Jump to content

புங்குடுதீவில் மாணவி கடத்தப்பட்டு சடலமாக மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சனம் நிக்குது... அடிச்சு மொட்டந்தலைய பிளந்து இருக்கவேணும் :(

Link to comment
Share on other sites

  • Replies 169
  • Created
  • Last Reply


02b1a3f165984fa6bf3c7e785f9afa69
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரக்கத்தனமான வெறியாட்டத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றோம்: - புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியம் - யேர்மனி

[Wednesday 2015-05-20 13:00]
vithya-200515-380-seithy-news.jpg

எமது ஊரின் புதல்வியும் புங்குடுதீவு உயர்தர மாணவியுமான செல்வி வித்தியா சிவலோகநாதனின் படுகொலையைக் கண்டித்து புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியத்தின் தலைவர் செ.செல்வகுமாரன் செயலாளர் துரைகணேசலிங்கம் ஆகியோர் கூட்டாகக் கண்டன அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.

 

புங்குடுதீவு மண்ணில் உதித்து பெற்றவர்களின் எண்ணங்களுடன் தன்சக மாணவிகளுடன் வாழும்காலத்தில் தனது எதிர்காலக் கனவுகளை யதர்சனமாக்க முடியாது ஈவிரக்கமின்றி பாலியல் வன்கொடுமை செய்து அவரைப் படுகொலை செய்த நிகழ்வினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேற்படி வன்கொடுமை புரிந்த கொலைகாரக் காடயைர்க்கு அதியுட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

  

 

கற்புக்கரசி கண்ணகிக்கு காவல் தெய்வமாக விளங்கியது புங்குடுதீவு மண். இனத்தின் விடுதலைக்காய் ஒருமாபெரும் வழிகாட்டியான பெண்ணைப் பெற்று அளித்தது புங்குடு தீவு மண். மொழி பண்பாடு வீரம் சைவம் ஆகியவற்றிற்கு அணிகலனாய் விளங்கும் புங்குடுதீவு மண்ணில் களங்கம் ஏற்பட எம் இனத்தின் பண்பாட்டினை அழிக்கும் பாதகர்களை எல்லாம் பரவ விட்டது எவ்வாறு?

 

கொலை செய்தவர்கள் கொலைசெய்யத் தூண்டியவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவதுடன் நீதியின் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்த புங்குடுதீவு மண்ணின்மைந்தன் சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களையும் பாராட்டுகின்றோம்.

துன்பமுற்ற செல்வி வித்தியா சிவலோக நாதனின் ஆன்மா சாந்தியடைய இறைஞ்சுகின்றோம். காலத்தில் வாழ்வு வாழவென்பதல்ல வாழ்வினை வாழ்ந்து காட்ட காலம் வழிசமைக்க பஞ்சமா பாதகங்கள் மறைந்திட பொன்கொடு தீவுமண் உயர்ந்திடத் திடன்கொள்வோம் .

 

புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியம் - யேர்மனி.

 

20.05.15

http://www.seithy.com/breifNews.php?newsID=132412&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

எனது ஊரைச்சேர்ந்தவர்

மற்றும் உறவு என்ற ரீதியில் 

நானறிந்து

அவர் சட்டத்தரணியாக தொழில் செய்பவர் அல்ல....

 

சட்டக்கல்லூரியில் விரிவுரையாளர்களில் முதலிடத்தில் உள்ளவர்

அத்துடன் இலங்கையில் நீதிபதிகளை நியமிக்கும் குழுவின் தலைவர்.

 

என்னைப்பொறுத்தவரை

இந்த நிமிடம்வரை

லங்காசிறி இணையத்தைவிட

நம்பிக்குரியவராக உள்ளார்.

பார்க்கலாம்...

இச் சம்பவத்தில் விரி தமிழ்மாறன் சுவிஸில் இருந்து சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளியை தப்பி விக்க முயன்றுள்ளார் என்பது தெளிவாக தெரிகின்றது. ஆள் இன்னும் தடுப்புக்காவலில் தான் வைக்கப்பட்டு இருகின்றார்.

சமூகத்தில் மிகவும் மதிக்கப்டுகின்றவர்கள் கூட அரசியலில் குறுக்கு வழியில் செல்லவும் அதற்காக பணம் பெறவும் எவ்வளவு கீழ்த்தரமான விடயங்களிலும் இறங்குவர் என்பதற்கு விரிவி இன்னுமொரு மோசமான உதாரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நம்பிக்கெட்ட காலம் போய்........... யாரை  நம்புவதென்று தெரியவில்லை.  :(
 
அம்பிகைபாலன் என்றொரு சட்டத்தரணியை யாருக்காவது தெரியுமா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நாம் கொஞ்சம் அவதானமாய் இருக்க வேண்டும்.

இதில் பல மர்ம முடிச்சுகள் என் கண்ணுக்குத் தெரியுது.

1) இந்த கலவரத்தை யாழில் சிங்களவர்களுக்கு எதிராக கலவரம் நடப்பதாக ஜாதிக கெல உறுமைய சொல்லி இருக்கிறது. அதை உடனடியாக இல்லை இது ஒரு குற்றவியல் சம்பவத்தோடு தொடர்பு பட்ட கலவரம் என சுமந்திரன் மறுத்துள்ளார் ( இந்த நேரத்தில்தான் தேசிய பட்டியல் எம்பிகளின் அருமை தெரியும், எங்கே சுரேஸ், கஜன்ஸ் அண்ட் சரவணபவன்).

2) போலீஸ் பிராந்திய அத்தியட்சகருடன் வாய்க்கு வாய் பேச கொழும்பிலேயே யோசிப்பார்கள். யாழில் முன்பு நடந்த வல்லுறவிக்கு எல்லாம் இப்படி நடக்கவில்லை. இப்போ போலீஸ் வாகனக்களையே தாக்கி அத்தியட்சரின் முகத்துக்கு நேரா கையைகாட்டி கதைக்க எப்படி முடிகிறது?

3) பேசுபவர்களின் தலை மயிர் வெட்டில் ஒரு மிலிட்டரித் தனம் தெரிகிறது

4) வடக்கில் 18 திகதி புலிக்கொடி ஏற்றப்பட்டதாய் இன்னுமொரு வதந்தி தெற்கில் தூபமிடப்படுகிறது.

5) உண்மையிலே முசுலீம்களை போராட சொல்லி தூண்டியது மனிதாபிமானமா அல்லது வேறேதும் ஒரு சக்தியா?

6) சுவிஸ்சில் இருந்து போனதாக சொல்லப் படுபவர் - ஏன் இவ்வளவு லேட்டாக பிடிபட்டார்?

7) கொலையில் சம்பந்த பட்டிருந்தால் உடனடியாக ஊரை விட்டுக்கிளப்ம்பாமல், ஏன் தனியாளாக மாட்டினார்?

8) விரிவி இதில் ஏன், எப்படி வருகிறார். ஒரு 40 லட்சத்துக்காக விலை போனாரா?

9) கொலையாளிகள் ஏன் சடலத்தை மறைக்க முயலவில்லை. முன்பு ஆமி செய்த போதெல்லாம் கிணத்தில் துக்கிப் போடுவார்கள். கண்டு பிடிக்கவே நாளாகும். இவர்கள் மரத்தில் கட்டிய அகோர நிலையில் விட்டுச் சென்றது - வேஎண்டுமென்ற ஒரு கலவர சூழலை உருவாக்கவா?

10) கொழும்பில் இருந்து வந்தவர் சொல்லும் சாட்சியம் - ஏறுக்கு மாறாய் இருக்கிறதல்லவா?

11) இந்த செய்திக்கு சீன அரண் ஊடகம் யாழில் பெரும்கலகம் என்று ஏன் பில்டப் கொடுக்கிறது?

எனக்கு என்னமோ இது வேறு ஒரு பெரிய எத்தனத்துக்கான முதல் படி போலவும் படுகிறது.

தமிழர் பகுதிகளில் கலவரம் வெடித்தது, சிங்களவர் தாக்கப் படுகிறனர் எனக்கூறி ஒரு 83 மீண்டும் திட்டமிடப் படுகிறதா?

அப்படி ஒரு கலவரத்தின் பிண்ணணியில், இப்போ இருக்கும் அரசை கவிழ்த்து விட்டு - ஒரு ராணுவ அரசை நிறுவும் திட்டமாய் இருக்குமா?

நேற்று மைத்திரி, ரணில், சந்த்ஹிரிகா இரவிராவாய் தேர்தல் சீர்த்திருத்தம் பற்றிக் கதைதிருப்பார்கள் என எனக்குப் படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நாம் கொஞ்சம் அவதானமாய் இருக்க வேண்டும்.

இதில் பல மர்ம முடிச்சுகள் என் கண்ணுக்குத் தெரியுது.

1) இந்த கலவரத்தை யாழில் சிங்களவர்களுக்கு எதிராக கலவரம் நடப்பதாக ஜாதிக கெல உறுமைய சொல்லி இருக்கிறது. அதை உடனடியாக இல்லை இது ஒரு குற்றவியல் சம்பவத்தோடு தொடர்பு பட்ட கலவரம் என சுமந்திரன் மறுத்துள்ளார் ( இந்த நேரத்தில்தான் தேசிய பட்டியல் எம்பிகளின் அருமை தெரியும், எங்கே சுரேஸ், கஜன்ஸ் அண்ட் சரவணபவன்).

2) போலீஸ் பிராந்திய அத்தியட்சகருடன் வாய்க்கு வாய் பேச கொழும்பிலேயே யோசிப்பார்கள். யாழில் முன்பு நடந்த வல்லுறவிக்கு எல்லாம் இப்படி நடக்கவில்லை. இப்போ போலீஸ் வாகனக்களையே தாக்கி அத்தியட்சரின் முகத்துக்கு நேரா கையைகாட்டி கதைக்க எப்படி முடிகிறது?

3) பேசுபவர்களின் தலை மயிர் வெட்டில் ஒரு மிலிட்டரித் தனம் தெரிகிறது

4) வடக்கில் 18 திகதி புலிக்கொடி ஏற்றப்பட்டதாய் இன்னுமொரு வதந்தி தெற்கில் தூபமிடப்படுகிறது.

5) உண்மையிலே முசுலீம்களை போராட சொல்லி தூண்டியது மனிதாபிமானமா அல்லது வேறேதும் ஒரு சக்தியா?

6) சுவிஸ்சில் இருந்து போனதாக சொல்லப் படுபவர் - ஏன் இவ்வளவு லேட்டாக பிடிபட்டார்?

7) கொலையில் சம்பந்த பட்டிருந்தால் உடனடியாக ஊரை விட்டுக்கிளப்ம்பாமல், ஏன் தனியாளாக மாட்டினார்?

8) விரிவி இதில் ஏன், எப்படி வருகிறார். ஒரு 40 லட்சத்துக்காக விலை போனாரா?

9) கொலையாளிகள் ஏன் சடலத்தை மறைக்க முயலவில்லை. முன்பு ஆமி செய்த போதெல்லாம் கிணத்தில் துக்கிப் போடுவார்கள். கண்டு பிடிக்கவே நாளாகும். இவர்கள் மரத்தில் கட்டிய அகோர நிலையில் விட்டுச் சென்றது - வேஎண்டுமென்ற ஒரு கலவர சூழலை உருவாக்கவா?

10) கொழும்பில் இருந்து வந்தவர் சொல்லும் சாட்சியம் - ஏறுக்கு மாறாய் இருக்கிறதல்லவா?

11) இந்த செய்திக்கு சீன அரண் ஊடகம் யாழில் பெரும்கலகம் என்று ஏன் பில்டப் கொடுக்கிறது?

எனக்கு என்னமோ இது வேறு ஒரு பெரிய எத்தனத்துக்கான முதல் படி போலவும் படுகிறது.

தமிழர் பகுதிகளில் கலவரம் வெடித்தது, சிங்களவர் தாக்கப் படுகிறனர் எனக்கூறி ஒரு 83 மீண்டும் திட்டமிடப் படுகிறதா?

அப்படி ஒரு கலவரத்தின் பிண்ணணியில், இப்போ இருக்கும் அரசை கவிழ்த்து விட்டு - ஒரு ராணுவ அரசை நிறுவும் திட்டமாய் இருக்குமா?

நேற்று மைத்திரி, ரணில், சந்த்ஹிரிகா இரவிராவாய் தேர்தல் சீர்த்திருத்தம் பற்றிக் கதைதிருப்பார்கள் என எனக்குப் படவில்லை.

என்னடா எலி கோமனதோடை ஓடுது என்று பார்த்தால் கூட்டணியினரோ தமிழரசுக்கட்சியினரோ அந்த பக்கமே எட்டி பார்க்கவில்லையாமே இதுக்குள்ளை ஜாதிக கெல உறுமையாவையும் கொண்டுவந்து உறும விட்டாச்சு  mr.கோச்சா என்கையா ஆதாரம் ?

பின் கதவால் வந்தவருக்கு அப்படியே ஒரு வெள்ளையடிப்பு .   எனக்கு பார்க்க நீங்களே பிளான் பன்னி எதோ செய்யபோறது போல் உள்ளது பாவம் மக்கள் .

சிங்களவன் கூட உங்கடை ஆட்களே குற்றவாளிகளை தப்ப வைக்கிறது என்கிறான் பாண் பெட்டி பயல்.உள்ள சனமெல்லாம் நந்திகடலில் அஞ்சலி செலுத்த பின்கதவால் வந்தவரும் கொட்டாவி வாயரும் எங்கை போயினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இச் சம்பவத்தில் விரி தமிழ்மாறன் சுவிஸில் இருந்து சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளியை தப்பி விக்க முயன்றுள்ளார் என்பது தெளிவாக தெரிகின்றது. ஆள் இன்னும் தடுப்புக்காவலில் தான் வைக்கப்பட்டு இருகின்றார்.

சமூகத்தில் மிகவும் மதிக்கப்டுகின்றவர்கள் கூட அரசியலில் குறுக்கு வழியில் செல்லவும் அதற்காக பணம் பெறவும் எவ்வளவு கீழ்த்தரமான விடயங்களிலும் இறங்குவர் என்பதற்கு விரிவி இன்னுமொரு மோசமான உதாரணம்.

 

வணக்கம் நிழலி

வணக்கம் உறவுகளே..

 

கிட்டத்தட்ட நிழலியின் முடிவுக்கே நானும் வந்துள்ளேன்

சில பொறுப்புக்களில் இருப்பதால் 

மிகவும்  பொறுப்போடும்

நிதானத்துடனும்  பேசவேண்டியுள்ளது. எழுதவேண்டியுள்ளது.

 

முழுமையான தகவல்களையும் சம்பந்தப்பட்டோரிடமிருந்து நேரடி கேட்டு வருகின்றோம்.

 

சில கேள்விகள் இருக்கின்றன

 

இதே விஜயகலா மகேஸ்வரனிடமும் விரி தமிழ்மாறனிடமும் சட்டத்தை கையிலெடுக்காதீர்கள்

சட்டத்திடம் ஒப்படைத்து

சட்டப்படி அதிக தண்டனை  வாங்கித்தருவோம்

எம்மை நம்புங்கள் என மக்களுக்கு நம்பிக்கையூட்டி பொறுப்பெடுத்துச்செல்லப்பட்ட

மக்களால் குற்றம் சாட்டப்பட்ட நபர்

அடுத்த நாளே எவ்வாறு கொழும்பில் இருந்தார்.....??

 

இதற்கு விஜயகலா மகேஸ்வரனும் விரி தமிழ் மாறனும் உண்மையை மக்களிடம் சொல்லணும்

அதுவே இந்தக்குளப்பங்களும் குளறுபடிகளும் பிரிவுகளும் தீர ஒரேஒரு வழி

இதற்கு கூட்டமைப்பு உட்பட எல்லோரும் ஒரு மொழியில் பேசணும்

மக்களது பக்கம் நின்று

அவர்களது வலியை உணர்ந்து நடக்கணும்

இல்லாது விட்டால்

இன்றையநிலையில் கூட்டமைப்பு தீவகப்பகுதிகளிலிருந்து அந்நியப்பட்டுவிடும்

இது யாருக்கு நன்மையாகும்.....??

 

 

முன்பின் அறிமுகமற்ற ஊர் மக்களுக்கு புதிதானசிலர் ஊருக்குள் புகுந்து வன்முறையிலேயே குறியாக இருக்கும் நபர்கள் யார்??

சிந்தித்து

சூழ்ச்சிகளை இனம் கண்டு உடனடியாக தலைவர்கள் செயற்படவேண்டிய தருணம் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய ஐவருக்கும் மறியல்
d63bfac8737764fe83b692525a67f925.jpg

புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஐவரையும் யூன் மாதம்  முதலாம் திகதி  வரைக்கும்  விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

 
யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கும் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும்  இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த தகவலைத் தெரிவித்தார். 
 
வித்தியாவின் படுகொலையுடன்  சம்பந்தப்பட்ட மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும்  ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 18 ஆம் திகதி  ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதியின்  உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் ஐவரும்  முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
 
குறித்த சந்தேக நபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு நீதவான்  அனுமதி வழங்கியிருந்ததுடன்  எதிர்வரும்  யூன்  முதலாம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும்  உத்தரவிட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=534154044421569243#sthash.NLdF2J9k.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்ஸ்,

ஆதாரம் கேட்டிருந்தீகள். மேலே நான் நடந்ததாய் சொன்ன விடயங்களுக்கு ஆதாரம் இதோ:

ஜாதிக ஹெலவுக்கு சுமந்த்ஹிரன் பதில்:

http://www.dailymirror.lk/73223/not-even-a-hint-of-racial-violence-tna

புலிக்கொடி வதந்திக்கு இது

http://www.dailymirror.lk/73233/ruwan-refutes-allegation-on-hoisting-ltte-flag-in-north

இதை எப்படி மகிந்த புலியோடு தொடர்புபடுத்துறான் என்பதுக்கு இது

http://www.dailymirror.lk/73381/police-should-act-urgently-on-jaffna-incidents-mr

நான் கேட்ட மிகுதி விடயங்கள் என் "சந்தேகத்தின்" பால் பட்ட கேள்விகள். ஆதாரம் இல்லாதபடியால்தான் சந்தேகப் படுகிறேன். புரியுதா?

ஆதாரம் எல்லாம் ஆங்கிலி பீசில கிடக்கு. பிறகு கூகிள் டிரான்சிலேட்டரில் தப்பும் தவறுமா வாச்சிப் போட்டு என்னை குடையாதேங்கோ. இப்பவே சொல்லீட்டன்.

Link to comment
Share on other sites

வித்தியா‬ கொலை குற்றவாளிகள் 10 பேரையும் பகிரங்கமாக தூக்கில் போட வேண்டும்! - நாடாளுமன்றத்தில் விஜயகலா ஆவேசம்

வித்தியாவின் கொலைக்குற்றவாளிகளில் ஒருவரை மக்களிடமிருந்து காப்பாற்றி

சட்டத்தின் முன் நிறுத்தவோம் என உறுதிமொழி வழங்கி சட்டத்தரணி வி.ரி தமிழ்மாறனாலும் பிரதி அமைச்சர் விஜகலா மகேஸ்வரனாலும் கொண்டு செல்லப்பட்ட சுவிசை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர் 

அடுத்தநாளே கொழும்பு தப்பி செல்ல உடந்தையாக இருந்த விடயத்தில் சட்டத்தரணியை கைது செய்ய போராடிய மக்கள் அமைச்சர் விஜகலா மகேஸ்வரனை மறந்துவிட்டனரோ..? அல்லது அமைச்சர் தனது செல்வாக்கால் மக்களிடம் இருந்து தப்பிவிட்டாரா..?

விஜகலாவின் நாடாளுமன்ற உரையை கேட்கும்போது எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது.. ஒன்டும் தெரியாத பாப்பா போட்டுக்கிட்டாளமடி தாப்பா..

Face book

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவி வித்தியா பற்றி அவரது ஆசிரியர் எழுதிய உருக்கமான குறிப்பு

புங்குடுதீவில் காமுகர்களால் கொல்லப்பட்ட மாணவி வித்தியாவின் ஆசிரியர் ஒருவர் எழுதிய குறிப்பு மனதை பிசைவதாக உள்ளது. கல்வியில் சிறந்து விளங்கிய வித்தியாவின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத துஷ்யந்தன் துரைராஜா என்ற ஆசிரியர் தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ள குறிப்பு இது.

வித்யா ................... நினைத்து பார்கிறேன்!

2010 இல், புங்குடுதிவு மஹா வித்யாலயத்தில் எனது வகுப்பிற்கு புதிய மாணவி ஒருவர் வந்திருபதாக நான் வகுப்பினுள் நுழைந்ததும ஏக குரலில் கூறினர் என் வகுப்பு மாணவர்கள் . பார்த்தபோது வகுப்பின் கடைசி வரிசையில் இருந்த அந்த மாணவி வெருட்சிஉடன் எழுந்து நின்றாள்.பெயரை கேட்ட பொது ,"வித்தியா" என்றாள்.

ஆங்கில பாடம் என்றல் வித்தியா என்றே அந்த வகுப்பு மாணவர்கள் கூறும் அளவுக்கு அவளின் திறமை இருந்தது . ஆங்கிலம் மட்டும்மல்ல எல்ல பாடங்களிலும் திறமை காட்டிய அவளுக்கு கணிதம் மட்டும் சவால் விட்டது .அதில் கவனம் எடு என்று எல்லா ஆசிரியர்களுமே கூறும் பொது அவளின் பதில் "சுட்டுபோட்டாலும் வராது சேர் ".

எதிர் கால இலட்சியம் பற்றி ஆங்கிலத்தில் ஒருமுறை நான் எழுத சொன்னபோது தான் ஒரு பத்திரிகை யாளர்க வருவதே நோக்கம் என்ன்று எழுதி இருந்தாள்.உயர் தரத்தில் கூட அந்த துறையை தான் ஒரு பாடமாக அவள் தெரிவு செய்து படித்தாள்.

ஜனாதிபதி செயலணி குழுவின் ஆங்கில பாட இறுவட்டுகள் கொழும்பில் வைத்து வழங்கப்பட போது எம் பாடசாலை தரப்பில் இவளை தெரிவு செய்தபோது ஆங்கிலத்தில் கதைக்க வேண்டி வருமா என்று அப்பாவியாக அவள் கேட்டது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.மஹா வித்தியாலயத்தில் இருந்து நான் இட மாற்றம் பெற்ற பொது அதை ரத்து செய்ய முடியதா என்று ஒரு மகளை போல் அவள் வினவியது இன்னும் மனதை நெருடுகிறது .

வேலணை மத்திய கல்லூரிக்கு ஒரு மாதம் முன்னர் எதோ செமினார் என்று வந்த பொது கூட என்னை கண்ட போது சிரிப்புடன் ஓடி வந்து அளவளாவி அவளின் நன்றி விசுவாசத்தை கூறியது இன்னும் என்னுள் எதிர் ஒலிக்கிறது .

இறப்பு பொதுவானது . ஆனால் இவளின் இறப்பு கொடுரம் அந்த அப்பாவி பிஞ்சுக்கு பொருத்தம் இல்லாதது .

எப்போதும் தலை வலிக்கிறது கண் குத்துது என்று அடிக்கடி கண்ணீர் விடும் அவள் இறுதி நேரத்தில் என்ன அவஸ்தை பட்டிருப்பாள்.. கடவுளே .....

இறுதி சடங்கில் நாம் மழை இல் தோய்ந்த படி சென்றது நல்லதே.. எமது கண்ணீர் வெளி இல் தெரியக் கூடாது... போய் வா மகளே .......

11224479_1628870797356325_46752348574626

 

Link to comment
Share on other sites

வித்தியாவின் படுகொலை தொடர்பாக ஒரு சிங்கள சகோதரி எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு

 

அவர்கள் மன்னம்பேரியை 

பாலியல் பலாத்காரம் செய்து

அவளை உயிருடன் புதைத்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது.

பின்னர் அவர்கள்

ககவத்த பெண்களிடம் வந்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

நான் கஹவத்தையைச் சேர்ந்தவளல்ல.

நுரிவத்த பெண்களிடம் வந்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

நான் நுரிவத்தவில் வாழவில்லை.

பின்னர் அவர்கள்

வடக்கின் மகளீரிடம் வந்தார்கள்

நான் பேசவில்லை

கிருஷாந்தி குமாரசாமி,கோணேஸ்வரி,இசைப்பிரியா

இவர்கள் என் சகோதரிகளல்ல.

பின்னர் அவர்கள்

வேறு தோல் நிறம்கொண்ட

பெண்ணிடம் வந்தார்கள்

கூட்டாய் எட்டுப்பேர்

விக்ரோறியா அலெக்ஸ்சாண்டிராவை

பாலியல் பலாத்காரம் செய்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

அவள் வெளிநாட்டவள் என்பதால்.

அந்தக கோரக் கும்பல்

ரீட்டா ஜானை

பாலியல் பலாத்காரம் செய்தது

அவளது உடல்

பதினைந்துமுறை குத்தப்பட்டு

மொடேரா கடற்கரையில்

வீசப்பட்டது.

நான் பேசவில்லை

ஏனெனில்

அவள் ஒரு இந்தியப் பெண் என்பதால்.

அவள் மாலை வேளை

நகைகள் அணிந்து

கடற்கரையில் நடைப்பயிற்சி செய்து

வினையை தானே தேடிக்கொண்டாள்.

பின்னர் அவர்கள் விஜேராமவில்

பெண் ஒருவரை பலாத்காரம் செய்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

அவள் ஒரு விபச்சாரி என்பதால்.

பின்னரும் அவர்கள்

நூற்றுக்கணக்கான கன்னிகளை

பலாத்காரம் செய்தார்கள்

சம்பையின் மதுவுடன்

அக்குரசவிலும் மொனராகலையிலும்

கொண்டாடினார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

எனக்கு அரசியல்வாதிகளுக்கு பயம்.

பின்னர் அவர்கள்

லோகராணியை

பாலியல் பலாத்காரம் செய்து

புனித தலமொன்றில் நிர்வாணமாய்

உடலை வீசியெறிந்தார்கள்

கும்பலாய் அவர்கள்

சரண்யா செல்வராசாவை

பாலியல் பலாத்காரம் செய்தார்கள்

நான் பேசவில்லை.

இன்று அவர்கள்

வித்தியா சிவலோகநாதனை

பாலியல் பலாத்காரம் செய்தனர்

நான் பேசவில்லை

ஏனெனில்

அவள் தமிழிச்சி

புங்குடு தீவு எனும்

சிறு கிராமத்தவள்.

By :

Shamila Dal

அவர்கள் மன்னம்பேரியை

பாலியல் பலாத்காரம் செய்து

அவளை உயிருடன் புதைத்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது.

 

பின்னர் அவர்கள்

ககவத்த பெண்களிடம் வந்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

நான் கஹவத்தையைச் சேர்ந்தவளல்ல.

 

நுரிவத்த பெண்களிடம் வந்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

நான் நுரிவத்தவில் வாழவில்லை.

 

பின்னர் அவர்கள்

வடக்கின் மகளீரிடம் வந்தார்கள்

நான் பேசவில்லை

கிருஷாந்தி குமாரசாமி,கோணேஸ்வரி,இசைப்பிரியா

இவர்கள் என் சகோதரிகளல்ல.

 

பின்னர் அவர்கள்

வேறு தோல் நிறம்கொண்ட

பெண்ணிடம் வந்தார்கள்

கூட்டாய் எட்டுப்பேர்

விக்ரோறியா அலெக்ஸ்சாண்டிராவை

பாலியல் பலாத்காரம் செய்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

அவள் வெளிநாட்டவள் என்பதால்.

 

அந்தக கோரக் கும்பல்

ரீட்டா ஜானை

பாலியல் பலாத்காரம் செய்தது

அவளது உடல்

பதினைந்துமுறை குத்தப்பட்டு

மொடேரா கடற்கரையில்

வீசப்பட்டது.

நான் பேசவில்லை

ஏனெனில்

அவள் ஒரு இந்தியப் பெண் என்பதால்.

அவள் மாலை வேளை

நகைகள் அணிந்து

கடற்கரையில் நடைப்பயிற்சி செய்து

வினையை தானே தேடிக்கொண்டாள்.

 

பின்னர் அவர்கள் விஜேராமவில்

பெண் ஒருவரை பலாத்காரம் செய்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

அவள் ஒரு விபச்சாரி என்பதால்.

 

பின்னரும் அவர்கள்

நூற்றுக்கணக்கான கன்னிகளை

பலாத்காரம் செய்தார்கள்

சம்பையின் மதுவுடன்

அக்குரசவிலும் மொனராகலையிலும்

கொண்டாடினார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

எனக்கு அரசியல்வாதிகளுக்கு பயம்.

 

பின்னர் அவர்கள்

லோகராணியை

பாலியல் பலாத்காரம் செய்து

புனித தலமொன்றில் நிர்வாணமாய்

உடலை வீசியெறிந்தார்கள்

 

கும்பலாய் அவர்கள்

சரண்யா செல்வராசாவை

பாலியல் பலாத்காரம் செய்தார்கள்

நான் பேசவில்லை.

 

இன்று அவர்கள்

வித்தியா சிவலோகநாதனை

பாலியல் பலாத்காரம் செய்தனர்

நான் பேசவில்லை

ஏனெனில்

அவள் தமிழிச்சி

புங்குடு தீவு எனும்

சிறு கிராமத்தவள்.

By :

Shamila Daluwatte

uwatte

http://kathiravan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F123/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு படுகொலை சம்பவம் தொடர்பில் ஐந்து காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

 

புங்டுதீவு படுகொலை சம்பவம் தொடர்பில் சரியான முறையில் செயற்படவில்லை என்று தெரிவித்து, யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்துறை ஆகிய காவற்துறை நிலையங்களின் ஐந்து அதிகாரிகளின் உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவாண் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தின் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர், காவற்துறை அத்தியட்சகர், உதவி காவற்துறை அத்தியட்சகர், காவற்துறை தலைமையக பரிசோதகர் மற்றும் ஊர்காவற்துறை தலைமையக பரிசோதகர் ஆகியோரே இடமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

புங்குடுதீவு படுகொலை சம்பவம் தொடர்பில் ஐந்து காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

 

புங்டுதீவு படுகொலை சம்பவம் தொடர்பில் சரியான முறையில் செயற்படவில்லை என்று தெரிவித்து, யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்துறை ஆகிய காவற்துறை நிலையங்களின் ஐந்து அதிகாரிகளின் உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவாண் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தின் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர், காவற்துறை அத்தியட்சகர், உதவி காவற்துறை அத்தியட்சகர், காவற்துறை தலைமையக பரிசோதகர் மற்றும் ஊர்காவற்துறை தலைமையக பரிசோதகர் ஆகியோரே இடமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனது.

 

 

இடமாற்றம் என்பது இழைக்கப்பட்ட குற்றத்துக்கு வழங்கப்படும் வெகுமதியா..??!

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன் விசாரிக்கப்பட வேண்டியவர்களே தவிர இடமாற்றி அவர்கள் இன்னும் குற்றம் செய்ய தூண்டக் கூடாது.

 

இவர்களை எல்லாம் பதவியில் இருந்து இடைநிறுத்தி.. முன்னாள் நீதித்துறை சார்ந்தோர் உள்ளடங்கிய.. சுயாதின விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து அதன் முன் ஒரு மாத காலத்துக்குள் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளாக இனம் காணப்படுவோர்.. நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். அல்லாதோர் மீள பணியில் சரியான எச்சரிக்கையோடு இணைக்கப்பட்டு அதன் பின் இடமாற்றத்தை வழங்குவதே.. ஓரளவு நியாயமான தீர்வாக இருக்க முடியும்.. இந்த பொலிஸ் குற்றவாளிகளை தண்டிப்பதில். :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடமாற்றம் என்பது இழைக்கப்பட்ட குற்றத்துக்கு வழங்கப்படும் வெகுமதியா..??!

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன் விசாரிக்கப்பட வேண்டியவர்களே தவிர இடமாற்றி அவர்கள் இன்னும் குற்றம் செய்ய தூண்டக் கூடாது.

 

இவர்களை எல்லாம் பதவியில் இருந்து இடைநிறுத்தி.. முன்னாள் நீதித்துறை சார்ந்தோர் உள்ளடங்கிய.. சுயாதின விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து அதன் முன் ஒரு மாத காலத்துக்குள் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளாக இனம் காணப்படுவோர்.. நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். அல்லாதோர் மீள பணியில் சரியான எச்சரிக்கையோடு இணைக்கப்பட்டு அதன் பின் இடமாற்றத்தை வழங்குவதே.. ஓரளவு நியாயமான தீர்வாக இருக்க முடியும்.. இந்த பொலிஸ் குற்றவாளிகளை தண்டிப்பதில். :icon_idea:

 

 

ஊரிலிருந்து  வந்த செய்திகளின்படி..

வடபகுதியிலுள்ள அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 60 முக்கிய அதிகாரிகள்

(காவல்த்துறை

இராணுவம்

கடற்படை

சிவில் நிர்வாகம்)

புங்குடுதீவுக்கு வந்திருந்தார்கள்.

இவர்களை அழைத்து வந்தவர் விரி தமிழ் மாறன்.

இவர்கள் அனைவரையும் அழைத்து

புங்குடுதீவு மக்கள் அனைவரையும் அழைத்து (விரி தமிழ்மாறனின் வேண்டுகோளுக்கிணங்க மக்களை அழைத்தவர்கள் சர்வோதயத்தினர்)

ஒரு கூட்டம் நடந்தது சர்வோதய மண்டபத்தில்.

கூட்டத்தின் நோக்கம் இனி இவ்வாறான ஒரு நிகழ்வு நடக்காமல் தடுப்பதற்காக புங்குடுதீவில் ஒரு காவல்துறை அலுவலகத்தை (உதவி அல்ல) திறப்பது.

இந்த காரணத்தை சொன்னவரும்

60 முக்கிய அதிகாரிகளை அழைத்து வந்தவரும் விரி தமிழ் மாறனே.

கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு 45 நிமிடங்கள் விரி தமிழ் மாறன் வந்திருந்த  அதிகாரிகளுக்கு விளங்கவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேச அதை மக்களுக்கு அங்குள்ள கணேசு வைத்தியரின் மகன் தமிழில் மொழி பெயர்த்தார்.  45 நிமிட உரை நடந்து கொண்டிருந்தபோது

கூட்டத்திலிருந்த ஒருவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அழைப்பைத்தொடர்ந்து மக்களிடம் விடயம் பரவியது.

விரி தமிழ்மாறனை  நோக்கி மக்கள் நேற்றிரவு உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு போனார் எனக்கேள்வி எழுப்பினர்.

மக்களின் ஆவேசத்தை கண்ட அதிகாரிகளும் பதில் சொல்லுமாறு விரி தமிழ் மாறனை நெருக்கினர்.

ஆனால் அவரது வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவில்லை.

அதனைத்தொடர்ந்து  இவர்மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் கிடடத்தட்ட இவரை பணயம் வைக்கும் முடிவை அவர்களே எடுத்து மக்களுக்கு கையெழுத்திட்ட கடிதத்தையும் கொடுத்தனர்

அதுவரை அந்த மக்கள் (கிட்டத்தட்ட நாலரை மணித்தியாலங்கள்)

அதிகாரிகளின் வாகனங்கள் அசையவிடாது அவற்றின் ரயர்களுக்குள் படுத்துக்கிடந்தனர்.

 

விரி தமிழ் மாறன்

அன்று மூடியவர் இன்றுவரை வாயைத்திறக்கவில்லை...

Link to comment
Share on other sites

தமிழருக்கு ஒரு பாதுகாப்பு இல்லை அதை அவர்கள் இழந்துவிட்டார்கள்.இது தான் யதார்த்தம் மாற்றுக்கருத்தேயில்லை என்கின்றது, இந்த முக நூல் வரைகலையில் உருவான படம்

 

11167688_383191891873421_650944693608073

 

இருப்பவர்கள் இருந்திருந்தால் எமக்கு இப்படியெல்லாம் நடக்குமா ???...இணையத்தில் வெளிவந்த கார்ட்டூன் . 

வரைந்தவர் - யோகேந்திரன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.