Jump to content

திம்பு பேச்சின் அடிப்படையில் தீர்வா? தமிழ் மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதே அது!


Recommended Posts

இரு தேசம் ஒரு நாடு என்பது எமது நிலைப்பாடு இல்லை. அது மக்களின் நிலைப்பாடு. மக்களின் நிலைப்பாடே எமது நிலைப்பாடு. காலம் காலமாக ஏமாற்றப்படும் நிலையினை மக்கள் புரிந்துகொள்வதோடு மாற்றம் ஒன்று தேவை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை  யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய கஜேந்திரகுமார் தமிழ் அரசியல் மாற்றம் தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும். இல்லையேல் எமது பிரச்சனைக்கு தீர்வு எட்டமுடியாது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் புள்ளடி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே தமிழ் மக்களின் புள்ளடியின் முக்கியத்துவத்தை நாம் இதன் மூலம் உணரவேண்டும். எமது இந்த புள்ளடி மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்த்தப்பட்டது என்றால் ஏன் தீர்வைப்பெறமுடியாது. ஆகவே எமது பிரச்சினைக்கு தீர்வை நாம் எட்டமுடியும். அதற்கு சரியான பாதையினை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்றும் கஜேந்திரகுமார்; மேலும் தெரிவித்தார்.

இதனிடையே சிலர் தற்போது திம்பு பேச்சுவார்த்தை எனும் பேரில் மக்களிடம் வருகின்றார்கள். மக்கள் இவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டும்.கூட்டமைப்பினை பொறுத்த வரை அங்கு ஒருசிலர் எடுப்பதே முடிவு. அவர்கள் தான் கட்சியின் நிலைப்பாட்டினை எடுக்கின்றார்கள். அவர்கள் எடுப்ப தனை மற்றைய பங்காளிக்கட்சிகளால் மாற்றக்கூட முடியாது.மக்களை மீண்டுமொரு முறை ஏமாற்றும் வேலையென அவர் மேலும் சுட்டிக்காட்டினார். http://www.pathivu.com/news/41781/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதனிடையே சிலர் தற்போது திம்பு பேச்சுவார்த்தை எனும் பேரில் மக்களிடம் வருகின்றார்கள். மக்கள் இவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டும்.

 

கூட்டமைப்பினை பொறுத்த வரை அங்கு ஒருசிலர் எடுப்பதே முடிவு. அவர்கள் தான் கட்சியின் நிலைப்பாட்டினை எடுக்கின்றார்கள். அவர்கள் எடுப்ப தனை மற்றைய பங்காளிக்கட்சிகளால் மாற்றக்கூட முடியாது.

மக்களை மீண்டுமொரு முறை ஏமாற்றும் வேலையென அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

உண்மை

Link to comment
Share on other sites

கூட்டமைப்பில் ஒரு சிலர் எடுக்கும் முடிவு .உண்மைதான் இருந்ததாலும் அதை வெளியில் சொல்லும் ஜனநாயகம் அங்கு இருக்கு .

இவரது கட்சியில் இவர்  எடுக்கும் முடிவு மட்டும் தான் .அது எக்காலத்திற்கும் மாறப்போவதுமில்லை .கட்சிக்குள் யாரும் வாயை திறந்தால் அம்புட்டுதான் .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.