Jump to content

கணவனுக்குத் தெரியாமல் 4 குடம் தண்ணீரை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கணவனுக்குத் தெரியாமல் 4 குடம் தண்ணீரை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்

 

24-1437722921-water-4545.jpg

சென்னை: உலக மக்களுக்கு மற்ற தினங்களை விட உலக தண்ணீர் தீனம்தான் மிக மிக முக்கியமான தினம். காரணம், தண்ணீர் சந்தித்து வரும் சரமாரியான சவால்கள். உலக தண்ணீர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் தற்போது உலக தண்ணீர் தினத்தைக் குறிப்பிட்டு ஒரு சுவாரஸ்யமான செய்தியைக் காண முடிந்தது. ADVERTISEMENT கொண்டாட்ட நாள் கடந்து விட்டாலும் கூட இந்த செய்தி எந்த நாளுக்கும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. அதை விட இந்த செய்தியில் உள்ளவை நடந்தாலும் நடக்கலாாம் என்ற அச்சமும் ஏற்படுகிறது. அந்த செய்தி இதுதான்...
2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய கற்பனை..
 
இன்றைய முக்கிய செய்திகள் ஈரோடு அருகே வீட்டில் பூட்டி வைத்திருந்த மூன்று குடம் தண்ணீர் திருட்டு போலீஸ் வலை வீச்சு .
மூன்று வயது குழந்தையை lkgயில் சேர்ந்த இரண்டு குடம் தண்ணீர் நன்கொடையாக கேட்ட பள்ளி உரிமையாளர் கைது...
கணவனுக்கு தெரியாமல் வீட்டில் வைத்திருந்த 4 குடம் தண்ணீரை எடுத்துக்கொண்டு மனைவி கள்ளக்காதலுடன் ஓட்டம். கணவன் 4 குடம் தண்ணீரை கண்டு பிடித்து தருமாறு போலீசீல் புகார்...
இரண்டு குடம் தண்ணீர் கொடுத்தால் ஒரே வருடத்தில் 50 குடம் தண்ணீர் தருவதாக தண்ணீர் மோசடி கும்பல் கைவரிசை...
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேசன் கடையில் 3 குடம் தண்ணீர் தருவதாக எதிர்கட்சிகள் வாக்குறுதி.. இதற்கு ஆளும்கட்சி கடும் கண்டனம் ....
பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் மூலம் கடத்தி சென்ற 20,000 லிட்டர் தண்ணீரை விண்வெளி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
உலக தண்ணீர் வங்கியில் இருந்து இந்தியா 50 கோடி லிட்டர் தண்ணீர் கடன் வாங்கியது
பொது மக்கள் அனைவரும் மாதம் ஒரு முறை மட்டுமே குளிக்க வேண்டும்.
இரண்டு சொம்பு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று புதிய சட்டம் அமல்படுத்தியது. மீறினால் இரண்டு சொம்பு தண்ணீரும் பறிமுதல் செய்ய்படும். உலக தண்ணீர் world cup கிரிக்கெட்டில் இந்தியா தண்ணீர் கோப்பையை வென்றது ... இன்றைய தண்ணீர் நிலவரம்.. கிணற்று நீர் ஒரு லிட்டர் 5000 ரூபாய்க்கும் ஆற்று நீர் ஒரு லிட்டர் 10,000 ரூபாய்க்கும் சுத்திகரிக்கப்பட்ட நீர் ஓரு லிட்டர் 15,000 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன... மரம்...வளர்ப்போம்..
 
வருகாலத்தை...வளமாக்குவோம்... இது சிரிக்க அல்ல சிந்திக்க மட்டுமே.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/rocking-whatsapp-message-on-world-water-day-231792.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் , அன்று கன்னியோடு ( கல்யாணம் கட்டி) ஓடிய நீங்கள் , இன்று தண்ணியோடு வந்திருக்கிறீங்கள்...! வாழ்த்துக்கள்...!  :)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.