Jump to content

'' போராட புறப்பட்டது பிழையா....???''


Recommended Posts

'' போராட புறப்பட்டது பிழையா....???''

கட்டிவைத்த என் வீட்டை

கயவன் வந்து இடிக்கின்றான்....

அவனை தட்டிகேட்க துணிவின்றி

கை கட்டி நிற்கின்றேன்...

துப்பாக்கி முன் நிற்க

துணிவு வரும் எப்படி....???

தட்டி கேட்க நிற்பேனா...??

தப்பிக்க நிற்பேனா....???

முரண்டு பிடித்தால்

முண்டமாய்

நான் கிடப்பேன்....

அடங்கித்தானே

போக வேண்டும்

சிறு பாண்மை

என்ன செய்யும்....???

சீற வா முடியும்..??

சினக்கவா முடியும்..???

இன்றிங்கு

இப்படித்தான் நடக்கிறது....

யார் தட்டி கேட்டார்...??

யாரால் முடியும்....???

தட்டி கேட்டால்

பதில் என்ன வரும் - நீ

பலியாய் போவாய்....

இது என்ன...??

இது தானே

அடக்கு முறை...

இப்போ சொல்

உலகே

நாம் போரடா புறப்பட்டது

பிழையா....???

- வன்னி மைந்தன் -

Link to comment
Share on other sites

பதில் சொல்லுமா இந்த உலகம்..:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவும் நடக்குது

போராட புறப்பட்டது சரியே.

உங்கள் கவிதை வரிகள் அழகு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.