Jump to content

இளையராஜாவின் தமிழ் உணர்வு பற்றிய நிலைப்பாடு


Recommended Posts

:P இளையராஜாவின் தமிழ் உணர்வு பற்றிய நிலைப்பாடு ;)

இதை அழுத்தி வாசித்தறிக......நன்றி.....நேரடியாக தரமுடியவில்லை

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...mber/221106.asp

Link to comment
Share on other sites

ஸ்பெஷல் பேட்டியில் மனம் திறக்கிறார் இளையராஜா

வரலாற்று நாய கர்களின் வாழ்க்கை வரலா றைப் படமாக்க முனையும்போது சிற்சில எதிர்ப்புகள், பிரச்னைகள் எழுவது இயல்புதான். ஆனால், வேறு எந்த படமும் இவ் வளவு பிரச்னைகளைச் சந்தித்திருக்குமா என்று எண்ணு மளவுக்கு பெரியார் படம் குறித்து பல பிரச்னைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. லேட்டஸ்டாக, இந்தப் படத்துக்கு ஆத்திகரான தன்னால் இசையமைக்க முடி யாது என்று இளையராஜா மறுத்துவிட்டதாக செய்தி கள் வர... விஷயம் சூடுபிடித்துக் கொண்டது. இளைய ராஜா சொன்னது சரிதான் என்றும், அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது என்றும் பல முனைகளிலி ருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. பெரியார் படத்துக்குத் தற்போது இசையமைத்துக் கொண்டிருக்கிறார் வித்யாசாகர்.

இந்நிலையில் இயக்குநர் வேலுபிரபாகரன், தன்னு டைய கடவுள் மறுப்புக் கொள்கையை அடிப்படை யாகக் கொண்ட கடவுள் படத்துக்கு இளையராஜா தான் இசையமைத்தார் என்று ஒரு அறிவிப்பை வெளியிட, இளையராஜா உண்மையில் என்ன காரணத்தால் இசையமைக்க மறுத்தார் என்ற கேள்வி பூதாகாரமாக எழுந்துள்ளது. இதையடுத்து, அதுகுறித்து அறிந்து கொள்ள முதலில் வேலுபிரபாகரனைச் சந்தித்தோம்...

கடவுள் மறுப்பு பிரசாரத்தை மையமாக வைத்துதான் கடவுள் படத்தை எடுத்தேன். அந்தப் படத்தைத் தன் பின்னணி இசை மூலம் பாமர மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர் ராஜா தான். அதுமட்டுமல்ல... தற்போது நான் எடுத்துவரும் காதல் அரங்கம் என்ற படத்தில் பெரியாராக நான் ஒரு காட்சியில் வந்து, நாத்திக பிரசாரம் செய் கிறேன். சுமார் 12 நிமிடங்கள் வரக்கூடிய அந்தக் காட்சிக்கு அற்புதமாக பின்னணி இசை கோத் துக் கொடுத்திருப்பவர் ராஜா. அவரை அணுக வேண்டிய விதத்தில் அணுகினால், நிச்சயம் செய்து கொடுத் திருப்பார். ஆனால் அப்படிச் செய்யாமல், அவர் ஏதோ வம்படியாக முடியாது என்று மறுத்துவிட்டதைப்போல ஒரு எண்ணத்தைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள். உண்மை அதுவாக இருக்காது என்றார்.

இதையடுத்து, உண்மை எதுவென்று அறிந்துகொள்ள இளையராஜாவையே நேரில் சந்தித்தோம்... எடுத்த எடுப் பிலேயே நேரடியாக விஷயத்துக்கு வந்தார் ராஜா...

நான் அந்தப் படத்துக்கு இசையமைக்காதது குறித்து ஆளாளுக்கு ஒரு காரணத்தை அவர்களாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மைக் காரணம் என்ன, நடந்தது என்ன என்பதை இப்போதுதான் உங்களி டம் நான் முதன்முறையாகச் சொல்லப் போகிறேன்...

ஒரு திருமணம் நடக்கிறது... அதற்கு ஒரு சமையல் காரரை ஏற்பாடு செய்து விருந்து தயாராகிக் கொண்டி ருக்கிறது. கல்யாண வீட்டுக்காரர் திடீரென்று பந்தியின் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களிடம், இங்கே ஒரு பிரபலமான சமையல்காரரை அழைத்திருந்தேன். அவர் வருவதற்கு மறுத்துவிட்டார் என்று சொன்னால், அங்கே இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அந்த சமையல்காரரும் இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருப்பார். காரணம், அவரைத்தான் அந்தக் கல்யாண சமையல் வேலைக்கு அழைக்கவே இல்லையே! அதுபோலத்தான் பெரியார் படத்துக்கு இசையமைக்க என்னை யாரும் முறையாக அழைக்கவும் இல்லை... எந்த ஒப்பந்தமும் செய்யவுமில்லை.!

பிறகு எப்படி இப்படி ஒரு சர்ச்சை எழுந்தது?

உங்கள் மூலமாக இப்போது சொல்கிறேன்... பாரதி படத்துக்குப் பிறகு ஞானராஜசேகரன் என்னைச் சந்தித்து, சுபாஷ் சந்திரபோஸ் பற்றி ஒரு படம் எடுக் கிறேன். முதல்கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி வருகிறது. அதற்கு நீங்கள் ஒரு பாடல் இசையமைத்து ரெக்கார்ட் செய்து தர வேண்டும் என்று கேட்டார். உடனே நான், இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் சுபாஷ் சந்திரபோஸை எந்தக் கோணத்தில் படம் எடுக் கிறீர்கள்? அரசியல் சாயம் உண்டா? சுதந்திர உணர்வு போராட்டப் படமா? இப்படி படத்தின் நிறம் என்ன என்ப தைத் தெரிந்துகொண்ட பிறகுதான் இசை அமைக்க முடியும். எனவே, படத்தை எடுத்துக் காட்டுங்கள்... பிறகு பார்க்கலாம் என்றேன்.

அவ்வளவுதான்! அதன்பிறகு சில வருடங்கள் கழித்து, அவர் பெரியார் படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை ஏற்பாடு செய்திருப் பதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் இப்போதோ, பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று வீணாக செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஞானராஜசேகரன் ஒரு படைப்பாளி அல்ல... அவர் ஒரு ஆபீஸர். அலுவலகத்தில் உட்கார்ந்து வடையும் டீயும் சாப்பிட்டுவிட்டு, தன் கீழே வேலை செய்யும் ஏவலர்களை நடத்துவதைப்போல கலைஞர்களையும் நடத்த நினைக்கிறார்.

ஞானராஜசேகரன் உள்ளத் தூய்மையோடும் உயர்வாகவும் பெரியார் படத்தை எடுப்போம் என்று என்னிடம் வரவில்லை. முறையான வழிகளில் என்னை அணுகவும் இல்லை. எந்த ஒரு படைப்பாளிக் கும் கலைஞனுக்கும் உள்ளத்தூய்மை வேண்டும். அப்படி உள்ளவன் இன்னொருவனைக் குற்றம் சொல்ல மாட்டான். என்னை இசையமைக்க அழைக்கவில்லை என்ற உண்மையான காரணம் அவர் மீது இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக தந்தை பெரியாரின் மாண்பையோ புகழையோ எவனும் தன் இசை யினால் இன்னும் ஒருபடி புதிதாக உயர்த்திவிட முடியாது!

காமராஜரும் உள்ளூர நாத்திகவாதிதான். அவர் படத்துக்கு மட்டும் இளையராஜா இசையமைத்தாரே என்கிறார்களே...?

நான் காங்கிரஸ்காரனாக இல்லாவிட்டாலும் காமராஜ் படத்துக்கு இசைத்தொண்டு செய்தேன். நான் ஒரு திரா விடக் கழகத்தவன் இல்லையென்றாலும், சுயமரியாதை யோடு உள்ளத் தூய்மையோடு பெரியாருக்கு சேவை செய்யத் தயங்கி இருக்க மாட்டேன்.

ஆனால், இந்தப் பெரியார் படத்தை எதற்காக எடுக்கிறார் கள்? அந்தப் படம் குறித்து என்னுடைய மூன்று கேள்விகள் இவைதான்

1. இது பெரியாரின் கொள்கைப் பிரசாரப் படமா? 2. பெரியாரின் வாழ்க்கை வரலாறா? 3. தந்தை பெரியார் கேரக்டரில் நடிக்கும் சத்யராஜின் படமா? இந்த மூன்று கேள்விகளுக்கும் நியாயமான விடைகள் இந்தத் திரைப்படத்தில் அமைந்தால், இளையராஜா மட்டுமல்ல... வேறு எந்தக் கொம்பனின் இசையும் பெரியார் படத்துக்குத் தேவையே இல்லை.

பெரியாருக்கும் இசைக்கும் என்ன சம்பந்தம்? ஏன் என் பெயரை வீணாக இழுக்கிறார்கள்? பெரியாரை கமர்ஷியல் ஆக்க செய்கிற சில்லறைத்தனமான குற்றச்சாட்டு கள் என்மீது வீசப்படுகின்றன. என்னிடம் கொண்டு வந்து கொட்டும் எத்தனையோ குப்பைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். தந்தை பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேனா?

என்னை ராஜசேகரன் புரிந்து கொண்டதைவிட, தமிழக மக்கள் நன்றாகப் புரிந்து, அறிந்து வைத்திருக்கிறார்கள்! திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் என்னைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார். என்மீது சொல்லப் படும் இந்தக் குற்றச்சாட்டுக்கு அவர் துணைபோக மாட்டார்.

சரி... நீங்கள் வேறு ஏதாவது படங்களுக்கு இசை அமைக்க மறுத்தது உண்டா?

எத்தனை படங்கள் என்று கணக்கில் இல்லை! ரஜினி காந்ந் நடித்த படங்களுக்கு ரஜினியே நேரில் வந்து இசையமைக்கக் கேட்டும் மறுத்திருக்கிறேன். பாலச்சந்தரின் அண்ணாமலை திரைப்படத்துக்கு மறுத்தேன். காரணம், அதற்கு முன்னால் கவிதாலயாவில் தயாரித்த புதுப்புது அர்த்தங்கள் படத்தைக் குறிப்பிட்ட தேதியில் வெளியிட வேண்டும் என்பதற்காக, நான் பின்னணி இசை அமைத்துக் கொடுக்காமலேயே என்னுடைய பழைய டிராக்குகளைப் போட்டு நிறைத்துப் படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள்! உதவி இயக்குநர் அனந்துவிடம் என் மனநிலையைத் தெரியப்படுத்தி, நீங்கள் இந்தப் படத்துக்கு ஏதோ ஒரு மியூசிக்கைப் போட்டு விட்டீர்கள்... என்னுடைய பெயர் மட்டும்தான் உங்களுக்குத் தேவை என்று எனக்குப் புரிந்துவிட்டது. டைரக்டரிடம் அடுத்த படத்துக்கு வேலை செய்ய மாட்டேன் என்று கூறிவிடுங்கள் என்றேன்.

அதற்கு அடுத்துதான் அண்ணாமலை தொடங்கி னார்கள். ரஜினி என்னிடம் நேரில் வந்து, சாமி, இந்தப் படத் துக்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும் என்று கேட்டார். நான் மறுத்து விட்டேன். பாட்ஷா படத்தி லும் இதேபோல சூழ்நிலை ஏற்பட்டது. ரஜினிதான் நேரில் வந்து கேட்டார். நானும் மறுத்தேன். இந்த இரண்டு விஷ யங்களையும் வெளிப்படுத்தாத ரஜினியும் நானும் இப்போதும் நண்பர்களாகத்தான் இருந்துகொண்டிருக்கி றோம். திரைப்படத்தை மீறிய நட்பு எங்களிடம் இருக்கிறது.

இதேபோல விசு அவர்களின் ஒரு படத்துக்கு இசைய மைக்க மறுத்தேன். உடனே அவர் சொன்ன பதில், இளைய ராஜா இசையமைக்கவில்லை என்றால் அது அவருக்குத் தான் நஷ்டமே தவிர, என் படத்துக்கு இல்லை என்று சொன்னார். அது தன் படத் தின்மீது அவருக்கு இருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. ஒரு நல்ல படத்தை இளைய ராஜா இழந்து விட்டார் என்பது அர்த்தம்.

இன்னும் எத்தனையோ படங்களை நான் மறுத்தி ருக்கிறேன். கலையுலகைச் சார்ந்த யாரும் இதை ஒரு செய்தியாக்கி சில்லறை விளம்பரங்களைத் தேடிக் கொண்டதில்லை. இவர்கள் எல்லாம் செய்யாத காரியத்தை ஞானராஜசேகரன் செய் வதைப் பார்த்தால், திரு வேறு, தெள்ளியர் ஆதல் வேறு என்று வள்ளுவர் சொன் னதைப்போல, கலை உலகத் தினர் வேறு, வியாபார உலகத் தினர் வேறு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

சிறு வயதிலேயே மேடை யேறி அண்ணன் பாவலரு டன் அரசியல் கட்சி மேடை களில் சமூக விழிப்பு உணர்வு பாடல்கள் பாடியிருக் கிறீர்கள். சமூகப் பார்வையில் பெரியார் பற்றி...

நான் ஆன்மிகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதிலே ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காகத் தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால், நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

நான் ஒரு உண்மையான இசைக் கலைஞன் மட்டுமே. எனக்கு எந்தக் கட்சியின் கொள்கைகளின் மீதும் விருப்பும் கிடையாது, வெறுப்பும் கிடையாது. சிறு வயதில் என்னுடைய வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையாக தொடங்கியிருந்தாலும், காலப் பக்குவத்தினாலும் முன்னோர்கள் ஓதுவித்த உயர்ந்த தமிழ் இலக்கியங்களாலும் ஆன்மிக வாழ்க்கையை (இல்லறத்தில் இருக்கும் காரணத்தினால் முழுமையாகத் தொடரமுடியவில்லை என்றாலும்கூட) ஒரு இசைக் கலைஞனாகவும் ஆன்மிக நாட்டம் உடையவனாகவும் இறைவன் என்னை வழிநடத்துகிறான் என்றபடி பேட்டியை முடித்துக் கொண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் தமிழ் உணர்வைப்பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. ஏனெனில் இவரின் பிள்ளைகள் எத்தனை பேருக்கு ஒழுங்காக தமிழ் தெரியும்?அதுவும் இவரின் செல்லமகளுக்கு எழூத படிக்க தெரியாது.பாடுவது எல்லாம் ஆங்கிலத்தில் எழுதித்தான்!இவருக்கு தலைக்கனம் அதிகம்.தனக்குள் ஆன்மீகம் நிறைய இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் இவர் எரிச்சல் பொறாமை கொண்ட ஒரு சுயநலவாதிக்காரன்.

Link to comment
Share on other sites

இளையராஜ என்ற மனிதனால் எத்தனை பேர் பழிவாங்கப்பட்டார்கள் என்பது

எத்தனை பேருக்கு தெரியும்...???

தானே ராஜா ..தானே..மந்திரி என்ற நினைப்பு அவருக்கு...

ரகுமானை அமர்த்தி அடிக்க முனைந்தார். அவர் தனது விட முயற்சியாலும்

திறமையாலும் இன்று உலகையே ஆட்டி படைத்து கொண்டிருக்கிறார்...உலகம் அறிந்த ஒருவராகவும்..இருக்கன்றார்...

அது கண்டு சலித்து கொள்ளாதவர் அவ்வப்போ சாடுவதை காண கூடியதாக உள்ளது...

பவதாரனிக்கு தமிழ் தெரியாது உச்சரிப்பு நச்சரிப்பு தான்...இப்படித்தான் பல பேர்

தங்களுடைய பிள்ளைகளுக்கு தழிழ் தெரியாது ஊருக்கு பாடம் புகட்ட nவிளிக்கிட்டு விடுவார்கள்...

அவர் கிராம புற இசையில் ஞானியாக இருக்கலாம் அதற்காக அவர் சொல்வதெல்லாம் சரியா...??

எத்தனை பாடகர்..பாடகிகளை அவமானம் செய்தார்...

சக பாடகர் முன்னால் திட்டியிருப்பார்...

ஒருவன் தன்னை போல மாற்றானையும் நேசிக்க வேண்டும்..மற்றவனையும் தட்டி கொடுத்து வளர்க்க வேண்டும்

இன்றுவரை அவர் ஏனைய சக இசை அமைப்பாளர்களை சாடுவதை காண கூடியதாக உள்ளது

ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்....???

தலைக்கணம் பிடித்தவர்...தான் என்ற ஆணவம்..தனக்கே எல்லாம் தெரியும் என்ற..இறுமாப்பு

இவை எதை காட்டுகின்றன....???

எனவே அவரின் ஒருபக்கத்தை மட்டும் பார்ப்பதை விட்டு

அவர்களின் மறு பக்கத்தையும் பாருங்கள் அதுவே சிறந்தது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னீர்கள் வன்னிமைந்தன்.இவர் இசையமைத்த பாடல்களை விரும்பி கேட்பேன்.உண்மையில் இவருடைய இசை இனியது.இவர் இசையமைத்தபாடல்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது.ஆனால் இவர் எப்போதும் வெளிப்படையாக தன்னை ஒரு அப்பாவியாக அறிமுகப்படுத்துவார்.சொந்தசக

Link to comment
Share on other sites

இசைஞானி சாதி வெறி பிடித்தவர் என்று நான் கேள்விப்படவில்லை. அப்படி ஏதாவது சம்பவங்கள் இருந்தால் சொல்லுங்கள்! அறிந்து கொள்கிறேன்.

பாவலரின் மகளின் திருமணம் அல்ல அது. அவருடைய இரண்டாவது அண்ணன் பாஸ்கரின் மகனுடைய திருமணத்திற்குத்தான் (தேவாவின் மகளுடன் நடந்த காதல் திருமணம்) இளையராஜா போகவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.