Jump to content

உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்


Recommended Posts

வடமொழிப் பெயர்கள் தமிழின் தொனியில் அமைந்திருக்கின்றன என்பது ஒரு மாயை. பல நூறு ஆண்டுகளாக நீங்கள் வடமொழிப் பெயருக்கு பழக்கப்பட்டு விட்டதனால், உங்களுக்கு அப்படி தோன்றுகிறது.

சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம், கோதிக், செல்டிஸ், பழம்பெர்சியன் ஆகிய ஆறு பழைய மொழிகளும் ஒரே மொழியில் இருந்து வந்தவை என்று மொழியியல் வல்லுனர்கள் நிறுவி உள்ளார்கள். இதற்கு எதிரான வலுவான வாதத்தை இதுவரை எந்த மொழியியலாளரும் முன்வைக்கவில்லை.

தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

ஆகவே தமிழும் வடமொழியும் ஒத்துப் போகின்றன என்ற புதுக் கண்டுபிடிப்பை செய்ய வேண்டாம்.

இதில் இன்னும் ஒன்றையும் சொல்லலாம்.

ர, ட, ல, ய போன்ற எழுத்துக்களிலும் அதன் மற்றைய வரிசை எழுத்துக்களிலும் சொற்கள் ஆரம்பிப்பதை தமிழ் மொழி தடை செய்கிறது.

ஆனால் எத்தனையோ தமிழர்கள் இந்த எழுத்துக்களை முதல் எழுத்துக்களாக கொண்டு தங்களின் பெயரைக் கொண்டிருக்கிறார்கள்.

(நீங்கள் ஒரு பிராமணரிடம் உங்கள் பிள்ளைக்கு பெயர் வைக்க கேட்டீர்கள் என்றால் 90 விழுக்காடு மேற்சொன்ன எழுத்துக்களில்தான் பெயர் வைப்பார்கள். அதன் காரணம் பலருக்கு விளங்குவதில்லை)

இப்படி வடமொழி எந்த வகையிலும் தமிழ் மொழிக்கு ஒத்த ஒரு மொழி அல்ல.

ஏன் கிறிஸ்தவ, இஸ்லாமிய பெயர்கள் பற்றி எதுவும் கூறுவதில்லை என்று கேட்டிருந்தீர்கள். நல்ல கேள்வி.

நாம் ஒரு போதும் வட மொழியில் பெயர் வைக்காதீர்கள் என்பதோடு நிறுத்துவதில்லை. அப்படியே தூய தமிழில் பெயர் வையுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறோம். அது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்.

யேசுதாஸ், மரியதாஸ், என்பவைகளும் வடமொழிப் பெயர்களே. எங்களின் அழைப்பு அனைவருக்கும் பொதுவானது.

ஆனால் எமது சமூகம் பெரும்பான்மையாக இந்து சமூகமாக இருப்பதால், அது குறித்து அதிகம் பேசுகிறோம்.

எமது சமூகம் இஸ்லாமிய சமூகமாக இருந்திருந்தால், ஷரியத் பற்றி பர்தா பற்றி பேசியிருப்போம்.

இதில் நாம் தெளிவாகவே இருக்கிறோம்.

இன்னும் ஒன்று!

எமது மக்கள் மதத்தின் பெயரால் செய்கின்ற மூடத்தனமான வேலைகளை நாம் கேட்காமல் வேறு யார் கேட்பது?

மதத்தின் பெயரால் சிலர் மக்களை ஏமாற்றிப் பிழைப்பார்களாம். ஆனால் நாம் அதைப் பற்றி ஒன்றும் சொல்லக் கூடாதாம். நல்லா இருக்கு உங்கள் கருத்து!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தேவயற்று ஆதாரமற்ற சில விடயங்களை எழுதி உள்ளீர்கள், உங்கள் கருத்துப் படியே உந்தத் தூக்குக்காவடி ஒண்டப் பெருசாச் செய்து சிதழ் குத்தி இழுத்து ,இந்த கிபிரை விழுத்த ஏலாதோ? சும்மா ஏன் கன காசுக்கு நாங்கள் ஏவுகணை வாங்க உலகம் முழுக்க அலைய வேணும்,சிம்பிளா சில ஆயிரம் ரூபாவோட எந்த உயிர்ச் சேதாரமோ சண்டையோ பயிற்சிகளோ இல்லாம வேலை முடிச்சிடும்.

தலைவருக்கு வல்வெட்டித் துறையில் கோவில் இருக்கின்றது என்று நீங்கள் நம்பவல்லையா? அல்லது தலைவர் திருமணம் முடித்தது தமிழ்நாட்டில் உள்ள இந்து ஆலயம் ஒன்றை நீங்கள் அறியவில்லையா?அந்தத் திருமணத்தை அன்ரன் பாலசிங்கம் தான் நடத்தி வைத்தார்.அது தொடர்பான படங்கள் இணையத்தில் வந்திருந்தன. தேடினால் கிடைக்க கூடும்.

கிபிரை அடிக்க வேண்டும் என்று போராளி செய்கின்றான் என்று சொல்வது அவனது செயற்பாட்டைஅவமானப்படுத்துவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமொழிப் பெயர்கள் தமிழில் கலந்ததால் தான் அவ்வாறன தோற்றம் என்றில்லை. இராகவன் என்பதை ராகவன் என்று எழுதுவார்கள். ராமசாமிநாயிடு என்பதை, இராமசாமி நாயுடுவாக எழுத வேண்டும். எனவே நீங்கள் சுகத்துக்காக பலதை இழந்ததுக்கு பிழை பிடிப்பது என்றால் பாப்பாணி தான் முடிவாம்.

வடமொழியின் உச்சாரிப்பு தமிழோடு ஒத்துப் போக நிறையக் காரணங்கள் இருக்கின்றன. வட சொல்லில் ஒரே ஓசை நயத்துக்கு நிறையச் சொல்கள் இருக்கின்றன. எனவே பெயர் அமைப்பதில் எவ்வித ஒலிநயப் பிரச்சனையும் வருவதில்லை. அது சரி என்று நான் சொல்லவில்லை.ஆனால் இந்தத் திராவிட வெறியர்கள், வடமொழியை மட்டும் குறி வைப்பது தான் இந்தச் சந்தேகத்துக்கு காரணம்.

தமிழில் தொல்காப்பியர் வரைத்த இலக்கணம் இப்போது முழுமையாகச் செயற்படுத்த முனைந்தால், சாத்தியமில்லாமல் போகலாம.; பின் வந்த நாலடியார் சில சொற்களை வேதனையோடு ஒப்புக் கொள்கின்றார்.

வடமொழியை நீக்கினால் தமிழிற்கு எவ்வகையான சொற்களை சபேசன் வைத்திருக்கின்றார் என்று சொல்ல முடியுமா? ஒரு சொல்லுக் கூட அவர் கைவசத்தில் இல்லை என்றே என் கருத்து. வடமொழி மட்டுமல்ல, எந்த மொழியும், ஏன் இப்போது ஆங்கில மொழிச் சொற்கள் அதிகம் தமிழில் நுழைகின்றன. சபேசன் இதற்கு என்ன செய்யப் போகின்றார். அவரது தளமானலும் சரி, அவரது செயற்பாடாகும் சரி, எவ்வகைத் தமிழ் சொற்களை உள்வாங்கின.

உங்களிடம் நல்ல கேள்வியா இல்லையா என்ற பாராட்டு வாங்க நான் எழுதவில்லை.நீங்கள் என்ன பதிலை வைத்திருக்கின்றீர்கள் என்பது தான் என் கேள்வி! வடமொழியை மட்டுமே தூசிக்க முடிந்த உங்களுக்கு ஏன் மற்றய பெயர்களைத் தூசிக்க முடியவி;லை. ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு எவ்விதமான பதிலைத் தருவார்கள் என்று தெரியும்.இந்து மதம் தான் சகிப்புத் தன்மையோடு இப்பதால் அரைக்க முனைகின்றீர்கள்.

அவர் வடமொழியை மட்டும் திட்டுவராம். மற்றவர்களுக்கு பொதுவாகச் சொல்வாராம். நல்ல கூத்துப் போங்கள்.

யேசு வடமொழிப் பெயரல்லவே! தாஸ் மட்டும் தானே வடமொழி.

இந்து சமயம் மட்டும் இருப்பதால் தான் பொதுவான பேச்சு என்பது பொய்க் கதை. அங்கே உங்களுக்கு உள்ள ஆரிய எதிர்ப்பு வெறி என்பது மட்டும் தான். உண்மை. யாழ்களத்தில் நீங்கள் எழுதிய பல கட்டுரைகள் அதை மட்டும் தான் மையப்படுத்தி வந்தன என்பது உண்மை.றோ மீது உள்ள வெறுப்பை இதனூடாகப் பாவிக்க முயல்கின்றீர்கள் என்பது தான் உண்மை.

மூஸ்லீம்கள் தான் இங்கே குறைவு. ஆனால் கணிசமான கிறிஸ்தவ நண்பர்கள் இருக்கின்றார்களே! ஏன் அவர்களின் பெயர்கள் பற்றிச் சொல்ல முடியவில்லை. பீற்றர், அல்போன்ஸ், என்று பெயர்கள் வைக்க எவ்வாறு உங்களின் தமிழ் உணர்வு அனுமதித்தது.

கருணாநிதிக்கு எங்கோ பிறந்த ஸ்ராலினின் பெயர் வைக்க முடிகின்றது. ஆனால் ஆரியப் பெயர் தான் வைக்க கூடாதாம்.

உங்களுடைய திராவிடத்துக்கு ஒரு உருப்படியான கொள்கையும் இல்லாதால் தான், ஆரியத்தைத் திட்டித் தீர்க்கின்றீர்கள். ஏனென்றால் உங்களுக்கு என்று ஒரு கொள்ரக இருந்தால் தானே உங்களுக்குள் விவாதிக்க முடியும். இல்லாவிட்டால் அடுத்த காணியில் தானே மேய முடியும்.

மூடநம்பிக்கையைத் தகர்க்கின்றோம்என்று தங்களைப் புத்திசாலியாக்க காட்ட நிறையப் பேர் முயல்கின்றார்கள் என்பது கண்கூடு. ஆனால் நீங்கள் மூட நம்பிக்கையை மட்டும் தானே தகர்க்கஎ வேண்டும்.ஏன் நம்பிக்கையில் கை வைக்கின்றீர்கள். உங்களுக்கு எவ்வளவு புத்திசாலித் தனம் இருக்கின்றது என்று நினைக்கின்றீர்களோ, அதே அளவு மற்றவர்களுக்கு உண்டு என்று நீங்கள் நினைக்கும் வரை இந்த ஆரியம் என்ற கூக்குரல் மட்டும் தான் உங்களுக்குச் சொந்தம்.

Link to comment
Share on other sites

சில மாதங்களுக்கு முன்பு கனடாவில் இருந்து வருகின்ற "முழக்கம்" பத்திரிகை விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் பேபிசுப்ரமணியத்தை பேட்டி கண்டது.

அப்பொழுது அவரிடம் "தேசியத் தலைவர் வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபவது உண்மையா" என்று முழக்கம் கேட்டது.

பேபிசுப்ரமணியம் பதறிப் போய், தலைவர் எந்தக் கோயிலுக்கும் போவதில்லை என்றும், அவர் பகுத்தறிவுச் சிந்தனையை ஆதரிக்கின்ற ஒருவர் என்றும் விளக்கினார்.

நம்பவில்லை என்றால் கனடாவில் இருக்கும் உறவுகளை விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.

தேசியத் தலைவர் இந்து மதம் சொல்கின்ற புராணங்கள், மனுதர்மம், பார்ப்பனியம் போன்றவைகள் குறித்து என்ன கருத்து வைத்திருக்கிறார் என்பதை தற்பொழுது வருகின்ற கட்டுரைகளில் இருந்து வாசித்து அறிந்து கொள்ளுங்கள். சில கட்டுரைகள் யாழிலும் இணைக்கப்பட்டுள்ளன.

தேசியத் தலைவர் ஆரம்பகாலத்தில் ஒரு கடவுள் பக்தி மிகுந்தவராக இருந்தது உண்மை. அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் உண்மையை உணர்ந்த அவர் இன்று ஒரு பகுத்தறிவுவாதி.

இன்றைக்கு இத்தனை பேசுகின்ற நீங்களும் நாளை மாறலாம். யார் கண்டது?

Link to comment
Share on other sites

ராகவன், ராமசாமி போன்றவைகள் தமிழ் பெயர்கள் அல்ல. அவைகளை தமிழில் எழுதுகின்ற பொழுது "இ" போட்டு எழுதுவார்கள். இது இன்றுவரை தொடர்கிறது.

ஆகவே ர"என்ற எழுத்து முதலில் வரக்கூடாது என்பது தொல்காப்பியர் காலத்தோடு முடிந்துவிடவில்லை.

தூய தமிழ் பெயர்களை ஆதரிக்கின்ற கலைஞரும், தேசியத் தலைவரும் தங்களின் பிள்ளைகளுக்கு ஸ்டாலின் என்றும், சார்லஸ் என்றும் பெயர் வைத்தற்கான காரணங்கள் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன்.

அண்மையில் அமெரிக்காவில் சில தமிழ் இளைஞர்கள் ஆயுதம் கடத்த முயன்றார்கள் என்று கைது செய்யப்பட்ட விவகாரம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

அதில் கைது செய்யப்பட்ட கனடாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுடைய தாய் ஒரு சாத்திரி ஒருவரை பார்க்கப் போயிருக்கிறார். ஏதோ ஒரு வழியில் என்னுடைய மகனுக்கு விடுதலை கிடைத்தால் போதும் என்கின்ற அங்கலாய்ப்பு அவருக்கு.

அந்த சாத்திரி என்ன சொன்னான் தெரியுமா?

"உன்னுடைய மகன் முற்பிறப்பில் பூப்படைந்திருந்த ஒரு பெண்ணை முறை தவறிப் பார்த்து விட்டான். அந்தப் பாவித்திற்குத்தான் இப்பொழுது தண்டனை அனுபவிக்கிறான். அதற்கு 108 பரிகார பூசைகள் செய்ய வேண்டும்" என்று சொன்னானாம்.

அவன்தான் பூசையும் செய்வான் என்றும், ஒரு பூசைக்கு 20 டொலர் முடியும் என்று சொன்னான்.

பாருங்கள்! அந்தத் தாய் தன்னுடைய மகன் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் எவ்வளவு தூரம் நொந்து போயிருப்பார். கடைசியில் கடவுளை நம்பிப் போனவருக்கு 2160 டொலர் மேலும் போய்விட்டது.

இப்படி கடவுளையும், மதத்தையும் வைத்துக் கொண்டு ஏமாற்றுகின்ற பொழுது, நாங்கள் "அவரவர் நம்பிக்கை" என்று பேசாது இருக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வற்றப்பளையில் தலைவர் சமர் வெற்றிக்காக சென்று வழிபடுவதாக, அற்புதன் தான் முந்திக் கதை விட்டவர் என நினைக்கின்றேன். ஆனால் வற்றப்பளைக்கு துணிந்து போகக் கூடிய நிலை ஓயாத அலைகள் 1 சமருக்கு பின்னர் தான் வந்தது. அதற்கு முன்னர் முல்லைத்தீவு நகரத்தில் இருந்து பார்த்தால் வற்றாப்பளையில் ஆள் நடமாடுவது தெளிவாகக் காணக் கூடிய நிலையில் தலைவர் போயிருக்க மாட்டார். ஓயாத அலைகள் 3 இன் போது அற்புதன் உயிரோடு இல்லை. ஆக இடையில் ஓயாத அலை 2 நடவடிக்கை தான் புலிகள் முன்னெடுத்த சமர் என்பதால் இது சாத்தியமில்லை.

மற்றும்படி பேபி சுப்பிரமணியமமோ, வேறு யாருமோ தலைவரின் நடவடிக்கைகள் குறித்து வெளியே சொல்ல மாட்டார்கள். அவரின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அது உங்களுக்குத் தெரியும். தலைவரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ஆரய்வதில் சிலர் ஈடுபடுவது என்பதை சென்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தலைவரின் உணவுப் பழக்கவழக்கம் குறித்து சில நாட்டு பத்திரிகையாளர் முக்கியத்துவம் கொடுத்து, கேள்வி கேட்டதை அவதானிக்கலாம்.

முள்ளியவளை ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலில் ஒரு தளபதி வழிபாடு செய்வதைத் துரோகிகள் மூலம் அறிந்து கொண்ட சிறிலங்கா அரசு, முல்லைத்தீவில் இருந்து ஆட்லறித் தாக்குதலை அப்போது நடத்தியது. ஆனால் அன்று அவர் வராததால் அவர் தப்பித்தார். ஆனால் ஆலயத்தின் தேர் சேதமடைந்தது. பின்னர் தான் முல்லைச் சமர் நடந்தது. அதன் பாடல்களிலும் சித்திரத் தேர் சேதம் குறித்து வரிகள் வரும். பிற்பாடு அவர் வருவதில்லை. இதை ஏன் சொல்கின்றேன் என்றால் சில ஊடகங்கள் முட்டாள்தனமான கேள்விகள் கேட்க கூடாது என்பதை.

மனுதர்மம் என்பது மதக் கொள்கையல்லவே! அது ஒரு மன்னர் தனது ஆட்சிப் பகுதிக்கு கொண்டு வந்த சட்டம். அது மதக் கொள்கையல்ல. தலைவர் அதை எதிர்ப்பதில் தப்பில்லை.

தேசியத் தலைவர் பகுத்தறிவாளர் என்று நீங்கள் நம்புவது கூட வழமையான ஊகத்தின் அடிப்படையிலான சிந்தனை என்பதால் அதைக் கண்டு கொள்ளத் தேவையில்லை என நினைக்கின்றேன்.

என்னைக் குறித்துச் சொன்னீர்கள். நிச்சயமாக நான் மாற மாட்டேன். எனக்கு ஆரிய வெறியோ, இன்னுமொரு கோட்டை அழித்துத் தான், எம் கோட்டை உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற போக்கிரித்தனம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொல்காப்பியம் வெறுமனே ரவை மட்டும் வைத்து இலக்கணம் அமைக்கவில்லை. அதன் விதிப்படி நடக்க வெளிக்கிட்டால் பல சொற்கள் இயல்பிளந்து விடும்.

போராட்டத்தின் ஆரம்பத்தில், 84ம் ஆண்டு தான் சார்ள்ஸ் பிறந்தார். அந்தக் காலத்தில் தமிழில் பெயர் வைப்பது குறித்து முக்கியத்துவம் கொள்ளப்படவில்லை. ஆனால் கருணாநிதியின் அடிப்படையே தமிழ் என்றிலிருந்து தானே ஆரம்பிக்கின்றது. அப்படியிருக்க ஏன் முடியவில்லை.

அதை விட, கிறிஸ்தவப் பெயர்களுக்கு ஏன் என்னும் தமிழ்மொழிப் பெயர் வைக்க வேண்டும் என்று உங்களின் ஆக்ரோசம் பொங்கவில்லை என்று பல தடவை கேட்டு விட்டேன். உங்களிடம் இருந்து என்னும் பதில் வரவே இல்லை.

போலிச் சாத்திரிகள் உருவாக இன்று யார் காரணம். உண்மையான ஆட்கள் வராமல் ஏளனம் செய்தும் ஒதுங்கச் செய்தது யார்? ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் போக்கு சாத்திரத்தில் மட்டுமல்ல, எல்லா விடயத்திலும் இருக்கின்றது. இன்று பாருங்கள் யாழ்பாணத்தில் இத்தனை பட்டினிக் கொடுமை நடக்கவும் எங்களுக்குள் கள்ள வியாபாரிகள், பதுங்கி வைத்துக் கொள்ளை வியாபாரம் செய்யவில்லையா? இப்படியான ஏமாற்றும் கொடுமைகளுக்கு தகுந்த தண்டனை தான் சரி!

அவ்வறே பாருங்கள். தமிழீழ விடுதலைப் போர் என்று வெளிக்கிடும்போது, எத்தனை பேர், நீங்களும் நாங்களும் தான். பணம் சம்பாதிக்கலாம். புலத்தில் சந்தோசமாக வாழலாம் என்று தானே சிந்தித்தோம். அவ்வாறு தான் சாத்திரத்தை ஏமாற்றிப் பிழைக்கும் போக்கிரிகள் எம் மத்தியில் இருக்கின்றார்கள் என்பது உண்மை. இதைச் சீர் திருத்தங்கள் மூலம் தான் கண்டிக்கலாமே தவிர, ஒதுக்கித் தள்ளுவதால் அல்ல.

சாத்திரம் சரியா, பிழையா என்று எனக்குத் தெரியாது. அதில் கை தேர்ந்தவனும் அல்ல. ஆனால் வெறுமனே, யோனியையும், பிட்டத்தையும் மட்டும் கொண்டு அது அமையவில்லை என்று தெரியும். அந்தக் காலத்திலேயே, வானநட்சத்திரங்களைக் கணிக்கும், திறமை மிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பது கண்கூடு. அது கிரேக்கர்களுக்கு நிகராக, அல்லது மேலாகக் கூட இருந்திருக்கலாம். எனவே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, 2 வரியைச் சொல்லி இது சாத்திரம். இதை ஒட்டுமொத்தமாகத் தூக்கி வீசுவோம் என்ற முட்டாள்தனமான சிந்தனைகள் வேண்டாமே!

Link to comment
Share on other sites

நாரதர் அவர்கள் தன்னைத் தான் நான் சுட்டி எழுதுவதாக நினைத்துக் கொள்வது மிகவும் வேதனைக்குரியதாகும். நாரதர் அவர்களை என்றைக்குமே தனிப்பட்டரீதியில் பாதிக்க வேண்டும் என்று எக் கருத்துக்களையும் எழுதவில்லை என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நான் சொல்லவருவது எல்லாம் பெரியார் என்பவர் காட்டிய திராவிடக் கொள்கை பிழையாது என்பது மட்டுமே!

உங்கள் கருத்தாடலில் உள்ள முரண்பாட்டை நீங்கள் உணரவில்லையா?

மேலே பெரியார் காட்டிய திராவிடக் கொள்கை பிழையானது என்று காட்டி உள்ளதாகச் சொல்கிறீர்கள், கீழே திராவிடத்துவம் என்றால் என்ன என்றோ அல்லது அதன் கொள்கை என்ன என்றோ கட்டுரை எதனையும் பார்க்க வில்லை என்கிறீர்கள், மேலும் திராவிடத்துவம் என்பதற்கு சுயமான வியாக்கியானம் எதுவும் இல்லை என்கிறீர்கள்.எனது கேள்வி இவ்வாறு இல்லாத ஒரு திராவிடக் கொள்கையை நீங்கள் எவ்வாறு பிழை என நிறுவி உள்ளீர்கள்.இல்லாத ஒன்றை எவ்வாறு பிழை என நிறுவ முடியும்? உங்களது கருத்தாடல் முழுக்க பெரியாரைத் தூற்றியும் இது பற்றி குறிப்பாக இந்து மதம் பற்றி, நீங்கள் உங்கள் பெற்றோரைப் போல எதுவித சந்தேகமுமின்றி நம்பிக் கொண்டிருக்கும் உங்கள் பிறப்பால் வந்த எந்த வித மாற்றமும் அடையாமல் காலம் காலமாக நிலையாக இருக்கும் உங்கள் மதம் என நீங்கள் நம்பும் இந்து மதம் பற்றி விமர்சனம் செய்வதே உங்களுக்குப் பிழையாகத் தெரிகிறது. அதனால் வரும் கோவமே உங்களை இவ்வாறு கண்ணை மூடிக்கொண்டு அவதூறைச் செய்யத் தூண்டி உள்ளது.

ராமசாமி நாயிடு காலத்தில் இருந்து, இன்று வரைக்கும் திராவிடத்துவம் கதைப்பவர்கள் எந்தப் பிரச்சனையிருந்தாலும், அதை எலல்லாம் விட்டு விட்டு, ஆரியத்தையும், பிராமணர்களையும எங்கே சாட வேண்டும் என்று சந்தர்ப்பம் தேடிக் கதைப்பதைப் பார்க்கப் புரியவில்லையா? ஜாதியை ஒழிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு, பார்ப்பாணர் என்று ஒரு சமுதாயத்தை ஒதுக்கியது அப்பட்டமான ஜாதி வெறி தானே! ஜாதியை ஒழிக்கும் விதம்?

திராவிடத்துவம் என்றால் என்ன என்றோ, அல்லது அதன் கொள்கை என்னவென்று இது வரைக்கும் உங்களால் ஒரு கட்டுரை இணைக்க முடிந்ததா? வெறுமே இந்து மதத்தைப் பற்றி வசைபாடுகின்ற ஆக்கங்கள் தானே இங்கு பதியப்பட்டன. திராவிடத்துவம் என்பதற்கு சுயமான வியாகிக்கியானம் இன்றி, மற்றக் கோட்டை அழித்து, உங்களின் கோட்டை பெரிதாகக் காட்டுவதற்காக தானே இத்தனை காலமும் கட்டுரைகள் புனையப்படுகின்றன.

உங்களுக்குத் தெரியாது என்பதற்காகவோ அன்றி யாழ்க் களத்தில் அவற்றை நீங்கள் பார்க்கவில்லை என்பதற்க்காக்வொ அவை இல்லை என்று ஆகிவிடாது.உங்களுக்குத் தெரியாததை நீங்கள் தான் தேடிப் பெற வேண்டும்.அந்த தேடல் இல்லாவிட்டல் உங்களுக்கு அது தெரியாது.பூனை கண்னை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது.

திராவிடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. மத்திய இந்தியா, வட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற பகுதிகளிலும் சிறிய அளவில் பாரம்பரியமாக வாழும் திராவிடர் காணப்படுகின்றனர்.

திராவிட மொழிகள்

திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது.

சொல்லின் தோற்றம்

திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் என்றும் அச்சொல் திரிபடைந்தே தமிழ் என்ற சொல் உருவானதென்றும் தொடக்கத்தில் ஆய்வாளர்கள் கருதினர். பெரும்பாலும் வெளிநாட்டவரான அக்கால ஆய்வாளர்கள், சமஸ்கிருதப் பின்னணியுடனேயே திராவிட மொழி ஆராய்ச்சியில் இறங்கியவர்கள் ஆதலால், இந்த எடுகோள் அவர்களுக்கு இயல்பாக இருந்தது. வேறு சில ஆய்வாளர்கள், முக்கியமாகத் தமிழ் நாட்டினர், தமிழ் என்ற சொல் மருவியே திரவிட என்னும் சமஸ்கிருதச் சொல் உருவானதாக வாதிடுவர். இவ் விடயத்தில் ஒத்த கருத்து ஏற்படுவதற்கு ஏதுவாகத் தக்க சான்றுகள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்றும் வெவ்வேறு சாராரைக் குறிப்பன என்றும் கனகசபைப்பிள்ளை போன்றவர்கள் கருதினார்கள். எனினும் இக்கொள்கைக்குப் போதிய ஆதரவு இல்லை.

திராவிட இனம் பற்றிய கருத்துரு

19 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் வாழும் மக்கள் பேசும் இந்தோ-ஆரிய மொழிகளுக்குப் புறம்பாக அம் மொழிகளுடன் அடிப்படையில் தொடர்புகளற்ற மொழிக்குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்பட்டு வருவதை அறிந்தார்கள். இதனால், பொதுவாக கரு நிறத் தோல் கொண்டவர்களான திராவிட மொழி பேசுவோர், பரம்பரையியல் அடிப்படையில் தனியான இனம் எனக் கருதினார்கள். அதற்கு இணங்கத், திராவிடர் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்றும், அவர்கள் ஆரியர் வருகையினால் ஒரு பகுதியினர் தெற்கு நோக்கி இடம் பெயர, ஏனையோர் ஆரிய மொழி பேசுவோருடன் கலந்துவிட்டதாகவும் கருதினர்.

திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லான திரவிட என்பதிலிருந்து பெறப்பட்டது. திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்த ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), எழுதிய திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages)என்னும் ஆங்கில நூல் 1856 இல் வெளியிடப்பட்ட பின்னரே இச் சொல், தற்காலப் பொருளுடன் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. மேற்படி நூலே திராவிட மொழிகளை உலகின் முக்கிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக நிலை நிறுத்தியது.

திராவிட இனத் தோற்றம்

திராவிட இனத்தின் தோற்றம் பற்றித் தெளிவான முடிவுக்கு வரக்கூடிய சான்றுகள் இல்லாததால், இது தொடர்பான சர்ச்சைகள் முடிவில்லாது தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் பல்வேறு வகையான கருத்துக்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். திராவிடரும், வெளியிலிருந்தே இந்தியாவுக்குள் வந்தனர் என்பது ஒரு வகையான கருத்து. இது, பெரும்பாலும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்களுட் சிலர் திராவிடர் மத்தியதரைக் கடற் பகுதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள், தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என்கின்றனர். பெரும்பாலும் தமிழ் ஆய்வாளர்கள் சிலரே இக் கருத்தைத் தீவிரமாக ஆதரித்தார்கள். இந்தியாவுக்குத் தெற்கே, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்து அழிந்து போனதாகக் கருதப்படுகின்ற இலெமூரியா எனக் குறிப்பிடப்படும் ஒரு நிலப் பகுதியையும், தமிழ் இலக்கியங்கள் சிலவற்றில் பேசப்படும் குமரிக்கண்டம்[1] என்பதையும் ஒன்றாக்கி, அப்பகுதியே தமிழர் (திராவிடர்) தோன்றிய இடம் என இவர்களில் சிலர் வாதிட்டனர். சிலர், மனித இனமே இங்கேதான் தோன்றியது என்றும், முதல் மனிதன் திராவிடனே என்றும் காட்டமுயன்றனர். தமிழ் நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வுகள் வலுவடைந்திருந்த ஒரு காலத்தில், இவ்வாறான கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன எனினும், இத்தகைய முன்மொழிவுகள் பிற ஆய்வாளர் மத்தியில் போதிய ஆதரவைப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

இன வகைப்பாடு

மானிடவியலாளர், இந்தியர்களை, குறிப்பாக, திராவிடர்களை, இன அடிப்படையில் வகைப்படுத்துவது தொடர்பில் நீண்ட விவாதங்களை நடத்தியுள்ளனர். ஒரு வகைப்பாட்டின்படி, திராவிடர்கள், ஆஸ்திரலோயிட் அல்லது வெத்தோயிட் என்னும் இனப்பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டது.

பரம்பரையியல் வகைப்பாடு

மக்களை இனங்களாக வகைப்படுத்துவது தொடர்பான பரம்பரையியல் நோக்குப் பெருமளவு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலான தற்கால மானிடவியலாளர், பரம்பரையியல் அடிப்படையில் இனங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை[2]. ரிச்சர்ட் லெவொண்டின் (Richard Lewontin) என்பவர், ஒவ்வொரு மனித மரபணுவும் இன்னொன்றிலிருந்து வேறுபடுவதை எடுத்துக்காட்டி, இனங்களை வரையறை செய்வதில் பரம்பரையியல் பயன்படாது என்று கூறுகிறார்[3]. எனினும் பல ஆய்வாளர்கள், பரம்பரையியல் முறைகளைப் பயன்படுத்தி இனங்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு முயன்றுள்ளனர். கவல்லி-ஸ்ஃபோர்சா (L.L. Cavalli-Sforza) என்பவர், எல்லா இந்தியர்களுமே பரம்பரையியலின் அடிப்படையில் காக்கேசியர்களே (Caucasian) என்றார்[4]. லின் பி. ஜோர்டே (Lynn B Jorde), ஸ்டீபன் பி. வூடிங் (Stephen P Wooding) போன்றவர்கள், தென்னிந்தியர்களைப் பரம்பரையியல் அடிப்படையில், ஐரோப்பியர்களுக்கும், கிழக்கு ஆசியர்களுக்கும் இடையில் வைத்தார்[5][6][7]. அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் சில, உயிரியல் ரீதியான திராவிட இனம் என்ற கருத்துரு தொடர்பில் ஐயப்பாடுகளை உண்டாக்குவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புகள்

↑ குமரிக் கண்டம், தெற்கில் கடலையும், மேற்கில் மடகாஸ்கர் தீவையும், கிழக்கில் சாவகத்தையும், வடக்கில் விந்திய மலையையும் எல்லையாகக் கொண்டிருந்தது என்றனர்.

↑ Bindon, Jim. அலபாமா பல்கலைக்கழகம். மானிடவியற் பிரிவு. ஆகஸ்ட் 23, 2006. <http://www.as.ua.edu/ant/bindon/ant275/presentations/POST_WWII.PDF#search=%22stanley%20marion%20garn%22>.

↑ Lewontin, R.C. Biology as Ideology The Doctrine of DNA. Ontario: HarperPerennial, 1991.

↑ Sailer, Steve. Interesting India, Competitive China. xbiz. இணைப்பு 2006-09-12 அன்று அணுகப்பட்டது.

↑ Jorde, Lynn B Wooding, Stephen P. Nature Genetics. Department of Human Genetics. 2004. <http://www.nature.com/ng/journal/v36/n11s/full/ng1435.html>.

↑ Bamshad, M.J. et al. Human population genetic structure and inference of group membership. Am. J. Hum. Genet. 72, 578−589 (2003).

↑ Rosenberg, N.A. et al. Genetic structure of human populations. Science 298, 2381−2385 (2002).

[தொகு] வெளியிணைப்புகள்

இஸ்லாத்துக்கு முற்பட்ட சிந்துவெளியின் மக்களும், மொழிகளும் (ஆங்கிலம்)

திராவிடர் - வி.சிவசாமி (தமிழ்)

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D" இலிருந்து மீள்விக்கப்பட்டது

மேலே உள்ளது விகிபிடியாவில் எந்தவித அரசியல் கலப்பும் அற்ற ஒரு கட்டுரை.திராவிடம் சம்பனத்தமான பல் துறைத் தகவல்களைத் தருகிறது.இங்கே நோக்கப் பட வேண்டியவை,எந்த ஆய்வுமே ஆரிய திராவிட மொழிக் குழுமங்கள் வெவ்வேறானவை என்பதை ஏற்றுக் கொள்கின்றன.ஆரிய மொழிக் குழுமத்தைப் பேசும் மக்களும் அதில் இருந்து முற்று முழுதாக வேறுபட்ட தனித்துவமான திராவிட மொழிக் குழுமத்தைப் பேசும் மக்களுமிருந்தனர் என்பதை மறுதலிக்கவில்லை.சர்ச்சைக்கு

Link to comment
Share on other sites

தலைவருக்கு வல்வெட்டித் துறையில் கோவில் இருக்கின்றது என்று நீங்கள் நம்பவல்லையா?

அவரின் மூதாதையர் வழி பாடு செய்ததற்கும் தலவரது நம்பிக்கைகளுக்கும் என்ன சம்பந்தம்?

அல்லது தலைவர் திருமணம் முடித்தது தமிழ்நாட்டில் உள்ள இந்து ஆலயம் ஒன்றை நீங்கள் அறியவில்லையா?அந்தத் திருமணத்தை அன்ரன் பாலசிங்கம் தான் நடத்தி வைத்தார்.அது தொடர்பான படங்கள் இணையத்தில் வந்திருந்தன. தேடினால் கிடைக்க கூடும்.

தலவர் ஒருவரைத் திருமணம் செய்கிறார்.அந்த ஒருவருக்கும் சில நம்பிக்கைகள் இருக்கும்.அந்த நம்பிக்கைகளுக்கும் மதிப்புக் கொடுப்பதே சம உரிமை. நாம் எமது விருப்பத்தை திருமணம் என்னும் பந்தத்தின் மூலம் இனொருவர் மீது திணிக்க முடியாது.இந்து முறைப்படி திருமணம் செய்வாதால் தலைவரின் கொள்கைகள் இந்துமத ரீதியானவை என்று நீங்கள் நிறுவ முற்படுவதே மோசடியானது என்று கூறுகிறேன்.அங்கு என்ன நடந்தது என்பதை நான் அறிவேன்,அது தனி நபர் சார்ந்த விடயம் அது பற்றி மேலும் எழுதவோ விமர்சிக்கவோ நான் விரும்பவில்லை.

கிபிரை அடிக்க வேண்டும் என்று போராளி செய்கின்றான் என்று சொல்வது அவனது செயற்பாட்டைஅவமானப்படுத்துவ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஆரியம் திராவிடம் என்பதெல்லாம் பெரியார் போன்றவர்களின் அரசியல் புஷ்வாணங்கள்.

இதுதான் திராவிடம் என்பதற்கான வரலாற்று வடிவம் கிடையாது. திராவிட மொழிகள் என்பதில் அதென்ன திராவிடம் என்றால்..அதற்கு விளக்கம் இல்லை.

உண்மையில் ஆரிய திராவிட பாகுபாடின்றி இந்தியாவின் வடக்கிலும் தெற்கிலும் மக்கள் ஒற்றுமையோடு வாழ்ந்துள்ளனர் என்ற உண்மை வரலாற்றியல் ஊடாகவும் பெரியாரின் காலத்துக்குப் பின்னரான நவீன ஆர்கியோலொஜி மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் திராவிடர்களா ஆரியர்களா என்பது அல்ல அவசியம். தமிழ் மொழியும் அம்மொழி சார்ந்தோரின் வரலாறு இருப்பும் அவற்றிற்கான வரலாற்றுச் சான்றுகளுமே தமிழர்களின் வரலாற்றை நவீன உலகியல் ஒழுங்கில் அதிகம் வலியுறுத்திச் சொல்லப் போகின்றன. பண்டைய திராவிடம் என்பதற்கு ஊடாக தமிழர்கள் சாதிக்க நினைப்பது என்ன? தமிழர்களுக்கு ஆரிய திராவிட பாகுபாட்டினின்றும் எழும் ஆரிய எதிர்ப்பு அவசியம் தானா? திராவிடர்கள் என்பதற்காக தமிழர்கள் அல்லாதோர் எமது விடுதலைப்போராட்டத்துக்கு உதவி அளிக்கின்றனரா? தெலுங்கர்கள் மலையாளத்தவர்கள் கர்னாடகத்தவர்கள் தமிழகத்தில் உள்ள தமிழர்களையே உணர மறுக்கிறார்கள்...எமக்கு..என்ன செய்யப் போகிறார்கள்.

அநாவசிய ஆரிய திராவிட எதிர்ப்பை தமிழர்கள் மத்தியில் விதைத்து தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை ஆரிய,பார்ப்பர்ணிய எதிர்ப்பு போராட்ட வடிவமாக்கி சிக்கல் தன்மைக்குள் கொண்டு செல்வதைச் சிலர் செய்ய முனைகின்றனர். உலக அரங்கில் தமிழர்கள் தங்கள் பாரம்பரியத்துக்கான ஆதரவை வேண்டி நிற்கும் இவ்வேளையில் தமிழர்களின் மொழியியல் சார்ந்த இருப்புக்கள் நோக்கி அவர்கள் வலுவான வரலாற்றுச் சான்றுகளை தேட வேண்டிய தேவையில் அநாவசிய கற்பனைப் பதங்களான ஆரிய திராவிடம் பேசி ஆரிய திராவிட வெறியைத் திணிப்பதைச் செய்வதில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பெரிய அளவில் நன்மை கிடைக்கப் போவதில்லை.

இவை தவிர்க்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது. நவீனத்துவ வரலாற்று ஆய்வுகளை நோக்கி தமிழர்கள் நடைபோட்டு தங்கள் மொழி மற்றும் இன அடையாளங்களுக்கான வரலாற்றுத் தொன்மைகளை நிரூபிக்க முனைவதை விடுத்து பல தசாப்தங்கள் பழமையான ஆரிய திராவிட பழமை வாதம் பேசிக் கொண்டு காலம் கழிப்பதில் எந்தப் பயனுமில்லை.

"An Aryan invasion of India from the outside around 1,500 B. C. did not occur. People of North

and South India have lived together in peace as two branches of one family since antiquity.

People who talk of an Aryan conquest of India parrot the 19th century British viewpoint and do

disservice to the cause of unity of India."

http://www.uwf.edu/lgoel/documents/AMythof...ionsofIndia.pdf

Link to comment
Share on other sites

குதர்க்கமாகக் கதைப்பது அன்று தொடக்கம் இன்று வரை பெரியார் வழி வந்தவர்களின் பழக்கம் என்பது ஏதோ உண்மை தான். தேங்காய் உடைத்தால் பரிட்சையில் சித்தி என்று அல்ல. பரீட்சைக்குப் போறகின்றவனுக்கு ஒரு துணிவைக் கொடுக்க கூடும். பலருக்கு பரிட்சை என்றால் கைகால் நடுங்கும். அல்லது டொய்லட்டுக்கு தொடர்ந்து போகின்றவர்களுக்கு, இறைவன் துணை இருப்பார் என்று நம்புவது தப்பல்ல.

பலர் மேலே சிவமயம் கூடப் போடுவார்கள். அது அவர்களது தனிப்பட்ட நம்பிக்கையாகும்.

இதைத் தானே நான் சொன்னேன் கடவுள் இல்லை என்று நம்பி பரீட்சை எழுத துணிவு வேண்டும் என்று.. :D

புலத்தில் பணம் கிடைப்பதாக ஆலயம் உருவாவது உண்மை தான். ஆனால் ஊரை எடுத்தால் பெரும்பாலனவர்களுக்கு உரித்துடைய ஆலயங்கள் என்று இருக்கின்றன. அங்கே பணத்தைச் சம்பாதிக்கும் எண்ணமிருக்காதே! அப்படிப் பார்த்தால் அன்னதானம் செய்வது எல்லாம் எதற்காக.

ஒரு நாள் சனத்தை கூட்டுவதற்காக வழங்கப் படும் அன்னதானத்தால் மக்களின் பசிபட்டிணி ஒழிந்து விட்டதா? ஊரில் உள்ள கோவில்களுக்கு வருமானங்கள் பல நில புலங்களில் இருந்து வந்தது.பண்டைய காலத்தில் கோவில்களுக்கான சொத்துக்கள் அரசர்களிடம் இருந்து வனததன.அரசர்கள் மக்களிடம் கொள்ளை அடித்தனர். நில புலன் உள்ள வேளாளர் உழைக்கும் மக்களிடம் இருந்து கொள்ளை அடித்ததை தமது பாவங்களைக் கழுவ கோவில்கள் மூலம் பிராமணர்களிடம் வழங்கி முக்தி பெற்றனர்.

வேண்டாததை இழக்கலாம் என்றால், வயது போனவர்களை விவேக் பாணியில் தூக்கிப் போடுவீர்களா?

வயது போனவர்கள் வேண்டாதவர்கள் என்று விவேக் வடிவேலு சொல்வது தான் உங்களின் தரம் என்றால் அதையே கேட்டுக் கொண்டிருங்கள்

இந்தக் கேள்வி உங்களிடம் கேட்கப் பட்டது என்பதைப் புரிவீராக. ஆரியர் அப்போது செய்த தவறுக்காக ஆரியரை எதிர்ப்பதாக நீங்கள் சொன்ன பதிலுக்காகவே உங்களைக் கேட்டேன்.

ஆரியர் கொண்டு வந்த அடக்குமுறைச் சித்தாந்தமான பார்ப்பனீயம் இன்றைய தமிழரின் சமூக நலத்திற்கு உகந்தது அல்ல என்பதால் தான் அது களையப்பட வேண்டுமென்று சொல்கிறோமே தவிர அது ஆரியரால் கொண்டுவரப்பட்ட ஒன்று என்பதற்காக அல்ல.

நல்லதை மட்டுமே உள்வாங்குவோம் என்பது தான் என் கருத்தே தவிர, எல்லாம் என்றில்லை.

மேலே சொன்னது கீழ்ச் சொன்னதற்கு முரணாக இல்லை?

வேண்டாததை இழக்கலாம் என்றால், வயது போனவர்களை விவேக் பாணியில் தூக்கிப் போடுவீர்களா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமக்குத் தெரியாத விடயங்களில் மேதைகளாகப் பலர் உள்ளனர் போலுள்ளது.

A great many people think they are thinking when they are merely rearranging their prejudices.

"William James"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமக்குத் தெரியாத விடயங்களில் மேதைகளாகப் பலர் உள்ளனர் போலுள்ளது.

இப்படிச் சொல்லிச் சொல்லியே வாழும்... நவீனத்துவத்துவத்தூடு உண்மைகளை ஜீரணிக்கத் தகுதியற்ற பல மேதைகளும் உள்ளனர். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்லிச் சொல்லியே வாழும் நவீனத்துவத்துவத்தூடு உண்மைகளை ஜீரணிக்கத் தகுதியற்ற பல மேதைகளும் உள்ளனர். :P

A great many people think they are thinking when they are merely rearranging their prejudices.

"William James"

:D:D :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A great many people think they are thinking when they are merely rearranging their prejudices.

"William James"

Opinions founded on prejudice are always sustained with the greatest violence :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Opinions founded on prejudice are always sustained with the greatest violence :D

Prejudices, it is well known, are most difficult to eradicate from the heart whose soil has never been loosened or fertilised by education; they grow there, firm as weeds among stones.

Reasoning against a prejudice is like fighting against a shadow; it exhausts the reasoner, without visibly affecting the prejudice.

Link to comment
Share on other sites

குருவிகள் ஆரிய படையெடுப்பு நடக்கவில்லை என்று சைக்கிள் கப்பில முருங்க மரத்தில ஏறுறார். இவருடை புஸ்வாணங்கள் எப்ப நிக்க போகுது :D

தூயவன் போன்றவர்களிற்கு

யாருக்கும் எந்த நம்பிக்கையையும் தொடர பின்பற்ற முழு உரிமை இருக்கு. ஆனால் அவை மற்றவரை பாதிக்காத வரை. மற்றவரை பாதிப்பது என்பது மதத்தின் பெயரால் மற்றவரின் உரிமைகளை மறுப்பது உடமைகளை உரிமை கோருவதும் அபகரிப்பதும் தான்.

அரசமரத்தை சாட்டாக வைத்து விகாரை கட்ட நிலங்களை அபகரிப்பதோ, இராமாயணத்தின் பெயரால் பாபரி மசூதியை இடித்து இராமருக்கு கோயில் கட்டுவதோ, கடவுளின் பெயரால் வேதங்களின் பெயரால் பிறப்பால் மக்களை பிரிப்பது, அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்குவது, சூத்திரர்கள் கெட்டவர்கள் என்று தரப்படுத்துவது என்பது ஒரு மதத்தை பின்பற்றுபவர்களின் தனிப்பட்ட உரிமை என்று ஏற்றுக் கொள்ள முடியாது. பலருக்கு இந்து மதமும் அது எமது சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கங்களும் அவர்களுடைய தனிமனித உரிமையாக தெரிவது அவர்கள் பிறந்ததில் இருந்தே அந்த சமூக கட்டமைப்பில் அதிகாரங்கள் கொண்ட வர்க்கமாக இருப்பது தான் ஒரே காரணம். அதிகார வர்க்கங்களிற்கு பிறப்பில் இருந்தே அனுபவித்த அதிகாரங்களை விட்டுக் கொடுப்பது தனிமனித உரிமைப் பிரச்சனையாக தெரிவது ஒன்றும் புதிய விடையம் அல்ல. அவர்கள் மதத்தின் பெயரால் தாள்த்தப்பட்டவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர்களின் பிரிவில் இருந்தால் அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்து மதத்தை விமர்சிப்பது தனிமனித உரிமை மீறலாக பினாத்த வைக்காது.

கிறீஸ்தவ மதமோ இஸ்லாம் மதமோ மற்றவர்களை பிறப்பால் தரப்படுத்தி உரிமைகளை மறுக்கும் பொழுது அதை மற்றவர்கள் மீது திணிக்கும் நிலைக்கு செல்லும் பொழுது அதுவும் ஒரு சமூகப்பிரச்சனையாக விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எந்த ஒரு இனத்திற்கும் மற்றவர்களை பிறப்பால் தரப்படுத்தி தீர்பு சொல்ல விசேட உரிமை இல்லை. ஆனால் பார்ப்பணியம் அதைத்தான் கடவுளின் பெயரால் செய்கிறது. அதை அவர்களது நம்பிக்கை சார்ந்த உரிமை என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

இங்கு தொடர்ச்சியாக விமர்சனத்திற்கு உள்ளாகும் இந்து மதத்தினதும் பார்ப்பணியத்தினதும் விடையங்களானது அவற்றின் பெயரால் ஒருவர் இன்னொருவர் மீது செலுத்தும் ஆதிக்கம் மேலாண்மை அதிகாரங்கள் பற்றியது. அடுத்து யதார்தமான வாழ்வில் பகுத்தறிவின் மூலம் முன்னேறியுள்ள விடையங்கள் பற்றியும் அவற்றிற்கு முரணாக இந்து மதத்தில் உள்ள விடையங்கள் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டப்படுகிறது. இது மக்கள் முற்பிறப்பு பாவ புண்ணியம், பிராயச்சித்தம், விரதம், உபவாசம், அபிசேகம், நேர்த்திக்கடன் என்று சவால்களை நேரடியாக எதிர்கொள்ளாது சுற்றி வழைத்து நேரத்தையும் வளங்களையும் விரயமடித்து ஏமாரக் கூடாது. தன்னம்பிக்கையோடு தகுந்த தயார்படுத்தலோடு நேரடியாக எதிர்கொள்ள வேண்டும் அதைச் செய்து தான் ஏனைய இனங்கள் நாடுகள் முன்னேறியுள்ளன என்ற தெளிவை உண்டாக்கவே. இது எம்மை வளமுள்ள இனமாக்க அடிப்படையானது. வளமற்ற இனங்களிற்கு சுதந்திரம் கிடைக்காது. யாருடை கைக்கூலியாகவோ அடிவருடியாக நிழலில் தற்காலிகமாக ஒதுங்கி கொள்ளலாம். இது தான் வரலாறு. இல்லாவிட்டால் அழிவு தான் மிஞ்சும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரிய படையெடுப்பு நடக்கவில்லை என்று சைக்கிள் கப்பில முருங்க மரத்தில ஏறுறார். இவருடை புஸ்வாணங்கள் எப்ப நிக்க போகுது

இப்படிச் சொல்வதுதான் புஸ்வாணமாகி பஸ்பமாகிவிட்டது.

இணைப்பைப் படிக்க.

குறித்த கட்டுரை தவறு என்றால் குறித்த பல்கலைக்கழகத்துக்கு எழுதி அது தவறுதான் என்று நிரூபியுங்கள்...! சும்மா புஸ்வாணம் கதையளப்பதால் அது அப்படியாகிடாது,

ஏற்கனவே களத்தில் விடுக்கப்பட்ட அறிவித்தலை நோக்கம். இவர் அவர் என்று கருத்தெழுதுதல் தவிர்க்கப்பட வேண்டும். நீங்கள் எழுதிய பெயருக்கும் நமக்கும் தொடர்பில்லை. கருத்தை திசை திருப்பும் நோக்கோடு மீண்டும் நீங்கள் களத்தை உங்கள் இஸ்டம் போல பாவிக்க முற்படுகிறீர்கள். :P

Link to comment
Share on other sites

நாம் தருகின்ற இணைப்புக்களை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வது இல்லை. நீங்கள் தருகின்ற இணைப்புக்களை மட்டும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

நீங்கள் 10 இணைப்புக்களை கொடுத்தால், எம்மாலும் 10 இணைப்புக்களை கொடுக்க முடியும். மாறி மாறி இணைப்புக்களை கொடுத்து என்ன பயன்? இப்படி இணைப்புக்களை கொடுத்து விவாதத்தை திசைதிருப்பியதுதான் நடந்தது.

ஆகவே நீங்கள் அவைகளை படித்து அதை இந்த விவாதத்திற்குள் நின்று தர்க்கரீதியாக எமக்கு விளக்குங்கள். சரி என்று சொன்னால், ஏற்றுக் கொள்வதில் எமக்கு எவ்வித தயக்கமும் இல்லை.

Link to comment
Share on other sites

குருவிகள் போன வருடம் விட்ட புருடா தொடருது. :D

எல்லா பல்கலைக்கழகங்களிலும் உள்ள விரிவுரையாளர்கள் ஆய்வு செய்பவர்களிற்கு சொந்த (accademic & research staff) இணையம் (personal home page) நடத்த ஒரு பிரிவு கொடுக்கப்படுகிறது. அதில் அவர்கள் தமது CV போடுவார்கள், தமது பொழுது போக்கு, கலாச்சாரம், நம்பிக்கை, மதம், இனம், நாடு சம்பந்தப்பட்ட விடையங்களை எழுதுவார்கள்.

ஈழத் தமிழர் சிலர் கூட தமிழீழம் பற்றி இவ்வாறான இணையங்களில் எழுதியிருந்தனர்.

அது அந்த பல்கலைக்கழகங்களின் உத்தியோகப+ர்வ நிலைப்பாடு அல்ல. இந்த பழய புளிச்சுப் போன புருடாக்களை விட்டுட்டு ஏதாவது புதுசா விடலாமே :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பல்கலைக்கழகங்களிலும் உள்ள விரிவுரையாளர்கள் ஆய்வு செய்பவர்களிற்கு சொந்த (accademic & research staff) இணையம் (personal home page) நடத்த ஒரு பிரிவு கொடுக்கப்படுகிறது. அதில் அவர்கள் தமது CV போடுவார்கள், தமது பொழுது போக்கு, கலாச்சாரம், நம்பிக்கை, மதம், இனம், நாடு சம்பந்தப்பட்ட விடையங்களை எழுதுவார்கள்.

ஈழத் தமிழர் சிலர் கூட தமிழீழம் பற்றி இவ்வாறான இணையங்களில் எழுதியிருந்தனர்.

அது அந்த பல்கலைக்கழகங்களின் உத்தியோகப+ர்வ நிலைப்பாடு அல்ல. இந்த பழய புளிச்சுப் போன புருடாக்களை விட்டுட்டு ஏதாவது புதுசா விடலாமே :P

எந்தப் பப்ளிகேசனிலும் பல்கலைக்கழகத்தின் பெயரைப் பாவிக்க வேண்டின் அந்த பல்கலைக்கழகத்தின் துறைசார் அனுமதி பெறப்பட வேண்டும்.

அந்தக் கட்டுரையில் பல்கலைக்கழகத்தின் பெயர் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

http://www.uwf.edu/lgoel/documents/AMythof...ionsofIndia.pdf

நீங்கள் இந்தக் கதைகளை வேறு யாருக்கும் அவியுங்கள். வேகலாம்.

இதோ..இதையும் வாசியுங்கள்...

http://www.tamilnation.org/heritage/agrawal.htm

சென்ற தசாப்தப் புராணங்களை கிழித்தெறிய வேண்டிய வேளைகள் வந்தாயிற்று. ஆரிய பார்ப்பர்ணியப் பெயர்களில் கட்டுரைக் கூத்தாட்டம் முடியும் வேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும், புதிய ஆய்வுகளையும் சான்றுகளையும் நோக்கி தமிழர்களின் நவீன ஆர்கியோலொஜி பயணிக்க வேண்டிய கட்டாயத்தையும் சொல்வதே நம் கடன். பெரியாரும் புடலங்காயும் அழிக்கிப் போன 4/5 தசாப்தத்துக்கு முந்திய சரக்குகள். அதை வைத்து இன்னும் குப்பை கொட்ட நினைப்பவர்களை என்னென்பது.

இந்திய எழுதறிவு வீதம் 25-45% ஆக இருக்கும் போது பெரியார் அவிழ்த்தவை பகுத்தறிவாக தெரிந்திருக்கலாம். இன்று இலங்கையே 90% மேல் கல்வி அறிவு பெற்ற மக்களைக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள் நவீனத்துவத்தை விளங்கக் கூடிய வகையில் முன்னேறி இருக்கும் போது மக்களை எருமை மாடுகளாக எண்ணி பெரியார் மழையைப் பொழிந்து கொண்டிருப்பதில்..பயனில்லை. மாற வேண்டியவர்கள் மாறுங்கள்.

நமது தேவை நவீனத்துவ கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே. மக்களைப் பகுத்தறிவற்றவர்களாக நாம் காணவோ உச்சரிக்கவோ போறதில்லை. இன்று மக்களுக்கு நல்ல பகுத்தறியும் ஆற்றல் பிறந்துள்ளது. அவர்களே தீர்மானிப்பார்கள் எவை அவசியாமனவை எவை சான்றுகளோடு பிறக்கின்றன என்று.

எனியும் பெரியார் வார்த்தையில் விஞ்ஞானம் வளர்த்ததும் ரொக்கற் விட்டதும் அவசியமில்லை. இந்தியாவே சந்திரனுக்கு கலம் அனுப்பும் நிலையை அடைந்துவிட்டிருக்கிறது. உலகமே வியக்கும் வகையில் தகவல்தொழில்நுட்பத் துறையில் விருத்தி கண்டிருக்கிறது. அதற்காக இந்தியா இன்னும் அடிமட்டத்தில் உள்ளதாக எண்ணிக் கொண்டு பெரியார் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் குஷ்பு சொன்னா என்று மக்களைப் பிராக்காட்டி ஏய்க்கலாம் என்பது நடக்கப் போறதில்லை.

மக்களுக்கு தகவல்களை வழங்கினால் போதும் அவர்கள் தீர்மானிப்பார்கள் அவற்றின் முக்கியத்துவம் என்னென்று. அதுதான் இன்றைய உலகியல் போக்கு. பெரியாரின் வார்த்தைகள் இறந்து தசாப்தங்கள் கடந்தாயிற்று. அதை இன்னும் அரைச்சுக் கொண்டிருப்பவர்கள் தான் இன்னும் பிற்போக்கான சிந்தனையோடு இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக இருக்கிறது. :P

Link to comment
Share on other sites

God of small things- A Review, Oneness in Hindusim போன்றனவும் உண்டு. pdf இல் தான் வேலை செய்யும் இடத்தின் பெயரை போட்டு விட்டால் அது offical publication ஆகிவிடாது. :P

அது துறைசார் நிபுணர்களின் விமர்சனங்களை எதிர் கொண்ட (defended in a professional conference) ஒரு ஆய்வு ஆராச்சியின் அடிப்படையில் உருவான அறிக்கை அல்ல. மேலே கூறியது போல் தான் ஆர்வம் காட்டும் பல விடையங்கள் பற்றிய தனது சொந்த கருத்துக்களை pdf ஆக போட்டிருக்கிறார். அதை offical publication என்று based on scientific evidence என்று சுத்துமாத்து பண்ணிற அளவிற்கு அறிவற்றவர்கள் அல்ல இங்கு உள்ளவர்கள்.

பரதநாட்டியம் பற்றி முன்னய விவாதத்திலும் geocities உள்ள தனிநபர் ஒருவரின் இணையத்த ஆதாரமாக காட்டிய விற்பன்னர் அல்லவா நீர். வேறு என்னத்தை உம்மிடம் எதிர்பார்க்க முடியும்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

God of small things- A Review, Oneness in Hindusim போன்றனவும் உண்டு. pdf இல் தான் வேலை செய்யும் இடத்தின் பெயரை போட்டு விட்டால் அது offical publication ஆகிவிடாது. :P

அது துறைசார் நிபுணர்களின் விமர்சனங்களை எதிர் கொண்ட (defended in a professional conference) ஒரு ஆய்வு ஆராச்சியின் அடிப்படையில் உருவான அறிக்கை அல்ல. மேலே கூறியது போல் தான் ஆர்வம் காட்டும் பல விடையங்கள் பற்றிய தனது சொந்த கருத்துக்களை pdf ஆக போட்டிருக்கிறார். அதை offical publication என்று based on scientific evidence என்று சுத்துமாத்து பண்ணிற அளவிற்கு அறிவற்றவர்கள் அல்ல இங்கு உள்ளவர்கள்.

குறிப்பிட்ட கட்டுரை (Article) என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. Research paper publication அல்ல. குறித்த எழுத்தாளர் அப்பல்கலைக்கழகப் பேராசிரியர் என்ற வகையில் அவருக்கு பல்கலைக்கழகம் கொடுத்த அனுமதிகளின் கீழேயே தனது இணைய பப்பிளிக்கேசன் பற்றிய பட்டியலின் கீழ் இதை இணைத்துள்ளார். எந்த ஒரு புரவெசனல் ஆளும் தன்னுடைய profile details ஆக வெறும் பம்மாத்துக் கட்டுரையை இணைக்கமாட்டார். நீங்கள் மீண்டும் அநாவசியமாக அதை ஆராய்ச்சிக் கட்டுரை என்ற தோறணையில் சொல்ல வருகின்றீர்கள். ஆனால் அக்கட்டுரை பல ஆராய்சிக்கட்டுரைகளின் சாரங்களை உள்வாங்கி வரையப்பட்டுள்ளது. அதற்காகத்தான் அடுத்த இணைப்பு வழங்கப்பட்டது.

முடிந்தால் நீங்கள் ஒரு கட்டுரையை எழுதி பல்கலைக்கழகம் ஒன்றின் பெயரின் கீழ் இப்படிப் பிரசுரியுங்கள். உங்கள் தகுதிநிலை மற்றும் அனைத்து விபரங்களையும் உள்ளடக்கி( As your profile detail) அப்படிச் செய்தீர்கள் என்றால் நீங்கள் சொல்வதான எவரும் தங்கள் தங்கள் கட்டுரைகளை பல்கலைக்கழகங்களின் இணைய சேமிப்பு வசதிகளைப் பயன்படுத்தி வெளியிடலாம் என்பதை நம்பலாம். அதைவிடுத்து அடுத்தவரை முட்டாள் என்று எண்ணிக் கொண்டு கருத்தெழுதுவதைத் தவிருங்கள்.

சும்மா எதிலும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற தோறணையில் கருத்தெழுதுவதை விடுத்து சொல்லப்படும் விடயங்களில் குழப்பமான உங்கள் பார்வையை மற்றவர்களின் குழப்பமாகக் காட்டித்து தப்பிக்காமல் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். இவை போலித்தனமான கட்டுரைகள் அல்ல. அவர்களின் முகவரிகள் மின்னஞ்சல் வசதிகள் எல்லாம் அளிக்கப்பட்டுள்ளன. நீங்கள் அவசியம் என்றால் தொடர்பு கொண்டு மேலதிக உறுதிப்படுத்தல்களைச் செய்யலாம்.

இது link to profile

http://www.uwf.edu/lgoel/

பல்கலைக்கழக துறைசார் ஆசிரியர்களின் கட்டுரைகளின் இணைப்பிலும் உண்டு..இக்கட்டுரை....

http://www.uwf.edu/govt/facultyforums/

பரதநாட்டியம் பற்றி முன்னய விவாதத்திலும் geocities உள்ள தனிநபர் ஒருவரின் இணையத்த ஆதாரமாக காட்டிய விற்பன்னர் அல்லவா நீர். வேறு என்னத்தை உம்மிடம் எதிர்பார்க்க முடியும்? :lol:

இது பற்றி எமக்குத் தெரியாது. நீங்கள் கனவில் கற்பனையில் யாரையோ எண்ணிக்கொண்டு எம்மோடு அநாவசியக் கருத்தாடலை செய்ய முனைகின்றீர்கள் என்பதற்கு இது சாட்சி. நீங்கள் யாதும் அறிந்தவர் என்றால் உங்களின் பப்ளிக்கேசங்கள் ஏதாவது பல்கலைக்கழக தளத்தில் இருந்தால் உங்களின் விபரங்களோடு வெளியிடுங்கள்.

Tamilnation.org கூட மேற்குறிப்பிட்ட ஆரியர் வருகையை நிராகரிக்கும் நவகால ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த கட்டுரைகளின் சாரங்களை வெளியிட்டுள்ளது.

http://www.tamilnation.org/heritage/agrawal.htm

Link to comment
Share on other sites

நெடுக்கால போவான் இது பற்றி பலமுறை எழுதியாயிற்று, ஆரிய படயெடுப்பு என்பது நடைபெறவில்லை ஆரியக் குடிப்பெயர்வு சிறு சிறு கூட்டமாக் நடைபெற்றது என்பதியே மேற் கூறிய கட்டுரைகள் கூறுகின்றன.இதானால் ஆரியர் கைபர் கணவாயினூடாக இந்தியாவிற்குள் வந்தனர் என்பதுவோ, திராவிட மொழி பேசும் மக்கள் அதற்கு முன்னர் இருந்தனர் என்பதுவோ இல்லை என்று எந்த ஆராச்சியும் கூறி விடவில்லை.

மேலும் பெரியார் கூறியவை செய்தவை அந்தக் காலகட்டைதின் தேவையாக இருந்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள், அதனடிப்படையிலயே அவரை விமர்சிக்கமுடியும்.அவரின் அதே அணுகுமுறைய இப்போதும் கைக்கோள்ள வேண்டுமென்று எவரும் கூறிவிடவில்லை.

அரசியல் அதிகாரம் இருக்கும் போது தான் அறிவை வளர்க்ககூடிய கல்வி முறமையை, சாதிய பொருளாதார வேற்றுமைகள் அற்ற எல்லோருக்காமன கல்வியை ஏற்படுத்த முடியும்.எந்த விடயமும் தன்னால் எற்பட்டு விடப் போவதில்லை.அதற்கான நிறுவனங்கள் அவசியம்.அறிவியல் ரீதியான பாடத்திட்டம் ,பயிற்றுவிக்கப்பட ஆசிரியர்கள் என்று இது ஒரு அரசியல் அதிகார ரீதியாக , நிறுவனப்பட்டலேயே சாத்தியப் படும்.பெரியார் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி இவ்வாறான நடை முறைகளை ஏற்படுத்தி இருக்கலாம்.அது அவர் மீதான நியாயமன விமர்சனமாக இருக்கலாம்.அதற்காக அவர் செய்தவற்றை வெறி என்றும் அவர் மடையர் என்றும் நிறுவ முற்படுபவர்கள் சாதிய அடக்குமுறையையும் இந்து மததின் பிற் போக்குத் தனத்தையும் மறைக்க முயலும் சாதிய,மத வெறியர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதரே உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இன்னும் மெதுவாகப் போங்கள். பெரியாரின் ஒவ்வோரு கருத்தும் ஆழமாக நோக்கப் பட வேண்டியவை. மிக நல்ல பணியை நீங்கள் செய்கிறீர்கள். எங்களைப் போன்ற பெரியாரியவாதிகளுக்கு நன்றாக புரிகிறது. ஆனால் மற்றவர்கள் கருத்துக்கள் நீண்டிருந்தால் பொறுமையாக படிப்பார்களோ என்ற அச்சம் எனக்குள் எழுகிறது. பெரியாரின் கருத்துக்களை அனைவரும் நன்றாக உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்.

நன்றி நாராரே உங்கள் பணி தொடர மீண்டும் என் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.