Jump to content

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!


Recommended Posts

உனக்காக
எதையும் தாங்குவேன்
நான் சுயநலவாதி இல்லை
உன் இன்பத்தில் மட்டும்
பங்குகொள்ள ......!!!

நீ காதலில் ஒரு நாணயம்
இரண்டு பக்கமும் விழுகிறாய்
நீ எந்த பக்கம் விழுவாய் என்ற
ஏக்கத்துடன் வாழ்கிறேன்
அதிலும் சுகமுண்டு ....!!!

heart.gif

 

உன்னுடன் பேச வேண்டும்
உன்னுடன் மட்டும் பேச வேண்டும்
உள்ளத்தில் இருப்பதை எல்லாம்
உள்ளதை உள்ளபடி பேசவேண்டும்
உண்மையுடன் பேசவேண்டும் ...!!!

என்ன பேசப்போகிறாய் ..?
என்கிறாயா ..? எப்போது ..?
என்னை பற்றி பேசியிருக்கிறேன் ..?
எல்லாம் உன்னை பற்றி தானே
எப்போதும் பேசுவேன்
என் உயிர் நீ தானே உயிரே ...!!!

heart.gif

படையில் எல்லாம் இழந்து ...
நிற்கும் வீரனைப்போல்...
உன்னிடம் எல்லாவற்றையும் ...
வழங்கி இப்போ ஒன்றும்
இல்லாமல் நிற்கிறேன் ...!!!

என்று இழக்கமாட்டேன்
நீ தந்த நினைவுகள்
நான் கொண்ட உண்மை காதல்
உனக்காக எழுதிய கவிதை
நீ தந்த நினைவு பரிசு ...!!!

heart.gif

எத்தனை எத்தனை பெண்கள்
என் முன்னால் சென்று
விட்டார்கள் - உன் வரவை
எதிர் பார்த்த கண்கள்
சோர்கிறது ...!!!

எனக்கு இரண்டு இதயம்
வேண்டும் -ஒன்று உன்னை
நினைத்து வாழுவதற்கு
மற்றையது
என்னை மறப்பதற்கு ...!!!

heart.gif

பகலில் நீ எத்தனை வலியை
தந்தாலும் இரவில் சுகம் ...!!!
கனவுகள் கனிவாக இருக்கின்றன
நான் இரவுக்காதலன் ....!!!

இறைவா ...
இரவை விடிய விடாதே
கனவில் காதலால் காதல்
செய்கிறேன் பகலின் காயங்கள்
இரவில் தான் ஆறுதல்
அடைகிறது .....!!!

heart.gif

என்னை .....
பத்திர படுத்தியதை
காட்டிலும் உன்னை பத்திர
படுத்துகிறேன் கவனமாக
நீ இருக்கும் இடம் -என்
இதயம் என்பதால் ....!!!

இதயங்கள் இணைவது
காதல் - உயிராய் இணைவது
திருமணம் நாம் இரண்டாகவும்
இணைந்து விட்டோம் உயிரே ...!!!

heart.gif

எத்தனை
முறை எழுதினாலும்
என்ன எழுதினாலும்
அலுக்காமல் இருப்பது
உன்னை பற்றிய கவிதை ...!!!

உன்னை நினைக்க முதலே
கவிதை தானாக வருகிறது
காதல் நாம் வணங்கும் கடவுள்
கவிதை நான் உனக்கு செய்யும்
அர்ச்சனை ....!!!

heart.gif

நீ
நிலாவாக இரு ....!!!
நிழலாக இரு ....!!!
எதுவாக இருந்தாலும் ..
காதல் செய்கிறேன் ....!!!
நிலவாக இருந்தால்
நினைவுகளால் காதலிப்பேன் ...!!!
நிழலாக இருந்தால்
கனவுகளால் காதலிப்பேன்.....!!!

heart.gif

உன்
தீ கொண்ட பார்வையால்
கருகி கொண்டிருக்கிறேன்
உன் மழலை கொண்ட பேச்சால்
துடித்து கொண்டிருக்கிறேன்
தினமும் எரிகிறேன் - உன்
கண் பட்ட காதல் தீயால் ...!!!
இந்த புண்பட்ட இதயத்துக்கு
நீ சிரஞ்சீவி மருந்து ....!!!

heart.gif

உன்னை
சிற்பமாக செதுக்கினேன்
நீ சிற்பமாக இருகிறாய்
நான் தான் சிதைக்கபட்டு
விட்டேன் ....!!!
எண்ண உளியால் செதுக்கிற
உன் உருவம் அழகானது
உளிதான் அழுகிறது ...!!!

heart.gif

உலகில்
பெரிய களஞ்சிய சாலை
என் இதயம் தான் -உன்
இத்தனை நினைவுகளை
சேகரித்து வைத்து அப்பப்போ
தந்து கொண்டிருக்கிறது ...!!!
களஞ்சிய இருப்பு குறையாமல்
உன் நினைவுகளை தா உயிரே ...!!!

heart.gif

என் கவிதையை எடுத்து
காதல் செய்பவர்கள்
புரிந்த கொண்ட அன்பை
கூட - நீ ஏன் அன்பே
புரிந்து கொள்ளவில்லை ..?
ஒன்றில் என்னை புரிந்துகொள்
இல்லையேல் கவிதையை
புரிந்து கொள் ....!!!

heart.gif

எனக்குள் நீயும்

உனக்குள் நானும்
இருக்கிறோம் என்பதை
எத்தனை முறைதான்
தான் உனக்கு சொல்வது ...?
உருவம் தான் இரண்டு
உயிர் ஒன்று என்பது
தானே காதல் .....!!!

heart.gif 

என்னை எல்லோருக்கும்
பிடிக்கும் -ஆனால் எனக்கு
உன்னை மட்டுமே பிடிக்கும் ...!!!
உன்னை எல்லோருக்கும்
பிடிக்கும் -ஆனால் உனக்கு
என்னை மட்டுமே பிடிக்கும் ...!!!
காதல் ஆயிரம் சங்குகளில்
ஒரு சங்கு வலம்புரிபோல் ...!!!

heart.gif 

நீ வந்து விட்டு
சென்றுவிடுவாய்
உனக்கு எங்கு தெரியும்
நான் படும் அவஸ்தை
உன் நினைவுகள் தான்
உள்மூச்சு - உன் கனவுகள்
தான் என் வெளி மூச்சு ....!!!

heart.gif 

எதை எடுத்தாலும் தோல்வி

எதை தொட்டாலும் பிரச்சனை
என்றிருந்த என் வாழ்க்கையில்
நீ வந்தாய் -நினைவுகளை தந்தாய்
பாலைவனமாக இருந்த என்
வாழ்க்கை - நயாக்கர நீர்
வீழ்ச்சியாக்கியவள் -நீ

heart.gif 

நீ தரும் நினைவுகள்
சிலவேளை காயமாய்
இருகிறது - சிலவேளை
மருந்தாக இருக்கிறது ...!!!
அதனால் தான் இத்தனை
வலியை நீ தந்தாலும்
சிரித்துவிட்டு இருக்கிறேன் ...!!!

heart.gif 

வாழ்க்கையில் நான்
பெற்றவற்றை விட
இழந்தவை அதிகம்
உன் கன்ன குழி சிரிப்பில்
என்னை இழந்தேன்
இப்போ உன்னை இழந்து
விட கூடாது என்பதற்காக
எல்லாவற்றையும் இழக்கிறேன்

heart.gif 

நாளாந்தம் நான் படும்
வேதனைகள் சொல்லில் அடங்காது
எந்நாளும் அதை உனக்கு நான்
கூறுவதே இல்லை ....!!!
உன்னோடு இருக்கும் அந்த
நிமிடமே என் இன்ப நிமிடம்
இதயமானவளே ...!!!

heart.gif 

நீ என்ன மின்னலா ..?
வரும் போது இத்தனை
பிரகாசமாக இருக்கிறாய் ..?

நீ என்ன மழைக்கு
பிறந்தவளா ..? இத்தனை
கண்ணீரை தருகிறாய் ,,,,?

நீ மின்னலாக இரு
மழையாக இரு -நான்
உனக்கு மேகமாக இருப்பேன் ...!!!

heart.gif 

காதலில்
சேர்ந்திருக்கும் போது
வரும் இன்பத்தை தான் அன்பே
எல்லோரும் விரும்புவர் -நீ
பிரிந்திருக்க விரும்புகிறாய் ...?
பிரிந்திருக்கும் போது நினைவுகள்
அதிகம் என்பதற்காகவா ...?

heart.gif 

இதயம்
ஒரு கையளவு
என்று சொன்னார்கள்
உன்
இதயத்தில் இணைந்தேன்
இன்று வரை அதன்
எல்லையை தேடுகிறேன்
இப்படிதான் வாழ்க்கையை
தொலைத்தவர்கள் அதிகம்
நான் மட்டும்
விதிவிலக்கில்லை ...!!!

heart.gif 

சந்தோசப்படுகிறேன் உயிரே
இதுவரை காதலை சுமந்தேன்
இப்போ நீ தந்து விட்டு சென்ற
வலிகளை சுமர்ந்து கொண்டு
இருக்கிறேன் ....!!!
உன் வலிகளை சுமக்கும்
கூலியாளாய் என்னை
காதலித்தத்தற்கு நன்றி ...!!!

heart.gif 

உன் இதயம் என்ன காதல்
சிறைச்சாலையா ...?
என்னை கைது செய்து
விலங்கிட்டுருக்கிறாய் ....
ஒன்றில் ஆயுள் கைதியாக்கு ...
தூக்கு தண்டனை கைதியாக்கு ...
தீர்ப்பை தள்ளிப்போடுவதுபோல்
மௌனத்தில் இருக்காதே ...!!!

heart.gif 

நான்
காதல் பிச்சைகாரன்
என்னிடம் இருந்த
எல்லாவற்றையும் இழந்து
உன்னை பெற்றேன் ....!!!
இப்போ உன்னையும் இழந்து
நிற்கிறேன் ...!!!
கிழிந்த சட்டைபோல் சில
நினைவுகள்
ஒட்டி நிற்கின்றன ...!!!

heart.gif 

இறைவா ..?
இரண்டு கண்னை கொடுத்து ...
என்னை கலங்க வைத்தவனே...!!!
எனக்கு இரண்டு இதயம் கொடு ...
அவள் நினைவுகளை சுமக்க ..
ஒரு இதயம் போதவில்லை ...!!!

heart.gif 

காதலில் பொறுமையை ..
கடைப்பித்தது தப்பானது....
நீ கிடைப்பாய் என்று இருந்து...
என் வாழ்க்கையே ....
கானல் நீராகி விட்டது ....
என் கல்லறைப்பூவில் ...
உன் நினைவுகள் தான் ...
ஆத்ம வரிகள் .....!!!

 

heart.gif heart.gif heart.gif 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.