Jump to content

சம்பூரை தொடர்ந்து வலி.வடக்கிலும் விடுவிப்பு பேரம்! கூட்டமைப்பின் அரசியல் அரங்கேறுகின்றது!!


Recommended Posts

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் காணப்படும் சுமூகமான நிலைமை பொதுத் தேர்தலுக்கு பிறகும் தொடருமாயின் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள மிகுதி நிலங்களும் விடுவிக்கப்பட்டு மக்களை அங்கு மீளக் குடியேற வைத்து அவர்களை வாழவைக்க முடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை இந்த ஆட்சி மாற்றத்தில் பொதுமக்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதற்கேற்ப நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆயிரத்து 100 ஏக்கர் நிலம் ஆரம்ப கட்டமாக விடுவிக்கப்பட்டது.   அதில் சில குறைப்பாடுகள் காணப்பட்டன. அந்த ஆயிரத்து 100 ஏக்கர் என்பது வளலாய் நிலங்களையும் உட்படுத்தியதாக இருந்தது. வளலாய் நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளோ,ஆக்கிரமிக்கப்பட்ட
நிலப்பரப்பிற்குள்ளோ வராது.     ஆனால் 1371  ஏக்கர் வலி.வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத பிரதேசமாக இருந்த வகையில் 563 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.

வலளாய் பகுதியில் விடுவிக்கப்படாத சில பிரதேசங்களை விடுவிப்பது தொடர்பில் இரு வாரங்களுக்கு முன்னர் மீள்குடியேற்ற அமைச்சு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன்  கலந்துரையாடப்பட்டது.    அதனடிப்படையில் 18 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்கள் யாழில் மேலும் விடுவிக்கப்பட வேண்டிய நிலங்களை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளனர். 

  மேலும் மன்னார் முள்ளிக்குளம் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் பேச்சுக்கள் நடாத்தப்பட்டு வருகின்ற நிலையில் அந்த நிலமும் விரைவில் விடுவிக்கப்படும்
எனவும் மாவை தெரிவித்தார்.http://www.pathivu.com/news/41658/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி! கூட்டமைப்பிட்ட ஜயவேவா!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு.... கள்ளர்களின், கூடாரம்.

இவங்கள்... வாயை, திறந்தால்... பொய் தான், முதலில் வரும். 
பிறகு தான்.... நாத்தம் வரும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.