Jump to content

பெண், பாலுறவு மற்றும் ஆர்கசம் (Orgasm)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நமது பெண் உரிமைப்போராளிகள் கிளம்பபோகிறார்கள் .......கவனமாக இருங்கோ  

 

வீடியோவைப் பார்க்காமல்  ...எழுதின கருத்துப் போல கிடக்குது..சுமே!  :o

ஆ.. கா...
 
கிளம்பீட்டாங்கையா, கிளம்பீட்டாங்க   :o  :D  :o
Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான, தேவையான பதிவு நிழலி,

இந்த ஆர்காசம் என்பதுக்கு தமிழில் சரியான வார்த்தை இல்லை என நினைக்கிறேன். அந்தளவுக்கு இதை ஒரு பேசா பொருளாக்கி வைத்துள்ளோம்.

அதுவும் பெண்ணின் ஆர்காசம்? கிலோ என்ன விலை என்றுதான் பலர் கேட்பார்கள்.

டண்டு சொல்வது முற்றிலும் சரி.

பெண் ஆர்காசத்துக்கு முதலில் தேவை மனக்கவர்ச்சி, இரு மணம் ஒத்து கூடுதல். அஜித் குமார் கனவில் இருக்கும் 18 வயது பெண்ணை பியர் வண்டியியோடு புலத்தில் இருந்து அரை வழுக்கையுடன் போன ஆள் கட்டினால் - பெண்ணுக்கு ஆகாசம் - கஸ்டம்தான்.

சில பெண்களை இப்படி பட்ட Bears ஐ விரும்புவார்கள் ( ராஜ் கிரணையும் ரசிப்பவர்கள் உண்டே). அவர்களுக்கு இது பெரும் பிரச்சினை அல்ல.

அடுத்தது கிளிட் - பெண்ணில் இதுதான் முக்கியமான பகுதி. வைஜைனல் ஆர்காசம் 3% பெண்களுக்கே சாத்தியம்.

மிகுதி பேருக்கு - கிளிட்டோரல் ஸ்டிமுலேசன் மூலம்தான் சாத்தியம்.

டண்டு சொல்லும் ஜி ஸ்பாட் கூட வஜைனாவின் வாயிலுக்கு உள்ளே, மேற்கூரையில் ஒரு புடைப்புப் போல இருந்தாலும் - உண்மையில் அது கிளிட்டின் நரம்பு முடிச்சின் அடிப்புறமே.

அந்த லேடி சொல்வதும் சரிதான், 95 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு குறிகள் இணைவதால் ஒரு அற்புதமான சுகமும் ஏற்படுவதில்லை. ஏன்னெனில் அவர்களுக்கு உணர்சியான பகுதியை தொடாமலே எல்லாம் முடிந்து விடும்.

ஆண் குறி தவிர ஏனைய வழிகளினால் தம் துணையை சுகப்படுத்த பல ஆண்கள் தயாரில்லை, அந்த யோசனையே இல்லை. அவர்களும் வாய் விட்டு கேட்கும் அளவில் அன்னியோன்யமும் இல்லை. விளைவு ஆறு பிள்ளை பெற்றும் ஆர்காசமில்லாத வாழ்க்கை.

பலரின் வண்டி இப்படித்தான் ஓடுகிறது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் மர்ம முடிச்சு எங்கோ ஒழிந்து இருக்கும். அதை தேடி கண்டு பிடித்து உசுப்ப அக்கறை, அன்பு அந்த பெண்ணின் மீது இருக்க வேண்டும். நேரம் செலவழிக்கவும் தயராய் இருக்க வேணும்.

டண்டு சொல்லும் ஸ்கூர்டிங் (வெடித்துக் கிளம்பும்) ஆர்காசம் - என் அனுபவத்தில் எல்லோர்க்கும் வராது. சாதாரண ஆர்காசம் வந்தவுடன் பொதுவாக பெண்கள் ஆண் துணையை தள்ளி விடுவார்கள்.

அப்படிச் செய்யாமல் தொடர்ந்து செயல்பட்டால் இது நிகழும் ( மெத்தை பெட்சீட் கவனம்). ஆனால் எல்லோருக்கும் இல்லை.

அதே போல் என்ன செய்தாலும் அசையாத frigid பெண்களும் இருக்கிறார்கள். ஒரு சவாலாக எடுக்க வேண்டியதுதான். முயற்சி திருவினையாக்கும்.

இதற்கு நேர் எதிராய் மார்பக தூண்டலில் ஆர்காசம் அடைபவர்களும் உளர்.

என்னை கேட்டால் நான் சொல்லக்கூடியது - மினக்கெடுங்கள் - பலன் உண்டு என்பதே.

முடிந்தளவு ஆபாசம் தவிர்த்து எழுதியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடியான திரியல் திறந்து தான் யாழை ஓட்டுற நிலைமை வந்திட்டுதா ?????

இதை வாசிக்கும் போது உண்மையில் கவலையாக இருந்தது. என்னுடைய பங்குக்கு நாலு பதிவு போட்டு இருக்கிறேன் ..

இது சம்மர் கண்டியளோ.. அதுதான் கொஞ்சம் பிசினஸ் சிலோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு

 

அதற்கு பொறுப்போடு எழுதி பிரயோசனமாக்கிய

டண்டணக்கா

நெடுக்கு

கோசான் சே 

மற்றும் அனைவருக்கும் நன்றிகள்..

 

வாழ்க்கை  வாழ்வதற்கே..

இதற்குள் எல்லாமே வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட சிங்கங்களை பற்றி சொல்லவா வேண்டும் ..... :D  :D 

கோசான் அண்ணை ஒரு கலைக்களஞ்சியம் தான் எந்த விடயம் என்றாலும் விளாசுகிறார் 
நெடுக்ஸ் ஜீ சொல்லவே தேவையில்லை ,
டண்டு அவரோட பங்குக்கு செமையாக விளாசல் 
 .....இதில இவ்வளவு விஷயம் இருக்கா 

 

 

ஆ.. கா...

 
கிளம்பீட்டாங்கையா, கிளம்பீட்டாங்க    :o   :D   :o

நாதமண்ணை 
அப்பவே சொன்னோமில்ல ...

Link to comment
Share on other sites

இப்பிடியான திரியல் திறந்து கிடந்தா எல்லாரும் ஓட்டத்தான் செய்வினம், உதுக்கே கூச்சப்பட்டால், உந்த கணொளியின் முடிவில் ஐ-ரிவி அந்தரங்கம் நிகழ்சியின் பெண் அறிவிப்பாளரும் (பச்சை கரைவச்ச சேலை உடுத்த பெண்), வைத்தியரும், மிகவும் அழகாகவும், வெளிப்படையாகவும், தெளிவாகவும் விவரிக்கின்றனர்; இப்படி ஒரு விளக்கம் இருந்திருந்தால், கடந்த பல வருடங்களா எந்த பெண்ணை பார்த்தாலும் இந்த நினைப்பால மனம் அலைபாஞ்சிருக்காது, மனைவி சொல்வா, உந்த எண்ணங்கள் இல்லாட்டி, நீங்கள் படிப்பில் எங்கேயோ போயிருப்பியள் என்று. சிறிதளவேனும், இந்த விடையத்தின் விளக்கமின்மையும், எனது புங்குடுதீவு சகோதரியின் படுகொலைக்குகாரணமாக இருந்திருக்கலாம்.

 

உனை நீ அறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இப்பத்தான் இந்த கொடுமையை பார்த்தேன்..இவா ஒரு போலி வைத்தியர்தான். 100 க்கு 176% உண்மை. மனிசிக்கு ஒரு மண்ணும் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாழ்வியல் முறையில் சில விடயங்களை இலைமறை காயாக வைத்தது பல நன்மைக்குத்தான். வாழ்வில் சுவையான உணவு உண்பதுபோல்தான் செக்ஸ் உம். அதை நாகரிக உலகம் எதோ தமக்குத் தான் எல்லாம் தெரிந்ததுபோல் ஊதிப் பெருக்கி தம் வியாபாரத்துக்கும் தம் வாழ்வியலை நியாயப்படுத்தவுமே பலவிடயங்களை பொதுவெளியில் உலவ விடுவது.

 

இதில் பதிவு போடுவதால் மட்டும் ஒருவர் தம் மனைவியைத் திருப்திப்படுத்துவாரா என்றால் இல்லை. செக்ஸ் இல்லாவிட்டால் வாழ்வே என்னும் நிலைக்கு இப்போதைய சமூகம் வந்துவிட்டதற்கு இப்படியான அருவருக்கத்தக்க பதிவுகளும் வீடியோக்களுமே காரணம். மேற்கத்தைய சமுதாயம் எம் இனத்தை விட இவையெல்லாவற்றையும் கற்று வைத்திருந்தும் ஏன் குடும்ப வாழ்வை குறுகிய காலத்தில் முடித்துக்கொண்டு இன்னொரு பெண்ணிடம் போகவேண்டும் ???? அல்லது குடும்ப உறவே இல்லாது பல பெண்களுடனும் உறவுகொள்ளவேண்டும் ??? காரணம் இவர்களிடம் இருக்கும் வெளிப்படைத் தன்மை. ஆணைப் பொறுத்தவரை எதைப்பற்றியுமே கவலை கொள்ளாதவர் தான் அதிகம். ஆனால் பெண்கள் அப்படி அல்ல.

 

எங்கள் பண்பாட்டு விழுமியமே எமது இனத்தை இத்தனைக்காவது காப்பாற்றி வைத்துள்ளது. எல்லாம் தெரிந்துதான் குடும்பம் நடத்தவேண்டும் என்றும் உச்சம் அடைவதுதான் ஒழுங்கான செக்ஸ் உறவு என்றும் எண்ணுவதே மடைத்தனம். ஆண்களைப் பொறுத்தவரை குடும்பத்தில் வேலைக்குச் சென்று உழைப்பது என்பதுதான் முக்கியமானது.  மற்றப்படி பிள்ளைகள் விடயம் கவனிப்பது, வீட்டு நிர்வாகம் இரண்டுமே பெண்களுக்கு எத்தனை பெரிய சுமையென்று உணராத அண்கள் தான் அதிகம். சிலர் தாமும் உதவுகிறார்கள் தான். ஆனால் பெரும்பான்மையாக பெண்ணின் தலையிலேயே எல்லாம் விழுகிறது.

 

பெண் செக்ஸ் விடயத்தில் பலத்தையும் அறியாமல் இருப்பதுதான் அண்களுக்கு நல்லது. ஆண்களும் தேவையற்றதைத் திணிக்காமல் விடுவது தான் இருவருக்கும்  நல்லது. இயல்பாக ஆணும் பெண்ணும் இணைவதுதானே மகிழ்வு தருவதே தவிர உச்சம் அடையாவிட்டால் குடி முழுகியா போகப் போகிறது????

 


சுமே.. இது பெண்களுக்கான  'அறிவூட்டல்' திரி போல கிடக்கு! :D

 

பெண்களுக்கு அறிவூட்டல் என்று கடைசியில் ஆண்கள் துணி துண்டைக் காணமல் ஓடவேண்டிவரப்போகுது :D:lol:
 


இப்பிடியான திரியல் திறந்து கிடந்தா எல்லாரும் ஓட்டத்தான் செய்வினம், உதுக்கே கூச்சப்பட்டால், உந்த கணொளியின் முடிவில் ஐ-ரிவி அந்தரங்கம் நிகழ்சியின் பெண் அறிவிப்பாளரும் (பச்சை கரைவச்ச சேலை உடுத்த பெண்), வைத்தியரும், மிகவும் அழகாகவும், வெளிப்படையாகவும், தெளிவாகவும் விவரிக்கின்றனர்; இப்படி ஒரு விளக்கம் இருந்திருந்தால், கடந்த பல வருடங்களா எந்த பெண்ணை பார்த்தாலும் இந்த நினைப்பால மனம் அலைபாஞ்சிருக்காது, மனைவி சொல்வா, உந்த எண்ணங்கள் இல்லாட்டி, நீங்கள் படிப்பில் எங்கேயோ போயிருப்பியள் என்று. சிறிதளவேனும், இந்த விடையத்தின் விளக்கமின்மையும், எனது புங்குடுதீவு சகோதரியின் படுகொலைக்குகாரணமாக இருந்திருக்கலாம்.

 

உனை நீ அறி

 

மேற்கத்தைய நாடுகளில் இதைவிடக் கொடுமையான நிகழ்வுகள் பலதினமும்  நடந்துகொண்டு இருப்பதை நீங்கள் அறியவில்லையோ ????
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாழ்வியல் முறையில் சில விடயங்களை இலைமறை காயாக வைத்தது பல நன்மைக்குத்தான். வாழ்வில் சுவையான உணவு உண்பதுபோல்தான் செக்ஸ் உம். அதை நாகரிக உலகம் எதோ தமக்குத் தான் எல்லாம் தெரிந்ததுபோல் ஊதிப் பெருக்கி தம் வியாபாரத்துக்கும் தம் வாழ்வியலை நியாயப்படுத்தவுமே பலவிடயங்களை பொதுவெளியில் உலவ விடுவது.

 

இதில் பதிவு போடுவதால் மட்டும் ஒருவர் தம் மனைவியைத் திருப்திப்படுத்துவாரா என்றால் இல்லை. செக்ஸ் இல்லாவிட்டால் வாழ்வே என்னும் நிலைக்கு இப்போதைய சமூகம் வந்துவிட்டதற்கு இப்படியான அருவருக்கத்தக்க பதிவுகளும் வீடியோக்களுமே காரணம். மேற்கத்தைய சமுதாயம் எம் இனத்தை விட இவையெல்லாவற்றையும் கற்று வைத்திருந்தும் ஏன் குடும்ப வாழ்வை குறுகிய காலத்தில் முடித்துக்கொண்டு இன்னொரு பெண்ணிடம் போகவேண்டும் ???? அல்லது குடும்ப உறவே இல்லாது பல பெண்களுடனும் உறவுகொள்ளவேண்டும் ??? காரணம் இவர்களிடம் இருக்கும் வெளிப்படைத் தன்மை. ஆணைப் பொறுத்தவரை எதைப்பற்றியுமே கவலை கொள்ளாதவர் தான் அதிகம். ஆனால் பெண்கள் அப்படி அல்ல.

 

எங்கள் பண்பாட்டு விழுமியமே எமது இனத்தை இத்தனைக்காவது காப்பாற்றி வைத்துள்ளது. எல்லாம் தெரிந்துதான் குடும்பம் நடத்தவேண்டும் என்றும் உச்சம் அடைவதுதான் ஒழுங்கான செக்ஸ் உறவு என்றும் எண்ணுவதே மடைத்தனம். ஆண்களைப் பொறுத்தவரை குடும்பத்தில் வேலைக்குச் சென்று உழைப்பது என்பதுதான் முக்கியமானது.  மற்றப்படி பிள்ளைகள் விடயம் கவனிப்பது, வீட்டு நிர்வாகம் இரண்டுமே பெண்களுக்கு எத்தனை பெரிய சுமையென்று உணராத அண்கள் தான் அதிகம். சிலர் தாமும் உதவுகிறார்கள் தான். ஆனால் பெரும்பான்மையாக பெண்ணின் தலையிலேயே எல்லாம் விழுகிறது.

 

பெண் செக்ஸ் விடயத்தில் பலத்தையும் அறியாமல் இருப்பதுதான் அண்களுக்கு நல்லது. ஆண்களும் தேவையற்றதைத் திணிக்காமல் விடுவது தான் இருவருக்கும்  நல்லது. இயல்பாக ஆணும் பெண்ணும் இணைவதுதானே மகிழ்வு தருவதே தவிர உச்சம் அடையாவிட்டால் குடி முழுகியா போகப் போகிறது????

 

 

பெண்களுக்கு அறிவூட்டல் என்று கடைசியில் ஆண்கள் துணி துண்டைக் காணமல் ஓடவேண்டிவரப்போகுது :D:lol:

 

 

மேற்கத்தைய நாடுகளில் இதைவிடக் கொடுமையான நிகழ்வுகள் பலதினமும்  நடந்துகொண்டு இருப்பதை நீங்கள் அறியவில்லையோ ????

 

 

சரி பிழைகளுக்கு  

ஒரு பெண் இவ்வளவு எழுத முன்வந்ததே பெரிய வெற்றி தானே...

 

இங்கு பலரது கருத்தும்  எதற்காக  உச்சத்தை மறந்து மறைச்சு வாழணும் என்பதாகவே இருக்கிறத

அதற்கு சுமேயின் கருத்துடன் உடன்படுகின்றேன்

இது பற்றி  முன்பும் இங்கு எழுதியுள்ளேன்.

கடைசியில் ஆண்கள் துணி துண்டைக் காணமல் ஓடவேண்டிவரப்போகுது :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாழ்வியல் முறையில் சில விடயங்களை இலைமறை காயாக வைத்தது பல நன்மைக்குத்தான். வாழ்வில் சுவையான உணவு உண்பதுபோல்தான் செக்ஸ் உம். அதை நாகரிக உலகம் எதோ தமக்குத் தான் எல்லாம் தெரிந்ததுபோல் ஊதிப் பெருக்கி தம் வியாபாரத்துக்கும் தம் வாழ்வியலை நியாயப்படுத்தவுமே பலவிடயங்களை பொதுவெளியில் உலவ விடுவது.

 

இதில் பதிவு போடுவதால் மட்டும் ஒருவர் தம் மனைவியைத் திருப்திப்படுத்துவாரா என்றால் இல்லை. செக்ஸ் இல்லாவிட்டால் வாழ்வே என்னும் நிலைக்கு இப்போதைய சமூகம் வந்துவிட்டதற்கு இப்படியான அருவருக்கத்தக்க பதிவுகளும் வீடியோக்களுமே காரணம். மேற்கத்தைய சமுதாயம் எம் இனத்தை விட இவையெல்லாவற்றையும் கற்று வைத்திருந்தும் ஏன் குடும்ப வாழ்வை குறுகிய காலத்தில் முடித்துக்கொண்டு இன்னொரு பெண்ணிடம் போகவேண்டும் ???? அல்லது குடும்ப உறவே இல்லாது பல பெண்களுடனும் உறவுகொள்ளவேண்டும் ??? காரணம் இவர்களிடம் இருக்கும் வெளிப்படைத் தன்மை. ஆணைப் பொறுத்தவரை எதைப்பற்றியுமே கவலை கொள்ளாதவர் தான் அதிகம். ஆனால் பெண்கள் அப்படி அல்ல.

 

எங்கள் பண்பாட்டு விழுமியமே எமது இனத்தை இத்தனைக்காவது காப்பாற்றி வைத்துள்ளது. எல்லாம் தெரிந்துதான் குடும்பம் நடத்தவேண்டும் என்றும் உச்சம் அடைவதுதான் ஒழுங்கான செக்ஸ் உறவு என்றும் எண்ணுவதே மடைத்தனம். ஆண்களைப் பொறுத்தவரை குடும்பத்தில் வேலைக்குச் சென்று உழைப்பது என்பதுதான் முக்கியமானது.  மற்றப்படி பிள்ளைகள் விடயம் கவனிப்பது, வீட்டு நிர்வாகம் இரண்டுமே பெண்களுக்கு எத்தனை பெரிய சுமையென்று உணராத அண்கள் தான் அதிகம். சிலர் தாமும் உதவுகிறார்கள் தான். ஆனால் பெரும்பான்மையாக பெண்ணின் தலையிலேயே எல்லாம் விழுகிறது.

 

பெண் செக்ஸ் விடயத்தில் பலத்தையும் அறியாமல் இருப்பதுதான் அண்களுக்கு நல்லது. ஆண்களும் தேவையற்றதைத் திணிக்காமல் விடுவது தான் இருவருக்கும்  நல்லது. இயல்பாக ஆணும் பெண்ணும் இணைவதுதானே மகிழ்வு தருவதே தவிர உச்சம் அடையாவிட்டால் குடி முழுகியா போகப் போகிறது????

 

 

பெண்களுக்கு அறிவூட்டல் என்று கடைசியில் ஆண்கள் துணி துண்டைக் காணமல் ஓடவேண்டிவரப்போகுது :D:lol:

 

 

மேற்கத்தைய நாடுகளில் இதைவிடக் கொடுமையான நிகழ்வுகள் பலதினமும்  நடந்துகொண்டு இருப்பதை நீங்கள் அறியவில்லையோ ????

 

 

துணிவுடன் இந்த விசயம் குறித்து எழுத வந்ததுக்கு பாராட்டுக்கள். நீங்கள் வாழ்ந்த, வளர்ந்த உலகம் வேறு. 
 
உங்களைப் போல நமது பிள்ளைகள் இருக்கப் போவதில்லை. அவர்களுக்கு பாடசாலைகளில் எல்லாம் புட்டுப் புட்டு வைக்கிறார்கள். எமது பல தாய், தந்தையருக்கு, பாடசாலைகளில், எவ்வளவு வரை சொல்லிக் கொடுகிறார்கள் என்பதே தெரியாது.
 
விறைப்பு, உச்சம் அது தொடர்பான பாலியல் கோளாறுகள் எல்லாமே அங்கிருந்து வந்த எமது பெண்களிலும் பார்க்க, அவர்களது பிள்ளைகளுக்கு அதிகமாகவே புரிகிறது.
 
இங்கே பாலியல் ரீதியாக பலவீனமான வெள்ளை இன ஆண்கள், அவர்கள் சார்ந்த பெண்களால் நிராகரிக்கப் பட்டு, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஏன் நம்மவர்கள்  என பெண்களை தேடுகிறார்கள். காரணம் இரண்டு: ஒன்று அவர்கள் உச்சம் இல்லாவிடில் குடியா முழுக்கக் போகின்றது என நினைப்பது அடுத்து இங்கே வர ஒரு வழி.
 
பெண் செக்ஸ் விடயத்தில் பலத்தையும் அறியாமல் இருப்பதுதான் அண்களுக்கு நல்லது. ஆண்களும் தேவையற்றதைத் திணிக்காமல் விடுவது தான் இருவருக்கும்  நல்லது.
 
உண்மைதான். ஆனால் எல்லா பெண்களும் அவ்வாறு நினைக்காமல் இருப்பதால் தான், விவாகரத்து,  களவொழுக்கம், புதிய துணை தேடல் அதிகரிக்கின்றது.
 
இதன் காரணமாகவே பெண்களை மத ரீதியாக ஒடுக்கி வைக்க முனைந்தார்கள். முனைகிறார்கள். கற்புநெறி, முகத்தினை திரை கொண்டு மூடுதல், ஆண் துணை இன்றி வெளியே செல்லாமை என பல விடயங்கள் சொல்ல முடியும்.
 
ஒன்று மட்டும் நிச்சயம். ஆன்மிகம் கொண்டு மனிதனை, மிருகங்களிடம் இருந்து, பாலியல் ரீதியான ஒழுக்கவியலில்,வேறு படுத்தி வைத்திருந்தார்கள். இந்த ஆன்மிக நம்பிக்கை குறையும் மேலை நாடுகளில் மிக மோசமான, நீங்கள் சொல்லும் சீரழிவுகள் நடக்கின்றன.
 
எம்மத்தியிலும் விரைவில் வரலாம்..  :rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனப்பா எங்கன்ட திருவள்ளுவர் இரண்டு வரியில் இந்த விடயம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையோ? ஆர்கசம் கண்டோரே வாழ்வார் மற்றோர்........:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனப்பா எங்கன்ட திருவள்ளுவர் இரண்டு வரியில் இந்த விடயம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையோ? ஆர்கசம் கண்டோரே வாழ்வார் மற்றோர்........ :D

 

ஆர்கசம் கண்டோரே வாழ்வார் மற்றோர் விரைந்தே காண்பார் ஆகாசம்......  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அன்ரி,

பெண் எழுத படிக்க தெரியாமல் இருப்பதுதான் ஆண்களுக்கு நல்லது.

பெண் பள்ளிக்கூடம் போகாமல் இருப்பதுதான் ஆண்களுக்கு நல்லது.

பெண் பல்கலைக் கழகம் போகாமல் இருப்பதுதான் ஆண்களுக்கு நல்லது.

பெண் அரசியலில் ஈடுபடாமல் இருப்பதுதான் ஆண்களுக்கு நல்லது.

இப்படியான சிந்தனையின் இன்னொரு பரிமாணமே

"பெண் செக்ஸ் விடயத்தில் பலத்தையும் அறியாமல் இருப்பதுதான் அண்களுக்கு நல்லது". எனும் உங்கள் கூற்று.

ஆண்களுக்கு நல்லது நடக்க படைக்கப் பட்ட போகப் பொருளில்லை பெண். உச்சம் உட்பட ஆண்களுக்கு உள்ள அத்தனை ஆசாபாசங்களும் அவளுக்கும் உண்டு. பெண்தான் தனக்கு எது நல்லது என தெரிய வேண்டுமே தவிர, ஆணுக்கு நல்லமா இல்லையா என்பதல்ல தீர்மானிக்கும் அளவிடை.

உலகில் எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு, உடை உறையுளுக்கு அடுத்த அத்தியாவசியம் செக்ஸ் ( ஏ செக்சுவல்ஸ் என்போரை தவிர) அப்படி இருக்கையில் தன் வாழ்நாள் கூட தன்னோடு பயணிக்கும் ஒருத்தி திருப்தி அடைந்தாளா? இல்லையா அதுக்கு நான் எப்படி உதவலாம் என்ற சிந்தனையே அற்று வாழும் மனிதன் எப்படிப்பட்ட சுயநலமி?

பெஞ்சாதியை சோறு போடாமல் பட்டினி போடுவதற்கும் இதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

குடியா மூழ்கிப் போகும் என்கிறீர்கள்?

மனைவி உச்சம் அடைவதற்கு உதவினால் ஆணுக்கு என்ன கப்பலா மூழ்கிப் போகும்.

குடிமூழ்கும் கதைகளை, வேலி பாயும் கதைகளை எம் சமூகத்தில் புலத்திலும் நிலத்திலும் நீங்கள் காணவில்லையா? வீட்டில் கவனிப்பு இல்லாத்துதானே இதன் காரணம்?

மேற்குலகு என்கிறீர்கள் - நாம் எங்கே வாழ்கிறோம்? கேப்பாபுலவிலா? தம்மை சுற்றி இருக்கும் கலாச்சாரத்தில் இருந்து போலியா ஒதுங்கி வாழ்வது போல வீட்டில் படம் காட்டலாம், ஆனால் வெளியில்?

ஊரிலும் நீங்கள் நினைக்குமாப் போல இல்லை. கொழும்பில் இப்போ பெண்கள் மத்தியில் ஹாட் டாபிக் செக்ஸ்டாய் இண்டெர்நெட்டில் ஓடர் செய்வது பற்றித்தான். இன்னும் ரெண்டு வருடத்தில் யாழிலும் இதுவே நிலை.

70,80 களில் இருந்த உலகமில்லை 2015 இல் இருப்பது.

கலாச்சார மாற்றம் என்பது கட்டுக்கடங்காத காட்டாறு, தலிபான், விஸ்வ இந்து, அல்கொமெய்ய்னி, போப்பாண்டவர், ஞானசார தேரர் என எந்தப் பெரிய மரத்தை அதன் குறுக்கே வெட்டிப் போட்டாலும், அடித்து துவம்சம் பண்ணியபடி ஓடிக்கொண்டேதானிருக்கும்.

Link to comment
Share on other sites

உந்த வீடியோ ஒரு அறிவியல் சார்ந்ததாத தெரியவில்லை ஒரு வித வியாபார யுக்தி தான் .

உந்த வீடியோ முடிய இருக்கும் அந்தரங்கம் வீடியோ சொல்லிவேலையில்லை  தொகுப்பாளினி நல்ல முன்னேற்றம் . :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே... திறந்த மனதுடன் தீட்டிய கருத்துக்களுக்கு நன்றி!

 

என்னிடம் சில கேள்விகள்...!

 

எதை எமது 'கலாச்சாரம்' என்று கருதுகின்றீர்கள்? 

 

எமது கலாச்சாரத்தில் 'பாலியல் விழிப்புணர்வு'  என்பது என்றும் மறை பொருளாக இருந்ததில்லை! அதே வேளை, அது திறந்த புத்தகமாகவும் இருந்ததில்லை!

 

எமது கோவில்களின் அமைப்பில்.. அதன் கோபுரங்களின் ஒவ்வொரு தளங்களும், அதில் உள்ள சிற்பங்களின் அமைப்புக்களும்.. பாலியலைப் போதிக்கின்றன!

 

கோவில் வீதிகளில் 'தேவதாசி' முறை அறிமுகப்படுத்தப் பட்டது.. இது 'மனநிலை பிறழ்ந்தவர்கள்', சில ஊனங்களால் பாதிக்கப்பட்டோர்' போன்றவர்களுக்கு. ஒரு வடிகால் அமைத்துக் கொடுத்ததுடன், பல ஆடவர்களினது 'பாலியல்' தேவையையும் ஈடு செய்தது!

 

தவிர வள்ளுவனும் 'பாலியல் கலவி' என்பது எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்குச் சில அதிகாரங்களை ஒதுக்கி வைத்திருப்பது.. எமது கலாச்சாரத்தில் 'பாலியல் கல்வி' ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றது என ஏற்றுக்கொள்ளலாம் என எண்ணுகின்றேன்!

 

உங்களிடம் சில கேள்விகள்...!

 

ஒரு கணவன் என்பவன் பல குடும்பங்களில்  ஒரு சிறைப்பிடிக்கப் பட்டவனைப் போல வாழ்வது எமது சமூகத்தில் உள்ளது! உதாரணமாகத் தம்பதிகள் உறங்கும் கட்டிலிலேயே குழந்தையும் (குழந்தைகளும்) உறங்குவது என்பது எமது கலாச்சாரத்தில் 'பிள்ளைகளுக்குள்' ஒரு பிணைப்பை உருவாக்குவதாகக் கருதப்படுகின்றது! எனினும்.. கணவனுடனான 'பிணைப்பு' இங்கு அறுபட்டுப் போவதை ஒருவரும் கணக்கிலெடுப்பதில்லை!

 

அவனும்.. சமூகம், குழந்தைகள் , குடும்பம் என்ற காரணங்களுக்காக.. தனது தேவைகளைத் தியாகம் செய்வதும் உண்டு! தனது தேவைகள் நிறைவேறாதவிடத்து .. அவனது வீட்டுக்கு வெளியிலான நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதை யாரும் கணக்கில் எடுப்பதில்லை!

 

மற்றைய பெண்கள் மீது .. அவர்களது அங்கங்கள் மீதான வெறித்தனமான நிலை குத்திய பார்வை..தவறுதலாகத் தொடுவது போன்ற 'உரசல்கள்' போன்றவை இப்படியான எமது 'மறை பொருளாக' வைத்திருப்பதின் விளைவுகளே! இந்தியா, இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான், மற்றும் அரபு நாடுகளிலிருந்து வருபவர்களாலேயே, பெரும்பாலான 'பாலியல் வன்முறைக் குற்றங்கள்' மேல் நாடுகளில் மேற் கொள்ளப்படுகின்றன! மனைவி கணவனைக் கொல்வதும்.. கணவன் மனைவியைக் கொல்வதும்,  Domestic Violence  முறைப்பாடுகள் அதிகமாக நடைபெறுவதும் எமது சமூகத்தினரிடமே அதிகமாக உள்ளது! இவ்வளவும், பூசி மெழுகப்பட்டு.. மறைக்கப்பட்டவைகளை விடவும் வெளியே வருகின்ற சம்பவங்கள் மட்டுமே!

 

எங்கே தவறு உள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

 

ஒரு கருத்தாடலுக்காகக் கேட்கிறேன்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனப்பா எங்கன்ட திருவள்ளுவர் இரண்டு வரியில் இந்த விடயம் பற்றி ஒன்றும் சொல்லவில்லையோ? ஆர்கசம் கண்டோரே வாழ்வார் மற்றோர்........ :D

ஆர்கசம் கண்டோரே வாழ்வார், காணாதார்,

பூர்வீகம் பேசும் பதர்!

 

 

புத்தனுக்கு மேலேயிருக்கிற குறள் தெரியாமல் போனதை நினைக்க   மிகவும் ஆச்சரியமாகக் கிடக்கு! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளே..... "ஆர்காசம்" என்பதற்கு, நல்ல தமிழ் வார்த்தை.... ஒண்டை கண்டு பிடியுங்களேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளே..... "ஆர்காசம்" என்பதற்கு, நல்ல தமிழ் வார்த்தை.... ஒண்டை கண்டு பிடியுங்களேன். :D

நானும் மினக்கெட்டுத் தேடிப்பார்த்ததில் 'உச்சம்' என்ற வார்த்தை தான் 'திரும்பத் திரும்ப' வருகின்றது!

 

மற்ற எல்லாத் தளங்களும் 'ஆர்கசம்' என்ற வார்த்தையைத் தான் தமிழில் உபயோகிக்கின்றார்கள்!

 

ஒரு வேளை.. சொக்கலிங்கம் மாஸ்டர் எங்களுக்குச் சொல்லித் தராமல் மறைச்சுப் போட்டாரோ தெரியாது! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மினக்கெட்டுத் தேடிப்பார்த்ததில் 'உச்சம்' என்ற வார்த்தை தான் 'திரும்பத் திரும்ப' வருகின்றது!

மற்ற எல்லாத் தளங்களும் 'ஆர்கசம்' என்ற வார்த்தையைத் தான் தமிழில் உபயோகிக்கின்றார்கள்!

ஒரு வேளை.. சொக்கலிங்கம் மாஸ்டர் எங்களுக்குச் சொல்லித் தராமல் மறைச்சுப் போட்டாரோ தெரியாது! :o

ஆ, அப்ப ராசகோபால் வாத்தியாரிட்ட படக்கேல்லை போல..

அந்தாள் எல்லாம் அப்பவே புட்டுப் புட்டு வைச்சதால தான் நாமலும், எங்கடா மடக்கலாம் எண்டு சைக்கிளில திரிஞ்ச பெட்டையலட்ட தப்பிப் பிழைத்தோம்.

நெடுக்கருக்கு டபிள் ஸ்ரோங் ஊசி, கலியாணமே வேண்டாம் எண்டு நிற்கிறார், கண்டியலே. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே... திறந்த மனதுடன் தீட்டிய கருத்துக்களுக்கு நன்றி!

 

என்னிடம் சில கேள்விகள்...!

 

எதை எமது 'கலாச்சாரம்' என்று கருதுகின்றீர்கள்? 

 

எமது கலாச்சாரத்தில் 'பாலியல் விழிப்புணர்வு'  என்பது என்றும் மறை பொருளாக இருந்ததில்லை! அதே வேளை, அது திறந்த புத்தகமாகவும் இருந்ததில்லை!

 

எமது கோவில்களின் அமைப்பில்.. அதன் கோபுரங்களின் ஒவ்வொரு தளங்களும், அதில் உள்ள சிற்பங்களின் அமைப்புக்களும்.. பாலியலைப் போதிக்கின்றன!

 

கோவில் வீதிகளில் 'தேவதாசி' முறை அறிமுகப்படுத்தப் பட்டது.. இது 'மனநிலை பிறழ்ந்தவர்கள்', சில ஊனங்களால் பாதிக்கப்பட்டோர்' போன்றவர்களுக்கு. ஒரு வடிகால் அமைத்துக் கொடுத்ததுடன், பல ஆடவர்களினது 'பாலியல்' தேவையையும் ஈடு செய்தது!

 

தவிர வள்ளுவனும் 'பாலியல் கலவி' என்பது எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்குச் சில அதிகாரங்களை ஒதுக்கி வைத்திருப்பது.. எமது கலாச்சாரத்தில் 'பாலியல் கல்வி' ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றது என ஏற்றுக்கொள்ளலாம் என எண்ணுகின்றேன்!

 

உங்களிடம் சில கேள்விகள்...!

 

ஒரு கணவன் என்பவன் பல குடும்பங்களில்  ஒரு சிறைப்பிடிக்கப் பட்டவனைப் போல வாழ்வது எமது சமூகத்தில் உள்ளது! உதாரணமாகத் தம்பதிகள் உறங்கும் கட்டிலிலேயே குழந்தையும் (குழந்தைகளும்) உறங்குவது என்பது எமது கலாச்சாரத்தில் 'பிள்ளைகளுக்குள்' ஒரு பிணைப்பை உருவாக்குவதாகக் கருதப்படுகின்றது! எனினும்.. கணவனுடனான 'பிணைப்பு' இங்கு அறுபட்டுப் போவதை ஒருவரும் கணக்கிலெடுப்பதில்லை!

 

அவனும்.. சமூகம், குழந்தைகள் , குடும்பம் என்ற காரணங்களுக்காக.. தனது தேவைகளைத் தியாகம் செய்வதும் உண்டு! தனது தேவைகள் நிறைவேறாதவிடத்து .. அவனது வீட்டுக்கு வெளியிலான நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதை யாரும் கணக்கில் எடுப்பதில்லை!

 

மற்றைய பெண்கள் மீது .. அவர்களது அங்கங்கள் மீதான வெறித்தனமான நிலை குத்திய பார்வை..தவறுதலாகத் தொடுவது போன்ற 'உரசல்கள்' போன்றவை இப்படியான எமது 'மறை பொருளாக' வைத்திருப்பதின் விளைவுகளே! இந்தியா, இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான், மற்றும் அரபு நாடுகளிலிருந்து வருபவர்களாலேயே, பெரும்பாலான 'பாலியல் வன்முறைக் குற்றங்கள்' மேல் நாடுகளில் மேற் கொள்ளப்படுகின்றன! மனைவி கணவனைக் கொல்வதும்.. கணவன் மனைவியைக் கொல்வதும்,  Domestic Violence  முறைப்பாடுகள் அதிகமாக நடைபெறுவதும் எமது சமூகத்தினரிடமே அதிகமாக உள்ளது! இவ்வளவும், பூசி மெழுகப்பட்டு.. மறைக்கப்பட்டவைகளை விடவும் வெளியே வருகின்ற சம்பவங்கள் மட்டுமே!

 

எங்கே தவறு உள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

 

ஒரு கருத்தாடலுக்காகக் கேட்கிறேன்! :lol:

 

இதற்குக் கொஞ்சம் விரிவாக எழுதவேண்டி இருப்பதால் நாளை பதில் தருகிறேன் புங்கை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளே..... "ஆர்காசம்" என்பதற்கு, நல்ல தமிழ் வார்த்தை.... ஒண்டை கண்டு பிடியுங்களேன். :D

 

வீரிய உச்சமடைதல். (அப்படின்னு தான் தமிழில் படிப்பிச்சாங்க) :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்காசத்திற்கு செந்தமிழ் எனக்கு தெரியும் எழுதமாட்டேன்.....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரிய உச்சமடைதல். (அப்படின்னு தான் தமிழில் படிப்பிச்சாங்க) :lol::icon_idea:

 

 

ராசகோபால் வாத்தியாரிட்ட ??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்களி, வெதுப்பகம், சுழியம் இப்படி லுச்சாதனமாய் ஒன்றை கண்டு பிடிச்சிட்டா போச்சு :)

அதை ஆர்கசம் என்றே சொல்லுவோமே.

புத்தர்,

"எவ்வினை செய்தார்க்கும் உய்வுண்டாம்,

உய்வில்லை தன்மனைக்கு ஆர்காசம் தராதமகற்கு"

என்கிறது லொல்லுவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளே..... "ஆர்காசம்" என்பதற்கு, நல்ல தமிழ் வார்த்தை.... ஒண்டை கண்டு பிடியுங்களேன். :D

 

இதுக்கு ஏன் புதுசாய் கண்டு பிடிக்க வேண்டும்...! ஏற்கனவே உள்ளதுதான்..!

 

ஆர்கசம் = மதனநீர். ( அட 40/45 வருடத்துக்கு முன் ஒளிச்சுப் படித்த சறோஜாதேவியின் புத்தகத்திலுள்ள அருஞ்சொற்பதங்கள் இப்ப எப்படியெல்லாம் உதவுது , ஒருபோதும்கல்வி வீணாகாது).

 

மேலுதடுகள் = நிடதம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.