மிருதங்கத்தின் தாளக்கட்டில் பியானோ என்று இரு வேறு உலகின் இசைக் கருவிகளை ஒன்றிணைத்து இசைக்கத் தொடங்குவார் இளையராஜா. ஏகாந்த ரசனையுடன் ‘அந்தி மழை பொழிகிறது’ எனும் பல்லவியை எஸ்.பி.பி. பாடியதும், காதல் உலகத்துக்குள் புதிதாக நுழையும் ஜோடியை வரவேற்கும் வயலின் இசைக்கோவையை ஒலிக்க விடுவார். அதைத் தொடர்ந்து, தொடுவானத்தைத் தொட முயலும் டி.வி. கோபாலகிருஷ்ணனின் ஆலாபனை மேலெழும். ஆலாபனை காற்றில் மறையும் கணத்தில், மற்றொரு வயலின் கோவை பாடலைப் பூமிக்கு இழுத்துவரும். இரண்டாவது நிரவல் இசையில் பியானோ, பெண் குரல்களின் ஹம்மிங், மிருதங்கம் என்று மூன்று அடுக்குகளில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் இசை ஒன்றிலொன்று கலந்து கரைய, வயலின் இசைக் கோவையின் நீளமான ஒலிக்கற்றை மாலை நேர வானை நோக்கிப் பாய்வது போல் இசையமைத்திருப்பார் இளையராஜா. ‘தாவணி விசிறிகள் வீசுகிறேன்’ எனும் வைரமுத்துவின் வரிகளைக் கேட்டு காதலிக்கத் தொடங்கியவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-24-உருவமற்ற-காதலின்-இசை-வடிவம்/article7713140.ece

 

 

 

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 25 - தரை மீது சிணுங்கும் மெல்லொலி

song_2577850f.jpg
 

சமூக அமைப்பின் கரடுமுரடான அடுக்குகளாலும், குடும்பச் சிக்கல்களாலும் காயப்பட்டு, உள் சுருங்கும் மனதுடன் தங்கள் வட்டத்துக்குள்ளேயே முடங்கிவிடும் பாத்திரங்களைத் திரைப்படங்களில் மிக நுட்பமாகச் சித்தரித்தவர் மகேந்திரன். அன்பு நிறைந்த உலகின் பிரஜைகளைத் தனது பிரதான பாத்திரங்களாக அவர் உருவாக்கியிருப்பதை, அவரது எல்லாப் படங்களிலும் உணர முடியும்.

‘சாவி’ இதழில் தான் எழுதிய தொடர்கதையை அடிப்படையாக வைத்து அவர் இயக்கிய படம் ‘மெட்டி’ (1982). செந்தாமரை, விஜயகுமாரி, சரத்பாபு, ராஜேஷ், வடிவுக்கரசி, ராதிகா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு போன்ற திறமையான கலைஞர்கள் பங்கேற்ற படம் இது. மகேந்திரன் உருவாக்கும் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு உயிர் தரும் கலைஞரான இளையராஜாவின் இசையில் வெளியான படம்.

படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் ‘மெட்டி ஒலி காற்றோடு’ பாடல், இளையராஜா ஜானகி பாடிய பாடல்களில் மிகச் சிறப்பானது. இப்பாடலில் ஆண்-பெண் குரல்கள் ஒலித்தாலும், பாடல் காட்சியில் இடம்பெறுவது ஆதரவற்ற தாயும் அவரது இரு மகள்களும்தான். கடலலைகளுக்கு அருகே பிரத்யேக உலகத்தை உருவாக்கிக்கொண்டு, அன்பின் திளைப்பில் மூழ்கும் அப்பெண்களைத்தான் பாடலில் காட்டியிருப்பார் மகேந்திரன். திருமணமான பெண்களின் அடையாளமான மெட்டியை இப்படத்தில் ஒரு குறியீடாகவே பயன்படுத்தியிருக்கும் மகேந்திரன், பாடலின் ஒலிவடிவத்தைக் கடந்த காலத்திலிருந்து ஒலிக்க விட்டிருப்பார்.

எழுந்துகொண்டிருக்கும் அல்லது மறைந்துகொண்டிருக்கும் சூரியனின் மஞ்சளும் சிவப்புமான கதிரொளியில் வானில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டமான ஓவியத்தின் கீழே பரவிச் செல்லும் இப்பாடலை, ஜானகியின் இனிமையான முணுமுணுப்பு தொடங்கிவைக்கும். மற்றொரு அடுக்கில், ஏகாந்தமான குரலில் இளையராஜாவின் ஆலாபனை ஒலிக்கும். இளையராஜாவின் சற்றே கணகணப்பான குரலில் காதலும் பாந்தமும் நிரம்பித் ததும்பும்.

பல்லவியையும் சரணத்தையும் இணைக்கும் இசைப் பாலத்தின் இழைகளை வயலினால் நெய்திருப்பார் இளையராஜா. 16 வினாடிகள் நீளும் அந்த ஒற்றை வயலின் இசையில், உலகின் சவுந்தர்யங்கள் அனைத்தையும் அடக்கி வைத்திருப்பார் மனிதர். அறியாத தீவு ஒன்றில், நாணல்கள் அடர்ந்த கடற்கரையில் உலவும் உணர்வைத் தரும் நிரவல் இசை அது.

முதல் நிரவல் இசையில் வயலின் இசை என்றால், இரண்டாவது நிரவல் இசையில் 13 வினாடிகளுக்கு நீளும் ஜானகியின் ஹம்மிங் நம்மை இருந்த இடத்திலிருந்து சில அடிகள் உயரத்தில் மிதக்கச் செய்துவிடும். தமிழ் தெரிந்த தேவதை ஒன்றின் வருகையை உணர்வது போல் தோன்ற வைக்கும் ஹம்மிங் அது. பாடலின் இடையே அவ்வப்போது சிணுங்கும் கணங்களிலும் ஜானகியின் குரல் சிலிர்ப்பூட்டும். ‘பார்வை பட்ட காயம்… பாவை தொட்டு காயும்’ எனும் கங்கை அமரனின் கற்பனை அலாதியானது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறிக்கொண்டு தன் பின்னே சுற்றும் எழுத்தாளர் ராஜேஷிடம், ‘நிபந்தனை’களுடன் ராதிகா பாடும் பாடல், ‘கல்யாணம் என்னை முடிக்க’. மனதுக்கு மிக நெருக்கமான குரலில் இப்பாடலைப் பாடியிருப்பார் ஜென்ஸி. இடையிடையே, ரயிலில் திருமணம், ‘நொச்சிக்குப்பம் பச்சையப்பன் குரூப்’பின் நாதஸ்வர இசை என்று கலகலப்பான கற்பனைகளைக் கொண்ட பாடல் இது. அழுத்தங்களுக்கு இடையே சற்று சிரிக்கவும் தெரிந்திருக்கும் பெண்களின் மெல்லிய குறும்புகளை இப்பாடல் பதிவுசெய்திருக்கும்.

அதே படத்தில் மிக முக்கியமான மற்றொரு பாடல், கே.பி. பிரம்மானந்தன் பாடிய ‘சந்தக் கவிகள் பாடிடும் மனதினில்’. தனது தங்கையின் திருமணம் பற்றிய கனவுகளுடன் அண்ணனும், அண்ணனின் அளவற்ற அன்பில் திளைக்கும் தங்கையும் தோன்றும் இப்பாடல், ஒரு பாடலின் இனிமை குலையாமல் படமாக்குவது எப்படி என்பதற்கான பாடம் எனலாம். மெல்லிய மாலைப் பொழுதின் கடலலைகள், அடர் மரங்களின் நிழலால் போர்த்தப்பட்ட நிலங்கள், சூரிய ஒளியில் மின்னும் சில்வர் குடங்கள் என்று அசோக்குமாரின் மேன்மையான ரசனையின் துணையுடன் இப்பாடலைப் படமாக்கியிருப்பார் மகேந்திரன்.

வெல்லத்தின் பாகைக் குழைத்து இழையாக நீட்டிச் செல்வதுபோன்ற உச்சபட்ச இனிமை கொண்ட வயலின் இசையுடன் இப்பாடல் தொடங்கும். ‘…மனதினில் இன்பக் கனவுகளே’ எனும் வரிகளை ரசித்தபடி ஆமோதிக்கும் வகையில், வீணை இசையின் சிறு துணுக்கை ஒலிக்கவிடுவார் இளையராஜா. அந்த ஒற்றைக் கணத்தில் மனம் நிறைந்துவிடும். தொடர்ந்து ஒலிக்கும் பாடல் முழுவதும் அந்த இனிமையின் நீட்சிதான்.

மதுக்கூர் கண்ணன் எழுதிய ‘ராகம் எங்கேயோ… தாளம் எங்கேயோ’ பாடல், பிரம்மானந்தன், உமா ரமணன், சசிரேகா பாடியது. அழுத்தமான கஜல் பாடல் பாணியில் அமைந்த இப்பாடலில், தாயின் இழப்பு தரும் தாங்க முடியாத துயரத்தை இசைத்திருப்பார் இளையராஜா. மலையாளத்தில் மிக நுட்பமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரம்மானந்தன் தமிழில் பாடிய படம் அநேகமாக ‘மெட்டி’ மட்டும்தான். அந்த வகையில் அற்புதமான அந்தப் பாடகனுக்குத் தமிழ் மண் செலுத்திய மரியாதை தான், அவரது குரலில் ஒலிக்கும் இந்த இரண்டு பாடல்களும்!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-25-தரை-மீது-சிணுங்கும்-மெல்லொலி/article7742257.ece

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 26: காதல் வனத்தின் தேசிய கீதம்!

raja_2586918h.jpg

வெவ்வேறு நிலப்பகுதிகளுக்கு ஏற்ற இசையை வழங்குவது என்பது அந்தந்த நிலப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள், சத்தங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டும் சாத்தியமாவதல்ல. குறிப்பிட்ட அந்த இசையைக் கேட்பவர்களை அந்த நிலப்பரப்புக்கே அழைத்துச் செல்லும் அளவுக்கு, அந்த நிலப்பரப்பின் கூறுகளை இசைக் கருவிகளின் மூலம் நுட்பமாகப் பிரதிபலிக்கும் மேதமை தேவைப்படும் விஷயம் அது.

வெவ்வேறு கலாச்சாரங்களின் பின்னணியிலான படைப்புகளுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தியவர். வனப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘கரும்பு வில்’ (1980) திரைப்படத்தின் பாடல்கள் அந்த ரகத்தைச் சேர்ந்தவை.

ஒய். விஜயா, சுதாகர், சுபாஷிணி உள்ளிட்டோர் நடித்தி ருக்கும் இப்படம் ஜி.ஆர்.பி. எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் விஜய் என்பவரது இயக்கத்தில் வெளியானது. காதல் கடவுளான மன்மதனின் ‘போர்க் கருவி’யான கரும்பு வில்லைத் தலைப்பாகக் கொண்ட இப்படத்துக்கு உயிர்ப்பான காதல் பாடல்களைத் தந்தார் இளையராஜா.

மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலமும், காடும் காடு சார்ந்த இடமான முல்லை நிலமும் சங்கமிக்கும் ஒரு பிரதேசத்தைக் கண் முன் நிறுத்தும் பாடல், ஜேசுதாஸ் பாடிய ‘மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்’. எம்.ஜி. வல்லபன் எழுதிய பாடல். பழங்குடி மக்களின் வாழ்வு முறையை நினைவுபடுத்தும் இசை மற்றும் பாடல் வரிகளின் மூலம் வெவ்வேறான மனச்சித்திரங்களை உருவாக்கக்கூடிய பாடல் இது.

மாலை நேர ஒளி கவிந்திருக்கும் கானகத்தின் ஒற்றையடிப் பாதைகளின் வழியே, பழங்குடியின இசைக் கருவிகளை இசைத்துக்கொண்டு மலைக் கிராமத்து மக்கள் பல்லக்கு ஒன்றைத் தூக்கிச் செல்லும் காட்சி மனதில் தோன்றும். பல்லக்கில் நாயகன் அமர்ந்திருக்க, அவனது பிரிவைத் தாங்க முடியாத நாயகியின் குரல் மலைப் பாதைகளின் வழியே பின் தொடர்வதைப் போன்ற சிலிர்ப்பு மனதுக்குள் எழும்.

பழங்குடியினரின் பொது இசைக் கருவியாகக் கருதப்படும் பெரிய அளவிலான டிரம்ஸ் இசையின் பிரம்மாண்ட அதிர்வோடு பாடல் தொடங்கும். தொடர்ந்து ‘ஓலா… ஓலா… ஓலல்லா’ என்று பழங்குடியின பெண் குரல்கள் ஒலிக்கும். சீரான ஊர்வல நடையின் ஒலி வடிவமாக இப்பாடலின் தாளக்கட்டு ஒரே வேகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். சூரிய ஒளி அத்தனை எளிதாக ஊடுருவ முடியாத அடர்ந்த வனத்தை ஊடுருவிச் செல்லும் ஷெனாய் இசையை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா.

வனப் பூக்களின் மீது துளிர்த்திருக்கும் பனித்துளியின் சிதறலைப் போல், சந்தூர் இசைக் கருவி ஒலித்து மறைய, ‘மீன்கொடி தேரில் மன்மதராஜன்’ என்று கம்பீரமும் கழிவிரக்கமும் கொண்ட குரலில் பாடத் தொடங்குவார் ஜேசுதாஸ்.

முதல் நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸ், பியானோ, புல்லாங்குழல் என்று வெவ்வேறு அடுக்குகளில் பிரிவின் ஏக்கமும், வனத்தின் ஏகாந்தமும் கலந்த இசைக்கோவையை உருவாக்கியிருப்பார் இளையராஜா. பெண் கோரஸ் குரல்கள் மெல்லத் தேய்ந்து மறைவதற்கும் பியானோ இசைக்கத் தொடங்குவதற்கும் இடையிலான நுட்பமான அந்த நிசப்தம், வனத்தில் தனித்திருக்கும் உணர்வைத் தரும். ‘காதல் ராகம் பாடியே…’ எனும் வரிகளைத் தொடர்ந்து, பாறையின் மீதேறி வழிந்தோடும் ஓடையை நினைவுபடுத்தும் சந்தூர் இசை தெறிக்கும்.

இரண்டாவது நிரவல் இசையில், புதர்கள் மண்டிய குன்றின் கீழே முன்னேறிச் செல்லும் ஊர்வலத்தை உயரமான இடத்திலிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வைத் தரும் ஷெனாய் இசையை ஒலிக்க விடுவார் இளையராஜா. பியானோ, புல்லாங்குழல், சந்தூர் என்று பொதுவான இசைக் கருவிகளை வைத்தே வனத்தின் காட்சிகளை உருவாக்குவதுதான் இப்பாடலின் தனிச்சிறப்பு.

இதே பாடலின் இன்னொரு வடிவத்தை ஜென்ஸி பாடியிருப்பார். உண்மையில், ஜென்ஸி பாடுவதுதான் படத்தின் முதன்மையான பாடல். அதன் சோக வடிவப் பாடல்தான் ஜேசுதாஸ் பாடுவது. அதீத உற்சாகம் கலந்த குரலில் ‘ஊர்வலத்தை’ ‘உர்வல’மாகக் குறுக்கி ஜென்ஸி பாடுவது குழந்தையின் குறும்பைப் போல் வேடிக்கையாகவும் களிப்பூட்டுவதாகவும் இருக்கும். பாடலின் எந்த வடிவமும் கண்களுக்கு இதமளிக்காது என்பதைச் சொல்லியாக வேண்டும்.

பழங்குடி பெண்ணின் சுயம்வரத்தில் கலந்துகொள்ளும் ஆண்கள் தங்கள் தகுதிகளை விளக்கிப் பாடும் ‘அடி நாகு…என் ராசாக்கிளி’ பாடலை ஜெயச்சந்திரன், டி.எல். மகராஜன் போன்றோர் பாடியிருப்பார்கள். குதூகலமான பாடல் இது.

மலேசியா வாசுதேவன் எஸ். ஜானகி பாடிய ‘மலர்களிலே ஆராதனை’ இப்படத்தின் முக்கியமான மற்றொரு பாடல். மன்மதனின் வியூகங்களுக்குள் அகப்பட்டுக்கொள்ளும் காதல் ஜோடி, காதலின் வேதனையை ஆராதித்துப் பாடும் இப்பாடலில் பெண் குரல்களின் கோரஸ், வயலின் இசைக்கோவை, புல்லாங்குழல், வீணை என்று இசைக் கருவிகளை வைத்து பிரத்யேகமான காதல் மொழியை உருவாக்கியிருப்பார் இளையராஜா. காதல் உலகுக்காக அவர் உருவாக்கிய தேசிய கீதங்களில் இப்பாடலும் ஒன்று!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-26-காதல்-வனத்தின்-தேசிய-கீதம்/article7769486.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 27: காதலர்களின் இசைவழித் துணை!

ஆனந்த கும்மி படத்தில்

ஆனந்த கும்மி படத்தில்

சிறிய படங்கள், பெரிய படங்கள், நட்சத்திர நடிகர்களின் படங்கள், புதுமுகங்கள் நடித்தவை என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல், தான் இசையமைத்த எல்லா படங்களுக்கும் அற்புதமான பாடல்களை வாரி வழங்கியவர் இளையராஜா. அவரே தயாரித்த படத்தில் பாடல்களின் இனிமைக்குக் கேட்கவும் வேண்டுமா? ‘இளையராஜா பிக்சர்ஸ்’ சார்பில் தயாரிக்கப்பட்ட ‘ஆனந்த கும்மி’ (1983) படம் முழுவதும் பொங்கி வழிந்தது இன்னிசை.

பிற்காலத்தில் பார்த்திபனின் ‘பொண்டாட்டி தேவை’ படத்தின் மூலம் அறியப்பட்ட அஸ்வினியும் புதுமுக நடிகரும் நடித்த இந்தப் படத்துக்குக் கதை வசனம் வைரமுத்து. இயக்கம் கோகுல கிருஷ்ணன். பல காரணங்களால் தோல்வியடைந்த இப்படம், இன்றும் அதன் பாடல்களுக்காக நினைவுகூரப்படுகிறது.

எண்பதுகளில் இளம் பிராயத்தைக் கடந்து வந்தவர்களை, உருவமற்ற ஆன்மா போல் பற்றிக்கொண்டுவிட்ட பாடல் ‘ஒரு கிளி உருகுது’. எஸ். ஜானகி, எஸ்.பி. ஷைலஜா இணைந்து பாடிய இப்பாடல், நாயகன் மற்றும் நாயகியின் இளம் பிராயத்தைக் காட்டும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் பாடல். கள்ளமற்ற பிஞ்சு உள்ளங்களுக்கு இடையே துளிர்க்கும் அன்பின் பாடல். அடர்ந்த மரங்களின் இடைவெளி வழியே பரவும் தென்றலின் குளுமையுடன் ஒலிக்கும் புல்லாங்குழலுடன் பாடல் தொடங்கும்.

கிளிகளையும் மைனாவையும் பற்றிப் பாடும் பாடல் என்றாலும், பாடல் முழுவதும் ஆக்கிரமித்திருப்பது குயில்தான். குறிப்பாக முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் புல்லாங்குழலும், அதைப் பிரதியெடுக்கும் குரலில் ஜானகியும், ஷைலஜாவும் பாடும் ‘குக்கூ… குகுகூ’ எனும் ஹம்மிங்கும் ஏதோ ஒரு நதிக்கரையின் மரக்கிளைகளில் அமர்ந்து பாடும் குயிலைக் காட்சிப்படுத்தும். இரண்டாவது நிரவல் இசையில் அன்பின் நெகிழ்வை உணர்த்தும் சாரங்கி இசையை வழியவிட்டிருப்பார் இளையராஜா.

பிள்ளைப் பிராயத்துப் பாடல் என்பதால், ஜானகி, ஷைலஜாவின் குரல்களிலும் குழந்தமையின் குதூகலம் தொனிக்கும். இப்பாடலின் இன்னொரு வடிவத்தை எஸ்.பி.பி. பாடியிருப்பார். ‘தளிருக்கும் மலருக்கும் காதல்… தனிமையில் சிறு சிறு ஊடல்’ எனும் வரிகளில் எஸ்.பி.பி.யின் குரலில் தொனிக்கும் பாந்தம் ஆத்மார்த்தமானது.

இப்படத்தின் மற்றொரு பாடலான ‘ஓ வெண்ணிலாவே… வா ஓடி வா’ பாடலை எஸ்.பி.பி. - ஜானகி ஜோடி பாடியிருக்கும். காதலுக்கு ஏற்படும் தடையால் மனமுடைந்து நிற்கும் நாயகனையும் நாயகியையும் ஆற்றுப்படுத்தும் கனவுப் பாடல் இது. டூயட் பாடல் என்றாலும், பாடல் முழுவதும் இனம்புரியாத வலியை உணர முடியும். இந்தப் பாடலையும் தொடங்கி வைப்பவர் ஷைலஜாதான். ‘ஆனந்த கும்மியடி… வானமெல்லாம் கேட்கட்டும்’ எனும் தொகையறாவுக்குப் பின்னர், ஆர்ப்பாட்டமான தாளமும், நெகிழ்வூட்டும் ஷெனாயும் சேர்ந்து ஒலிக்கும்.

தற்காலிகச் சந்தோஷ மனநிலையில் திளைக்கும் காதலர்களின் உணர்வைப் பாடலின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுவார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் ஷெனாய், கிட்டார் என்று வரிசையாகத் தொடரும் இசைக் கருவிகளுக்குப் பிறகு, ரணங்களை வருடும் மயிலிறகின் மென்மையுடன் வளமான வயலின் கூட்டிசை ஒலிக்கும். வருத்தமான மனநிலையில் இப்பாடலைக் கேட்கும்போது இந்த ஒற்றைக் கணத்தில் நம் மனது உணரும் உணர்வுகள் வார்த்தையில் அடங்காதவை. இரண்டாவது சரணத்தில், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை அற்றுவிட்டதுபோன்ற அழுகைக் குரலில் ‘இனிமேல் பிறவி வாராது’ என்று பாடுவார் ஜானகி.

அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக, ‘காதல் மாலை சூடும் வேளை… அழுகை ஏனோ, கூடாது’ என்று எஸ்.பி.பி. பாடுவார். காதலனின் ஆறுதல் வார்த்தைக்காக அழுகையை அடக்கிக்கொண்டாலும், ஆற்றாமையில் தவிக்கும் மனதின் தேம்பும் குரலில், ‘நிலவே நீயும் தூங்காதே…’ என்பார் ஜானகி. எழுதப்பட்ட பாடல் வரிகளை இசையுடன் பாடுவது மட்டும் பாடகர்களின் பணியல்ல; கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை நுட்பமாக வெளிப்படுத்தும் கலை அது என்பதை ஆத்மார்த்தமாகப் பதிவுசெய்திருப்பார் ஜானகி. இசை ரசிகர்களால் அவர் ஆராதிக்கப்படுவதன் முக்கியக் காரணம் ஆத்மார்த்தமான பாடும் முறைதான்.

குதூகலமும் குறும்பும் நிரம்பித் ததும்பும் குரலில் எஸ்.பி.பி. பாடும் ‘தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி’ பாடல், உற்சாகம் வழியும் இசையமைப்பைக் கொண்டது. மிகத் துல்லியமான ஒலிப்பதிவைக் கொண்ட இப்பாடலில் ஆர்ப்பாட்டமான ட்ரம்ஸ், புத்துணர்வூட்டும் கிட்டார், மவுத்தார்கன், சாக்ஸபோன் என்று இசைக் கருவிகளின் அற்புதமான கலவை இப்பாடலில் உண்டு. கண்ணாடி இழைகளால் உருவாக்கப்பட்ட உலகில் பயணம் செய்யும் உணர்வைத் தரும் பாடல் இது. ‘பாடல் நூலில் தினம் செல்வி துணை என்று எழுதினேன்’ எனும் வரிகளில் வைரமுத்துவின் குறும்பு மின்னும்.

ஜானகி, எஸ்பிபி பாடும் ‘ஊமை நெஞ்சின் ஓசைகள்’ பாடல் காதலின் பிரிவு தரும் வேதனையைப் பதிவுசெய்த பாடல்களில் ஒன்று. இப்பாடலின் நிரவல் இசையில் நெகிழ்ந்துருகும் சாரங்கி கண்களை நனைத்துவிடும். எதிர்ப்புகளால் மருகிக் கிடக்கும் காதல் ஜோடி மீதான இரக்கத்துடன் இளையராஜா பாடும் ‘திண்டாடுதே ரெண்டு கிளியே’ பாடலும் இப்படத்தில் உண்டு. அந்த வகையில் காதலர்களின் இசைவழித்துணையான இளையராஜா அவர்களுக்குத் தந்த ஆறுதல் பரிசு இந்த ஆல்பம்!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-27-காதலர்களின்-இசைவழித்-துணை/article7795797.ece

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 28: நெஞ்சில் உள்ளாடும் கீதம்!

sivakumar_2602689f.jpg
 

தெய்வ சங்கல்பம் அல்லது தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பு இதுதான் ‘கவிக்குயில்’(1977) படத்தின் கதைக் களன். கடவுள் கண்ணன் மீது மிகுந்த பக்தி கொண்ட கோபால் (சிவகுமார்), பிருந்தாவனத்தின் கண்ணன் போலவே புல்லாங்குழல் மீது காதல் கொண்டவன். வசதியான குடும்பத்தில் பிறந்து, கண்ணன் பக்தியால் புல்லாங்குழல் சகிதம் வெவ்வேறு ஊர்களுக்கு அலைந்து திரிபவன். கனவில் கண்ணனால் அடையாளம் காட்டப்படும் ராதா (ஸ்ரீதேவி) மீது காதல் கொள்வான். அந்த ஏழைப் பெண்ணின் மனதில் வார்த்தைகளற்ற கீதம் ஒலித்துக்கொண்டேயிருக்கும். அவள் மனதுக்கு மட்டும் தெரிந்த அந்த மெட்டை கோபால் வாசித்துக்காட்ட இருவருக்கும் இடையில் காதல் ஜனிக்கும். தேவராஜ்-மோகன் இயக்கிய இப்படத்தில் ரஜினி, படாபட் ஜெயலட்சுமி, செந்தாமரை ஆகியோரும் நடித்திருப்பார்கள். இந்த தெய்வீகக் காதல் கதைக்குத் தனது உயிர்ப்பான இசையை வழங்கியிருப்பார் இளையராஜா.

ராதா மனதிலிருந்து கோபாலின் குழலுக்குக் குடிபெயரும் அந்த கீதம்தான் ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’. கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா பாடிய இப்பாடல் இளையராஜாவின் இசைப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. காற்றில் கலந்து வரும் அந்த ரகசிய மெட்டின் குழலோசை தரும் பரவசம் ஸ்ரீதேவியை மட்டுமல்ல; நம்மையும் தொற்றிக்கொள்ளும். காந்தர்வ குழலோசையின் திசை நோக்கி ஸ்ரீதேவி ஓடிச் செல்லும்போது தடதடக்கும் ஜலதரங்கமும், பரிதவிப்பை உணர்த்தும் வயலின் இசைக்கோவையும் பரவசத்தின் சதவீதத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும். பக்தி, காதல், பெருமிதம் என்று உணர்வுகளின் அலையில் மிதக்கும் குரலில் மெய்சிலிர்க்க வைப்பார் பாலமுரளி கிருஷ்ணா. மலைகளுக்கு நடுவே பரந்து கிடக்கும் சமவெளி முழுவதும் எதிரொலிக்கும் புல்லாங்குழலிசையைப் பாடல் முழுவதும் பரவவிட்டிருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் மனதின் ஏக்கத்தின் எதிரொலிபோல், காதல் கொண்ட குயிலின் பிரிவுத் துயரின் வெளிப்பாட்டைப் போல் ஒலிக்கும் புல்லாங்குழல், காலத்தையே உறையவைத்துவிடும். ‘உன் புன்னகை சொல்லாத அதிசயமா’ எனும் வரி பஞ்சு அருணாசலத்தின் மிக அழகான கற்பனை.

இப்பாடலின் இன்னொரு வடிவத்தை ஜானகி பாடியிருப்பார். காதலனால் ஏமாற்றப்பட்டதாகக் கருதி, தனது முடிவைத் தேடி மலை மீது ஏறிக்கொண்டே நாயகி பாடும் பாடல் இது. கொந்தளிக்கும் மனநிலையும் சுயஇரக்கமும் கலந்த உணர்வை நிரவல் இசையில் உணர்த்தியிருப்பார் இளையராஜா. பாடலில் ஏமாற்றத்தையும் திகைப்பையும் பிரதிபலிக்கும் வயலின் இசைக்கோவை ஒன்று கடந்துசெல்லும். கதையின் மொத்த சாரத்தையும் அந்த இசை உணர்த்திவிடும்.

ஏமாற்ற உணர்வை வெளிப் படுத்தும் இன்னொரு பாடல் ஜானகி பாடிய ‘உதயம் வருகின்றதே…’. சாரங்கி, வயலின் சகிதம் மனதை நெகிழவைக்கும் பாடல் இது. இப்பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் ‘மானத்திலே மீனிருக்க மருதையில நானிருக்க’ எனும் தொகையறாவைப் பாடியவர் இளையராஜாவின் ஆசான்களில் ஒருவரும், புகழ்பெற்ற இசையமைப்பாளருமான ஜி.கே. வெங்கடேஷ்.

ரஜினி படாபட் ஜெயலட்சுமி ஜோடிக்கும் பாடல் உண்டு. ரஜினியை நினைத்து படாபட் பாடும் காட்சியில் இடம்பெறும் ‘மானோடும் பாதையிலே’ பாடலை பி. சுசிலா பாடியிருப்பார். சுஜாதா முதன்முதலில் பாடிய ‘காதல் ஓவியம் கண்டேன்’ பாடலும் இப்படத்தில் இடம்பெற்றதுதான். புதிதாக மலரும் பூவின் சுகந்தத்துடன் ஒலிக்கும் இப்பாடலின் முதல் நிரவல் இசையில் பெண் குரல்களின் மெல்லிய கோரஸ், மேலும் சுகம் சேர்க்கும். பாலமுரளி கிருஷ்ணா பாடிய மற்றொரு பாடலும் இப்படத்தில் உண்டு. ‘ஆயிரம் கோடி காலங்களாக’ என்று தொடங்கும் அப்பாடல், கிருஷ்ணனைப் போற்றும் அசல் பக்திப் பாடல்!

இப்படத்தின் மிக முக்கியமான பாடல் ஜானகி பாடிய ‘குயிலே கவிக்குயிலே’. குருவிகளின் சிணுங்கலுடன் தொடங்கும் இப்பாடலில் முகப்பு இசை, மாயாஜாலங்களை நிகழ்த்தக் கூடியது. வயலின் கோவை அடுக்கின் மேலே ஷெனாய் ஒலி பரவும்போது காலத்தின் பின்னோக்கிய பயணம் நம்மை எங்கோ இழுத்துச்சென்றுவிடும். மனிதர்களின் குறுக்கீடற்ற இயற்கைப் பிரதேசத்தைப் போர்த்தியிருக்கும் பிரம்மாண்ட நிழல், கொஞ்சம் கொஞ்சமாக விலக, இயற்கையின் பேரழகு நம் கண் முன்னே விரிவது போன்ற உணர்வை, பாடலின் முகப்பு இசை தரும். இளமையின் பூரிப்பில் திளைக்கும் பெண், தனது விருப்பத்துக்குரிய ஆணுக்கான எதிர்பார்ப்பு பற்றி இயற்கையிடம் பகிர்ந்துகொள்ளும் காட்சியமைப்பு அது. தென்றலின் தீண்டல் தரும் சுதந்திர உணர்வுடன் தனது காதல் ஆசையை வெளிப்படுத்தும் பெண்ணின் அந்தரங்க உணர்வு. மிக மெல்லிய அந்த உணர்வைத் தனது இசையில் நுட்பமாக வெளிக்கொணர்ந்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசை நம்மை உரசியபடி கடந்துசெல்லும் தென்றல், ஆளரவமற்ற அந்தப் பிரதேசத்தின் தாவரங்களை அசையச் செய்வது போன்ற உணர்வைத் தரும். கிட்டார், வயலின், ஷெனாய் இசைக் கலவையை அதில் ஒலிக்க விடுவார் இளையராஜா. மூன்று சரணங்களைக் கொண்ட இப்பாடலில், இந்த இசையைத் தொடர்ந்துவரும் இரண்டாவது சரணத்தை வித்தியாசமான மெட்டில் அமைத்திருப்பார்.

கேட்பவர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் பாடல்களைக் கொண்ட இப்படத்துக்கு ‘கவிக்குயில்’ என்ற பெயர்தான் எத்தனை பொருத்தமானது!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-28-நெஞ்சில்-உள்ளாடும்-கீதம்/article7821730.ece

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 29: அக உலகின் கணணீர் தேசம்

sivaji_2611196f.jpg
 

கடந்த காலத் தவறுகளின் நிழல்கள் பின்தொடர, கனத்த மனதுடன் வளையவரும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது. பழைய நினைவின் ஏதோ ஒரு கீற்றின் ஸ்பரிசமும் கனத்த மனதை உடைந்து வெடிக்கச் செய்துவிடும். அப்படியான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் தமிழில் நிறைய உண்டு. அவற்றில் முக்கியமான சில பாடல்கள் இடம்பெற்ற திரைப்படம் ‘தியாகம்’(1978). வங்காள மொழியிலும் இந்தியிலும் ‘அமானுஷ்’ எனும் பெயரில் வெளியான திரைப்படத்தின் தமிழ் வடிவம் இப்படம். பிரதான பாத்திரங்களில் சிவாஜி, லட்சுமி. பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கடல்சார் வாழ்விடத்தில் நடக்கும் கதை இது. பணக்கார நாயகன், சூழ்ச்சி வலையொன்றில் சிக்கி, குடிகாரனாக மாறிவிட, அவனைக் காதலித்த பெண் கலங்கி நிற்கும் கண்ணீர்க் காவியம். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. ஐந்து மொழிகளிலும் அந்தந்த நிலங்களின் தன்மைக்கேற்ற இசையை வழங்கியிருந்தார்கள் இசையமைப்பாளர்கள். தமிழ் வடிவத்துக்கு இசை இளையராஜா. பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

இளையராஜாவின் இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அவரது குரலுக்கு மதிப்பளிக்கும் அற்புதமான பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். எஸ்.பி.பி., ஜேசுதாஸ் போன்றவர்களுக்காக இளையராஜா உருவாக்கிய பாடல்களின் நவீனத் தன்மையை, டி.எம்.எஸ்.ஸுக்காக அவர் தந்த பாடல்களில் காண முடியாது. மாறாக, எம்.எஸ்.வி. இசையில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் நீட்சியாகவே அப்பாடல்களை இளையராஜா உருவாக்கினார் என்று சொல்லலாம். எனினும், பாடல்களின் மெட்டிலும், நிரவல் இசையிலும் பழமையும் புதுமையும் கலந்த இனிமையைத் தந்தார்.

இப்படத்தில் இடம்பெறும் ‘தேன்மல்லிப் பூவே’ பாடல் ஒரு உதாரணம். டி.எம்.எஸ். ஜானகி பாடியது. கடற்கரையோரத் தென்றலின் ஸ்பரிசத்துடன் தொடங்கும் இப்பாடலின் முகப்பு இசையில் பூவை மொய்க்கும் வண்டின் ரீங்காரத்தைப் போன்ற புல்லாங்குழலை ஒலிக்க விடுவார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் ‘செல்லோ’ இசை, பிரம்மாண்டமான புல்வெளிப் பரப்பின் மீது திரட்சியான கருமேகங்களின் நகர்வைக் கண்முன் நிறுத்தும். தொடர்ந்து வீணை, வயலின் இசைக் கலவையின் சாம்ராஜ்யம் என்று அற்புதமான இசைக் கோவைகளைக் கொண்ட பாடல் இது.

‘வருக எங்கள் தெய்வங்களே’ எனும் குழுப் பாடலில் டி.எம்.எஸ்.ஸுடன் நாகூர் யூசுப், கெளசல்யா போன்றவர்கள் பாடியிருப்பார்கள். டி.எம்.எஸ். பாடிய மற்றொரு முக்கியமான பாடல் இப்படத்தில் உண்டு. அது, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’ பாடல். செய்யாத குற்றத்துக்காக வாழ்க்கையை இழந்து நிற்கும் நாயகன் தன் மனதின் குமுறல்களை வேதனையுடன் வெளிப்படுத்தும் பாடல் இது. கடல் மேற்பரப்பின் சிற்றலைகளில் மிதந்தபடி செல்லும் படகின் மேல் தளத்தில் நின்றுகொண்டு சிவாஜி பாடுவதாக அமைக்கப்பட்ட காட்சியமைப்பு. மனதின் துயரங்களைக் கடல் காற்றுடன் கரையவிடும் பாடல். டி.எம்.எஸ்.ஸின் மெலிதான் ஹம்மிங்கைத் தொடர்ந்து ஒலிக்கும் குழலோசை, ரணத்தின் மீது வருடிக்கொடுக்கும் மயிலிறகின் மென்மையுடன் ஒலிக்கும்.

சுயஇரக்கமும் தத்துவார்த்த மனநிலையும் கலந்த குரலில் அற்புதமாகப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். மனதை நெகிழச் செய்யும் வயலின், ஆழ்மனதின் விம்மல்களை வெளிப்படுத்தும் கிட்டார், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்லும் துயர நினைவுகளின் தொகுப்பாக ஒலிக்கும் புல்லாங்குழல் என்று எளிமையான இந்தப் பாடலில் பல நுட்பங்கள் பொதிந்திருக்கும். இரண்டாவது நிரவல் இசையில், வயலின் இசைக் கோவைக்கு நடுவே ஒலிக்கும் சாரங்கி ஒரு கணமேனும் கண்ணீரை வரவழைத்துவிடும்.

இப்பாடலின் மிகப் பெரிய பலம் கண்ணதாசன். ‘பறவைகளே பதில் சொல்லுங்கள்.. மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்’, ‘தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே… தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே’ போன்ற வரிகளை கண்ணதாசனைப் போன்ற ஞானிகளாலன்றி வேறு யாராலும் எழுத முடியாது.

இப்படத்தின் மிக முக்கியமான பாடல், ஜானகி பாடிய ‘வசந்தகால கோலங்கள்’. இளையராஜா ஜானகி இணை தந்த மிக நுட்பமான கலைப் படைப்புகளில் ஒன்று இப்பாடல். அலைகளினூடே மின்னும் ஒளித் துணுக்குகளைப் போன்ற கிட்டார் இசையுடன் இப்பாடல் தொடங்கும். வார்த்தைகளினூடே குறுக்கிடும் வலி நிறைந்த குரலில் கண்ணீரின் இசை வடிவமாகப் பாடியிருப்பார் ஜானகி. ‘கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்’ எனும் ஒற்றை வரி, எங்கோ ஒரு கடலோர கிராமத்தில், கைவிட்டுப் போன வாழ்க்கையின் நினைவுகளுடன் தவிக்கும் பெண்ணை உருவகப்படுத்தும்.

முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் சாக்ஸபோன், துயரத்தை வசதியாக வெளிப்படுத்தும் அளவுக்குப் பரந்த தனிமையைக் கொண்ட வெளியை மனதுக்குள் விரிக்கும். இரண்டாவது நிரவல் இசையில் பகிர்ந்துகொள்ள முடியாத துயர நினைவுகளின் முணுமுணுப்பைப் போன்ற மர்மத்துடன் புல்லாங்குழலை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா. மனதின் ரகசிய அடுக்குகளைத் துழாவும் இசைக்கோவை அது. ‘நன்றி நன்றி தேவா… உன்னை மறக்க முடியுமா?’ எனும் வரியில் ஜானகி காட்டும் பாவம்... அதை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-29-அக-உலகின்-கணணீர்-தேசம்/article7849903.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 30 - அன்பைத் தேடும் மனதின் பாடல்

‘மூடுபனி’ ஷோபா, பிரதாப் போத்தன்
‘மூடுபனி’ ஷோபா, பிரதாப் போத்தன்

மனம் ஒரு விசித்திர உலகம். ஒருவர் தன் வாழ்வில் கடந்துவந்த மனிதர்களை நிரந்தரமாகக் குடியமர்த்தியிருக்கும் பிரதேசம். அனுபவங்களின் நிழல்கள் நிரந்தரமாகப் படிந்திருக்கும் அந்த இருள் குகைக்குள், இளம் வயதில் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்கள் கோர உருவங்களாகத் தங்கிவிடும்.

எல்லைகளற்று விரியும் மனதை நிர்வகிக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் அதன் எதிர்மறையான எண்ணங்களுக்குப் பலியாகிவிடுவதுண்டு. அப்படியான ஒரு மனிதனைப் பற்றிய கதைதான் பாலுமகேந்திராவின் ‘மூடுபனி’(1980). ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ படத்துக்கு மரியாதை செய்யும் விதத்தில் இப்படத்தை எடுத்ததாகப் பின்னாட்களில் குறிப்பிட்டார் பாலுமகேந்திரா.

பிரதாப் போத்தன், ஷோபா நடித்த இப்படத்தில் கல்கத்தா விஸ்வநாத், பானுச்சந்தர், மோகன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இளையராஜாவின் 100-வது படம். தன் முதல் படத்திலேயே இளையராஜாவுடன் பணியாற்ற விரும்பினாலும், அது சாத்தியமானது தனது மூன்றாவது படமான மூடுபனியில்தான் என்று பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கிறார்.

கதாபாத்திரங்களின் மன உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் இசையும், அர்த்தமுள்ள மவுனங்களும் நிறைந்தவை பாலுமகேந்திராவின் படங்கள். அவரது பயணம் முழுவதும் அவருக்குத் துணை நின்றவர் இளையராஜா.

‘பருவ காலங்களின் கனவு’ எனும் பாடலுடன் படம் தொடங்கும். எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் பாடிய இப்பாடல் இனிமை பொங்கும் உற்சாகத்தின் இசை வடிவம். மோட்டார் சைக்கிள் பில்லியனில் அமர்ந்து காதலனை அணைத்தபடி செல்லும் பெண்ணின் குதூகலத்தைப் பிரதியெடுக்கும் பாடல் இது. கங்கை அமரன் எழுதியது. காற்றைக் கிழித்துக்கொண்டு விரையும் வாகனத்தின் வேகமும், கட்டற்ற சுதந்திரத்துடன் துடிக்கும் மனதின் பாய்ச்சலும் இப்பாடல் முழுவதும் நிரம்பித் ததும்பும்.

‘தகுதகுததாங்குதா தகுதகு’ என்று களிப்புடன் கூடிய குரலில் ஒலிக்கும் ஜானகியின் ஹம்மிங் இப்பாடல், சென்றடையும் தூரத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும். பாடல் முழுவதும் அதிர்ந்துகொண்டே இருக்கும் டிரம்ஸ், அதீத மகிழ்ச்சியில் வேகமாக அடித்துக்கொள்ளும் இதயத் துடிப்பை நினைவுபடுத்தும். ஒரே ஒரு சரணத்தைக் கொண்ட இப்பாடலின் நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸ், மாலை நேரச் சூரியக் கதிர்களினூடே வாகனங்கள் மீது மிதந்துசெல்லும் அனுபவத்தைத் தரும் எலெக்ட்ரிக் கிட்டார் என்று ஒரு இன்பச் சுற்றுலாவை இசைத்திருப்பார் இளையராஜா.

உல்லாசம் ததும்பும் மலேசியா வாசுதேவனின் குரல் பாடலின் மிகப் பெரிய பலம். மெல்லிய உணர்வுகள் கொண்ட இளம் காதலியை அரவணைக்கும் குரலில், ‘தழுவத்தானே தவித்த மானே…’ என்று பாந்தமாகப் பாடியிருப்பார்

‘ஸ்விங்… ஸ்விங்’ எனும் ஆங்கிலப் பாடலை டாக்டர் கல்யாண் பாடியிருப்பார். விஜி மேனுவல் எழுதிய இந்தப் பாடல், கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் உத்வேகத்தைத் தரும் வகையில் இசைக்கப்பட்டது. எலெக்ட்ரிக் கிட்டார் இசையில் தெறிக்கும் உத்வேகம் பிரதாப் போத்தனுக்குள் மறைந்திருக்கும் மிருகத்தைத் தட்டியெழுப்பும். சித்தியின் கொடுமையால் அத்தனை பெண்களையும் வெறுக்கும் அந்தப் பாத்திரத்தின் தன்மையை, படத்தின் போக்கில் பின்னணியில் ஒலிக்கும் இந்தப் பாடல் உணர்த்திவிடும்.

அதேசமயம், மறைந்துபோன தனது தாயின் மென் சுபாவத்தைக் கொண்ட பெண்ணின் (ஷோபா) பின்னால் பித்தேறிச் சுற்றுவான் நாயகன். அவனது மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் தாலாட்டுப் பாடல் ‘அம்மா பொன்னே ஆராரோ’. உமா ரமணன் பாடியிருக்கும் இந்தக் குறும்பாடல், நாயகனின் ஆழ்மனதின் வேதனைகளுக்கு மருந்திடும் மந்திரம்.

இப்படத்தின் மிக முக்கியமான பாடல், ஜேசுதாஸ் பாடிய ‘என் இனிய பொன் நிலாவே’. கங்கை அமரன் எழுதிய இப்பாடல், உலக அளவில் கிட்டார் இசையின் நுட்பங்களையும், அழகியல் கூறுகளையும் கொண்ட மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.

பெங்களூரிலிருந்து ஊட்டிக்கு ஷோபாவைக் கடத்திவந்திருக்கும் பிரதாப், தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சுவார். உயிர் பயத்துடன் அங்கு தங்கியிருக்கும் ஷோபா, ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக, கிட்டாரும் கையுமாக இருக்கும் பிரதாப்புக்குப் பாடத் தெரியுமா என்று கேட்பார். தன் மனதின் குரலை வெளிப்படுத்தும் விதமாக, சற்றே கூச்சத்துடன் பாடத் தொடங்குவார் பிரதாப்.

மெல்லிய கிட்டார் ஒலியுடன் தொடங்கும் இப்பாடலின் வழியே, சுய இரக்கமும் மர்மமும் நிறைந்த அம்மனிதனின் ஆழ்மனதில் கிடக்கும் அன்பு மேலேறி வரும். நிகழ்விடத்திலிருந்து கனவுலகுக்குச் செல்லும் அவன், அந்த உலகில் தன் காதலியின் அருகாமையை, அன்பை உணர்வான்.

முதல் நிரவல் இசையில் தேவதைகளின் வாழ்த்தொலியாக ஒலிக்கும் பெண் குரல்களின் கோரஸைத் தொடர்ந்து அடிவானத்தில் மிதக்கும் மாலை நேரத்து சொர்க்கம் நம் மனதில் உருப்பெறும். இரண்டாவது நிரவல் இசையில், கற்பனை உலகின் சவுந்தர்யங்களை உணர்த்தும் வயலின் இசைக்கோவையும், பெருகிக்கொண்டே செல்லும் காதலின் வலியை உணர்த்தும் எலெக்ட்ரிக் கிட்டார் இசையும் ஒலிக்கதிர்களாக நம்முள் ஊடுருவதை உணர முடியும்.

காதலுக்காக இறைஞ்சும் மனமும், இருட்டு உலகிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணத்துக்கு ஆயத்தமாகும் நம்பிக்கையும் கலந்த குரலில் பிரவாகமாகப் பாடியிருப்பார் ஜேசுதாஸ். ‘தொடருதே தினம் தினம்’ எனும் வரியைப் பாடும்போது அவர் குரலில் சந்தோஷக் குளிர் தரும் சிலிர்ப்பு தொனிக்கும். அன்பைத் தேடி அலையும் மனதின் தற்காலிக ஏகாந்தம் அது!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%

 

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 31: நினைவெல்லாம் நல்லிசை!

SPB_2627870f.jpg
 

தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான தர் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தைத் தொடர்ந்து இளையராஜாவுடன் இணைந்து அற்புதமான இசைக் காவியங்களைத் தந்தார். இவர்கள் கூட்டணியில், 1982-ல் வெளியான திரைப்படம் ‘நினைவெல்லாம் நித்யா’. கார்த்திக், ஜீஜீ., பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரும் தொழிலதிபரின் மகனான சந்துரு (கார்த்திக்), பழங்குடியினப் பெண்ணான நித்யா(ஜீஜீ.)வைக் காதலிப்பான். ஏற்றத்தாழ்வின் கொடூரப் பார்வைக்கு இருவரும் பலியாகிவிடுவார்கள்.

ஆத்மார்த்தமான காதல் கதைக்கு உயிரோட்டமான இசையைத் தந்திருந்தார் இளையராஜா. பாடல்களில் மட்டுமல்ல, படத்தின் பின்னணி இசையிலும் காதல் மனதின் துடிப்பை இசையாக்கியிருந்தார். பாடலாசிரியர் வைரமுத்துவின் கவித்துவமான வரிகள் பாடல்களுக்குச் செறிவைச் சேர்த்தன. எஸ்.பி.பி.யின் பொற்காலத்தில் வெளியான ஆல்பம் இது.

கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, தந்தை நிர்வகித்து வந்த நிறுவனங்களின் பொறுப்பில் அமரவைக்கப்படும் சந்துரு, பொறுப்புகளிலிருந்து தப்பித்து நண்பர்களுடன் சுதந்திரமாக ஆடிப்பாடுவான். ஆப்பிரிக்க பாணி தாளக்கட்டுடன் உருவாக்கப்பட்ட ‘தோளின் மேலே பாரமில்லே’ எனும் இப்பாடலை தெறிக்கும் இளமையின் உற்சாகத்துடன் பாடியிருப்பார் எஸ்.பி.பி. பாடலின் முகப்பு இசையில் ஒலிக்கும் புல்லாங்குழல் துணுக்கு, மாலை நேர ஒளியின் பின்னணியில் கூடாரங்களில் வசிக்கும் செவ்விந்தியர்களின் குடியிருப்பை நினைவுபடுத்தும்.

இரண்டாவது நிரவல் இசையிலும் இந்தப் புல்லாங்குழல் இசையின் தொடர்ச்சி வரும். அதைத் தொடர்ந்து ‘தரரத் தரரத் தா’ என்று ஆர்ப்பரிக்கும் குதூகலத்துடன் சரணத்தைத் தொடங்குவார் எஸ்.பி.பி. 80-களில் வானொலி நிகழ்ச்சிகளின் முகப்பு இசையாக இப்பாடலின் இசை பயன்படுத்தப்பட்டது. பழங்குடியினத் திருமண நிகழ்ச்சியொன்றில் பாடப்படும் ‘கன்னிப் பொண்ணு கைமேலே’ பாடலை மலேசியா வாசுதேவனும், பி.சுசீலாவும் பாடியிருப்பார்கள்.

முற்றிலும் வேறுவிதமான தாளக்கட்டுடன் தொடங்கி, வேறு திசையில் பயணிக்கும் ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடல் இளையராஜாவின் ராஜ முத்திரைகளில் ஒன்று. கரும்பச்சைப் பாறைகளில் தெறித்து ஓடி, கூழாங்கற்களின் மீது படரும் ஓடையைப் போல் தபேலா, டிரம்ஸின் கூட்டுக் கலவையின் தொடர்ச்சியாக ஜலதரங்கம். ஓடை நீரில் கால் நனைக்கும் சுகத்துடன் ஜானகியின் ஆலாபனை என்று வர்ணிப்புகளுக்கு அப்பாற்பட்ட சுகந்தத்தைத் தரும் முகப்பு இசை அது.

நிரவல் இசையில் ஜலதரங்கம், பேஸ் கிட்டார், எலெக்ட்ரிக் கிட்டார், வயலின், புல்லாங்குழல் என்று நான்கு நிமிடப் பாடலில் ஒரு காவியத்தையே படைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில், விட்டு விட்டு ஒலிக்கும் பறவையின் குரலை ஓடைக் கரையில் அமர்ந்து கேட்கும் சுகத்தை இசையாக வார்த்திருப்பார். நந்தவனம், பூஞ்சோலை போன்ற வார்த்தைகளுக்கு இசையால் வடிவம் கொடுத்த பாடல் இது.

எஸ்.பி.பி. பாடிய ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ பாடல் இப்படத்தின் மொத்தச் சூழலையும் சொல்லிவிடும். குடும்பத்தினரின் ஆதரவில்லாமல், கையில் பணமுமில்லாமல் தவிக்கும் கார்த்திக், அன்பைத் தவிர வேறு எந்த ஆபரணமும் இல்லாத தனது காதலியை ராஜகுமாரியாக வர்ணித்துப் பாடும் பாடல் இது. பல்லவியை எஸ்.பி.பி. தொடங்கியதும் வசந்தத்தின் வருகையை உணர்த்தும் புல்லாங்குழல் ஒலிக்கும்.

முதல் நிரவல் இசையில் வசந்தத்தின் இனிமையை உணர்த்தும் வயலின் இசைக்கோவை, கிட்டார் இசையைத் தொடர்ந்து களிப்பூட்டும் ஒற்றை வயலினை ஒலிக்கவிடுவார் இளையராஜா. கூடவே துள்ளலான டிரம்ஸ் தாளம். இளம் காதலர்களை வாழ்த்தும் இயற்கையின் பிரத்யேக மொழிபோல் அது ஒலிக்கும். பாடல் முழுவதுமே இயற்கையின் பேரழகைப் பிரதிபலிக்கும் இசைக்கோவைகளைத் தந்திருப்பார்.

இளையராஜாவின் பெரும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று எஸ்.பி.பி. பாடிய ‘பனிவிழும் மலர்வனம்’. பாடலின் தொடக்க வரியே பனிக்காலப் பூந்தோட்டத்தின் காட்சியை உணர்த்திவிடும். காதலில் உறைந்திருக்கும் மனம் மெல்ல மவுனத்தைக் கலைப்பதுபோல், கிட்டார் இசை மெலிதாக ஒலிக்கத் தொடங்கும். ‘…உன் பார்வை ஒரு வரம்’ எனும் வரிகளை ஆமோதித்து ஆசி வழங்குவதுபோல், இயற்கை வயலின் இசைக்கோவையை வழங்கியிருப்பார் இளையராஜா.

வாவா பெடல் (wah wah pedal) எனப்படும் கருவியுடன் சேர்ந்து ஒலிக்கும் கிட்டார் இளமைத் துள்ளலை இரட்டிப்பாக்கியிருக்கும். முதல் நிரவல் இசையில் புல்லாங்குழலுக்கும் வீணைக்கும் இடையிலான உரையாடல்; அதைத் தொடர்ந்து, மெல்லிய வெயிலுக்கு நடுவே வீசும் தென்றலைப் போன்ற வயலின் இசைக் கீற்று; அதனுடன் கலக்கும் நறுமணத்தைப் போல் ஒரு வயலின் கோவை; எதிர்பாராத இடத்தில் ஒரு தபேலா தாளம் என்று திரையிசைப் பாடல் ஒன்றைச் சமகாலத்திலேயே காவியமாக்கும் அளவுக்கு அற்புதமான இசையமைப்பை இப்பாடலுக்கு வழங்கியிருந்தார் இளையராஜா. ’தழுவிடும்பொழுதிலே இடம் மாறும் இதயமே’ எனும் வரி வைரமுத்துவின் அசாத்திய கற்பனை.

காதலியின் பிரிவை நினைத்து வாடும் காதலன் பாடும் ‘நினைவெல்லாம் நித்யா நித்யா’ எனும் குறும்பாடலும் இப்படத்தில் உண்டு.

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%

 

 

 

 

 

Link to comment
Share on other sites

17 hours ago, Athavan CH said:

காற்றில் கலந்த இசை 31: நினைவெல்லாம் நல்லிசை!

 

 

 

பகிர்வுக்கு நன்றி ஆதவன். எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 32 - சுகானுபவத்தின் ஒரு துளி!

isia_2636609f.jpg
 

ஹிட் ஆன படங்களின் பாடல்களைத் தவிர, பாடல்களுக்காகவென்றே நினைவுகூரப்படும் எண்ணற்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. 1983-ல் சிறுமுகை ரவியின் இயக்கத்தில் பிரபு, அம்பிகா நடித்த ‘ராகங்கள் மாறுவதில்லை’ படமும் அதில் ஒன்று.

சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. முன்னிலையில் ஸ்பூர்த்தி எனும் சிறுமி பாடிய ‘விழிகள் மீனோ’ பாடலைக் கேட்ட 80-களின் ரசிகர்கள் பூரித்து நின்றார்கள். இப்படிப்பட்ட பாடல்களைக் கேட்காமலேயே வளர்கிறோமே என்று இளைய தலைமுறையினர் வருத்தப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. கல்யாணி ராகத்தின் சாயலில் அமைந்த அந்தப் பாடல், காதலியை வர்ணித்துக் காதலன் பாடும் சாதாரண ‘சிச்சுவேஷ’னுக்காக இசைக்கப்பட்டதுதான். எனினும், அப்பாடல் தரும் இசைச் சுவை, சுகானுபவம், சஞ்சரிக்க வைக்கும் கற்பனை உலகம் விவரணைகளுக்கு அப்பாற்பட்டவை.

அழகை ரசிக்கும் மனதின் ஆலாபனையாக எஸ்.பி.பி.யின் ஹம்மிங்குடன் தொடங்கும் இப்பாடல் இசையமைப்பாளருக்கும் பாடகருக்கும் இடையிலான பரஸ்பரப் புரிதலுக்கு மிகச் சிறந்த உதாரணம். தபேலா, மிருதங்கம் தாள வாத்தியங்கள் அமைத்துத் தரும் நடைமேடையில் புல்லாங்குழல் நடைபயில, பாடல் தொடங்கும். முதல் நிரவல் இசையில் வீணையின் நடைபாதையில் குறுக்கிடும் இரண்டு வயலின்கள் நெகிழ்ந்துருகியபடி உரையாடிச் செல்ல, துள்ளும் மானின் குதூகலத்துடன் புல்லாங்குழலும், அதை வியக்கும் வீணையின் சிலிர்ப்பும் அவற்றைத் தொடர்ந்து ஒலிக்கும்.

இசைஞானமும் கற்பனையின் வீச்சும் எல்லையற்று விரிந்து கிடக்கும் இளையராஜாவின் படைப்பாற்றலின் சிறு துளி அது. இரண்டாவது நிரவல் இசையில் எஸ்.பி.பி.யின் ஜதிக்கும், மிருதங்கத்தின் தாளத்துக்கும் இடையில் சின்ன உரையாடல். உரையாடலுக்கு நடுவே மிருதங்கத்துடன் சேர்ந்து ஒலிக்கும் பேஸ் கிட்டார் தரும் பியூஷன் என்று அற்புதமான இசைத் தருணங்கள் நிறைந்த பாடல் இது.

எஸ்பிபி பாடிய ‘தென்றலோ தீயோ’ எனும் தனித்தன்மை மிக்க பாடலும் இப்படத்தில் உண்டு. இரவின் மவுனத்தைக் கலைத்தபடி மெலிதாக ஒலிக்கும் கிட்டாருடன் பாடல் தொடங்கும். நினைவுகள் தரும் வலியைத் தாளாமல் புலம்பும் மனதின் மெல்லிய விசும்பலாக ஒலிக்கும் ஹம்மிங்குடன் பாடத் தொடங்குவார் எஸ்.பி.பி. மென்மையான தபேலா தாளக்கட்டில் நகரும் பாடல் இது.

‘தீண்டியது நானோ’ எனும் வரியில் குற்றவுணர்வில் பரிதவிக்கும் மனதின் ஊடாட்டத்தைப் பிரதிபலித்திருப்பார் எஸ்.பி.பி. நிரவல் இசையில் கிட்டார், வயலின், புல்லாங்குழல் என்று டூயட் பாடல்களுப் பயன்படுத்தும் இசைக் கருவிகளை வைத்து மென்சோகத்தை இசைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது சரணத்தில் ‘இளமைக் காலம்… உறவுக் கோலம்’ எனும் வரியில், அலைக்கழிக்கப்படும் மனதின் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருப்பார் எஸ்பிபி.

இப்படத்தின் மற்றொரு பாடலான ‘என் காதல் தேவி நீ என்னில் பாதி’ எனும் பாடலை உற்சாகத்தின் உச்சத்தில் நின்று எஸ்பிபி பாடியிருக்க வேண்டும். அத்தனை குதூகலமான பாடல் இது. உண்மையில் 80-களின் ‘ஈவ்டீஸிங் சிச்சுவேஷன்’ பாடல்களில் ஒன்றுதான் இது. எனினும், நிரவல் இசையின் இனிமை அந்த வகைப்பாட்டைத் தாண்டிப் பாடலைத் தூக்கி நிறுத்தும். எஸ்.பி.பி., ஷைலஜா பாடிய ‘நாளெல்லாம் நல்ல நாளே’ எனும் பாடலும் இப்படத்தில் உண்டு.

இப்படத்தின் மிக முக்கியமான பாடல் எஸ். ஜானகி பாடிய ‘வான் மீதிலே அதிகாலை ’. பல ஆண்டுகளுக்கு முன்னர், அதிகாலை நேரத்தில் வானொலியில் கேட்ட பாடல் இது. உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையிலான மங்கலான உலகில் ஒலித்த அந்தப் பாடல் நினைவடுக்கின் ஏதோ ஒரு மூலையில் படிந்து கிடந்தது. 2000-களில் இணையத்தின் வழியாக இந்தப் பாடல் மீண்டும் கேட்கக் கிடைத்தது. இளையராஜாவின் இசையில் தனக்குப் பிடித்த பாடல்களாக, கிட்டார் இசைக் கலைஞர் பிரசன்னா எழுதியிருந்த பட்டியலில் இப்பாடலைக் கண்டதும் மனம் அடைந்த ஒளி வெள்ளத்தை இன்றும் உணர முடிகிறது.

பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் ஜானகியின் ஹம்மிங், விடிகாலை வேளையில் நாணல்கள் அடர்ந்த ஓடைக் கரையில் பாடியபடி செல்லும் பெண்ணை மனதுக்குள் உருவகப்படுத்தும். பெண் குரல்களின் கோரஸுடன் சேர்ந்து ஒலிக்கும் ஜானகியின் ‘பப்பப்பா…’ எனும் ஹம்மிங் தரும் உணர்வு மிக நுட்பமானது. சோகத்தை மறைத்துக்கொண்டு பிறருக்காகப் பாடும்போதும், தன்னையும் மீறி வெளிப்படும் துயரத்தை அதில் அத்தனை அழகாகப் பிரதிபலித்திருப்பார் ஜானகி.

பாடலின் தாளம் மிக வித்தியாசமானது. அடித்துக்கொள்ளும் மனதின் பிரதிபலிப்பாகப் பாடலின் டிரம்ஸ் தாளத்தை வடிவமைத்திருப்பார் இளையராஜா. முகப்பு இசையிலோ நிரவல் இசையிலோ இந்தத் தாளம் ஒலிக்காது. ஜானகி பாடும்போது மட்டும் இந்தச் சிறப்புத் தாளத்தை ஒலிக்க விட்டிருப்பார். வாழ்வில் எதிர்கொள்ளும் சங்கடங்கள், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள், ஏமாற்றங்கள் என்று பல்வேறு தருணங்களின் தொகுப்பாக இப்பாடலின் நிரவல் இசையை உருவாக்கியிருப்பார் இளையராஜா.

குறிப்பாக, இரண்டாவது நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸுடன் இணைந்து ஒலிக்கும் எலெக்ட்ரிக் கிட்டார் மூலம், பூடகமான எத்தனையோ விஷயங்களைச் சிதறவிட்டிருப்பார். பல்லவியில் ‘பாவை எந்தன் நெஞ்சம்தான் பாடும்’ எனும் வரியை ஜானகி சரியாக உச்சரிக்காததுபோல தோன்றும். ஆனால், புலம்பிக்கொண்டிருக்கும் மனதின் மொழி வார்த்தைகளுக்குள் அடங்கக்கூடியதா என்ன?

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காற்றில் கலந்த இசை 33: மூங்கில் வனம் இசைக்கும் கீதம்

‘மகுடி’ படத்தில் மோகன், நளினி
‘மகுடி’ படத்தில் மோகன், நளினி

திரைப்படங்களுக்கான இசையமைப்பு என்பது ஏனைய கலைகள்போலவே பல்வேறு வாழ்வியல் கூறுகளை உள்வாங்கும் திறனின் அடிப்படையில் அமைந்தது. ஒரு பாடலைக் கேட்கும்போதே இது சிறு நகரத்தில் நடக்கும் கதை, இது வயல்வெளி சார்ந்த கிராமத்தில் நடக்கும் கதை, இது மலையடிவார கிராமத்தின் கதை என்று பிரித்தறிய முடிகிறது என்றால், அந்தப் பாடல் இளையராஜாவின் ஆர்மோனியத்திலிருந்து பிறந்தது என்று நிச்சயமாகச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்குத் திரைப்பாடல்களில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்ட இசைப் பின்னல்களை அவர் உருவாக்கியிருக்கிறார். மோகன், நளினி நடிப்பில் 1984-ல் வெளியான ‘மகுடி’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் இதற்கான உதாரணங்களில் அடங்குபவை. (படத்தின் மற்ற இரண்டு பாடல்கள் சுமாரானவை!)

அப்பாவித் தோற்றம், நன்கு முடியப்பட்ட குடுமி என்று நாட்டுப்புறப் பாடகன் வேடம் மோகனுக்கு. வேடம் சற்றும் பொருந்தவில்லை. எனினும், இளையராஜாவின் அருட்கடாட்சம் நிரம்பப் பெற்றதால், புகழ்பெற்ற பாடல்களுடன் தொடர்புடைய நடிகராகத் திகழும் மோகனுக்கு இப்படத்திலும் அழகான பாடல்கள் கிடைத்தன.

காட்டாற்று வெள்ளமாகப் பொங்கி வழியும் கிராமிய இசைக் கலைஞனின் திறமையை ஒழுங்குபடுத்தும் பெண், கர்நாடக இசையை அவனுக்குக் கற்றுக்கொடுப்பாள். மெல்ல மெல்ல அவன் மீதான பரிவு காதலாக மலரும் காட்சியமைப்பு. ‘நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்’ எனும் பாடலை அந்தக் காட்சிக்குத் தந்தார் இளையராஜா. எஸ்பிபி, ஜானகி பாடிய இந்தப் பாடல் பாமர ரசிகனுக்குக் கர்நாடக இசையின் சுவையைப் பகிர்ந்தளித்த படைப்பு. திரைப்பாடல்களில் அபூர்வமாய்ப் பயன்படுத்தப்படும் ரசிகரஞ்சனி ராகத்தின் சாயலில் அமைந்த பாடல் இது.

நீளமான பல்லவியை நாயகி பாட, அதைப் பிரதியெடுத்து நாயகன் பாட என்று பாடல் நீண்டுகொண்டே செல்லும். நிரவல் இசையில் வீணைக்கும், ஒற்றை வயலினுக்கும் இடையில் ஒரு உரையாடல் நிகழும். தொடர்ந்து புல்லாங்குழலுக்கும் வீணைக்கும் இடையில் இசைப் பரிமாற்றம். அதைத் தொடர்ந்து, பரந்த நிலப்பரப்பாக விரியும் வயலின் இசைக்கோவை என்று அற்புதங்களை நிரப்பியிருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில், நதியின் மேற்பரப்பில் நழுவிச் செல்லும் மெல்லிய நீர்ப்படலத்தைப் போன்ற ஒற்றை வயலின் இசையை ஒலிக்கவிடுவார்.

பின்னாட்களில் இளையராஜா வெளியிட்ட ‘ஹவ் டு நேம் இட்’ எனும் ஆல்பத்தின் சில கூறுகளை இப்பாடலில் உணர முடியும்.

இளையராஜா பாடிய ‘கரட்டோரம் மூங்கில் காடு’ பாடல், புல்வெளிகள், ஓடைகள், ஊசியிலைக் காடுகள் நிறைந்த மலைக் கிராமத்தின் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பாடல். கிராமிய இசைக் கலைஞனின் புல்லாங்குழலிலிருந்து வெளிவரும் எளிய, இனிய இசையுடன் பாடல் தொடங்கும். பச்சைப் புல்வெளிகளால் போர்த்தப்பட்ட குன்றுகளில் பட்டு எதிரொலித்து, அந்த நாட்டுப்புறப் பாடகனிடமே வந்து சேரும் கணத்தில், ‘கரட்டோரம் மூங்கில் காடு…’ என்று அவன் பாடத் தொடங்குவான். இயற்கையை நேசித்துக்கொண்டே வழிப்போக்கனைப் போல் அலைந்து திரியும் அந்த கிராமிய இசைக் கலைஞன், கண்ணில் படும் எல்லா விஷயங்களையும் வியந்து பாடுவதுபோன்ற காட்சியமைப்பு. எளிய, அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.

இயற்கைக் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் என்றாலே, ஆர்க்கெஸ்ட்ரேஷனில் பின்னியெடுக்கும் இளையராஜா இப்பாடலில் மிகக் குறைவான இசைக் கருவிகளையே பயன்படுத்தியிருப்பார். எனினும், நகர வாசனையின் தீண்டலுக்கு அப்பாற்பட்ட தொலைதூர கிராமத்தின் அழகை வர்ணிக்கும் பாடல் வரிகளும், இளையராஜாவின் குரலும் பாடலை வேறொரு தளத்துக்கு இட்டுச் செல்லும்.

நிரவல் இசையில் பூச்செடிகளை அசைத்தபடி பரவிச் செல்லும் காற்றைப் போன்ற புல்லாங்குழல் இசையை ஒலிக்கவிடுவார். தடைகளற்ற வெளியில் காற்று அலைந்து திரியும் பகுதியில் அமைக்கப்பட்ட மின்சார ட்ரான்ஸ்பார்மரிலிருந்து வரும் மெல்லிய ரீங்காரம் ஒலிக்கும். அந்த ரீங்காரத்தை ஸ்வீகரித்துக்கொண்டு பாடலைத் தொடர்வான் கிராமத்துக் கலைஞன். ‘தொட்டாப் புடிக்கும் அந்த/ துடிக்காரன் போட்ட கம்பி/ சீமையிலே சேதி சொன்னா… இங்க வந்து பேசுதில்லே’ எனும் வரிகள் ஒரு கிராமத்தானின் வியப்பை இயல்பாகப் பதிவுசெய்யும்.

‘காட்டச் சுத்தி வண்டு பறக்குது…’ எனும் வரிகளைத் தொடர்ந்து பாடலுக்குள் மூழ்கித் திளைக்கும் களிப்பில் ‘உய்யாரா உய்யாரா உய்யார உய்யா’ எனும் வெற்று வார்த்தைகளைப் பாடுவான் பாடகன். வரப்பில் நடந்து செல்லும் பெண்கள் அந்த வார்த்தைகளைப் பாடியபடி கடந்து செல்வதைப் போன்ற பெண் குரல்களின் கோரஸ் ஒன்றை ஒலிக்கவிடுவார் ராஜா. அதைத் தொடர்ந்து எங்கோ குழந்தை அழும் சத்தமும், அதை அதட்டும் அதன் தாயின் குரலும் ஒலிக்கும்.

குழந்தையைத் திட்ட வேண்டாம் என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒரு சிறு தாலாட்டு பாடுவான் நாயகன். ‘… அத்தை அடிச்சா அம்மா இருக்கா, அழுவாதே… அந்த அம்மாவே அடிச்சிப்புட்டான்னு அழுவுறியா… கவலப் படாதடா’ எனும் ஆறுதல் வார்த்தைகளுக்குப் பின்னர், ‘என் பாட்டு இருக்கு அழுவாதே அதக் கேட்டு ஒறங்கு பொழுதோடே’ என்று பாடும்போது இளையராஜாவின் குரலில் இருக்கும் வெம்மை அத்தனை கதகதப்பைத் தரும். அந்தத் தாலாட்டில் மயங்கி உறக்கத்தைத் தழுவுவது அந்தக் குழந்தை மட்டுமல்ல, நாமும்தான்.

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-33-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%A

Link to comment
Share on other sites

  • 3 months later...

காற்றில் கலந்த இசை 34: இளமை வீணையின் புதிய ராகம்!

isai_2662072f.jpg

தமிழ்த் திரையுலகின் அபிமானத்துக்குரிய, மிகுந்த ரசனைக்குரிய ஜோடி கமலும் தேவியும். சொட்டும் காதல் ரசமும் சற்றே விஷமமும் கொண்ட மாமா பையன், அல்லது பக்கத்து வீட்டுப் பையனாகக் கமலையும், அறிவார்த்தம், தன்னம்பிக்கை, தன் அழகின் மீது சற்றே கர்வம் கொண்ட பெண்ணாக தேவியையும் பொருத்திப் பார்க்காத எண்பதுகளின் ரசிகர்கள் இருக்க முடியாது. காதலர்களாகப் பல படங்களில் நடித்திருந்தாலும் தம்பதிகளாக நடித்த படங்கள் மிகக் குறைவுதான்.

அதில் ஒன்றுதான் ‘மீண்டும் கோகிலா’. 1981-ல் ஜி.என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் காதலும் சபலமும் நிறைந்த இளம் வழக்கறிஞராக வருவார் கமல். தழையத் தழைய மடிசார் கட்டியபடி குடும்பத் தலைவியாக தேவி. வெகு இயல்பான நடிப்பில் இரண்டு கலைஞர்களும் மிளிரும் இப்படத்தின் நேர்த்திக்கு, இளையராஜா இசையின் பங்கு மிகப் பெரியது.

பெண் பார்க்கும் வைபவத்தில் கமல் முன் தேவி பாடும் ‘சின்னஞ்சிறு வயதில்’ பாடல், இவ்வுலகில் நிகழ்ந்த இன்பியல் சம்பவங்களில் ஒன்று. வீணையின் குறுக்காக உடலை முன்னோக்கி வளைத்துக்கொண்டு, உதட்டோரப் புன்னகையை உதிர்த்துவிடக் கூடாது என்ற கவனத்துடன் தேவி பாடுவதை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருப்பார் கமல். எஸ்.பி. ஷைலஜா, ஜேசுதாஸ் பாடிய பாடல் இது. மெல்லிய ஹம்மிங்குடன் பாடலைத் தொடங்கும் ஷைலஜா, தேக்கி வைத்திருந்த வெள்ளம்போல் பாடலின் தடங்களில் பாய்ந்து செல்வார். முதல் நிரவல் இசையில் வீணைக்கும் கிட்டாருக்கும் இடையில் சிறு சம்பாஷணை நடக்கும். அதன் முடிவிலிருந்து தொடங்கும் புல்லாங்குழல் காற்றில் அலைந்து வீணை மீது இறகெனக் கீழிறங்க, சரணம் தொடங்கும். சரணத்தின் முடிவில் நாயகி பாடலை மறந்து திணற, ஜேசுதாஸ் அதைத் தொடர்வார். இரண்டாவது நிரவல் இசையில் பாக்கு இடிக்கும் சத்தம், வெற்றிலை மெல்லும் சத்தம் என்று குறும்பு கலந்த சாகசங்களை நிகழ்த்தியிருப்பார் இளையராஜா. கண்ணதாசன் எழுதிய பாடல் இது.

இரண்டாவது சரணத்தில் ஜேசுதாஸ் இணைந்துகொள்வதாக அமைந்த மற்றொரு பாடலும் இப்படத்தில் உண்டு. அது எஸ். ஜானகியுடன் அவர் பாடிய ‘பொன்னான மேனி’ பாடல். பஞ்சு அருணாச்சலம் எழுதிய பாடல். நடிகை தீபாவின் வழக்கறிஞரான கமல், அவர் நடிக்கும் படப்பிடிப்புக் காட்சிகளிலும் உடன் இருப்பார். மழையில் நனைந்தபடி தீபாவும் நடிகர் சுதாகரும் பாடி நடிக்கும் இப்பாடல் காட்சியையும், கண்ணையும் மூக்கையும் சுருக்கி விரித்துப் பார்த்து ரசிப்பார்.

மழைத் துளியின் தெறிப்பைப் போன்ற முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும். குளிர் காற்றுடன் பொழியும் மாலை நேரத்து மழையின் ஈரத்தை உணர்த்தும் நிரவல் இசை, வேடிக்கையான சூழலில் அமைந்த இப்பாடலின் தளத்தை வேறு இடத்துக்குக் கொண்டுசெல்லும். புல்லாங்குழல் இசைக்குப் பின்னர், வயலின் வெள்ளம் ஒன்றை ஒலிக்கவிடுவார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில், மழையில் குளிர்ந்திருக்கும் சாலை வழியாக ஓடிச் செல்லும் உணர்வைத் தரும் இசைக்கோவையைத் தந்திருப்பார்.

இப்படத்தின் மிக அழகான டூயட் பாடல் ‘ராதா… ராதா நீ எங்கே’. எஸ்.பி.பி. ஜானகி பாடிய இப்பாடல் கண்ணதாசனின் வரிகளில் அமைந்தது. தென்னிந்திய பிருந்தாவனம் ஒன்றில், ராதையும் கண்ணனும் தமிழில் பாடுவது போன்ற குறும்புக் கற்பனை. ஆண்-பெண் குரல்களைப் பயன்படுத்துவதில் இளையராஜா மேற்கொண்ட பரிசோதனைகள் பெரும் வெற்றி பெற்றவை. ஜானகி - எஸ்.பி.பி.யின் குரல்களின் கலவையாகத் தொடங்கும் ஹம்மிங் சின்ன உதாரணம். முதல் நிரவல் இசையில், பயணங்களின்போது, நம் பார்வையில் வேகமாகப் பின்னோக்கி நகரும் இயற்கைப் பிரதேசங்களை நினைவுபடுத்தும் வயலின் இசைக்கோவையைத் தொடர்ந்து, நிதானமான தபேலா தாளக்கட்டின் மீது ஓர் ஒற்றை வயலின் ஒலிக்கும். காதலின் நெகிழ்வும் அந்நியோன்யமும் கலந்து உருகும் இசை அது.

தொடர்ந்து கிட்டார் இசை பின் தொடர்ந்து ஓடிவர, களிப்பின் உச்சத்தில் பூந்தோட்டத்தில் ஓடிச் செல்வதுபோன்ற வயலின் இசைக்கோவையை இசைத்திருப்பார் இளையராஜா. மலர்த் தோட்டத்தின் சுகந்தத்தை உணரச் செய்யும் கற்பனை அது. இரண்டாவது நிரவல் இசையில் சுமார் 15 வினாடிகளுக்கு நீளும் கிட்டார் இசையின் பரிவர்த்தனை, நிரவல் இசையின் நுட்பங்களில் இளையராஜா செலுத்தும் ஈடுபாட்டுக்கு எடுத்துக்காட்டு.

இப்படத்தின் மிக முக்கியமான, அதிகம் கவனிக்கப்படாத பாடல் எஸ்.பி.பி. பாடிய ‘ஹே… ஓராயிரம்’. குயிலின் குரலை நகல் செய்யும் பணியை ஆண் குரல் செய்வதுதான் இப்பாடலின் விசேஷம். ‘குகுகுக்குக்.. கூ’ என்று உற்சாகமாப் பாடலைத் தொடங்குவார் எஸ்பிபி. காலைப் பனி நேரத்தில் சிறு நகரம் ஒன்றின் குடியிருப்பிலிருந்து தொடங்கும் சைக்கிள் பயணம்,

மரங்கள் அடர்ந்த தெருக்கள், தொழிற்சாலையின் பின்புறம் அடர்ந்த புதர்கள், புத்துணர்வுடன் விழித்தெழுந்திருக்கும் பூங்காக்களைக் கடந்து செல்வதுபோன்ற உணர்வைத் தரும் பாடல் இது. பரந்துவிரிந்த மைதானத்தின் மீது காலைச் சூரியனின் ஒளி வெள்ளம் பாய்வது போன்ற இசையை, முதல் நிரவல் இசையின் தொடக்கத்தில் ஒலிக்க விடுவார் இளையராஜா. ‘கீழ் வானிலே இளம் சூரியன்’ என்று தொடங்கும் சரணத்துக்கு மெருகு சேர்க்கும் இசை அது. இரண்டாவது நிரவல் இசையில், ஒரு யோகியின் சமநிலையில் முகிழ்த்திருக்கும் இயற்கை, தன்னிச்சையாக இசைப்பதுபோன்ற கிட்டார் இசைத் துணுக்கு ஒலிக்கும். அதைத் தொடர்ந்து இயற்கையின் எல்லையைத் தொட முயலும் ஒளிக்கதிர்களின் வீச்சைப் போன்ற இசை நீளும். அதனூடே ஒலிக்கும் புல்லாங்குழல் தரும் சிலிர்ப்பு, இளையராஜாவின் தனி முத்திரை!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-34-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8004422.ece?ref=relatedNews

 

 

 

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 35: சாகசப் பயணத்தின் பாடல்!

‘நான் போட்ட சவால்’

‘நான் போட்ட சவால்’

அகலமான தொப்பி, இடுப்பு பெல்ட்டில் துப்பாக்கி, முழங்கால் வரை நீளம் கொண்ட பூட்ஸ் அணிந்து குதிரை மீது பவனிவரும் கதாபாத்திரங்கள் கவ்பாய் படங்களில் பிரசித்தம். ‘வெஸ்டெர்ன்’ படங்கள் என்றறியப்படும் இவ்வகைப் படங்கள் தமிழிலும் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. எம். கர்ணன் இயக்கி ஜெய்சங்கர் நடித்த பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

கர்ணனைத் தவிர வேறு சிலரும் இவ்வகைப் படங்களை முயன்றிருக்கிறார்கள். பெரும்பாலும் 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் நடப்பதாகவே ‘வெஸ்டெர்ன்’ கதைகள் அமைக்கப்பட்டன. ஆனால், தமிழில் காலம், இடம், கலாச்சாரம் என்பவற்றையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் கலந்துகட்டி அடித்த ‘கவ்பாய்’ படங்கள்தான் வெளியாகியிருக்கின்றன. ரஜினி நடித்த ‘நான் போட்ட சவால்’ அவற்றில் ஒன்று. புரட்சிதாசன் என்பவர் இயக்கி 1981-ல் வெளியான இப்படம், வெஸ்டெர்ன் படமாகவும் அல்லாமல், சமூகப் படமாகவும் அல்லாமல் ஏனோதானோ என்று எடுக்கப்பட்டது.

தோல்விப் படம்தான். ஆனால், இப்படத்துக்காக இளையராஜா உருவாக்கிய பாடல்கள் படத்தின் தலைப்பை ரசிகர்களின் நினைவில் தேக்கிவைத்திருக்கின்றன.

ஹாலிவுட் மற்றும் இத்தாலி (ஸ்பாகெட்டி!) வெஸ்டெர்ன் படங்களின் இசைவடிவத்துக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்த இசை யமைப்பாளர் என்னியோ மாரிக்கோன். இவர் பங்கேற்ற படங்களில் பின்னணி இசைக்குப் பிரதான இடம் இருந்தது. அவர் உருவாக்கிய ‘தீம் மியூஸிக்’ பல, உலக அளவில் பிரசித்தமானவை. ‘தி குட் தி பேட் அண்ட் தி அக்லி’ படத்தின் டைட்டில் மற்றும் பிரதான தீம் இசையைக் கேட்காத திரைப்பட ரசிகர்களே இருக்க முடியாது.

கிட்டார், விசில், ஆண் குரல்களின் ஹம்மிங், டிரம்ஸ், டிரம்பெட், பான்ஜோ என்று வறண்ட பாலை நிலத்தின் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் இசை அவருடையது. அவரது இசையின் தாக்கம் பலரிடம் உண்டு. ‘நான் போட்ட சவால்’ படத்தில் டி.எல். மகாராஜன் பாடிய ‘நெஞ்சே உன் ஆசை என்ன…’ எனும் பாடல், வெஸ்டெர்ன் இசையின் தாக்கத்தில் உருவானது எனலாம். இப்பாடலை இயக்குநர் புரட்சிதாசனே எழுதியிருந்தார். இலங்கை வானொலியின் பொற்காலத்தில் வாழ்ந்தவர்கள், இப்பாடலைக் கேட்காமல் இருந்திருக்க முடியாது.

உத்வேகம், உற்சாகம், ஆர்ப்பரிப்பு என்று எழுச்சியூட்டும் இசையை இப்பாடலில் வழங்கியிருப்பார் இளையராஜா. டிரம்ஸ் சிம்பல்ஸின் சிலும்பலுடன் சாகசப் பயணத்தைத் தொடங்கும் இப்பாடலின் முகப்பு இசையில், தேவாலய மணி, சாகசங்களுக்குத் தயாரான ஆண் குரல்களின் முரட்டு ஹம்மிங், டிரம்பெட் போன்ற இசைக் கலவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அழுத்தம் நிறைந்த காற்றைக் கிழிக்கும் வீரியக் குரலில் பாடலைத் தொடங்குவார் மகாராஜன். ‘நீ நினைத்தால் ஆகாததென்ன…’ எனும் வரிகளைப் பாடும்போது அவர் குரலில் வைராக்கியம் மிளிரும்.

முதல் நிரவல் இசையில் டிரம்பெட் முழக்கத்துக்குப் பின்னர், கிலுகிலுப்பைகளின் ஒலிக்கு மேலாக வயலின் இசைக்கோவையை உருவாக்கியிருப்பார் ராஜா. அரிசோனா நிலப்பகுதியையும், தமிழகத்தின் சமவெளிகளையும் ஒருசேர நினைவுபடுத்தும் வகையிலான இசை அது. வித்தியாசமான உணர்வைத் தரும் அந்த இசையைத் தொடர்ந்து ஒலிக்கும் ஜலதரங்கமும், புல்லாங்குழலும் இது இந்திய அதாவது, தமிழ் நிலத்தில் நிகழும் பாடல்தான் என்று சொல்லிவிடும்.

வெளுத்து வாங்கும் வெயிலின் நடுவே நம்மைத் தழுவிச் செல்லும் தென்றலின் குளுமையை, அந்தப் புல்லாங்குழல் இசை உணர்த்தும். இரண்டாவது நிரவல் இசையில் ‘ஹா.. ஹூ’ எனும் ஆண் குரல்களின் கோரஸ் இப்பாடலின் ‘வெஸ்டர்ன்’ தன்மைக்கு மேலும் வலுசேர்க்கும். ‘சதர்ன்’ கவ்பாயாகக் குதிரை மீது வரும் ரஜினியின் உடல்மொழி ரசிக்க வைக்கும். ரஜினியின் ‘ஓபனிங்’ பாடல்களில் இதற்குத் தனியிடம் உண்டு.

இப்படத்தில் மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் பாடிய ‘சுகம் சுகமே… தொடத் தொடத் தானே’ பாடல், அதிகம் கவனிக்கப்படாத அற்புதமான பாடல். இயற்கையின் குளுமையைக் கொண்ட பல பாடல்களை மலேசியா வாசுதேவனை மனதில் வைத்தே இளையராஜா உருவாக்கியிருக்க வேண்டும். வாசுதேவனின் குரலில் மழைக்காலப் பருவத்தை நினைவூட்டும் பாடல்களில் இதுவும் ஒன்று.

கருமேகங்கள் சூழ்ந்த பரந்த வெளியில் மழைக்காகக் காத்திருக்கும் தருணத்தை இப்பாடலின் முகப்பு இசை காட்சிப்படுத்தும். நிரவல் இசையில் வழக்கமான ஜாலங்களை நிகழ்த்தியிருப்பார் ராஜா. பேஸ் கிட்டார் கொடி மீது படபடத்து அமரும் பட்டாம்பூச்சியைப் போன்ற மெல்லிய புல்லாங்குழலை ஒலிக்க விடுவார். அதைத் தொடர்ந்து ஒலிக்கும் வயலின் இசைக்கோவையும் அதனூடே சிதறும் ஜலதரங்கமும் மென்மை எனும் உணர்வின் ஒலிவடிவங்கள்.

இரண்டாவது நிரவல் இசையில் காதலின் களிப்புடன் ஒரு கிட்டார் துணுக்கு ஒலிக்கும். இந்தப் படம் இந்தியில் டப் செய்யப்பட்டது எப்போது என்று தெரியவில்லை. 90-களில் இந்தி சேனல் ஒன்றில் இப்பாடலின் இந்தி வடிவத்தைப் பார்க்க முடிந்தது. தமிழ் நிலத்திலிருந்து வந்த இனிமையான அந்தப் படைப்பின் சுவையை எத்தனை வட நாட்டு ரசிகர்கள் உணர்ந்திருப்பார்களோ தெரியவில்லை. உணர்ந்தவர்கள் நிச்சயம் பாக்கியசாலிகள்!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-35-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article8028800.ece?ref=relatedNews

 

 

 

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை - 36: பருவங்களின் கூட்டிசை!

 

mohan_2679094f.jpg

இளையராஜாவின் படைப்பாற்றல் உச்சத்தில் இருந்த சமயத்தில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடிக்கும் பாக்கியம் மோகனுக்கு அதிகமாகவே கிடைத்தது. இன்றும் மோகன் ஹிட்ஸ் என்ற பெயரில் விற்கப்படும் சிடிக்களில் அவரது படத்தைவிடப் பெரிய அளவில் சிரித்துக்கொண்டிருப்பது இளையராஜாதான். தமிழ்த் திரை இசையின் வசந்த காலமான 80-களில் மோகனை நாயகனாக வைத்து ஆர். சுந்தர்ராஜன், கே. ரங்கராஜ் என்று பல இயக்குநர்கள் ‘இனிய கானங்கள் நிறைந்த படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தனர்.

அந்தப் பட்டியலில் இடம்பெறும் முக்கியமான இயக்குநர் மணிவண்ணன். ‘திரில்லர்’, குடும்பக் கதைகள், அரசியல் விமர்சனம் என்று பல்வேறு வகைப் படங்களை இயக்கிய மணிவண்ணன், இறுதிவரை இளையராஜாவின் மீது பெரும் மதிப்பும் அபிமானமும் கொண்டிருந்தார். 1983-ல் அவரது இயக்கத்தில் வெளியான ‘இளமைக் காலங்கள்’ படத்தின் பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. கோவைத் தம்பியின் ‘மதர்லேண்ட் பிக்சர்’ஸின் இரண்டாவது தயாரிப்பு இப்படம்.

இப்படத்தில் எஸ்.பி.பி. ஜானகி பாடிய ‘இசை மேடையில் இன்ப வேளையில்’ பாடல் முகப்பு இசை தரும் சுகந்தம் செழுமையானது. வசந்தத்தை மீட்டும் பெண் குரல்களின் ஹம்மிங்குடன் பாடல் தொடங்கும். ஹம்மிங்கின் மேலடுக்கில் ஜானகியின் அதிரசக் குரல் சிணுங்கும். பள்ளத்தாக்கின் மீது படர்ந்திருக்கும் காற்றில், சிறகை அசைக்காமல் பறந்துகொண்டிருக்கும் பறவையைக் காட்சிப்படுத்தும் வயலின் இசைக் கோவையைத் தொடர்ந்து, ‘இசை மேடையில்…’ என்று பாடத் தொடங்குவார் ஜானகி.

பல்லவியின் சில நொடிகளில் எஸ்.பி.பி.யின் மெல்லிய ஹம்மிங் வந்துபோகும். இளமையின் உற்சாகத்தை உணர்த்தவோ என்னவோ குதிரைக் குளம்பொலியைப் போன்ற தாளக்கட்டை இப்பாடலுக்குத் தந்திருப்பார் இளையராஜா. நிரவல் இசை முழுவதும் வயலின்களின் ராஜாங்கம்தான். முகப்பு இசையில் பயன்படுத்தியதுபோலவே இரு வேறு அடுக்குகளில் ஜானகியின் ஹம்மிங்கையும், பெண் கோரஸ் குரல்களையும் ‘மிக்ஸிங்’ செய்திருப்பார் ராஜா.

மோகன் இளையராஜா கூட்டணியின் முக்கியக் கண்ணி எஸ்.பி.பி.யின் குரல். இந்தப் பாடலில் அதை உறுதியாக நிரூபித்திருப்பார் எஸ்.பி.பி. ‘முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்’ எனும் வரியின் இறுதியில் சின்ன பிர்கா ஒன்றைத் தருவார். ‘கொன்னுட்டான்யா’ என்று தோன்றும். இரண்டாவது நிரவல் இசையில் ‘பாப்பபப பாப்பப’ எனும் ஹம்மிங்கை ஜானகி பாடுவார். அதைத் தொடர்ந்து வரும் ஹம்மிங் ஆண் தன்மையும், பெண்ணின் இனிமையும் கலந்த குரலாக ஒலிக்கும். அது ஜானகியின் ஹம்மிங்கா, எஸ்.பி.பி.யுடையதா என்று குழம்பாமல் அப்பாடலைக் கடந்துவர முடியாது. அந்த அளவுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களைத் தனது இசையில் இளையராஜா புகுத்திய காலம் அது.

இப்படத்தில் ஷைலஜா பாடும் ‘படிப்புல ஜீரோ நடிப்புல ஹீரோ’ பாடல், அக்கால ‘ஆடம் டீஸிங்’ பாடல்களில் ஒன்று என்றாலும், வேகமான அதன் தாளக்கட்டும் ஷைலஜாவின் கூர்மைக் குரலும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.

இப்படத்தில் சுசீலாவுடன் ஷைலஜா இணைந்து பாடும் ‘ராகவனே ரமணா ரகுநாதா’ பாடலில் பஜன் பாடல்களுக்குரிய பக்தி மணமும், காதல் ரசமும் ஒரு புள்ளியில் இணைவதை உணரலாம். நிதானமான தாளக்கட்டில் வீணை, புல்லாங்குழல் ஆகிய இசைக் கருவிகளுடன் தனது வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷன் முத்திரையை இணைத்து இளையராஜா உருவாக்கிய பாடல் இது. இரண்டாவது நிரவல் இசையில் வயலின் இசைக் கோவையின் மேலடுக்கில் ஒலிக்கும் சுசீலாவின் ஆலாபனை, இப்பாடலின் உச்சபட்ச இனிமைத் தருணம்.

இப்படத்தில் ஜேசுதாஸ் பாடிய ‘ஈரமான ரோஜாவே’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. பேஸ் கிட்டாரின் அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்டிருக்கும் காதல் சோக கீதம் இது. தாளக்கட்டில் மிருதங்கத்தின் ஒரு துளி, முதல் நிரவல் இசையில் கனத்த நெஞ்சின் விம்மலைப் போன்ற வயலின் கீற்று, விரக்தியை வெளிப்படுத்தும் விசில் என்று இப்பாடலின் ஒவ்வொரு நொடியிலும் இசை நுணுக்கங்களைப் புதைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் பனியால் உருவான மேகத்தின் நகர்வைப் போன்ற வயலின் இசைக் கோவை, நம்மைத் தழுவியபடி நகர்ந்து செல்வதை உணர முடியும்.

இப்படத்தின் மிக முக்கியமான, அற்புதமான டூயட், ஜேசுதாஸ் சுசீலா பாடிய ‘பாட வந்ததோர் கானம்’ பாடல். சுசீலாவின் ‘லாலலா’வுடன் தொடங்கும் இப்பாடலிலும் தாளக்கட்டில் மிருதங்கத்தைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. பல்வேறு இசைக் கருவிகளின் நடுவே பியானோவைப் பிரதானமாக ஒலிக்கச் செய்த அரிதான பாடல்களில் ஒன்று இது.

பல்லவியிலிருந்தே பியானோவின் உரையாடல் தொடங்கிவிடும். முதல் நிரவல் இசையில் விண்கல்லின் வீழ்ச்சியைப் போன்ற ஒற்றை வயலின் நீட்சி ஒலிக்கும். சரணத்தில், ‘கண்ணில் குளிர்காலம்… நெஞ்சில் வெயில் காலம்’ எனும் வரியின்போது அந்த இரண்டு பருவங்களையும் இசையாலேயே உணர்த்தியிருப்பார் இளையராஜா. பாந்தமான அமைதியுடன் ஜேசுதாஸும், காதலின் பரவசத்தை வெளிப்படுத்தும் குரலில் சுசீலாவும் அற்புதமாகப் பாடியிருப்பார்கள்.

இளையராஜா பாடல்களின் உடனடி வெற்றிக்கு, தனித்த சுவை கொண்ட மெட்டுக்கள் காரணம் என்றால் 30 ஆண்டுகள் தாண்டியும் அவை ரசிகர்களின் மனதில் வியாபித்திருப்பதற்குக் காரணம், வெவ்வேறு மனச் சித்திரங்களை எழுப்பும் அவரது ஆர்க்கெஸ்ட்ரேஷன்தான். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் அவரது ஆர்க்கெஸ்ட்ரேஷன் மேதைமைக்குச் சான்றுகள்.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-36-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/article8053394.ece?ref=relatedNews

 

 

 

 

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 37: இசைக் கலைஞனின் வெற்றிக் கனவுகள்!

nizhalgal_2688387f.jpg
 

பாரதிராஜா இளையராஜா கூட்டணியின் 6-வது படம் ‘நிழல்கள்’. 1980-ல் வெளியான இப்படத்தின் கதை, வசனத்தை மணிவண்ணன் எழுதியிருந்தார். எண்பதுகளின் பிரச்சினைப் பட்டியலில் உச்ச ஸ்தானத்தில் இருந்த ‘வேலையில்லாத் திண்டாட்டம்’தான் படத்தின் முக்கியக் கரு. பல்வேறு காரணங்களுக்காகத் தோல்வியடைந்த படம். ஒரே ஒரு காரணத்துக் காகக் காலத்தைக் கடந்து நிற்கிறது: இசை!

இளையராஜா ரசிகர்களைப் பொறுத்தவரை அவரது பாடல்கள் தொடர்பான தேடல் முடிவற்றது. பாடல் பிரபலமானதாக இருக்கும். ஆனால், அதன் காட்சி வடிவத்தைப் பார்த்திருக்க முடியாது. அதேபோல், படம் வெளியாகியிருந்தாலும் காட்சிப்படுத்தப்படாமல் போன அற்புதமான பாடல்களும் உண்டு. அவற்றில் ஒன்று ‘நிழல்கள்’ படத்துக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்ட ‘தூரத்தில் நான் கண்ட உன் முகம்’ பாடல். நுட்பமான உணர்வு வெளிப்பாட்டுக்கென்றே அவதரித்த எஸ். ஜானகி பாடியது.

ஜானகியின் ஆலாபனையுடன் தொடங்கும் பாடலின் முகப்பு இசையில், சொல்லப்படாத காதலின் வலியை உணர்த்தும் வீணை இசை ஒலிக்கும். மனதுக்குள் பாடிக்கொள்ளும் ரகசியக் குரலில் தொடங்கும் பாடல், மெல்ல உருக்கொண்டு விஸ்வரூபம் எடுக்கும். முதல் நிரவல் இசையில், ஒற்றை வயலின், பெண் குரல்களின் கோரஸ், வீணையின் விகசிப்பு என்று பெண் மனதின் புலம்பல்களைப் பிரதிபலிக்கும் இசைக் கருவிகளைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா.

சரணத்துக்கு முன்னதாக ஒலிக்கும் புல்லாங்குழல், அவநம்பிக்கையில் பிதற்றும் மனதைப் படம்பிடித்துக் காட்டும். இரண்டாவது நிரவல் இசையில், காதல் மனதின் உக்கிரத்தை உணர்த்தும் வயலின் இசைக்கோவையை ஒலிக்கவிடுவார். உக்கிரமான மனது உடைந்து உருகி வழிவதைப் போன்ற ஒற்றை வயலின் அதைத் தொடரும். காதலின் தவிப்பைத் துல்லியமாக வெளிப்படுத்தும் இப்பாடல், பின்னர் ‘சித்தாரா’ எனும் தெலுங்குப் படத்தில் பயன்படுத்தப்பட்டது. ‘வெண்ணெல்லோ கோதாரி’ என்று தொடங்கும் அப்பாடல் எஸ். ஜானகிக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

சருகுகளைச் சுழல வைக்கும் தென்றல், மெலிதான தூறல், மாலை நேரப் பொன்னிற மேகங்களின் நகர்வு, திரளும் மேகங்களின் உரசல்களில் கண்ணைப் பறிக்கும் மின்னல். இந்தக் காட்சியை இசைக் குறிப்புகளால் உணர்த்த முடியுமா? இப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடலின் முகப்பு இசையை ஒரு முறை கேளுங்கள். தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் பாடிய இப்பாடல் மிக நீண்ட முகப்பு இசையைக் கொண்டது. தாளச் சுழற்சியில் மிருதங்கத்தை ஒலிக்க வைத்த மற்றொரு பாடல் இது.

முதல் நிரவல் இசையில் சிணுங்கும் வயலின். வயலின் இசைக்கோவையின் முடிவில் திருமண மேளதாளம் என்று பாடலின் சூழலுக்கேற்ற இசை ஒலிக்கும். இரண்டாவது நிரவல் இசையில் வயலினுக்கும் புல்லாங்குழலுக்கும் இடையிலான உரையாடலை இசைக் குறிப்புகளால் எழுதியிருப்பார் இளையராஜா. உமா ரமணன் பாடும்போது அதை ஆமோதித்து ரசிப்பதுபோல், ‘ம்ம்..’ என்று தீபன் சக்கரவர்த்தியின் ஹம்மிங் ஒலிக்கும். அவர் பாடும்போது உமா ரமணனின் ஹம்மிங் இன்னொரு அடுக்கில் ஒலிக்கும். அபாரமான இசை வளமும், கற்பனைச் செறிவும் இத்திரைப்பாடலுக்குக் காவிய அந்தஸ்தை வழங்கின.

வைரமுத்துவின் முதல் பாடல் என்று அறியப்படும் ‘பொன் மாலைப் பொழுது’ பாடல் இப்படத்தின் சிறப்புகளில் ஒன்று. வாழ்க்கையை ரசிக்கும் இளம் கவிஞனின் பார்வையில், விரியும் நகரக் காட்சிகளின் மாலை நேரத் தொகுப்பு இப்பாடல். கிட்டார், வயலின், புல்லாங்குழல் என்று ரசனையான இசைக் கருவிகளாலான முகப்பு இசையைத் தொடர்ந்து, கம்பீரமும் பாந்தமும் நிறைந்த குரலில் பாடலைத் தொடங்குவார் எஸ்பிபி. ‘வான மகள் நாணுகிறாள்…’ எனும் வரிகளிலேயே தமிழ்த் திரையுலகில் தனது வருகையைப் பதிவுசெய்துகொண்டார் வைரமுத்து.

பல்லவியைத் தொடர்ந்து பொன்னிற அடிவானத்தின் கீழ் இயங்கும் உலகை, பறவைப் பார்வையில் பார்க்கும் உணர்வைத் தரும் வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷன் ஒலிக்கும். இப்பாடலின் நிரவல் இசையில் சற்று நேரமே ஒலிக்கும் எலெக்ட்ரிக் கிட்டார், நினைவுகளின் தொகுப்பைக் கிளறிவிடும். படத்தில் சந்திரசேகரின் பாத்திரம் இசைக் கலைஞன் என்பதாலோ என்னவோ இப்படத்தின் எல்லாப் பாடல்களிலும் ஒற்றை வயலினுக்குப் பிரத்யேக இடமளித்திருப்பார் இளையராஜா.

தன்னை அழுத்திக்கொண்டிருந்த அவமதிப்புகளை, தோல்விகளைத் தகர்த்தெறிந்துவிட்டு வெற்றியை ருசிப்பதாகக் கனவுகாணும் இசைக் கலைஞனின் குதூகலம்தான் எஸ்பிபி பாடிய ‘மடை திறந்து’ பாடல். ஆர்ப்பரித்துப் பொங்கும் புதிய அலையாக ஒலிக்கும் வயலின் இசைப் பிரவாகத்துடன் பாடல் தொடங்கும். ஒவ்வொரு அணுவிலும், நரம்பை முறுக்கேற்றும் இசைத் தெறிப்புகள். வெற்றிக் கனவின் பிரதேசங்களினூடாகப் பயணம் செய்யும் அக்கலைஞனின் மனவோட்டங்களைப் பிரதிபலிக்கும் இசை.

அடிவானச் சூரியனைத் தொட முயல்வதுபோல் நெடுஞ்சாலையில் விரையும் வாகனத்தைக் காட்சிப்படுத்தும் வயலின் இசைக்கோவையைத் தந்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் ஹார்மோனியத்திலிருந்து எலெக்ட்ரிக் கிட்டாருக்குத் தாவும் இசை அவரது முத்திரை. ‘விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்’ எனும் வரிகளை இளையராஜா பாடுவதாக பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். எத்தனை பொருத்தமான காட்சி அது!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-37-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8081521.ece?ref=relatedNews

 

 

 

 

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 38: தேனிசை வெள்ளம்!

இசை நிகழ்ச்சியொன்றில் எஸ். ஜானகி, கிருஷ்ணசந்திரன் இருவரும் பாடுவதை ஒருங்கிணைக்கும் இளையராஜா.
இசை நிகழ்ச்சியொன்றில் எஸ். ஜானகி, கிருஷ்ணசந்திரன் இருவரும் பாடுவதை ஒருங்கிணைக்கும் இளையராஜா.

இளையராஜாவின் இசைக் குழுவில் கிட்டார் இசைக் கலைஞராகவும், பாடலாசிரியராகவும் பணிபுரிந்த கங்கை அமரன், பின்னர் இசையமைப்பாளராகவும் இயக்குநராகவும் வளர்ந்தார். அவர் இயக்கிய முதல் படம் ‘கோழி கூவுது’. கிராமம் அல்லது சிறுநகரங்களுக்குள் நடக்கும் கதைகள், எளிய கதை மாந்தர்களை வைத்துக்கொண்டு ரசிக்கத் தக்க படங்களை இயக்கினார் கங்கை அமரன்.

மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரல் மிக விசேஷமானது. உற்சாகம் கொப்பளிக்கும் ஆர்ப்பாட்டமான பாடல்களை அத்தனை இயல்பாகப் பாடக்கூடியவர் அவர். மற்றொரு கோணமும் உண்டு. வெளித் தோற்றத்தில் இறுக்கமானவர்களாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் அன்பும் ரசனையும் கசிந்துகொண்டே இருக்கும் மனிதர்களுக்கும் பொருத்தமான குரல் அவருடையது. இப்படத்திலும் முரட்டு இளைஞராக வரும் பிரபுவுக்குப் பாடிய ‘பூவே இளைய பூவே’ பாடலில் இறுக்கத்தை உடைத்துக்கொண்டு இனிமையை ரசிக்கும் மனதை வெளிப்படுத்தியிருப்பார்.

பிரபு ஊரை விட்டு வெளியேறி ராணுவத்தில் சேர்ந்துவிடுவார். கிராமத்தில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாத தனது காதலிக்கு (சில்க்), தனது நம்பிக்கைக்குரிய சுரேஷ் மூலம் கடிதம் எழுதுவார். அக்கடித வரிகளிலிருந்தே பாடல் தொடங்கும். பின்னணியில் கிட்டார் ஒலிக்க, ‘தம்பி ராமகிருஷ்ணா(வ்) கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று அவர் சொல்வதைக் கேட்டுப்பாருங்கள். அதிகாரமும் அன்பும் மிளிரும் குரல் அது.

வயல்வெளிகள், ஓடைகள், தோப்புகள் என்று இயற்கையின் ஆசீர்வாதங்கள் நிறைந்த கிராமங்களில் வளர்ந்தவர்களுக்கு இளையராஜாவின் பல பாடல்கள் தங்கள் வாழ்வுடன் ஒன்றிய அம்சங்களாவே இருக்கின்றன. இந்தப் பாடலின் நிரவல் இசையின் கற்பனை வளம் மனதுக்குள் உருவாக்கும் காட்சிகள் அத்தனை பசுமையானவை.

மெல்ல அழைப்பது போன்ற குரலில் பாடலைத் தொடங்குவார் மலேசியா வாசுதேவன். பெருமிதமும், ஏகாந்தமும் நிறைந்த குரலில் ‘எனக்குத் தானே…’ என்று பல்லவியை அவர் முடித்ததும், ‘லலால’என்று பெண் குரல்களின் கோரஸ் ஒலிக்கும். துள்ளலான தாளக்கட்டு, இயற்கையை விரிக்கும் வயலின் இசைக்கோவை, பறவைகளின் இருப்பை உணர்த்தும் புல்லாங்குழல், நீர்நிலைகளைக் காட்சிப்படுத்தும் ஜலதரங்கம் என்று இசைக் கருவிகளாலேயே இயற்கையின் ஓவியத்தை உருவாக்கியிருப்பார் இளையராஜா.

இப்படத்தில் வரும் ‘அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே’ எனும் குழுப் பாடலை சாமுவேல் கிரப், தீபன் சக்கரவர்த்தி, வித்யாதர் ஆகியோர் பாடியிருப்பார்கள். ஊருக்குள் சுற்றித் திரியும் காதல் ஜோடியைப் பற்றி பிரபுவிடம் அரசல் புரசலாகப் புகார் செய்யும் பாடல் இது.

இப்படத்தின் மிக முக்கியமான பாடல் கிருஷ்ணசந்திரன், எஸ். ஜானகி பாடிய ‘ஏதோ மோகம், மலையாளத் திரையுலகில் நடிகராகவும் பாடகராகவும் அறிமுகமானவர் கிருஷ்ணசந்திரன். ஒப்புமை இல்லாத தனித்தக் குரல் கொண்டவர். ‘ஆனந்த மாலை’ (தூரத்துப் பச்சை), ‘பூவாடைக் காற்று’ (கோபுரங்கள் சாய்வதில்லை), ‘அள்ளி வச்ச மல்லிகையே’(இனிமை இதோ இதோ), ‘தென்றல் என்னை முத்தமிட்டது’ (ஒரு ஓடை நதியாகிறது) போன்ற அற்புதமான பாடல்களைப் பாடியவர். ‘ஏதோ மோகம்’ பாடலின் சிறப்பு, மேற்கத்திய செவ்வியல் இசையின் கூறுகளைக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் கிராமியக் காட்சிகளை உருவாக்கும் அதன் தனித்தன்மைதான்.

மெல்ல உருக்கொண்டு திடீரென முகிழ்க்கும் எதிர்பாலின ஈர்ப்பைச் சித்தரிக்கும் பாடல். ஒற்றை வயலின், வயலின் சேர்ந்திசை, புல்லாங்குழல், பேஸ் கிட்டார் என்று இசைக் கருவிகளின் மூலம் ஐந்தரை நிமிடங்கள் கொண்ட ‘மினி’ பொற்காலத்தைப் படைத்திருப்பார் இளையராஜா. தேன் சொட்டும் ரகசியக் குரலில் ‘ஏதோ மோகம்…ஏதோ தாகம்’ என்று பாடலைத் தொடங்குவார் ஜானகி.

கூடவே ஒலிக்கும் ஹம்மிங்கையும் அவர்தான் பாடியிருப்பார். அவர் குரலில் வெவ்வேறு சுருதிகளில் பதிவுசெய்யப்பட்ட ஹம்மிங்குகளை ஒருமித்து ஒலிக்கச் செய்திருப்பார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் நீண்டுகொண்டே செல்லும் ஜலதரங்கத்தினூடே ஒலிக்கும் குழலிசையும், அதைத் தொடர்ந்து வரும் வயலின் இசைக்கோவையும் மனதை மிதக்கச் செய்யும். இரண்டாவது நிரவல் இசையில் வெள்ளத்தைத் திரட்டிக்கொண்டே முன்னேறிச் செல்லும் ஆற்று நீரின் ஓட்டத்தைப் போன்ற வயலின் இசைக்கோவையைத் தந்திருப்பார் ராஜா. நெல் வயல் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட சிம்பொனி இப்பாடல்!

இப்பாடலைப் பாடிய அனுபவம் குறித்து தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கும் கிருஷ்ணசந்திரனைக் கேட்டேன். “பிரசாத் ஸ்டூடியோவின் 70 எம்.எம். தியேட்டரில் இப்பாடலை ஒலிப்பதிவு செய்தார் ராஜா சார். 24 ட்ராக்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளுடன் பாடலை உருவாக்கியிருந்தார். அப்போது இருந்த பிரம்மிப்பு இன்று வரை எனக்கு இருக்கிறது” என்றார் சிலிர்ப்புடன்.

கிருஷ்ணசந்திரனின் குரலில் தமிழில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் பாடல் இதுதான் (ஆனால், ‘பூவாடைக் காற்று’ பாடல்தான் முதலில் வெளியானது!). தமிழில் மிகக் குறைவான பாடல்களைப் பாடியிருந்தாலும் இதுபோன்ற அபூர்வப் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் கிருஷ்ணசந்திரன்!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9

 

 

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை: 39 - கலைநுட்பங்களின் ஒத்திசைவு!

படம் உதவி: ஞானம்
படம் உதவி: ஞானம்

அற்புதங்கள் நிகழும்போது அவற்றுக்கான சமிக்ஞைகள் முன்கூட்டியே தென்படும் என்று நம்புபவர்கள் உண்டு. இளையராஜாவின் வருகை தமிழ் சினிமாவின் அதிசய நிகழ்வு என்றே பார்க்கப்படும் சூழலில் அந்த அற்புதத்துக்கு இணையான அதிசயங்களாகக் கமல், ரஜினி, பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, எஸ்.பி.பி. போன்ற கலைஞர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட சமகாலத்தில் திரையுலகில் இயங்கத் தொடங்கி, 1970-களின் இறுதியில் முழுவீச்சுடன் தத்தமது கலையை முன்வைத்தவர்கள்.

இப்பட்டியலில் இடம்பெறும் பெண்களில் மிக முக்கியமானவர்கள் ஸ்ரீதேவியும் எஸ். ஜானகியும் (இதில் ஜானகியின் காலம் சற்றே முந்தையது என்றாலும் இளையராஜாவின் வருகைக்குப் பின்னர் அவரது புதிய சகாப்தம் தொடங்கியது என்பது குறிப்பிடத் தக்க விஷயம்). இளையராஜாவின் இசையில் ஜானகி பாடி, ஸ்ரீதேவி நடித்திருக்கும் பாடல்களைக் கேட்கும்போதும் சரி, பார்க்கும்போதும் சரி வியக்கத்தக்க ஒத்திசைவு அந்த மூவரிடமும் இருப்பதை உணர முடியும்.

‘கவிக்குயில்’, ‘16 வயதினிலே’ தொடங்கி ‘தனிக்காட்டு ராஜா’ காலம் வரையிலான பாடல்கள் இதை நன்கு உணர்த்தும். அந்த வகையில் அடங்கும் படம் 1980-ல் வெளியான ‘குரு’. ஐ.வி. சசி இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்த இப்படம் 1974-ல் தர்மேந்திரா, ஹேமமாலினி நடிப்பில் வெளியான ‘ஜுக்னு’ எனும் இந்திப் படத்தின் ரீமேக்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘நான் வணங்குகிறேன்’ பாடல் அற்புதமான தாளக்கட்டுடன் அமைந்தது. இந்திய இசையின் பல தாளக் கருவிகள் பிரதானமாக ஒலிக்கும் இப்பாடலைத் தனது குரலினிமை மூலம் வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றார் ஜானகி. குறிப்பாக, தாளத்துடன் பொருந்தாததுபோல் ‘சபையிலே.. தமிழிலே… இசையிலே’ என்று அவர் பாடுவது இளையராஜா ஜானகி கூட்டணியின் நல் முத்திரைகளில் ஒன்று.

முதல் நிரவல் இசையில் பல்வேறு இசைக் கருவிகளுக்கு மத்தியில், சின்ன இடைவெளிக்குப் பின்னர் ஒலிக்கும் ஷெனாய் மிக இனிமையானது. அதேபோல், இரண்டாவது நிரவல் இசையில் அதே மாதிரியான இடத்தில் ஷெனாய்க்குப் பதிலாகப் புல்லாங்குழலை ஒலிக்கவிடுவார் ராஜா. பாடல் காட்சியில் ஸ்ரீதேவியின் நடனமும், முகபாவனைகளும் தனி அழகு!

இப்படத்தில் எஸ்.பி.பி. ஜானகி பாடிய ‘பேரைச் சொல்லவா’பாடல் முகப்பு இசை இல்லாமல் எடுத்த எடுப்பில் ஜானகியின் குரலுடன் தொடங்கும். வளமான இசையால் நிரப்பப்பட்ட, மூன்று சரணங்களைக் கொண்ட இப்பாடலைக் கண்ணை மூடிக்கொண்டு கேட்கும்போது மனதுக்குள் பசுமையான நிலப்பரப்புகள் விரியும். சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் இசை ரயிலில் ஒவ்வொரு இசைக் கருவியாகத் தொற்றிக்கொள்ள, பாடலின் நாலேமுக்கால் நிமிடப் பயணத்தில் வெவ்வேறு விதமான நிலப்பரப்புகளுக்கு நம்மை அழைத்துச் செல்வார் ராஜா.

முதல் நிரவல் இசையில் வானிலிருந்து தரையிலிறங்கும் வயலின் கோவைக்குப் பின்னர் அதில் புல்லாங்குழலும் கிட்டாரும் சேர்ந்துகொள்ளும். இரண்டாவது நிரவல் இசையில் சாக்ஸபோனும் கிளாரினெட்டும் மெலிதாகக் கசியும். மூன்றாவது நிரவல் இசையின் தொடக்கத்தில் ஒலிக்கும் புல்லாங்குழல் மலையடிவாரச் சாலையின் குளுமையை உணர்த்தும். இப்பாடலில் கமல், ஸ்ரீதேவியின் அலட்டிக்கொள்ளாத நடன அசைவுகள் ரசிக்கவைக்கும். அதிகக் குறைகள் இல்லாமல் படமாக்கப்பட்ட இளையராஜா பாடல்களில் ஒன்று இது.

எஸ்.பி.பி. பாடிய ‘ஆடுங்கள் பாடுங்கள்’ பாடல் ‘ஜிங்கிள் பெல்ஸ்’ பாடல் பாணியில் குழந்தைகளின் கொண்டாட்டத்தைக் காட்சிப்படுத்தும் பாடல். விரியும் மத்தாப்புகள், புஸ்வாணங்களுக்குப் பொருத்தமான இசையைத் தந்திருப்பார் இளையராஜா.

ஹெலிகாப்டர்களில் வட்டமடித்தபடி கமலும் ஸ்ரீதேவியும் வயர்லெஸ் வழியாகப் பாடும் ‘பறந்தாலும் விட மாட்டேன்’ பாடல் சுவையான சுவாரஸ்யங்களைக் கொண்டது. ஹெலிகாப்டர் இறக்கைகளின் படபடப்பை உணர்த்தும் டிரம்ஸ் சிம்பல்ஸின் பின்னணியில் தொடங்கும் இப்பாடலில் வானில் மிதக்கவைக்கும் இசையமைப்பை ராஜா வழங்கியிருந்தார். இப்பாடலில் கமலின் குறும்பு கலந்த காதல் உணர்வையும், மனதுக்குள் ரசித்தாலும் இகழ்ச்சியுடன் அதை மறுதலிப்பதுபோல் ஸ்ரீதேவி காட்டும் வெறுப்பையும் எஸ்.பி.பி.யும் ஜானகியும் தங்கள் குரல்களின் வழியே அத்தனை உயிரோட்டமாக வெளிப்படுத்தியிருப்பார்கள்.

வெவ்வேறு உணர்வுகளைப் பாடல் வழியாக வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இப்பாடல் ஓர் உதாரணம். குறிப்பாக, ‘இதயத்திலே இடமிருக்கு’ என்று எஸ்.பி.பி. பாடும்போது, ‘என்ன திமிர்… போ அப்பாலே’ என்று சொல்வதுபோல் ‘ஹ..’ என்று மெலிதாக ஒரு அதட்டு அதட்டுவார் ஜானகி. அக்கணம் அந்தக் குரல் ஸ்ரீதேவியுடையதாகவே தோன்றும்.

இப்படத்தின் மிக முக்கியமான பாடல் ஜானகி பாடிய ‘எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்’. அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் அமைந்த பள்ளத்தாக்கு ஒன்றில், ஏதோ ‘மெக்கன்னாஸ் கோல்டு’ படத்தின் ’லொக்கேஷ’னின் பின்னணியில் ஒலிப்பதுபோல் முற்றிலும் வித்தியாசமான இசையனுபவத்தைத் தரும் பாடல் இது. ஜானகியின் ‘பா..பப்பா’ வகை ஹம்மிங்குளைப் பெரும்பாலும் ஸ்ரீதேவி நடித்த படங்களில்தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார் இளையராஜா.

‘நினைவோ ஒரு பறவை’, ‘இந்த மின்மினிக்கு’, ‘ஆகாய கங்கை’ போன்ற பல பாடல்களில் இதை உணர முடியும். குளிர் காற்றின் சிலிர்ப்பைத் தரும் புல்லாங்குழல் மற்றும் ஜானகியின் ‘பா..பப பாப்பா’வுடன் பாடல் தொடங்கும். போதையில் தன்னிலை மறந்து ஸ்ரீதேவி பாடுவதுபோல் அமைக்கப்பட்ட காட்சி அது. பாடலிலும் இசை தரும் போதை மெல்ல மெல்ல ஆரம்பித்து உச்சத்தை அடையும். இரண்டாவது நிரவல் இசையில் ஸ்பானிய பாணி கிட்டாரைத் தொடர்ந்து வழிந்தோடும் கிளாரினெட்டும் வயலின் கீற்றும் அட்டகாசமாக இருக்கும்.

இப்பாடலை, பழைய திரையரங்கம் ஒன்றில் படம் தொடங்குவதற்கு முன்னர் மெல்லிய இருட்டில் ஒலிக்கக் கேட்டிருப்பவர்கள் உண்மையில் பாக்கியவான்கள்!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.