Jump to content

கோத்தபாயாவின் திட்டத்தில் சுமந்திரனும், சுரேந்திரனும்...


Recommended Posts

FM Samaraweera said, pointing out that the then Defence Secretary Gotabhaya Rajapaksa too was involved in the post-war South African initiative. Senior South African representatives dealt with both the previous government and the UK headquartered Diaspora grouping Global Tamil Forum (GTF), FM Samaraweera recalled accusing what he called the Abharamaya gang of politicising and undermining the reconciliation process.

Minister Samaraweera referred to President of the GTF Rev. Father S.J. Emmanuel as well as its UK based spokesperson Suren Surendiran as Diaspora representatives engaged in the reconciliation efforts

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=127132

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

+

தமிழர்களுக்கு எதிரா
எல்லா நேரங்களிலும் செய்தி வெளியிடும்,
ஆயுத தரகர்களின்  
இனவாத பத்திரிகை ' ஐலண்ட்' இன் செய்தியை
எல்லாம் கொண்டு வந்து ஒட்டி காலத்தினை ஓட்ட
வேண்டிய நிலைக்கு நாரதர் போன்றோர் வந்து
விட்டனர்

புலிகளுக்கு எதிரா கிளம்புவார்கள்
இனவாத அரசின் பக்கம் போய் சேருவதற்கும்
இதற்கும் இடையில் என்ன வித்தியாசம்


எல்லாம் தமிழ் தேசிய வியாபாரம்

Link to comment
Share on other sites

செய்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிறிலங்கா வெளிநாட்டமைச்சர் சொல்லியதாகாத் தான் இருக்கிறது. இதில் எனக்கு வியாபாரம் செய்ய என்ன இருக்கிறது? தேசிய வியாபாரம் சிறிலங்காவுடன்  செய்யத் தான் பலர் முன்னுக்கு நிற்கிறார்கள். 

Link to comment
Share on other sites

இலக்கு வைக்கப்படும் புலம்பெயர் தமிழர்கள்!

2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான போராட்ட தளங்களும் போராடுபவர்களும் பெரும் மாற்றங்களுக்குள்ளாகி உள்ளன / உள்ளனர்.

ஆயுதங்களுக்குப் பதிலாக இராஜதந்திரமும் போராட்ட தளங்களாக சர்வதேசத்தளமும் தாயகமும் போராடுபவர்களாக புலம்பெயர் தமிழர்களும் தாயகத் தமிழர்களும் உள்ளனர். முள்ளிவாய்க்காலில் நயவஞ்சகமாக இனவழிப்பை மேற்கொண்டு தமிழர்களை வீழ்த்திவிட்டதாகவும் சிறிலங்காவில் சமாதானம் மலர்ந்துவிட்டதாகவும் மார்தட்டி நின்ற சிங்களத்தை, இல்லை நாம் வீழ்த்தப்பட முடியாதவர்கள் தமிழீழத்தில் இழந்துவிட்ட ஆட்சியுரிமையை மீண்டும் பெறும்வரை போராடுவோமென புலம்பெயர் தேசத்து வீதிகளில் பொங்கியெழுந்த புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளே இன்று சிங்களத்தை யுத்தக்குற்றவாளியாக்கி விசாரணையை எதிர்கொள்ளச் செய்துள்ளது.

இதனை நன்குணர்ந்த சிறிலங்காவின் புதிய ஆட்சியின் பழைய தலைவர்கள் எப்படித் தமிழனை வைத்து அதாவது எப்படி லக்ஸ்மன் கதிர்காமர், கருணா போன்றவர்களை வைத்து தமிழர்களை வீழ்த்தினார்களோ அதேபாணியில் சுமந்திரன், சுரேன் சுரேந்திரன் போன்றவர்களை வைத்து புலம்பெயர் தமிழர்களை வீழ்த்துவதற்கு முயன்று வருகின்றனர். இதைச் சிங்களதேசம் ஒவ்வொரு படிமுறையாக செயற்படுத்தி வருகின்றது.

அதன் முதற்படியாக, தனது 19வது திருத்தச் சட்டத்தினூடாக இரட்டை பிரஜாவுரிமையுடையவர்களுக்கான வாக்களிக்குரிமையை இல்லாமல் செய்துள்ளது. அதாவது புலம்பெயர் தமிழர்களின் அரசியல் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு திருத்தச் சட்டத்துக்கு எம்மவர்கள் அதிலும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் கையுயர்த்தி தமது ஆதரவை முழுமனதுடன் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக, நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரட்டை பிரஜாவுரிமை வழங்குதலை மீள புதிய நிபந்தனைகளுடன் வழங்கத்தொடங்கியுள்ளனர். அந்த நிபந்தனைகளை ஆராய்ந்துபார்த்தால், அவை முற்று முழுதாக புலம்பெயர் மக்களிடமிருந்து பணத்தை சிறிலங்காவின் திரைசேரியை நோக்கி நகர்த்தும் திட்டத்தைக் கொண்டிருப்பதை காணமுடியும்.

கடந்த ஏப்ரல் 7ம் திகதி, சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் அரசாங்கத்துக்கான வருமானம் போதியளவில் இல்லாத காரணத்தினால் அதை நிவர்த்திசெய்யும் முகமாக Rs.400 மில்லியன் பெறுமதியான திரைசேரி முறிகளை விற்று வருமானத்தையீட்டுவதற்கான பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். ஆனால், அது தோற்கடிக்கப்பட்டிருந்தது. இது சிங்களதேசம் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றமையையே காட்டுகிறது. தற்போது இலங்கை அரசாங்கம் பாரியதொரு நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்று அண்மையில் லண்டனில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியில் தான், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டனில் புலம்பெயர் தமிழ்மக்கள் வடகிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்கு எவ்வாறு உதவாலாம் என்று சந்திப்பொன்றை சில புலம்பெயர் தமிழ்மக்களுடன் நடத்தியிருந்தார். அத்துடன், வெளிவிவகார அமைச்சினால் புலம்பெயர் மக்களுக்கான நிகழ்வு ஒன்றும் சிறிலங்காவில் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பும் வெளிவந்திருகிறது. இதுவரைகாலமும் வடமாகாண முதலமைச்சரால் கோரப்பட்டு வந்த முதலமைச்சர் நிதியம் அமைக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கம் அனுமதி வழங்கி இருப்பதையும் இந்த நிகழ்வுகளில் வரிசையிலேயே பார்க்க வேண்டும்.

ராஜபக்ச ஆட்சிக்காலத்திலேயே புலம்பெயர் தமிழர்களின் வருமானத்தை குறிவைத்து நகர்வுகள் எடுக்கப்பட்டிருந்தன. அதனால்தான், மகிந்த ராஜபக்ச 2011ல் வெளிப்படையாகவே புலம்பெயர் தமிழர்கள் சிறிலங்காவில் நடைபெறும் அபிவிருத்தியில் பங்குகொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு மேலதிகமாக அன்றைய ஐக்கியநாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாகவிருந்த இரவிநாத் பி.ஆரியசிங்க, 2013ல் ஐக்கிய நாடுகள் சபையில் பின்வருமாறு கூறியிருந்தார். அதாவது சிறிலங்காவுக்கு புலம்பெயர்மக்களால் நேரடியாக அனுப்பப்படும் வெளிநாட்டு வருமானமானது 2012ல் $6 பில்லியனைத் தொட்டதாகவும் அது 2011 விடவும் 17% அதிகரிப்பு எனவும், மொத்த உள்நாட்டுற்பத்தியில் (GDP ) 10% என்றும் , அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 25% என்றும், அரசாங்கத்தின் மொத்த வெளிநாட்டு வருமானத்தில் 33% என்றும் கூறியிருந்தார். அத்துடன் புலம்பெயர் மக்களுடன் பரந்துபட்டளவிலான தொடர்பைப்பேண அரசு விரும்புவதாகவும் அதற்காக புலம்பெயர் முதலீட்டுச் சபை (Diaspora Investor Forum) ஒன்றை ஸ்தாபிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டு இதன் மூலம் புலம்பெயர்ந்தவர்கள் சிறிலங்காவின் திரைசேரி முறிகளிலும் மற்றும் முதலீட்டுத் திட்டங்களிலும் முதலிடமுடியுமெனவும் ஆசை காட்டியிருந்தார்.

ஆனால், அப்போதைய காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ்மக்கள் சிறிலங்காவுக்கெதிராக தீவிரமாக செயற்பட்ட காரணத்தினால் இம்முயற்சி அவர்களுக்கு கைகூடிவரவில்லை. அத்துடன், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையும் இலங்கைக்கெதிரான யுத்தக்குற்ற விசாரணையை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்ரியிருந்தது. இதனால் கோபம் அடைந்த சிறிலங்கா அரசு, 15 புலம்பெயர் அமைப்புக்களையும் 424 தனிநபர்களையும் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1373 தீர்மானத்தின் கீழ் தடை விதித்திருந்தது.

இந்த தடை சிறிலங்காவுக்கு எந்தவித அனுகூலத்தையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்பதுடன் உண்மையில் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியிருந்தது. இதனை புதிய ஆட்சி நன்குணர்ந்து அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. அதனால்தான், தனக்கு அரசியல்ரீதியில் பெரும் அபாயமாக மாறும் என்று தெரிந்திருந்தும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர லண்டனில் சில புலம்பெயர் அமைப்புக்களுடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்டிருந்தார். இந்த சந்திப்பு அரசியல்ரீதியில் எந்தளவுக்கு அபாயமானது என்று ஸ்ரீ லங்கா அரசு புரிந்துகொண்டிருந்தது என்பதற்கு, இந்த சந்திப்பு பற்றிய செய்திகள் வெளிவந்ததுடன் அதனை ஸ்ரீ லங்கா அரசாங்கம் நியாயப்படுத்த எடுத்த முயற்சிகள் காட்டுகின்றன. இராணுவத் தளபதியைக்கூட இந்த சந்திப்பை நியாயப்படுத்துவதற்கு ஸ்ரீ லங்கா அரசு பயன்படுத்தியிருந்தது.

இதுவரை, எப்படி சிறிலங்கா அரசு புலம்பெயர் தமிழ்மக்களின் அரசியல் உரிமையை இரட்டை பிரஜாவுரிமை என்ற போர்வையில் முடக்கியது என்பதையும் எப்படி அதன் பொருளாதார நலனுக்காக புலம்பெயர் தமிழ்மக்களை பயன்படுத்தலாம் என்று செயற்பட்டுவருகிறது என்றும் பார்த்தோம். ஆனால் தனியே இந்த இரண்டு நோக்கங்களையும் மட்டும் வைத்து ஸ்ரீ லங்கா செயற்படவில்லை. இதற்கு பின்னால் மிகப்பெரிய இராஜதந்திர வலைப்பின்னலை சிறிலங்கா விரித்துள்ளது. அதாவது, தாயகத்தமிழருக்கும் புலம்பெயர் தமிழருக்குமிடையிலான அரசியல்வெளியை ஏற்படுத்துதல், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கிடையேயான முரண்பாட்டை தோற்றுவிப்பதனூடாக அவர்களின் சர்வதேச ரீதியிலான அரசியல் செயற்பாட்டை மழுங்கடித்தல், தமக்கு சாதகமான புலம்பெயர் அமைப்புக்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கூடாக சர்வதேசரீதியில் சிறிலங்காவுக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக்குற்ற விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றி நீர்த்துப்போகச்செய்தல் போன்ற பல திட்டங்களை சிறிலங்கா கொண்டுள்ளது. இதற்கு இந்தியா, தென் ஆபிரிக்காவின் ஒத்துழைப்புகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீ லங்கா விடயத்தில் நேர்மையான பூகோள அக்கறைகள் எதுவும் அற்ற நாடு என்ற தோற்றப்பாட்டை கொண்டுள்ள தென் ஆபிரிக்கா மூலம் புலம்பெயர் தமிழ்மக்களை தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவரலாம் என்பது ஸ்ரீ லங்காவின் கணக்கு.

ஆனால் , தென் ஆபிரிக்கா எந்தளவுக்கு நேர்மையான ஒரு நாடு என்பதையும் மனித உரிமைகள் மற்றும் நீதி ஆகியவற்றை சர்வதேச சட்டங்கள் மூலம் நிலைநாட்டுவதில் அதன் பற்றுறுதியை சோதிக்கும் சம்பவமாக சூடான் ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றம் கைதுசெய்யக்கோரிய சம்பவம் அமைந்திருந்தது.

தென்னாபிரிக்காவின் ஜோஹனஸ் பேர்க் நகரில் நடைபெறும் ஆபிரிக்க ஒன்றிய மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரை கைதுசெய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கேட்டதையடுத்து தென்னாபிரிக்க உயர்நீதிமன்றம் அவர் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு இடைக்கால தடைவிதித்திருந்தது. இருந்தும் தென்னாபிரிக்க அரசு, சூடானில் இனப்படுகொலை, போர்க்குற்றச்சாட்டு மற்றும் மனிதாபிமானத்துக்கெதிரான குற்றங்களை இழைத்ததாக்க குற்றம்சாட்டப்பட்ட பஷீர் தனது சொந்த நாட்டு உயர் நீதிமன்ற தீர்ப்பை உதாசீனம் செய்து அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை அனுமதித்திருந்தது.

தென்னாபிரிக்க அரசுடனும் அதன் முகவர் அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவரும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்த சம்பவத்தில் இருந்து சிலதை புரிந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு, சிறிலங்காவால் அரங்கேற்றப்படும் சூழ்ச்சிகளுக்கு தமிழ்மக்களின் பிரதிநிதிகள் தாங்கள்தான் எனக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகள் தாங்கள் தான் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயலும் உலக தமிழர் பேரவை ஆகியவை தெரிந்தோ தெரியாமலோ உதவி வருகின்றன.

4தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் நவம்பர் 23ந் திகதி 2013ல் வடகிழக்கு பொருளாதார அபிவிருத்தியும் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்குபற்றுதலும் (North East Economic Development and Diaspora Participation) எனும் தலைப்பில் லண்டன் ட்ரினிட்டி கொம்முனிட்டி சென்டர் ஹல்லில் (Trinity Community Centre Hall) நடத்திய கூட்டத்துக்கும் அதைத்தொடர்ந்து அவர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கும் இதுவரை என்ன நடைபெற்றது என்பது அவர்களுக்கே தெரியாது. அதன் பின்னர் , இந்த விடயத்தில் எதுவுமே நடைபெறவில்லை. அப்படியொரு முயற்சியை அவர்கள் முன்னர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் செய்ய முயன்றிருந்தபோதிலும், புதிதாக ஏன் திடீரென சிறிலங்காவுடன் கூட்டிணைத்து அதே முயற்சியை செய்யவேண்டியிருக்கிறது. இங்கேதான் இவர்கள் சலுகைகளுக்காக விலைபோயுள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதை மேலும் வலுப்படுத்தும் முகமாக வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டும் அமைகிறது. ஆகவே , எதிர்வரும் தேர்தலில், மக்கள் களைகளை தெரிவுசெய்து அகற்றவேண்டும்.

உண்மையிலேயே வடகிழக்கு மக்களின் மனிதாபிமானப் பிரச்சினையை தீர்ப்பதே எல்லோருடைய ஒரே நோக்கமாகவும் இருக்குமேயானால் ஏன் அவர்களால் புதிய அரசுடன் பேசி உடனடி மனிதாபிமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, வடக்கு கிழக்கு மாகாண அரசுகள் நேரடியாக வெளிநாட்டு உதவிகளை அந்தந்த மாகாண திறைசேரிகளினூடாக பெற்று அவற்றை செயற்படுத்துவதற்கு முன்வரவில்லை? இதே புதிய ஆட்சி (எதிர்கட்சி, ஆளும் கட்சி) சேர்ந்து பல புதிய திருத்தச்சட்டங்களையும் அரசியல் அமைப்புச் சபையையும் உருவாக்கமுடியுமென்றால் , ஏன் இது அவர்களால் இத்தகைய ஒரு நிதிப் பொறிமுறையை வடக்கு மற்றும் கிழக்குக்கு உருவாக்கமுடியாது?. இங்கேதான் இவர்களின் சுயரூபம் வெளிப்படுகின்றது.

- லோ.விஜயநாதன்

Link to comment
Share on other sites

10416994_767675646605663_1254517608_n.jp

ஈழத்தமிழர் அரசியலில் 2010இற்கு பின் நுளைந்து, இன்று ஈழத்தமிழர்களின் தலைவிதியை பேரம் பேசி விற்கும் பிரபல அரசியல் ஸ்பினர், ----------------------- புகழ் சும் சும் சுமந்திரனின் 2010இற்கு முன்னமான அரசியல், சமூக வாழ்வினை யாராவது தந்துதவ முடியுமா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.