Jump to content

புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ரூபன் பொதுத்தேர்தலில் திருமலையில் போட்டியிட விண்ணப்பத்தை மாவையிடம் கையளித்தார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ரூபன் பொதுத்தேர்தலில் திருமலையில் போட்டியிட விண்ணப்பத்தை மாவையிடம் கையளித்தார்!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2015, 02:35.49 AM GMT ]

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராகவும் பின்னர் தலைமை செயலகப் பொறுப்பாளராகவும் விளங்கிய ரூபன் (ஆத்மலிங்கம் ரவீந்திரா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார்.

இலக்கம் 36 மார்டின்வீதி யாழ்ப்பணத்திலுள்ள கட்சியின் தலைமைப் பணிமனையில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் தமது எழுத்து மூலமான விண்ணப்பத்தை, நேற்று முன்தினம் சமர்ப்பித்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட இருந்த வட/கிழக்கு இடைக்கால நிருவாகக் கட்டமைப்பில் புலிகளின் சார்பில் ரூபனுடன் தெரிவாகி இருந்தவரும் தற்போதைய வடமாகாணசபை சபாநாயகர் ஆகிய திரு.சீ .வி . கே. சிவஞானம் அச்சமயம் மாவையுடன் இருந்தார். மேலும் கட்சியின் துணைத் தலைவர் திரு. க.துரைரட்ணசிங்கம் மூலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் திரு. இரா. சம்பந்தருக்கான பிரதியை அவர் அனுப்பி இருந்தார் . கட்சிச் செயலருக்கான பிரதியை பதிவுத் தபால் மூலம் அனுப்பி உள்ளார்.

மாவையிடம் சமர்பித்த இவ் விண்ணப்பத்தில் தாங்கள் கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் மட்டக்களப்பில் நடைபெற்ற வரவேற்பு வைபவத்தில் தீவிரவாத இளைஞனாக இருந்த போது மட் / சிறையிலிருந்த அனுபவங்களை பகீர்ந்து கொண்டீர்கள் என்பதாலும், சுவிட்சர்லாந்தில் கருத்து தெரிவிக்கும் போது கிளிநொச்சியில் தலைவர் பிரபாகரனை சந்தித்த நாளை மறக்க முடியாத நினைவாக குறிப்பிட்டீர்கள் என்ற வகையிலும் தீவிரவாத இளைஞர்களின் உணர்வுகளை உங்களால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும் என்று முழுமையாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திருமலை மாவட்டத்தில் தனக்கு வேட்பாளாராக நிற்கும் வாய்ப்பு வழங்கப்படுமிடத்து இத் தேர்தலில் இம் மாவட்டத்திலிருந்து கட்சியின் சார்பில் இரு உறுப்பினர்களை தெரிவு செய்யப்படுவதற்கு ஏற்றவகையில் செயலாற்றும் திறன் தனக்கு உன்ளது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒரு போராளியாக இதுவரை மக்கள் சேவையை செய்து வந்த நான் பாராளுமன்ற அங்கத்துவத்தின் மூலம் போரால் பாதிக்கப்பட்டு சீரழிந்து போன மக்களுக்காக மட்டுமன்றி அனைத்து தமிழ் பேசும் மக்களுக்காகவும் இறுதிவரை பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

திரு.ரூபன் 13.05.1985 முதல் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த 17/05/2009 வரையிலான 24 வருடங்கள் புலிகள் அமைப்பில் போராளியாக விளங்கினார்.

1989 முதல் 1993 வரை திருமலை அரசியல் பொறுப்பாளராக கடமையாற்றினார்.

1990 யில் பிரேமதாசா அரசுடனான பேச்சு வார்த்தைகளில் பங்கு பற்றினார்.

1995 யில் சந்திரிக்கா அரசுடனான பேச்சுவார்த்தையின் நிமிர்த்தம் மீண்டும் திருமலை அரசியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1996 யாழ் இடம்பெயர்வின் பின் 1996 செப்டெம்பர் முதல் 2000 டிசம்பர் வரை பொருமிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராக செயலாற்றினார்.

2000 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருமலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி 13000 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று தமிழ் பிரதிநித்துவம் இழந்தது. இதனை அடுத்து திரும்பவும் தமிழ் பிரதிநித்துவத்தை ஏற்படுத்தும் பொருட்டு மீண்டும் அரசியல் பொறுப்பளாராக தலைவர் பிரபாகரனால் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

23/10/2001 யில் சம்பந்தன் ஐயாவை சேனையூருக்கு அழைத்து இவ் விடயம் பற்றி கலந்துரையாடினார். அதன் பின் நடந்த தேர்தலில் கட்சி 66500 மேற்பட்ட வாக்குகளை பெறவும் சம்பந்தன் ஐயா மீண்டும் பாராளுமன்றத்துக்கு செல்ல வழிவகுத்தார்.

அமெரிக்காவில் அரசியல் கற்கை நெறிகளை கற்று வந்த ஒருவரின் துணையுடன் ஊடகவியாலாளர் ந.வித்தியாதரன் போன்றோர். முன்னநாள் போராளிகள் மாவீரர் குடும்பங்களின் வாக்குகளை சிதறடிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது அரசியல் அனுபவமும் மக்களுடன் நெருங்கிய தொடர்பும் உள்ளவருமான ரூபன் தமிழரசுக் கட்சியிடம் வேட்பாளர் நியமனம் கோரியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

http://www.tamilwin.com/show-RUmtyGRcSUeo1A.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'புபுவா'களின் தாளத்துக்கு ஆடாதவரையில் முன்னாள் போராளியான ரூபன் தகுதியானவரே!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவை தமிழரசுக் கட்சி குறித்து அவதானத்தோடு நகர்வுகளைச் செய்வது மூத்த போராளிகளுக்கு நல்லது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியாக வந்தமையால் விண்ணப்பம் நிராகரிக்கப்படவே சாத்தியக்கூறுகள் அதிகம். புலிநீக்க அரசியல் செய்ய விரும்பும் சம்சும் பூசாரிகளிலான கூட்டமைப்பு எப்படி ஒரு முழுப்புலியை உள்ளே விடுவார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக அவருக்கு இடம் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். அனந்தியை அடக்கவும் வாக்குகளை பெறவும் இப்படியொரு அடையாளத்தை தமிழ் மக்களுக்குக் காட்ட வேண்டி உள்ளது.இவரும் துள்ளினால் அடுத்த தேர்தலில் இவரை விட்டு இன்னொரு புலியைப் போடுவார்கள். .திருகோணமலையில் சம்பந்தருக்கு எதிராக ததேமுன்னணி கடுமையாக வேலை செய்யும்.ஆகவே இப்படி ஒரு ஆளைப் போடுவது வாக்குகள் சிதறாமல் ததேமூட்டமைப்புக்கே போக வழிவகுக்கும்.புலியை எதிர்த்து ததேமுன்னணியினரும் பெரிய அளவில் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். தன்னை விடக் கூடுதலான வாக்குகளைப் புலி பெற்று தனக்கு ஆப்பு வைத்து விடுவாரோ என்ற பயமும் சம்பந்தருக்கு இருப்பதால் ஒரு பிரதிநிதித்துவம் வந்தாலும் தனக்கு வரட்டும் என்று சம்பந்தர் நிராகரிக்கவும் இடமுண்டு.ஆனந்தசங்கரியின் நிலமை தனக்கு வரக்கூடாது என்று சம்பந்தர் நினைப்பார்.

Link to comment
Share on other sites

ரூபனுக்கு போடியிட எக்காரணம் கொண்டும் இடம் கொடுக்க  அனுமதிக்க மாட்டோம் ,இவர் அரசியல் பொறுப்பாளராக இருக்கும் போதே எதையும் சாதிக்காதவர் இப்பொழுது சாதிக்கப்போகின்றார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரூபனுக்கு போடியிட எக்காரணம் கொண்டும் இடம் கொடுக்க  அனுமதிக்க மாட்டோம் ,இவர் அரசியல் பொறுப்பாளராக இருக்கும் போதே எதையும் சாதிக்காதவர் இப்பொழுது சாதிக்கப்போகின்றார் .

நீங்களும் நீங்கள் சார்ந்த கட்சியும் ஒருவர் சாதித்தார் என்பதை எதனை வைத்து அளவிடுகிறீர்கள்?

ஆமா தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் எல்லாரும் சாதித்தவர்களா? அவர்கள் சாதித்தது என்ன?

விடுதலைப் புலிகளின் தலைவர் சர்வாதிகாரி, விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை, விடுதலைப்புலிகள் செய்தது பிழை என்று சொல்லும் நீங்கள் ரூபன் எதையும் சாதிக்காதவர் என்பது முரண்.

Link to comment
Share on other sites

ரூபனுக்கு போடியிட எக்காரணம் கொண்டும் இடம் கொடுக்க  அனுமதிக்க மாட்டோம் ,இவர் அரசியல் பொறுப்பாளராக இருக்கும் போதே எதையும் சாதிக்காதவர் இப்பொழுது சாதிக்கப்போகின்றார் .

அண்ணை அப்ப ரூபனுக்கு புனர்வாழ்வு குடுத்துதானே வெளியில விட்டனியல், அவர் இப்ப மாறியிருப்பார், ஒருக்கா சந்தர்பம் குடுத்து பாருங்கள், ப்ளீஸ்.....

அவருக்கு சாதிக்கத் தெரியாததால தான் கருணாவோட போகவில்லை

Link to comment
Share on other sites

ரூபனுக்கு போடியிட எக்காரணம் கொண்டும் இடம் கொடுக்க  அனுமதிக்க மாட்டோம் ,இவர் அரசியல் பொறுப்பாளராக இருக்கும் போதே எதையும் சாதிக்காதவர் இப்பொழுது சாதிக்கப்போகின்றார் .

மக்களுக்கா போராடிய ஒரு போராளிக்கு கொடுக்க கூடாது என்று சொல்லும் அதிகாரத்தை யார் உங்களுக்கு தந்தது .இதென்ன உங்களின் சர்வாதிகரமா ? ...

Link to comment
Share on other sites

ஆட்கள் இல்லாத இடத்தில எலிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்

Link to comment
Share on other sites

இதில் கருத்துபதிவிட்ட எவராவது அவரை பற்றி தெரிந்தா கருத்திட்டீர்கள்.?

இந்த செய்தியை பார்த்த முன்னாள் போராளிகள் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு ரூபனை உள்வாங்க வேண்டாம் என்று சொன்னார்கள் ,அவர்களில் சிலரை மாவை ,சம்பந்தன் ஐயா வுக்கு சொல்லக்கூடியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தேன் .ரூபனுடன் ஒன்றாக போராடியவர்களுக்கு தெரியாதது ,இதில் கருத்திட்ட உங்களுக்கு தெரியப்போகின்றதா ?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்துபதிவிட்ட எவராவது அவரை பற்றி தெரிந்தா கருத்திட்டீர்கள்.?

இந்த செய்தியை பார்த்த முன்னாள் போராளிகள் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு ரூபனை உள்வாங்க வேண்டாம் என்று சொன்னார்கள் ,அவர்களில் சிலரை மாவை ,சம்பந்தன் ஐயா வுக்கு சொல்லக்கூடியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தேன் .ரூபனுடன் ஒன்றாக போராடியவர்களுக்கு தெரியாதது ,இதில் கருத்திட்ட உங்களுக்கு தெரியப்போகின்றதா ?
 

மாவை

சம்பந்தர் ஐயா அவர்கள் முன்நாள் புலிகளுடன் பேசுவார்களா??

தாயகத்தில் முன்நாள் புலிகளுடன் சற்றுதள்ளி நிற்பவர்கள்

 பயங்கரவாதிகளுடன்.....?

அதுவும்

புலம்பெயர்ந்த பயங்கரவாதிகளுடன்.......?:(

 

 

Link to comment
Share on other sites

 

மாவை

சம்பந்தர் ஐயா அவர்கள் முன்நாள் புலிகளுடன் பேசுவார்களா??

தாயகத்தில் முன்நாள் புலிகளுடன் சற்றுதள்ளி நிற்பவர்கள்

 பயங்கரவாதிகளுடன்.....?

அதுவும்

புலம்பெயர்ந்த பயங்கரவாதிகளுடன்.......?:(

 

 

அவர்களில் சிலரை மாவை ,சம்பந்தன் ஐயா வுக்கு சொல்லக்கூடியவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தது குற்றம் இல்லையோ? 

ரூபனை பற்றி தெரிந்தவர்கள் தாராளமாக எழுதுங்கள். சும்மா புரளிகளை கிழப்பாதீர்கள்.

பிரபாகரனுடன் ஒன்றாக போராடியவர் தான் முரளிதரன் ( கருணா).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவைக்கு.... இந்த முறை சீட் கிடைக்குமோ தெரியாது?
பிறகு ஏன், முரளிதரன்... விண்ணப்பத்தை, மாவையிடம் குடுத்தவர்.:o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.