Jump to content

பிரிகேடியர் பால்ராஜ் 7ம் ஆண்டு நினைவு அகவணக்கம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11265364_982140828472001_201761026317636

 

பிரிகேடியர் பால்ராஜ்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.

இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.

இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

1990 ஆம் ஆண்டில் கொக்காவில் - மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.

முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் "கடற்காற்று" எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.

வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "வன்னிவிக்கிரம" நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான "ஆகாய- கடல்வெளி"ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.

மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "மின்னல்" நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.

இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட "யாழ்தேவி" நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.

1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட "முன்னேறிப்பாய்தல்" முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.

யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த "சூரியக்கதிர்" நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.

வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த "ஜெயசிக்குறு" நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட "ஓயாத அலைகள் - 02" நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.

தொடர்ந்து "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.

2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட "தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.

போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார்.

பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.

 

http://thedatsaram.blogspot.co.uk/2008/05/blog-post_21.html

 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமர்க்களநாயகனுக்கு வீர வணக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமர்களநாயகா,

உன்னை உருவகித்து வாங்கிய பச்சைத்தொப்பி இன்னும் அப்படியே இருக்கிறது.

கொக்குத்தொடுவாயோ கிட்டத்தட்ட பறிபோயே விட்டது.

வீரவணக்கம்

Link to comment
Share on other sites

வீர வணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்...!

Link to comment
Share on other sites

நினைவுநாள் வீரவணக்கம்..!

Link to comment
Share on other sites

  • 2 months later...

என்றும் நான் போற்றும் மாவீரன் பால்ராஜ் அவர்கள் நினைவை துதித்து

அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் மிகவும் மதிக்கும் (தலைவருக்கும் மேலாக) பலரில் இவரும் ஒருவர். 

Link to comment
Share on other sites

மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்

 

Maaveeran B.Balraj

சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி வீரர்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எங்களுக்கு எதிராக எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்ட வேளைகளில், கட்டளைப்பீடத்தில் இருந்தபடி, சூழ்நிலைக்கேற்றவாறு சண்டை வியூகங்கள் அமைத்து தன்னம்பிக்கை தெறிக்கும் கட்டளைகளால் போராளிகளை வழிநடாத்திச் சண்டைகளை வென்ற தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன்.


ஒரு தாக்குதலுக்கு முன், சண்டைக்கான தயார்ப்படுத்தல்களை இரவு – பகல் பாராது ஓடியோடி உழைத்து – வெற்றிகளுக்கு அத்திவாரமாகத் திகழ்ந்த தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன்.


ஆனால் இந்த வீரதீர பண்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த புலிவீரர்களில் ஒருவரை நான் கண்டிருக்கின்றேன். அது பால்ராச் அவர்கள் தான். கெரில்லா வீரனாக போராட்டத்தில் இணைந்து, சண்டைகளின் வளர்ச்சிக்கேற்ப தன்னையும் வளர்த்து, சிங்களப் படை முகாம்கள் மீது பெருந்தாக்குதல்களைத் தலைமையேற்று நடாத்தி-மரபுப்போர்களையும் வெற்றிகரமாக நடாத்தி வீரநாயகனாக பிரிகேடியர் பால்ராஜ் வலம் வந்திருந்தார்.


சண்டைகளுக்கு பால்ராச் அவர்கள் தலைமை தாங்குகின்றார் என்றால், களத்தில் நின்று போராளிகளுடன் ஒரு போராளியாகச் சண்டையிட்டபடி தலைமை கொடுப்பது அவரின் தனித்துவமான பாணி. களத்தில் அவர் நிற்கின்றார் என்றால் அங்கே இருக்கும் போராளிகள் அனைவருக்கும் இறக்கை முளைத்தது போல் உற்சாகத்தின் உச்சியில் நிற்பார்கள்.
தமிழீழப் போரரங்கில் காட்சி மாற்றங்களை தமிழினத்திற்குச் சார்பாக ஏற்படுத்திய களங்களின் அதிபதியாக பால்ராஜ் இருந்தார் என்பது வரலாற்று உண்மை.


எமது இயக்கம் நடாத்திய பாரிய படைத்தள அழிப்பான மாங்குளம் படை முகாம் தகர்ப்பில் இருந்து – ஆனையிறவுப் படைத் தளத்தின் அழிவுக்கு வித்திட்ட இத்தாவில் பெட்டிச் சண்டை வரை பிரிகேடியர் பால்ராச்சின் வீரச் செயற்பாடுகள் ஒரு வீரவரலாறாக விரிந்து செல்லும்.
தலைவரின் போரியல் திட்டங்களை போரியல் சிந்தனைகளை அச்சொட்டாக களத்தில் நடைமுறைப்படுத்திக்காட்டி ஒரு முன்னுதாரண வீரனாக – முன்னுதாரணத் தளபதியாக சாதித்துக் காட்டியவர்.
வெற்றியைத் தவிர வேறெதற்கும் இடமில்லாத சண்டைக் களங்களை வழி நடாத்த ஒரு தளபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் எழுந்தால் தலைவரின் தேர்வாக எப்போதும் பால்ராச் அவர்கள் இருப்பார். தலைவர் சொன்னதை பால்ராச் செய்து காட்டுவார்.


*****
பால்ராஜ் அவர்களையும் – அவரின் வீரத்தையும் நான் முதன்; முதலில் அறிந்து கொண்டது 1986 இல். அப்போது கிளிநொச்சியில் இருந்த படைமுகாமை நாம் முற்றுகைக்குள் வைத்திருந்த காலம். ஒருநாள் திருநகர் பக்கமாக சிங்களப்படை ஒரு நகர்வைச் செய்து எமது முற்றுகையை உடைக்க முயற்சி எடுத்தது.


முற்றுகையை காவல் காத்த எங்களால் எதிரியின் நகர்வைத் தடுக்கமுடியாமல் போக – பசீலன் அண்ணையின் தலைமையிலான முல்லைத்தீவுப் படையணி உதவிக்கு வந்தது.


நகர்ந்த படையினர் மீது பசீலன் அண்ணை தலைமையிலான அணி வேகமான முறியடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியது. ஒரு கவச வாகனம் சிதைக்கப்பட்டு சில படையினர் கொல்லப்பட சிங்களப் படை மீண்டும் முகாம்களுக்குள்ளே தஞ்சம் புகுந்தது.
சண்டை முடிந்ததும் பால்ராஜ் என்ற பெயர் எல்லோர் வாய்களிலும் உச்சரிக்கப்பட்டது. அவரது முகம் தெரியாத நிலையிலும் அவரது பெயர் எனது மனதில் பதிந்து விட்டது. அந்தச்சண்டை வெற்றிக்கு பசீலண்ணையுடன் பால்ராச்சும் சேர்ந்து வெளிப்படுத்திய வீரம் தான் முக்கிய காரணமாக இருந்தது.


பசீலன் அண்ணை தான் தனக்கு சண்டை பழக்கியதாக பால்ராச் அவர்கள் அடிக்கடி சொல்வார். பால்ராச் என்ற வீரன் பசீலன் என்ற வீரனின் சண்டைத் திறனைப் புகழ்ந்து பேசும்போது இந்த வீரனும் – அந்த வீராதி வீரனும் எங்களது மனங்களில் புகுந்து நிலையெடுத்துக் கொள்வார்கள்.
இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்தில் சண்டையைத் தொடங்கிய போது பசீலன் அண்ணை தலைமையிலான முல்லைத்தீவு மாவட்டப் படையணி யாழ்ப்பாணம் வரவழைக்கப்பட்டது. அந்த அணியில் பால்ராச் அவர்களும் ஒருவராகச் சென்றார்.


கோப்பாய் சண்டைக்களம் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தக் களத்தில் இந்தியரின் டாங்கி ஒன்று அழிக்கப்பட்டது. இந்த டாங்கி அழிப்பிற்கு பால்ராஜ் அவர்கள் காரணமாக இருந்தார் என்று நான் கேள்விப்பட்டேன்.


இந்தக் கோப்பாய்ச் சண்டைக்களத்தின் கடுமையை இந்தியப்படையின் கட்டளைத்தளபதி மேஐர் nஐனரல் கர்க்கிரத்சிங், தான் எழுதிய நூலிலும் சிறப்பிடம் கொடுத்துக் குறிப்பிட்டுள்ளார்.


கோப்பாய் சமரை முடித்துக்கொண்டு பசீலன் அண்ணை தலைமையிலான அணி முல்லைத்தீவு திரும்பியது. முல்லைத்தீவிலும் இந்தியப்படையுடன் ஒரு நேரடிச் சண்டை தொடங்கியது.


முல்லைத்தீவில் முகாம் அமைத்திருந்த இந்தியப்படைகள் நந்திக்கடலோர வெளிகளைத்தாண்டி தண்ணீர் ஊற்று மக்கள் குடிமனைக்குப் புக முயற்சி செய்த போது பசீலன் அண்ணை தலைமையிலான அணியினர் நடாத்திய மறிப்புச்சண்டைக் கதை விறு விறுப்பானது. அந்தச் சண்டையின் ஒரு கட்டத்தில் மேஐர் பசீலன் வீரச்சாவடைந்து விட்டார். படைத்தளபதியை இழந்த நிலையிலும் சண்டை அதே விறுவிறுப்புடன் நடந்துகொண்டிருந்தது. பசீலனின் இடத்தைப் பொறுப்பெடுத்த பால்ராஜ் அவர்கள் அந்தக்களத்தில் காட்டிய தலைமைத்துவ ஆற்றலும் சண்டைத்திறனும் ஒரு வீரத்தளபதியைத் தலைவருக்கு இனங்காட்டியிருந்தது.


மேஜர் பசீலன் வகித்த முல்லைத்தீவு மாவட்டத் தளபதி என்ற பொறுப்பை பால்ராஜ் ஏற்றார். முல்லைத்தீவு – கிளிநொச்சி – வவுனியா என்ற மூன்று மாவட்டங்களில் முல்லைத்தீவில் தான் இந்தியப் படைக்கெதிரான தாக்குதல்கள் அதிகம் நிகழ்ந்தன. அதற்கு பால்ராஜ் அவர்களின் முயற்சியும் ஆர்வமும் தான் காரணம். பால்ராச் அவர்களிடம் இருந்த இந்தத் தலைமைத்துவ ஆற்றல் தலைவரை வெகுவாகக் கவர்ந்தது.
தனது இடத்திற்கு அவரை அழைத்த தலைவர் அவர்கள் இந்தியப் படைக்கெதிரான தாக்குதல்களை வன்னியெங்கும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டு – போரியல் ஆலோசனைகளையும் வழங்கி வன்னி மாவட்டத்தின் தளபதியாக பால்ராச்சை நியமித்தார்.
முல்லைத்தீவு – வவுனியா – கிளிநொச்சியை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த ஒரு நடைப்பயணத்தைத் தொடங்கினார் பால்ராச்.


இந்தியப்படைக் காலத்தில் வாகனங்களில் போராளிகள் பயணிக்கக்கூடாது என்பது தலைவரின் கண்டிப்பான கட்டளை. தேவையற்ற வகையிலான இழப்புகளைத் தவிர்க்கவே அந்த உத்தரவு இதை பால்ராஜ் முழுமையாக நடைமுறைப்படுத்தினார்.


மணலாற்றின் மையப்பகுதியில் தலைவரைச் சந்தித்துவிட்டு முல்லைத்தீவு கிளிநொச்சி – வவுனியா என்று நடைப்பயணம் செய்து போராளிகளைச் சந்தித்து – அவர்களை ஊக்கப்படுத்தி – தாக்குதல் திட்டங்களையும் கொடுத்து – தலைவரின் கட்டளைகளையும் நினைவூட்டி ஒரு பம்பரம் போல் அவர் சுழன்று திரிந்தார்.


அவர் நடந்து போய் வருகின்றாரா! வாகனத்தில் போய் வருகின்றாரா! என்று எங்களுக்குள் பகிடி கதைப்பது வழமை. அந்தளவுக்குப் பயணத்தில் வேகம், வேலை முடிந்ததும் உடனடியாகவே அடுத்த பயணம், அவரின் முகத்தில் சோர்வும் தெரிவதில்லை, களைப்பும் தெரிவதில்லை.
படையினர் மீதான தாக்குதல் என்று வரும் போது வேவு பார்த்து – திட்டமிட்டுத் தாக்குவது ஒரு போரியல் வழமை. போகுமிடங்களில் எதிரிப்படை எதிர்ப்படும் போது உடனடியாகவே திட்டம் தீட்டித் தாக்குதல்களை நடாத்துவது கடினம்.


ஆனால் இது கடினமானது தவிர்க்கப்பட வேண்டியது என்று பால்ராஜ் நினைப்பதில்லை. எதிரி தென்பட்டால் உடனடியாகத் தாக்கு என்பது அவரின் கருத்து.


வன்னி மாவட்டத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு; அக்கராயன் காட்டுப்பகுதியில் தரித்திருந்த ஒரு அணியைச் சந்திக்க அவர் தன் மெய்ப்பாதுகாவலர் அணியுடன் வந்திருந்தார். கொக்காவிலுக்கும் ஐயன்கன்குளப் பகுதிக்குமிடையே இந்தியர்களின் ஒரு ரோந்து அணியை எதிர்கொள்ள வேண்டி வந்தது. அந்த எதிரி அணிமீது தாக்குவோம், என்று பால்ராச் அவர்கள் புறப்பட்டார்.
பால்ராஜ் அவர்களின் மெய்க்காப்பாளர் தவிர நாங்கள் நான்கு, ஐந்து போராளிகள் மட்டும் அங்கு இருந்தோம். பால்ராஜ் அவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு அவரின் மெய்க்காப்பாளர் அணியை சண்டைக்கு எடுக்க நான் விரும்பவில்லை, சண்டையைத் தவிர்த்து எமது பயணத்தைத் தொடர்வோம் என்று அவருக்கு கூறினேன்.


ஆனால், அந்த ரோந்து அணி மீது தாக்குதல் நடாத்தியே தீரவேண்டும் என்று அவர் விரும்பினார். தானும் சண்டைக்கு வருவதாகக் கூறினார். ஆனால் அவரைப் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருந்ததால் நான்; மாற்றுத் திட்டம் ஒன்றை அவருக்குக் கூறினேன்.


இரண்டு மூன்று பேருடன் பால்ராச் அவர்கள் பாதுகாப்பாக நிற்க மற்ற அனைவரும் ஒரு அணியாகி பதுங்கித்தாக்குதலை நடாத்துவது என்ற முடிவெடுக்க பால்ராச் அவர்களும் சம்மதித்தார்.


வெற்றிகரமாகப் பதுங்கித் தாக்குதலை நடாத்தி 15 படையினரைக் கொன்று ஆயுதங்களையும் கைப்பற்றினோம். எங்களில் ஒருவர் வீரச்சாவு. நானும் காயப்பட்டு விட்டேன்.


அப்போது கொக்காவில் பகுதியில் இருந்து இந்திய அணியொன்று தனது அணிக்கு உதவவென விரைவாக மக்கள் மூலம் தகவல் கிடைக்க அந்த உதவிப் படையைத் தான் பார்த்துக் கொள்வதாகவும்; எமது அலுவல்களை விரைவாக முடிக்கும் படியும் பால்ராஜ் அவர்கள் தொலைத்தொடர்புக் கருவி மூலம் எமக்கு அறிவித்தார்.


பதுங்கித்தாக்குதலில் ஈடுபடுவது சில வேளைகளில் அவருக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்று கருதி நாங்கள் அவரைப் பாதுகாக்க, அவரோ அதைவிட அபாயகரமான வழிமறிப்புத் தாக்குதலில் அதுவும் இரண்டு மூன்று போராளிகளுடன் தானே இறங்கிவிட்டார்.


ஆனாலும், அந்த எதிரிக்கான உதவி அணி வரவில்லை. அவ்விதம் வந்திருந்தால்; அந்த எதிரி அணியை அழித்தொழித்திருப்பார். அல்லது சண்டையில் இவர் வீரச்சாவடைந்தபின் அந்த எதிரி அணி வந்திருக்கும்.


எதிரி அணிவராமல் விட்டது இந்திய அணியின் அதிஸ்டமோ எங்;களது அதிஸ்டமோ தெரியவில்லை.
படை முகாம் மீதான ஒரு தாக்குதல் திட்டத்தைத் தலைவர் கொடுத்துவிட்டார் என்றால் பால்ராச் ஓய்வு – உறக்கம் கொள்ளமாட்டார். அதே சிந்தனையுடன் திரிவார். முற்தயாரிப்புகள் சரியாக நடைபெறுகின்றனவா என்று நேரே தேடிச்சென்று பார்ப்பார்.


வேவு நடவடிக்கைகளில் ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலும், அந்த வேவுத் தகவலை உறுதிசெய்ய தானே ஒரு வேவு வீரனாகிக் கடமைக்குச் செல்வார். ஒரு கட்டளைத்தளபதி எதிரி முகாமின் கம்பிவேலி வரை இரவில் சென்று வேவுத் தகவல்களை உறுதிப்படுத்தும் தேவை ஏற்படும் போது பிரிகேடியர் பால்ராஜ் அதையும் செய்தார்.


ஒரு படைமுகாம் மீதான தாக்குதலுக்கு முன் நூற்றுக்கணக்கில் தயார்ப்படுத்தல் வேலைகளைச் செவ்வனே செய்து முடித்திருக்க வேண்டும். இந்த வேலைகளில் தாமதம் ஏற்பட்டால் அல்லது தவறுகள் ஏற்பட்டால் தூக்கம் மறந்து அவற்றைச் சீர்செய்ய உழைப்பார்.


முல்லைத்தள அழிப்பிற்காகத் தயார்ப்படுத்தல் கால வேளைகளில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உறக்கம் துறந்து ஓடியோடி உழைத்ததை நான் கண்டேன். நான்காம் நாள் அதிகாலை அவரை நான் கண்டபோது அவரின் முகத்தில் சோர்வு தென்படவேயில்லை. நித்திரை கொண்டு எழும்பியது போல சுறுசுறுப்புடன் காணப்பட்டார். நான் இவர் மீது கொண்ட ஆச்சரியங்களில் இதுவுமொன்று.


இந்தியப்படை வெளியேறிய பின் 1990 யூன் மாதம் சிங்களப் படைகளுடன் சண்டை தொடங்கியது. முதலில் மாங்குளம் முகாம் மீது தாக்குதலை நடாத்தினோம். அந்த முகாமின் ஒருபகுதி எம்மிடம் வீழ்ந்தது. எனினும் முழுமையாக முகாம் வரவில்லை. எமக்குப் பாதகமாக சண்டை நிலைமை இருந்ததால்; தாக்குதலில் இருந்து பின்வாங்கினோம்.


அன்று இரவே அங்கிருந்த போராளிகளை கிளிநொச்சிக்கு இடம் மாற்றினார். கிளிநொச்சி படை முகாம் மீது தாக்குதலை நடாத்த முடிவெடுத்தார். அடுத்த நாளே தாக்குதல் தொடங்கியது. இங்கேயும் அதே கதைதான். மாங்குளம் கிளிநொச்சி முகாம் தகர்ப்புகள் தோல்வியில் முடிந்துவிட்டன. எனவே, கொக்காவில் முகாமை எப்படியும் தாக்கியழித்துக் கைப்பற்ற வேண்டுமென்ற வேட்கையுடன் இருந்தார்.


வன்னி மாவட்டத்தின் தளபதியாக அவர் இருந்தபோது நான் துணைத் தளபதியாக இருந்தேன். கொக்காவில் படைமுகாம் தாக்கி அழிக்கப்பட வேண்டும் அல்லது நாங்கள் இருவரும் வீரச்சாவடைய வேண்டும். இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் என்று ஓர்மத்துடன் கூறினார். கொக்காவில் படைமுகாமை வெற்றியும் கொண்டார்.


களத்தில் உள்ள போராளிகளுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டால் அல்லது தாக்குதலில் வெற்றி தாமதப்பட்டால் தளபதிகளுக்கு உரித்தான போர் மரபை உதறிவிட்டு அவர் களத்தில் இறங்கிவிடுவார். அத்தகைய வேளைகளில் அவரை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது.


கொக்காவில் படைத்தள அழிப்பிலும் அதுதான் நடந்தது. அந்த முகாம் தாக்குதலில் தானும் சண்டை அணிகளுடன் இறங்க முடிவெடுத்தார். எப்படியோ அவரைத் தடுத்துவிட்டு நான் அதைச் செய்தேன். முதல்நாள் தாக்குதலில் முகாமின் சில பகுதிகள் மட்டுமே எம்மிடம் வீழ்ந்தன. காயமடைந்த போராளிகளுள் நானும் ஒருவன். எனவே, இரண்டாம் நாள் தாக்குதலில் தானே இறங்கிவிட்டார்.


களத்தினுள்ளே நின்றபடி சண் டையை நடாத்தினார். சில அரண்களைத் தாக்குவதில் அவரும் பங்கேற்றார். களத்தினுள்ளே நின்றபடி கொக்காவில் படை முகாமைத் துடைத்தெறிந்தார். வரலாற்றுச் சாதனை படைத்தார்.


அவ்விதம் பின்னர் மாங்குளம் படை முகாம் கரும்புலி போர்க்கின் வீரத் தாக்குதலுடன் அழித்தொழித்தார். ‘வன்னி விக்கிரம” படை நடவடிக்கையின் போதும் அது நடந்தது.


ஓமந்தை முன்னரங்கப் பகுதியிலிருந்து கொக்காவில் நோக்கிய படை நகர்வாக அது இருந்தது. மரபு வழியில் படையினர் படை நகர்த்தினர். டாங்கிகள் – கவச வாகனங்களுடன் சிங்களப்படை நகர்ந்தது.


பனிக்கநீராவிப்பகுதியில் எதிர்த்தாக்குதல் பால்ராச் அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது. சண்டை கடுமையாக நடந்தது. எமது போராளிகள் எதிர்கொண்ட பாரிய மரபுச்சமர் அது. எதிரியின் சூட்டுவலுவைக் கண்டு போராளிகள் திகைப்படைந்தனர். அப்போது பால்ராச் களத்தில் இறங்கினார். சண்டையிட்டபடி கட்டளைகளை வழங்கினார். அது போராளிகளை உற்சாகம் பெற வைத்தது. எதிர்த் தாக்குதலை ஓர்மத்துடன் தொடுத்தனர். வன்னிவிக்ரம படையை ஓமந்தைக்குள் விரட்டியடித்தனர்.


‘யாழ்தேவி” சமரிலும் அதுவே நடந்தது.
ஆனையிறவிலிருந்து கிளாலி நோக்கி நீரேரிப் பக்கமாக ஒரு படை நகர்வைச் சிங்களப்படை செய்தது. அதை முறியடிக்கும்படி பால்ராச்சிற்கு தலைவர் ஆணையிட்டார். வன்னி மாவட்டப் படையணி அங்கே விரைந்தது.


சண்டைத் திட்டத்தை பால்ராச் விளக்கினார். நகரும் படையணியை ஒரு வெட்டவெளியில் வைத்துத் தாக்குவது பிரதான திட்டம். துணிகரமானதும் – ஆபத்துக்கள் நிறைந்ததுமான அந்த பிரதான தாக்குதல் அணிக்கு நான் தலைமையேற்றேன். நாங்கள் தாக்குதலைத் தொடங்கியதும் இருபுறத்தின் பக்கவாட்டாலும் இரண்டு தாக்குதல் அணிகளை இறக்கத் தயாரிப்புகள் செய்திருந்தார்.


இரவு 2.00 மணிக்கு அந்த இடத்திற்கு விரைந்த எமது அணியினர் அதிகாலை 5.00 மணிக்கு முன்பாக குழிகள் வெட்டி உருமறைப்புச் செய்தபடி அந்த வெட்டவெளியில் அணிவகுத்தனர்.


அணிகள் சரியாக நிலையெடுத்துள்ளனவா! என்று பரிசோதிக்க பால்ராச் வந்தார். எனது நிலைக்கு வந்தவர் என்னிடம் சொன்னார், ‘தீபன் நீ இதை கவனமாகப்பார். நான் அடுத்த முனையில் எனது கட்டளைப்பீடத்தை நிறுவுறன்” என்று ஒப்பீட்டளவில் காப்பான ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டினார். ஆனால் சண்டை தொடங்கினால் அவர் அதில் நின்று கட்டளையிடமாட்டார். களத்தில் இறங்கியே கட்டளையிடுவார் என்று எனக்குத் தெரியும்.
அவரைக் களத்தினுள் இறங்க விடாது தடுக்கும்படி பால்ராச் அவர்களின் மெய்க்காப்பாளரிடம் கூறினேன். அது அவர்களால் முடியாது என்று தெரிந்தும் கூறினேன்.


காலை 7.30 க்கு சண்டை தொடங்கியது. ஒரு டாங்கிப் படையுடன் எதிரி நகர்ந்ததால் சண்டை கடுமையாக நடந்தது. வெட்டவெளிகளில் உருமறைப்புச் செய்யப்பட்டிருந்த குழிகளில் இருந்து போராளிகள் திடீரென முளைத்தெழுந்து – தாக்கிய போது படையினர் மிரண்டுவிட்டனர். டாங்கிகளை அழித்தபடி நாங்கள் சண்டையில் ஆதிக்கம் செலுத்தினோம்.


அப்போது வந்த செய்தி ஒன்று என்னை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் கோபத்திற்குள்ளாக்கியது. பால்ராஜ் காயப்பட்டுவிட்டார், என்பதே அந்தச் செய்தி.


கட்டளைப்பீடத்திற்குள் இருந்த பால்ராச் சண்டை தீவிரம் பெற்றதும் களத்தினுள் இறங்கி – போராளிகளை உற்சாகப்படுத்தியபடி கட்டளைகளை வழங்கியிருக்கிறார். அதில் காயப்பட்டார். பல்வேறு களங்களில் அவர் அடைந்த விழுப்புண்களில் இது பெரியது. அவரை ஆறு மாதங்கள் வைத்தியசாலையில் முடக்கியது.


களத்தினுள் நின்றபடி சண்டைகளை வழிநடத்துவது பால்ராச் அவர்களின் தனித்துவமான இயல்பு. அது ஆபத்தானது என்று அந்தப் பெருந்தளபதிக்கு நன்கு தெரியும். வெற்றிக்காக அதை விரும்பிச் செய்தார். இவ்விதம் செய்ய வேண்டாமென்று தலைவர் அவருக்கு அறிவுறுத்தியதை நான் அறிவேன்.
‘சிறிய அணிகளுடன் களத்தில் நின்ற படி வெற்றிச் சண்டைகள் பல நீ செய்து விட்டாய். இனிமேல் பெரிய அணிகளை நெறிப்படுத்திச் சண்டைகளை வழிநடத்து. தேவை ஏற்படும் போது நான் சொல்வேன். அப்போது களத்தினுள் இறங்கிச் சண்டை செய்” என்று பால்ராச்சிடம் பல தடவைகள் தலைவர் சொல்லியுள்ளார். அதற்கான தருணங்களும் வந்தன.


சத்ஜெய என்ற பெயரில் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி வரை நகர்ந்து நிலம் விழுங்கிய சிங்களப் படைகள் அங்கே நிலைகொண்டிருந்தனர். ஒரு விமானக் குண்டைப் போன்ற வடிவத்தில் அந்த ஆனையிறவு – பரந்தன் – கிளிநொச்சி படைத்தளம் நீண்டு – ஒடுங்கி இருந்தது. அதைக் குறுக்கறுத்து கிளிநொச்சித் தளத்தை அழித்தொழிக்க தலைவர் ஒரு அற்புதமான போர்த்திட்டத்தை வகுத்தார்.


பரந்தனுக்கும் – கரடிப்போக்கிற்கும் இடையே ஒரு குறுக்கறுப்புத் தாக்குதலை நடாத்துவது, கிளிநொச்சித் தளத்தை அழிப்பது என்று இரண்டு தாக்குதற் திட்டங்களை தலைவர் வகுத்தார்.


குறுக்கறுப்புத் தாக்குதலை பால்ராச்சிடம் கொடுத்தார். மற்றையதை என்னிடம் தந்தார்.
குறுக்கறுப்புத் தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்ததும் – அபாயம் நிறைந்ததுமாகும். பால்ராஜ்சால் அதைச் செய்யமுடியும் என்பது தலைவரின் நம்பிக்கை. அதை திறமையாகச் செய்தார் பால்ராச்.


குறுக்கறுத்து உட்புகுந்த அணிகளுடன் பால்ராச் அவர்களும் சென்றார். அங்கே புகையிரதப்பாதை இருந்த இடத்திலுள்ள ஒரு மதகுக்குள் தனது கட்டளைப்பீடத்தை வைத்தார். அவரையும் அவரது அணியையும் வெளியேற்ற சிங்களப்படை பெரும் முயற்சி செய்தது. மரத்தில் அறைந்த ஆப்புப்போல அசையாது இருந்து அந்த நீண்ட தளத்தை இரண்டு துண்டுகளாகப் பிளப்பதில் வெற்றிகண்டார். பிளந்த துண்டில் ஒன்றை (கிளிநொச்சியை) நாங்கள் வெற்றிகரமாகத் துடைத்தழித்து 1200 சிங்களப்படையினரையும் கொன்று பெருந்தொகை ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றினோம். ஒரு வெற்றி வீரனாக பால்ராச் அவர்கள் வெளியில் வந்தார். அவருக்கு கைலாகு கொடுத்துப் பாராட்டினார் தலைவர்.


பால்ராச் அவர்களின் வீரத்திற்கு மகுடம் சூட்டியது போல் வந்தது இத்தாவில் பெட்டிச்சண்டை.
1991 இல் ஆனையிறவுத் தளத்தை அழித்தொழிக்க முற்பட்டு அறுநூறு போராளிகள் வீரச்சாவடைந்தும் அதைக் கைப்பற்ற முடியாமல் போன இயலாமைக்கு ஒரு சரியான பதிலடி கொடுக்கத் தலைவர் திடசங்கற்பம் பூண்டிருந்தார்.


ஆனையிறவுத் தளத்தின் பூகோள அமைவிடம் நேரடியாக முட்டி மோதி வெல்லத்தடையாக இருந்தது. ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் கண்டறிந்து பயன்படுத்திய அந்தத் தற்காப்பிடத்தை சிங்களப்படைகளும் உபயோகித்துக் கொண்டன.


ஆனையிறவுப் பெருந்தளத்தை நேரடியாகத் தாக்காமலே அதைக் கைப்பற்ற தலைவர் திட்டம் போட்டார். அது எவருமே கற்பனை செய்து பார்க்காத துணிச்சலான திட்டம். அபாயமும் – வெற்றியும் ஒருங்கு சேர்ந்திருந்த ஆளுமையான திட்டம். புலிகளா! – சிங்களப்படைகளா! யார் வீரர்கள் என்பதை உறுதிசெய்வது போலிருந்த சவால்த் திட்டம்.


5 கிலோமீற்றர் நீளத்திற்கு படகின் மூலம் கடலால் போய் குடாரப்பில் தரையிறங்கி – அங்கே இரு புறமுள்ள படைமுகாம் பகுதிகளுக்கு இடையேயிருந்த சதுப்புநிலப் பகுதிகள் ஊடாக 10 கிலோமீற்றர் தூரம் நடந்து – கடந்து இத்தாவில் பகுதியில் பெட்டி வடிவில் வீரர்களை நிறுத்திவிட்டு ஒரு கிலோமீற்றர் நீளமும் ஒரு கிலோமீற்றர் அகலமும் கொண்ட அந்தப் பெட்டியின் நடுவில் அகழிவெட்டி நின்றார் பால்ராஜ். எதிரியின் இரண்டு கண்களுக்கும் நடுவே நெற்றிப்பொட்டில் கூடாரமடித்துக் குடிபுகுவது போல அது இருந்தது.


பால்ராச் அவர்களையும் அவர்களுடன் இருந்த 1200 புலி வீரர்களையும், அந்தப் பெட்டிக்குள் வைத்துச் சமாதிகட்டக் இணைவதும் பிரிவதுமாக எங்கள் போராட்டப் பயணம்.


2001 மார்ச் 25 எங்கள் நட்பு எங்கே பலமாகியதோ அந்தப் படைத்தளத்தை வீழ்த்தும் சுழற்பொறியை செயற்படுத்தும் பொறுப்பை தலைவர் அவர்கள் பால்ராச்சிடம் ஒப்படைக்க நாம் கட்டைக்காடு…. வெற்றிலைக்கேணி… சுண்டிக்குளம் கடற்கரை வெளிகளில் சேர்ந்து நடக்கத் தொடங்கினோம்.
போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க குடாரப்புத் தரையிறக்கம். கடலினூடான ஒரு பலப்பயணம். பால்ராச் உட்பட ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட போராளிகளையும் படையப் பொருட்களையும் தரையிறக்க வேண்டிய பொறுப்பு என்னிடம். போராளிகளோடு தரையிறங்கி ஆனையிறவை வீழ்த்த வேண்டிய பொறுப்பு பால்ராச்சிடம்.


ஒருவேளை ஒன்றாக அந்த வெற்றிலைக்கேணி கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்திருந்து கிடந்த உணவுப் பொதியைப்; பிரித்து ஒன்றாக உணவருந்தி எத்தி… எத்தி மேலெழுந்த அந்த அலைகளின் மடியில் மிதந்த சண்டைப் படகில் பால்ராச்சையும், ஏனைய படகுகளில் போராளிகளையும் ஏற்றி வழியனுப்பிவைத்தோம். பால்ராச் எப்போதும் போல இப்போதும் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையோடு.


குடாரப்பில் தரையிறங்கிய பால்ராச் இத்தாவில் பகுதியில் பெரும் சமரை வழிநடத்திக் கொண்டிருந்தார். எதிரி ஏவிய பல ஆயிரக்கணக்கான அந்த எறிகணை மழைக்கு மத்தியிலும் எப்போதாவது ஒரு சிறு பொழுதில் களம் அமைதி பெறும் பொழுதில் தொலைத்தொடர்புக் கருவியினூடாக என்னுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு களத்திற்கு வெளியில் நிற்பவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் உரையாடினார்.
முப்பத்து நான்கு நாட்களின் முடிவில் எமது நம்பிக்கைக்கு எந்தப் பழுதுமில்லாது பால்ராச் மீண்டும் திரும்பி வந்தார். இலங்கைத் தீவை மட்டுமல்ல உலகத்தையே விழி திறந்து பார்க்கும் படி களத்தில் சாதித்துவிட்டு.
மீண்டும் சந்தித்தோம் பிரிந்தோம் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்……


******
தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியைக் களத்தில் கழித்த தளபதி பால்ராச் மக்களின் மீது பரிவு கொண்டவராகவும், அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாட நெருக்கடிகள் உடனடியாகவே களையப்பட வேண்டுமென்பதில் அதிக விருப்புக் கொண்டவராகவும் காணப்பட்டார்.
முன்பொரு முறை அளம்பில் பகுதி மக்களுக்கும் செம்மலை பகுதி மக்களுக்குமிடையே சிறிய அளவில் ஊர்ப்பிணக்கு ஒன்று ஏற்பட்டுவிட அதனைக் களைவதற்காகத் தன்னுடைய கடமைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்து விட்டு தன்னுடைய ஒரு முழுநாள் பொழுதையும் அந்த மக்களுக்காக செலவிட்டு அந்தப் பிணக்கைத் தீர்த்து வைப்பதில் முன்னின்றதை என்றும் மறக்கமாட்டார்கள்.


அந்தளவுக்கு மக்களின் மீது ஆழமான அன்பை தளபதி பால்ராஜ் செலுத்தினார்.
உண்மையில் தளபதி பால்ராச் தன்னுடைய இலட்சியத்தில் எவ்வளவு தெளிவு கொண்டிருந்தாரோ அப்படித் தான் மக்களையும் நேசித்தார். அத்தோடு எங்கள் மக்கள் மீதான படை நடவடிக்கைகளை வழிநடத்திய எதிரிப் படைத்தள பகுதிகளையும் அவர்களின் பலம் – பலவீனம் என்பவற்றையும் அறிந்து அதற்கேற்ற வகையில் படை நடத்தும் சிறப்பாற்றலை அவர் கொண்டிருந்தார்.


எதிரிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும்; அவர்கள் குறித்த அறிவைப் பெருக்கிக்கொள்வதற்காகவும்; அதிகளவான நேரத்தை அவர் செலவிடுவார். இவரின் இந்த இயல்பு பல தளங்களில் அவர் சிறப்பாக செயற்பட உதவியது.


பின்னர் கடமைகளின் நிமித்தம் வேறு வேறு களங்களில் நாங்கள் இயங்கிக் கொண்டிருந்தோம். அதனால் பால்ராச்சை அடிக்கடி சந்திக்க முடியவில்லை. சுகவீனமுற்றிருந்த பால்ராச் அப்போதும் எப்போதும் போல இயங்கிக் கொண்டிருந்தார். சந்திப்போம் என்ற நம்பிக்கை இருந்ததால் எங்களுக்கிடையேயான அந்த பிரிவு எனக்கு பெரிதாகத் தெரியவில்லை.


22.05.2008 பால்ராச் சாவடைந்துவிட்டார். என்ற செய்தி எங்கும் பரவியது.
பல களங்களில் ஒன்றாக நடந்த அந்தப் பெருவீரன் பிரிந்துவிட்டான். என்பதை நம்ப முடியாமலிருந்தது நாம் பலமுறை பிரிந்தோம். ஆனால் மீண்டும்…. மீண்டும் சந்தித்திருந்தோம்.


ஆனால், 22-05-2008 இல் ஏற்பட்ட பால்ராச்சுடனான பிரிவு மீண்டும் எப்போதுமே நாம் சந்திக்கப்போகாத பிரிவு, அதனால் தான் என்னவோ சொல்லாமலே பிரிந்துவிட்டார் பால்ராச்.


நினைவுப்பகிர்வு:- பிரிகேடியர் தீபன்.
வடபோர்முனைக் கட்டளைத் தளபதி 
சமர்க்கள நாயகன் ( பிரிகேடியர் பால்ராஜ் ) வரலாற்று நூலிலிருந்து …

http://thesakkatru.com/doc3401.html

 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.