Jump to content

நிருமாநிசனின் பேட்டி - அண்மைய லண்டன் சந்திப்புக்கள் தொடர்பாக


Recommended Posts

அண்ணைமாரே!

இங்கு நீங்கள்/நாங்கள் ஏன் கொதிக்கிறோம், குதிக்கிறோம்? உண்மைச்செய்திகள் உடஉடனே வெளியே வருகின்றமையால்!

ஆனால் அங்கோ(தாயகத்தில்) இதயங்களால் ஒன்றுபட்டு விட்ட "பின்வாசல்", சிங்கக்கொடி தாங்கிய திருமலை சிங்கன் போன்றோரின் கூத்துக்கள் எல்லாம் வெளிவருவதில்லை. அங்கு ஊடகம் என்றால் அது உதயன் பத்திரிகைதான். உதயனை வைத்திருப்பது மாபியா சரவணபவன். உதயனில் எச்செய்திகள் வரவேண்டும், வரக்கூடாது என்பதனை மாபியாக்கள் வடிகட்டி விடுகிறார்கள்.

சொல்லப்போனால் புலம்பெயர் எம்மவர்களின் ஆதங்கங்கள் ஒரு கை ஓசையாகவே கேட்கப்போகின்றனவா?

Link to comment
Share on other sites

CTR,நிமோ ,தேவா 

புல்லரிக்குது .எழுதினால் யாழே மணக்கும் .

Link to comment
Share on other sites

லண்டன் பேச்சு தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட் சபை விமர்சனம்!

June 19, 2015

லண்டன் பேச்சு தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட் சபை விமர்சனம்! 0

by tmdas5@hotmail.com • TGTE

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களுக்காக பேசுவதற்கு உலக தமிழர் பேரவைக்கு மக்கள் ஆணையில்லை என்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட்சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்றத்துக்கு செனட் சபையினால் அறிவுறுத்தல் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

லண்டனில் அண்மையில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியமை தொடர்பிலேயே இந்த குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இதில், இலங்கைக்கு வெளியில் வாழும் சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப யோசனைகளையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

1). இரண்டு மடங்கானாலும், எமது இலக்குகளில் இருந்து மாறிச்செல்லக்கூடாது.

-இலங்கையில் குற்றமிழைத்தோரை ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

-தமிழீழ இறைமைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

2). இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு அவசர தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியம். எனினும் அதனைக்கொண்டு தமிழர்களை இலங்கை அரசாங்கம் பிரித்து விடுவதற்கு வழியேற்படுத்திவிடக்கூடாது. எங்களை பலவீனப்படுத்தி அதன் மூலம் அவர்கள் கூறுகின்றதை ஏற்றுக்கொள்ள எங்களை உந்துவதற்கு இடமளிக்கக்கூடாது.

3). உடனடி தேவை என்ற அடிப்படையில் அவை, தனியாக நோக்கப்பட்டு அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர வேண்டும். எனினும் அது நாம் ஏற்கனவே இழந்துள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறைமை என்பவற்றுடன் இணைக்கப்படக்கூடாது.

4.) இலங்கை அரசாங்கத்துடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அல்லது தெரிவுச் செய்யப்படாத அமைப்புக்கள், தமிழீழ மக்களின் எதிர்காலம் தொடர்பில் நடத்தும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பொது விவாதம் ஒன்றைக்கோர வேண்டும் என்றும் செனட்சபை கோரியுள்ளது.

அ) எனவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், இலங்கையின் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு உட்பட்ட அனைத்து நீதி மறுப்புகளுக்கும் எதிராக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்.

ஆ) சர்வதேச ரீதியாக இலங்கையின் மனித உரிமைமீறல் நடவடிக்கைகள் தொடர்பில் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வில் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இ) லண்டனில் பேசப்பட்ட புனர்வாழ்வு விடயங்களில் உண்மைதன்மை இருக்குமாயின் அதற்கு பங்களிக்க வேண்டும்.

ஈ) இலங்கைக்குள் சர்வதேச மன்னிப்புசபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிகள் குழு என்பவற்றை அனுமதிக்குமாறு கோர வேண்டும்.

உ) இலங்கையின் பொருட்களை பகிஸ்கரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அத்துடன் ஈழத்தமிழர்கள் எதிர்கால பேச்சுக்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஓரங்கட்டப்படுவதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

விவாதிக்கப்படவேண்டிய கருத்துக்கள்

1) புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு அதிகாரம் அளிக்கப்படாமை

2) சொந்தக்கட்சியின் முழு ஆதரவில்லாமல், தமிழ்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் லண்டன் பேச்சு தொடர்பில் பொதுஅறிக்கை ஒன்றை வெளியிட்டமை.

3) அரசியல் தீர்வு குறித்து பேசப்படாமல், நம்பிக்கையை கட்டியெழுப்புதல் நடவடிக்கை பெரும்பாலும் நிதிசேகரிப்பை கருத்திற்கொண்டதாகும்

4) இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையானது தமிழர்களை பிழையான வழிக்கு இட்டுச்செல்லும் வகையில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை அழைத்து பேசியமை, செப்டெம்பர் மாத ஜெனீவா அமர்வில், இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணையை பிந்திப்போடுவதற்கான முயற்சியாகும்.

5) லண்டன் பேச்சுவார்த்தை, சிறிசேன அரசாங்கத்துக்கு எதிர்வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்புக்களுக்கு உதவும்

6) புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான பிரதிநிதிகள் என்று தம்மை அழைப்பவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லர்.

7) சிறிசேன அல்லது விக்கிரமசிங்க ஆகியோர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனையை நிராகரித்தால், ஐக்கிய நாடுகள் பேரவைக்கு எதுவும் செய்ய முடியாது.

8) தமிழர்களின் சுயநிர்யணத்துக்கான வாக்கெடுப்பு, ஐக்கிய நாடுகளின் தலைமையில் இலங்கை படையினருக்கு பதிலாக சர்வதேச படையினர் நிலைநிறுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும்

9) “பயங்கரவாதிகள்”(தமிழர்களை) தாம் அழித்ததாக இலங்கை அரசாங்கம் கூறுமானால், பயங்கரவாதத்துக்கு தடைச்சட்டத்துக்கு எதிராக பேசும் அனைத்து மனித உரிமை அமைப்புக்களும் தமது நிலைப்பாட்டில் இருந்து விலக வேண்டியேற்படும். அவ்வாறெனில் பயங்கரவாதிகள் என்போர் யார்? யாருக்காக அந்த சட்டம் அமுலாக்கப்படும் என்ற இரட்டைநிலைக் குறித்து ஆராயவேண்டும்.

10) போர்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணை என்பது ஏற்கமுடியாது.

11) தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை தொடர்பில் சிறிசேன அரசாங்கம் நம்பிக்கையான எதனையும் செய்யவில்லை.

12) வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய இனப்படுகொலை என்ற யோசனையை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது தமிழர் பிரச்சினையை தீர்க்க முதலாவது அங்கீகாரமாக இருக்கலாம். அத்துடன் இது இலங்கையின் அரசியல் அமைப்பினது 6வது திருத்தத்தை மீறும் செயற்பாடாகாது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட் சபை உறுப்பினர்கள்-

1) ராம்சே கிளார்க்( அமரிக்காவின் முன்னால் சட்டமா அதிபர்)
2) ரொபட் எவான்ஸ்( ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்)
3) டேனியல் மாயன்( சூடான் மக்கள் விடுதலை இயக்கம்)
4) எம் மனோகரன்( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்-மலேசியா)
5) கிள்ளஸ் பிக்கியூஸ்( பிரான்ஸி;ன் சட்டத்தரணி)
6) டேவிட் மாட்டஸ்( கனடாவின் மனித உரிமை சட்டத்தரணி)
7) ரோய் செட்டி( தென்னாபிரிக்கா)
8) சத்தியா சிவராமன்( ஊடகவியலாளர்- இந்தியா)
9) பிரையன் செனவிரட்ன( சிங்கள மருத்துவர்- அவுஸ்திரேலியா)
10) உஸா ஸ்ரீஸ்கந்தராஜா(கனடாவின் எழுத்தாளர்)
11) சத்திஸ் முனியாண்டி( உலக தமிழ் காங்கிரஸ் செயலாளர்-மலேசியா)
12) நாகலிங்கம் ஜெயலிங்கம்( இலங்கை தமிழ் சங்க முன்னாள் தலைவர், உலக தமிழர் இணைப்பு குழுவின் முன்னாள் தலைவர்- அமெரிக்கா)
13) பேராசிரியர் சரஸ்வதி ராஜேந்திரன்- இந்தியா
14) தரணி சரன்( உலக தமிழ் அமைப்பின் முதல் தலைவர்- அமெரிக்கா)
15) ராஜரட்ணம் சுப்பிரமணியம்( கல்வியாளர்-கனடா)

 

சி ரி ஆர் வானொலி சி எம் ஆர் வானொலியின் கீழ்த்தான் இயங்குகின்றது.இவர்கள் எல்லாம் வியாபாரிகள் இவர்களிடம் தமிழ் தேசியம் கிடையாது.தற்போது கனடாவில் எந்த ஊடகமும் தேசியத்தை மதிக்கவில்லை.உலகத்தமிழர் தங்கள் பெயர் அழியக்கூடாது என்பதில் கவனத்துடன் இருக்கின்றனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு பரிஸில் என்ன நடந்தது.உண்மையான செயற்பாட்டாளற்கு இங்கேயும் இப்படியும் நடக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை தேர்தலில் வென்ற கூட்டமைப்பின் தலைவரால் எடுக்கப் பட்ட முடிவை, வெளிவிவகார பொறுப்பாளர் நடைமுறைப்படுத்துறார். இதை தேர்தலில் நிக்கவே ஆளில்லாமல் திண்டாடி, போட்டி இன்றி தேர்வாகியோரால் நடத்தப்படும் நட்டுக் கழண்ட அரசு விமர்சிப்பது காமெடியிலும் காமெடி.

 

நாட்டில் உங்கள் புலம்பலை யாரும் கண்டு கொள்வதில்லை. அங்கே இப்போ தமிழ் டெட் மன்னிக்கவும் தமிழ் நெட் உட்பட சகல காமெடித் தளங்களும் கிடைக்கிறது. மக்கள்தான் உவற்றை சீந்துவதும் இல்லை.

 

வேணுமெண்டால் புலியிட்ட அடிச்ச காசை கொண்டு ஒன்ணே முக்கால் பேப்பர் என்று ஒரு நாளிதழை யாழில் இலவசமாய் வெளியிடுங்களேன்?

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை தேர்தலில் வென்ற கூட்டமைப்பின் தலைவரால் எடுக்கப் பட்ட முடிவை, வெளிவிவகார பொறுப்பாளர் நடைமுறைப்படுத்துறார்.

அண்ணோய் சேகோ, ஏதோ உங்கடை பாட்டுக்கு அவிட்டு விடுகிறீர்கள், கேட்கிறவன் கேணையன் என்றால்(ஒன்று இரண்டு பார்சலுகள் ஓடி வந்து விசிலடிக்கும்), உங்கள் காட்டில் மழை!

1) மக்களால் அமோக ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்வாசல் சும் சும்?

2) பின்வாசல் எப்போ வெளிவிவகார பொறுப்பாளர் மட்டும் ஆனார்? உள்விவகாரம், சிரானி பண்டாரநாயக்கா விவகாரம், சந்திரிக்கா/மைத்திரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் வேண்டாம், உங்களை நம்புகிறோம் என்ரது ... இப்படி பல பல

3) அறளை பெயர்ந்த சிங்கக்கொடி ஏந்திய தமிழரசு கட்சி தலைவர், கூட்டமைப்புக்கு ஏனைய இச்சந்திப்பு தொடர்பாக அறிவித்தாரா? அதற்கு மேல் அங்கு மாவைக்கோ, சிறிதரனுக்கோ, அரியேந்திரன் போன்ற தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்/பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கும் தெரியாதாம்!

இன்று சிங்களத்தினால் 2010இற்கு சிங்களத்தினால் தமிழ் தலைவராக வளர்த்தெடுக்கப்படும் பின்வாசல் சும் சும், அறளை பெயர்ந்த சம்பந்தனை மிக சுலபமாக ஏமாற்றி தன் கூத்துக்களை ஆடுகிறார். 

யாராவது சிங்களத்தினால் வளர்த்தெடுக்கப்படும் தமிழ்த்தலைவர் பின்வாசல் சுமந்திரனின்டதமிழ் மக்களுக்கான உரிமைப்போராட்டத்தின் 2010இற்கு முன்னமான காத்திரமான பங்களிப்பை கூற முடியுமா? 2010இற்கு முன் பின்வாசல் எங்கிருந்தார்?

இப்பேச்சு வார்த்தை பின்வாசலினால் அறளைபெயர்ந்தவருக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இரகசியமாக, லண்டனில் நடாத்தவே திட்டமிடப்பட்டது. ஆனால் கசிந்து விட்டது. பின் என்ன?  டமிழ் மக்களின் அன்றாட பிரட்சனை பேச லண்டன் வந்தாராம்! நாம நம்பீட்டோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய்,

சோத்துப் பாசல் என்று திட்டுவது அர்ஜூனை. எனக்கு உமா சிவப்போ நீலமோ எண்டும் தெரியாது. அந்த குப்பாடிக் கூட்டத்துக்கும் எனக்கும் ஓர் தொடர்புமில்லை.

பிவாசு (அட அதுதாங்க பின் வாசல் சுமந்திரன்) கூட்டமைப்பினால் வெளிவிவகாரத்து நியமிக்கப் பட்டுள்ளார். சுரேஸ் ஊடக பேச்சாளர்.

யார் நியமித்தது? கூட்டமைப்புத்தான்.

தேத எல்லாத்தையும் பானு, ரமேஸ், சூசை, சொர்ணம், தீபனுக்குச் சொல்லி விட்டா செய்தார்? இல்லையே? சிலதை தமிழ் செல்வன் ஊடு, அல்லது பொட்டு ஊடு மட்டும் செய்யவில்லையா? அப்படித்தான் இதுவும். மங்களவும் கூட மைத்திரிக்கும் ரணிலுக்கும் மட்டுமே சொல்லி இருந்தார்.

 

2010 ற்கு முன் விக்கி, சுமந்திரன் போன்றவர்கள் அரசியல் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. காரணம் அப்போ தேதாவின் பேச்சுக்கு ஆமாம் சாமி போடுவோர்கு மட்டுமே இடமிருந்தது. அந்த கேவலம் கெட்ட அரசியலை இவர்கள் செய்ய விரும்பவில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சொல்லப்போனால் புலம்பெயர் எம்மவர்களின் ஆதங்கங்கள் ஒரு கை ஓசையாகவே கேட்கப்போகின்றனவா?

இதுதான் யதர்த்தம். தலைமை செயலகம், சர்வதேச த செ, ந க அ, நெடியவன் உள்பட்ட எல்லா புலவாளி (லு) களும், ஊரில் மக்களை பொறுத்தவரை செல்லாக் காசுகள். வெறும் கடையில்தான் 6 வருசமா டீ ஆத்துறீங்க என்பது ஜி ரி எப் க்கும் அடிகளாருக்கும் புரியதொடங்கியிருப்பது போல் உங்களுக்கும் இப்ப கொஞ்சம் புரிதல் ஏற்படுகுது போல இருக்கு. நல்ல அறிகுறி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.