Jump to content

அணிகள் அறிவோம்!


Recommended Posts

அணிகள் அறிவோம்!

அணிகள் என்றால் என்ன என்ற கேள்வி சிலருக்கு வரலாம். அதை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். தமிழ் மொழி தன்னை அழுகுபடுத்துவதற்கு அணிந்து நிற்பவைகளை அணிகள் என்று சொல்லலாம்.

உடலை அழகுபடுத்தவதற்கும், பெருமைப்படுத்துவதற்கும் அணிகலன்களை அணிகிறோம். அதே போன்று தமிழை அழகு படுத்தி, பெருமைப்படுத்துகின்ற வேலையை அணிகள் செய்கின்றன.

அத்துடன் சொல்லப்படுகின்ற கருத்துக்கு ஒரு வலுவை அணிகள் கொடுக்கின்றன.

கவிதைகளில் இந்த அணிகள் இடம்பெறுகின்றன. உரை நடைகளில் இதை பயன்படுத்துபவர்களும் உண்டு.

இன்றைக்கு கவிதை என்பது புதுக்கவிதை, ஹைக்கூ என்று பல வடிவங்களை எடுத்து விட்டன. அவ்வாறான கவிதைகளிலும் அணிகள் இருக்கின்றன.

கவிதை எழுதுபவர்கள் இந்த அணிகள் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன்.

அணிகள் இரண்டு வகைப்படும்.

1. சொல்லணி

2. பொருளணி

எதுகை, மோனை போன்றவைகள் சொல்லணிக்குள் அடங்குகின்றன.

மிகுதியை உங்களின் வரவேற்பை பொறுத்து எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

என்னைப்பொறுத்தவரை கவிதைகளை வரையறைகளுக்குள் அழுத்துவதை நான் ஏற்பதில்லை..

சுவாரசியமாக.. சிந்திக்ககூடியவகையில்..அழகாக சொல்லப்பட்டால்..நான் ரசிக்கிறேன்..

ஆனாலும்.. தமிழை சாகடிக்ககூடாது என்பதில் நான் உடன்படுகிறேன்.

தமிழில் நிறைய விடயங்களை நான் அறிந்ததில்லை.

அதலால் நீங்கள் தரும் தகவல்கள் எனக்கும் உதவும்..

என் பிழைகளை யாரும் சுட்டிக்காட்டினால் நான் திருந்திக்கொள்வேன்.

உங்கள் தவிப்பும் தமிழ்ப்பற்றும் எனக்குப் புரிகிறது. நீங்கள் தொடரவேண்டும்.

அதை மற்றவர்கள்..தகவலாக எடுத்துக்கொள்ளட்டும்

மறந்தவர்கள் நினைவுப்படுத்திக்கொள்ளட்டு

Link to comment
Share on other sites

நீங்கள் எப்படித்தான் கவிதை எழுதினாலும், அவைகள் ஒரு வகைக்குள் அடங்குவது போன்று அணிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சொல்லணிக்குள் அடங்காது விட்டாலும் பொருளணிக்குள் அடங்கிவிடும்.

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி சபேசன். கவிதை இலக்கணம் தொடர்பான பல விடயங்களையும் உங்களுடைய இந்தக் கட்டுரைத்தொடரில் எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

அனைத்துக் கவிதைகளும் ஏதோ ஒரு அணிக்குள் எப்படி அடங்குகின்றன என்பதை போகப் போகப் பார்ப்போம்.

இப்பொழுது சொல்லணிகள் பற்றி முதலில் பார்ப்போம்.

சொல்லணிகள் 5 வகைப்படும்.

1. மோனை

2. எதுகை

3. பின்வருநிலை

4. மடக்கு

5. சிலேடை

இதில் எதுகை, மோனை பற்றி அதிகமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலேடையாக பேசுதல் பற்றியும் அறிந்திருப்பீர்கள். இப்பொழுது ஒவ்வொன்றாக நோக்குவோம்.

1.மோனை

முதலெழுத்து ஒரே மாதிரி வருவது போன்று தொடுக்கப்படுவது மோனை எனப்படும்.

உதாரணம் :

1.

கள்வன் கண்ணன் கன்னிப்பெண் கமலாவை கரும்புக் காட்டுக்குள் கடத்திச் சென்றான்.

2.

கணக்கின்றித் தவறுசெய்யக்

கணமேனும் கலங்காத

கயவரினைக் கருக்கிடவே

கருவியொன்று செய்யாயோ விஞ்ஞானமே

(மணிவாசகனின் "கருவிசெய் விஞ்ஞானமே" கவிதையில் இருந்து)

3.

வாகரையை

வசமாக்க

வரிந்து கட்டுகிறாய்

வா...

வம்புக்கிழுக்கிறாய்

வந்தடி வேண்டி போ...

(வன்னிமைந்தனின் "கூலிப்படையே ஓடி வா" என்ற கவிதையில் இருந்து)

4.

மயிலும் மானும் மீனும் மோகினி வடிவாய் வந்தது.

கவனிக்க: ஓரே எழுத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நான்காவது உதாரணத்தைப் போன்று ம, மா, மீ, மோ போன்று ஒரே எழுத்தின் வரிசை எழுத்துகள் வருவதும் மோனை எனப்படும்.

யாழ் களத்தில் அனேகமான கவிஞர்கள் இந்த முறையிலேயே கவிதை எழுதுகிறார்கள். எதுகையை விட இது இலகுவான முறையாக இருப்பதால் அப்படி இருக்கக்கூடும்.

அடுத்ததாக எதுகை பற்றி பார்ப்போம்.

Link to comment
Share on other sites

எதுகை என்பது இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ஆகும்.

மோனையில் உள்ள வசதி இதில் குறைவு என்பதை இங்கே சொல்ல வேண்டும்.

சொல்லில் வருகின்ற முதல் எழுத்தையோ, அல்லது அதன் மற்றைய வரிசை எழுத்துக்களை உபயோகிக்க முடியும் என்கின்ற பொழுது, பல்லாயிரக் கணக்கான சொற்கள் எமக்கு கிடைக்கும். இது "மோனையில்" உள்ள ஒரு சாதகமான அம்சம் ஆகும்

எதுகையில் இரண்டாவது எழுத்து ஒத்ததாக இருக்க வேண்டும். அத்துடன் அந்த எழுத்தின் வரிசையில் வருகின்ற மற்றைய எழுத்துக்களை உபயோகிக்கவும் கூடாது.

எதுகைக்கு சில உதாரணங்கள்:

1.

மைந்தா..அகமுடைந்து நீ

சிந்தை சினக்காதே - எம்

சொந்தம் தமிழல்லவா - அது

சிந்தும் அமுதல்லவா

இது விகடகவி எழுதிய கவிதை. இதிலே ஒவ்வொரு வரியின் இரண்டாவது எழுத்தும் "ந்" என்று இருப்பதை கவனியுங்கள். (அத்துடன் சிந்தை, சினக்காதே, சொந்தம், சிந்தும் என்றும் மோனையும் இதில் உண்டு. சி, சி, சொ, சி)

2.

விண்ணை விட்டு

மண்ணில் வந்த தேவதை

என்னை வரம் கேட்கிறாள்

என்ன நான் சொல்வது

இது விகடகவியின் "தேவதை ஒரு தேவதை" கவிதையில் இருக்கின்ற வரிகள். விண்ணை, மண்ணில், என்னை, என்ன என்று எதுகை இருப்பதோடு, என்னை, என்ன என்று மோனையும் இருக்கிறது.

3.

தர்க்கம் செய்ய நா இல்லை

தருமம் பேச நாதியில்லை - ஆளும்

வர்க்கம் மட்டுமே பயன்படுத்தும். - என்

வர்ணத்தைக் காட்டி மெய்ப்படுத்தும்.

இது வல்வைசகறா எழுதிய "வெண்புறா" கவிதையில் இருக்கின்ற வரிகள். இதிலும் எதுகையும் உண்டு. மோனையும் உண்டு.

4.

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்.

எதுகையில் சில நெகிழ்வுத்தன்மைகளும் இருக்கின்றன.

தவம் செய்தால்

அகம் நிறையும்

இதையும் எதுகை என்று சொல்லலாம். சொற்கள் வெளிப்படுத்துகின்ற ஒலி ஒத்துப் போகின்றன என்பதால் இது "எதுகை" என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அப்படியே வெண்மை, தன்மை போன்றவகைளும் ஏற்றுக் கொள்ளப்படும்.

இதுவே எதுகை ஆகும்.

என்னுடைய பார்வையில் எதுகை, மோனை இரண்டையும் தன்னுடைய கவிதைகளில் பயன்படுத்துபவர்கள் தனித் திறமை கொண்டவர்கள் என்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவா விளக்கியிருக்கிறிங்க சபேசன் சார்.

பிரயோசனமான தகவல்

உங்கட குறிப்பை பார்த்த பின்னே நானும் கவிதை எழுதத்தான் வேண்டுமா என்ற கேள்வியே எழுகிறது.

சந்தம் அமைந்த கவிதை எதுவென்றாலும் நல்லாய் இருக்கும் எண்றே நான் நினைக்கிறன்

Link to comment
Share on other sites

இல்லை, நீங்கள் அப்படி நினைக்கக்கூடாது.

கவிதை என்பது எதுகை, மோனை மட்டும் அல்ல. அதில் இன்னும் நிறைய இருக்கிறது. தொடர்ந்தும் விளக்குகின்ற பொழுது உங்களுடையதும் கவிதைதான் என்பதை நீங்கள் உணருவீர்கள். அவசரப்பட வேண்டாம்.

Link to comment
Share on other sites

தொடருங்கள் உங்கள் பணியை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் பல நாட்களாக கவிதை எழுத முயற்சித்தால் என்ன என்று ஒரு ஆசை.. எவ்வாறு தொடங்குவது என்பதுதான் பிரச்சனையாக இருந்தது.. உங்களுடைய இந்த தகவல் மிக்க பிரயோசமாக இருக்கிறது.. தொடருங்கள்...

இத்தொடர் முழுவதையும் வாசித்த பின்னர் கவிதைக்களத்தில் ஒரு வாங்குவாங்குவது என்றுதான் திட்டம்.. சகித்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.. ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பல நாட்களாக கவிதை எழுத முயற்சித்தால் என்ன என்று ஒரு ஆசை.. எவ்வாறு தொடங்குவது என்பதுதான் பிரச்சனையாக இருந்தது.. உங்களுடைய இந்த தகவல் மிக்க பிரயோசமாக இருக்கிறது.. தொடருங்கள்...

இத்தொடர் முழுவதையும் வாசித்த பின்னர் கவிதைக்களத்தில் ஒரு வாங்குவாங்குவது என்றுதான் திட்டம்.. சகித்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.. ;)

எழுதுங்கோ சார். பார்க்க ஆவலாய் இருக்கிறேன்

Link to comment
Share on other sites

இதுவரை எதுகை, மோனை என்ற இரண்டையும் பார்த்தோம்.

இதில் எட்டு விதமான எதுகை வகைகளும், ஏழு விதமான மோனை வகைகளும் உண்டு.

தொடர்ந்து வருகின்ற சொற்கள் ஒத்த எழுத்தில் வருவதை ஒரு விதமான மோனை என்றும், ஒன்றை விட்டு ஒன்று வருகின்று சொற்கள் ஒரே எழுத்தில் ஒத்த எழுத்தில வருவதை இன்னொரு வகை மோனை என்றும் இப்படி ஏழு வகையாக பிரித்திருப்பர்கள். அதே போன்று எதுகையிலும் பிரித்திருப்பார்கள்.

நாம் அப்படி மிகவும் ஆழமாக போக வேண்டிய அவசியம் இல்லை.

அடிப்படை புரிந்தாலே போதுமானது என்று நினைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்கள் ஆழமான கருத்துக்களோடு எதுகை, மோனை இரண்டும் வருமாறு எழுதினால் கவிதை மேலும் இனிமை பெறும்.

இப்பொழுது சொல்லணியில் இருக்கின்ற மற்ற மூன்றையும் பார்ப்போம்.

மடக்கு

சிலேடை

பின்வருநிலை

இவை மூன்றிற்கும் அதிக வித்தியாசம் இல்லை. பல இடங்களில் இந்த மூன்றையுமே சிலேடை என்று அழைப்பதை நான் கவனித்திருக்கிறேன்.

இந்த மூன்றைப் பற்றியும் பார்ப்போம்.

யாழ் களத்திலே கறுப்பி "ஒரு சொல் - பல பொருள் என்று ஒரு விளையாட்டை ஆரம்பித்து வைத்தார் அல்லவா?

அங்கே இந்த மூன்றும் இருக்கின்றன.

மடக்கு :

ஒரு சொல் ஒரு வசனத்தில் மீண்டும் மீண்டும் வேறு வேறு அர்த்தங்களில் வருவதை மடக்கு என்று சொல்வார்கள்.

1.

நீர் நீர் ஊற்றும். (நெடுக்காலபோவான் எழுதியது)

2.

நாடி வந்தோரை நாடி பிடித்து வைத்தியம் பார்ப்பதில் சிறந்தவர் அவர்.

(ரமா எழுதியது)

3.

நாடு அதை நாடு (கறுப்பி எழுதியது)

இவைகளை மடக்கு என்று சொல்வார்கள். ஒரு சொல் ஒன்றிற்கு மேற்பட்ட தடவை வருகிறது. ஆனால் வேறு வேறு அர்த்தங்களை கொடுக்கிறது.

அடுத்ததாக சிலேடையை பார்ப்போம்.

ஒரு சொல் இரண்டு அர்த்தத்தில் வருவதை சிலேடை என்று சொல்வார்கள். மடக்கில் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் வரவேண்டும். சிலேடையில் ஒரு முறைதான் குறிப்பிட்ட சொல் வரும். ஆனால் பல அர்த்தங்களை கொண்டிருக்கும்.

1.

வாரும் இரும்படியும் (மாதுகா எழுதியது)

இதிலே இரும்படியும் என்ற ஒரு சொல், இருந்து படியும் என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது. இரும்பை அடியும் என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது.

2.

பூவை (மாதுகா எழுதியது)

இதுவும் இரண்டு அர்த்தங்களை கொடுக்கிறது.

3. தலைவரின் மாவீரர் உரைக்காக காத்திருக்குது பார்

இங்கே பார் என்று சொல்லும் பார்க்கவும் என்ற அர்த்தத்தையும் உலகம் என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது.

இப்படி ஒரு சொல் இரண்டு அர்த்தங்களை கொடுப்பதை சிலேடை என்று சொல்வார்கள்.

பின்வருநிலை பற்றி நாளை எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

பின்வருநிலைக்கும் மடக்குக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ஒரு சொல் தொடர்ச்சியாக பல முறை மீண்டும் மீண்டும் வந்து, அது பல பொருள்களை தருவதை பின்வருநிலை என்று சொல்லுவார்கள்.

உதாரணம்:

அவர் அறிவார் அறிவார்

அறிவார் அறிவார்

விளக்கம்: அவரது அறிவை யார் அறிவார்? அறிவுள்ளவர்கள் அல்லது அறிந்தவர்கள் அறிவார்கள்.

இப்படி ஒரு சொல் பல பொருள்களை தருகின்ற பொழுது அவைகளை மடக்கு, சிலேடை, பின்வருநிலை என்று வகைப்படுத்துவார்கள்.

இன்று கவிதைகளில் இந்த முறைகளை பாவிப்பது மிகக் குறைந்து விட்டது.

இங்கு யாழ் களத்திலும் அவ்வாறான கவிதைகள் என்னுடைய கண்ணில் படவில்லை.

கவிஞர்கள் இந்த முறையிலும் கவிதை எழுதிப் பார்ப்பது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இது வரை சொல்லணிகளை பார்த்தோம்.

சொல்லணிகளில் முக்கியமான எதுகை, மோனையையும் அறிந்து கொண்டோம்.

இனி கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கின்ற பொருளணிகளைப் பார்ப்போம்.

பொருள் அணிகளை பத்து வகையாக பிரித்துள்ளார்கள். இதில் எல்லாவற்றையுமே ஆழமாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பொருளணிகளில் ஒரு சிலவே முக்கியமானவைகள். மற்றையவை ஏறக்குறைய ஓரே மாதிரியானவையே.

இனி முக்கியமான பொருளணிகளை பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் வரைமுறையும் விதியும் தெரிஞ்சாலும் வார்த்தைகள் வரமாட்டுதாமே சபேசன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்ல முயற்சி. எளிய நடையில் அரிய தகவல்கள். பல பேருக்கு பேருதவியாக இருக்கும். தோழர் சபேசன் அவர்களின் பணி தொடர என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் அண்ணா!

நீங்கள் எழுதும் இக் கட்டுரையைப் படிக்கும்போது பழைய திரைப்படப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை (உவமைக் கவிஞர் சுராதாவின் வரிகள் போல் தொரிகிறது ?). தென்றலாய் மனதை வருடும் வரிகள். நீங்கள் குறிப்பிடும் இலக்கணத் தன்மைகள் இந்தப் பாடலில் அதிகம் இருப்பதாக உணர்கிறேன். இனிமையான பாடல். பி.பி. சிறினிவாசின் இதமான குரல் பாடலை மேலும் மெருகூட்டுகிறது.

ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து - உன்

எழில்தனைப் பாடவா தமிழைச் சேர்த்து

விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே

விளையாடும் வெண்மதி நீதானா

எந்தை முன்னோர்கள் இயல், இசை, நாடகம்

பயின்றதெல்லாம் உன்னிடம்தானா

சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்

நீலக் குயிலும் நீதானா

கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே

கவரிமான் என்பதும் உன் இனம்தானா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.