Jump to content

இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா..!

 

 

யாழ் 'தமிழ் சிறி'யின் நீராகார 'வெள்ளி இரவு' முடிந்து, சனிக்கிழமையாக உதித்திருக்கும் இந்த நாள் இனிய நாள்..!

இப்பொன்னாளில், உங்கள் மன்னனின் வாழ்க்கை பொன்பொழிகளை சற்றே கேட்டு இந்நாளை தொடங்குவோமா..?

 

 

70852263.jpg

 

 

முள்ளிவாய்க்காலைவிட மிக மோசமான யுத்தம்..!

 

இரத்தம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது..!!

 

எங்கு நோக்கினும் பிணக்குவியல்கள், அலறல்கள், உயிர்மூச்சுக்கள்..!!!

 

 

போரில் தோற்று வீழ்த்தப்பட்ட இராவணன், தனது இறுதி கணங்களை நெருங்கிக்கொண்டிருந்தான்..

 

குருதிசகதிக்குள் அமிழ்ந்த இராவணன், மரண எல்லையில் வலியால் முனங்கிக்கொண்டிருந்தான்..

 

 

இராமன், இலக்குமணனை அழைத்தான்.. :o

 

தமையன் சொல்லுக்கு எப்பொழுதும் கீழ்ப்படியும் இலக்குமணன்அருகே சென்று, " என்ன செய்ய வேண்டும் அண்ணை..? "  என்றான்.

 

இலக்குமணா..! உனக்கு மிக முக்கிய வேலை இருக்கிறது.. என்னதான் தீங்கு செய்திருந்தாலும், இராவணன் ஒரு மகாமனிதன்.. வீரமிக்கவன்.. அறிவுஜீவி.. அது மட்டுமல்ல, மிகச்சிறந்த சிவபக்தன்.. சக்ரவர்த்தி.. சங்கீத ஞானமுள்ள பாடகன்.. வீணை வித்வான்.. அனைத்து வேதங்களையும் கரைத்துக் குடித்த அறிஞன்.. ஆகையால் இத்தனை சிறப்புக்களைக் கொண்ட ஒருவன், இவ்வுலகைவிட்டு மறையப்போவதால் அவனுக்கு இறுதி மரியாதை செலுத்தி, அவனிடம் நல்லாசியுடன் அவன் கற்ற அனுபவ கூற்றுக்களை அறிவுரைகளாக கேட்டு வா..!" என கேட்டுக்கொண்டான்..

 

எப்பொழுதும் கீழ்ப்படியும் இலக்குமணன், தமையன் சொற்படியே இராவணன் குற்றுயிராக வீழ்ந்துகிடக்கும் இடத்திற்கு சென்றான். இராவணின் தலையருகே சென்று, அவனை நோக்கி குனிந்தான். காலடிச்சத்தம் தன்னருகே வருவதைக் கேட்டுணர்ந்த இராவணன், தலையருகே இலக்குமணன் நிற்பதைக் கண்டவுடன் மெளனமாகவே இருந்தான். நீண்டநேரக் காத்திருப்புக்கு பின்னரும் இராவணன் ஒன்றுமே பேசாததால், இலக்குமணன் வெறுப்புற்று திரும்பிவந்து அண்ணன் இராமனிடம் முறைப்பாடு செய்தான்.. :(

 

புன்னகையுடன் கேட்டுக்கொண்ட இராமன்,

 

" இலக்குமணா..! தவறு உன்னிடம் உள்ளது.. ஒருவரிடம் எதையும் கற்றுக்கொள்ள அவரிடம் அணுகினால், அவரின் கால்களுக்கருகே நின்று மரியாதையுடன் கேட்கவேண்டுமே தவிர அகந்தையுடன் தலைமாட்டருகே சென்று நிற்கக்கூடாது.. ஆகவே ஒருவருக்கு மரியாதை செலுத்துவது எப்படியென கற்றுக்கொள்.. நீ மறுபடியும் இராவணிடம் சென்று அவனின் காலடியருகே நின்று மரியாதையுடன் கேள்.. நிச்சயம் இராவணன் சொல்வான்..! " என அறிவுறுத்தினான்.

 

இலக்குமணன் மறுபடியும் இராவணனிடம் சென்று அவனின் காலடியருகே பவ்யமாக நின்றான்.. உயிர்விடும் நிலையிலிருந்த இராவணன் இறுதி மூச்சைசுக்களை விட்டவாறே இலக்குமணனை பார்த்து சிநேகமுடன் புன்னகைத்து வரவேற்றான்..

 

" அருமை இலக்குமணா.. என்னை நாடி வந்திருக்கிறாய்.. உனக்கு நான் என்ன செய்யவேண்டுமென சொல்..! " என கேட்டுக்கொண்டான்..

 

இலக்குமணன் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே பணிவுடன் நின்றான்.. புத்திசாலியான இராவணன், இலக்குமணனின் வருகையையும், நோக்கத்தையும் சாதுர்யத்தால் உணர்ந்துகொண்டு இலக்குமணனை அருகே வந்து காதை கொடுக்குமாறு மெல்லிய சைகையில் அழைத்தான்..

 

இலக்குமணன் பணிவுடன் அணையப்போகும் விளக்காக பிரகாசிக்கும் இராவணனின் முகத்தருகே அவனின் தீர்க்க அறிவுரைகளை கேட்க குனிந்தான்.. :o

 

அருமை இலக்குமணா..! நான் உனக்கு மூன்றே முன்று அனுபவ அறிவுரைகளை, மனிதகுல வாழ்க்கை நெறிமுறைகளை என் அறிவுரைகளாக சொல்கிறேன் கேள்..!” என காதருகே கிசுகிசுத்தவாறே சொல்லிவிட்டு, கடைசியாக நீண்ட நிம்மதிப் பெருமூச்சை இழுத்துவிட்டு இம்மண்ணைவிட்டு மீளாத் துயிலிலாழ்ந்தான்.. :(:huh:

 

 

இராவணன் கடைசியாக இலக்குமணனிடம் போதித்த அந்த அறிவுரைகள், மனிதகுலத்திற்கே மிகமிக அத்தியாவசியமான நெறிப்படுத்தும் பொன்மொழிகளாகும்..

 

 

அவை யாவை..? :icon_idea:

 

 

இராவண ராச்சிய இந்நாள் பிரஜைகளான யாழ்கள உறவுகளே, உங்கள் மன்னன் அறிவுறுத்திய அந்த பொன்மொழிகளை நீங்கள் அறிந்துகொண்டு பின்பற்றுவது உங்கள் கடமைதானே?

 

அறிய ஆவலாக உள்ளீர்கள் தானே..?

 

...

 

 

 

 

 

....

 

 

 

 

 

 

 

....

 

 

 

 

 

 

 

 

....

 

 

 

 

 

 

 

 

 

....

 

 

 

 

 

 

 

....

 

 

 

 

 

 

 

யாழ் சக்கரவர்த்தி இராவணனின் அறிவுறுத்தல்கள்..!

 

 

1. தயவுசெய்து 'வாட்ஸ்அப்'பிலேயே வாழ்க்கைப் பயணத்தை ஓட்டாதீர்கள்..

 

2. முகநூலை என்றுமே பயன்படுத்தாதீர்கள்..

 

3. வாகனம் ஓட்டும்பொழுது கைப்பேசியை பயன்படுத்தாதீர்கள்..

 

இம்மூன்றையும் இதயசுத்தியாக பின்பற்றினால் நீங்கள் வாழ்க்கையில் உய்வீர்கள்..

 

"இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா தான்..!" :lol:

 

 

 

 

- அடியேனின் 'உல்டா 'தமிழாக்கம் தான்! 

 

( அனைவருக்கும் இனிய நாளாகட்டும் ! )

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய ராச்சியமெண்டாலும் எங்களுக்கு எப்பவுமே உய்யலாலா தான்.  :D

 

இருக்கலாம்.. ஆனால் தாய் மண்ணில் 'உய்யலாலா' பாடுவது தனிசுகம் தானே? :icon_idea:

 

வருகைக்கு நன்றி, 'டண்டணக்கா' ..! ஹாய் டனக்குனக்கா..!! :lol:

 

Link to comment
Share on other sites

இதப்படிச்சுட்டு சிரியண்ணே கடுப்படிச்சு வேலைக்கு விடுப்பு எடுக்க  போறார்  பாருங்க .... அப்புறம் நான் திரும்ப உற்சாக பானம் கலக்கி கொடுக்க வேண்டி வரும்... :lol::D

Link to comment
Share on other sites

இருக்கலாம்.. ஆனால் தாய் மண்ணில் 'உய்யலாலா' பாடுவது தனிசுகம் தானே? :icon_idea:

 

வருகைக்கு நன்றி, 'டண்டணக்கா' ..! ஹாய் டனக்குனக்கா..!! :lol:

 

தாய் மண்ணில் உய்யலாலா பாடி ரொம்ப நாளாச்சு வன்னியன் ஐயா. 
எனது முழுபெயரை சொன்னதுக்கு நன்றி ஐயா.
நண்பர்கள் என்னை 3D என்று அழைப்பார்கள்   Full name: டண்டணக்கா டுபுக்கு டணக்குணக்கா 
First Name: Dandanakka 
Middle Name: Dubukku 
Last Name: Danakkunakkaa 
Full Name: 3D 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

...

நண்பர்கள் என்னை 3D என்று அழைப்பார்கள்   Full name: டண்டணக்கா, டுபுக்கு, டணக்குணக்கா 
First Name: Dandanakka 
Middle Name: Dubukku 
Last Name: Danakkunakkaa 
Full Name: 3D

 

அருமையான சொற்கள், ஆழ்ந்த கருத்துக்கள், அழகான சிந்தனை..!

ஆனால் பொருள்தான் புரியவில்லை..ஐயா, பொழிப்புரை அருள்க !! :)

 

 

Link to comment
Share on other sites

சிங்களம் இராவணணைத் தேடித்திரிவதாக ஒரு செய்திவந்தது! எங்கள் அன்பான யாழுறவு ராசவன்னியருமா....?? :o 

பாவம்! தமிழ் சிறி. அவர் சுத்தச் சைவப்பழம், வெள்ளிக்கிழமைகளில் பால், பழத்தைத்தவிர வேறெதையும் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. :D  :rolleyes:

Link to comment
Share on other sites

அருமையான சொற்கள், ஆழ்ந்த கருத்துக்கள், அழகான சிந்தனை..!

ஆனால் பொருள்தான் புரியவில்லை..ஐயா, பொழிப்புரை அருள்க !! :)

 

இதோ உங்களுக்காக பொழிப்புரை.  :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ உங்களுக்காக பொழிப்புரை.  :D

 

:(:o

 

ஓ.. இதுதான் டண்டணக்கா..டணக்குணக்காவா..? :o

 

இறுதியில் எல்லோருக்கும் 'டண்டணக்கா'தான்னு சொல்லீட்டீங்கள்..! :(

'டுபுக்'காட்டம் இருந்தாலும் பொழிப்புரை நல்லாவே இருக்கு!

 

உங்கள் குழாயில் தேடியெடுத்து இணைத்துள்ளீர்கள் நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இராவணணைத் தேடித்திரிவதாக ஒரு செய்திவந்தது! எங்கள் அன்பான யாழுறவு ராசவன்னியருமா....?? :o 

பாவம்! தமிழ் சிறி. அவர் சுத்தச் சைவப்பழம், வெள்ளிக்கிழமைகளில் பால், பழத்தைத்தவிர வேறெதையும் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. :D  :rolleyes:

 

தமிழர்கள் தேடுவதை கொடுக்காமல், தேவையற்றவர்களை அவர்கள் தேடுவதே பொழைப்பா போச்சுது..! :o:)

தமிழ் சிறி சார், கையால் தொடாமல் பருகி இன்புறுவது பால், ஆப்பிள் மற்ற கலவைகள் கொண்ட நீராகரம் தான், 'வெள்ளித் திண்ணை'யில் அவை மணம் கமழும்..!

கருத்திற்கு நன்றி, பாஞ் ஐயா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருள் எங்கேயோ இடிக்குதே...!  அன்று வாட்ஸப் இருந்திருந்தால்.....  , சீதா தனது போனில் செல்பி எடுத்து நாதாக்கு தட்டிவிட  ஒரு 90 கலிபரால் புட்பகம் பூப் பூவாய் பொழிந்திருக்குமே...! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருள் எங்கேயோ இடிக்குதே...!  அன்று வாட்ஸப் இருந்திருந்தால்.....  , சீதா தனது போனில் செல்பி எடுத்து நாதாக்கு தட்டிவிட  ஒரு 90 கலிபரால் புட்பகம் பூப் பூவாய் பொழிந்திருக்குமே...! :lol::)

 

சீதாவிடம் கைப்பேசியே கைவசம் இல்லை, இராவணனின் ஆட்கள் அந்தளவிற்கு ஏமாளிகளாக இருக்க வாய்ப்பில்லைதானே..? :D

இராமன் வென்றதும் தமிழனின் உடனிருந்து கொன்றழிக்கும் காட்டிக்கொடுப்புகளால்தான். :(

 

Link to comment
Share on other sites

சீதாவிடம் கைப்பேசியே கைவசம் இல்லை, இராவணனின் ஆட்கள் அந்தளவிற்கு ஏமாளிகளாக இருக்க வாய்ப்பில்லைதானே..? :D

இராமன் வென்றதும் தமிழனின் உடனிருந்து கொன்றழிக்கும் காட்டிக்கொடுப்புகளால்தான். :(

 

 தமிழனின் பாட்டன் முருகனா? ராவணனா?  :D
முருகன் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்த சீமான் ராவணன் முன்னேற்ற கழகத்தை எப்ப ஆரம்பிக்க போறார்?  :lol:
Link to comment
Share on other sites

எல்லாம் நல்லாத்தான் இருக்குது வன்னியன் சார்... '2. முகநூலை என்றுமே பயன்படுத்தாதீர்கள்..' << இதைத் தவிர..!!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 தமிழனின் பாட்டன் முருகனா? ராவணனா?  :D
முருகன் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்த சீமான் ராவணன் முன்னேற்ற கழகத்தை எப்ப ஆரம்பிக்க போறார்?  :lol:

 

 

(இராவணனன் தமிழனா..? சிங்களனா..? :o )

 

சீமான், முருகன் முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தால் ஈழத்தில் இராவணன் முன்னேற்றக் கழகம் என ஈழத்தலைகள் ஆரம்பிக்க வேண்டியதுதான்.. ஆனால் இதில் சின்ன வரலாற்று ரீதியான சிக்கல் இருக்கிறது..

இத்தனை காலம் மறைமுகமாக தமிழர்களுக்கு இன்னல் கொடுத்த இந்தியா, இராவணன் என்ற பெயரில் ஈழத்தமிழர்கள் கட்சி ஆரம்பித்தால், ராம் ராம் என காட்டுக் கூச்சல் போட்டு (இந்தக் காட்டுக் கூச்சலை இராமேஸ்வரத்தில் தினமும் காணலாம்) வடக்கத்தியானுகள் ஒன்று கூடி வெளிப்படையாக அழிக்க ஆரம்பிப்பானுகள்.. ஒற்றுமையற்ற தமிழினத்தின் கதி அம்போ தான்..

 

தேவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லாத்தான் இருக்குது வன்னியன் சார்... '2. முகநூலை என்றுமே பயன்படுத்தாதீர்கள்..' << இதைத் தவிர..!!  :o

 

'மது, மாது, புகை' இவற்றை அறவே நாடாதீர்கள் என சான்றோர்கள் இடித்துரைத்துள்ளனர்.. ஆனால் அவரவர்கள் தங்கள் சுயவிருப்பத்திற்கேற்றவாறு தன்னை சமாதானப்படுத்தி போகிக்கின்றனர்..

அதுமாதிரிதான் இந்த வாட்ஸ் அப், முகநூல் மற்றும் கைப்பேசி மோகம்..! :(

வார விடுமுறையாதலால் நேற்றிரவு  உணவகத்தில் ஒரே கூட்டம். வழமையாக நான் சாப்பாட்டிற்கு  செல்லும் உணவகம் சென்று எனது உணவிற்காக காத்திருந்தேன்..

 

இருக்கையின் எதிர்ப்புறத்தில் ஒருத்தர் கைப்பேசியில் எதையோ நோண்டிக்கொண்டே இருந்தார்.. திடீரென சத்தமாக சிரித்தார்.. பின்னர் 'டொக்கு.. டொக்கு' என டைப் செய்து யாருக்கோ அஞ்சல் செய்தார்..

 

இடையில் அவருக்கான உணவும் வந்தது.. ஒரு கையில் தோசை வில்லலெடுத்து தின்றுகொண்டே மறுகையால் கைப்பேசியில் அதே நோண்டல், சத்தமுடன் சிரிப்பு.. மற்றவர்களின் முகச் சுளிப்பிற்கு நடுவே அவரின் கைப்பேசி லொள்ளு தொடர்ந்தது.. அவர் உபயோகித்தது முகநூல் மெசெஞ்ஜர்..!

 

பொது இடத்தில் எப்படி நடந்துகொள்வது என்ற அடிப்படை நாகரீகத்தை இந்த கைப்பேசி மோகம் அழிக்கிறது..

 

இமிகிரேசன் கியூ, பேங்க் கியூ, சூப்பர் மார்க்கெட் கியூ என எங்கு சென்றாலும் ஆசிய இனத்தவர்களின் கைப்பேசி நாகரீகம், அதன் சார்ந்த நடத்தை படுமோசம்!

 

அதை சுட்டிக்காட்டவே தமிழாக்கம் செய்து இந்த பதிவை பதிந்தேன். :)

 

கருத்திற்கு நன்றி சோழியன்!

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா..!

யாழ் சக்கரவர்த்தி இராவணனின் அறிவுறுத்தல்கள்..!

 

 

1. தயவுசெய்து 'வாட்ஸ்அப்'பிலேயே வாழ்க்கைப் பயணத்தை ஓட்டாதீர்கள்..

 

2. முகநூலை என்றுமே பயன்படுத்தாதீர்கள்..

 

3. வாகனம் ஓட்டும்பொழுது கைப்பேசியை பயன்படுத்தாதீர்கள்..

 

இம்மூன்றையும் இதயசுத்தியாக பின்பற்றினால் நீங்கள் வாழ்க்கையில் உய்வீர்கள்..

 

"இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா தான்..!" :lol:

- அடியேனின் 'உல்டா 'தமிழாக்கம் தான்! 

 

( அனைவருக்கும் இனிய நாளாகட்டும் ! )

 

 

இராவணன், அகில  இலங்கையும் ஆண்ட மன்னன்.

அவனை... யாழ் மன்னனாக குறுகிய நிலப்பரப்புக்குள்.... சித்தரித்தமை கண்டனத்துக்குரியது.

இதனை, சிங்கள பிக்குகள்... யாராவது வாசித்து விட்டு, தங்களது மகாவம்சத்தில்....

இராவணனன் யாழ்ப்பணத்தை மட்டுமே ஆண்டவன் என்று, மாற்றி எழுதி விடுவார்கள் என்று.. அச்சமாக உள்ளது. :D  :lol:

 

டிஸ்கி: உய்யலாலாவுக்கு..... தமிழ் அகராதிகளிலோ, கூகிளிலோ அரும் சொற்பதங்களை கண்டு பிடிக்க முடியவில்லை. :icon_idea:

உய்யலாலா என்றால் என்ன அர்த்தமுன்னு.... வன்னியன் சார் தான் விளக்கணும். :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன், அகில  இலங்கையும் ஆண்ட மன்னன்.

அவனை... யாழ் மன்னனாக குறுகிய நிலப்பரப்புக்குள்.... சித்தரித்தமை கண்டனத்துக்குரியது.

 

சிறியேனின் கவனக்குறைவான தவறுக்கு மன்னித்தருள்க..! :(:)

 

 

டிஸ்கி: உய்யலாலாவுக்கு..... தமிழ் அகராதிகளிலோ, கூகிளிலோ அரும் சொற்பதங்களை கண்டு பிடிக்க முடியவில்லை. :icon_idea:

உய்யலாலா என்றால் என்ன அர்த்தமுன்னு.... வன்னியன் சார் தான் விளக்கணும். :icon_mrgreen:  

 

 

'உய்யலாலா' என்பது செயற்கையாக உருவாக்கம் செய்யப்பட்ட ஒரு பதம் அல்ல. உய்யல், ஆலா என்ற இரண்டு சொற்களின் கூட்டே அந்தப் பதம். புணர்ச்சி விதிகளின்படி உய்யல் + ஆலா என்ற இரு சொற்கள் கூடி உய்யலாலா என்ற பதம் நமக்குக் கிடைக்கிறது.

அது என்ன உய்யல்? அது என்ன ஆலா? அதை ஏன் இங்கு கவிஞர் பயன்படுத்தி இருக்கிறார்? என்ற கேள்விகள் எழுவது இயற்கையே.

நாயகனை தலைவனாக, அரசனாகப் பாவிப்பது என்பது தமிழ் மரபு. கவிஞர் மரபுவழி வந்தவர் என்பதால் அதிலிருந்து சிறிதும் வழுவாமல் தலைவனை ஒரு அரசனாகவும், அவன் எவ்வளவு பெரிய நாட்டினை ஆண்டு வருகிறான் என்பதையும் கவிஞர் எடுத்துரைக்கிறார்.

உய்யல் என்றால் உயர்தல்! நம் நாயகனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அப்படி உயர்ந்து நிற்பது எது என்றால் 'ஆலா' என்ற ஒரு பறவையாம். அதனால்தான் அந்த நாட்டில் உயர்ச்சி என்பதே ஆலா எனப் பொருள் வருமாறு கவிஞர் இராவணனின் ராச்சியத்தில் உய்யல் ஆலா என்கிறார்.

ஆலா என்றால் ஆங்கிலத்தில்  Tern என அழைக்கப்படும் பறவை. அதிலும் குறிப்பாக Arctic Tern என்ற வகை ஒன்று உண்டு. இப்பறவை என்ன செய்யும் என்றால் வடதுருவப்பகுதிகளில் குளிர்காலம் ஆரம்பிக்கும் முன் அங்கிருந்து பறக்கத் தொடங்கி தென் துருவப் பகுதிகளுக்குச் செல்லும். அதே போல தென் துருவத்தில் குளிர் தொடங்கும் முன் மீண்டும் வட துருவத்திற்குப் பறந்து செல்லுமாம். இது அப்படி ஓர் ஆண்டில் பறக்கும் தூரம் 70,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகம்.

இராவணனின் ராச்சியம் அப்படிப் பரந்து விரிந்தது. அதை முழுவதும் பார்க்கக்கூடியது ஆலாப் பறவைகள் மட்டுமே என்று ஒரு வரியில் நாயகனின் பெருமையையும் கூடவே ஒரு அருமையான அறிவியல் குறிப்பையும் தருகிறார் கவிஞர்.

 

 

-இணையத்தில் சுட்ட விளக்கத்தின் சுருக்கம் (நன்றி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீரிப்புக்குள் ஒரு சீரியல் துணுக்கையும் சொல்கிறேன்.

உய்யலாலா என்பது கிரிஸ்ணணுக்குப் பாடப்படும் ஒரு வகைத் தாலாட்டு என்பதே நான் கேள்விப்பட்டது.

இராவணன் சொன்ன 4 ம் ரகசியத்தை நிர்வாக தடை செய்துவிட்டது. அது

-

-

-

-

யாழ்.கொம்மில் நேரத்தை வீணடிக்காதீர்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன், அகில  இலங்கையும் ஆண்ட மன்னன்.

அவனை... யாழ் மன்னனாக குறுகிய நிலப்பரப்புக்குள்.... சித்தரித்தமை கண்டனத்துக்குரியது.

இதனை, சிங்கள பிக்குகள்... யாராவது வாசித்து விட்டு, தங்களது மகாவம்சத்தில்....

இராவணனன் யாழ்ப்பணத்தை மட்டுமே ஆண்டவன் என்று, மாற்றி எழுதி விடுவார்கள் என்று.. அச்சமாக உள்ளது. :D  :lol:

 

டிஸ்கி: உய்யலாலாவுக்கு..... தமிழ் அகராதிகளிலோ, கூகிளிலோ அரும் சொற்பதங்களை கண்டு பிடிக்க முடியவில்லை. :icon_idea:

உய்யலாலா என்றால் என்ன அர்த்தமுன்னு.... வன்னியன் சார் தான் விளக்கணும். :icon_mrgreen:  

 

ஐஞ்சு நிமிசத்திலை உய்யலாலாவுக்கு விளக்கம் சிறித்தம்பி.... :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியேனின் கவனக்குறைவான தவறுக்கு மன்னித்தருள்க..! :(:)

 

 

 

 

'உய்யலாலா' என்பது செயற்கையாக உருவாக்கம் செய்யப்பட்ட ஒரு பதம் அல்ல. உய்யல், ஆலா என்ற இரண்டு சொற்களின் கூட்டே அந்தப் பதம். புணர்ச்சி விதிகளின்படி உய்யல் + ஆலா என்ற இரு சொற்கள் கூடி உய்யலாலா என்ற பதம் நமக்குக் கிடைக்கிறது.

அது என்ன உய்யல்? அது என்ன ஆலா? அதை ஏன் இங்கு கவிஞர் பயன்படுத்தி இருக்கிறார்? என்ற கேள்விகள் எழுவது இயற்கையே.

நாயகனை தலைவனாக, அரசனாகப் பாவிப்பது என்பது தமிழ் மரபு. கவிஞர் மரபுவழி வந்தவர் என்பதால் அதிலிருந்து சிறிதும் வழுவாமல் தலைவனை ஒரு அரசனாகவும், அவன் எவ்வளவு பெரிய நாட்டினை ஆண்டு வருகிறான் என்பதையும் கவிஞர் எடுத்துரைக்கிறார்.

உய்யல் என்றால் உயர்தல்! நம் நாயகனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அப்படி உயர்ந்து நிற்பது எது என்றால் 'ஆலா' என்ற ஒரு பறவையாம். அதனால்தான் அந்த நாட்டில் உயர்ச்சி என்பதே ஆலா எனப் பொருள் வருமாறு கவிஞர் இராவணனின் ராச்சியத்தில் உய்யல் ஆலா என்கிறார்.

ஆலா என்றால் ஆங்கிலத்தில்  Tern என அழைக்கப்படும் பறவை. அதிலும் குறிப்பாக Arctic Tern என்ற வகை ஒன்று உண்டு. இப்பறவை என்ன செய்யும் என்றால் வடதுருவப்பகுதிகளில் குளிர்காலம் ஆரம்பிக்கும் முன் அங்கிருந்து பறக்கத் தொடங்கி தென் துருவப் பகுதிகளுக்குச் செல்லும். அதே போல தென் துருவத்தில் குளிர் தொடங்கும் முன் மீண்டும் வட துருவத்திற்குப் பறந்து செல்லுமாம். இது அப்படி ஓர் ஆண்டில் பறக்கும் தூரம் 70,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகம்.

இராவணனின் ராச்சியம் அப்படிப் பரந்து விரிந்தது. அதை முழுவதும் பார்க்கக்கூடியது ஆலாப் பறவைகள் மட்டுமே என்று ஒரு வரியில் நாயகனின் பெருமையையும் கூடவே ஒரு அருமையான அறிவியல் குறிப்பையும் தருகிறார் கவிஞர்.

 

 

-இணையத்தில் சுட்ட விளக்கத்தின் சுருக்கம் (நன்றி)

 

வன்னியனின், விளக்கத்தை கேட்டு.....

அப்பிடியே... உடம்பெல்லாம்...... புல்லரிச்சுப் போட்டுது. :D  :lol:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஞ்சு நிமிசத்திலை உய்யலாலாவுக்கு விளக்கம் சிறித்தம்பி.... :D

 

 

அட... இந்த "உய்யலாலாவை.... "  தமிழுக்கு அறிமுகப் படுத்தியது, ரஜனி சாரா....

பாட்டில் வரும் உய்யலாலாவின்.... அர்த்தத்தை பார்க்க,

ஏதோ... "கசமுசா....  சமாச்சாரம்" போலை கிடக்கு... குமாரசாமி அண்ணை. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஞ்சு நிமிச விளக்கம்தான் நெஞ்சுக்கு குளிர்ச்சியாய் இருக்கு....!  :lol:  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.