Jump to content

விண்டோஸில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை


Recommended Posts

விண்டோஸில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை

 
 
start_2501789f.jpg
 

விண்டோஸ் 10 இயங்குதளம், அதன் பல்வேறு அம்சங்கள் ஆகியவை பற்றி இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பரவலாக எதிர்பார்க்கப்பட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட் மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோஸுக்குத் திரும்பியிருப்பதும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது.

ஸ்டார்ட் மெனு வசதி முதலில் விண்டோஸ் 95-ல் அறிமுகமானது. அதன் பிறகு அது கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளைப் பொறுத்தவரை ஸ்டார்ட் மெனு விண்டோஸுக்கான நுழைவு வாயில் போன்றதுதான். பழக்கமான வீட்டில் வாசல் கதவைத் திறந்து உள்ளே செல்வது போல பயனாளிகள் விண்டோஸில் ஸ்டார்ட் மெனுவை வரவைத்துத் தாங்கள் விரும்பிய புரோகிராம்களையும், ஆவணங்களையும் எளிதாக அணுகினார்கள். பயனாளிகளுக்கு நட்பான இயங்குதளம் எனப் பாராட்டப்படும் விண்டோஸுக்கு அந்தப் பெருமையைப் பெற்றுத் தந்ததில் ஸ்டார்ட் மெனு அம்சத்துக்குக் கணிசமான பங்கு இருக்கிறது.

1993 முதல் மாறாமல் இருக்கும் இந்த அம்சத்தில் சின்னதாகப் புரட்சி செய்வதாக நினைத்து விண்டோஸ் 8-ல் மைக்ரோசாப்ட் கையை வைத்து ஸ்டார்ட் ஸ்கிரீன் வசதியைக் கொண்டு வந்தபோது பயனாளிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. விண்டோஸ் -8 எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் போக இதுவும் முக்கிய காரணம்.

இப்போது, விண்டோஸ் 10 வெர்ஷனில் இந்த அம்சம் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளது.

விண்டோஸ் எவ்வளவோ மாறிவிட்டது. கையடக்க கம்ப்யூட்டர்களாக ஸ்மார்ட் போன்கள் அவதாரம் எடுத்து இணைய உலகம் ஆண்ட்ராய்டு மயமாகிக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்க ஒரு பழைய அம்சத்தில் கொண்டாட என்ன இருக்கிறது எனக் கேட்கலாம்.

22 ஆண்டுகள் ஆன பிறகும் ஸ்டார்ட் மெனுவை விண்டோஸில் இருந்து தூக்கி வீச முடியாமல் இருப்பது ஏன் என்றும் கேட்கலாம்.

இங்குதான் விஷயமே இருக்கிறது. ஸ்டார்ட் மெனு வெறும் ஒரு அம்சம் மட்டும் அல்ல; அது மென்பொருள் வடிவமைப்பின் முக்கியத்துவத்தை அழகாக உணர்த்தும் ஒரு அம்சம்; அதோடு பயன்பாட்டுத்தன்மை எனும் கோட்பாட்டின் அடையாளம் என்றும் சொல்லலாம்.

விண்டோஸ் மென்பொருள் வடிவமைப்பில் இது சின்ன விஷயம்தான்; ஆனால் இந்தச் சின்ன விஷயத்துக்குப் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருப்பது தெரியுமா?

அந்தக் கதையின் நாயகன் வடிவமைப்பாளரான டேனி ஆரன். முன்னால் மைக்ரோசாப்ட் ஊழியரான இவர்தான் ஸ்டார்ட் மெனுவின் பிரம்மா. 1993-ல் இவர் மைக்ரோசாப்டில் பணிக்குச் சேர்ந்தார். பழக்கவழக்க உளவியல் வல்லுநராகப் பயிற்சி பெற்ற செழுமையான ஆரனிடம் விண்டோஸ் இயங்குதளத்தின் பயனர் இடைமுகத்தை மெருகேற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அனைவரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் விண்டோஸ் இயங்குதளத்தை அமைக்க வேண்டிய பணி இது.

ஆரன் ஏற்கனவே சிம்பன்சி குரங்குகளுக்குப் பேசும் திறன் பயிற்சியில் ஈடுபட்டவர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் சிம்பன்சிகளுடன் தொடர்புகொள்வதற்கான சாதனம் ஒன்றை உருவாக்கினார். சிம்பன்சி களுக்கு அவரால் எதையும் கற்றுத் தர முடியவில்லை என்றாலும், இந்த, முயற்சியின் மூலம் அவர் பயன்பாட்டுத் தன்மை பற்றிய முக்கிய குறிப்புகளைத் தெரிந்துகொண்டிருந்தார்.

விண்டோஸ் இயங்குதளம் தொடர்பான பயனாளிகள் அனுபவம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது இந்தப் பாடம்தான் அவருக்குக் கைகொடுத்தது.

அவருக்குக் கீழ் பணியாற்றிய குழுவினர் விண்டோஸ் இயங்குதளத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளிடம் கொடுத்து சோதனை செய்து கொண்டிருந்தனர். அநேகமாக எல்லாப் பயனாளிகளுமே ஒரு சின்ன டாஸ்க்கைக்கூட செய்து முடிக்க முடியாமல் திணறினர். அதாவது அவர்களால் விண்டோஸில் இருந்த அம்சங்களுக்குள் எளிதாகச் சென்றடைய முடியவில்லை. இந்தத் தடுமாற்றத்தைப் பார்த்த மற்ற புரோகிராமர்கள் நொந்து போயினர். பயனாளிகள் இப்படி இருக்கிறார்களே எனக் கோபம் அடைந்தனர்.

ஆனால் ஆரன் மட்டும் பிரச்சினை பயனாளிகளிடம் அல்ல; விண்டோஸில் எனப் புரிந்துகொண்டார். அதிலும் சோதனையில் பங்கேற்ற ஒருவரிடம் பேசிப்பார்த்தபோது அவர் விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கில் பொறியாளராக இருப்பவர் எனத் தெரிந்துகொண்டார். போயிங் பொறியாளரே விண்டோஸ் உள்ளே எளிதாக உலா வர முடியாமல் தடுமாறினால் மற்றவர்கள் கதி என்ன யோசித்த ஆரன், இயங்குதளத்தில் அடிக்கடி பயன்படுத்தும் அம்சங்களை எப்படிப் பயனாளிகள் கைகளில் எளிதாகக் கிடைக்கச்செய்வது எனத் தீவிரமாக யோசித்தார். விண்டோஸில் வடிவமைப்புக் கோளாறு என உணர்ந்தவர் ஒற்றை பட்டனில் எல்லாவற்றையும் பயனாளிகளுக்குக் கிடைக்கச்செய்ய வேண்டும் என நினைத்தார்.

இந்த யோசனையின் பயனாகத்தான், ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் அனைத்தும் விண்டோஸ் கீழே கட்டம் கட்டமாகத் தோன்றச்செய்யும் டாஸ்க் பார் வசதியை உருவாக்கினார். அதன் பிறகு எந்த புரோகிராமையும் எளிதாகச் சென்றடையும் வகையில் டாஸ்க் பார் அடியில் ஸ்டார்ட் மெனுவை வைத்தார். அவ்வளவுதான்; வடிவமைப்பு முழுமையாயிற்று. விண்டோஸின் இடது மூலையில் ஆரம்ப கட்டம் போல இருக்கும் இந்த அம்சத்தை கிளிக் செய்தால் போதும் ஏணியில் ஏறுவது போல சரசரவென்று விண்டோஸுக்குள் சென்றுவிடலாம்.

இப்படித் தான் ஸ்டார்ட் மெனு விண்டோஸில் அறிமுகமானது.

ஆரன் பின்னர் மைக்ரோசாப்டில் இருந்து விலகிச்சென்றுவிட்டார். ஆனால் இந்தச் சின்ன கண்டுபிடிப்புக்கான காப்புரிமை அவரிடம்தான் இன்னமும் இருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு பற்றி அவர் தனது குறிப்புகளைச் சமீபத்தில் இணையத்தில் பகிர்ந்துள்ளார். பயனாளிகள் அனுபவத்தில் பாடமாக விளங்கக்கூடிய அந்தக் குறிப்பைக் காண: https://goo.gl/7e5cHl

http://tamil.thehindu.com/general/technology/விண்டோஸில்-ஸ்டார்ட்-மெனு-பிறந்த-கதை/article7512004.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி.

கல்லூரியில் படிக்கும்போது பன்ச் கார்ட்(Punch Card) மூலம் கணணியை இயக்கக் கற்று பின்னர் தாஸ்(DOS), யுனிக்ஸ்(Unix), ஐரிக்ஸ்(IRIX), ட்ரூ 64 (True 64) போன்ற இயங்குதளங்களை, வேலையின் திட்டப்பணிகளுக்கான கணணியின் கட்டளைகளை(Commands) மனப்பாடம் செய்து அடிக்கடி உபயோகப்படுத்த வேண்டிவரும்..
 
ஆனால் 90 களின் ஆரம்பத்தில் விண்டோஸ் வந்தபோது தனிக் கணணிக்கான(Standalone OS) இயங்குதளமாகவே இருந்தது.. பின்னர் யுனிக்ஸ், நாவல் நெட்வேர்(Nowell Netware) போன்ற இயங்குதளத்தின் கூட்டுக் கட்டமைப்பு(Networking) அம்ச வெற்றியை கண்டு, அவற்றிற்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட் உருவாக்கியதுதான் விண்டோஸ் என்.டி(Windows NT) மற்றும் விண்டோஸ் வொர்க் குரூப்..(Windows Work Group).

விண்ட்டோஸ் 3.0 விலிருந்து விண்டோஸின் மறுபதிப்பான விண்டோஸ் 95 வந்தவுடன் கணணியில் அதன் முகப்பு கவர்ச்சி(GUI) பயனாளிகளை ஈர்த்தது.. அப்பொழுது ஆரம்பித்தது மைக்ரோசாஃப்டின் ஏறுமுகம். அதில் பயனாளிகள் கணணியின் கட்டளைகளை நினைவிற்கொள்ள அவசியமில்லாமல் வெறும் சுட்டியைக்கொண்டே நமக்குத் தேவையான அனைத்து கட்டளைகளை 'கிளிக்' செய்யவந்த வரப்பிரசாதத்தால், விண்டோஸ் மாபெரும் வெற்றியை ஈட்டியது..

இயங்குதள சந்தையில் அப்பொழுது மைக்ரோசாஃப்ட் பதித்த வெற்றியின் அடித்தளத்தை இன்றுவரை எந்த கொம்பனாலும் அசைக்க முடியவில்லை..

இடையில் ஆப்பிள்(Apple Mac), லினக்ஸ்(Linux) என லொட்டு,லொசுக்கு வந்தாலும், பயனாளிகளுக்கு விண்டோஸின் முகப்பும்(GUI), இயக்க எளிதான வசதியும்(Plug and Play) மிக சிறப்பனவை. 

 

Link to comment
Share on other sites

உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி ராசவன்னியன்.

விண்டோஸ் 10வது பதிப்பு ஜூலை 29 ல் வெளியாகிவிட்டது.

விண்டோஸ் 7, 8, 8.1 இன் பாவனையாளர்கள் இலவசமாக விண்டோஸ் 10 யை தரவிறக்கம் செய்யலாம்.

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி நவீனன்.

இயங்குதளம் 10 நல்லா இருக்கு. இரண்டு வாரங்களாக பயன்படுத்துகின்றேன். நல்ல வேகமாகவும் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு  நவீனன்.

ராசவன்னியரின் விளக்கம் அந்தக்காலத்துக்கு அழைத்துச்சென்றது

பயன்பாட்டை செயலில் தந்த நிழலிக்கும் நன் றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொசுறு தகவல்:

விண்டோஸ் 3.0 மற்றும், விண்டோஸ் வொர்க் குரூப் 3.11 வெளிவந்தபொழுது அது முழுமையான இயங்குதள மென்பொருளாக இல்லை.. அவை தாஸ்(DOS) இயங்குதளத்தின் மேலேயே ஒரு கூடுதல் அம்சமாக செயல்பட்டது..

அதாவது கணணியை தாஸ் 6.22 மூலம் பூட்(Boot) செய்து C:\ என்று 'ப்ராம்ப்ட்' வந்தவுடன் win என தட்டச்சு செய்தால் மட்டுமே விண்டோஸ் 3,11 உயிர்பித்து இயங்கும்..

இந்த குறைபாட்டை நீக்கி, தாஸ் 6.22 மற்றும் விண்டோஸ் 3.11 இரண்டையும் ஒருங்கிணைத்து, முழு இயங்குதளமாக விண்டோஸ் 95 முதன் முதலில் வெளிவந்தது.

இதன்மூலம் விண்டோஸ் 95 கணணி, விண்டோஸ் என்.டி கூட்டுக்கட்டமைப்பில்(Network Domain) ஒரு அங்கமாக(Client) செயல்பட ஏதுவானது.

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி நவீனன்.

இயங்குதளம் 10 நல்லா இருக்கு. இரண்டு வாரங்களாக பயன்படுத்துகின்றேன். நல்ல வேகமாகவும் இருக்கு

உண்மை நிழலி, இயங்குதளம் 10 வேகமாக செயல்படுகிறது. நானும் கடந்த 1 கிழமையாக பயன்படுத்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நவீனன்.

இயங்குதளம் 10 நல்லா இருக்கு. இரண்டு வாரங்களாக பயன்படுத்துகின்றேன். நல்ல வேகமாகவும் இருக்கு

உண்மை நிழலி, இயங்குதளம் 10 வேகமாக செயல்படுகிறது. நானும் கடந்த 1 கிழமையாக பயன்படுத்துகிறேன்.

பத்திலை யாழ் இணையமும் வேகமாக வேலை செய்யுதா????? :unsure::oO::(

Link to comment
Share on other sites

 

பத்திலை யாழ் இணையமும் வேகமாக வேலை செய்யுதா????? :unsure::oO::(

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

சில நாட்களாக புதிய யாழிணையம் வேகமாகத்தான் வேலை செய்கின்றது.


எனது கணணியை பொறுத்தவரைக்கும் வேகம் என்று பார்க்கும் போது இதற்கு முந்திய யாழ் இணையம் வேகமாகவே இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

புதிய யாழில் வேகம் மட்டும் பிரச்சனை அல்ல..  பலவகை குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை உறுப்பினர்கள் முறைப்பாடு செய்தும் ஏன் நிர்வாகத்தில் இந்த பராமுகம்?

இன்னமும் ஒரு திரியை பார்த்துவிட்டு உடனே அடுத்த திரிக்கு மாறினால், காத்திருக்க வைக்கிறது.. இதனால் வெறுப்பே ஏற்படுகிறது. :(

What's the necessity to have flood control here to wait for say 6 or 10 secs.. ? யாழை ஒரே நேரத்தில்  100 பேர் பார்ப்பது என்பது மிக சிறிய இணைய போக்குவரத்துதானே..?

மொத்தத்தில் பழைய யாழ்களமே பயனாளர்களுக்கு சிறந்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய யாழில் வேகம் மட்டும் பிரச்சனை அல்ல..  பலவகை குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை உறுப்பினர்கள் முறைப்பாடு செய்தும் ஏன் நிர்வாகத்தில் இந்த பராமுகம்?

இன்னமும் ஒரு திரியை பார்த்துவிட்டு உடனே அடுத்த திரிக்கு மாறினால், காத்திருக்க வைக்கிறது.. இதனால் வெறுப்பே ஏற்படுகிறது. :(

What's the necessity to have flood control here to wait for say 6 or 10 secs.. ? யாழை ஒரே நேரத்தில்  100 பேர் பார்ப்பது என்பது மிக சிறிய இணைய போக்குவரத்துதானே..?

மொத்தத்தில் பழைய யாழ்களமே பயனாளர்களுக்கு சிறந்தது..

வன்னியனுக்கு காட்டப் படும்.....  flood control here to wait for say 6 or 10 secs.. முன்பு எனக்கு காட்டியது.
இப்போ.... அது தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

நான் எனது மடிகணணிக்கு விண்டோ 10 அப்டேட் செய்தபின்பு சவுண்ட் வரவில்லை. பிறகு ஆடியோ டிரைவர் ஐ அழித்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தபின்பு நல்லாக வேலை செய்யுது.

இதில் இருக்கிற மற்ற ஒரு பிரச்சினை எனவென்றால், விண்டோ 10 ல கூகிள் chrome பயன்படுத்தும்போது தமிழ் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக வருகுது ஆனால் இங்கிலீஷ் எழுத்துக்கள் ஒழுங்காக இருக்குது. யாராவது சொல்லமுடியுமா எப்படி தமிழ் எழுத்துக்களை பெரிதாக பார்ப்பது எண்டு.

Link to comment
Share on other sites

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

கடந்த 3 நாட்களாக வேகமாகத்தான் வேலை செய்கின்றது.:)

நான் எனது மடிகணணிக்கு விண்டோ 10 அப்டேட் செய்தபின்பு சவுண்ட் வரவில்லை. பிறகு ஆடியோ டிரைவர் ஐ அழித்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தபின்பு நல்லாக வேலை செய்யுது.

இதில் இருக்கிற மற்ற ஒரு பிரச்சினை எனவென்றால், விண்டோ 10 ல கூகிள் chrome பயன்படுத்தும்போது தமிழ் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக வருகுது ஆனால் இங்கிலீஷ் எழுத்துக்கள் ஒழுங்காக இருக்குது. யாராவது சொல்லமுடியுமா எப்படி தமிழ் எழுத்துக்களை பெரிதாக பார்ப்பது எண்டு.

நான் பொதுவாக கூகிள் chrome பாவிப்பது இல்லை. ஆனால் நீங்கள் இங்கு எழுதியபின் முயற்சித்து பார்த்தேன் எனது கணணியில் தமிழ் எழுத்து மற்றைய இணணய உலாவிகளில் வருவது போலவே வருகிறது கூகிள் chrome இலும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.