Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யூலை 1983...

 

படித்துக்கொண்டிருந்த என்னை

தெருவில் ஓடத்துரத்தியநாள்

இலங்கையனாக இருந்த என்னை

தமிழனாக மாற்றியநாள்

இலங்கை என் தாய்நாடு என்பதை

வடக்கு கிழக்கு என்றநாள்

தமிழன் என்று அடையாளமிட்டு

 கொல்லப்படவேண்டியவனாக்கியநாள்..

இசுலாமிய சகோதரர்களின் சுயரூபத்தை

நான் தரிசித்தநாள்

அகப்பட்டிருந்தால்

இன்று 31வது நினைவஞ்சலி நாள்............

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனின் ஆறாவடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலியின் பதிவு.

நன்றி  சகோதரா வலியை உணர்ந்து பகிர்ந்து கொண்டதற்கும் நேரத்துக்கும்..

ஈழத்தமிழனின் ஆறாவடு.

நன்றியண்ணா

அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டுக்கு போயிருந்தபோது

அங்கு பேசிய ஒருவர் சொன்னார்

தமிழீழப்போராட்டம் என்பது அழிக்கப்படுவதற்காகவே ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒன்று என்று.

அப்போ நாம்.........???:(:(

அன்றிலிருந்து விரட்ப்பட்டுக்கொண்டிருக்கின்றோமே...:(

 

Link to comment
Share on other sites

83 என்பது எம் இன அழிப்பின் ஒரு அடையாளம் மட்டுமே! ஆனாலும் ஒரு நாட்டிலிருந்தாலும் நாம் இரண்டாம் தரப் பிரஜைகளே என பலருக்கு குறிப்பாக கொழும்பு வாழ் தமிழர்களுக்கு உணர்த்திய ஒரு சம்பவம் இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

83 என்பது எம் இன அழிப்பின் ஒரு அடையாளம் மட்டுமே! ஆனாலும் ஒரு நாட்டிலிருந்தாலும் நாம் இரண்டாம் தரப் பிரஜைகளே என பலருக்கு குறிப்பாக கொழும்பு வாழ் தமிழர்களுக்கு உணர்த்திய ஒரு சம்பவம் இது

 

இலங்கை  என்பது மனதளவிலும் சரி

இனம் சார்ந்த பாதுகாப்பிலும் சரி

இரண்டாக உடைந்தநாள்...

 

இதில் இன்னுமொரு வேதனையான உண்மை என்னவென்றால்

இதுவரை கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும்

சிறீலங்காவின் அனைத்த தலைவர்களும்

அதை ஒட்ட எந்த முயற்சியும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல

மாறாக அதை  ஊதிப்பெருப்பிக்கும் வேலைகளிலேயே காலம் கடத்தியது தான்..

 

நன்றி  மணிவாசகர்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.