Jump to content

Recommended Posts

தேர்தலை புறக்கணிப்பதாக தீர்மானித்துள்ளதாக கிழக்கிலும் காணாமல் போனோரது உறவுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இன்று கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
tri-1.JPGதிருகோணமலை மாவட்ட சிவில் சமூகம் மற்றும் திருகோணாமலை மாவட்ட காணாமல் போனோர் சங்கத்தினால் இக்கவனயீர்ப்பு போராட்டம் திருகோணமலை சிவன் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. புதிய அரசாங்கம் காணாமல்போனோர் தொடர்பில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.tri-2.jpgதமது உறவுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறும், தமது கோரிக்கை தொடர்பில் விரிவான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது. பல அரசியல்வாதிகள் காணாமல்போனோர் தோடர்பில் கதைக்கின்ற போதிலும் இதுவரை காலமும் எந்தவிதமான முடிவுகளையும் பெற்றுத்தரவில்லை. எனவே இம்முறை தேர்தலை புறக்கணிப்பதாக தீர்மானித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
tri-3.JPGஇப்போராட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ,வவுனியா, அம்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து உறவுகளை இழந்தவர்கள் பங்கேற்றனர். போராட்டகாரர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சந்தித்து பேசிய போதும் கூட்டமைப்பினர் எவரும் எட்டியும் பார்த்திருக்கவில்லையென கூறப்படுகின்றது.

tri-4.JPG

http://www.pathivu.com/news/42033/57//d,article_full.aspx

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவரும் எட்டியும் பார்த்திருக்கவில்லையென கூறப்படுகின்றது.

காணாமல் போனோரை தேடப்போய் தாங்கள் சிறிலங்கா பாராளுமன்றில் காணாமல் போய்விடுவோம் என்ற  முன் எச்சரிக்கை தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.