Jump to content

அஜீரணத்தை விரட்டும் அருமருந்து


Recommended Posts

நம் உடலில் பல்­வேறு உறுப்­பு­களின் கூட்டு முயற்­சியால் செரி­மானம் நடை­பெ­று­கி­றது. இதில் உணவுக் குழாய், இரைப்பை, சிறு­குடல், பெருங்­குடல், கல்­லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்­புகள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன.

health-11.jpg

உணவு செரிப்­பது எப்­படி?நாம் உண்ணும் உண­வா­னது, நாக்கில் உள்ள உமிழ்­நீ­ருடன் கலக்­கி­றது. நாக்­கினால் உணவை புரட்டி, பற்­களால் அரைத்­ததும், தொண்டை வழி­யாக இரைப்­பைக்கு செல்­கி­றது.இரைப்­பைக்குள் உணவு குறைந்­தது 4 மணி நேர­மா­வது இருக்கும்.

இரைப்­பையின் கீழ்ப்­ப­கு­தியில் இருக்கும் சிறு­கு­டலின் சவ்­வுகள் பல்­வேறு மடிப்பு நிலையில் காணப்­படும். இரைப்பை சுவரின் தசைகள் குறுக்கும் நெடுக்­கு­மாக சூழ்ந்திருக்கும். அந்த தசை­களின் உத­வியால், இரைப்­பைக்குள் இருக்கும் உணவு புரட்டி கொடுக்­கப்­படும். இரைப்­பையில் இருந்து வெளி­யாகும் உணவு பொருட்கள், பால் போன்ற திரவ நிலையை அடையும். இதிலும் கரை­யாத உணவுப் பொருட்கள் இருக்கும். அது கொஞ்சம் கொஞ்­ச­மாக சிறு­கு­ட­லுக்குள் தள்­ளப்­படும். அங்­குதான் உணவு முற்­றிலும் ஜீர­ண­மா­கி­றது.

உணவில் இருக்கும் புரதம், சர்க்­கரை மாவு, நிணநீர் போன்­றவை சிறு­கு­ட­லினால் ஜீர­ணிக்­கப்­பட்டு, அவை குடல் உறிஞ்­சி­களால் ரத்­தத்­துக்குள் செலுத்­தப்­ப­டு­கின்­றன. இதற்­கென்று கணை­யத்தில் தக்க அமி­லங்கள் சுரக்­கின்­றன.சிறு­கு­டலின் தொடக்­கத்தில் இட­து­பு­ற­மாக கணையம் இருக்­கி­றது. கல்­லீரல் பித்­தத்தை சுரக்­கி­றது. கணை­யத்­துக்கு ரத்தம் செல்­லும்­போது, இச்­சு­ரப்பு கணை­யத்தை சுரக்கச் செய்­கி­றது. இந்த சுரப்­புகள் ‘என்சைம்’ எனப்­படும் வேதிப்­பொ­ரு­ளாகும்.

என்­சைம்­க­ளா­லேயே நம் உடலில் ஜீரணம் நடை­பெ­று­கி­றது. சுமார் 25 அடி நீளம் இருக்கும் சிறு­கு­டலின் சவ்­வுகள், மிகச் சிறிய விரல் போன்று இருப்­பதால், குட­லுக்கு பல­ம­டங்கு உணவு சத்­துக்கள் கிடைக்­கின்­றன. இதில் செல்லும் உண­வா­னது ஜீர­ண­மாகி, கல்­லீ­ரலில் சத்­தான அமி­லங்­க­ளாக சேமிக்­கப்­ப­டு­கின்­றன.மிகு­தி­யாக உள்­ளவை, ரத்­தத்தின் கல­வை­

யாக மற்ற உறுப்­பு­க­ளுக்குச் செல்லும். உணவில் இருந்து சத்­துக்கள் நீங்­கிய திப்­பிகள் பெருங்­கு­ட­லுக்கு வந்து சேரும். இங்கு சளி சுரக்கும்.

மலத்­துக்கு ஈரம் கொடுப்­ப­தற்கு வேண்­டிய அளவு போக, மிகு­தி­யான நீர்ப்­ப­குதி ரத்­தத்தில் நீக்­கப்­படும்.மேலும் கடி­ன­மான கழி­வுகள், பித்தம், பாக்­டீ­ரியா என்னும் நுண்­ணு­யிர்கள் எல்லாம் சளி­யோடு சேர்ந்து, பெருங்­கு­டலில் உள்ள தசை­களால் ஆச­னத்­துக்குள் தள்­ளப்­படும். இது, பொது­வாக நடை­பெறும் உணவு செரி­மா­ன­மாகும். மேற்­கூ­றிய உறுப்­பு­களில் ஏதேனும் ஒன்று ‘மக்கர்’ செய்தால், உணவு செரி­மானம் ஆவதில் குள­று­படி ஏற்­படும்.

ஆகவே, நாம் உண்ணும் உணவு நம் உட­லுக்கு சக்தி தரக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும். நாக்கு ருசிக்­காக அடிக்­கடி சாப்­பி­டாமல், பசித்­தபின் உண­வ­ருந்த வேண்டும். அதி­க­ளவு உணவு, அடிக்­கடி உணவு, பீட்சா மற்றும் பர்கர் போன்ற மாச் சத்து உண­வு­களை அதிகம் சேர்ப்­பது, எண்ணெய் மற்றும் கொழுப்பு சத்து உண­வு­களை நிறைய சாப்­பி­டு­வதால் நமக்கு ஜீரண கோளா­றுகள் வரலாம்.

ஜீரண கோளாறை தடுப்­பது எப்­படி?

நம் அன்­றாட வாழ்க்­கையில் இத்­த­கைய இடர்­பா­டு­களை களைய, ஏரா­ள­மான கை வைத்­தி­யங்கள் உள்­ளன.1. ஆப்பிள் பழத்தை சாறு பிழிந்து குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். 2. திராட்டை பழத்தின் கொட்­டையை நீக்­கி­விட்டு, அதை சாறு பிழிந்தும் குடிக்­கலாம். கொய்யா மரத்தின் கொழுந்து இலை­களைப் பறித்து சாப்­பி­டலாம். கொத்­த­மல்லி விதையை வறுத்து சாப்­பிட்டால், ஜீர­ண­மா­காமல் வரும் பேதி நிற்கும். கொஞ்சம் கல் உப்பை வறுத்­ததும் நீரில் கரைத்து, வெறும் வயிற்றில் அரை டம்ளர் குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் முத­லி­ய­வற்றை 100 கிராம் எடுத்து, இவற்­றுடன் பூண்டு 50 கிராம் சேர்த்து பொடி செய்து, சாதத்­துடன் கலந்து சாப்­பி­டலாம்.

ஒரு பங்கு வசம்­புக்கு 10 பங்கு வெந்நீர் சேர்த்து கஷா­ய­மாக வடி­கட்டி, ஒரு டம்ளர் வீதம் குடித்தால் வயிறு மந்தம் நீங்கும். ஒரு துண்டு இஞ்­சியை நன்­றாக அரைத்து, ஒரு டம்ளர் எலு­மிச்சை சாறுடன் சேர்த்து காய்ச்சி வடி­கட்டி குடித்தால் ஜீரணக் கோளாறு நீங்கும். சுக்கு, இல­வங்கப் பட்டை, ஏலக்காய் என மூன்­றையும் சம அளவு எடுத்து பொடி செய்து, மதிய உணவுக்கு முன் ஒரு சிட்டிகை சாப்பிட்டு வந்தால் ஜீரணக் கோளாறு போயே போச்சு!‘இதற்கெல்லாம் நான் தயார்’ என நீங்கள் வயிறு முட்ட சாப்பிடலாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் விஷம்தானே! எனவே, நாள்தோறும் நாம் அளவோடு சாப்பிட்டு, எவ்வித உடல்நலக் கோளாறும் இன்றி நீண்ட நாள் வாழலாம்.

http://www.virakesari.lk/articles/2015/06/25/அஜீரணத்தை-விரட்டும்-அருமருந்து

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.