Jump to content

Recommended Posts

பக்கத்துவீட்டுக்காரன் 

செத்து புழுத்து மணந்தாலும்

எட்டிப்பார்த்து ஏன் எண்டு

கேட்கா தேசத்தில் வாழ்ந்தாலும்...

 

 

இப்போதும் ஈழத்தமிழராய்த்தான் 

வாழ்கிறோம்.

 

 

எனக்கொண்டெண்டால் பத்துமைலுக்கப்பால் 

வாழும் என் நண்பன் ஓடி வருவான்

அவனுக்கு ஒண்டெண்டால் நான் ஓடிப்போவன்

 

 

கிழமையில் ஒருநாள் எண்டாலும்

அவன் வருவான்

இல்லையெண்டால் நான் போவன்

 

 

பிறந்தநாள் மண்டபத்தில்

கதிரை காணாமல் வருது

 

 

கொத்துரொட்டியும் பாணும் பருப்பும்

ரோல்சும் வடையும்

உடன் ஆட்டிறைச்சியும்

புட்டும் இடியப்பமும்

சொதியும் சம்பலும்

ஒடியற்கூழும்

இன்னும் தமிழ்க்கடைகளில் 

விற்பனைக்கு இருக்கு

 

 

கோயில்களும்

திருவிழாவும்

தேரும்

தீர்த்தமும்

கும்பாபிசேகங்களும்

மணிக்கடைகளும்

அன்னதானமும்

கொண்டக்கடலையும்

கச்சானும்

இங்கையும் இருக்கு...

 

 

கோவில் நிருவாகச்சண்டையும்

சங்க பொதுக்கூட்ட சண்டையும்

திருவிழா ஆர் செய்யுறது எண்ட

குழப்பமும் இப்பவும் 

இங்க இருக்கு...

 

 

அடுத்த தலைமுறையோட புலம்பெயர்தமிழன்

செத்துப்போவான் எண்டு எவன் சொன்னவன்?

 

 

தமிழ்பள்ளிக்கூடம் இருக்கு

விளையாட்டுப்போட்டி இருக்கு

ஆடிப்பிறப்பு இருக்கு

தமிழ்தின போட்டிகள் இருக்கு...

சின்ன சின்ன பிள்ளைகள்

தமிழ்ப்பேச்சும் இருக்கு...

 

 

காத்தான் கூத்து இருக்குது

நாடகம் இருக்குது

வில்லுப்பாட்டு இருக்குது

கூட்டு மேளம் இருக்குது

பறையும் இருக்குது

 

 

எந்த மடையன் சொன்னான்

அடுத்த தலைமுறையோட 

வெளிநாட்டில் தமிழ் செத்துப்போகும் எண்டு?

 

 

கொல்லும் குளிரிலும்

வேட்டியும் சால்வையும்

பட்டுச்சீலையும் கட்டியே 

இப்பவும் இங்க கோவிலுக்குப்போறம்

ஜீன்சும் சேட்டும் போட்டு அங்கபிரதட்சணை செய்வதுமில்லை

காவடி எடுப்பதும் இல்லை..

 

 

எந்த அறிவுக்கொழுந்து சொன்னான் 

எங்கள் கலாச்சாரம் வெளிநாட்டில்

அழிந்துவிடும் எண்டு?

 

 

இங்க இப்பவும்

இரவு பத்துமணிக்கு பின் வந்தால் அம்மா ஏசும்

அப்பா அடிக்கும்

அண்ணா முறைப்பான்...

தங்கச்சி மூஞ்சையை நீட்டுவாள்..

 

 

என் காச்சட்டை ஓட்டையை அம்மாதான் தைக்கிறா

என் உடுப்புகளை தங்கச்சிதான் தோய்க்கிறாள்

 

 

எவனடா சொன்னது

அடுத்த தலைமுறையோடு

பண்பாடு வெளிநாட்டில் 

அழிஞ்சுபோடும் எண்டு??

 

 

மாதாமாதம் 

அப்பம்மாவுக்கும்

அம்மம்மாவுக்கும்

அம்மாதான் காசு அனுப்புறா...

 

 

பத்து வருசம் கழிச்சும்

மாமியின் மூத்த மச்சாளின்

சாமத்தியவீடு 

அப்பாவின் இரண்டுமாத சம்பளத்தில்தான்

நடந்தது..

 

 

அப்பப்பாவின் செத்தவீடு

என்ர செலவு

அம்மம்மா செத்தாலும் அதுவும்

என்ர செலவுதான்

ஊரில எத்தின பேரன் இருந்தாலும்

ஆயிரம் மைல் கடந்து நான் இருந்தாலும்

எனக்கும் உரிமை இருக்கு

உரித்தும் இருக்கு

 

 

எந்த லூசன் சொன்னவன்

வெளிநாட்டுக்கு போனவங்கள்

வாயை பொத்திக்கொண்டு இருக்க வேணும் எண்டு??

 

என்னதான் சம்போ போட்டு முழுகினாலும்
என்ர தலையில வீட்டு முற்றத்து மண்ணும்
என்னதான் கைகழுவினாலும்
கரவலை மீன் கறி வாசமும்
போகுதேயில்லை...!!!
 

ஆயிரத்தில ஒண்டு

வெள்ளைகள் போல 

மாறினாலும்

தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதும்

தமிழனாத்தான் வாழுறம்.....

-தமிழ்ப் பொடியன்-

11109499_10152995423873002_4525237324864

11109000_10152995422258002_3810521080426

 

10250050_10152995422268002_2974811817901

 

11246018_10152995422363002_8929553700642

 

1554394_10152995422728002_56090920545369

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் அடையாளங்கள் என்றும் தொலைவதில்லை...!

 

வேலிப் பொட்டுக்குள்ளால் விடுப்புக் கதைத்தோம் அன்று --- மாறாமல்

வாட்ஸப்பாலும் தொடருகின்றோம் இன்று...! :)

 

நன்றி தமிழ்ப்பொடியன்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.