Jump to content

கோமா சக்தி - சிறுகதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோமா சக்தி - சிறுகதை

 
அடிப்படைத் தர்மங்களில் இருந்து மாறுபட்டவனிடம் நியாயம் கேட்க முடியாது.

கிரேக்க பழமொழி 



இலக்கியப் பத்திரிகையின் அட்டைப் படமாகவே புகைப்படம் போடப்பட்டு கோமா சக்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நேர்காணல் ஒன்று வெளி வந்திருப்பதாக  திரு.முடுலிங்கவிடம் அவரது வேலைக்காரன் போய்ச் சொல்லிய போது அவர் குரல் வளைத் தாடி மயிரை சேவ் எடுத்துக் கொண்டிருந்தார். நல்ல காலம் முடுலிங்க கோபம் கொள்ளும் ஆள் கிடையாது என்பதால் தனது குரல் வளையை தன்னிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு கண்ணாடியில் தனது முகத்தைக் கழுவினார். முகம் எப்போதும் போல வடிவாயிருந்தது என்றாலும் முகத்தில் எடுபடாமல் தவறவிடப்பட்ட மயிர்கள் அவரெழுதும் சிறுகதைகளைப் போல தீவிரமற்று பயணச் சோம்பலில் கிடந்தது. ரோஸ் நிறத் துவாயால் முகத்தைத் துடைத்தபடி வேலைக்காரனைப் பார்த்து வாங்கி வந்தனியா அந்தப் புத்தகத்தை என்று கேட்டதும் வேலைக்காரன் என்னவோ முடுலிங்கத்திற்கு விருது கொடுப்பவன் போல புத்தகத்தை இரண்டு கைகளும் நிமிர்த்திப் பிடித்து கொடுத்தான். முடுலிங்கத்திற்கே விருதா என்று நீங்கள் கேட்கும் கேள்வி நியாயமானது என்றாலும் வேலைக்காரன் தோட்டத்தில் தானே வேலை செய்கிறான் அவனுக்கும் ஒரு தோட்ட விருதை வழங்கும் உரிமை இருக்குத்தானே.
 

முடுலிங்கவின் முகத் தோற்றம், வயது உயரம் எல்லாம் உங்களுக்கு தேவை இல்லாதது. முடுலிங்கம் சிறுகதை எழுதும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர். நீங்கள் தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்கைக்கு எதிரானவர் என்றாலும் இவரின் கதைகளை படிக்கலாம். அவரின் கதைகளில் சொந்த நாடு பற்றி நாட்டம், ஏக்கம் கூட இருக்காது. அவர் கண்டதையும் வாழ்ந்ததையும் எழுதும் தார்மீக எழுத்து அறம் கொண்டவர். கதைகளுக்காக முடுலிங்கம் யதார்த்தத்தில் சிறு புனைவை கொண்டு வருவாரே தவிர கதைகளையும் சம்பவங்களையும் மாற்றுவது கிடையாது. முடுலிங்கத்திடம் அயோக்கியத்தனம் கிடையாது. மகா பொய் சொல்லி தன்னையொரு           இடதுசாரி புரட்சியாளனாகவும் புரட்சியாளர்களின் சிந்தனைகளை அப்படியே பின் பற்றி நடப்பவன் போலவும் கதைக்கத் தெரியாது. தானும் புலிகள் இயக்கத்தில் இருந்தவன் என்றோ அல்லது பிரபாகரனுக்கு ஆலோசாகராக  இருந்தனான் என்றோ ஒரு பொய்யை சொல்லிக் கொண்டு அடையாளம் பெறவும் அவருக்கு விருப்புக் கிடையாது. அவருக்கு படிச்சதுக்கு ஏற்ற தொழில் இருக்கிறதால ஒரு பிரச்னையும் இல்லை.
 
அவர் சிரிச்சு முடியத் தான் வேலைக்காரன் தேத்தண்ணியைக் கொடுத்தான், முடுலிங்கம் தேத்தண்ணியை வாங்கிக் குடிச்சுக் கொண்டு வேலைக்காரனுக்கு இரண்டு அப்பிள்களை துண்டு துண்டாய் வெட்டிக் கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டதோடு பக்கம் 30ல் தொடங்கும் கோமா சக்தியின் நேர்காணலை வேலைக்காரனுக்கு வாசிச்சுக் காட்டுவதாகவும் வேகமாய் வந்து கதிரையில் இருக்கும் படியும் முடுலிங்கம் சொன்னது தான் தாமதம் வேலைக்காரனுக்கு குண்டியில அடிச்ச புளுகம். இரண்டு அப்பிளையும் தோல் சீவி துண்டு துண்டாய் வெட்டிக் கொண்டு வந்து மேசையில் வைத்து விட்டு கதிரையில் இருந்து விட்டான். முடுலிங்கம் வீபூதியை பூச மறந்து இருக்கிறார் எண்டதையே வேலைக்காரன் சொல்லவே இல்லை. அவன்  கள்ள மவுனத்தை பூசாத வீபூதியில் பழகிக்கொண்டான். 

 
 
சுங்கப்பனை விருது புலிகள் இல்லாமல் போனதினாலேயே சாத்தியமாகியது, முடுலிங்கம் வாசிக்கத் தொடங்கும் நேர்காணலின் தலைப்பு இப்படி இருந்தது. 

 
 
நேர்காணலை முடுலிங்கம் வாசிக்கும் தொனியை என்னால் உங்களுக்கு உணர்த்தமுடியாது. அவர் ஒரு அதியுச்ச கோபத்தோடு ஒருவனை தூசணத்தால் ஏசுவதைப் போன்று வாசித்தார். அந்த நேர்காணலே உங்களுக்காக.

 
கே – ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக உலக அரங்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தமிழர்க்கு சாதகமானதாக அமையும் தருணங்களில் கீபன் படத்தையும் எடுத்துக்கொள்ளலாமா?

 
 
கோ – புலிகள் இல்லாமல் போனதே ஈழத் தமிழர்களுக்கு சாதகமானது தானே. பாசிசத்தையும் அராஜகத்தையும் மக்கள் மீது நடாத்திக் கொண்டிருந்த புலிப் பாசிஸ்டுகள் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார்கள் என்பதை எமது தோழர்கள் கடந்த காலங்களில் சொன்னதை நான் நினைவு கூற வேண்டும். இன்றைக்கு உலகளவில் ஈழம் வல்லரசுகளின் பசியைப் போக்கவல்ல இரையாக மாறியிருக்கிறது. என்றாலும் பிரான்ஸ் மக்களிடம் ஈழத் தமிழர்கள் தொடர்பாக ஒரு இரக்கம் இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் கீபன் திரைப்படம். அதற்கு உலகளவில் உயரிய விருதான கோண் விருது வழங்கப்பட்டிருப்பது சாதகமான சூழலைத் தான் காட்டுகிறது. சுங்கப்பனை விருது புலிகள் இல்லாமல் போனதினாலேயே சாத்தியமாகியது.

 
கே – உண்மை தான், நீங்கள் ஒரு எழுத்தாளாராக உலகப் பெயர் பெற்றவர், புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி குறித்த இயக்கம் மீதே பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தவர். இப்பொழுது உலகப் புகழ் பெற்ற நடிகர், எதுவாக இருப்பது சுலபம்?

 
 
 
கோ – எல்லாவற்றுக்கு தேவை இருப்பதாகவே நான் உணர்கிறேன். புலிகளை விமர்சனம் செய்வதின் ஊடாக நான் சத்தியத்தின் பக்கம் நிற்க ஆசைப்படுகிறேன், சாதியை ஒழிக்க அரும்பாடு படுகிறேன். எழுதுவதன் ஊடாயும் இதனையே நடிப்பதின் ஊடாகவும் இதனையே செய்ய விரும்புகிறேன். நடிப்பு என்பது இங்கு கமல்ஹாசன் செய்வதோ எம்.ஜி.ஆர் செய்ததோ அல்ல, பிரான்சின் புகழ் பூத்த பெரிய நடிகரான சூர்ஜ் எனக்கு சொல்லிக் கொடுத்தது தான் நடிப்பு. 

 
கே – நீங்கள் கீபன் திரைப்படத்துக்கான கோண் விருதைப் பெற்ற அந்தத் தருணம் குறித்து சொல்ல முடியுமா?

 
கோ - ஒரு கதாசிரியராக எனக்கு கோண் விருது முக்கியமானது. மாபெரும் மேடையில் கீபன் திரைப்படத்துக்கு தான் பத்து நிமிடங்களுக்கு மேலே கை தட்டினார்கள், இதைவிட என்ன வேண்டும் அந்தத் தருணத்துக்கு.

 
 

கே – இந்தத் திரைப்படத்தில் நீங்கள் பல்வேறு ரீதியாக பங்களிப்பு செய்திருக்கிறீர்கள், உங்கள் இயக்குநர் ஜோக் போடியார் குறித்து சொல்லுங்களேன்? 

 
 
கோ - அவர்கள் பிரான்சின் பரம்பரை சினிமாக்காரர்கள் அவரது அம்மாவும் அப்பாவும் கூட இயக்குனர்கள் தான். படப்பிடிப்பில் ஒரு கோணத்தில் சரியான ஷாட்ஸ்களை ஓகே என்றாலும் அதே ஷாட்ஸ்சை பல தடவை வேற மாதிரி எடுப்பார்.

 
 
கே – எந்த மாதிரியான பாத்திரம் ஏற்று இந்த படத்தில் நடித்திருக்கிறீர்கள்?

 
 
 
கோ - நான் கடல் வழியாக தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு புலிப் பாசிஸ்டாகவே நடித்திருக்கிறேன், அந்த இயக்கத்தில் நான் இருந்ததினால் எனக்கு அதனை நடிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஒரு புலிகள் இயக்கத்தவன்  எப்படியான உடல் மொழிகளை கொண்டிருப்பான் என்றெல்லாம் எனக்குத் தெரியுமென்பதால பிரச்னை கிடையாது. 

 
 
முப்பதாவது பக்கத்தின் முடிவில் இந்தக் கேள்வி தான் இருந்தது. முடுலிங்கத்திற்கு நீண்ட நாட்களின் பின் தூசணத்தால் பேசவேண்டும் என்று தோன்றியதும் மனிசன் பிரஞ்சு தூசணம் ஒண்டை பேசினார். கோமா சக்தி ஆங்கில படமொன்றில் நடித்திருந்தால் Fuck என்று எல்லோருக்கும் தெரிந்த ஒரு தூசணத்தை தான்  முடுலிங்கம் பேசியிருப்பார். நல்ல காலம் அது தமிழ்ப் படமாய் இருக்கவில்லை. பத்திரிக்கையை  ஸ்டூலில் வைத்துவிட்டு தட்டில் இருந்த அப்பிள் துண்டொன்றை கடித்துக் கொண்டே வேலைக்காரனையும் சாப்பிடும் படி கையால் காட்டினார். அப்பிள் துண்டை கையில் எடுத்த வேலைக்காரனுக்கு முகப்பு அட்டையை மீண்டும் ஒரு தடவை பார்த்து விடவேண்டும் போல தோன்றியது. புத்தகம் வாசிக்கப்படவிருக்கும் 31வது பக்கத்தை மடித்து குப்புற வைக்கப்பட்டிருந்தது. தட்டில் அப்பிள்கள் முடிந்து போய்விட்டதையடுத்து போத்தலில் இருந்த தண்ணியை அட்டனக்கால் போட்ட படி குடித்த முடுலிங்கம் மீண்டும் ஒரு தடவை தூசணம் ஒன்றை பேசினார். அது எந்த மொழியிலானது என்று தெரியாவிட்டாலும் அது தூசணம் தான் என்பதை வேலைக்காரன் விளங்கிக் கொண்டான். 

 
 
உள்ளி கண்ட இடத்தில பிள்ளைப் பெறும் பழக்கத்தை உலகத்துக்கு சொல்லிக் கொடுக்க இவனை விட ஆள் இல்லையெண்டு முடுலிங்கம் சொன்னதை கையில் கிடந்த கடைசி அப்பிளைக் கடிச்சுக் கொண்டே வேலைக்காரன் கேட்டுக் கொண்டேயிருந்தான். உலக வல்லாதிக்கத்தையும் காலனி ஆதிக்கத்தையும் மார்க்ஸ்சுக்கு பிறகு தான் தான் எதிர்க்கிறவன் போல கதைச்சு எழுதின நடிப்பை விட  இவன் இதில நடிக்க வாய்ப்பில்லை. மார்க்ஸ் என்றால் கா.மார்க்ஸ் என்று மீண்டும் முடுலிங்கம் அழுத்திச் சொன்னார். இரண்டு நாள் இயக்கப் பொடியளோட பேசிகுள்ள போய்ட்டு வந்திட்டு நானும் புலிகள் இயக்கத்தில இருந்தவன் எண்டு சொன்னால் நம்புறதுக்கு எல்லாரையும்  என்ன குறுப்பு பரிதி ரசிகர்கள் என்று நினைச்சிட்டார் போல,

 
 
வெளியில் அவ்வளவு கொடும்பனி பெய்து கொண்டிருந்தாலும் முடுலிங்கத்தின் முகத்தில் தீக்குழம்பு பெருகுவதை பார்த்து குட்டி ஆடு விறைத்திருப்பதைப் போல வேலைக்காரன் இருந்ததையும் அவர் பொருட்படுத்தவில்லை. குப்புற மடித்துக் கிடந்த முப்பத்தோராவது பக்கத்தை எடுத்து மீண்டும் வாசிக்கத் தொடங்கினார்.
 
கே – ஒரு நடிகராக ஆகிவிட்டீர்கள்? ஈழப் பிரச்னை குறித்த தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க கேட்டால் ஒப்புக்கொள்வீர்களா?

 

கோ – தமிழ் நாட்டு சினிமாக்காரர்களுக்கு ஈழப் பிரச்னை குறித்து ஒரு மொட்டையான கருத்துத் தான் இருக்கிறது. அவர்கள் சீமான் மேடைகளில் பேசுவதையே குறிப்பாக எடுத்து ஈழத் திரைக்கதையை வடிவமைக்கிறார்கள். மாபெரும் பாசிச அமைப்பான புலிகள் அமைப்பை அவர்கள் கொண்டாடத் துடிக்கிறார்கள். என்னால் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க முடியுமெனில் அது குழந்தைப் போராளிகளை பாலத்காரமாக சேர்த்தது குறித்தோ புலிகள் வழங்கிய மரணதண்டனைகள் குறித்தோ எடுக்கப்படவேண்டும். 

 
 
கே -  கீபன் திரைப்படத்தில் உங்கள் படைப்புகளில் வந்த பாத்திரங்கள் ஏதேனும் வந்திருக்கிறதா?

 
 
 
கோ - நான் எனது படைப்புகளில் வந்தவன் தானே. அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு திரைக்கதையில் மாற்றங்களை செய்யும் அதிகாரம் எனக்கு வழங்கப் பட்டிருந்தது. கடைசிச் சண்டையின் போது என்னோட மட்டக்களப்பு கடைக்கு மேல ஷெல் விழுந்தது என்று ஒருவர் சொல்வதாக அந்த வசனம் இருக்கும். ஆனால் இறுதிச் சண்டை மட்டக்களப்பில் நடக்கவில்லை என்று  நான் இயக்குனரிடம் சொன்னதன் பின்னர் அந்த வசனம் மாற்றப்பட்டது. அது போல யாழ்ப்பாணச் சண்டையில 2006ம் ஆண்டு காயப்பட்டனான் எண்டு ஒரு வசனம் இருக்கும் அதையும் மாத்தினான்.1996க்கு பிறகு யாழ்ப்பாணத்தில் யுத்தமே நடக்கவில்லை. இதைப் போல என்னால் இயன்றவற்றை செய்தேன்.

 
 
 
கே – அடுத்து உங்களின் படைப்புத் திட்டம் என்ன நீங்கள் ஏன் ஒரு திரைப்படத்தை இயக்கக் கூடாது ? 

 
 
 
கோ –.  படைப்பு என்றால் அடுத்து என் நாவல் ஒன்று வெளிவரவிருக்கிறது. அதன் பெயர் Fox குதைப் புத்தகம். மிக விரைவில்  நீங்கள் கேட்பது சாத்தியமாகலாம். அப்படி இயக்கும் பட்சத்தில் ஈழத்தில் 37 முட்டாள் இயக்கங்களும் செய்த மனிதப் படுகொலைகள் குறித்தும் இஸ்லாமியர்களை புலிகள் வெளியேற்றியமை குறித்தும் ஒரு நல்ல திரைக்கதையை படமாக்குவேன்.

 
 
 
முடுலிங்கம் புத்தகத்தை மூடி ஸ்டூலில் வைத்தார். வேலைக்காரன் முகப்பு அட்டைப் படத்தை இன்னொரு தடவை பார்க்கிறான். அந்தப் புகைப்படத்தில் உள்ள எழுத்தாளனின் ஜெல் பூசப்பட்டு மேவி இழுக்கப்பட்ட ஒவ்வொரு தலைமயிரிலும் பேன்களைப் போல பொய் ஓடிக்கொண்டேயிருந்தது. அது ஈர்களைப் போல குஞ்சுகளைப் பொரிக்காமல் கிபிர் குண்டுகளைப் போல பொய்களைப் வெடித்துக் கொண்டேயிருந்தது. பொய்கள் அவ்வளவு பெருத்துப் போய் தலையெங்கும் ஊர்ந்து கொண்டேயிருந்தது. 
 
இது வேலைக்காரனின் கண்கள் தான். இந்த மயிர்,பொய் எல்லாமே அவன் சொன்ன வார்த்தைகள் தான். அவன் ஒரு அல்ஜீரியன் என்றாலும் அவனுக்கு தமிழ் அத்துப்படி.முடுலிங்கத்தோடு பதினஞ்சு வருஷம் இருந்து அவன் ஆங்கிலத்தையும் தமிழையும் கரைச்சுக் குடிச்சிட்டான். ஈழப் பிரச்சனையில இருந்து பாலஸ்தீன பிரச்னை வரைக்கும் அரசியலில மிகத் தெளிவு. பிரபாகரன் குறித்து தமிழ்நாட்டில் எழுதப்படும் புத்தகங்களில இருக்கிற சம்பவ பிழைகளையே சொல்லிக் கவலைப்படுகிற ஆள் எண்டால் பாருங்கோ. தானொரு இஸ்லாமியன் என்பதில் அவன் பெருமைப்பட்டுக்கொள்கிறவன். மேற்குலக பார்வையில இஸ்லாமியர்கள் எவ்வாறு பார்க்கப்படுகின்றனர் என்பது குறித்த கவலையையும் கோபத்தையும் முடுலிங்கவோடு பகிர்ந்திருக்கிறான். அவனின் பெயரை வேண்டுமென்றால் உங்களுக்கு சொல்லலாம் முகமத் நூர். 
 
ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் மனிதப் படுகொலைகளை செய்து இன்றைக்கு வரைக்கும் மன்னிப்புக் கேட்காத பிரான்ஸின் செங்கம்பள விரிப்பில நிண்டு கொண்டு சனநாயகம் பற்றி கதைக்கிற இவன் எல்லாம் மனிசனே கிடையாது என்று முடுலிங்கம் காலை ஸ்டூலில் தூக்கி வைத்துக் கொண்டே சொன்னார். பாலஸ்தீனத்தில் இண்டைக்கும் மக்களை குண்டு போட்டுக் கொல்கிற யூதர்களின் தேர்வில விருது வாங்கிக் கொண்டு என்னெவெல்லாம் கதைக்கிறார் எண்டு பார்த்தீரே. உலகச் சந்தைகளுக்கு படம் பண்ணிக்கொண்டு உலகமயமாதல் பற்றிக் கதைக்கிறதெல்லாம் எவ்வளவு பெரிய அவமானம்.

 
 
முகமத் நூர் எதுவும் சொல்லவில்லை, அவன் முடுலிங்க பேசுவதை கைகளை கட்டிக் கொண்டு கேட்டபடியே இருக்கிறான். விடுதலையும் புரட்சியையும் உலகுக்கு சொல்லிக் கொடுத்த பிரான்ஸ் ஆசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் விடுதலையை கொடுத்ததே கிடையாது நூர். எங்களுக்கு நடந்த இன ஒடுக்குமுறை குறித்து பிரான்ஸ் வாயே திறக்கவே இல்லை.இண்டைக்கு மைத்திரியை ஆதரிக்குது. மைத்திரி கீபன் விருது வாங்கியமைக்கு வாழ்த்து தெரிவிச்சு அறிக்கை விடுகிறான். அந்தப் படம் ஒரு குப்பை. மேற்குலகத்தின் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு தாளம் போடுது. அதில நடிச்சுப் போட்டு இஸ்லாமிய வெளியேற்றம் குறித்து படம் பண்ணப் போறேன் எண்டு சொலுறது தான் சிரிப்பாய்க் கிடக்கு.

 
 
பிரான்ஸ்ஸில் வாழும் எல்லாம் இஸ்லாமியர்களையும் வேற்றின மக்களையும் மாபியாக்கள் எண்டு சொல்லும் படத்தில நடிச்சுப் போட்டு நாளைக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் மாவோ அம்பேத்கர் பெரியார் என்று எல்லா புரட்சியாளர்களையும் புகழ்ந்து ஒரு கட்டுரை எழுதக் கூடும்.
 

37 ஈழ இயக்கங்கள் முட்டாள் தனமாய் இருந்தது என்றும் பிரபாகரன் பாசிஸ்ட் என்றும் கதை எழுதிக் குவிக்க இனி பிரபாகரனும் இல்லை புலியும் இல்லை. உண்மையா கொழும்பு ஆட்சியாளர்களுக்கு புலிகள் இல்லாதது அவங்கட அரசியலுக்கு எப்படி பின் அடைவா இருக்கோ அப்படி கோமா சக்திக்கும் பின் அடைவு தான். 

 
 
தமிழ்நாட்டில இவர் சொல்லுறது தான் சத்தியத்தின் தேவ வாக்காய் நம்புகிறதுக்கு இன்னும் ஆக்கள் இருக்கிறது தான் கவலையாய் இருக்கு என்று சொல்லி முடித்த முடுலிங்கவிடம் நூர் இப்படிச் சொல்லத் தொடங்கினான்.

 
 
31வது பக்கத்தில வாற கேள்வியொன்றில கடைசிச் சண்டை மட்டக்களப்பில நடக்கவில்லை எண்டு சொல்லிச் சொல்லுவதும், யாழ்ப்பாணத்தில 96க்கு பிறகு சண்டை நடக்கவில்லை எண்டு சொல்லுவதும் சரியான பிழை. கடைசிச் சண்டை என்று இவர் நினைக்கிறது மே -18ம் திகதியைப் போலத் தான் கிடக்கு.  கிழக்கு மாகாணத்தில இருந்து தானே கடைசிச் சண்டையை மகிந்த தொடங்கினவன். 96க்கு  பிறகு யாழ்ப்பாணத்தில சண்டை நடக்கவில்லை எண்டு சொல்லுறார். உண்மையா இவர் சிறிலங்காவின் மூன்று மூன்று சனாதிபதிகளுக்கு ஒழுங்கே சந்திரிக்கா ,மகிந்த ,மைத்திரி என்று உலகளவில் சனநாயக சாயம் பூசுறார்.  அவருக்கு விருது வாங்கவேணுமெண்டு ஆசை உங்களுக்கு விருது குடுக்க வேணுமெண்டு ஆசை. நீங்கள் இந்த சம்பவத்தை வைச்சு ஒரு கதை எழுதுங்கோவன் என்றான் நூர்.

 
 
நூரின் வேண்டுகோளின் படி முடுலிங்கம் எழுதிய கதை இந்தக் கதை தான், ஆனால் தலைப்பு மட்டும் நான் வைத்துக் கொண்டது.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலே படித்திருந்தேன். பரவசமாயிட்டேன்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Yamuna Rajendran JUST A RANDOM SAMPLE

*

1.கலாமோகன ஷோபா சக்தி தாக்குன கொரில்லா நாவல்

2.முத்துலிங்கத்த ஷோபா சக்தி தாக்குன திரு மூடுலிங்க

3.ஈபிஆர்எல்எப் போராளிகள முத்துலிங்கம் தாக்கி எழுதின காலச்சுவடு கதை

4.இதுக்காக முத்துலிங்கத்த சைமன் தமயந்தி போட்டுத் தாக்குன சிறுகதை

5.புலித்தலைவர்கள செக்ஸ் பர்வர்ட்களா தாக்கி நட்சத்திரன் எழுதின சிறுகதைகள்

6.யோ. கர்ணன் புலித்தலவரை தாக்கி எழுதுன கதை

7.சாம்ராஜ் புலித்தலைவரைத் தாக்கி எழுதுன கவிதை

8.சுகன் புலித்தலைவரைத் தாக்கி எழுதின கவிதை

9.ஜெயமோகன் கோட்பாட்டாளர்கள்-எழுத்தாளர்கள்-கலைஞர்கள் பற்றிச் செய்த அவதூறுகள்

ஐயாமார்களே, அகரமுதல்வன் கதை பத்தி பொலம்புற கருத்துச் சொதந்திரக் கண்மணிகளே. இலக்கிய அவதூறுகள்-தனிமனிதத் தாக்குதலுக்கு எதிராகக் கும்பலா (அகரமுதல்வனுக்கு எதிராவும்) கூட்டறிக்கை விடலாம், வாரியளா? அப்பால ஒங்கட படைப்புச் சுதந்தரமே நாறிடும். ரெடியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக புலிகளை தூற்றுவது தான் இவர்களின் "இலக்கியம்". அதுக்கு மாறி மாறி முதுகு சொறிவதற்குப் பெயர் "இலக்கிய வளர்ப்பு". தமிழை இவங்களே வாழ் நாளில் சாவடிச்சிட்டுத் தான் சாவாங்க போல.

அது சரி.. இந்த "இலக்கிய வாதி"களின் கல்வித் தகமை.. சாதாரண தரம் தாண்டி இருக்குமோ..?! இவர்களை புலி எதிர்ப்பாளர்கள் என்பதற்காகவே கல்வி தகமை பாராது பாராட்ட ஒரு குழுமம் இங்கும் உள்ளது. அது தான். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.