Jump to content

குமாரசாமி அண்ணா ,சோழியான் அண்ணா, வாத்தியார் அண்ணா .நன்றி நன்றி .


Recommended Posts

வணக்கம் உறவுகளே அம்மாவிற்கு வணக்கம் செலுத்தும் முகமாக  தூயவனின் வரிகளில்  என்னால் இசை அமைக்கப்பட்டு எம் ஈழத்துப்பாடகர்  நிரோஜனால் பாடப்பட்டு பல தென்னிந்திய இயக்குனர்கள் , ஈழ இயக்குனர்களால் சான்றிதழ் வழங்கப்பட்ட இந்தப்பாடல்  ஈழ இயக்குனர் நிலானின் இயக்கத்தில் அழகிய வீடியோ வடிவில் வெற்றிகரமாக  முடிக்கப்பட்டுள்ளது .வருகிற 27 ஆம் திகதி மிக பிரமாண்டமாக வெளியிட உள்ளோம் .உண்மையில் இந்தப்பாடல் எனது இசைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது .மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் .
 
 பாடலின்  உருவாக்கத்திற்கு தங்கள் அன்பு பங்களிப்பை செய்து ஈழக்கலைஞர்களை ஊக்குவித்த  யாழ்கள உறவுகள் வாத்தியார் அண்ணாவுக்கும்,   குமாரசாமி அண்ணாவுக்கும் ,சோழியான் அண்ணாவுக்கும் எம் கலைஞர்கள்  சார்பாக சிரம் தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...............
 
நன்றி ................நன்றி ........நன்றி ...............
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமனுக்கு அணில் போல என்னுடைய பங்களிப்பு இருந்தாலும் உங்களின் இசைப்பயணத்திற்கு உதவியதில் மகிழ்ச்சி தமிழ் சூரியன். அந்த நேரத்தில் மேலதிகமாக உங்களுக்கு உதவ முடியவில்லை என்பது இன்னும் எனக்கு ஒரு குறையாக உள்ளது. அடுத்த படைப்பிலும் இந்த அணிலின் பங்கு சூரியனுக்கு இருக்கும்.

 

கள உறவுகள் கு சா அண்ணைக்கும் சோழியன் அண்ணைக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

இதை எல்லாம் உதவி ந்று சொல்லிக் கொண்டு..?!!
இப்படி ஒரு நிகழ்வுக்குக் காரணமான இறைவனுக்கு நன்றி.

 

மேலும் பல படைக்க வாழ்த்துகள்!
அதற்கு துணைநிற்கும் வாத்தியார், குசா மற்றும் உறவுகளூக்கும் பாராட்டுகள்.   :o  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்குள் பாராட்டுக்களும் நன்றிகளும் வேண்டாம். இது எமது இனத்திற்கான / உடன் பிறப்புக்களுக்கான கடமையென செய்வோம். எமது கலைஞர்களை ஊக்கிவிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.