Jump to content

உலகப் பள்ளிகள் தர வரிசையில் கிழக்காசியா முன்னணி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சில விளக்கங்கள் அளித்த உறவுகளுக்கு நன்றி ...!

 

பிரான்சில் நான் மேற்கூறிய படிப்புகளுக்கு தனித்தனியாக கொன்கூர் ( concour ) என்று ஒன்று நடக்கும். அதில் யுரோப்  முழுதும் இருந்து பலர் பங்கு பற்றுவர்கள் . குறைந்தது 800 க்கு மேல்.  அதில் 150 , 200 இடங்கள்தான் இருக்கும். அதில் தேர்வாகித்தான் அந்தந்தப் படிப்புகளுக்குப் போக வேண்டும். இப்போது அதன் அனுமதிகள் எல்லாம் இன்டர்நேட் மூலமாக நடைபெறுவதால் யாராவது ஒரு மாணவர் குறித்த நேரத்தில் பதிலிடவோ சமூகமளிக்கவோ தவறும் பட்சத்தில் அவரது அந்த வருடமும் ,  படிப்பும்  வீனாகிவிடும். அப்படியே தாமதமாய்க் கிடைத்தாலும் தங்குமிட வசதிகள் எல்லாம் பாடசாலையில் இருந்து தூரமாய்ப் போய்விடும்.

 

இந்நாடுகளில் படித்து வெளிவரும் மாணவர்கள் அந்தந்தத் துறைகளில் அதிவிற்பன்னர்களாக இருக்கினம் பக்கப் பார்வையை மறைத்து ஒரே இலக்கை நோக்கி ஓடும் குதிரைகள்போல். அதைத் தவித்து வேறொரு பொது விசயங்களைக் கேட்டால் அவர்களுக்குச் சொல்லத் தெரிவதில்லை. அதைவிட நல்ல விடயம் தெரியாததைத் தெரியாது என்று மிக நேர்மையாக ஒப்புக் கொள்கின்றார்கள். என்னைப் போல் எல்லாம் தெரியும் என்று சொல்லி மாட்டி க்கொண்டு முழிப்பதில்லை...!

 

உ.ம் : நேபாளத்தில் நிலநடுக்கம் வந்தது தெரியுமா ?  சாப்பிடேக்க  செய்தியில் சொன்னார்கள். ( அது ஒரு 30 செக்கந்தான் செய்தி).

மயூரனுக்கு தூக்காமே தெரியுமா ?  யார் மயூரன் , தெரிஞ்சாக்களா...!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

உ.ம் : நேபாளத்தில் நிலநடுக்கம் வந்தது தெரியுமா ?  சாப்பிடேக்க  செய்தியில் சொன்னார்கள். ( அது ஒரு 30 செக்கந்தான் செய்தி).

மயூரனுக்கு தூக்காமே தெரியுமா ?  யார் மயூரன் , தெரிஞ்சாக்களா...!

 

ம்ம்..... முடியல. :D  :lol: .

வீட்டுக்கு வீடு வாசல்படி. :)

Link to comment
Share on other sites

இசை... மேலே சுவி, குறிப்பிட்டுள்ள மாதிரி,

பாடசாலை தரத்தில், எட்டு வருடங்கள் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக படித்த மாணவரால்... அடுத்த தெருவுக்கு கூட வழி காட்டுவது சிரமம் :D.

 

அந்த ஆங்கிலக் கல்வி, ஆங்கில நாட்டுக்கு சுற்றுலா செல்லும் செல்லும் போது..."தபால் கந்தோர் எங்கை இருக்கு" ,  "அடுத்த ரயில் எப்ப வரும்", "இந்த ஹோட்டேலுக்கு.. எப்படி போவது?" போன்றவற்றை கேட்க மட்டுமே... பிரயோசனப் படும். :lol:

 

 

ஜெர்மனியில் உள்ள எல்லா பாடசாலைகளையும்  அப்படி சொல்லமுடியாது. இங்கு சகல மாநிலங்களிலும் ஒரு சில பாடசாலைகளில் Bilingualer Unterrricht Deutsch-Englisch என்னும் பாடதிட்டம் இருக்கிறது. அந்த பாடசாலையை நாம் தெரிவு செய்து எமது பிள்ளைகளை அங்கு விடலாம். அந்த பாடசாலைகளில் உயிரியல், புவியியல், வேறு சில பாடங்களை கட்டாயம் ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும்.

 

12 ம் வகுப்பில் ஆங்கிலத்துக்கு மாத்திரம் இன்னுமொரு பரீட்சை எழுதவேணும். அந்த பரீட்சையில் சித்தி பெறுவவர்களுக்கு Cambridge Certificate of

Proficiency என்னும் சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் இந்த பரீட்சை பங்கு பெறுவதுக்கு ஒருமுறை 200 euro செலுத்தவேண்டும்.

 

இப்படியான பாடசாலையில் படித்து முடித்து வரும் பிள்ளைகள் ஆங்கிலத்தில் மிகவும் சரளமாக உரையாடவும், எழுதகூடியவர்களாகவும் விளங்குவார்கள். :)

 

இந்த பாடசாலைகளும் அரச பாடசாலைகளே.  தனியார் பாடசாலைகள் அல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேயனாகிறது (என்னதான் படிச்சததாய் சொல்லிக்கொண்டாலும், வார்த்தைப் பிரயோகம், உரையாடல் நாகரீகம் என்னவோ இன்னும் சொறிலங்கன் ரேஞ்ச்சில்தான் இருக்கு) இருக்கட்டும்,

இண்டர் நேசனல் ஸுடன்ஸ் பற்றி இல்லை கேள்வி. கேள்வி ஈயூவில் இருந்து, பள்ளிப் படிப்பின் பின், யூனிக்குப் போக யூகே வரும் தமிழ் மாணாக்கரை பற்றியது.

எனது அவதானத்தில் (not properly researched but anecdotal ) இப்படி வரும் தமிழ் மணாக்கர் பலர் பிந்தங்கிய யூனிகளில் படித்து, மிக்கி மவுஸ் டிகிரிகளையே பெறுகிறனர்.

இது எனது தனிப்பட்ட அவதானிப்பு மட்டுமே. இல்லை என்றால் அதுக்கு ஆதாரம் இருந்தால் காட்டவும், என் கருத்தை மாற்றி கொள்ளுவேன்.

இல்லை உங்கள் தனிப்பட்ட கருத்து என் கருத்துக்கு எதிராய் இருக்கிறதெண்டால், we can agree to disagree.

இல்லாமல் சும்மா யூசிஎல் லின் வெப்சைட்டை பொத்தாம் பொதுவாய் ஆதாரம் என்று காட்டும் பெப்பே எல்லாம் ஜி ஜி பொன்னம்பலம் காலத்து பழைய டிரிக் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவை தூக்கிப் பிடிக்கிறவைக்கு சொறீலங்கா பாசை தான் நல்லா விளங்கும். அதுதான் அதைப் பிரயோகிப்பது இடைக்கிடை.

 

யுனி வெப்சைட் சொல்லும் தகவல் பொதுவில்.. பிரிட்டனில்... உயர் வகுப்பு பல்கலைக்கழகங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் நாடுகள் ரீதியான கல்வித் தகமையை இனங்காட்டத்தான். எத்தனை தமிழ் பிள்ளைகள் அதற்குரிய தகுதியை பெறுகிறார்கள் என்பதை அதனடிப்படையில் நம் கள உறவுகளே தீர்மானிக்கக் கூடியதாகவும் இருக்கும். அதில் இருந்து உங்களின் தனிப்பட்ட குறுகிய அவதானிப்பின் பாலான பொய் என்ன என்பதை மக்களும் யாழ் உறவுகளும் தெளிவாக அடையாளம் காண முடியும்.

 

எத்தனையோ ஆதாரங்கள் உள்ளன. மேலே கூட ஒரு உதாரணம் பதியப்பட்டுள்ளது. ஆனால்.. நிச்சயமாக நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வதற்காக அல்ல.. எங்கள் பதிவு. மக்கள் தவறாக வழிநடத்தப்படும் வகையில் கருத்திடல் அமையக் கூடாது.. மக்களுக்கு ஒரு தெளிவான நிலையை காட்டனும் என்பது தான் எங்களின் நோக்கம். அதுதான் மக்களுக்கு உதவும். ஒரு தனிநபர் அவரின் அடாத்தான கருத்துக்களோடு கூடிய பார்வையை பரிகரித்தால் என்ன விட்டால் என்ன. அதனால் மக்களுக்கு பாதிப்பில்லை. ஆனால் மக்களுக்கு நியத்தை அடையாளம் காட்ட வேண்டியது அவசியம். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய கல்வித் தகமைக்கு ஈடான பிறநாட்டு பள்ளிக்கால கல்வித் தகமைகள்.. விபரம் இங்கு.. :icon_idea:

 

https://www.ucas.com/sites/default/files/2015-international-qualifications.pdf

Link to comment
Share on other sites

 

International student statistics: UK higher education

 

        EU students (non-UK domicile) in HE    

Higher degree (research) Full-time 11,420, Part-Time 2,920 Total 14,340

Higher degree (taught) Full-time 21,845, Part-time 6,385 Total 28,230

Postgraduate other Full-time 1,610, Part-time 2,280 Total 3,885

First degree Full-time 70,555, Part-time 2,545 Total 73,100

Other undergraduate Full-time 1,485, Part-time 4,265 Total 5,745

 

Total non-UK EU Full-time 106,915, Part-Time 18,395 Total 125,300

 
ஐரோப்பாவில் இருந்து இங்கு படிக்க வரும் மாணவர்கள் தொகை விபரம் மேலே ...
ஐரோப்பாவுக்கு வெளியே ஆகக் கூடியது சீனாதான். இரண்டாவது இந்தியா.
http://www.ukcisa.org.uk/Info-for-universities-colleges--schools/Policy-research--statistics/Research--statistics/International-students-in-UK-HE/#

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இதுபற்றிக்கருத்தெழுதிய அனைவரும் எந்த நாடுகளிலிருந்து எந்த நாடுகளைப்பற்ரிக் கருத்தெழுவது எனத் தெரியாத முறையில் எழுதுகிறார்கள் என நினைக்கிறேன்.

 

அடிப்படையில் உலகில் கல்விக்கடைவிரித்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தில் இருக்கின்றது இரண்டாவது மூன்றாவது இடங்களில் அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் உள்ளன. இந்நாடுகளது இலக்குகளே கடந்த காலங்களில் பிரித்தானியக் காலனித்துவம் சார்ந்த நாடுகள் மற்றும் வளர்முக நாடுகளது மாணவர்கள் ஆகியோராவர்.

 

அடிப்படையில் இந்நாடுகள் தங்களது சொந்த மாணவர்களது அறிவுத்திறன் வளர்ச்சிக்காக கல்விக்கட்டமைப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதியளித்தமைக்கான முக்கியகாரணம் பணம் பணம் பணமே.

 

தற்போதைய சூழலில் இங்கிலாந்து தவிர்ந்த ஐரோப்பிய நாடுகளது மாணவர்களது ஆங்கில மொழித்திறன் அப்படியொன்றும் மோசமானதல்ல, இலங்கையிலிருந்து இங்கிலாந்துவரும் மாணவர்களது ஆங்கிலமொழி அறிவுத்திறனுடன் ஒப்புடும்போது உயர் அளவிலேயே உள்ளது.

 

ஏனைய ஐரோப்பிய நாடுகளைப்பற்றி அறிதியிட்டுக்கூறமுடியாதுவிடினும் நான் வாழும் "பின்லாந்து" நாட்டின் பாடசாலை மாணவர்களது ஆங்கில அறிவுத்திறன் எந்தவித மேலதிக பயிற்சிப்பட்டறைகளிலும் பங்குகொள்ளாது அவர்கள் இங்கிலாந்தில் தமது கல்வியைத் தொடர விரும்பில் நேரடியாகவே அவர்களால் கல்வியைத் தொடரமுடியும்.

 

தவிர கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பிலான கல்விபயிலுதலில் எந்தத் தரத்தில் உலக அளவில் நாடுகள் இருக்கின்றன என்பது பற்றிய ஆய்வின் முடிவுகளே மேற்குறிப்பிட்ட விடையம்.

 

இதில் மாணவர்களது வளர்சூழல் அவர்களது கலாச்சாரம் சார் பின்பற்றல்கள் மற்றும் பிறகாரணிகளும் இதன் பின்னணியில் உள்ளது என பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியிலிருந்து வெளிவரும் செய்தித்தாள் ஒன்று பத்தி எழுதியுள்ளது.

 

மேலதிக செய்தியாக, எனக்குத் தெரிந்த ஒருவர் இங்கிலாந்தில் பல்கலைக்கழகம் ஒன்றின் பொறியியலாளர் பட்டப்படிப்புத் தராதரப் பத்திரம் வைத்திருக்கிறார், தற்போது அவர் செய்கின்ற வேலை லண்டன் தெருக்களில் காணப்படும் வங்கிகளது தானியங்கிக் காசுபெறும் இயந்திரங்களைச் திருத்தும்வேலையில் உள்ளார். இதே வேலையைப் பின்லாந்தில் சாதாரண தொழில்நுட்பக்கல்லூரியில் படித்த "ரெக்னிக்கோ" தராதரக் கல்விநிலையில் உள்ளவரே செய்வார்கள்.

 

இங்கிலாந்து தேசத்தில் புலம்பெயர்ந்துவந்தோ அன்றேல் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தோ உயர்கல்வி பெற்றவர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவில் மிகப்பெரும் சாதனைகளைப் படைத்தவர்கள் என எம்மவர்களில் கூறிக்கொள்வதில் அரிதாகவே உள்ளது.

 

சம்பாத்தியத்துக்கான ஒரு வேலை வாய்ப்பு, அழகான வெள்ளைத்தோல் பொண்டாட்டி, மோட்ஹேச்சில ஒரு வீடு இவைகளுடன் தங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ளக்கூடிய கல்வியறிவைப்பெற்றவர்களையே இங்கிலாந்தின் கல்விச்சமூகம் எமக்குக்க்கொடுத்துள்ளது.

 

ஒப்பீட்டளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடப்பிரிவில் பட்டம்பெற்று அரச உத்தியோகம் எடுப்பதற்குச் சமமானது இங்கிலாந்தின் எம்மவர் படிக்கத் தேர்ந்தெடுக்கும் பாடநெறிகள்.

 

எமக்கான நல் வாய்ப்புக்களையெல்லாம் கல்யானக் கனவுக்குள்ளும் மோட்ஹேச் வீடுகளுக்குள்ளும் தொலைத்துவிட்டு நாம் கனியிருக்கக் காய் பறிக்கின்றோம்.

 

கவிஞர் சேரன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய விடையம் எனக்கு இப்போது நினைவில் வருகின்றது, கனடா முழுமைக்கும் இலட்சக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்தபோதிலும் என்ன காரணத்தால் உங்களில் ஒரு உங்கள் சமூகத்தின் மனப்போக்கை அறிந்துகொள்ள அவர்களை சரியான திசையில் இட்டுச்செல்வதற்காகக் கனேடிய அரசநிர்வாகத்துடன் கைகோர்க்க அதனடிப்படையிலான கல்வியாளர்கள் உங்கள் மத்தியில் இல்லையே என ஒரு கனேடிய அதிகாரி விசனப்பட்டதாகக் கூறியுள்ளது இப்போது நினைவில் வருகின்றது.

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

சிங்கப்பூர் பெற்றோர் பிள்ளைகளுக்கு உதவ எப்படித் தயாராகிறார்கள்?

 

150522161033_singapore_schools_640x360_b

 

கல்வியில் சிறந்து விளங்குவது சிங்கப்பூரில் குடும்பங்கள் மத்தியில் பெருமைக்குரிய விஷயம். ஆனால், அந்நாட்டுக் கல்விமுறை பரீட்சைகளிலேயே கூடுதல் அக்கறைகாட்டுவதாக விமர்சனங்கள் உள்ளன.
சிக்கலான வீட்டுப்பாடங்களால் குழம்பிப் போகும் பெற்றோர் அந்த சவாலை எப்படி சமாளிக்கிறார்கள் என்று பார்க்கலாமா?
 
ஒலி வடிவில் கேட்க
 
Link to comment
Share on other sites

சிறு வயதிலேயே கணினிக் கல்வி - காணொளி

 

அடுத்த தலைமுறை நல்ல வேலையை தேடிக்கொள்வதற்கு இனிமேல் வெறுமனே ஆங்கிலமும், கணிதமும், விஞ்ஞானமும் மாத்திரம் கற்றால் போதாது.

 

இப்போது குழந்தைகள் கணினி அறிவும் குறிப்பாக புரோகிராமிங் அறிவும் பெற்றாக வேண்டியுள்ளது.
பள்ளிக்கூட பாடத்திட்டத்தில், முக்கிய பாடமாக இப்போது கணினி இல்லாவிட்டாலும் கூட, ஹொங்ஹாங்கில் உள்ள பெற்றோர் தமது குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே கணினி கற்பிக்க ஆரம்பிக்க தவறுவதில்லை.
 
இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.