Jump to content

காகித ஓடம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காகித ஓடம்
 
நீடித்த மழைக்குப் பின் வானம் வெளுக்க ஆரம்பித்தது.
சிலு சிலு வென்ற காற்று உடலை வருடி சிலிர்ப்பூட்டியது.
மரத்திலிருந்து சொட்டும் நீர்த்துளிகளின் அழகை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் அருந்ததி.
நட்பு, காதல், திருமணம், குடும்பம், உரசல், மோதல், கசப்பு, பிரிவு, வெறுமை..
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எத்தனையோ அனுபவங்களுக்கு பழக்கப்பட்டுவிட்ட அருந்ததிக்கு தன் உணர்வுகளை நிதானமாகக் கையாள்வது இலகுவாக இருந்தது.

 

சென்ற வாரம் நடைபெற்ற ஒன்றுகூடலின் பின் சலனமுற்ற மனம் சமநிலைக்கு வந்திருந்தது.
பல வருடங்களின் பின் பழகிய பல நண்பிகளும் நண்பர்களும் ஒன்றுகூடிய அந்த தருணம் அற்புதமானது.
பசுமை நிறைந்த நினைவுகளை மனதில் விதைத்து பொத்திப் பொத்திப் பாதுகாத்த அந்த இனிய பொழுதுகள் அனைவர் மனக்கண்ணின் முன்னும் மந்தகாசமாய் மணம் பரப்பிக்கொண்டிருந்தது.
மனஅரங்கில் காட்சிகள் துல்லியமாகப் பதிவாகி இருந்தன.
வாலிப வயதில் காணப்பட்ட இளமையின் துள்ளல், துறுதுறுப்பு அனைத்தும் ஓய்ந்து ஆளுமையுள்ள ஆண்களாக பெண்களாக பொறுப்புள்ள பெற்றவர்களாக உரையாடிக்கொண்டிருந்தனர்.
அன்று கனவுகள் மிதந்த கண்களில் இன்று கடமை உணர்வுகள் குடும்பப் பொறுப்புக்கள்
அநேகரை அடையாளங் காண்பதே அபூர்வமாக இருந்தது.
அங்கு அருந்ததியைச் சுற்றி நண்பிகள் சரோ, வதனி, யோகா, சகுந்தலா, ஜனனி, கவிதா இன்னும் பலர்.
'என்ன அருந்ததி உன்ர ஆள் வந்திருக்கிறேர் போல' குறும்புச் சிரிப்புடன் சகுந்தலா தொடங்கினாள்.
'ஏய் சகுந்தலா நீ இன்னும் அண்டைக்கு இருந்தது போலத்தான். இன்னுமா அதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறாய்'
'ஓகோ அப்ப நீ மட்டும் மறந்திற்றியாக்கும்'
'மறந்தோம் மறக்கவில்லை என்பதெல்லாம் இருக்கட்டும். அதெல்லாம் பள்ளிக்கால பருவக் குறும்புகள். பழைய கனவுகள்.             
'அப்ப கனவில பழைய கனவு புதிய கனவு என்றெல்லாம் இருக்கும்போல.' சகுந்தலா குறும்பில் குழந்தையாக அருந்ததியைச் சீண்டினாள்
புன்னகைக்க முயன்றாள் அருந்ததி.

சிரிப்பு செயற்கையாக இருந்தது.
ஜனனி மட்டும் சகுந்தலாவை முறைத்தாள்.

'ஏய் சகுந்தலா நீ இன்னும் அருந்ததியைக் காயப்படுத்தாத.'
'ஏன் ஜனனி சகுந்தலாக்கு என்ன?' சகுந்தலா கேள்வியுடன் ஜனனியை ஏறிட்டாள்.

ஜனனி என்ன சொல்லி சகுந்தலாவை சமாளிக்கலாம் என்று தடுமாற அவளது மனநிலைக்கு இசைவாக மற்றைய தோழிகள் சகுந்தலாவை தமது அரட்டைக்குள் அழைத்துக் கொண்டனர்.

 

ஜனனி அருந்ததியின் உயிர்த்தோழி. அவளுக்கு அருந்ததியின் வாழ்க்கையின் அனைத்து விபரங்களும் தெரியும். ஆனாலும் அடுத்தவரிடம் தன் நண்பியின் அந்தரங்கங்களை அலசுபவள் அல்ல அவள்.
அருந்ததிக்கு திருமணம் நிச்சயமாகி வெளிநாடு வந்ததும், அங்கு வந்து அரவிந்தைத் திருமணம் செய்ததும், அதன் பின் நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ஜனனிக்குத் தெரியும்.
அருந்ததியும் ஆயிரம் கனவுகளுடன்தான் இல்வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தாள்.
ஆனால் அத் திருமண பந்தம் ஏற்படுத்திய காயம் மிகப் பெரிது.
ஆறிய காயம் பெரிய வடுவாக இதயத்தில் விழுந்திருந்தது.
வாழ்க்கை அவ்வப்போது உத்வேகங்களினால் அலைக்கழிக்கப்படுகிறது.
உறவுகளினால் வழிநடத்தப்படுகிறது.
இதில் உண்மை, பொய், நன்மை, தீமை என்று கோடுபோட்டு பிரித்துக் கொண்டிருப்பது சாத்தியமில்லை.
கனடா வந்திறங்கிய அருந்ததியை அரவிந்தன் விமான நிலையம் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றதும் அருந்ததி புல்லரித்துப் போனாள்.

படத்தில் பார்த்ததை விட நேரில் அரவிந்தன் எடுப்பாகவே காணப்பட்டான்.
அருந்ததிக்கு இங்கு நெருங்கிய உறவுகள் இல்லாதபடியால் அரவிந்தன் தனது வீட்டிற்கே அருந்ததியை அழைத்துச் சென்றான்.
பழகுவதற்கு இனிமையான பண்பு.
ஆதரவான பேச்சு.
அழகான புன்னகை.
பரிவான பார்வை.
அருந்ததி மனநிறைவடைந்தாள்.

பெற்றவரைப் பிரிந்த சோகத்தில் இருந்த மனம் இலேசாகி இருந்தது.
திருமண நாள் வரும்வரை அருந்ததியை அவளது உணர்வுகளை மதிப்பவனாக அவளுடன் கண்ணியமாக நடந்து கொள்வது அருந்ததிக்கு திருப்தியாக இருந்ததுடன் அரவிந்தனில் தனி மதிப்பையும் ஏற்படுத்தியது.
அவனது தொடுகை, காதல் பேச்சுக்கள், சின்னச் சின்ன ஸ்பரிசங்கள் மனம் உற்சாகத்தில் துள்ளியது.

அரவிந்தனுக்குள் ஆயிரம் போராட்டங்கள்.

விபரம் தெரிந்த காலம் தொட்டு இதுவரை காலமும் தனக்குள் பூட்டி வைத்த தனக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசியம் பூதாகாரமாய் அவனை பார்த்து கை கொட்டிச் சிரித்தது.
அந்த பொல்லாத விடயத்தை இனியும் பூட்டி வைப்பது சாத்தியமா?
அதுவும் அருந்ததியிடம்.

மனம் சஞ்சலப்பட்டாலும் ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சல்.
சில வேளை அருந்ததியின் அருகாமை அவளது அரவணைப்பு தனக்குள் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தாதா என்ற நப்பாசை.
மனதைத் திடப்படுத்தியபடி தெய்வத்திடம் பாரத்தைப் போட்டுவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆயத்தமானான்.
தனது சந்தோசங்களெல்லாம் திருமணம் முடிந்து தாம்பத்திய வாழ்க்கை ஆரம்பிக்கும் வரைதான் நீடிக்கும் என்று அருந்ததி கனவிலும் நினைக்கவில்லை.

 

அன்றுதான் தனிமையில் அரவிந்தனும் அருந்ததியும் தம் வாழ்வின் முக்கியமான நாளான முதல் உறவின் ஆரம்பம்.
அரவிந்தனின் அன்பிற் கட்டுப்பட்டு அவனது அணைப்பின் ஆளுமைக்குள் கிறங்கிய அருந்ததி மயங்கினாள். மனதுக்குள் மத்தாப் பூக்கள் பூக்க ஆரம்பித்த தருணங்கள் அவை.
அருந்ததியின் உடலை அணைக்க முடிந்த அரவிந்தனால் அவளது உணர்வுகளை அணைக்க முடியவில்லை.
இயங்கமுடியாத இயலாமையில் அரவிந்தன் துவண்டுபோன தருணத்தில் அங்கு வெறுமைகள் மிஞ்சின.
ஆரம்பத்தில் அருந்ததியால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
முடிவில் அரவிந்தனின் இயலாமை தெரிய வந்தபோது அருந்ததி உள்ளுக்குள் உடைந்து போனாள்.
இருந்தும் அருந்ததி அரவிந்தனில் வைத்திருந்த பிரேமை காரணமாக இதைப்பற்றிய எந்த விபரமும் யாருக்கும் தெரியாமல் தனக்குள் புதைத்துக் கொண்டாள்.
தொடர்ந்து வந்த நாட்கள் அருந்ததியின் வாழ்வில் துயரமானவை.
சில நாட்களிலேயே அரவிந்தனின் இயலாமை அவனை மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கிளது.
அவன் தேவையின்றி அருந்ததியை குறை கூறினான்.
எடுத்ததெற்கெல்லாம் எரிந்து விழுந்தான்.

 

அவனது இயலாமையே ஒரு வெறியாக மாறி அவனை இனம் புரியாத எரிச்சல் ஆட்கொண்டது.
ஒரு நல்ல தோழியாகக் கூட அவளை ஏற்றுக் கொள்ள அவனது மனம் இடம் கொடுக்க மறுத்தது.
அருந்ததியின் மனதில் கோபம் வேகம் எல்லாம் குறைந்து சலிப்பும் வெறுமையும் குடி கொள்ளத் தொடங்கியது.
எல்லாம் பழகி விட்டதால் எதிலும் புதுமை தெரியவில்லை.
கண்களில் ஒளியின்றி காட்சி தெளிவற்றதாகி விடுவதுபோல் ஒரே படகில் பயணத்தை ஆரம்பித்த அரவிந்தனும் அருந்ததியும் இறுதியில் இல்லறம் என்ற பிணைப்பில் இருந்து விடுதலை பெற்று வௌ;வேறு பாதையில் பயணப்பட ஆரம்பித்தனர்.
மனக் கண்ணில் நிழலாக வந்துபோன நினைவுகளை கலைத்தாள் அருந்ததி.
சுற்றி இருந்தவர்களின் கலகலப்பான பேச்சும் உற்சாகமும் அருந்ததியையும் தன்னிச்சையாக் தொற்றிக் கொண்டது.
அருண் அருந்ததியை நோக்கி வருவதை ஜனனி அவதானித்தாள்.
'அருந்ததி அருண் உன்னோட கதைக்கத்தான் வாறான். நீ கதைத்துக்கொண்டிரு. நான் சரோவோட கதைத்துப் போட்டு வாறன்' சொல்லியபடி ஜனனி விலகிச் சென்றாள்.
'என்ன அருந்ததி என்றும் பதினாறா? உங்கள் இளமையின் ரகசியம் என்னவோ'? பாதி கேலியும் மீதி கிண்டலுமாக அருந்ததியை சீண்டினான்.
'அருண் இந்தக் கேலிதானே வேணாம் என்கிறது. இளமைக்காலம் எங்கோ ஓடி மறைந்து விட்டது. இப்ப திரும்ப வா என்றால் வரவா போகுது.'
அருணின் வாழ்வில் ஏற்பட்ட இழப்பு பற்றி ஜனனி மூலம் அருந்ததி அறிந்திருந்தாள்.
அருண் தன் ஒரே மகனின் திருமணத்தின் பின் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறான்.
வசதி வாய்ப்புக்கும் குறையில்லை.
அவனும் தன் துயரங்களை வெளியே காட்டாமல் மனதுக்குள் போட்டு மூடி மறைத்திருந்தான்.
'அருந்ததி நீர் எப்படி இருக்கிறீர்?'
'நான் ஓகே நீங்க எப்படி?'
'எனக்கு அந்த பசுமையான காலங்கள் திரும்ப வராதா என்று ஏக்கமா இருக்கு' விழிகளில் கனவுகளுடன் அருண் அருந்ததியை ஏறிட்டான்.
அருந்ததி அவனது பார்வையை சந்திக்க திராணியற்று பார்வையை பக்கத்திலிருந்த பூங்கொத்தை ரசிப்பதாக பாவனை செய்தாள்.
'அருந்ததி உங்கட வாழ்க்கை எப்படி போகுது'
'அருண் எனக்கு இப்ப இந்த வாழ்க்கை பழகிப்போச்சு. வேலை வீடு நட்பு என்று எனது உலகம் பரந்தது.'
'அப்படியென்றால்?' அருணின் மனதில் சிறு சலனம்.
இளமைக்காலத்தில் இழந்த உறவு முதுமையிலாவது தொடராதா என்ற ஏக்கம்.
நான்கு சுவர்களுக்குள் தனிமையில் தன் வாழ்வின் எதிர்காலம் பற்றிய பயம் அருணையும் இப்பொழுதெல்லாம் அச்சுறுத்த ஆரம்பித்திருந்தது.

 

அருந்ததிக்கு அருணின் மனதில் ஓடும் எண்ணங்கள் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்த,
'என்ன அருண் கடுமையான யோசனை?'
'அருந்ததி...'ஏதோ சொல்ல முயன்றவன் தன் மனஉணர்வுகளை தொடர முடியாமல் அருந்ததியை ஏறிட்டான்.
'அருண் நட்பு நட்பாகவே இருக்கும்வரை எந்த பிரச்சனையும் இல்லை.'
அருண் புரிந்து கொண்டான்.
நட்பு தன் எல்லைகளைத் தாண்டி உரிமையை எடுத்துக் கொள்ளும்போது அங்கு சலனங்களும் சபலங்களும் ஏற்படும் என்று எங்கோ படித்தது ஞாபகத்தில் வந்தது.
அருந்ததி தெளிந்த மனதுடன் பேசிய பேச்சு அருணின் மனதில் சிறிது ஆசுவாசம் தந்தது.
சிட்டுக்குருவி தன் இறக்கைகளை உதிர்க்க என்றுமே விரும்புவதில்லை.
நினைவுகளில் இருந்து விடுபட்ட அருந்ததி சாளரங்களை திறந்து வைத்தாள்.
மெல்லிய காற்று இதமாக உடலை வருடியது.

 

-- xxx --- xxx --- xxx ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகாக கதை சொல்லியுள்ளீர்கள்...!

 

அருந்ததி தனக்கேற்ற பிறிதொரு துணையைத் தேடி அடைந்தால் கூடத் தப்பில்லை..., அரவிந்தன் தன் இயல்பு தெரிந்தே அப்பெண்ணை ஏமாற்றியுள்ளார். அது தப்பு...!

அடுத்து அருந்ததியைச் சந்திக்கும்போது சொல்லுங்கள்...! டேக் இட் ஈசி .. யா , கெட் வன் பியான்சி ... யா...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நேரத்தை ஒதுக்கி வாசித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் சுவி. அருந்ததி வாழ்க்கையில் மீண்டம் வசந்தம் வர வேண்டுமென்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும் ஆனால் அருந்ததி விரும்ப வேண்டுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நேரத்தை ஒதுக்கி வாசித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் சுவி. அருந்ததி வாழ்க்கையில் மீண்டம் வசந்தம் வர வேண்டுமென்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும் ஆனால் அருந்ததி விரும்ப வேண்டுமே?

 

அருந்ததி தன் வசந்ததை தானே தேடிக் கொள்ள வேண்டும் ...எனையோரால் கொடுக்க முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் மனதை தொட்டுவிட்டது கதை . உண்மை கதையாக இருக்க கூடாது என்பதே என் பிரார்த்தனை .

அழகாக சொல்லியிருக்கிறீர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் பாடல் பதிவுக்கும் நன்றிகள் புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மைச் சுற்றி எத்தனையோ கதைகள் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாத பல விடயங்களை வைத்து பெண்ணையோ ஆணையோ குறைகூறுவோம் அல்லது விட்டுக்கொடுத்து வாழத்தெரியாது புரிந்துணர்வு இல்லை என்று புறம் பேசுவோம். எத்தனையோ பெண்கள் இப்படியான நிகழ்வுகளை எதிர்கொள்வதை நான் அறிந்திருக்கிறேன். அருந்ததிகள் பலர் இன்றும் எம்முடன் வாழ்கிறார்கள். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள் மீரா குகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை சொல்லி நீங்கள் அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றிகள் சுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருந்ததி அருணை ஏற்க மறுக்கும் நிலைக்கு வரக் காரணங்கள் எவை?

 

அருந்ததியின் கடந்த காலக் கசப்பான வாழ்க்கையின் பட்டறிவா?

 

அல்லது காலம் கடந்தும் எமது சமுதாயம் கட்டிக்காத்து வைத்திருக்கும் சம்பிரதாயம் என்ற மாயையா?

 

வீடு, வேலை, நட்பு, பரந்த உலகம் எனத் தங்களையே ஏமாற்றிக்கொள்ளும்
பெண்களின் பிற்போக்குச் சிந்தனையா?

என உங்களின் கதை பல கேள்விகளையும் விட்டுச் செல்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணங்கள் பலவாக இருந்தாலும் காலம் கடந்து விட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். சமுதாய வேலிகளைத் தாண்டுவது எல்லோருக்கும் இலகுவாக இருப்பதில்லை. இன்றைய காலக்கட்டத்தில் விவாக ரத்துக்களும் மறுமணமும் இலகவாக நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் அவரவர் சுய விருப்புக்களை மதிக்கத்தான் வேண்டியுள்ளது. படித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதையாக எழுதி முடித்துவிட்டு கதைக்கான முடிவைக் கொடுத்துவிட்டதாக நினைக்கிறீர்கள். இந்தக்கதையைப் பொறுத்தவரையில்

1. அருணின் இயலாமை

2. அருந்ததியின் தனிமை வாழ்வு

3. அரவிந்தனின் மனவிருப்பு

இந்த 3 விடயங்களுக்கும் கதாசிரியர் முன்வைத்த முடிவு எனக்குள் கேள்விகளாக முளைக்கின்றன. அருணின் இயலாமை அதற்கான தீர்வு இறக்கும்வரையில் குடும்ப சுகம் இன்றியே தனக்குள் அருண் மனநோயாளியாக வாழ்வதா? அருந்ததி வசந்தமான வாழ்வின்றி தனிமை வெறுமை சூழ முதுமையில் பேச்சுத்துணைக்குக்கூட ஆட்கள் அற்ற  தனிமைக்குள் மருகுவதா?  அரவிந்தன் வாழ்கையை ஓரளவுக்கு கடந்திருந்தாலும் அங்கும் தனிமையே குடி கொண்டிருக்கிறது. ஆக இந்த முக்கோணத்தில்  மூவரும் தனிமையுடனும் வெறுமையுடனும் முதுமை எனும் பருவத்தை கடக்கவேண்டிவர்களாக இருக்கிறார்கள். மனங்களில் சலனங்கள் என்பது முதுமையில் வெறுமைக்குப்பயந்தும் மீளத் தோன்றுவதில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. இங்கு புறக்காரணிகளே உயிர்களின் தேடலை மறுக்கிறது. தனிமை முதுமை வெறுமை இவற்றோடு வாழ்ந்து முடிக்க கண்களுக்குப் புலப்படாத சமூகக்கட்டுகள் இறுகிக்கிடக்கின்றன. கட்டவிழ்த்துவிட கதாசிரியர் தயாராக இல்லை. வந்தா வாசித்துவிட்டு போக வேண்டியதுதானே இப்படியெல்லாம் கேள்வி வைக்கக்கூடாது என்று ஆசிரியர் எண்ணமாட்டார் என்பதாலேயே நன்றாக இருக்கிறது என்பதற்கு அப்பால் கொஞ்சம் எழுதி உள்ளேன் கி கி.^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா நீங்கள் பாத்திரங்களின் பெயர்களை மாற்றி விட்டீர்கள். அரவிந்தனும் அருணும் உங்கள் பதிவில் ஆள்மாறாட்டம் பெற்றுள்ளனர். அதைவிட கதாசிரியர் கதையைச் சொல்லலாம் முடிவுகளை நிர்ணயித்து வரையறைக்கள் அடைக்க முடியாது, முடிவுகள் சிலசமயம் சமுகுக் கட்டுக்குள் முடங்கித்தான் கிடக்கின்றன. கட்டவிழ்த்துவுிட கதாசிரியர் தயாராக இரந்தாலும் கதையின்முடிவு பல சமயங்களில் எங்கள் எதிர்பார்ப்பக்களையும் பொய்யாக்கிவிட வாய்ப்புள்ளது, நன்றிகள் சகாரா.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... பெயரை மாற்றிவிட்டேனா...?!!!! மன்னிக்கவும்.

இப்படிப்பட்ட பல விடயங்கள் செப்பனிடப்பட்டு தோல்வியில் முடிந்திருக்கின்றன. காரணம் சரியான புரிதல்களோடு மீள்வாழ்க்கைக்குள் நுழையாமல் வாழ்க்கை அமைக்கப்பட்டால் போதும் என்பதாலாக இருக்கலாம் அத்தோடு பழிவாங்கும் அவசரம் அல்லது பருவக்கிளர்ச்சி இப்படியாக வகைப்படுத்தலாம் அல்லது உறவுகளின் அழுத்தம் இதில் ஏதோ ஒன்றாக இருக்கலாம் அத்தகைய வாழ்வு நீண்டகாலத்திற்குப்பயணிக்காமல் சின்னாபின்னப்பட்டவிடும். எங்கள் சமூக அமைப்பும் சரியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க அவகாசம் அளிப்பதில்லை என்பதே கசப்பான உண்மை.அந்தரங்கத்திற்குள் பாரிய தோல்விகளைச்சந்தித்து சகித்து வாழ்ந்து முடித்தே பழகிப்போனவர்கள் மனம்விட்டு பேச வாய்ப்புகள் கிடைத்தாலும் மறுத்து உள்ளொடுக்கம் கொண்டு வாழ்பவர்கள்......... இப்படியாக வெளியே தெரியாமல் வாழ்கிறவர்களுக்கு தோல்விகளை வெற்றிகளாக்க வாய்ப்புகள் கிடைத்தாலும் பயன்படுத்தும் திறன் குறைவே..இவ்விடயத்தில் மட்டுந்தான் வெற்றிபெறுபவர்களைப்பற்றி எவரும் பேசுவதில்லை தோல்வி அடைபவர்களையே எப்போதும் உதாரணமாக எடுத்து எதிர்காலம் என்ற அச்சத்தை பெரிய அளவில் உருவாக்கி விடுகிறார்கள் :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.