Jump to content

நூடுல்ஸ் எமன்! - கண்டிப்பாக வாசியுங்கள்


Recommended Posts

கனடாவில் தமிழ் கடைகள் அனைத்திலும் Maggi Noodles மற்றும் இன்ன பிற instant noodles கள் விற்கப்படுவதையும் அவற்றை அநேகமான தாய்மார்கள் வாங்கிப் போவதையும் காண்கின்றேன்.

ஈயம் போன்றன அதிகமாக இருப்பதால் ஆரோக்கியத்துக்கு மிகவும் கூடாது என்று இந்தியாவில் சில மானிலங்கள் இதனை அண்மையில் தடை செய்தும் இன்னும் சில தடை செய்வதைப் பற்றி சிந்தித்தும் வருவதாக செய்திகள் சொல்கின்றன.

முந்தி சாப்பிட்ட ஆசையில் வருடத்தில் ஓரிருமுறை வாங்கி சுவைத்தாலே ஒழிய நானோ அல்லது என் மனைவியோஒரு போதும் இவற்றை வாங்குவதில்லை.

 

பிள்ளைகளுக்கு கொடுப்பதே இல்லை.

 

அதில் உள்ள nutritious facts இனை பார்த்தாலே தலை சுற்றும். சோடியம் 50% இற்கு மேல் இருக்கும்

அதுவும் சீனத் தயாரிப்பு என்றால் மிக மோசமாக சோடியம், இரசாயனப் பொருட்கள் காணப்படும்

பிள்ளைகளின் மீது அன்பும் அக்கறையும் உள்ள தாய்மார்களும் அப்பாக்களும் இவற்றை ஒரு போதும் வாங்க வேண்டாம்

 

-----------------

 

 

நூடுல்ஸ் எமன்!

 

“சில நிமிடங்களில் தயார்” என சென்டிமென்ட் விளம்பர வார்த்தைகளால் வசீகரிக்கும் நூடுல்ஸில்  ஈயம் (Lead) கலந்திருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது உத்தரப்பிரதேச அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து மேலாண்மை நிறுவனம் (The Food Safety and Drug Administration (FSDA)).

உணவில் 0.01-2.5 பிபிஎம் (ppm) என்ற அளவில் மட்டுமே ஈயம் கலந்திருக்க அனுமதி உண்டு. ஆனால், நூடுல்ஸில் 17.2 பிபிஎம் அளவுக்கு ஈயம் கலந்துள்ளது என்கின்றனர் ஃஎப்.எஸ்.டி.ஏ அதிகாரிகள். இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட, ஏழு மடங்கு அதிகம். குறைந்த அளவில் ஈயம் சேர்க்கப்பட்ட உணவைச் சாப்பிட்டாலே, குழந்தைகளின் மூளைத்திறன் (ஐ.கியூ) குறையும், ரத்தசோகை ஏற்படும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

நூடுல்ஸ் என்பது அவசியம் சாப்பிட வேண்டிய உணவே அல்ல. அதில், நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் என எந்தச் சத்துக்களுமே இல்லை என்பதுதான் உண்மை. முழுவதுமே மைதாவினால் தயாரிக்கப்பட் டது. கொழுப்பு, உப்பு, மாவுச்சத்து, செயற்கை சுவையூட்டி ரசாயனங்கள் போன்றவை மட்டுமே பிரதானமாக உள்ளன. இதில், தற்போது அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலான அளவு ஈயம் உள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

“ஈயம் விஷத்தன்மை கொண்டது. இதைச் சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பாதிக்கும். நரம்புப் பிரச்னைகள் ஏற்படும். கடுமையான வயிற்றுவலி வரலாம். வாய் மற்றும் தொண்டை எரிச்சல், அலர்ஜி, தலைவலி போன்ற உபாதைகளும் வரலாம். கருவுற்ற பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் கரு பாதிக்கலாம் என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.

நுாடுல்ஸ் உணவு பற்றி அவர் தரும் அதிர்ச்சி தகவல்கள் இதோ...........

noodles%20right%2011.jpg"பொதுவாக, நூடுல்ஸ் இந்திய உணவே அல்ல. பாரம்பரிய உணவுகளை மட்டுமே நம் உடல் ஏற்கும். நம் மரபியல்ரீதியான பழக்கமும் அதுவே. உடலும் அப்படித்தான் பழகி இருக்கும். சுவைக்காக நூடுல்ஸை விரும்பிச் சாப்பிட்டாலும், அவை செரிக்க இரண்டு நாட்கள் ஆகும். அதில் சேர்க்கப்பட்ட பதப்படுத்திகள், ரசாயனங்கள், அதிக அளவிலான உப்பு, வழவழப்புடன் இருக்க மெழுகு போன்றவை செரிக்க, சில நாட்களாவது பிடிக்கும். இத்தகைய உணவை நாம் சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்படும். உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, நாளடைவில் நோய்களின் பிடியில் தள்ளப்படுவோம்.

மோனோசோடியம் க்ளுட்டமேட் என்ற சோடியம் உப்பு, ஒரு சுவையூட்டி. ஒரு வகையான அமினோ அமிலம். இது, தன் சுவையால் ஒருவரை அடிமையாக்கும் குணம் கொண்டது. குறிப்பாக, குழந்தைகளை மீண்டும் மீண்டும் இதே உணவைச் சாப்பிட வைப்பதற்காக, நூடுல்ஸில் மோனோ சோடியம் க்ளுட்டமேட்டின் அளவை அதிகம் சேர்த்துத் தயாரிக்கின்றனர்.

குழந்தைகள் நூடுல்ஸை விரும்பிச் சாப்பிடுவதற்கு இதுவே காரணம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இந்த உப்பு கெடுதியையே உண்டாக்கும். அதிகப்படியான உப்பால் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, மூட்டு வீக்கமடைதல், மறதி, கவனச்சிதறல் போன்ற பாதிப்புகள் வரலாம். அடிக்கடி தலைவலி, சிறுநீரகப் பாதிப்பு போன்ற அவஸ்தைகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

noodles%20550.jpg

தொடர்ந்து கூறும் அவர், “நேரமின்மை காரணமாக ‘சில நிமிடங்களில் உணவு தயார்’ என்பதால், பெற்றோர்களும் நூடுல்ஸ் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். குழந்தைகளும் அதன் சுவைக்கு அடிமையாகி, ‘நூடுல்ஸ் தந்தாலே போதும்’ என்று திருப்தி அடைகின்றனர்.

அதே இரண்டு நிமிடங்களில், சிவப்பு அவல் மற்றும் கேழ்வரகு மாவைக்கொண்டு விதவிதமான ரெசிப்பிகளைச் செய்துகொடுக்கலாம்.  

முந்தைய இரவு ஊறவைத்த கொண்டைக் கடலை, பச்சைப் பயறு, ராஜ்மா, மக்காச் சோளம் போன்ற சுண்டல் வகைகளை, குக்கரில் வைத்துச் சமைத்தால், இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடும். காய்கறி சாலட், ஃப்ரூட் சாலட், பிரட் டோஸ்ட் போன்றவை தயார் செய்ய, ஐந்து நிமிடங்கள் போதும்.

கேரட் ஜூஸ், பேரீச்சை ஜூஸ், தேங்காய் பால் போன்ற ஆரோக்கிய பானங்கள் செய் வதற்கான நேரமும் குறைவுதான். இப்படி, ஆரோக்கிய உணவுகளைத் தேர்ந்தெடுத் துக் கொடுப்பதால், குழந்தைகளுக்கு நோய்கள் நெருங்காது. பணமும் விரயமாகாது. உடல் ஆரோக்கியமும் பெருகும்” என்கிறார்.

சுவையான, ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதற்கு, அதிக அக்கறை,கொஞ்சம் மெனக்கெடுதல் போதும். இதுதான் பெற்றோர்கள், பிள்ளைகளுக்குத் தரும் ஆரோக் கிய செல்வம்.  டயட்டீஷியன் சொல்வதை கேட்போம், பிள்ளைகள் எதிர்காலத்தை காப்போம்!

-ப்ரீத்தி
படங்கள்: கபிலா காமராஜ்

 

http://www.vikatan.com/news/article.php?aid=47019

 

Link to comment
Share on other sites

நன்றி இணைப்புக்கு!


சைனீஸ் இதுகளைத் தானே சாப்பிடுகின்றார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.நிழலி.

 

இனி மேல் கட்டாயம் வாசிக்க என்று செய்தி இருந்தால்

 

கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று போட்டு விடவும்.

 

சும்மா பிச்சுக்கிட்டு ஓடுமில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய்க்கு ருசியாகவும், சமைக்க சுலபமாகவும்... இருப்பதால்,
இதனை விரும்பிச் சாப்பிடுவதுண்டு. இனி மேல்... அவதானமாக இருக்க வேண்டும்.
 

Link to comment
Share on other sites

மாகி நூடுல்ஸ் கேடானதா?- பரிசோதிக்கிறது கர்நாடக அரசு

 

Maggi_2413234f_2417235f.jpg

 

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிம் மாநிலங்களில் மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளுக்குத் தடை விதிக்க தீவிரமாக ஆலோசிக்கப்படும் நிலையில், கர்நாடக அரசும் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய கர்நாடக மாநில உணவு மற்றும் பொது வழங்கல் அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், "மகாராஷ்டிரம், உத்திரப் பிரதேச மாநிலங்களின் ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில், இந்த உணவு வகையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
மாகி நூடுல்ஸ் உணவைப் பரிசோதிப்பதற்கும் நடவடிக்கைக்கு, மாநில சுகாதாரத் துறையைக் கேட்டுக்கொண்டுள்ளோம். அந்த ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 
உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டியது உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் கடமை. மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் தடை செய்யப்பட வேண்டும். இந்த வாரத்திலேயே நூடுல்ஸ் பாக்கெட் மாதிரிகள் சோதனைக் கூடத்துக்கு அனுப்பப்படும். பின்னர், அதன் முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும்" என்றார் அவர்.
 
 
 
 
நிச்சயமாக இது கேடானது, எனது மகனுக்கு 2 முறை இதனால் உடல் நலகுறைவு ஏற்பட்டது. எனது மகன் படிக்கும் பள்ளியிலும் இதை கொண்டுவர வேண்டாம் என்று அறிவுர்த்தி உள்ளார்கள். முதலில் இது சம்பந்தமான விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். இதை பார்த்துதான் சிறுவர்கள் அதை விரும்பும் நிலை ஏற்பாடுகிறது.
 
Irfan  
 
 
 
Link to comment
Share on other sites

எனக்கு உந்த நூடுல்ஸ் சுவை பிடிக்கவில்லை. அதனால் வீட்டில் செய்வதும் இல்லை. எங்கயாவது பார்ட்டி எண்டு போனால் மற்ற உணவுவகைகளுடன் சேர்த்து கொஞ்சமா சாப்பிட்டு இருக்குறான் . வீட்டில் பெரும்பாலும் சோறு கறி பிட்டு இடியப்பம் போன்ற சாப்பாடுதான். :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இங்கிலாந்தில்  போர்ட் கெல்த் இப்பத்தான் தூக்கத்தில் இருந்து எழும்பி உள்ளார்கள் கடந்த வாரம் வந்த கொண்டஇனர் நாப்பதடி கப்பல் சரக்கு பெட்டி முழுவதும் மகி நூடில்ஸ் எரிக்க சொல்லி உத்தரவு வந்துள்ளது இறக்குமதி பண்ணியவர்  பட்டேல் துள்ளிக்கொண்டு திரிகின்றார் . நம்மாட்கள்  பொன்னி ரைஸ் ,தேங்காய் ,மிளக்காயதுள் ,மகி என கலந்து கட்டி அடிப்பதால்  இரண்டு மூன்று கொண்டைனர்  தப்பி வந்துள்ளது ஆகவே தமிழ்கடைகளில் மகி வரும் யாராவது உள்ளூர் கவன்சில் டிராடிங் agent அல்லது பூட் ஹெல்த இன்ஸ்பெக்டர்  இடம் கொம்பிளைன்ட்  கொடுக்கும்மட்டும் வியாபாரம் கொடிகட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

முடிந்தால் மாகாண உணவுப் பாதுகாப்பு பிரிவுக்கு (Food Safety Authority) இது பற்றி தெரிவித்து விடுங்கள். இந்திய , UK தடைகள் குறித்தும், இங்கே தாராளமாக விற்கப்படுவதை அவர்கள் அறிந்து இருக்கிறார்களா என்றும் போட்டு, ஒரு பிரதி, cc, Ottawa மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதகவும் காட்டுங்கள்.

அவர்கள் தேவையானதை செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த நூடுல்ஸ் வெறும் மாவில் சில பதார்த்தங்கள் சேர்த்துச் செய்கின்றார்கள் என நினைத்திருந்தேன். இதில் இவ்வளவே கேடு இருப்பதை இப்பதான் அறிகின்றேன்.  நன்றி நிழலி.

 

வீட்டில் இவை பாவிப்பது குறைவுதான்....! நம்மட உணவு வகைகள்தான் தினமும்...!!! :)

Link to comment
Share on other sites

சீன உணவகங்களில் சூப், உணவுகள் போன்றவற்றில் மோனோசோடியம் க்ளுட்டமேட் என்ற சோடியம் உப்பு சேர்க்காத பதார்த்தங்களே இல்லை. அது வெறும் சுவைக்காகமட்டுமே சேர்க்கப்படுகிறது.

இந்த உப்பை சீன, மளிகைக் கடைகளில் வாங்கலாம்... எம்மவர்கள் சிலரும் இதை வாங்கி வீட்டில் உபயோகிப்பதை அவதானிக்க முடிகிறது. மற்றும் தமிழ் வைபவங்களுக்கு உணவு வகைகளை விநியோகிப்பவர்களும் இதை உபயோகிப்பது ஆங்காங்கே இலட்பெறுகிறது.

 

சீனர்கள் இந்த உப்புடன் சீனியையும் சேர்த்து பாவிப்பதால், இதனால் ஏற்படும் பாதிப்பு மட்டுப்படுகிறது என்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தமிழ்க்கடைகளில்  சனங்கள் இந்த  நூடில்சைப் பெட்டி பெட்டியாகத் தோளில் சுமந்து செல்வதைக் கண்டிருக்கின்றேன். விலையையும் கொஞ்சம்  குறைத்து விட்டால் சொல்லத் தேவையில்லை.

இணைப்பிற்கு நன்றி நிழலி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த நூடுல்ஸ் வெறும் மாவில் சில பதார்த்தங்கள் சேர்த்துச் செய்கின்றார்கள் என நினைத்திருந்தேன். இதில் இவ்வளவே கேடு இருப்பதை இப்பதான் அறிகின்றேன்.  நன்றி நிழலி.

 

வீட்டில் இவை பாவிப்பது குறைவுதான்....! நம்மட உணவு வகைகள்தான் தினமும்...!!! :)

 

எங்கடை சாப்பாடுகளின்ரை தரம் மணம் சுவைக்கு உவங்கடை சாப்பாடு கிட்டவும் வராது... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இணைப்பிற்கு நன்றி நிழலி,
மோனோ சோடியம் க்ளுட்டமைட் பாவிப்பது சம்மந்தமாக ஓரளவு விழிப்புணர்வு இருந்தது.
முடிந்தளவு "க்ளுட்டன்   ப்ரீ" பொருள்கள் தான் வாங்குவேன்.
பொடியன்கள் பள்ளிக்கு கொண்டுசெல்ல .... இருந்துட்டு எப்போவாவது "அவசர" தேவைக்காக வாங்குவேன்... இனிமேல் அதுவும் இல்லை.
"ஆட்டிஷம்", "ADHD" போன்ற பல உடல் /மன ரீதியான சூழ்நிலைகளுக்கும் இவை ஏதுவாக அமைகின்றன.
Link to comment
Share on other sites

நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷித்துக்கு நோட்டீஸ்: ரசாயன உப்பு அதிகம் உள்ளதாக புகார்

 

madhuri_2422036f.jpg

மாதுரி தீட்ஷித்
 
நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ள, பிரபல பாலிவுட் நடி கைக்கு உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இரண்டு நிமிடங்களில் தயாரிக்க கூடிய நூடுல்ஸ் விளம்பரத் தூதுவராக பாலிவுட் நடிகை மாதுரி தீக் ஷித் நிய மிக்கப்பட்டுள்ளார். இந்த நூடுல்ஸை குழந்தைகள், சிறுவர்கள் விரும்பி உண்கின்றனர். அவர்களை கவரும் வகையில் நூடுல்ஸ் விளம்பரங்கள் அமைந் துள்ளன.
 
இந்நிலையில், உத்தரப் பிரசேத்தை சேர்ந்த உணவு பாது காப்பு நிர்வாக அமைப்பு, நூடுல் ஸின் சேம்பிள்களை சேகரித்து ஆய்வு செய்தது. அப்போது, அதில் மோனோசோடியம் குளூடாமேட் என்ற உப்பு, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. இது குழந்தைகளின் வளர்ச் சியை பாதிக்கக் கூடியது என்று தெரி வித்தது.
 
இதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் விற்பனைக்கு அனுப் பப்பட்ட நூடுல்ஸ்களை உடனடியாக திரும்பப் பெறும் படி அதை தயாரிக்கும் நிறுவனத்துக்கு உத்தரவிடப் பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதையடுத்து, விளம்பரங் களில் நடித்துள்ள மாதுரிக்கு, உத்தராகண்ட் மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “2 நிமிடங்களில் நூடுல்ஸ் தயார் என்றும் சத்தானது என்றும் விளம்பரங்களில் கூறி நடித்துள்ளீர்கள். எந்த வகையில் இந்த நூடுல்ஸ் சத்தானது என்பதை 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
 
நோட்டீஸுக்கு 15 நாட்களுக் குள் நடிகை மாதுரி பதில் அளிக்காவிட்டால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மகிமானந்த் ஜோஷி நேற்று தெரிவித்தார்.
 
இதனிடையே நூடுல்ஸில் மோனோ சோடியம் குளுடா மேட் அளவுக்கு அதிகமாக இல்லை என்று நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
'விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது'
 
‘நூடுல்ஸ்’ விளம்பரத்தில் நடித்த நடிகை மாதுரி தீக் ஷித் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று நுகர்வோர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.சங்கர் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
 
உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள்,நகைகள் போன்றவற்றை வியாபாரம் செய்ய பல நிறுவனங்கள் உள்ளன. இவற்றை மக்களிடம் விளம்பரப்படுத்த சினிமா நடிகர்களை அந்த நிறுவனங்கள் நடிக்க வைக்கின்றன.
 
இந்நிலையில் நிறுவனத்தின் பொருள் தரமற்றது என தெரியவந்தால், அதற்காக விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது வழக்கு தொடர முடியாது. ஏனென்றால் நடிகர்களை பார்த்து நுகர்வோர் பொருட்களை வாங்குவதில்லை. பொருட்களை விற்கும் நிறுவனத்தின் தரத்தை பார்த்துதான் பொருட்களை வாங்குகின்றனர்.
 
மேலும் நுகர்வோர் பொருட் களை வாங்குதன் மூலம் கிடைக் கும் லாபம் சம்பந்தப்பட்ட நிறு வனத்துக்குதான் கிடைக்கிறது.
 
விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் அந்த பொருளை முன்னிலைப்படுத்துகின்றனர்.அவ்வளவு தான். இதற்காக அவர்கள் மீது சட்டரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதற்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், குற்றவியல் சட்டம் ஆகியவற்றில் இடமில்லை.
 
நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட நடிகை விளக்கம் அளித்தால் மட்டும் போதும். மற்றபடி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இதுகுறித்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லக்‌ஷ்மி நாராயணன் கூறும்போது, “உணவு பாது காப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் படி, தவறாக வழி நடத் தும் விளம்பரங்கள் வெளியிடப் பட்டால், அந்த பொருளின் தயாரிப் பாளர் மீது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இது போன்ற பொருட்களின் விளம்பரங்களில் நடிப்பவர்களிடம் விளக்கம் மட்டுமே கேட்க முடியும். விளம்பரத்தில் நடித்ததற்காக, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது” என்றார்.
 
http://tamil.thehindu.com/india/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7263380.ece?homepage=true

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றிய அமிதாப், மாதுரி, பிரீத்தி ஜிந்தா மீது வழக்கு பதிவு: தேவைப்பட்டால் கைது செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவு

பி.டி.ஐ.

COMMENT (31)   ·   PRINT   ·   T+  
 
 
 
 
 
amitabh_2425974f.jpg
 

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றிய நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்ஷித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது பிஹார் மாநில போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேவை ஏற்பட்டால் அவர்களை கைது செய்யலாம் என்றும் பிஹார் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ரசாயன உப்பு கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை பெற்று ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட கூடுதல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இருவர் மனு தாக்கல் செய்தனர்.

அதில், சமீபத்தில் தாங்கள் மேகி நூடுல்ஸை வாங்கி சமைத்து சாப்பிட்டோம். அதையடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இப்போது அதில் ரசாயன உப்பு அதிகம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே அந்த நிறுவனம் மற்றும் அதன் விளம் பரத்தில் தோன்றி மக்களை தவறாக வழிநடத்தியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டு மென்று மனுவில் கோரியிருந்தனர்.

இதை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக நெஸ்லே நிறுவனத்தின் இரு அதிகாரிகள், மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றிய அமிதாப் பச்சன், மாதுரி தீட்ஷித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார். போலீஸ் விசாரணைக்கு தேவைப்பட்டால் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உணவுப் பொருளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பொருளை கலப்பது, தீமையான உணவை விற்பது, ஏமாற்றுதல் மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு துணை போகுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் தடை

கேரள அரசு நேற்று மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

 

ஹரியாணா மாநில அரசு இந்த விஷயத் தில் நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளது.

அதே நேரத்தில், மேகி நூடுல்ஸை வெளியில் உள்ள ஆய்வகத்திலும், தங்களது சொந்த ஆய்வகத்திலும் பரிசோதித்துள்ளதாகவும், அது சாப்பிடு வதற்கு ஏற்றதுதான் என்றும் நெஸ்லே நிறுவனம் கூறியுள்ளது.

Untitled_2424236f_2424328c.jpg
தரம் குறித்த அச்சமும் சந்தேகமும் எழும் சூழலில், நுகர்ப் பொருட்கள் குறித்த புகார் எழும்போது, அவற்றை விளம்பரங்களில் பரிந்துரைக்கும் நட்சத்திரங்கள் மீதும் நடவடிக்கை தேவை என்ற கருத்து...
மிகவும் சரியானதே : 74% சரியல்ல : 11% விவாதத்துக்கு உரியது : 15%
மொத்த வாக்குகள்: 3856

http://tamil.thehindu.com/india/மேகி-நூடுல்ஸ்-விளம்பரத்தில்-தோன்றிய-அமிதாப்-மாதுரி-பிரீத்தி-ஜிந்தா-மீது-வழக்கு-பதிவு-தேவைப்பட்டால்-கைது-செய்யலாம்-என-நீதிமன்றம்-உத்தரவு/article7274814.ece?homepage=true

Link to comment
Share on other sites

லக்னோ: மேகி நூடுல்ஸ் இன்று நாடு முழுவதும் பெரும் சர்ச்சையில் சிக்கி நொந்து போய்க் கிடக்கிறது. மேகி நூடுல்ஸின் அபாயகரமான முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பெருமை வி.கே.பாண்டே என்பவருக்குத்தான் போய்ச் சேர வேண்டும். டெல்லியில் மேகி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு இந்தத் தடை தொடரும். நெஸ்லே இந்தியா நிறுவனமும் மேகியால் பெரும் சட்டச் சிக்கலில் மாட்டியுள்ளது. இந்த விவகாரம் இவ்வளவு பெரிய சிக்கலாக மாற வி.கே.பாண்டேதான் காரணம் என்பது பலருக்குத் தெரியாது. அதைப் பற்றிப் பார்ப்போம். வி.கே.பாண்டே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி ஆவார். 40 வயதான பாண்டே, உ.பி. மாநிலம் பாரபங்கியைச் சேர்ந்தவர். இவர்தான் முதல் முறையாக நெஸ்லே மீது வழக்குப் போட்டவர். இதற்கு முன்பு பிரிட்டானிகா கேக், வாஹித் பிரியாணி ஆகியவற்றுக்கு எதிராகவும் வழக்குப் போட்டு திணறடித்தவர் பாண்டே. இவர் போட்ட வழக்கால், தனது பத்திரிகை விளம்பரத்தில் இது அசைவ கேக் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. முன்பு இந்த வாசகத்தை அது கண்ணுக்குத் தெரியாத பிரவுன் கலரில் போட்டு வந்தது. ஆனால் பாண்டே போட்ட போட்டால் சிவப்பு கலரில் போட ஆரம்பித்தது. லக்னோவைச் சேர்ந்த பிரபல பிரியாணி நிறுவனமான வாஹித் பிரியாணி மீதும் கேஸ் போட்டவர் பாண்டே. பிரியாணியில் அவர்கள் சேர்க்கும் நிறத்தில் சர்ச்சை இருப்பதாக பிரச்சினை கிளப்பினார் பாண்டே. 2014ம் ஆண்டு மார்ச் 10ம் தேதிதான் மேகிக்கு பிரச்சினை கிளம்பியது. சில சாம்பிள் பாக்கெட்களை வாங்கி வந்த பாண்டே அதை சோதனை செய்தார். பின்னர் அதை மேல் சோதனைக்கு அனுப்பி வைத்தார். நெஸ்லே உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததைக் கண்டுபிடித்தார். கோரக்பூரில் நடந்த சோதனையின்போது அதிக அளவிலான எம்எஸ்ஜி கலந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நெஸ்லே இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாண்டே. ஆனால் இந்த நோட்டீஸை எதிர்த்து அப்பீல் செய்தது நெஸ்லே. இதனால் கடுப்பான பாண்டே மீண்டும் ஒரு நோட்டீஸ் விட்டார். இதனால் சற்று அதிர்ந்தது நெஸ்லே. கொல்கத்தா ஆய்வகத்தில் சோதனை செய்ய அது முன்வந்தது. இதற்காக ரூ. 1000 கட்டணத்தையும் கட்டியது. கொல்கத்தா ஆ்ய்வகத்திலும் மேகியின் குட்டு உடைந்தது. மேலும் இந்த சோதனையின்போது எம்.எஸ்ஜி மட்டுமல்லாமல் வேறு சில அபாயகரமான பொருட்களும் இருப்பதாக அது சுட்டிக் காட்டியதால் மேகி சிக்கல் பெரும் சிக்கலானது. இதன் பிறகுதான் உ.பி. அரசு மேகிக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியது. இன்று நாடு முழுவதும் இது பரவியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/meet-the-whistleblower-know-how-the-controversy-unfolded-228051.html


கோவை: ஏற்கனவே நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது நெஸ்லேவின் பால் பவுடரும் புதுப் பிரச்சினையில் சிக்கியுள்ளது.

03-1433329589-nestle-nan-pro45.jpg

குழந்தைகளுக்கான இந்த பால் பவுடரில் உயிருடன் புழுக்கள் கூட்டம் கூட்டமாக நெளிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில்தான் இந்த குமட்டல் சம்பவம் நடந்துள்ளது. மேகி நூடுல்ஸ் உடல் ஆரோக்கியத்தைக் காலி செய்யும் வகையில் உள்ளதாக உ.பி., பீகார் என பல மாநிலங்களில் பிரச்சினையாகி வருகிறது. இந்த விளம்பர படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மீது வழக்குகளும் பாய்ந்து வருகின்றன. இந்த நிலையில் நெஸ்லேவின் பால் பவுடரால் புது சர்ச்சை வெளியாகியுள்ளது. கோவை புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். டாக்சி டிரைவரான இவர் தனது குழந்தைக்கு வழக்கமாக வாங்கும் நெஸ்லே பால் பவுடரை வாங்கியுள்ளார். 380 கிராம் நெஸ்லே நான் புரோ 3 டப்பாவை அவர் வாங்கினார். இவருக்கு 18 மாதத்தில் ஒரு குழந்தையும், இன்னும் ஒரு இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர். 18 மாதக் குழந்தைக்கு இவர் பேபி பார்முலாவைக் கொடுத்து வருகிறார். இரட்டைக் குழந்தைகளுக்காக இந்த நெஸ்லே பால் பவுடரை அவர் வாங்கி வந்தார். வீட்டுக்கு வந்து டப்பாவைத் திறந்து பால் பவுடரை எடுக்க முயன்றபோது உள்ளே புழுக்கள் உயிருடன் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பிரேம் ஆனந்த். மேலும் அவரது குழந்தைக்கு 2 நாட்கள் கழித்து தோலில் அலர்ஜியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரம் குறித்து நெஸ்லேவின் வாடிக்கையாளர் பிரிவில் புகார் கொடுத்தார் பிரேம் ஆனந்த். இதையடுத்து உள்ளூர் ஏரியா மேனேஜர் கிருஷ்ணபெருமாளுக்கு இதுகுறித்து விசாரிக்குமாறு நெஸ்லேவிடமிருந்து நோட்டீஸ் போனது. அவர் வேறு பால் பவுடர் டப்பாவைத் தருவதாக பிரேம் ஆனந்த்திடம் கூறினார். ஆனால் அதை ஏற்க பிரேம் ஆனந்த் மறுத்து விட்டார். இதையடுத்து நிறுவனத்தின் ஆய்வகத்தில் அந்த பால் பவுடரை சோதனை செய்ய நெஸ்லே பிரதிநிதி கூறியுள்ளார். ஆனால் அதையும் பிரேம் ஆனந்த் ஏற்கவில்லை. இது குழந்தைகளின் உயிர் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே பாரபட்சமற்ற நடுநிலையான விசாரணை தேவை என்று பிரேம் ஆனந்த் கூறி விட்டார். இந்த நிலையில் இந்த பால் பவுடரை கோவையில் உள்ள உணவு ஆய்வுகத்தில் ஆய்வு செய்து பார்த்தபோது அதில் 28 உயிருள்ள புழுக்கள் இருந்ததும், 22 சிறிய வகை புழுக்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நுிர்வாகத் துறையை அணுகி இந்த பால் பவுடரின் சாம்பிளை அவர்களிடம் கொடுத்து புகார் செய்தார் பிரேம் ஆனந்த். இந்தப் பவுடர் மாதிரியை ஆய்வு செய்த அங்குள்ள நிபுணர்கள் இந்த பால் பவுடர் பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்று அறிக்கை கொடுத்துள்ளனர். இருப்பினும் இந்தப் பவுடருக்கு மட்டும்தான் இந்த அறிக்கை பொருந்தும், ஒட்டுமொத்தமாக நெஸ்லே தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது என்றும் இவர்கள் கூறியுள்ளனர். இன்னும் என்னவெல்லாம் கிளம்பப் போகிறதோ!

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-man-stumbles-as-he-finds-live-larvae-nestle-milk-powder-228036.html

 

இந்தியாவின் கலப்படங்களால் உலக தரம் மிக்க உணவு நிறுவனங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேகி (#BanMaggi)-ட்விட்டர் காமெடி கலாட்டா

 
1.jpg
சமுக அவலங்களை துள்ளி குதித்து எள்ளி நகைப்பதில் தமிழ் நையாண்டி டிவிட்டர்களை மிஞ்ச யாராலும் முடியாது 

மேகி நூடுல்ஸில் அதிக அளவு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்துள்ளதாக சில மாநிலங்களில் தடை செய்யப் பட்டுள்ள நிலையில்........

1.jpg

அதன் விளம்பரங்களில் நடித்துள்ள நடிகர்  நடிகைகள் .மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் நிலை வந்துள்ளது 

இதனால் மற்ற விளம்பரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மத்தியில் ஜுரம்  எனக்கும் சென்னை அமிர்தாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் நடிகை ராதிகா

இன்னும் சில குளிர்பான விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் ஆர்யா,விஷால்....போன்றவர்கள் பயத்தில் பிதற்றுகிறார்கள்

இத்தகைய நிலைக்கு  எத்தனையோ சமுக புரட்சி செய்துள்ள முகநூல்,ட்விட்டர்....போன்ற சமுக வலைத்தளங்களே காரணம்

 
3a.jpg
The Protagonist ‏@arvinfido  

மனைவி: ராத்திரி மேகி ஓகே'வா?

 கணவன்: அது சாப்பிட கூடாதாம். பேப்பர் பாக்கலையா?

மனைவி: ஐயோ. சரி உப்மா பண்ணவா?

 கணவன்: போற உசுரு மேகிலேயே போகட்டும்..\

நதி முகம் @nadhimugam 
மேகி சத்தான உணவு என்று தீர்ப்பு வர வேண்டுமா ??? 
கேஸை கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாற்றவும்
 
bharanidharan ‏@bharanidharan06 
அதுக்காக எனக்கு குமாரசாமிதான் நீதிபதியா வேணும்னு  
மேகி கம்பெனிக்காரன் கேக்குறது எல்லாம் ஓவர்யா
 
 
குட்டி :) ‏@7da_kutty 
மேகி பேன் பண்ணிட்டாங்க! 
ஒயின்ஷாப் டைம் குறைச்சிட்டாங்க!! 
உலகம் அழியப்போறதுக்கான அறிகுறி தெரியுது!
 
பேங்க் ஆபிசர் ‏@Sathish26990 
இடியாப்பத்தின் வாழ்வுதனை மேகி கவ்வும் 
மீண்டும் இடியாப்பமே வெல்லும்
1.jpg
மைக்கிள் செல்வம் ‏@Michael_selvam  

வெங்கடேஷ் ஆறுமுகம் 2 hrs · வீட்டுக்கு வாங்களேன் ப்ரண்ட்ஸ் 
4 பாக்கெட் மேகி இருக்கு சாப்பிட்டுகிட்டே பேசுவோம்.
 
புதிரா புனிதமா @Puthira  

மேகி,நூல்டுஸ் க்கு தடை செய்த மாதிரி 
அப்படியே உப்புமாவுக்கும தடை பன்னிட்டா 
புண்ணியமா போகுமா எஜமான் . 
# பொண்டாட்டி அடிக்கடி கொடுக்கிற தண்டனை.
 
AaUf_r95_bigger.jpgநரேந்திர மோடி ‏@narendrermodi 
மேகி வந்ததும் என்ன மறந்துட்டாய்ங்க.. 

இவிங்களுக்கு சுயநினைவு வருவதுக்குள்ள பக்கத்துல இருக்க அண்டார்டிக்கா போயிட்டு வந்துடனும். என்னா வெயில்..

 
1.jpg
சாம்ராட் ‏@Its_SaamRaat 
மேகி விளம்பரத்துல நடிச்சவர கைது பண்றீர். இங்க ஒருத்தன் "கோக் குடிடா ராப் பண்ணுடா."ன்னு பாடினான். அவன என்ன பண்ண போறீர்

சிந்தனைவாதி @PARITHITAMIL  

மேகி நூடுல்ஸ் விவகாரம்: அமிர்தா அம்மணிக்கு ஜூரம் அடுத்து பெப்ஸி, கோக் விளம்பரத்தில் நடித்த நம் கூத்தாடிகள் என்ன ஆவார்களோ? தல தப்பிச்சு

piramanayagam @kprcpn 

மேகி குழந்தைகளின்உடல் நலத்திற்க்கும் கேடுன்னு ஒரு வரிய போட்டு விற்பனைக்கு செய்ங்க நாங்க சரக்க அப்படித்தேன் ஒரு வரிய போட்டு விக்கிறோம்
 
1.jpg
Siva♥Nakshatra ‏@mistrysiva 
வக்கீல் வண்டு முருகன்: என் கட்சிக்காரர் mr.குருவிகூடு மேகி பாக்குறதுக்கு நாக்குபூச்சி மாதிரி இருக்கறதுனால கொஞ்சம் மருந்து அடித்திருக்கிறார்
 
வெங்கடேஷ் ஆறுமுகம் ‏@venkatesh6mugam 
மேகிக்குறள்1  
மேகி செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 
இடியாப்பம் செய்து விடல்.

1.jpg
சிங்கத்தின் கர்ஜனை @AandeaDA  

நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது பழி போடக்கூடாது- குஷ்பூ#ஒரு மேகி பாக்கெட்டை வாங்கி அவங்க சாப்பிட்டா வழக்கை வாபஸ் வாங்கிடலாம் மேடம்
 
இதுபோன்ற கணக்கற்ற குறும்பதிவுகள் ட்விட்டர்,பேஸ்புக் வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன அனைத்து தொலைக்காட்சிகளிலும் இதைப் பற்றியே பேச்சு...... 

ஆனால் ஊடகங்களும் இந்த அவலத்திற்கு பொறுப்பு என்பதை மறந்துவிட்டு........ 

 
உண்மையில் மேகி நூடுல்ஸ் மட்டுமல்ல எல்லா நூடுல்ஸ்களிலும் எல்லா சுவையான நொறுக்கு தீனிகளிலும் சுவைக்காக பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன

 

نكهات كيميائية ......

Posted by ‎عبدالله بن عثمان الغامدي‎ on Tuesday, May 19, 2015

சிந்தனைவாதி @PARITHITAMIL  

நூடுல்ஸ் டேஸ்ட்க்கு அதிலுள்ள flover-ல் ஒரு பட்டாசுக்கான வெடிமருந்தே இருக்குதாம் வீடியோ ஆதாரம்

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது வழக்கு பதிவு # ஏன்டா தயாரிச்சவங்கள விட்டுட்டு நடிச்சவங்க மேல கேஸா?இதுதான் உங்க ஜனநாயகமா? நல்லா இருக்குடா உங்க நியாயம்?

 
 
 

 

Link to comment
Share on other sites

நூடுல்ஸ் பிரியர்களே கவலை வேண்டாம் இதைப் பார்த்து வீட்டில் சமையுங்கோ  :D 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.