Jump to content

"சர்வதேசம் எங்கும் பேசப்படும் கனடா “ஈழம் சாவடி”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"சர்வதேசம் எங்கும் பேசப்படும் கனடா “ஈழம் சாவடி” Top News Top News 
[Friday 2015-07-10 19:00]
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் பெருமக்களுக்கு பெருமை தேடித்தரும் ‘ஈழம் சாவடி’ மீண்டும் மூன்றாவது முறையாக கனடாவில் களம் காண்கிறது. கனடா-ஒன்ராரியோவில் மிக வேகமான பொருண்மிய வளர்ச்சி கண்டு வரும் பிரம்டன் நகரில்  வருடாவருடம் இடம்பெறும் ‘கர-பிறாம்’ என்றழைக்கப்படும் பல்லின பல்கலாச்சார பன்னாட்டுத் திருவிழா  இம்மாதம் 10ம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. பல்வகைச் சாவடிகளும் மக்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு  அந்தந்த நாட்டினரின் பாரம்பரியம்  வரலாறு  கலை  பண்பாடு மற்றும் விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் முத்தமிழ் நிகழ்வுகளும் உணவு உடை உட்பட  மலிவு விலையில் ஏராளம் வர்த்தகச் சாவடிகளுமென சிறப்பாக ஏற்பாடாகியுள்ளது.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் பெருமக்களுக்கு பெருமை தேடித்தரும் ‘ஈழம் சாவடி’ மீண்டும் மூன்றாவது முறையாக கனடாவில் களம் காண்கிறது. கனடா-ஒன்ராரியோவில் மிக வேகமான பொருண்மிய வளர்ச்சி கண்டு வரும் பிரம்டன் நகரில் வருடாவருடம் இடம்பெறும் ‘கர-பிறாம்’ என்றழைக்கப்படும் பல்லின பல்கலாச்சார பன்னாட்டுத் திருவிழா இம்மாதம் 10ம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. பல்வகைச் சாவடிகளும் மக்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு அந்தந்த நாட்டினரின் பாரம்பரியம் வரலாறு கலை பண்பாடு மற்றும் விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் முத்தமிழ் நிகழ்வுகளும் உணவு உடை உட்பட மலிவு விலையில் ஏராளம் வர்த்தகச் சாவடிகளுமென சிறப்பாக ஏற்பாடாகியுள்ளது.

   

கரபிறாம் பல்கலாச்சார விழாவில் ஈழம் சாவடி வரும் வெள்ளிக்கிழமை 10ஆம் நாள் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும் சனிக்கிழமை 11ஆம் நாள் மதியம் 1 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் நாள் மதியம் 1 மணிமுதல் மாலை 7 மணிவரையும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

பிராம்டன் தமிழ் ஒன்றியத்தின் முன்முயற்சியில் பிராம்டன் நகரில் அதிகம் வதியும் தமிழர்களின் சார்பில் இச்சாவடி அமைக்கப்படுகிறது. கலாச்சாரங்களின் சங்கமமாக அமையும் மூன்று நாள் விழாவில் அமையும் பல கலாச்சார சாவடிகளில் ஒன்றாக ஈழம் சாவடியும் அமைந்தது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

 

eelam-savady-2015-100715-seithy%20(1).jp

 

 

eelam-savady-2015-100715-seithy%20(2).jp

 

ஈழம் சாவடிக்கு தங்களை வாழ்த்துக்களை ஏற்கனவே அனைத்துக் கட்சிகளின் தலைமைகளும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன்ää கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஜேசன் கெனி அவர்கள்ää ஈழம் சாவடியின் மேடையில் உரையாற்றää வேறு மாகாணமொன்றிலிருந்து விசேட பயணமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளமை இரட்டிப்புக் கவனத்தைப் பெற்றுள்ளது.

பிராம்டனில் ளுயனெயடறழழன Pமறல ஃ னுiஒநை சுழயன சந்திப்புக்கு அருகாமையில் உள்ள டீசயஅpவழn ளுழஉஉநச ஊநவெசந இல் பிரமாண்டமான அரங்கில் ஈழம் சாவடி இம்முறை அமைக்கப்படுகிறது.

ஈழம் சாவடி அமைவதற்கு தமது கடும் எதிர்ப்பை சிறீலங்காவின் தூதுவராலயமும் உலகலாவிய சிங்கள கடும்போக்காளர்களும் அரச ஆதரவாளர்களும் வழமைபோல் இறுதிவரை வெளிப்படுத்தி வந்தனர்.

 

eelam-savady-2015-100715-seithy%20(3).jp

 

 

eelam-savady-2015-100715-seithy%20(4).jp

 

ஈழம் என்பது ஒரு கற்பனை-நாடு என்றும் உலக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மக்கள் தான் தமிழர்கள் என்றும் பிரிவினைவாதம் கோருவோர் என்றும் இப்படி ஈழம் சாவடியை அனுமதிப்பதாக இருந்தால் காஸ்மீர் போன்ற பிரதேசங்களும் அல்-கய்தா அமைப்புக்களும் நாளை தமக்கென்றும் தனியான சாவடி கேட்பார்கள் என்றும் மிக மோசமான பிரச்சாரத்தை சிறீலங்காவின் சிங்கள ஏகாதிபத்திய பிரச்சார சக்திகள் ஏகமாய்ப் பிரச்சாரம் செய்தன. இவர்களுடன் இணைந்து ஒரு சில இந்திய தமிழ் எதிர்ப்பாளர்களும் மிக மோசமான ஈமெயில் மற்றும் தொல்லைபேசிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன் கனடிய அரச தரப்பினருக்கு ஈழம் சாவடியை அனுமதிக்காது ரத்து செய்யும்படி பெரும் அழுத்தங்களைக் கொடுத்தனர.

இத்தனை எதிர்ப்பையும் மீறி எத்தனை உச்சத்தில் பல அக்ரகாரங்களும் நாயர்களும் சப்பணிகளும் குரல்கொடுத்தாலும் அதையெல்லாம் உடைத்து ‘ஈழம் சாவடி’ மீண்டும் களம் காண்கிறது.

அனைத்துத் தமிழ் பேசும் நல்லுறவுகளும் தங்கள் பேராதரவை வழங்கி இந்த முன்மாதிகையான முன்னெடுப்பை மீண்டும் வெற்றிபெற வைக்க வேண்டுமென ஒழுங்கமைப்பாளர்களும் பிராம்டன் தமிழ் ஒன்றிய நிர்வாகமும் கேட்டு நிற்கிறது.

 

eelam-savady-2015-100715-seithy%20(5).jp

 

 

eelam-savady-2015-100715-seithy%20(6).jp

 

 

eelam-savady-2015-100715-seithy%20(7).jp

 

 

 

 

http://www.seithy.com/listAllNews.php?newsID=135634&category=TopNews&language=tamil

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.