Jump to content

புலிகளிற்கு கூட்டமைப்பு குரல் கொடுத்ததாம்! மாவை திருவாய் மலர்ந்தார்!!


Recommended Posts

தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தபோதுதான் அதற்கு எதிராக வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தாரென திருவாய் மலர்ந்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா.

பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிவரைக்கும் ஆதரவாக இருந்தது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளுக்கும் நாம் ஆதரவு வழங்கினோம். அவர்களை உயர்வாக மதித்தோம். எனவே,முன்னால போராளிகள் எமக்கு ஆதரவு வழங்கவேண்டுமெனவும்  அவர் கோரியுள்ளார்.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கை இராணுவமயமாக்க முயன்ற மஹிந்தவை நமது கட்டுக்கோப்பான ஒற்றுமையால் - வாக்குரிமை என்ற ஆயுதத்தால் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி விரட்டினோம். அதேபோன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் நமது உணர்வுகளையும் ஒற்றுமையையும் சரியான முறையில் பயன்படுத்தி எமது பேரம் பேசும் சக்தியை உலகுக்கு உணர்த்தவேண்டும். நமது போராட்டங்களும் தியாகங்களும் வீண் போகக்கூடாது" என்றும் அவர் சுட்டிக்காட்டீள்ளார். http://www.pathivu.com/news/42065/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.