Jump to content

ஸ்கொட்லான்ட் யார்ட் பாதுகாப்பில் இனியொரு.. – துரோகத்தின் பரிசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லான்ட் யார்ட் பாதுகாப்பில் இனியொரு.. – துரோகத்தின் பரிசு

05/27/2015 இனியொரு...

lyca-300x200.jpg

லைக்காவின் நிதியில் நடத்தப்பட்ட கூலித்தமிழ் நூல் வெளியீடு

இலங்கை போன்ற பாசிசமும் பேரினவாதமும் அரசாளும் நாடுகளில் மட்டுமல்ல புலம்பெயர் ஐரோப்பிய நாடுகளில் கூட ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்பத்தில் அவதூறுகளாகவும் வதந்திகளாகவும் மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல்கள் பின்னதாக கொலை மிரட்டல்களாகவும் இணைய ஊடகங்களை முடக்கும் நிலைக்கும் வளர்ந்து சென்றன.

ஊடகங்களில் மக்கள் சார்ந்த கருத்துக்களை முன்வைக்கின்றவர்கள் ஒரு வகையான அச்சத்துள் வாழ வேண்டிய நிலைக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கை அரசு மட்டுமல்ல தமிழர்கள் மத்தியில் தமது அதிகாரத்தை நிலை நிறுத்த விரும்புகின்ற குழுவினரும் கூட இவ்வாறான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டனர்.

2010 ஆம் ஆண்டில் இலங்கை அரச சார்பு ஊடகமான டான் தொலைக்காட்சியின் உரிமையாளரை பணக் கையாடல் வழக்கு ஒன்றில் தமிழ் நாடு போலிஸ் கைது செய்த வேளையில், இனியொருவின் ஆசிரியர்களாக இருந்த இருவர் இணைந்து குகநாதனைக் கடத்தியதாக அவதூறு பரப்பப்பட்டது. இந்த அவதூறை ஆரம்பித்து வைத்தவர் பிரான்சில் வசிக்கும் ரயாகரன் என்பவர். ஒரு குறித்த காலம் முழுவதும் இனியொரு மீதும் அதன் ஆசிரியர்கள் மீதும் இலங்கை அரச சார்பு இணைய ஊடகங்கள் இத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தன.

தொலை தூரத்தில் புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கையில் உடக சுதந்திரம் இல்லை என வெற்றுக் கூச்சல் போடும் எந்தப் புலம்பெயர் ஊடகங்களும் இத் தாக்குதலுக்கு எதிராகக் குரலெழுப்பாத நிலையில் தமிழ் நாட்டிலிருந்து நடத்தப்படும் மக்கள் ஊடகமான வினவு தலையிட்டதன் பின்னர் இத் தாக்குதல் முடிவிற்கு வந்தது.

இதன் பின்னர் தமிழர்களைத் தலைமையாகக் கொண்ட பல்தேசிய வர்த்தக நிறுவனமான லைக்காவின் இலங்கை அரச தொடர்புகள், இலங்கை அரசுடனான ஊழல்கள் தொடர்பாக இனியொரு தொடர்ச்சியாக பல ஆக்கங்களைப் பதிவு செய்தது.

அவ்வேளையில் இனியொரு ஆசிரியர் ஒருவர் மீதான கொலை மிரட்டல் தொடர்பாக பிரித்தானியப் போலிசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னதாக கடந்தவருடம் ஓகஸ்ட் மாதம் லைக்கா நிறுவனம் தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்ட இணைய ஊடகங்களான இனியொரு, லங்காநியூஸ்வெப், ஜேவிபி நியூஸ் போன்றவை மீது தாக்குதல் நடத்தப்பட்டு முடக்கப்பட்டன. ஜேவிபி நியூஸ் குறித்த செய்தியை நீக்கியதைத் தொடர்ந்து அதன் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட, லங்கா நியூஸ்வெப் மற்றும் இனியொரு ஆகியன தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு மேல் முடக்கப்பட்டிருந்தன.

இந்த இடைவெளிக்குள் பல்வேறு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. தொலைபேசிக் குறும் செய்திகள், மர்ம நபர்களின் பின் தொடரல்கள் என்பன தொடர்ந்தன. சமரசத்திற்கான முயற்சிகள் பல இடைத்தரகர்களால் மேற்கொள்ளப்பட்ட போதும் மக்கள் சார்ந்த ஊடகம் என்ற வகையில் லைக்காவுடனான பேச்சுக்களுக்கு இனியொரு உடன்படவில்லை. தவிர, லங்காநியூஸ்வெப் இணையமும் எந்தச் சமரச முயற்சிகளுக்கும் உடன்படவில்லை.

ராஜபக்ச அரசின் ஊடகங்கள் மீதான தாக்குதல்களை தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் மறைந்திருந்து கூச்சல் போடும் இணைய ஊடகங்கள், தமது கொல்லைப்புறத்தில் ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்துக் கண்களை மூடிக்கொண்டன. இவர்களுக்கெல்லாம் இலங்கையில் இருந்திருந்தால் ராஜபக்சவின் புகழ்பாடிகளாக வாழ்ந்திருப்பார்கள். தமக்குத் தொந்தரவு இல்லையென்றால் மக்களின் அவலங்களைப் பயன்படுத்திப் பிழைப்பு நடத்தும் இப் பிரகிருதிகள், நமது சமூகத்தின் சாபக்கேடுகள்.

இவை அனைத்திற்கும் மேலாக இந்த ஊடகங்களின் அரைக் கம்பங்களில் லைக்காவின் விளம்பரங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. ஒரு பக்கத்தில் ராஜபக்சவைப் பார்த்துக் குரைத்துக்கொள்ளும் ஊடகங்களின் வால்களில் பொது நலவாய நாடுகளின் மாநாட்டிற்கு நிதி வழங்கிய லைக்காவின் விளம்பரம் தொங்கிக்கொண்ட்ருந்ததை கண்ட போது தமிழினத்தின் அவல ஓலத்தின் சோகம் தெரிந்தது.

இவை அனைத்திற்கும் மேலாக இந்த ஊடகங்களின் அரைக் கம்பங்களில் லைக்காவின் விளம்பரங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. ஒரு பக்கத்தில் ராஜபக்சவைப் பார்த்துக் குரைத்துக்கொள்ளும் ஊடகங்களின் கழுத்தில் பொது நலவாய நாடுகளின் மாநாட்டிற்கு நிதி வழங்கிய லைக்காவின் கயிறு கட்டப்பட்டிருந்தது.

இப் பிழைப்புவாதம் இத்தோடு நிறுத்தப்படவில்லை. தொடர்ந்தது…. லைக்காவின் வட்டத்திற்குள் நமது காலத்திலும் அடிமைகளாக நடத்தப்படும் மலையக மக்களின் அவலங்களும் இழுத்துவரப்பட்டன. கூலித் தமிழ் என்ற தலைப்பில் மு.நித்தியானந்தன் எழுதிய நூல் ஒன்றின் வெளியீட்டு விழா லைக்கா ஆதரவில் நடைபெற்றது.

தமது முற்றத்தில் ஊடகங்களின் வாய்கள் பூட்டப்பட்டிருக்க கூலித் தமிழ் விலைபேசப்பட்டதை இனியொருவில் பெண்ணியச் செயற்பாட்டாளர் விஜி கவிதையாக எழுதியிருந்தார்.

nithi_m-300x199.jpg

ஹரோ நூல் வெளியீட்டு நிகழ்வில் நித்தியானந்தன்

இனியொருவில் தனி நபர்களதும், கட்சிகளதும், நிறுவனங்களதும் அரசியல் தொடர்பான விமர்சனங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. அவதூறுகளையும் தனி நபர்களின் சொந்த வாழ்க்கை தொடர்பான விடையங்களும் இனியொருவின் அக்கறைக்கு உட்படுவதில்லை. ஆனால் இனியொரு மீது அவதூறுகளும், தனி நபர் தாக்குதல்களும், கொலை மிரட்டல்களும் விடுக்கப்படுகின்றன. இனியொருவின் கருத்துக்களை எதிர்கொள்ளத் துணிவற்ற கோழைகள் என்பதை அவதூறுகளின் கர்த்தாக்கள் மக்களுக்குச் சொல்கிறார்கள்.

இக் கோழைகளின் கூட்டத்தோடு தம்மை மு.நித்தியானந்தனும் இணைத்துக்கொண்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் இனியொரு மீதும் பிரான்சில் வசிக்கும் தோழர் அசோக் மீதும் அவதூறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஹரோ பகுதியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் இனியொரு ஆசிரிரை ‘நாய்’ என் விழித்த மு.நித்தியானந்தன் லைக்கா வழங்கிய நிதிக்காகக் குரைத்தாரா அல்லது அங்கு பிரசன்னமாகியிருந்த குகநாதனின் ‘பேச்சாளர்’ ரயாகரனைக் குளிர்சிப் படுத்தினாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

தமிழ் சமூகத்தின் பிரமுகப் பிதாக்களில் ஒருவரான நித்தியானந்தன். இனியொரு ஸ்கொட்லாண்ட் யார்ட்டின் பாதுகாப்பில் செயற்படுவதாகவும் வேறு குறிப்பிட்டுள்ளார். ஸ்கொட்லாண்ட் யார்ட் ‘நாய்’களுக்கும் பாதுகாப்பு வழங்குவதாக கண்டுபிடித்த நித்தியானந்தன் இன்றும் சென்னையிலிருந்து ‘செந்தோழர்களைத்’ தாக்குவதாகவே கற்பனை செய்துகொள்கிறார் போலும்.

லைக்கா தாக்குதல் நடத்திய போது கண்களை மூடி, காதுகளைப் பொத்தி, வாயில் உள்ளங்கையை வைத்து அழுத்தி காந்திக் குரங்கு வேடமணிந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய பிரமுகர்களும், நித்தியானந்தனின் தாக்குதல்களைக் கண்டுகொள்ளவில்லை.

யாழ்ப்பாணத்தில் சுந்தரம் என்ற போராளி கொலை செய்யப்பட்ட போது துரோகத்தின் பரிசு என்ற பிரசுரம் வெளியிடப்பட்டது. அன்று சுந்தரத்தின் போராடும் சுதந்திரத்தைப் பாதுகாக்க மக்கள் தயார்படுத்தப்படமை இன்று பல ஆயிரம் மைல்கள் தொலைவில் அரசியல் கொலை செய்யக் கூட்டம் போடுவதில் வந்து நிற்கிறது.

http://inioru.com/46340/vilification-and-traducement-against-inioru-editors/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அன்று சுந்தரத்தின் போராடும் சுதந்திரத்தைப் பாதுகாக்க மக்கள் தயார்படுத்தப்படமை இன்று பல ஆயிரம் மைல்கள் தொலைவில் அரசியல் கொலை செய்யக் கூட்டம் போடுவதில் வந்து நிற்கிறது.
சுந்தரத்தை மட்டும் சொல்வதின் உள் நோக்கம் என்னவோ? சந்ததியார் இன்னும் பலர் உண்டு...
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.