Jump to content

சம்பந்தனிடம் தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் மூதூர் முஸ்லிம்கள்


Recommended Posts

சம்பந்தனிடம் தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் மூதூர் முஸ்லிம்கள்

JUL 18, 2015by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள்

tna-muthur-muslimகிழக்கில், மட்டுமன்றி வட-கிழக்கிலும் கூட முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மூதூர் அரசியல் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முஸ்லிம் பிரமுகர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று மூதூரில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் பங்கேற்ற மூதூர் அரசியல் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பிரமுகர்கள், மூதூரைச் சேர்ந்த ஒருவருக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தேசியப்பட்டியல் மூலம் பெற்றுத் தருமாறு இரா. சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்தனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பட்டியலில் மூதூரைச் சேர்ந்த வேட்பாளருக்கு இடமளிக்காமல் ஏமாற்றி விட்ட விசனம் தெரிவித்த அவர்கள், தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து, ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தருவதற்கு உதவுவதாகவும், அதற்குப் பதிலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப்பட்டியலில் மூதூருக்கு இடமளிக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

tna-muthur-muslim

இதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன், ‘கிழக்கில், மட்டுமன்றி வட-கிழக்கிலும் கூட முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது.

படித்த, பக்குவமான, கருமங்களை சரியாக கையாளக் கூடிய ஒரு முஸ்லிம் வடகிழக்கின் முதலமைச்சராக வருவாராயின் அவரை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.

நாங்கள், நேர்மையாக- தூய்மையாக- நிதானமாக நடப்போம். நாம் முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். எம்மால் இயன்றளவுக்கு முஸ்லிம்களுக்காக கடமையாற்றுவோம்.

உங்களின் ஆதரவை எமக்குத் தாருங்கள். அதன் மூலம் முஸ்லிம் தலைவர்களுக்கு தெளிவான ஒரு செய்தியை அனுப்புங்கள். உங்களின் சமூகம் நிமிர்ந்து நிற்கும்.

வேட்புமனுக்கள் நிறைவடைந்து விட்ட போதும், உங்களை நான் கைவிட மாட்டேன். முஸ்லிம்- தமிழ் மக்களின் உறவுகளை வலுப்படுத்த எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்.

2016ஆம் ஆண்டு முடிவதற்குள், தமிழ்,முஸ்லிம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அரசியல் தீர்வு ஒன்று காணப்படும். அதனை இரண்டு சமூகங்களும் இணைந்து அனுபவிக்கும் நிலை நிச்சயம் உருவாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/07/18/news/7942

 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்லதொரு அறிகுறி திருமலை மாவட்டத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து செல்லவேண்டிய அவசியம் இருக்கின்றது. சிங்களவர்களை திருமலையில் ஓரங்கட்ட கிடைத்த நல்ல சந்தர்ப்பம்.  திருமலை, சேருவிலை, மூதூர் ஆகிய தொகுதிகளைக் கொண்ட திருமலை மாவட்டத்தில் 4 ஆசனங்கள் உண்டு. இதில் சேருவிலை தொகிதியைத் தவிர மூதூர், திருமலை மாவட்ட வாக்காளர் ஓரணியில் திரள்வார்களாயின் 3 ஆசனங்களை வெல்ல வாய்ப்புகள் உண்டு. இதில் 2 ஆசனங்களைக் கூட முஸ்லிம்களுக்குக் கொடுக்கலாம். முஸ்லிகள் கட்சி மாறுதல், சிங்களத்துக்கு சார்பான போக்கைக் கடைப்பிடித்தல், சுயநல அரசியல் (இது தமிழ் கட்சிகள் எல்லாவற்றிடமும் அதிகமாகவே உண்டு) போன்றவற்றில் இருந்து விலகி இதய சுத்தியுடன் செயற்படுவார்களாயின் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு நன்மை பயக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் தெரிவாவர்கள்.  அதில் ஒருவர்தான் தமிழராக (சம்பந்தர்) வரமுடியும். மிகுதி மூன்றில்  இரண்டு சிங்களவர்கள், ஒரு முஸ்லிம் அல்லது இரு முஸ்லிம்கள் ஒரு சிங்களவர் என வரக்கூடிய நிலையில்தான் வாக்காளர்களின் விகிதம் உள்ளது.

தமிழர்களின் வாக்குப் பிரிந்து, முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க.வுக்கு வாக்குகள் அதிகம் விழுந்தால் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற மாதிரி தமிழரின் பிரதிநிதித்துவமே இருக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூனாவா கொக்கா?? நாலுபேர் வாக்கு போடுகிறதுக்கு ஒரு தேசிய பட்டியல் எம் பீ தரட்டாம்.. அதையும் ஒரு ராஜ தந்திரம் என்று சொல்ல ஒரு கூட்டம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் திருமலை தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம்களின் செல்வாக்கு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. நுனிப் புல் மேயும் கூட்டத்திடம் வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம்!:innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனம்...டீப்பா திங் பண்ணாதீங்க சார்.. தட்டினாலும் தட்டி போடும்..பிறகு எலக்சன் றிசல்ற் வர நேரம் ஆக்கள் இல்லாமல் சப் என்று போடும்.. 

ஒரு தேசிய பட்டியல் எம் பீக்கு எத்தனை வாக்குகள் வேணும் என்று ஒரு குத்து மதிப்பா சொல்லுங்க சார்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையே தெரியாத கூட்டங்களுடன் பேசிப் பயன் இல்லை. நன்றி வணக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி,ஒன்று தெரியாவிட்டால் நாலு விசயம் தெரிந்தவர்களே இப்படித்தான் சொல்லுகிறவை. :(

என்னவோ, கடைசியாக கூட்டமைப்புக்கு 230,000 வாக்குகள் வந்த போது ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனம் வந்தது. அதேபோல மகிந்தாவின் கட்சிக்கு நாற்பது இலட்சத்துக்கு மேல வந்த போது 17-19 ஆசனம் கிடைத்தது. எனவே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்க்கி குறைந்தது 2 இலட்சம் வேண்டும்..

 

எனவே, இந்த முறை தேசிய பட்டியல் ஒரு ஆசனம் கிடைப்பதற்கான சந்தர்பம் மிகக்குறைவு. ஆனால் அப்படி ஒன்று வருவதாக இருந்தால் இங்கே கூடி இருக்கிற 40,000-150,000 பேருக்காக அந்த ஒன்றை கொடுக்கலாம். அந்த மூனா சுமந்திரனை விட கேவலப்பட்ட மனிதராக இருக்க மாட்டார் என்று நம்புவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்,
அம்பாறையில்... சிங்களவனை வெற்றி பெறச் செய்தது போல்...
இம் முறை  தனது இடத்தை.... முஸ்லீம்களுக்கு கொடுத்து, இன ஐக்கியத்தை பேண முன் வர வேண்டும்.animierte smilies Smileys lieben es zu lachen, fett zu grinsen, happy zu sein, sich zu freuen, froh zu sein und einfach witzig zu sein. Der typische und meist gebrauchteste Smilie der Welt ist sicher der 'Lachende Smiley

இன்னும், முஸ்லீம்களை நம்ப.... ஒரு கூட்டம் இங்கை.... இருக்குது.m1703.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.