Jump to content

மீன் செதில் வறை


Recommended Posts

arowana+.jpg

 

தேவையான உணவுப் பொருட்கள்

 

1. நல்ல பெரிய மீனின் (கொடுவா / கயல் / விளை / கலவாய்) செதில்கள்

2. தேங்காய் பூ

3. மிளகுத் தூள்

4. மிளகாய்த் தூள் மற்றும் மசாலா அயிட்டங்கள்

5. மஞ்சள் தூள்

6. மிளகுத் தூள்

7. நல்லெண்ணை (Extra virgin என்றால் நல்லம்)

 

செய்வது?

 

1. முதலில் மீனின் செதில்களை மட்டும் மீனில் இருந்து உரித்தெடுத்து மீனை வீசவும். ஒரு துண்டைத் தானும் எடுக்க கூடாது

 

2. அந்த செதில்களை நன்கு கழுவவும்

 

3. கழுவிய செதில்களை ஒரு சட்டியில் வைத்து நங்கு கொதிக்க வைத்து வேக வைக்கவும்

 

4. இப்ப செதில்கள் ஓரளவு மென்மையாகி விடும். அவற்றை மிளகாய்த் தூள் மற்றும் மசாலா அயிட்டங்களில் பிரட்டி எடுக்கவும்

 

5. பின் சரியாக 43.33 நிமிடங்களில் அதன் மீது மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூளை தடவவும்

 

6.  இனி இதை தேங்காய்ப் பூவுடன் சேர்த்து கொஞ்சம் நல்லெண்ணை விட்டு வறுத்து எடுக்கவும்

 

7. நன்கு வறுத்தபின் செதில்கள் பொன்னிரம் ஆகும். அவற்றை ஒன்றில் நீங்கள்

 

    7.1. புட்டுடன் சாப்பிடலாம்

   7.2 இல்லை வைத்து இருக்கும் நகை நட்டுகளுடன் இதனையும் ஒரு இணைத்து பொன்னின் பெறுமதியை கூட்டலாம்

 

நன்றி

 

பி.கு:

 

இதனை செய்து பார்ப்பதோ, அல்லது செய்து சாப்பிட்ட பின் தொண்டையில் சிக்கி பிராணனை போக்குவதோ உங்கள் விருப்பம். இத்தகைய பின் விளைவுகளுக்கு நிழலியோ அல்லது யாழ் இணையமோ பொறுப்பேற்காது.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் செதிலை பூனைதானே தின்னும்! தமிழர்கள் எல்லாம் இப்ப பூனையாகிவிட்டதால் தின்னலாம் என்று சமையல் குறிப்பு தந்தமாதிரி இருக்கு! <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா இது, மீன் செதில் வறையா?

அடுத்ததென்ன பாம்பு வால் சூப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

fishScaling.jpg

 

maxresdefault.jpg

 

 

 

photo.jpg

 

இந்த வறையைச் சாப்பிட்ட நாயாரின் நிலை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழுவிய செதில்களை கருவாட்டு இரத்தத்தில் சிறிது நேரம் ஊறவிட்டால் வறை மொற மொறவெண்டு இருக்கும்...! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வறையை ஆக்கிய அண்ணனுக்கு.. இந்த நாயார் என்னவோ சொல்ல வாறாராம். :lol:

 

https://www.facebook.com/MissArabUSA/videos/853098081407705/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

arowana+.jpg

 

தேவையான உணவுப் பொருட்கள்

 

1. நல்ல பெரிய மீனின் (கொடுவா / கயல் / விளை / கலவாய்) செதில்கள்

2. தேங்காய் பூ

3. மிளகுத் தூள்

4. மிளகாய்த் தூள் மற்றும் மசாலா அயிட்டங்கள்

5. மஞ்சள் தூள்

6. மிளகுத் தூள்

7. நல்லெண்ணை (Extra virgin என்றால் நல்லம்)

 

செய்வது?

 

1. முதலில் மீனின் செதில்களை மட்டும் மீனில் இருந்து உரித்தெடுத்து மீனை வீசவும். ஒரு துண்டைத் தானும் எடுக்க கூடாது

 

2. அந்த செதில்களை நன்கு கழுவவும்

 

3. கழுவிய செதில்களை ஒரு சட்டியில் வைத்து நங்கு கொதிக்க வைத்து வேக வைக்கவும்

 

4. இப்ப செதில்கள் ஓரளவு மென்மையாகி விடும். அவற்றை மிளகாய்த் தூள் மற்றும் மசாலா அயிட்டங்களில் பிரட்டி எடுக்கவும்

 

5. பின் சரியாக 43.33 நிமிடங்களில் அதன் மீது மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூளை தடவவும்

 

6.  இனி இதை தேங்காய்ப் பூவுடன் சேர்த்து கொஞ்சம் நல்லெண்ணை விட்டு வறுத்து எடுக்கவும்

 

7. நன்கு வறுத்தபின் செதில்கள் பொன்னிரம் ஆகும். அவற்றை ஒன்றில் நீங்கள்

 

    7.1. புட்டுடன் சாப்பிடலாம்

   7.2 இல்லை வைத்து இருக்கும் நகை நட்டுகளுடன் இதனையும் ஒரு இணைத்து பொன்னின் பெறுமதியை கூட்டலாம்

 

நன்றி

 

பி.கு:

 

இதனை செய்து பார்ப்பதோ, அல்லது செய்து சாப்பிட்ட பின் தொண்டையில் சிக்கி பிராணனை போக்குவதோ உங்கள் விருப்பம். இத்தகைய பின் விளைவுகளுக்கு நிழலியோ அல்லது யாழ் இணையமோ பொறுப்பேற்காது.

 

இப்பிடியான இணைப்புகள் தொடர்ந்து வருமெண்டால் கிராமக் கோர்ட்டுலை வழக்கு போடுவன்....அதோடை என்ரை சங்கக்கடை தலைவர் பதவியையும் தூக்கி எறிவன் எண்டு எச்சரிக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூட்டனின் மூளை போல எல்லோருக்கும் கிடைப்பதில்லை!

 

எனக்குத் தெரிந்த ஒருவர்.. கணவாயைக் கள்ளில தான் அவிப்பார்! நல்ல 'மெதுமையா' வருமாம்!

 

கடைசியா கள்ளில அவிச்ச கணவாயோடையும், மிச்சக் கள்ளோடையும் வள்ளத்தில ஏறி... ஆழ்கடல் வயிரவரிட்ட ஒருக்காப் போயிற்று வாறன் எண்டு சொல்லிட்டுப் போனவர் தான்!

 

பிறகு திரும்பி வரவேயில்லை! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு சாவு கொடுப்பினை ஐயா.

Link to comment
Share on other sites

களத்தில் உள்ள அங்கத்தவர்கள் மற்றும் களத்தின் பார்வையாளர்களை கொலை செய்ய உலகில் யாராலும் செய்ய முடியாத வாய்க்கு ருசியான 'திங்கக் கொடுத்து கொல்லுவாக" திட்டத்தை தயாரித்த மற்றும் உடநேயே பொறுப்பு துறப்பு  அறிவிப்பையும் வெளியிட்ட  நிழலி அவர்களுக்கு என்ன தண்டனை வேண்டுமென்றாலும் கொடுங்கப்பா,எங்கள் வீட்டு கதவுகள் யாவும் இறுக்க மூடியிருக்கும். நாங்களும் வெளியூருக்கு கிளம்பிட்டோமெல்ல....

Ias-293x150.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கெல்லாம் இப்ப தோலே எடுக்கிறதில்ல... மனுஷன் இன்னும் செதிலோட மினக்கெடுகுது! :icon_idea: 

 

0.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா..... "மீன் செதில் வறை"
பெயரைக் கேட்கவே... வாயில் நீர் ஊறுது. :)

இவ்வளவு காலமும், மீனிலிருந்து.... சுரண்டிய செதில்களை,
வீணாக குப்பைத் தொட்டியில் போட்டு விட்டோமே... என்று கவலையாக உள்ளது. :(

 

செய்முறை இலகுவாகவும், "மீன் செதில் வறைக்கு" தேவையான பொருட்கள் எல்லாம்... வீட்டில் இருப்பதாலும்,
வருகின்ற சனிக்கிழமை, இதனை செய்து பார்க்க உத்தேசித்துள்ளோம்.
அருமையான.... சமையல் குறிப்புக்கு, நன்றி நிழலி. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா..... "மீன் செதில் வறை"

பெயரைக் கேட்கவே... வாயில் நீர் ஊறுது. :)

இவ்வளவு காலமும், மீனிலிருந்து.... சுரண்டிய செதில்களை,

வீணாக குப்பைத் தொட்டியில் போட்டு விட்டோமே... என்று கவலையாக உள்ளது. :(

செய்முறை இலகுவாகவும், "மீன் செதில் வறைக்கு" தேவையான பொருட்கள் எல்லாம்... வீட்டில் இருப்பதாலும்,

வருகின்ற சனிக்கிழமை, இதனை செய்து பார்க்க உத்தேசித்துள்ளோம்.

அருமையான.... சமையல் குறிப்புக்கு, நன்றி நிழலி. :rolleyes:

அடுத்ததாக, எங்கள் குருஜி, நிழலியானந்தர், ஆட்டுத் தோல் வறை, ஆட்டுப் புழுக்கை பிரட்டல் பறறிய குறிப்புக்கள் தரவுள்ளார் என்று அறிவிக்க விரும்புகிறேன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

மாட்டு வால்  சூப் செய்வது எப்படி எண்டு யாரும் சொல்ல முடியுமா? 
 
"மாட்டு வால் சூப் மன்மத பானம்" எண்டு ஒரு பழமொழி இருக்குதாம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

|இப்படியே வாழைப்பழத் தோல் கறிக்கும் ஒரு றெசிப்பியும் செய்முறையும் தந்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலந்தியின் கால்களை வைத்து  ரசம் தயாரிக்க  ஏதாவது செய்முறை உள்ளதா? இருந்தால் அறியத்தரவும். :D:lol:

Link to comment
Share on other sites

இத் திரியை தயவு செய்து சிரிப்போம் சிறப்போம் அல்லது இனிய பொழுது பகுதிக்கு மாற்றி விடுங்கள் நிழலி.!!! :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் அ(வ)றையில் வதை(றை) பட்டிருப்பார் நிழலியானந்தா இவ்வாறு இங்கு வறு(றை)த்து கொட்டி அழ... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நாங்கள் செதில் சாப்பிடறாயிருந்தால் மீனை பிடிச்சு அதை கொல்ல தேவையில்லையே, செதிலை சுறண்டி எடுத்திட்டா திரும்பவும் மீனை கடலிலை(அல்லது மீன் தொட்டிலை) விட்டீங்கண்டா சில மாசத்திலை அதே மீன் செதில் தர ரெடியாயிரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் செதிலில் வைட்டமின் A-Z உண்டாமே, மெய்யோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

|இப்படியே வாழைப்பழத் தோல் கறிக்கும் ஒரு றெசிப்பியும் செய்முறையும் தந்து விடுங்கள்.

 

வாழைக்காய் தோல் சம்பல் சாப்பிடைலைப்போல :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அதெல்லாம் சரி.
 
பழபுளியோ, தேசிக்காய் புளியோ எண்டு சொல்ல இல்லை. வறை செய்து பாதில நிக்குது. புளி ருசி இல்லாமல் கையால தொட மாட்டேன் எண்டு ஒரு பொலிசி வைச்சி இருக்கிறம்.
 
கெதியா ஆரேனும் சொல்லுங்கோ. ப்ளீஸ். கண நேரம் பொறுக்க எழாது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதில் சொல்லலாம்......ஆனா புளி வாந்தி எடுப்பதாய் சிலர் கோபிக்க கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அதெல்லாம் சரி.
 
பழபுளியோ, தேசிக்காய் புளியோ எண்டு சொல்ல இல்லை. வறை செய்து பாதில நிக்குது. புளி ருசி இல்லாமல் கையால தொட மாட்டேன் எண்டு ஒரு பொலிசி வைச்சி இருக்கிறம்.
 
கெதியா ஆரேனும் சொல்லுங்கோ. ப்ளீஸ். கண நேரம் பொறுக்க எழாது.

 

 

வறைக்கு.... எந்த ஊரிலை, புளி விடுகின்றவர்கள்?

வேணுமெண்டால்.... கொஞ்ச, மாசிக் கருவாட்டை போட்டு, கிளறி விடுங்கள்.

வாசம்... பிச்சுக் கொண்டு வரும். ருசியும்.. அந்த மாதிரி இருக்கும். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.