Jump to content

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாக தமிழ்த் துறை தொடங்கப்படுகிறது


Recommended Posts

உலகின் மிகவும் பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது.

null
ஹார்வர்டில் தனித் தமிழ்துறை விரைவாக அமையவுள்ளது.

ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இந்தத் துறை ஹார்வர்டில் ஆரம்பிக்கபடவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான டாக்டர் விஜயராகவன் ஜானகிராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவரும் அவரது நண்பரும் சக மருத்துவருமான திருஞானசம்பந்தனும் ஆளுக்கு அரை மில்லியன் டாலர்களை இதற்காக அளித்துள்ளதாகவும், இதர ஐந்து மில்லியன் டாலர்களை வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களும், தமிழ்ச் சங்கங்களும் அளிக்க முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை அப்பல்கலைக்கழகம் சில தினங்களுக்கு முன்னர் வழங்கியுள்ளது என்று தெரிவித்த டாக்டர் ஜானகிராமன், ஆறு மில்லியன் டாலர்கள் எவ்வளவு விரைவாக அவர்களிடம் அளிக்கப்படுகிறதோ அவ்வளவு விரைவாக அங்கு தமிழ்த்துறை தொடங்கும் என்று கூறினார்.
அடுத்த கல்வியாண்டு முதல் ஹார்வர்டில் தமிழ்த்துறை செயல்படத் தொடங்கும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

அந்தத் துறையில் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்த கற்கை நடவடிக்கைகளும் ஆய்வுகளும் இடம்பெறவுள்ளன என்றும், படிப்படியாக பட்டப்படிப்பு, முதுநிலைப் படிப்பு ஆகியவையும் வரவுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

http://www.bbc.com/tamil/global/2015/07/150709_harvard_tamil_chair

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திக்கு என்கெங்குள்ள பல்கலைக்கழகங்களிலெல்லாம் பேராசிரியர் பதவிக்கு பணம் கொடுக்கிறது "இந்த்"ய அரசு. தமிழுக்கு ஒன்று கூடச் செய்வதீல, ஆர்வார்டு பல்கலக் கழகத்தி பேராசிரியர் பதிவிக்கு பணம் கொடுப்பது தமிழர்க்ள். "இந்தி"ய அரசே தமிழுக்கு ஓரங்கம் செய்யாதே. தமிழரும் உனக்கு வரிப்பணம் கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தமிழுக்கு ஓர் இருக்கை

ஜானகிராமன்,சம்பந்தம்
ஜானகிராமன்,சம்பந்தம்

உலகில் சிறந்த பல்கலைக்கழகம் எது என்று கேட்டால் கல்வியாளர்களின் பதில் அனேகமாக ‘ஹார்வேர்ட்’ என்பதாகத்தான் இருக்கும். 380 ஆண்டுகளாக இயங்கிவரும் ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் அந்த அளவுக்குப் பல விதங்களிலும் சிறப்புப் பெற்றது. இத்தகைய பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று ஓர் இருக்கை (Chair) உருவாக்கப்பட்டால் அது தமிழுக்கான கவுரமாகத்தானே இருக்க முடியும்? ஆனால் அது அத்தனை எளிதாக நடக்கக்கூடிய காரியமல்ல. 6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 39 கோடி) செலவுபிடிக்கக்கூடிய மாபெரும் சவால் அது. இந்தச் சவாலை எதிர்கொள்ளும் சாகசத்தில் துணிந்து இறங்கியிருக்கிறார்கள் அமெரிக்க வாழ் தமிழர்களான சம்பந்தமும் (69) ஜானகிராமனும் (65).

இருவரும் ஆளுக்கு அரை மில்லியன் டாலர் (சுமார் மூன்றேகால் கோடி ரூபாய்) கொடுத்து இதற்கான முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள். இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்டு இவர்களது முயற்சிக்குத் தனது ஒத்துழைப்பை நல்குவதாகத் தெரிவித்திருக்கிறது. ஹார்வேர்ட் பல்கலைக்கழக கலை மற்றும் மானுடவியல் துறையின் டீன் டயானா சோரென்சென் இவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த முயற்சியைப் பாராட்டியிருக்கிறார்.

மொழி மீது மாறாத அக்கறை

ஜானகிராமன், சம்பந்தம் இருவரும் 1960களில் அமெரிக்கா சென்றவர்கள். இருவருமே மருத்துவர்கள். கடுமையாகப் போராடி வாழ்க்கையில் உயர்ந்தவர்கள். வாழ்க்கையில் உயர்நிலைக்குச் சென்ற இவர்கள், தங்கள் வேர்களை மறக்கவில்லை. குறிப்பாகத் தாய்மொழியை. அமெரிக்காவுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்ட இந்தியர்கள் பலரும் தங்கள் பண்பாட்டு வேர்களை அங்கே புதுப்பித்துக்கொள்வது புதிதல்ல. கோவில், வழிபாடு, பண்டிகைகள் எனப் பண்பாட்டில் அதிக அக்கறை காட்டுவது சகஜம். ஆனால் இவர்கள் காட்டும் அக்கறை பிரதானமாக மொழியின் மீது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் ஜானகிராமனின் நெருங்கிய உறவினர். ஆனால் நெடுஞ்செழியனைப் பார்த்து ஜானகிராமனுக்கு அரசியலில் ஈடுபாடு ஏற்படவில்லை. தமிழ் மீது ஈடுபாடு வந்தது. சம்பந்தமின் பின்புலத்தில் நெடுஞ்செழியனைப் போன்ற ஆளுமையின் தாக்கம் இல்லை என்றாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சியால் அறுபதுகளில் தமிழகம் முழுவதும் பரவியிருந்த மொழி உணர்வு இவரையும் பற்றிக்கொண்டது.

அமெரிக்காவிலேயே தங்கிவிட்டாலும் தமிழுடனான தொடர்பை இவர்கள் துண்டித்துக்கொள்ளவில்லை. புற்றுநோய் சிகிச்சை நிபுணரான ஜானகிராமன், நோய் முற்றிக் கையறு நிலையில் இருக்கும் நோயாளிகளிடம், புராணங்களில் தான் படித்த தத்துவக் கதைகளை அவர்களுக்குச் சொல்லி ஆற்றுப்படுத்துவார். திருக்குறளில் உள்ள கருத்துகளைச் சொல்வார்.

“பெரிய ஓட்டல்களில் தங்கும்போது அங்கே இலவசமாக பைபிள் பிரதியைக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறோம். மிகப் பிரமாதமான முறையில் அந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கும். அதுபோலவே திருக்குறளைத் தந்தால் என்ன என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது” என்று நினைவுகூரும் சம்பந்தம், மேற்கொண்டு தாங்கள் செய்த முயற்சியை விவரித்தார். ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் ஆங்கிலம் என்று திருக்குறளை அச்சிட்டு இலவசமாக வினியோகித்திருக்கிறார்கள். அழகான அச்சமைப்பு, உயர் தரமான காகிதம் ஆகியவை கொண்ட திருக்குறள் நூலை ஆயிரக் கணக்கில் அச்சிட்டு அமெரிக்கர்கள் மத்தியில் இவர்கள் வினியோகித்திருக்கிறார்கள்.

யோசனை எப்படி உருவானது?

சம்பந்தம் மற்றும் ஜானகிராமனின் பொதுநண்பரான வைதேகி ஹெர்பர்ட் மூலமாகத் தான் ஹார்வர்டில் தமிழுக்கான இருக்கையை அமைக்கும் யோசனை இவர்களிடம் கருக்கொண்டது. சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் வைதேகி ஹெர்பர்ட் இந்த யோசனையை முன்வைத்திருக்கிறார். இவர்கள் இருவரும் மேற்கொண்டு விவாதித்து அதற்கான முயற்சியைத் தாங்களே முன்னெடுக்க வேண்டும் எனத் தீர்மானித்து அதற்கான விதையையும் ஊன்றிவிட்டார்கள். “ஆறில் ஒரு பங்கு தொகையை நாங்கள் கொடுத்திருக்கிறோம். வசதி படைத்த தமிழர்கள் இதில் பங்கெடுத்துக்கொள்ள முன்வந்தால் விரைவில் இந்தப் பணியை முடித்துவிடலாம்” என்று சொல்லும் ஜானகிராமன் செல்லும் இடமெல்லாம் தமிழர்களிடம் இதற்கான கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறுகிறார். இந்த இருக்கை அமைந்தால் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான ஆய்வுகளும், பாடங்களும் நடக்கும்.

“மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை” என்று அண்மையில் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி கூறியிருக்கிறார். சம்பந்தம், ஜானகிராமன் மேற்கொண்டுள்ள முயற்சியைப் பாராட்டியுள்ள அவர், தமிழக அரசு இதற்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். பா.ம.க.வின் இளைஞரணிச் செயலர் அன்புமணி ராமதாஸும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். ஹார்வேர்டில் செய்யப்பட்ட ஆய்வுகள்தாம் யோகா என்னும் கலையின் பெருமைகளை உலகம் அறிய உதவின என்று கூறிய அவர், ஹார்வேர்டில் தமிழுக்கு இருக்கை அமைந்தால் தமிழ் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நடைபெறவும் தமிழின் பெருமைகளை உலகம் அறியவும் அது உதவும் என்று கூறியிருக்கிறார். “100 கோடி செலவில் தமிழ்த் தாய்க்குச் சிலைவைக்கப்போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. “தமிழ்த் தாய் சிலை அமைப்பது வரவேற்கப்பட வேண்டியது தான் என்றாலும், தமிழ்த் தாயை உலகம் முழுவதற்கும் கொண்டு செல்வதற்கான இந்த முயற்சி அதைவிட முக்கியம்” என்று அன்புமணி கூறியிருக்கிறார்.

உலகளாவிய அறிவுத் தளத்தில் தமிழை நிலைநிறுத்த உதவக்கூடிய முயற்சியைத் தொடங்கியுள்ள சம்பந்தமும் ஜானகிராமனும் தமிழகத் தமிழர்களிடமிருந்தும் இதற்கான பங்களிப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

இருக்கை என்றால் என்ன?

பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட ஒரு துறை அல்லது மொழிக்கெனத் தனித் துறைகள் ஏற்படுத்தப்படுவதுண்டு. இருக்கை (Chair) என்பது வித்தியாசமானது. ஒரு துறை அல்லது புலம் என்தோடு இது இணைக்கப்பட்டுருக்கும் என்றாலும் அதற்கெனத் தனித்த அடையாளமும் உயர் கவுரவமும் இருக்கும். ஒரு மொழிக்கான இருக்கை என்பது அந்த மொழிக்கெனப் பிரத்யேகமாக ஒரு பேராசியரை நியமிப்பதாகும். அவர் தலைமையில் அம்மொழி சார்ந்த ஆய்வுகள் அங்கே நடைபெறும். மொழியைக் கற்றுத்தருவதற்கும், ஆண்டுதோறும் கருத்தரங்குகள் நடத்தவும் ஏற்பாடு இருக்கும். அறக்கட்டளைக் கொடை பெற்றே இத்தகைய இருக்கைகள் உருவாக்கப்படுகின்றன. அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பெயரிலும் இருக்கைகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட அறிவுப் புலத்துக்குப் பல்கலைக்கழகம் வழங்கும் அதிகபட்சமான மரியாதை என்று சொல்லலாம். பல்கலைக்கழகம் உள்ளவரை இந்த இருக்கையும் செயல்படும்

(sambandam47@yahoo.com, kvjanakiraman@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளில் இவர்களைத் தொடர்புகொள்ளலாம்)

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7857999.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.