Jump to content

சூரியனோடு பேசுதல் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

சூரியனோடு பேசுதல்

இன்று காலை கனடாவி வாழும் கவிஞன் திருமாவளவனுடன் முகநூலுல் அளவளாவியபோது நேற்று உங்கள் கவிதை தொகுப்பு சூரியனோடு பேசுதல் கேட்டு செல்லத்துரை வந்தான். மீண்டும் அந்த தொகுப்பை வசித்தேன் என்றார். 29 வருடங்களுக்குப்பிறகு எனது முதல் தொகுப்பு இப்பவும் வாசிக்கப்படுகிறது என்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

நமக்கென்றொரு புல்வெளி எனது முதலாவது கவிதைத் தொகுப்பு. அது 1986ல் நான் கோவையில் தலைமறைவாய் இருந்தபோது என் பாதுகாப்புக் கருதி அவசரம் அவசரமாக அட்டைப் படமாக என் போட்டோவுடன்வெளியிடப் பட்ட தொகுப்பு. அதனை தோழர் ஜமுனா ராஜேந்திரனும் நண்பர்களும் வெளியிட்டார்கள்.

அது என் சுயபாதுகாப்புக்கான சரியான திட்டமிடலாக அமைந்தது.

அது உமாமகேஸ்வரனோடு முரண்பாடுகள் முற்றி இருந்த காலம். என்னை முகமில்லாத ஒருவனாக தாக்கி அழிக்கும் சாத்தியங்களை அகற்றுவதற்க்காக எனது திட்டம் அது

அதுதான் எனக்கு தமிழகத்தில் முகத்தை கொடுத்தது. அது எனக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தியது.

நமக்கென்று ஒரு புல்வெளி வெளியானபிறகு தமிழகத்தில் என் பாதுகாப்பு உறுதிப்பட்டதுடன் புகழும் கிடைத்தது,

என் பாதுகாப்பு திட்டமிடல் ஆற்றலினாலும் நல்ல நண்பர்களாலும்தான் நான் இன்றுவரை உயிரோடு இருக்கிறேன்

 

சூரியனோடு பேசுதல்

கண் மலர

நாள் விடியும்

ஓடுகின்ற பஸ்சின் வெளியே

என்றும் இளமை மாறாத எம் உலகம்.

மஞ்சள் முகம் மலர

சீனத்துத் தேவதையாய்

சுவர்க்கம் இருந்து

சூரியன் எழுந்து வரும்.

கரும்புத் தோட்டத்தின் மீது

கழிகின்ற கிராமத்து வீதிகளில்

தொழிற்சாலை ஒன்றின் இரும்புக் கழிவுகளில்

தலை நிமிர வுள்ள மானிடத்தின்

பாதை திசையெல்லாம்

இருள்துடைத்து

நம்பிக்கைக் கோலம் எழுதுகின்ற சூரியனே!

நேற்று அதிகாலை

என்னுடைய தாய் நாட்டின் காடுகளில்

துணை வந்த தோழர்களோடு

உன்னை நன் எதிர் கொண்டேன்.

நேற்று இள மாலையில்

இருள் கவியும் கடல்மீது

போராடி முன்னோக்கும் படகில்

பிரியும் உன் முகம் நோக்கி

உள்ளம் கிளர்ந்திருந்தேன்.

இன்று அதிகாலை

தமிழகத்தில்

ஓடுகின்ற பஸ்சின் ஜன்னலால்

முத்தமிட்டாய்.

கண் விழித்த எந்தன் கைகளுக்குள்

ஒரு புதிய நாளைப் பரிசு தந்தாய்.

தீ நடுவே ஒரு பூவாய்

போர்க் களத்தில் உயிர்த்திருக்கும்

எங்களது வாழ்வுக்கு

இந்நாளை நான் தருவேன்.

மீண்டுமென் தாய் நாட்டின்

கரைகளிலே

எம்முடைய கால்களிலே எழுந்து நின்று

உனைக்காணும் நாட்களை மீட்டெடுக்க

இந்நாளை நான் தருவேன்.

1985

 

புத்தகம் முழையும் வாசிக்க

.

http://www.noolaham.org/…/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE…

 

Link to comment
Share on other sites

ஜெயபாலன் ஐயா சூரியனோடு பேசுதல் என்பது ரஸ்ய கவிஞர் மாயகொவ்ஸ்கியிடமிருந்து சுட்டதா?  :D

Link to comment
Share on other sites

ஜெயபாலன் ஐயா சூரியனோடு பேசுதல் என்பது ரஸ்ய கவிஞர் மாயகொவ்ஸ்கியிடமிருந்து சுட்டதா?  :D

 

மதிப்புக்குரிய தண்டனணக்கா,

சுட்டது என்பது அபத்தமாக உள்ளது.

 

மாயாகொஸ்கி உட்பட உலகின் பல கவிஞர்கள் சூரினை விழித்து கவிதை எழுதியிருக்கிறர்கள்..ஐந்து வயசில் முதன்முதலாக என் தந்தை பிறந்த நெடுந்தீவுக்குப் போனேன்.அந்த வருசமே நெடுந்தீவுப் பெண்கள் சூரியனோடு பேசுகிற நாட்டார் பாடலை கேட்டேன். 

 

அந்த நாட்டார் பாடலில் என்னைப் பாதித்த சில வரிகள்  இப்பவும் நினைவிருக்கு. 

 

"காயாப் புழுங்கலொடும்

கப்பியொடும் மாயிறேனே

கிழக்கெழுந்த சூரியனே

எனக்கொருத்தன் வாரானோ"

 

மாயாகவ்ஸ்கியின் கவிதையோடு உருவத்திலோ உள்ளடக்க பொருளிலோ சம்பந்தமில்லாத சூரியனோடு பேசும் கவிதையை மாயாகொவ்ஸ்கியிடம் இருந்து  "சுட்டது"  என்பது அபத்தமான கருத்தாகும். எனக்கு ஓகே. ஒரு இளம் கவிஞனைப்பார்த்து இப்படி கொச்சைப் படுத்தினால் அவன் மனசு செத்துவிடும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.