Jump to content

இந்து சமயம் - வேதங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேதங்கள்

செம்பரிதி

veda-school.jpg

இதுவரை நாம் இந்திய சமயங்களும் இந்தியாவுக்குரிய சமய மரபுகளும் ‘மனிதன்’ என்பானை மையப்படுத்தும் சிந்தனை முறைமைகளாய் இருப்பதைப் பார்த்தோம்; நடைமுறையில் இந்த சமயங்கள் பல்வேறு சமூக, கலாசார அமைப்புகளுடன் அமைதியான வகையில் இணங்கியிருந்ததையும், இவை தத்தம் வளர்ச்சிக்கு உதவிக் கொண்டதையும் பார்த்தோம்.

இந்த கட்டுரையின் முந்தைய பகுதி ஒன்றில், பிற சமயங்களைப் போல் இந்து சமயத்தில் ஒற்றைப் பெருநூல் என்று எதுவும் அனைத்தைக் காட்டிலும் உயர்ந்த மறைநூலாய் கருதப்படுவதில்லை என்பதை அதன் தனித்துவம் என்று எழுதியிருந்தேன். ஆனால், மனிதனையோ சமூகத்தையோ சமயத்தையோ பேசும் அனைத்து மரபார்ந்த பார்வைகளும் வேதத்தைத் தம் ஆதாரமாய் சுட்டுவதையும் நாம் பார்க்கிறோம்.

அப்படியானால் ‘வேதங்கள்’ என்பவை யாவை? அது ஓர் தனி நூலா அல்லது எண்ணற்ற பிற மறைநூல்களின் தொகுப்பா? இந்து சமயத்தில் பல்வேறு புனித மறைகள் இருக்கின்றன என்று கூறினால், சமய வாழ்வில் அவற்றின் பங்களிப்பு என்ன, அவற்றின் முன்னிலையில் வேதங்களின் இருப்புக்கு என்ன பொருள்?

இந்தியாவின் கலாசார விழுமியங்கள் அனைத்தும் வேதங்களில் உள்ளன என்று சொல்லும் மரபுகளும் மக்கள் குழுக்களும் உண்டு. இவர்களில் சிலர், உலகில் உள்ள அனைத்து கலாசார விழுமியங்களும் வேதத்தின் பாற்பட்டவை என்றும் சொல்கின்றனர். இவர்கள் போக இன்னும் சிலர், வேதங்களை ஏற்றுக்கொள்ளாத எண்ணற்ற மரபுகளும் இந்தியாவில் உண்டு என்று கூறுகின்றன.

வேதங்கள் குறித்த பார்வைகள் யாவை, வேதங்கள் யாவை, அவை எவற்றிற்கு ஆதாரமாகின்றன என்ற கேள்விகளுக்கு பக்கச்சார்பின்றி சுருக்கமான விடையளிக்க கட்டுரையின் இந்தப் பகுதியில் முயற்சிக்கிறேன்.

வேதங்கள் யாவை?

இந்துக்களின் சமயப் புனித நூல்களிலேயே பிரதானமானவை என்று கூறப்படக்கூடிய மறைநூல் தொகுப்புகளே வேதங்கள்.

உலகச் சமய இலக்கியங்கள் அனைத்திடமிருந்தும் தனித்து நிற்பவை வேதங்கள். வேதங்கள் மனிதராலோ, கடவுளாலோ எழுதப்படாதவை என்று இந்து மரபுகள் சொல்கின்றன. வேதங்கள் உலகளாவிய பொதுத்தன்மை கொண்ட விதிகள். அவை, அண்டப் பெருவெளிக்கும் பொருந்துவன, என்றென்றுக்குமான விதிகள். அவற்றுக்கு துவக்கமோ முடிவோ கிடையாது. அவற்றில் மிக அதிக அளவில் மீபொருண்மை பேசப்படுகிறது, பல்வேறு தளங்கள் விவரிக்கப்படுகின்றன, மேலும் அவை இவ்வுலகல்லாத வேற்றுலகுகளைப் பற்றியவை. எனவே அவை, வேறு எந்த சமய நூல்களைப் போலவும் வாசிக்கப்பட முடியாதவை. இவற்றின் தனிப்பெருமை இந்த இயல்புகளால் மட்டும் கிட்டுவதல்ல- இந்து சமயங்களில் உள்ள ஏராளமான புனித நூல்களினிடையே, இவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தாலும் கிட்டுவது அது.

ஆனால், அனைத்து மறைநூல்களையும் போலவே வேதங்கள் குறித்த புரிதலும் மாறுபடுகின்றன. பிற சமயங்களின் மறைநூல்களோடு ஒப்பிட்டால் வேதங்கள் குறித்த புரிதலில் இருக்கும் இரு கூறுத் தன்மை மிகப் பரந்ததாக உள்ளது.

ஒருபுறம், வேதங்கள் புனிதமான ஞான நூல் என்று பெருமைப்படுத்தப்படுகின்றன- மிகப் பெரும் படைப்பூக்க நிலையில் இயற்றப்பட்ட கவிதைகள் என்றும் எண்ணற்ற ரிஷிகளின் வாக்கு என்றும் போற்றப்படுகின்றன. இந்த ரிஷிகள் ஞானத்தால் பிரகாசம் பெற்ற தம் மதியில், அனைத்து தெய்வீக சிருஷ்டிக்கும் ஆதாரம் என்றும், பிரபஞ்ச ரகசியத்தை வெளிப்படுத்துபவை என்றும் போற்றப்படும் மந்திர உருவம் தரித்த வேத நாதங்களை அடைந்து, அவற்றை உலகுக்கு அளித்தவர்கள் என்று போற்றப்படுகின்றனர்.

இதற்கு மாறுபட்ட புரிதலில் வேதங்கள் இன்னும் பண்பாட்டை அடைந்திராத புராதன காலத்தவர்களின் மூடநம்பிக்கைகளும் கற்பனைகளும் மட்டுமே- மிக மேலோட்டமான லாபங்கள், போகங்களில் நாட்டம் கொண்டவை, அறம் சார்ந்த மிகவும் துவக்கநிலைப் புரிதல்களும் சமய வேட்கைகளும் கொண்டவை. இவர்களைப் பொறுத்தவரை, மிகவும் கொண்டாடப்படும் பேரண்ட விவரணைகளும் நுண்மைகளற்ற அரிச்சுவடி நிலைப் பிதற்றல்கள் மட்டுமே.

மேலும், வேதங்களை ஞான நூல்கள் என்று நம்புபவர்களிலும்கூட சிலர், இவற்றில் உள்ளவற்றில் பெரும்பாலான பாடல்கள் லௌகிக சடங்குகளை பேசுபவையே என்கின்றனர்- கர்ம காண்டத்தில் உள்ள சொர்க்கமே வேதங்களின் நோக்கம் என்றும் நுட்பமான ஒழுக்கங்கள் உபநிடதங்களில் மட்டுமே பேசத் துவங்கப்படுகின்றன என்றும் சொல்கின்றனர்.

இது தவிர, 19ஆம் நூற்றாண்டு, 20ம் நூற்றாண்டுகளில் இந்தியா குறித்து ஆய்வுகள் செய்த ஐரோப்பிய சிந்தனையாளர்கள் இந்தியாவின் மூல குடிகளான திராவிடர்களிடமிருந்து வந்தேறி ஆரியர்கள் திருடிக்கொண்ட அறிவுப் பெட்டகமே வேதங்கள் என்ற கருத்தை முன்னிறுத்துகின்றனர்.

அப்படியானால் இந்த மறை நூலின் அடிப்படை கொள்கைகள், அறிவுறுத்தல்கள் என்ன? இது போன்ற புரிதல்களில் எவ்வளவு உண்மை எவ்வளவு பொய் இருக்கிறது?

வேதங்கள்- மனிதனால் எழுதப்படவில்லை

வேதங்கள் “அபௌருஷேயம்”, மனிதனால் தோன்றியவையல்ல, என்பது மரபார்ந்த நம்பிக்கை. “பௌருஷேயம்” என்றால், மனிதனாலானது. வேதங்களை யாரும் எழுதவில்லை என்று நம்பப்படுவதால் அவை “அபௌருஷேயம்” என்றாகும்.

வேதங்கள் சூக்தங்களாக எந்த ரிஷிகளால் வெளிப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறதோ அந்த ரிஷிகளே அவற்றை எழுதியவர்கள் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இதற்கான காரணம், ஒவ்வொரு வேத மந்திரத்தின் முன்னும் ஒரு ரிஷியின் பெயர் சொல்லப்படுகிறது என்பதுதான் – இதைக் கொண்டு குறிப்பிட்ட சூக்தங்களை எழுதியவர்கள் அந்தந்த ரிஷிகள் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கின்றனர்.

இந்த நம்பிக்கையில் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்து சம்பிரதாயங்களில் எங்குமே இந்த ரிஷிகள் சூக்தங்களை எழுதியவர்கள் என்று சொல்லப்படவில்லை- மாறாய், இவர்கள் வேத மந்திரங்களைக் கண்டறிந்தவர்களாகவே நம்பப்படுகின்றனர். எனவேதான் அவர்கள் மந்திர கர்த்தாக்கள் அல்லது உருவாக்கியவர்கள் என்று குறிப்பிடப்படாமல் மந்திர திருஷ்டர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

வேதங்கள்- அண்டத்தின் புற விதிகள்

ஹிந்து தொன்மங்களில் பல புதுமையான தனித்தன்மை கொண்ட கருத்துருவாக்கங்கள் இருக்கின்றன, அவற்றில் இதுவும் ஒன்று: வேதங்கள் அழிவற்ற படைப்பு விதிகளின் தொகுப்பு, ரிஷிகள் அவற்றைக் கண்டறிந்தவர்கள் மட்டுமே. அடிப்படையில் வேதங்கள் ஒலி வடிவங்கள். அனைத்து மறைநூல்களைப் போலவே வேதங்களும் வெளிப்படுத்தப்பட்டவை என்று சொல்லப்பட்டாலும், ரிஷிகள் இந்த வேத வாக்கியங்களைப் பெற தபஸ் மூலம் தங்களுக்குத் தகுதி ஏற்படுத்திக் கொண்டனர்.

வேத ஒலிகள் நித்தியமானவை என்பதால் அவை வேறெந்த இயற்கை ஒலியைப் போலவும் எப்போதும் இருக்கின்றன. நியூட்டன் தன் தர்க்க அறிவைக் கொண்டு புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்து விவரித்ததுபோல், இந்த ஒலிகளைப் பெறத்தக்க வகையில் தங்கள் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டனர். நியூட்டனுக்கு முன்னரே புவி ஈர்ப்பு விசை இருந்ததுபோல், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே அந்த நிலப்பரப்பு இருந்ததுபோல், வேதங்களும் ரிஷிகள் அவற்றை கண்டறிவதற்கு முன்னரே இருந்திருக்கின்றன. இந்த ஒலிகள் அவர்களுக்குப் புலப்பட்டு, அவற்றை வாய்மொழியாய் அடுத்து வரும் தலைமுறையினருக்குக் கொடுத்தார்கள்.

படைப்புத்தொழிலுக்கான இவ்விதிகளைக் கொண்டே பிரம்மன் உலகு படைத்தான் என்று இந்து தொன்மங்கள் கூறுகின்றன. எனவே, இப்பொருளிலும் வேதங்கள் அநாதி, அதாவது, அழிவற்றவை என்று அழைக்கப்படுகின்றன.

வேதங்கள் – ஆதியந்தமற்றவை

பொதுவாக சமய இலக்கியங்களில், கடவுளே ஆதியும் அந்தமும் இல்லாதவனாகச் சொல்லப்படுவது வழக்கம். ஆனால் இந்து சாஸ்திரங்கள் வேதங்கள் துவக்கமும் முடிவுமற்றவை என்று சொல்கின்றன.

இது உண்மையாக இருந்தால் கடவுளோ பரமாத்மாவோ வேதங்களைப் படைத்ததாகச் சொல்ல முடியாது. உண்மையில் இரண்டுமே அநாதி என்பதால் இரண்டுமே எக்காலமும் இருந்தாக வேண்டும்.

அப்படியானால் வேதங்கள் என்பன என்ன, அவை எப்படி தோன்றின? வேதங்களின் நான்கு பகுதிகளும் ஒன்றாய்ச் சேரும்போது அது பரமாத்மனின் சுவாசமாகிறது (நிஹ்ஸ்வாஸிதம்) என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. யாரும் தம் மூச்சை தாமே உற்பத்தி செய்வதில்லை என்பதால், பர்மாத்மனும் தன் நிஹ்சுவாஸிதத்துக்கு உயிரளித்ததாகச் சொல்ல முடியாது. பிரம்மம் ஜடப்பொருள் என்றும் வேதங்களே பிரம்மத்துக்குச் சக்தியளிக்கின்றன என்றும் இந்தியாவில் ஒரு பொதுவழக்கு உண்டு.

இது உண்மையாக இருந்தால் இந்த அண்டத்தைத் தோற்றுவிக்க உதவும் ஒலியும் அதிர்வுகளும் விதிகளும் நம்மால் அளவிட முடியாத அளவு மிகுதியாக இருக்க வேண்டும். வேதங்கள் முடிவற்றவை- அனந்த வை வேத: ரிஷிகளுக்கு வெளிப்பட்டு அவர்களால் பெற்றுத் தரப்பட்டவை ஒரு வரம்புக்குட்பட்டவையாகவே இருந்தாக வேண்டும். எனவே, வேதங்களை முழுமையாக அறிவது சாத்தியமல்ல.

இந்து சமயங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் துவக்க நிலை மாணவர்கள் இந்து தொன்மங்களில் சொல்லப்படும் வேதம் குறித்த இந்தத் தகவலைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

வேதங்களின உலகப்பொதுமையும் ஆற்றலும்

வேதங்கள் என்றுமுள்ள உலகளாவிய விதிகள் எனபதால் அவை உயிருள்ளவை, உயிரற்றவை என்று உலகில் உள்ள அனைத்துக்கும் பொருத்தமானவை. தேசம், நிறம், நம்பிக்கை போன்ற வரையறைகளுக்கும் சமூக அடுக்குத் தொகுப்புகளும் வேதங்களுக்குப் பொருந்தாதவை, எனவே வேதங்கள் மானுடம் அனைத்துக்கும் உரியவை. ஏன், மனிதன், மிருகம், செடி, கற்கள், சூரியன், நட்சத்திரங்கள் என்று இயற்கையில் உள்ளவை அனைத்துக்கும் உரியவை.

வேத மந்திரங்கள் அவற்றை பிரயோகிப்பவர்களுக்கு மட்டும் உதவாமல், சுற்றிலும் உள்ள சூழலில் தாக்கம் ஏற்படுத்தி, காலப்போக்கில் விண்வெளியை ஊடுருவி நிலையான முன்னேற்றம் அளிக்கின்றன என்று இந்து பாரம்பரியங்கள் நம்புகின்றன. மனிதனின் நோய்களைப் போக்கி, விலங்குகள் மற்றும் மரம் செடிகளுக்குச் செறிவூட்டி, சுற்றுச்சூழலில் உள்ள விரும்பத்தகாத, நச்சுத்தன்மை கொண்ட அச்சுறுத்தல்களைப் போக்குகின்றன.

இந்த மந்திரங்களில் கூறப்பட்டுள்ள தர்மத்துக்கு ஏற்ற வாழ்வு வாழ்ந்து, வேதங்களைக் கற்று முறைப்படி பிரயோகித்தால், அது மானுடம் அனைத்துக்கும் மட்டுமின்றி உலகனைத்துக்கும் நன்மை பயக்கும் என்பது இந்து சம்பிரதாயங்களில் நீண்ட காலமாக நிலவிவரும் நம்பிக்கை.

வேதங்கள் – இந்துக்களின் முதன்மை நூல்

உலகெங்குமுள்ள சமயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வளர்ச்சியில் ஒரு பொதுத்தன்மையை அடைந்திருக்கின்றன. அவை அனைத்துக்கும் ஒரே ஒரு புனித நூல் அல்லது மறைநூல்தான் உள்ளது என்பது இந்த ஒற்றுமை. சீக்கியத்தில் புனித நூலையே வழிபடவும் செய்கின்றனர்.

சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட புனித நூல்கள் இருக்கலாம். அவற்றின் தொகுப்பு அந்த சமயத்தின் அதிகார பூர்வமான அல்லது உண்மையான அல்லது புனிதமான நூலாகக் கருதப்படலாம்.

இந்து சமயத்தில் எண்ணற்ற நூல்கள் புனித நூல்களாக நம்பப்படுகின்றன. அவை அனைத்தையும் தொகுத்து ஒரே புனித நூலாக அமைப்பதும் இயலாத காரியம்.

எனவே வேதங்கள்தான் இந்துக்களின் மிக மெய்யானதும், முதன்மையானதுமான நூலாக இருக்கின்றன. எண்ணற்ற புனித நூல்கள் இருப்பினும், எவரும் தமக்குரிய நூலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றாலும், வேதங்களே இந்து தர்ம-த்தின் மையத்தைக் கட்டமைக்கின்றன.

உதாரணத்துக்கு, ஒருவர் பகவத் கீதையையோ ராமாயணத்தையோ அல்லது ஒரு ரிஷியோ ஞானியோ எழுதிய ஒரு நூலை மிக உயர்ந்ததாகக் கருதி அதன் வழிநடக்கலாம். ஆனால் வேதங்களே அறுதியான நூலாக இருக்கின்றன.

இந்து சமயத்தின் பிற புனித, மறை நூல்களுக்கு ஆதாரமாக அமையும் கட்டமைப்பை வேதங்களே அளிக்கின்றன. மிகவும் எளிய இந்து மரபின்படி, வேதங்களைப் புரிந்து கொள்ளவும், அவற்றில் ஏற்படும் ஐயங்களுக்கு விளக்கம் காணவும் உதவும் துணை நூல்களாகவே பிற புனித நூல்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன.

ஆனால் சில மரபுகள் குலவழக்கப்படி இயங்குபவை, அவற்றுக்கு வேதங்களுடன் தொடர்பில்லை.

இந்து சிந்தனையின்படி வேதங்களை ஆதார நம்பிக்கை நூல்களாக ஏற்றுக்கொள்ளும் மரபுகள் ஆஸ்திக சம்பிரதாயங்கள் என்றும், வேதங்களின் அறுதித்தன்மையை நிராகரிப்பவை நாத்திக சம்பிரதாயங்கள் என்றும் கூறப்படுகின்றன. இன்று இறை நம்பிக்கை ஆத்திகம் என்றும் இறை மறுப்பு நாத்திகம் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் நாத்திக சிந்தனைகள் பலவும் ஆத்திக சம்பிரதாயங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன, அவற்றைப் பின்னர் வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.

நான்மறை நூல்கள்

மஹரிஷி வேத வ்யாஸர், பலகோடி மக்களின் நன்மையை உத்தேசித்தும், வேதங்களைக் காத்து இரட்சிக்கவும், அவற்றை நான்கு பகுதிகளாகத் தொகுத்து முறைப்படுத்தினார்- கிளை என்று பொருள்படும் சாகை என்ற பிரயோக முறைக்கேற்ப இந்தத் தொகுப்பு அமைக்கப்பட்டது.

நான்மறை நூல்கள் என்று அழைக்கப்படுபவை இவை-

1.ரிக் வேதம்,

2.யஜூர் வேதம்,

3.சாம வேதம்,

4.அதர்வ வேதம்.

ஒவ்வொரு வேதமும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டிருக்கின்றன-

1.சம்ஹிதை,

2.பிராஹ்மணம்,

3.ஆரண்யகம்.

சம்ஹிதையில் மந்திரங்களும் துதிகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சம்ஹிதை என்றால் தொகுத்து அடுக்கப்பட்டவை என்று பொருள்படும். வேதங்களின் பிரதானப் பகுதி சம்ஹிதையில் உள்ளது. பிராஹ்மணங்கள் வைதீக சடங்குகளை விவரிக்கின்றன, ஆரண்யகம் மந்திரங்களின் உட்பொருளை விளக்குகின்றன. இவை தவிர, ஆரண்யகங்களின் முடிவில் உபநிடதங்கள் உள்ளன.

சம்ஹிதை மரம் என்றால், பிராஹ்மணங்கள் மலர்கள் என்றும் ,ஆரண்யகம் காய்கள் என்றும், உபநிடதங்கள் பழுத்த கனிகள் என்றும் கூறுவதுண்டு.

ரிக் என்றால் துதி. யஜூர் என்றால் வழிபாடு. சாமம் என்றால் அமைதி. அதர்வம் என்றால் ஆளுமையின் சமநிலை.

வேதங்களின் எப்பகுதியை எடுத்து யார் வேண்டுமானாலும் பிற புனித நூல்களை வாசிப்பதுபோல் வாசிக்கலாம் என்றாலும், அறிவகங்கள் என்று கூறப்படும் வித்யாஸ்தானங்கள் அனைத்தையும் முறைப்படி வாசிக்காமல் வேதங்களை வாசிப்பது முழுமையான புரிதலை அளிக்காது.

வேத மந்திரங்களின் ஞானம் அனைத்தையும் கொண்டுள்ள வித்யாஸ்தானங்கள் இவை- நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள் (வேதங்களின் துணை நூல்கள்), மீமாம்சங்கள் (வேதத்தின் தாத்பர்யத்தைச் சரியாக புரிந்து கொள்வதற்கான முறைகள்), நியாயம் (தர்க்கம்), புராணங்கள் (புராணங்கள் பல விஷயங்களுடன் அண்டசராசரங்களின் ஒழுங்குகளையும் பற்றிக் கூடப் பேசுகின்றன), தர்ம சாஸ்திரங்கள்(நன்னெறியுடன் வாழ்வதற்கான வழி முறைகள்) , உப வேதங்கள் – வேதாங்கங்களின் துணை நூல்கள்- ஆயுர் வேதம் (ஆரோக்கிய வாழ்வுக்கான அறிவியல்) , அர்த்த சாஸ்திரம் (அரசியல் அறிவியல்), தனுர் வேதம் (ஆயுத அறிவியல்), கந்தர்வ வேதம் (கலையறிவு) முதலியவை. வேதங்களைப் புரிந்து கொள்ள இந்த அறிவியல் சார்ந்த துணை நூல்கள் செழுமைக்கு உதவி, முழுமையான வேதக்கல்வி அளிக்கின்றன.

வேதங்கள் – தர்மங்களின் ஆதாரம்

வேதங்கள் தர்மங்களின் ஆதாரம் என்று பலரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவும் மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கின்றனர். ஆனால் அதற்குரிய கவனமோ மதிப்போ மிகக் குறைவாகவே அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம், வேதங்கள் நீதி நூல்களல்ல என்ற நம்பிக்கை. மற்றொரு காரணம் அன்றாட தர்மத்துக்கு உரிய நெறிகள் வேதங்களில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன என்பதும் அவற்றைக் கோர்வையாகப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளதென்பதும்தான்.

அன்றாட நீதிகள் வேதங்களில எங்கும் விரவிக்கிடக்கின்றன என்பது உண்மையே எனினும் தர்மம் குறித்த போதனைகள் அதில் இல்லை என்பது தவறு. மிக முக்கியமான சூத்ரகாரர்களும் அதன்பின் வந்த நீதிநூல்கள் எழுதியவர்களும் வேதங்களையே ஆதாரம் காட்டுகின்றனர், தங்கள் நீதி சூத்திரங்களுக்கு வேத மந்திரங்களையே மேற்கோள் காட்டுகின்றனர்.

இடைக்கால மற்றும் நவீன சடங்குகளும் பழக்க வழக்கங்களும் வேதங்களில் சுட்டப்படுகின்றன. இன்றும் உள்ள திருமண முறை, மரணச் சடங்குகள், வேள்வி மற்றும் பல சமூக நடைமுறைகளின் ஆதாரம் வேதமே. லௌகீகச் சடங்குகளிலும் வேத மந்திரங்கள் ஒலிக்கின்றன.

தர்ம சாஸ்திரங்களின் மைய நூலான கல்பம் ஆறு வேதாங்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்பதே தர்மத்தின் அடி ஆதாரமாக வேதங்கள் இருப்பதைக் காட்டுகிறது..

வேதங்கள் முதிரா சமூகத்து வழிபாடா?

வேதங்களை மேலாகப் பார்த்தாலும், அவற்றின் அரைகுறை மொழிபெயர்ப்புகளை வாசித்தாலும்கூட அவை தெய்வீக உந்துதல் கொண்டவை என்பதையும், உன்னதச் சிந்தனைகளையும், ஆழமான கருத்துகளையும், மேன்மையைக் கொணரும் நீதிகளையும், நுட்பமானதும் விரிவானதுமான உளவியல் உண்மைகளையும் கொண்டவை என்பதையும், மற்றும் பேரதிசயத்தைமான, மகோன்னதமான பேரண்டப் பார்வையை விரிப்பன என்பதையும் உணர்வோம்.

வேதங்களில் சிறு பகுதியிலும் நாம் மனிதத்தின் சக்திக்கு மீறிய உண்மைகளைப் பேசும் கவிதைகளைக் காணலாம். வேதங்கள் எங்கும் அவை நிறைந்திருக்கின்றன- அவற்றுக்கு இடையே சற்றே ஒழுங்காக தொகுக்கப்பட்ட புறவழிபாட்டு முறைகள் இயற்கையையும் தெய்வங்களையும் போற்றிப் பாடப்பட்டிருக்கின்றன.

வேறு பலரைப் போலவே ஐரோப்பியர்கள் வேதங்களை லௌகீக சடங்கு விவரணைகள் என்று தவறாகப் புரிந்து கொண்டனர் என்பதை வேதங்களை கவனமாக வாசிக்கும் எவரும் உணர்ந்து கொள்ளலாம்.. வேதங்கள் ஆன்மிக உண்மைகளை குறியீட்டு மொழியில் கூறுகின்றன, அவை ஒன்று போல் மற்றொன்றில்லை.

புலப்படும் யதார்த்த உண்மைகளுக்கு அப்பால் உள்ளதை ஒவ்வொரு குறியீடும் பேசுகிறது என்பது மட்டுமல்லாமல் சாதகருள் உள்ள உண்மையை அறியும் பாதை குறித்த குறிப்புகளும் தருகிறது. தனியாகப் பார்த்தால் இந்தக் குறியீடுகள் மற்றும் குறிப்புகளை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது. எனினும் இவை பல புரிதல்களுக்கு காரணமாயிருந்திருக்கின்றன. இந்த உண்மைகள் மறைபொருள் சுட்டலாக பாடப்பட்டிருக்கின்றன. தகுதியும் சிரத்தையும் உள்ள சாதகர்கள் மட்டுமே இவற்றின் பொருளுணரும் வண்ணம் இவை பாதுகாப்பாக எதிர்கால சந்ததியினருக்கு கைமாற்றி அளிக்கப்பட்டு வருகின்றன.

இதே போல், வேதங்களில் ஆன்மீக உண்மைகள் ஞான காண்டம் என்று சொல்லப்படும் உபநிடதங்களில் மட்டுமே பேசப்படுகின்றன என்பதும் தவறு. வேதமெங்கும் ஞானம்தான்.

பின்னர் வரும் உபநிடதத்தில் உள்ள உண்மைகளும் ஞான தரிசனங்களும் முன்னரே கர்ம காண்டத்தில் சுருக்கமான சூத்ரங்களாகச் சொல்லப்பட்டு விடுகின்றன. வெற்றிடத்தில் இருந்து எதுவும் தோன்றாது- உபநிடதங்களின் அற்புதமான ஞான வாக்கியங்கள் அனைத்தும் கர்ம காண்டத்திலிருந்தே தோன்றுகின்றன..

பல முக்கியமான உபநிடதங்களும் கர்ம காண்டத்தின் மையத்தில் உள்ளன என்பதே இவ்விரண்டும் வேறல்ல என்பதையும் கர்ம காண்டத்தில் ஞான காண்டமும் அடக்கம் என்பதையும் உணர்த்துகிறது.

அபகரிக்கப்பட்ட நூலா?

இந்திய மண்ணுக்குரிய திராவிடர்களைப் படையெடுத்த ஆரியர்கள் வேதங்களை அபகரித்தனர் என்ற குற்றச்சாட்டு வெறும் கற்பனையே. இதற்கான ஆதாரம் இலக்கியத்திலோ அகழ்வாராய்ச்சியிலோ அல்லது வேறெந்த வகையிலோ இதுவரை கிடைக்கவில்லை. இது உண்மையெனில் வெற்றி பெற்ற ஆரியர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடி பல பாடல்கள் பாடியிருப்பார், அல்லது தோல்வியுற்ற திராவிடர்கள் கசப்பாகவோ கோபமாகவோ அதை எங்கேனும் பதிவு செய்திருப்பர். இது விஷயத்தில் பிழைபுரிதலில் பிறந்த உளறலைத் தவிர வேறில்லை

ஆதார நூல்கள்

•Sarvepalli Radhakrishnan and Charles A. Moore (Eds.). A Sourcebook in Indian Philosophy, 1957, Princeton University Press.

•A.B. Keith. The Religion and Philosophy of the Veda and Upanishads, 1925, Cambridge, Mass.: Harvard Oriental Series.

•What is Hinduism?, 2007, Honolulu: Himalaya Academy

•P.V. Kane. History of Dharma Shastras, 5 vols, 1962-1975, Pune: Bhandarkar Oriental Research Institute.

•Sri Chandrasekharendra Saraswati. Hindu Dharma: The Universal Way of Life, 2008, Mumbai: Bharatiya Vidya Bhavan.

.- See more at: http://solvanam.com/?p=39884#sthash.35KCWZZv.dpuf

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வேதாங்கங்களும் உபவேதங்களும்

செம்பரிதி

சென்ற அத்தியாயத்தில் வேதங்களின் இயல்பையும் நோக்கத்தையும் கண்டோம். வேதங்கள் எங்கும் பொருந்தக்கூடிய பொதுவிதிகள் என்றும் எல்லா இடங்களுக்கும் எக்காலத்துக்கும் உரிய ஒலிகள் என்றும் சொல்வதை நாம் ஏற்றுக் கொண்டோமானால், மனிதனின் அன்றாட வாழ்வில் அவற்றுக்கு அப்படி என்ன முக்கியமான இடம் இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இவை யாருக்குரியவை? அனைவரும் தம் விருப்பப்படி இந்த ஒலிகளைப் பயன்படுத்தி தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள முடியுமா? அல்லது இந்த மந்திரங்கள் வெறும் ஓசைகள்தானா? இவற்றால் மனிதர்களுக்கு பயனில்லை என்றால் வேத மந்திரங்களால் ஆவதென்ன? இந்தக் கேள்விகளுக்கு இப்படி ஒரு சுருக்கமான பதில் சொல்லலாம்- வேத மந்திரங்கள் அனவைருக்கும் உரியவை. ஆனால் அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளை வேதாங்கங்களும் உபவேதங்களும் வகுத்திருக்கின்றன. வேதங்களைப் பயன்படுத்தி மேன்மையடைவதற்கான வழிகாட்டிகளாகவும் கருவிகளாகவும் இவ்விரண்டும் இயங்குகின்றன.

வேதாங்கங்கள்

வேதாங்கங்கள் – வேத அங்கங்கள்- வேதங்களின் உறுப்புகள் என்று சொல்லப்படுகின்றன. வேத ஒலிகளையும் அக்ஷரங்களையும் புரிந்து கொண்டு சரியான முறையில் பயன்படுத்த வேதாங்கங்கள் மிக முக்கியமாய் இருக்கின்றன. எனவேதான் வேதங்களைக் கற்பிப்பதில் வேதாங்கங்களுக்கு முதன்மை இடம் அளிக்கப்படுகிறது.

வேதாங்கங்கள் எண்ணிக்கையில் அறுவகைப்படும்

அவை,

சீக்ஷா – உச்சரிப்பு

வியாகரணம் – இலக்கணம்

சந்தஸ் – செய்யுள் இலக்கணம்

நிருக்தம்- சொல் இலக்கணம்

ஜோதிடம் – வானசாஸ்திரம்

கல்பம் – செயல்முறை

இவை ஒவ்வொன்றும் ஒரு உறுப்பாக, வேதங்களின் ஒரு அங்கமாகக் கருதப்படுவதால் இவையனைத்தும் வேதாங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

vedanga.jpg?resize=259%2C194

வேதாங்கங்களின் முதல் உறுப்பான சீக்ஷா, ஓசை நயம் மற்றும் உச்சரிப்பு முறையை நெறிப்படுத்துகிறது. சீக்ஷா வேதங்களின் நாசியாகக் கருதப்படுகிறது. நாம் சுவாசிக்கவும் நம் பிராணனைக் காத்துக் கொள்ளவும் நம் நாசி உதவுவதுபோல் சீக்ஷா வேத மந்திரங்களின் ஜீவ சக்தியைக் கட்டிக் காக்கிறது. வேத மந்திரங்களின் பலனை முழுமையாய்ப் பெற அவற்றை முறைப்படி சரியாக உச்சரித்தாக வேண்டும். அசைகளின் ஓசை மற்றும் ஒலிப்பைத் தூய முறையில் காத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை வரையறை செய்வதால் சீக்ஷா முக்கியத்துவம் பெறுகிறது. உச்சரிப்பில் எழும் எந்த ஒரு சிறு பிழையும் விரும்பத்தகாத, அல்லது எதிர்மறை பலன் கொடுக்கக்கூடும். எனவே வேத புருஷனின் ஆறு உறுப்புகளில் வேதாங்கமே பிரதானமாக மதிக்கப்படுகிறது. ஒவ்வொரு அக்ஷரமும் எவ்வளவு உயர்ந்து அல்லது தாழ்ந்து ஒலிக்கப்பட வேண்டும், அதன் கால அளவை என்ன என்பன போன்ற விஷயங்களை சீக்ஷாவே நெறிப்படுத்துகிறது. இந்த விதிமுறைகள் மாற்றப்படக்கூடாதவை என்பதில் ஒருமித்த கருத்துண்டு. எனினும் வெவ்வேறு சாகைகளுக்கு இடையே மந்திரங்களை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதைப் பார்க்கிறோம். இங்குதான் சீக்ஷா மிக முக்கியமான பணியாற்றுகிறது- வெவ்வேறு பகுதிகளுக்குரிய சாகைகளுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை வகுத்து மந்திர பிரயோகத்தில் பிழை ஏற்படாத வகையில் சீக்ஷை பார்த்துக் கொள்கிறது.

வேதாங்கங்களின் இரண்டாம் உறுப்பான வியாகரணம் இலக்கண விதிகள் வகுத்தளிக்கிறது. வியாகரணம் வேதத்தின் வாய் என்று கருதப்படுகிறது. பரம்பொருள் சொரூபங்களில் மிக முக்கியமானது ஒலி வடிவே. சீக்ஷையும் வியாகரணமும் ஒலி வடிவை மேம்பட்ட, தெளிவான வகையில் உணர உதவி நமக்கு நன்மை பயக்கின்றன. பிற இலக்கண விதிகள் போலல்லாது வியாகரணம் மிக விரிவான பார்வை கொண்டிருக்கிறது. வியாகரணம் வகுத்துக் கொடுக்கும் மோட்ச சாதனங்களில் ஒன்று சப்த பிரம்ம வாதம் – ஒலியும் பரம்பொருளும் அடிப்படையில் ஒன்றே என்பது இதன் தாத்பர்யம். இதிலிருந்து கிளைத்த பல்வகை சாதனைகளில் ஒன்றான நாத பிரம்ம உபாசனையின் அடிப்படை தத்துவத்தை நாம் இங்கு காணலாம்- நாதமே பரம்பொருளுக்கு இட்டுச் செல்கிறது. வியாகரணங்களில் பாணினியின் வியாகரணமே மிகப் பரவலாய் அறியப்பட்டுள்ளது.

சந்தஸ் அல்லது யாப்பு, வேதாங்கங்களின் மூன்றாவது உறுப்பாகும். இது வேதத்தின் பாதமாக கருதப்படுகிறது. யாப்பிலக்கணம் என்று சந்தஸ் குறித்து சொல்லலாம். சீக்ஷை சரியான உச்சரிப்புக்கான விதிமுறைகளைத் தொகுக்கிறது, வியாகரணம் அக்ஷரங்களின் பொருத்தத்தைத் தீர்மானிக்கிறது, சந்தஸ் மந்திரப் பிரயோகத்தின் ஒட்டுமொத்த ஒலி வடிவம் குலைவற்ற ஒழுங்கு கொண்டிருக்க உதவுகிறது. இவ்வகையில் வேத ஒலிகள் மற்றும் மந்திரங்களை சந்தஸ் காப்பாற்றிக் கொடுப்பதாகச் சொல்லலாம். வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பது விரும்பத்தகாத, எதிர்மறை விளைவுகளை அளிப்பது போலவே அக்ஷரங்களைக் கூட்டுவதும் குறைப்பதும் பிழைபலன் தருவதாக அமையும். எனவே, வேதக்கல்வியில் சந்தஸ் மிக முக்கியமான இடம் கொண்டதாய் இருக்கிறது. சந்தஸ் குறித்த நூல்களில் பிங்களரின் சந்தஸ் சாஸ்திரமே மிகவும் புகழ் பெற்றதாகும்.

நிருக்தம் அல்லது சொல் இலக்கணம் நான்காம் வேதாங்கமாகும். அது வேதத்தின் செவியாகக் கருதப்படுகிறது. நிருக்தம் வேதத்தின் வேர்ச்சொல்லகராதி. வேறெந்த வேர்ச்சொல் அகராதியையும் போலவே நிருக்தம் ஒவ்வொரு சொல்லின் வேரையும் கண்டெடுத்துக் கொடுக்கிறது. ஆனால் பிற மொழிகள் போல் அல்லாமல் வேத மொழியில் பல அசாதாரணமான, கடினமான சொற்கள் உள்ளன. நிருக்தம் அவற்றின் மூலம் மற்றும் பொருள் தருவதோடல்லாமல், அன்றாட பயன்பாட்டில் உள்ள சொற்களையும் அசை பிரித்து அவற்றின் மூலப்பதங்களை விளக்கி, ஏன் குறிப்பிட்ட பொருளில் ஒவ்வொரு சொல்லும் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது. மந்திரங்களின் ஆழ்பொருளை அறிய நிருக்தங்கள் மாணவர்களுக்கு உதவுகின்றன, வெகு சில சொற்கள் அல்லது மிகச் சிறிய வாக்கியத்தின் மீபொருண்ம உள்ளடக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும் நிருக்தம் பயன்படுகிறது.

ஜோதிடம் அல்லது வான சாஸ்திரம் ஐந்தாம் வேதாங்கம். அது வேதங்களின் கண்ணாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தை நயனம் என்று அழைப்பதுண்டு, அதற்கும் கண் என்றுதான் பொருள். குறிப்பிட்ட சில கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதை கணிக்கவும் எப்போது வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டும் என்பதற்கும் எண்ணற்ற நெறிமுறைகள் இருக்கின்றன. எனவே வேதங்களைக் கற்பதில் ஜோதிடம் ஒரு பயனுள்ள துறையாய் இருக்கிறது. மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையைக் கணிப்பது என்பது சிக்கலான நடைமுறை கொண்டிருப்பதால், கணிதம் ஜோதிட சாஸ்திரத்தின் தவிர்க்க இயலாத அங்கமாக இருக்கிறது. கணித அடிப்படையில் ஜோதிடம் மூன்று பிரிவுகள் அல்லது ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது- சித்தாந்த ஸ்கந்தம், சம்ஹித ஸ்கந்தம், ஹோர ஸ்கந்தம். இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் அல்ஜீப்ரா, ட்ரிகோணமெட்ரி, ஜியோமெட்ரி, கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது. சம்ஹித ஸ்கந்தம், வானவியல் மற்றும் ஜோதிடம் முதலான துறைகளைப் பேசுகிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.

கல்பம் அல்லது நடைமுறை, வேதாங்கங்களின் ஆறாம் அங்கம். இது வேதங்களின் கரமாகக் கருதப்படுகிறது. வைதீக கர்மாக்களில் பங்கேற்பதற்கான துவக்கம் என்று கல்பம் அறியப்பட்டாலும் நாம் மேன்மையாகவும் ஒழுக்கமாகவும் வாழவும், வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளவர்கள் சமூக அமைப்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஒருவன் தன் இல்லத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், வைதீக கர்மாக்களில் எவ்வாறு பங்கேற்க வேண்டும் என்றும் பல நெறிமுறைகள் உள்ளன. இது மிகப் பெரிய பேசுபொருள் என்பதால் ரிஷிகள் கல்பம் சார்ந்த சாஸ்திரங்களை மூன்று வகைகளாக தொகுத்துள்ளனர்- அவை, தர்ம சாஸ்திரம், க்ருஹ்ய சாஸ்திரம், ஸ்ரௌத சாஸ்திரம் என்று அறியப்படுகின்றன.

உபவேதங்கள்

உபவேதம் என்ற பதத்தின் பொருள் செயல்முறை அறிவு என்று சொல்லலாம். வெவ்வேறு துறைசார்ந்த தொழில்நுட்ப தகவல்கள் உபவேதங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தலைமுறை தலைமுறையாக வேத ரிஷிகள் காலம் முதல் கைமாற்றி அளிக்கப்படும் பல்வேறு துறை சார்ந்த பயனுள்ள தகவல்களே உப வேதங்களாக அறியப்படுகின்றன.

வித்யாஸ்தானங்கள் அல்லது அறிவகங்களின் ஒரு பகுதியே உபவேதங்கள். இந்து தத்துவங்களில் பதினெட்டு வித்யாஸ்தானங்கள் குறிப்பிடப்படுகின்றன.

நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், மீமாம்சை, நியாயம், புராணங்கள் (புராணங்கள் அண்டவியல் குறித்தும் பேசுகின்றன), தர்ம சாஸ்திரங்கள் மற்றும் நான்கு உப வேதங்கள்- இவையே பதினெட்டு வித்யாஸ்தானங்கள்.

வேதாங்கங்களின் பின்னிணைப்பாக உபவேதங்கள் கருதப்படுகின்றன.

இவையே நான்கு உபவேதங்கள்-

ஆயுர் வேதம் – வாழ்வு குறித்த அறிவியல்

அர்த்த சாஸ்திரம் – அரசியல், ஆட்சி, பொருளாதாரம் குறித்த அறிவியல்

தனுர்வேதம் – போர்க்கலைகள் மாற்றும் ஆயுதங்கள் குறித்த அறிவியல்

காந்தர்வ வேதம் – நுண்கலைகள்

அர்த்தசாஸ்திரம்

arthasasthra.jpg?resize=196%2C256

அர்த்தம் என்றால் செல்வம் என்று பொருள்படும். எனவே, அர்த்த சாஸ்திரம் என்பது செல்வம் அல்லது பொருளாதார அறிவியல்.

நவீன காலத்தில் அர்த்த சாஸ்திரம் என்றால் ஏறத்தாழ 1700 ஆண்டுகளுக்கு முன் சாணக்யன் அல்லது கௌடில்யன் என்ற பண்டிதரால் ஆட்சி முறை மற்றும் அரசனின் கடமைகளையும் உரிமைகளையும் குறித்து எழுதப்பட்ட புகழ்பெற்ற நூலே நினைவுக்கு வருகிறது.

சம்ஸ்கிருத இலக்கியத்தில் அர்த்த சாஸ்திரம், ராஜ சாஸ்திரம், தண்ட நீதி, நீதி சாஸ்திரம் என்ற சொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் சரியாக பொருள் கொள்வதானால், அர்த்த சாஸ்திரம் என்ற பதத்தின் பொருள் விரிவானது- அது அரசியல், ஆட்சிமுறை, பொருளாதாரம், சட்டம், நீதிமுறை என்று பல துறைகளையும் பேசுகிறது. காமசூத்திரமும் பிற நூல்களும் தர்மத்தையே உயர்ந்த இலட்சியமாகப் பேசுவதுபோல் அர்த்த சாஸ்திரம் தர்மத்துக்கே உயர்ந்த மதிப்பளிக்கிறது.

இவ்வாறு பரவலான விஷயங்களைப் பேசுவதால் அர்த்த சாஸ்திரம் தர்ம சாஸ்திரங்களில் பேசப்பட்டுள்ளவற்றையும் விவாதிக்கின்றது. ஆனால் தர்ம சாஸ்திரங்களுக்கு உரிய விரிவான களம் அர்த்த சாஸ்திரத்துக்கு உரியதல்ல. எனவே, தர்ம சாஸ்திரத்துக்கும் அர்த்த சாஸ்திரத்துக்கும் எந்த ஒரு விஷயத்தில் முரண்பாடு ஏற்பட்டாலும், அங்கு தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதே கணக்கில் கொள்ளப்படும், அதன் விதிகளே நடைமுறைப்படுத்தப்படும். சிலர் அர்த்த சாஸ்திரம் என்பது அதர்வ வேதத்தின் உபவேதம் என்று கூறுவதுண்டு.

மானுட வாழ்விலும் சமூக உறவுகளிலும் செல்வத்தின் முக்கியத்துவம் குறித்து பண்டைய இந்துக்கள் அறிந்திருந்தனர் என்பதற்கான சான்றுகள் ஏராளம் உள்ளன. செல்வ வளமிக்க சமூகங்களும் தேசங்களும் எதிர்கொள்ளக்கூடிய அச்சுறுத்தல்கள் மற்றும் செல்வத்தால் கிட்டக்கூடிய சாதக நிலைகள் குறித்து அவர்கள் அறிந்திருக்கவே செய்தனர். சமூக அமைப்புகள், சமூகச் சூழலில் தனிமனித செயல்பாடு, செல்வம் ஈட்டி அவற்றைக் காக்கும் வழிகள், நல்லாட்சி, அரசியல், சட்டம் மற்றும் நிர்வாகம் குறித்து உலக அளவில் முதற்சிந்தனைகள் வெளிப்படக் அர்த்த சாஸ்திரம் குறித்த சிந்தனையே காரணமாயிற்று. இவற்றில் அரசனின் உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதற்கு காரணம், செல்வ வளமிக்க ஒரு தேசத்தை வலுவான, நேர்மையான அரசன் ஆண்டு நிர்வாகம் செய்யாவிடில், அத்தகையச் சமூகம் சிதறிவிடும் என்பதே.

ஆனால் அர்த்த சாஸ்திரம் செல்வத்துக்கு மிகையான முக்கியத்துவம் அளித்த காரணத்தால் செல்வ வளம் ஓயாது ஈட்டப்பட வேண்டிய வாழ்வுமுறை உருவானது. இது தர்ம சாஸ்திரங்களின் நெறிமுறைகளுக்கும், சமூக நீதிக்கும் முரணான நிலை உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. மேலும், பிற்கால சாஸ்திரக்காரர்கள் மோதல்களைத் தவிர்க்க விலக்குகள் அளிக்கவும், பல்வேறு தரப்பினரை சமநிலையில் இருத்தும் நிலை உருவாகவும் பல்வேறு விதிமுறைகள் வகுக்க வேண்டியதாயிற்று.

மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகிய இரு பெருங்காப்பியங்களில் அர்த்த சாஸ்திரத்தில் பேசப்படும் விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. புராணங்கள், தர்ம சூத்திரங்கள், ஸ்மிருதிகள், ஆங்கிரசின் மகனான பிருகஸ்பதியின் அர்த்தசாஸ்திர உரை, பிருகு மகனான சுக்கிரனின் ராஜ சாஸ்திரம், உசனஸின் நீதி நூல் மற்றும் பலநூறு சிறு நூல்கள் கிறித்தவ சகாப்தத்துக்கு முன்னரே இங்கு இருந்திருக்கின்றன.

அர்த்தசாஸ்திர நூல்களில் மிகவும் நெறிப்படுத்தப்பட்ட, சீர்மையான நூல் என்று கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் சொல்லப்பட முடியும் எனினும் அது பலராலும் விமரிசிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில், பாணரின் காதம்பரி குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. மிகவும் தீய அறிவுரைகள் பல இருப்பதால் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் மிகவும் குரூரமான நூல் என்று காதம்பரியில் குறிப்பிடப்படுகிறது. இன்னும் பலரும் கௌடில்யரின் நூல்களை நிராகரித்துள்ளனர்- நாம் விரும்பும் முடிவுகளை அடைய உதவும் எதுவும் அதற்கான வழிமுறைகளை நியாயப்படுத்தும் என்ற கோட்பாடு இதற்கு முக்கியமான காரணம் எனலாம்.

ஆயுர் வேதம்

ayurveda.jpg?resize=172%2C259

ஆயுர் வேதம் என்ற பதத்தின் நேரடி பொருள், உயிர் அறிவியல் என்று சொல்லலாம். இந்தியாவின் புராதன, இந்தியாவுக்குரிய மருத்துவ முறையான ஆயுர் வேதம் இன்று உலகெங்கும் பயிலப்படுகிறது. இதன் துவக்க காலம் எப்போது என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது இன்று மிகக் கடினம். ஆனால் நம்மிடமுள்ள இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு, உலகின் மிகத் தொன்மையான மருத்துவ முறை இதுவே என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

ஆயுஷ், ஆரோக்கியம், ஔஷதி போன்ற பதங்கள் வேதங்கள் துவங்கி ஏறத்தாழ அனைத்து நூல்களிலும் இருப்பதைக் காண்கிறோம். ஆயுர் வேதம் என்பது முழுமையான ஒரு மருத்துவ முறையாகும். மகாவிஷ்ணுவின் அவதாரமாக நம்பப்படும் தன்வந்திரி மருந்துகளுக்கும், தேகம் மற்றும் மனநலத்துக்கும் இறைவனாவான். ருத்ரன் தெய்வங்களின் மருத்துவனாகப் பேசப்படுகிறான். தேக ஆரோக்கியத்தையும் உயிரோட்டத்தின் ஒழுங்கையும் காப்பதில் அஸ்வினிகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது.

சாங்கிய தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளையொட்டியே ஆயுர் வேத மருத்துவ முறை இயங்குகிறது. சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கும் ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்கள் இணையாகக் கூறப்படுகின்றன. வாதம் ஆரோக்கியத்தை சமன்படுத்துகிறது என்பது மட்டுமல்லாமல் ஏனைய இரண்டின் உந்துவிசையாகவும் இருக்கிறது. பித்தம் என்பது வெம்மையுடன் தொடர்புடையது, பித்தமே உடலுக்கு வெம்மையளித்து இயக்குகிறது. கபம் ஜடத்தன்மை கொண்டது.

செயல்வடிவமுள்ள இந்த மூன்று தத்துவங்களுடன் கூடுதலாக ஆயுர்வேதம் சப்த தாதுக்கள் என்ற கருத்துருவாக்கமும் கொண்டுள்ளது. எலும்பின் மஜ்ஜை, கொழுப்பு, இரத்தம் முதலான ஏழு அடிப்படை வஸ்துக்களின் கூட்டு வடிவமாக உடல் இருக்கிறது. இவையன்றி ஐந்து பிராணன்கள், ஐந்து உப பிராணன்கள் என்ற தத்துவமும் ஆயுர்வேதத்தில் உண்டு (பிராணனே மனிதன் எந்த ஒரு செயலிலும் ஈடுபடும் ஆற்றல் அளித்து அவனைச் செலுத்தும் ஜீவசக்தியாக இருக்கிறது).

ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, சமநிலை கொண்ட மன அமைப்பு ஆரோக்கியத்தைக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. வியாதி என்ற பதத்தின் பொருளே அமைதியற்ற மனம் என்பதுதான், இதுவே உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் ஒழுங்கின்மை ஏற்படக் காரணமாகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் நோய் நீக்குவது என்பது நச்சுக்களாக உடலில் தங்கிவிட்ட தடைகளை நீக்குவதுதான். இதைச் செய்ய இரண்டாயிரம் ஆண்டுகால நடைமுறையில் பல்வேறு உத்திகள் கண்டறியப்பட்டுள்ளன.

பண்டைய இந்திய மருத்துவமுறை மனிதனின் நோய்களை நீக்குவதில் மட்டும் அக்கறை கொண்டுள்ள ஒன்றல்ல. விலங்குகள், பறவைகள், மரங்கள் என்று அனைத்துக்கும் மருத்துவ சிகிச்சை செய்ய ஆயுர்வேதத்தில் இடமுண்டு.

பொதுவாகச் சொன்னால் ஆயுர்வேதத்தின் அங்கங்கள் ஏழு-

1.சல்யம்- அறுவை சிகிச்சை, மகப்பேறு

2.சாலக்யம்- கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்

3.காய சிகிச்சை- உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்

4.பூதவித்யை- மன நலம் பேணுதல்

5.குமார ப்ரியா- குழந்தை வளர்ப்பு

6.அக்தம் – முறிமருந்துகள் அளித்தல்

7.ரசாயன தந்திரம் – ஆயுள் நீட்டிப்புகான மருந்துகளைப் பயன்படுத்துதல்

8.வாஜீகரணம்- புத்துயிர்ப்பு மருத்துவம்

சரகர், சுஸ்ருதர், வாக்பட்டர், வ்ரத ஜீவகர், பதஞ்சலி, நாகார்ஜுனர் முதலியானோர் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலையாய ஆசான்களாவர்.

தனுர் வேதம்

dhanur1.jpg?resize=190%2C266

தனுர் வேதம் என்ற பதம் இரு சொற்களைக் கொண்டது- தனுஷ் என்றால் வில் என்றும் வேதம் என்றால் ஞானம் என்றும் பொருள்படும். நேரடி பொருளில், இந்தப் பதம் வில்வித்தையையே குறிக்கிறது. புராணங்களில் முழுக்க முழுக்க இப்பொருளில்தான் தனுர்வேதம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னரே ஆச்சரியப்படத்தக்க வகையில் தனுர் வேதம் என்ற பதம் அனைத்து போர்க்கலைகளையும் பேச பயன்படுத்தப்பட்டது.

தனுர் வேதம் தவிர சஸ்திர வித்யா என்றும் உண்டு- சஸ்திரம் என்றால் கத்தி, அல்லது ஆயுதம், வித்யா என்பது வித்தை. எனவே, சஸ்திர வித்யா என்பதன் நேரடிப் பொருள் வாள்வித்தை என்றாகும். தனுர் வேதம், சஸ்திர வித்தை ஆகிய இவ்விரண்டும் பண்டைய இந்திய போர்க்கலை மற்றும் ஆயுதப் பயன்பட்டு முறைமைகளை விளக்கும் அறிவுத் துறைகளாகும்.

வேதங்கள் அனைத்தும் அமைதியையும் மேன்மையான விஷயங்களையும் பேசும்போது உபவேதங்கள் தனுர் வேதத்தை வித்யாஸ்தானத்தின் உறுப்பாகக் கொண்டிருப்பது நவீன மனதுக்கு வியப்பாய் இருக்கலாம். ஆனால் போர்க்கலையும் ஆயுதங்களும் பயில்வது வேற்று தேசங்களின்மீது போர் தொடுக்கும் நோக்கத்தில் மட்டுமல்ல என்பதை மனதில் கொள்ளவேண்டும். எதிரிகள் மற்றும் பகை தேசங்களிடமிருந்து தன்னையும் தன் மக்களையும் பாதுகாப்பது அரசனின் கடமையாகிறது. போர்க்கலையும் ஆயுதப்பயிற்சியும் தொடர்ந்த பயிற்சி கோருவன. மேலும், பண்டைக்காலம் முதல் இந்தியாவில் வில், வாள் மற்றும் பல ஆயுதங்கள் எப்போதும் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றன- ஆயுதப்பயிற்சி ஒரு மனிதனின் கல்வியில் இடம்பெறுவது தவிர்க்க முடியாத தேவையாக இருந்து வந்திருக்கிறது.

கிறித்துவ சகாப்தம் துவங்குவதற்கு முன்னரே பல்வேறு ஆயுதங்கள் மற்றும் அவற்றைக் கையாளும் முறை குறித்து விவரிக்கும் ஏராளமான நூல்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரம் நம்மிடம் எஞ்சியிருக்கும் நூல்களைக் கொண்டே தெளிவாகிறது. ஆனால், மூல நூல்கள் எதுவும் நம்மிடையே இல்லை.

போர்க்கலைகள் இருவகைப்படும்- ஆயுதங்கள் கொண்டது ஒன்று, ஆயுதங்களற்ற போர் முறை மற்றொன்று. இந்தியாவில் எண்ணற்ற போர்முறைகள் இருக்கின்றன, அவற்றை வட இந்திய முறைகள் என்றும் தென்னிந்திய முறைகள் என்றும் பகுக்கலாம். இவற்றைத் தவிர இந்தியாவெங்கும் மல்யுத்த பாரம்பர்யம் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

தனுர்வேதம் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி தவிர, ஆயுதங்கள் செய்யும் முறையும் கற்றுத் தருகிறது. அது தவிர, போருக்குரிய மனநிலையை உருவாக்கிக் கொள்வதற்கான தியான முறைகள் மற்றும் ஆன்ம வித்தையும் தனுர்வேதத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. சஞ்சலமற்ற, அமைதியான மனமே ஆயுதங்களை அமைதிக்கான பணியில் பயன்படுத்த உதவும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் வீரர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அமைதியான மனநிலையில் உள்ள அதிகாரிகளுக்கே வயப்படுகிறது.

கந்தர்வ வேதம்

கந்தர்வ வேதம் என்ற கருத்துருவாக்கம் எப்போது எங்கு தோன்றிற்று என்பது குறித்த தெளிவான விபரங்கள் நம்மிடமில்லை.

இந்து தொன்மங்களில் சில தேவகணங்கள் கந்தர்வர்கள், அப்சரஸ்கள், வித்யாதரர்கள், கிண்ணரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கந்தர்வர்கள் இசையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் வித்யாதரர்கள் வித்தையில் முதன்மையானவர்கள் என்றும் நம்பப்படுகிறது.;

கந்தர்வ வேதத்தின் துவக்கம் இத்தகைய நம்பிக்கையாய் இருக்கலாம். இந்திய நாட்டிய முறைகள் குறித்து நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரத ரிஷியை கந்தர்வ வேதம் எழுதியவராய் சிலர் நம்புகின்றனர். முதலில் அது இசையின் அறிவியலாகத் துவங்கியிருக்கலாம். அப்போது அதில் இசை, நடனம், நாடகம் என்ற மூன்றும் இருந்தன- இவை ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருப்பதால் இவற்றை இணைத்தே பேச முடியும்.

பிற்காலத்த்ல் இந்த மூன்று இயல்களும் பிற அறிவுத்துறைகளில் தாக்கம் செலுத்தத் துவங்கியபோது, இசை மற்றும் நடனத்தின் சில கூறுகள் ஆயுர் வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டன. அதே போல் இங்கொன்றும் அங்கொன்றுமாய் வெவ்வேறு துறைகளில் சில போர்க்கலைகளும், கவிதை அல்லது காவியம், காம சாஸ்திரம் போன்றவையும் இடம்பெறத் துவங்கியபோது கந்தர்வ வேதம் என்ற தனித்துறை பிறந்திருக்கலாம். அல்லது வேறெந்த சிறு வடிவிலாவது துவக்க காலம் முதல் தொடர்ந்திருக்கலாம்.

இன்றுள்ள கந்தர்வ வேதத்தின் கூறுகளாக சங்கீதம், நாட்டியம், நாடகம், காவியம் (கவிதை) மற்றும் காம சாஸ்திரம் ஆகியவை உள்ளன.

ஆதார நூல்கள்:

1.Kutumbian. Ancient Indian Medicine. 2005, Orient Longman

R.P. Kangle. Arthashastra, 3 vols. 1965, Bombay: University of Bombay.

Swami Prajnanananda. Cultural heritage of Indian fine arts: a comparative study of music, sculpture, painting, and architecture: a new approach, Calcutta: Nababharat Publishers, 1985.

Arthur A. Macdonell. History of Sanskrit Literature, 2006, New Delhi: Motilal Banarsidas.

T.K. Ramachandra Iyer. A Short History of Sanskrit Literature, 2006, Kalpathy: R.S. Vadhyar and Sons.

.- See more at: http://solvanam.com/?p=40091#sthash.QfX1jZMl.dpuf

Link to comment
Share on other sites

தொடருங்கள் கிருபன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புராணங்கள்

செம்பரிதி
 

18 puranas

புராணங்கள் வேதக்கல்வியின் முக்கியமான பகுதியாய் இருக்கும் நூல்கள். கடந்த காலத்தில் மெய்யாகவே நிகழ்ந்தவை என்று நம்பப்படும் விஷயங்களை விவரிப்பதாலும், மிகப்பெரும் எண்ணிக்கையிலான கதைகளையும் சம்பவங்களையும் உயர்ந்த தத்துவ மெய்ப்பாடுகளுடன் இணைத்து அளிப்பதாலும் அவை நவீன காலகட்டத்தில் கதைகள், தொன்மங்கள், உவமைக்கதைகள் என்று பலவாறாக கருதப்படுகின்றன.

புராணம் என்ற சொல், கடந்த காலம் என்று பொருள்படும். கடந்தகாலத்துக்குரிய பல்வேறு நிகழ்வுகளைப் பேசுவதாலேயே இப்பெயர். பண்டைய மற்றும் இடைக்கால இந்து சமய வழக்கங்கள், தொன்மங்கள், வரலாறு, புவியியல், அரசவம்சங்கள், அண்டவியல் மற்றும் இலக்கியம் குறித்து அறிஞர்களுக்கும் பாமரர்களுக்கும் விரிவான தகவல்கள் கொண்ட கலைக்களஞ்சியங்களே புராணங்கள்.

புராணங்களின் நோக்கம் மற்றும் நிகழ்காலத் தேவை குறித்து இருவகை பார்வைகள் உள்ளன. வேதங்களில் உள்ள உயர்ந்த தத்துவங்களை கதைகளைக் கொண்டும் சம்பவங்களைக் கொண்டும் விளக்குவதுதான் புராணங்களின் ஒரே நோக்கம் என்று சொல்பவர்கள் உண்டு. புராணங்கள் பாமரர்களுக்கே உரியன என்று இவர்கள் கருதுகின்றனர்.

இப்பார்வைக்கு மாறாய், பண்டிதர்கள் மற்றும் பாமரர்கள் என்று அனைவருக்கும் உரிய தனி நூல்களே புராணங்கள் என்று சொல்பவர்கள் உண்டு. அண்டத்தில் உள்ள வெவ்வேறு உலகங்கள் பற்றிய நுண்விவரங்கள் கொண்ட விளக்கங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய துணைக்கண்டத்தில் உள்ள செடியினங்கள் மற்றும் உயிரினங்கள் குறித்த தகவல்கள், பல நூறாண்டுகளாய் தொடரும் பல்வேறு அரசவம்சங்கள் குறித்த வரலாற்றுப் பதிவுகள் என்று பலவும் புராணங்களில் உண்டு. இந்திய அறிவுத்துறை ஆய்வாளர்கள், தொல்லியலாளர்கள், தாவரவியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள் மற்றும் பலருக்கு புராணங்களில் உள்ள தகவல்கள் மிக முக்கியமான வழிகாட்டிகளாக இருக்கின்றன.

புராணங்கள், கடந்தகால சரித்திர நிகழ்வுகளை உள்ளபடியே விவரிக்கும் ஆவணங்கள் என்று நம்புபவர்களும் உள்ளனர்- கடந்தகால நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதாக மத்ஸ்ய புராணத்தில் ஒரு ஸ்லோகம் இருந்தாலும்கூட இந்த நம்பிக்கை ஆதாரபூர்வமானது என்பதை நிறுவுவது மிகக் கடினம்.

மகாபுராணங்கள், உபபுராணங்கள் என்று இருவகையில் புராணங்கள் பகுக்கப்படுகின்றன. பதினெட்டு மகாபுராணங்களும் பதினெட்டு உபபுராணங்களும் உண்டு. ஒவ்வொரு புராணமும் ஒவ்வொரு தெய்வத்தைப் பிரதானப்படுத்துகிறது. பதினெட்டு மகாபுராணங்களையும் தொகுத்தால் மொத்தம் 4,00,000 கிரந்தங்கள் அல்லது செய்யுள்கள் இருக்கும்.

இந்த எண்ணிக்கை குறித்து சுவையான ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. பதினெட்டு புராணங்களும் வேத வியாசரால் தனியாய் எழுதப்படவில்லை. முதலில் ஒரு கோடி கிரந்தங்கள் கொண்ட ஒரே ஒரு புராணம்தான் இருந்தது. துவாபர யுக மக்கள் அது அத்தனையையும் அறிந்துகொள்ள சிரமப்படுவதைப் பார்த்த இறைவன் வேத வியாசரிடம் அவற்றை பதினெட்டு பகுதிகளாக நான்கு லட்சம் கிரந்தங்களில் சுருக்கச் சொன்னார். இந்த பதினெட்டு பகுதிகளும் பதினெட்டு புராணங்களாக அறியப்படுகின்றன..

இது தவிர பிற்காலத்தில் வேறொரு தனி பகுப்பும் செய்யப்பட்டது. அதன்படி பதினெட்டு மகாபுராணங்களும் ஆறு புராணங்களைக் கொண்ட மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டன. இயற்கையில் உள்ள சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கு ஏற்ப இந்த மூன்று தொகுதிகளும் அமைக்கப்பட்டன.

நான்கு புருஷார்த்தங்களான தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவற்றை வலியுறுத்தினாலும் புராணங்கள் ஐந்து விஷயங்களை முதன்மையாய் பேசுகின்றன.

  1. சர்க்கம் அல்லது ஆதார சிருஷ்டி
  2. பிரதி- சர்க்கம் – இரண்டாம் நிலை சிருஷ்டியும் பிரளயமும்
  3. வம்சம் – தெய்வங்கள் மற்றும் அரசர்களின் வம்சாவளி
  4. மன்வந்தரம் – மனுவின் ஆட்சிக் காலங்கள்
  5. வம்சானுசரிதம் – அரச குடும்பங்களின் வரலாறு

வேதங்களில் மிகச் சுருக்கமாகவும் மறையீடாகவும் கூறப்பட்டுள்ள தத்துவங்களை விரிவாக எடுத்துரைப்பதுதான் புராணங்களின் மிக முக்கியமான நோக்கம். வேதம் பயில்பவர்கள் உயர்ந்த உண்மைகளை எளிதில் புரிந்து கொண்டு வாழ்நாள் முழுதும் நினைவில் கொள்ள புராணங்கள் உதவுகின்றன.

வேதங்களிலும் உபநிடதங்களிலும் உள்ள தத்துவங்களின் உண்மையான உள்ளர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாதபோது புராணங்கள் அவற்றின் விளக்கமாய் இருக்கின்றன- வரலாற்று நிகழ்ச்சிகள் மற்றும் கதைகளைக் கொண்டு தத்துவ விளக்கத்தை புராணங்கள் அளிக்கின்றன. உதாரணத்துக்கு, ‘சத்யம் வத’, உண்மையே பேசு என்கிறது வேதம். புராணங்களும் இதிகாசங்களும் அரிச்சந்திரன் கதை போன்றவற்றைக் கொண்டு ரத்தினச் சுருக்கமாய் உள்ள இந்த வேதவாக்கின் உட்பொருளை முழுமையாய் உணர்த்துகின்றன.

பதினெட்டு மகாபுராணங்கள் மற்றும் பதினெட்டு உபபுராணங்கள் தவிர, ஸ்தல புராணங்களும் உண்டு- ஒரு குறிப்பிட்ட தலத்தின் பெருமையை விவரிக்கும் வரலாறுகள் இவை. பல்வேறு தெய்வபக்தர்களின் கதையை விவரிக்கும் சிறு புராணங்களும் உண்டு. இவற்றில் சில நம்மிடையே பரவலாக அறியப்பட்டுள்ள ஸ்லோகங்கள் மற்றும் ஸ்தோத்திரங்களில் பயிலப்படுகின்றன. இந்த ஸ்லோகங்களும் ஸ்தோத்திரங்களும் மகாபுராணங்கள் மற்றும் உபபுராணங்களில் உள்ளன, இவை தவிர வேறு சில தனிநூல்களாகவும் உண்டு.

பதினெட்டு மகாபுராணங்கள் இவை-

1) பிரம்ம புராணம்

2) விஷ்ணு புராணம்

3) பத்ம புராணம்

4) சிவ புராணம்

5) ஸ்ரீமத் பாகவத மகாபுராணம்

6) நாரத புராணம்

7) மார்க்கண்டேய புராணம்

8) அக்னி புராணம்

9) பவிஷ்ய புராணம்

10) பிரம்ம வைவர்த்த புராணம்

11) லிங்க புராணம்

12) வராக புராணம்

13) ஸ்கந்த மகாபுராணம்

14) விமான புராணம்

15) கூர்ம புராணம்

16) மத்ஸ்ய புராணம்

17) கருட புராணம்

18) பிரம்மாண்ட புராணம்

பதினெட்டு உபபுராணங்கள் இவை. ஆனால் வெவ்வேறு நூல்களில், வெவ்வேறு பிராந்தியங்களில் இவை மாறுபடலாம்

  • 1) சனத்குமார புராணம்
  • 2) நரசிம்ம புராணம்
  • 3) நாரதீய புராணம்
  • 4) சிவதர்ம புராணம்
  • 5) துர்வாச புராணம்
  • 6) கபில புராணம்
  • 7) மானவ புராணம்
  • 8) உஷானஸ புராணம்
  • 9) வருண புராணம்
  • 10) காளிக புராணம்
  • 11) சாம்ப புராணம்
  • 12) சௌர புராணம்
  • 13) ஆதித்ய புராணம்
  • 14) மகேச்வர புராணம்
  • 15) தேவி பாகவதம்
  • 16) வசிஷ்ட புராணம்
  • 17) விஷ்ணு தர்மோத்தாரண புராணம்
  • 18) நிலாமத புராணம்

- See more at: http://solvanam.com/?p=40383#sthash.sjYIULXS.dpuf

 

 

Link to comment
Share on other sites

ரிக் வேதம் பூஜை வழிபாடுகளுக்கும்,

யஜுர் வேதம் மருத்துவ தேவைகளுக்கும்,

சாம வேதம் சங்கீத கானாமிர்தமாகவும்,

அதர்வண வேதம் எதிரிகளை அழிக்கவல்ல மந்ரப் பிரையோகங்களுக்குமாக வகைப்படுத்த பட்டுள்ளன எனலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.