Jump to content

எழுதிச் செல்லும் விதியின் கரங்கள்...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

030-1.jpg

 

 

வானம் கருக்கட்டத் தொடங்கியது!

ஒரு பிரசவத்துக்குத் தயாராகும் தாயின் முனகல்களைப் போன்று... மெல்லிய இடிச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின! வானத்திலிருந்து பூமியை நோக்கிய மின்னல்கள் கடல் நீரின் மேற்பரப்பில் பட்டுச் சைக்கிள் சக்கரங்களைப் போல உருளத் தொடங்கின!

'சூட்டி' தோளில் ஒரு அலவாங்கொன்றைச் சுமந்த படி கடற்கரையில் நடந்து வந்து கொண்டிருந்தான் !

கோவிலடிக் கேணியில் நீச்சல் பழகி, மழைக்காகக் கேணிக்கட்டில் ஏறி நின்ற எங்களுக்கு அவன் நடந்து வருவதைக் கண்டதும் எந்த விதமான ஆச்சரியமும் ஏற்படவில்லை! ஏனெனில் அவனது பட்டப் பெயரே 'மூளை சூட்டி".

அவனுக்கு அப்பா அம்மா வாய்த்த பெயர் 'பிறை சூடி'

என்னடா இந்தப் பேரைக் காவிக் கொண்டு சீவியம் முழுக்கத் திரிய என்னால முடியாது! அதால என்ர பேரை மாத்தப் போறன் என்று ஒரு நாள் அபிப்பிராயம் கேட்டவனுக்கு, நாங்களும் பல பெயர்களைப் பரிந்துரை செய்ய... டேய்.. நீங்கள் சொல்லுற பேரெல்லாம் இருக்கிறதை விடவும் மோசமாய்க் கிடக்கு எண்டு சொன்னவன் தானே 'சூட்டி' என்று தனது பெயரை மாற்றிக்கொண்டான்!

சரி.. இந்த இடிமுழக்கத்துக்குள்ள ஏன் கடலுக்குள்ள அலவாங்கோட இறங்கிறாய்?

டேய்.. மூளையைப் பாவியுங்கடா.. எண்டைக்குத் தான் திருந்தப் போறீங்களோ என்ற படி... இடி முழக்கத்துக்குப் 'பெரு நண்டு' வளையின்ர  வாசலுக்கு வந்து குந்தியிருக்கும்! பிறகென்ன.. அலவாங்கால கல்லைக் கிளப்ப.. அண்ணை என்னிட்ட அடைக்கலம் கேப்பார்! நீங்கெல்லாம் 'கடுக்காய்' பொறுகிறதுதுக்குத்  தான் சரி.. எண்டு கடலுக்குள் இறங்கியவன் பத்தே நிமிடத்தில் இரண்டு பெரு நண்டுகளுடன் கரைக்கு வந்தான்!

அன்றிலிருந்து... அவனிடம்  எங்களுக்கு ஒரு தனி மதிப்பு உருவாகியது என்னவோ உண்மை தான்!

௦௦௦௦௦                   ௦௦௦௦௦௦                    ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦       

                

இது நடந்து இருபது வருடங்களின் பின்னர் 'காலம்' எங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசைக்குத் துரத்தி விட்டது!

 

ஒரு சலவை இயந்திரமொன்றினுள் போட்டுத் துவைப்பது போல ஒவ்வொருவரையும் உருட்டிப் பிரட்டி, கொஞ்ச நஞ்சமிருந்த மண் வாடையையும் அகற்றி...சாயம் போன துணிகளாக ஆக்கி விட்டது!

ஒவ்வொருவருக்கும் புதிய விலாசங்கள்... புதிய சொந்தங்கள்..புதிய கோலங்கள் !

கால தேவனின் காற்று  எமது தலைமுறைக் காலத்தில் கொஞ்சம் புயலாகவே வீசி விட்டது!

பிறப்பால் சைவம் எனினும் எங்களிடம் மற்ற மதங்களை அணைக்கும் ஒரு பழக்கம் ஆழமாக வேரூண்டியுள்ளதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்! இது எதனால் ஏற்பட்டது என்பதை ஆராய்வதை விடவும்,,தொடர் இழப்புக்களைத் தொடர்ந்து சந்திப்பதானால் 'இந்த மனநிலை' எமக்கு ஏற்பட்டதோ என்று நினைப்பதுண்டு! ஒரு வேளை. நாம் தொலைத்து விட்ட 'புத்த மதத்தை' மீண்டும் பின்பற்றத் தொடங்கியிருந்தால்.. பல உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கலாமோ எனச் சில வேளைகளில் எண்ணுவதுண்டு!

இப்படியான ஒரு நம்பிக்கை தான் என்னை 'பிரான்சிலுள்ள' லூர்து மாதா கோவில் வரை அழைத்துச் சென்றது!

கடுகதிப் புகையிரத்திலிருந்து இறங்கியதும், புகையிரத மேடையில் சிலர் இருசக்கர நாற்காலி வண்டிகளுடன் காவல் நின்றதும்.. உலகின் ஏதோ மூலையிலிருந்து வருகின்ற ஒருவரைத் தங்களது இரு சக்கர நாற்காலி வண்டிகளில் ஏற்றிய படி.. மேடும் பள்ளமும் நிறைந்த கிராமத்தின் மூலை முடுக்கெல்லாம் காவிக் கொண்டு திரிந்தது என்னை உண்மையில் கவர்ந்தது! கோவிலிலுள்ள உண்டியல்களின் வாய்கள் பெரிதாக இருந்தும்..அவற்றின் வயிறுகள் நிறைந்து, உதடுகளின் ஓரங்களில் வெளிநாட்டு நோட்டுக்கள் தேடுவாரற்றுத் தொங்கிக் கொண்டிருந்தன! ஏதோ ஒரு விதமான 'அமைதி' என்னை ஆட்கொள்ள... கோவிலின் வெளிப் பிரவாகத்தில் நடந்து கொண்டிருந்தேன்! யேசுநாதர் இழுத்துச் செல்லப் படுவது முதல் சிலுவையிலறையப் படுவது வரை மிகவும் தத்ரூபமாகச் சிலைகள் செதுக்கப்பட்டிருந்தன ! இறுதியில் சில பளிங்குப் படிக்கட்டுகள் இருந்தன! அவற்றின் மீது முழங்காலால் நடந்து மேலே செல்ல வேண்டும்! என்னைக் கேட்காமலே கால்கள் படிக்கட்டுகளில் முழங்கால்களால் நடக்கத் தொடங்கி விட்டன!

திடீரென பிரகாரத்தின் அமைதியைக் கிழித்த படி... டேய்.. என்று மிகவும் பரிச்சயமான இளமைக் குரல்.. கொஞ்சம் 'ஸ்டீரியோ' சத்தத்தில் கேட்டது!

௦௦௦௦௦                   ௦௦௦௦௦௦                    ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦     

                 

திரும்பிப் பார்த்ததும் கொஞ்சம் பரிச்சயமான முகத்துடன், பாதி முகம் வெள்ளையும் கறுப்பும் கலந்த தாடிக்குள் மறைந்த படியிருக்க... இரண்டு கைத்தடிகள் தோள்களுக்கு ஊன்று கொடுத்தபடியிருக்க ஒருவன் நின்று கொண்டிருந்தான்! முகம் தெரிந்தது போலவும் .. தெரியாது போலவும் இருக்க...படிக்கட்டுகளுக்கு மேலே சென்று அவனை உற்றுப் பார்த்தேன்! டேய்..அம்மன் கோயிலடியையும் மறந்திட்டியா.. என்று அவன் கேட்க.. என்னையறியாமலே 'டேய்.. சூட்டி' என்று உரக்கக் கத்தினேன்!

அவனும் படிக்கட்டுக்களில் ... இரு கட்டைகளையும் ஊன்றியபடியே என்னை நோக்கி நடந்து வர, இருவருமே ஒருவரையொருவர் கட்டிப்பிடித படியே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தோம்!

டேய்.. என்னடா  இந்தக் கோலம் ?

சரி முதலில 'மாதாவைப் பாப்பம்! பிறகு என்ர கதையைச் சொல்லுறன் எண்டவன் கோவிலுக்குள் என்னை அழைத்துச் சென்றான்!

மாதாவின் சொரூபம் 'தங்கத்தினால்' செய்யப்பட்டிருக்க வேண்டும்! தக..தகவென்று பளபளத்துக் கொண்டிருந்தது!

புதிதாக வாங்கியிருந்த 'நிக்கன்' கமரா.. இடுப்பில் தொங்கிய படி.. படத்தை எடடா ...எடடா என்று.. என்னிடம் சொல்ல.. சில படங்களைக் 'கிளிக்' செய்து விட்டேன்!

டேய்.. படச்சுருளை எடுத்துப் பூவலுக்குள்ள போட்டுவிடு... மாதாவின்ர படம் எல்லாருக்கும் வராது..சில பேருக்கு வெறும் கறுப்புப் படமா வரும். பிறகு உனக்குக் கவலையா இருக்கும் எண்டு சொல்ல..எனக்கு மெல்லிசாக நடுக்கம் ஏற்பட்டது மாதிரி இருந்தது!

இல்லையடா..  இதில 'போதோ'வில எடுத்த கொஞ்சப் படங்களும் இருக்கு! மாதா என்னைத் தண்டிக்க மாட்டா .. என்று கூறிய படி..உன்ர கதையைச் சொல்லு என்று கேட்க.. மச்சான்.. கிட்டத் தான் இருக்கிறன். நீயும் பயணத்தால வந்தனீ..களைச்சுப் போய் இருப்பாய்..என்ர கதை எங்கையும் ஓடிப் போகாது என்று கூறியபடி ஒரு சிகரட் பக்கற்றில் அவன் தங்கியிருக்கும் இடத்தின் விலாசத்தை எழுதி என்னிடம் தந்த படியே.. எட்டு மணிக்கு முதல் வரப்பார் என்று கூறிய படியே விடை பெற்றான்!

(இன்னும் ஒரு பகுதி வரும்!)

௦௦௦௦௦                   ௦௦௦௦௦௦                    ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦                        ௦௦௦௦௦௦               

எழுதிச் செல்லும் விதியின் கரங்கள் - பகுதி 2 ஐப் பார்க்கப் பின்வரும் இணைப்பில் அழுத்தவும்!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   நீண்ட நாட்களின் பின் உங்கள் பதிவு ..........தொடருங்கள் ஆவலாக உள்ளோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூர்து அற்புதமான ஒரு புனிதஸ்தலம். மனதைப் புதுப்பித்துக் கொண்டு வரக்கூடியதோர் ஆலயம்.

ஒரு தகவல்: அங்குள்ள காரியாலயத்தில் ஆறேலு பேர் சேர்ந்து லூர்தின் வரலாறைப் பார்க்கவேண்டும் எனக் கேட்டால் அவர்கள் அத் திரைப்படத்தைத் தமிழில் ஒளிபரப்புவார்கள். 15/20 நிமிடப் படம்....! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்பு உங்கள் கதை ,வெகு சீக்கிரம் தொடருங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   நீண்ட நாட்களின் பின் உங்கள் பதிவு ..........தொடருங்கள் ஆவலாக உள்ளோம். 

வணக்கம் நிலாக்கா... அன்று போல இன்றும்.. உங்கள் ஊக்குவிப்பு, எனது எழுத்தை நிச்சயம் மெருகு படுத்தும்! நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூர்து அற்புதமான ஒரு புனிதஸ்தலம். மனதைப் புதுப்பித்துக் கொண்டு வரக்கூடியதோர் ஆலயம்.

ஒரு தகவல்: அங்குள்ள காரியாலயத்தில் ஆறேலு பேர் சேர்ந்து லூர்தின் வரலாறைப் பார்க்கவேண்டும் எனக் கேட்டால் அவர்கள் அத் திரைப்படத்தைத் தமிழில் ஒளிபரப்புவார்கள். 15/20 நிமிடப் படம்....! :)

பிற தலங்களில் கிடைக்காத ஒரு விதமான 'அமைதி' இங்கு எனக்கு ஏற்பட்டது! 'குறிஞ்சி' நிலத்தின் சூழ்நிலையால் மட்டும் அது ஏற்பட்டு விடவில்லை என எண்ணுகின்றேன்! வெறும் 'பொருளாதார ரீதியான' உலகத்தைத் தாண்டி...அதற்கப்பாலும் ஒரு அழகிய உலகம் உண்டு என்ற கருத்தை எனது மனதில் ஆழப் புதைத்து விட்ட ஒரு இடமாக இந்தத் தலம் அமைந்து விட்டது!

வருகைக்கு நன்றி...சுவியர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதமும் 

முடிந்தால்  கிறிஸ்மஸ் நாளிலும்  போகுமிடம்

 

அந்த அமைதியும் இயற்கையும்  அங்கு நடமாடும் மனிதர்களும் 

வரலாற்றுச்சாட்சிகளும் பிடிக்கும்

மக்களுக்கும் ஒரு ஒழுங்கப்பாதையைக்காட்ட முயல்வதும் ஒரு காரணம்...

 

உங்கள் எழுத்துநடைபற்றி சொல்லவேண்டியதில்லை

அந்த இடத்தை இதற்கு மேல் எம் கண்முன் நிறுத்த உங்களால் மட்டுமே முடியும்

 

அப்படியே சிறு கோபம்

எனக்கும் ஒரு காட்சி தரக்கூடாதா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் உங்கள் எழுத்தின் உவமானங்கள் மிக நன்றாக உள்ளன. உதாரணமாக  ஒரு பிரசவத்திற்கு தயாராகும் தாயின்  முனகல்,  சலவை இயந்திரத்தில்  துவைக்கப்பட்ட சாயமிழந்த துணி,  மனதுக்கு இதமான மண்ணின் சுவாசம் எப்பொழுதும்  உங்கள் எழுத்தில்  சுவாசிப்பது சுகமான அனுபவம். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும்

வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி.. அபராஜிதன்!

நீண்ட நாட்களின் பின்பு உங்கள் கதை ,வெகு சீக்கிரம் தொடருங்கள்....

நன்றி.. புத்தன்... உங்களைப்போல நாலு நல்ல மனுசர் இருக்கிறபடியால..யாழில நம்மட காலமும் பரவாயில்லாமல் போகுது! :lol:

தொடருங்கள் புங்கையூரன் 

நன்றி...வாத்தியார்!

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதமும் 

முடிந்தால்  கிறிஸ்மஸ் நாளிலும்  போகுமிடம்

 

அந்த அமைதியும் இயற்கையும்  அங்கு நடமாடும் மனிதர்களும் 

வரலாற்றுச்சாட்சிகளும் பிடிக்கும்

மக்களுக்கும் ஒரு ஒழுங்கப்பாதையைக்காட்ட முயல்வதும் ஒரு காரணம்...

 

உங்கள் எழுத்துநடைபற்றி சொல்லவேண்டியதில்லை

அந்த இடத்தை இதற்கு மேல் எம் கண்முன் நிறுத்த உங்களால் மட்டுமே முடியும்

 

அப்படியே சிறு கோபம்

எனக்கும் ஒரு காட்சி தரக்கூடாதா??

வருகைக்கு நன்றி...விசுகர்!

எனக்கும் அங்கு மீண்டுமொரு முறை செல்ல வேண்டும் என்ற உணர்வு அடிக்கடி வந்து போகும்!

இருப்பினும்.. பயணங்களைப் பொறுத்த வரையில் முடிந்து போன அத்தியாயங்களைத் திரும்பப் படிப்பதை விடவும்... புதிய அத்தியாயங்களைப் படிப்பதில் 'ஆர்வம்' அதிகம்!

தேரில் சில மாறுதல்கள் இருப்பினும்... போன வருடம் நடந்த தேர்த்திருவிழாவைத் திரும்ப.. இந்த வருடம் பார்ப்பதில்..எனக்கு அவ்வளவு 'திரில்' இருப்பதில்லை!

நல்லூர்த் திருவிழா மட்டும் இதற்கு விதி விலக்கு!:lol:

உங்கள் கருத்து...எப்போதும் எனக்குப்..'புதுப் பனையிலை இறக்கின கள்ளு' மாதிரி ஒரு வித்தியாசமான போதையைத் தருவதுண்டு!

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.. விசுகர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் உங்கள் எழுத்தின் உவமானங்கள் மிக நன்றாக உள்ளன. உதாரணமாக  ஒரு பிரசவத்திற்கு தயாராகும் தாயின்  முனகல்,  சலவை இயந்திரத்தில்  துவைக்கப்பட்ட சாயமிழந்த துணி,  மனதுக்கு இதமான மண்ணின் சுவாசம் எப்பொழுதும்  உங்கள் எழுத்தில்  சுவாசிப்பது சுகமான அனுபவம். பாராட்டுக்கள்.

வணக்கம்..காவலூரின் கண்மணி!

தமிழை முறையாகக் கற்றிருக்க வேண்டும் என்ற ஏக்கம் என்னிடம் எப்போதுமே உண்டு !

எழுதிச் செல்லுகின்ற விதியின் கரங்கள்...நான் வாழ நினைத்த எனது வாழ்க்கையை வேறு விதமாக எழுதிச் செல்லுகின்றன!

இளமை வயதிலேயே.. புழுதியின் வாசம் தொலைத்து.. அந்நிய தேசங்கள் துப்புகின்ற 'புழுதியிலும்', அந்தத் தேசங்களின் இயந்திரங்களின் கட்டமைப்புக்கள் கக்கும்.. கரியமில வாயுவின் நஞ்சிலும்....துருவப் பனியிலும் வெடவெடத்துப் போய்..இப்போது ...மானுடமே தொட்டுக் கூடப் பார்க்காத   வெட்ட வெளிகள் நிறைந்த தேசமொன்றின் மூலையில் ஒதுங்கியிருக்கிறேன்!

இருப்பினும் எனது மண்ணின் 'புழுதி வாசமும்' ... அங்கு பிறந்ததனால்.. இலவசமாக என்னுடன்  இணைந்த தமிழும் என்னை விட்டுவிடுவதாக இல்லை!

உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களும்... விமரிசனங்களும்... ஊக்கங்களும் .. எனது தாகத்தை.. எப்போதும் அழிந்து போகாதவாறு, நிச்சயம் பாதுகாத்து வைத்திருக்கும் என்னும் நம்பிக்கையிலேயே.. ஒவ்வொரு நாளும்  'யாழுக்கு' ஓடிவருகிறேன்!

நன்றி!.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூர்து மாதாவை, தரிசித்த பின்.... எமது உடலில், வாழ்க்கையில்... ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை அனுபவ பூர்வமாக, உணர்ந்துள்ளேன்.
அதுகும்.... அதிகாலையில் அங்குள்ள குளிர்ந்த நீரில், குளிப்பது மிகப் பெரிய சுக அனுபவம்.
இந்த மாதாவை தரிசிப்பதற்கென்றே.... அமெரிக்காவிலிருந்து, அவுஸ்திரேலியா வரை பலர் நேர்த்தி வைத்து வருகின்றார்கள்.
ஜேர்மனியில் உள்ள பெரிய நகரங்களிலிருந்தும், விசேட பேருந்துகள், லூர்து மாதா கோவிலை நோக்கி பயணிக்கும்.
பகிர்விற்கு நன்றி, புங்க்கையூரான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.