Jump to content

விண்டோஸில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை


Recommended Posts

விண்டோஸில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை

 
 
start_2501789f.jpg
 

விண்டோஸ் 10 இயங்குதளம், அதன் பல்வேறு அம்சங்கள் ஆகியவை பற்றி இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பரவலாக எதிர்பார்க்கப்பட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட் மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோஸுக்குத் திரும்பியிருப்பதும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது.

ஸ்டார்ட் மெனு வசதி முதலில் விண்டோஸ் 95-ல் அறிமுகமானது. அதன் பிறகு அது கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளைப் பொறுத்தவரை ஸ்டார்ட் மெனு விண்டோஸுக்கான நுழைவு வாயில் போன்றதுதான். பழக்கமான வீட்டில் வாசல் கதவைத் திறந்து உள்ளே செல்வது போல பயனாளிகள் விண்டோஸில் ஸ்டார்ட் மெனுவை வரவைத்துத் தாங்கள் விரும்பிய புரோகிராம்களையும், ஆவணங்களையும் எளிதாக அணுகினார்கள். பயனாளிகளுக்கு நட்பான இயங்குதளம் எனப் பாராட்டப்படும் விண்டோஸுக்கு அந்தப் பெருமையைப் பெற்றுத் தந்ததில் ஸ்டார்ட் மெனு அம்சத்துக்குக் கணிசமான பங்கு இருக்கிறது.

1993 முதல் மாறாமல் இருக்கும் இந்த அம்சத்தில் சின்னதாகப் புரட்சி செய்வதாக நினைத்து விண்டோஸ் 8-ல் மைக்ரோசாப்ட் கையை வைத்து ஸ்டார்ட் ஸ்கிரீன் வசதியைக் கொண்டு வந்தபோது பயனாளிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. விண்டோஸ் -8 எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் போக இதுவும் முக்கிய காரணம்.

இப்போது, விண்டோஸ் 10 வெர்ஷனில் இந்த அம்சம் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளது.

விண்டோஸ் எவ்வளவோ மாறிவிட்டது. கையடக்க கம்ப்யூட்டர்களாக ஸ்மார்ட் போன்கள் அவதாரம் எடுத்து இணைய உலகம் ஆண்ட்ராய்டு மயமாகிக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்க ஒரு பழைய அம்சத்தில் கொண்டாட என்ன இருக்கிறது எனக் கேட்கலாம்.

22 ஆண்டுகள் ஆன பிறகும் ஸ்டார்ட் மெனுவை விண்டோஸில் இருந்து தூக்கி வீச முடியாமல் இருப்பது ஏன் என்றும் கேட்கலாம்.

இங்குதான் விஷயமே இருக்கிறது. ஸ்டார்ட் மெனு வெறும் ஒரு அம்சம் மட்டும் அல்ல; அது மென்பொருள் வடிவமைப்பின் முக்கியத்துவத்தை அழகாக உணர்த்தும் ஒரு அம்சம்; அதோடு பயன்பாட்டுத்தன்மை எனும் கோட்பாட்டின் அடையாளம் என்றும் சொல்லலாம்.

விண்டோஸ் மென்பொருள் வடிவமைப்பில் இது சின்ன விஷயம்தான்; ஆனால் இந்தச் சின்ன விஷயத்துக்குப் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருப்பது தெரியுமா?

அந்தக் கதையின் நாயகன் வடிவமைப்பாளரான டேனி ஆரன். முன்னால் மைக்ரோசாப்ட் ஊழியரான இவர்தான் ஸ்டார்ட் மெனுவின் பிரம்மா. 1993-ல் இவர் மைக்ரோசாப்டில் பணிக்குச் சேர்ந்தார். பழக்கவழக்க உளவியல் வல்லுநராகப் பயிற்சி பெற்ற செழுமையான ஆரனிடம் விண்டோஸ் இயங்குதளத்தின் பயனர் இடைமுகத்தை மெருகேற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அனைவரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் விண்டோஸ் இயங்குதளத்தை அமைக்க வேண்டிய பணி இது.

ஆரன் ஏற்கனவே சிம்பன்சி குரங்குகளுக்குப் பேசும் திறன் பயிற்சியில் ஈடுபட்டவர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் சிம்பன்சிகளுடன் தொடர்புகொள்வதற்கான சாதனம் ஒன்றை உருவாக்கினார். சிம்பன்சி களுக்கு அவரால் எதையும் கற்றுத் தர முடியவில்லை என்றாலும், இந்த, முயற்சியின் மூலம் அவர் பயன்பாட்டுத் தன்மை பற்றிய முக்கிய குறிப்புகளைத் தெரிந்துகொண்டிருந்தார்.

விண்டோஸ் இயங்குதளம் தொடர்பான பயனாளிகள் அனுபவம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது இந்தப் பாடம்தான் அவருக்குக் கைகொடுத்தது.

அவருக்குக் கீழ் பணியாற்றிய குழுவினர் விண்டோஸ் இயங்குதளத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளிடம் கொடுத்து சோதனை செய்து கொண்டிருந்தனர். அநேகமாக எல்லாப் பயனாளிகளுமே ஒரு சின்ன டாஸ்க்கைக்கூட செய்து முடிக்க முடியாமல் திணறினர். அதாவது அவர்களால் விண்டோஸில் இருந்த அம்சங்களுக்குள் எளிதாகச் சென்றடைய முடியவில்லை. இந்தத் தடுமாற்றத்தைப் பார்த்த மற்ற புரோகிராமர்கள் நொந்து போயினர். பயனாளிகள் இப்படி இருக்கிறார்களே எனக் கோபம் அடைந்தனர்.

ஆனால் ஆரன் மட்டும் பிரச்சினை பயனாளிகளிடம் அல்ல; விண்டோஸில் எனப் புரிந்துகொண்டார். அதிலும் சோதனையில் பங்கேற்ற ஒருவரிடம் பேசிப்பார்த்தபோது அவர் விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கில் பொறியாளராக இருப்பவர் எனத் தெரிந்துகொண்டார். போயிங் பொறியாளரே விண்டோஸ் உள்ளே எளிதாக உலா வர முடியாமல் தடுமாறினால் மற்றவர்கள் கதி என்ன யோசித்த ஆரன், இயங்குதளத்தில் அடிக்கடி பயன்படுத்தும் அம்சங்களை எப்படிப் பயனாளிகள் கைகளில் எளிதாகக் கிடைக்கச்செய்வது எனத் தீவிரமாக யோசித்தார். விண்டோஸில் வடிவமைப்புக் கோளாறு என உணர்ந்தவர் ஒற்றை பட்டனில் எல்லாவற்றையும் பயனாளிகளுக்குக் கிடைக்கச்செய்ய வேண்டும் என நினைத்தார்.

இந்த யோசனையின் பயனாகத்தான், ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் அனைத்தும் விண்டோஸ் கீழே கட்டம் கட்டமாகத் தோன்றச்செய்யும் டாஸ்க் பார் வசதியை உருவாக்கினார். அதன் பிறகு எந்த புரோகிராமையும் எளிதாகச் சென்றடையும் வகையில் டாஸ்க் பார் அடியில் ஸ்டார்ட் மெனுவை வைத்தார். அவ்வளவுதான்; வடிவமைப்பு முழுமையாயிற்று. விண்டோஸின் இடது மூலையில் ஆரம்ப கட்டம் போல இருக்கும் இந்த அம்சத்தை கிளிக் செய்தால் போதும் ஏணியில் ஏறுவது போல சரசரவென்று விண்டோஸுக்குள் சென்றுவிடலாம்.

இப்படித் தான் ஸ்டார்ட் மெனு விண்டோஸில் அறிமுகமானது.

ஆரன் பின்னர் மைக்ரோசாப்டில் இருந்து விலகிச்சென்றுவிட்டார். ஆனால் இந்தச் சின்ன கண்டுபிடிப்புக்கான காப்புரிமை அவரிடம்தான் இன்னமும் இருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு பற்றி அவர் தனது குறிப்புகளைச் சமீபத்தில் இணையத்தில் பகிர்ந்துள்ளார். பயனாளிகள் அனுபவத்தில் பாடமாக விளங்கக்கூடிய அந்தக் குறிப்பைக் காண: https://goo.gl/7e5cHl

http://tamil.thehindu.com/general/technology/விண்டோஸில்-ஸ்டார்ட்-மெனு-பிறந்த-கதை/article7512004.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி.

கல்லூரியில் படிக்கும்போது பன்ச் கார்ட்(Punch Card) மூலம் கணணியை இயக்கக் கற்று பின்னர் தாஸ்(DOS), யுனிக்ஸ்(Unix), ஐரிக்ஸ்(IRIX), ட்ரூ 64 (True 64) போன்ற இயங்குதளங்களை, வேலையின் திட்டப்பணிகளுக்கான கணணியின் கட்டளைகளை(Commands) மனப்பாடம் செய்து அடிக்கடி உபயோகப்படுத்த வேண்டிவரும்..
 
ஆனால் 90 களின் ஆரம்பத்தில் விண்டோஸ் வந்தபோது தனிக் கணணிக்கான(Standalone OS) இயங்குதளமாகவே இருந்தது.. பின்னர் யுனிக்ஸ், நாவல் நெட்வேர்(Nowell Netware) போன்ற இயங்குதளத்தின் கூட்டுக் கட்டமைப்பு(Networking) அம்ச வெற்றியை கண்டு, அவற்றிற்கு போட்டியாக மைக்ரோசாஃப்ட் உருவாக்கியதுதான் விண்டோஸ் என்.டி(Windows NT) மற்றும் விண்டோஸ் வொர்க் குரூப்..(Windows Work Group).

விண்ட்டோஸ் 3.0 விலிருந்து விண்டோஸின் மறுபதிப்பான விண்டோஸ் 95 வந்தவுடன் கணணியில் அதன் முகப்பு கவர்ச்சி(GUI) பயனாளிகளை ஈர்த்தது.. அப்பொழுது ஆரம்பித்தது மைக்ரோசாஃப்டின் ஏறுமுகம். அதில் பயனாளிகள் கணணியின் கட்டளைகளை நினைவிற்கொள்ள அவசியமில்லாமல் வெறும் சுட்டியைக்கொண்டே நமக்குத் தேவையான அனைத்து கட்டளைகளை 'கிளிக்' செய்யவந்த வரப்பிரசாதத்தால், விண்டோஸ் மாபெரும் வெற்றியை ஈட்டியது..

இயங்குதள சந்தையில் அப்பொழுது மைக்ரோசாஃப்ட் பதித்த வெற்றியின் அடித்தளத்தை இன்றுவரை எந்த கொம்பனாலும் அசைக்க முடியவில்லை..

இடையில் ஆப்பிள்(Apple Mac), லினக்ஸ்(Linux) என லொட்டு,லொசுக்கு வந்தாலும், பயனாளிகளுக்கு விண்டோஸின் முகப்பும்(GUI), இயக்க எளிதான வசதியும்(Plug and Play) மிக சிறப்பனவை. 

 

Link to comment
Share on other sites

உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி ராசவன்னியன்.

விண்டோஸ் 10வது பதிப்பு ஜூலை 29 ல் வெளியாகிவிட்டது.

விண்டோஸ் 7, 8, 8.1 இன் பாவனையாளர்கள் இலவசமாக விண்டோஸ் 10 யை தரவிறக்கம் செய்யலாம்.

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி நவீனன்.

இயங்குதளம் 10 நல்லா இருக்கு. இரண்டு வாரங்களாக பயன்படுத்துகின்றேன். நல்ல வேகமாகவும் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு  நவீனன்.

ராசவன்னியரின் விளக்கம் அந்தக்காலத்துக்கு அழைத்துச்சென்றது

பயன்பாட்டை செயலில் தந்த நிழலிக்கும் நன் றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொசுறு தகவல்:

விண்டோஸ் 3.0 மற்றும், விண்டோஸ் வொர்க் குரூப் 3.11 வெளிவந்தபொழுது அது முழுமையான இயங்குதள மென்பொருளாக இல்லை.. அவை தாஸ்(DOS) இயங்குதளத்தின் மேலேயே ஒரு கூடுதல் அம்சமாக செயல்பட்டது..

அதாவது கணணியை தாஸ் 6.22 மூலம் பூட்(Boot) செய்து C:\ என்று 'ப்ராம்ப்ட்' வந்தவுடன் win என தட்டச்சு செய்தால் மட்டுமே விண்டோஸ் 3,11 உயிர்பித்து இயங்கும்..

இந்த குறைபாட்டை நீக்கி, தாஸ் 6.22 மற்றும் விண்டோஸ் 3.11 இரண்டையும் ஒருங்கிணைத்து, முழு இயங்குதளமாக விண்டோஸ் 95 முதன் முதலில் வெளிவந்தது.

இதன்மூலம் விண்டோஸ் 95 கணணி, விண்டோஸ் என்.டி கூட்டுக்கட்டமைப்பில்(Network Domain) ஒரு அங்கமாக(Client) செயல்பட ஏதுவானது.

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி நவீனன்.

இயங்குதளம் 10 நல்லா இருக்கு. இரண்டு வாரங்களாக பயன்படுத்துகின்றேன். நல்ல வேகமாகவும் இருக்கு

உண்மை நிழலி, இயங்குதளம் 10 வேகமாக செயல்படுகிறது. நானும் கடந்த 1 கிழமையாக பயன்படுத்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நவீனன்.

இயங்குதளம் 10 நல்லா இருக்கு. இரண்டு வாரங்களாக பயன்படுத்துகின்றேன். நல்ல வேகமாகவும் இருக்கு

உண்மை நிழலி, இயங்குதளம் 10 வேகமாக செயல்படுகிறது. நானும் கடந்த 1 கிழமையாக பயன்படுத்துகிறேன்.

பத்திலை யாழ் இணையமும் வேகமாக வேலை செய்யுதா????? :unsure::oO::(

Link to comment
Share on other sites

 

பத்திலை யாழ் இணையமும் வேகமாக வேலை செய்யுதா????? :unsure::oO::(

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

சில நாட்களாக புதிய யாழிணையம் வேகமாகத்தான் வேலை செய்கின்றது.


எனது கணணியை பொறுத்தவரைக்கும் வேகம் என்று பார்க்கும் போது இதற்கு முந்திய யாழ் இணையம் வேகமாகவே இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

புதிய யாழில் வேகம் மட்டும் பிரச்சனை அல்ல..  பலவகை குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை உறுப்பினர்கள் முறைப்பாடு செய்தும் ஏன் நிர்வாகத்தில் இந்த பராமுகம்?

இன்னமும் ஒரு திரியை பார்த்துவிட்டு உடனே அடுத்த திரிக்கு மாறினால், காத்திருக்க வைக்கிறது.. இதனால் வெறுப்பே ஏற்படுகிறது. :(

What's the necessity to have flood control here to wait for say 6 or 10 secs.. ? யாழை ஒரே நேரத்தில்  100 பேர் பார்ப்பது என்பது மிக சிறிய இணைய போக்குவரத்துதானே..?

மொத்தத்தில் பழைய யாழ்களமே பயனாளர்களுக்கு சிறந்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய யாழில் வேகம் மட்டும் பிரச்சனை அல்ல..  பலவகை குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை உறுப்பினர்கள் முறைப்பாடு செய்தும் ஏன் நிர்வாகத்தில் இந்த பராமுகம்?

இன்னமும் ஒரு திரியை பார்த்துவிட்டு உடனே அடுத்த திரிக்கு மாறினால், காத்திருக்க வைக்கிறது.. இதனால் வெறுப்பே ஏற்படுகிறது. :(

What's the necessity to have flood control here to wait for say 6 or 10 secs.. ? யாழை ஒரே நேரத்தில்  100 பேர் பார்ப்பது என்பது மிக சிறிய இணைய போக்குவரத்துதானே..?

மொத்தத்தில் பழைய யாழ்களமே பயனாளர்களுக்கு சிறந்தது..

வன்னியனுக்கு காட்டப் படும்.....  flood control here to wait for say 6 or 10 secs.. முன்பு எனக்கு காட்டியது.
இப்போ.... அது தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

நான் எனது மடிகணணிக்கு விண்டோ 10 அப்டேட் செய்தபின்பு சவுண்ட் வரவில்லை. பிறகு ஆடியோ டிரைவர் ஐ அழித்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தபின்பு நல்லாக வேலை செய்யுது.

இதில் இருக்கிற மற்ற ஒரு பிரச்சினை எனவென்றால், விண்டோ 10 ல கூகிள் chrome பயன்படுத்தும்போது தமிழ் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக வருகுது ஆனால் இங்கிலீஷ் எழுத்துக்கள் ஒழுங்காக இருக்குது. யாராவது சொல்லமுடியுமா எப்படி தமிழ் எழுத்துக்களை பெரிதாக பார்ப்பது எண்டு.

Link to comment
Share on other sites

யாழ் இணையத்தின் வேகம் தொடர்பான பிரச்சனையை மோகன் பெருமளவு தீர்த்து விட்டார்... இப்பவும் வேகம் மந்தமாக இருக்கின்றதா?

கடந்த 3 நாட்களாக வேகமாகத்தான் வேலை செய்கின்றது.:)

நான் எனது மடிகணணிக்கு விண்டோ 10 அப்டேட் செய்தபின்பு சவுண்ட் வரவில்லை. பிறகு ஆடியோ டிரைவர் ஐ அழித்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தபின்பு நல்லாக வேலை செய்யுது.

இதில் இருக்கிற மற்ற ஒரு பிரச்சினை எனவென்றால், விண்டோ 10 ல கூகிள் chrome பயன்படுத்தும்போது தமிழ் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக வருகுது ஆனால் இங்கிலீஷ் எழுத்துக்கள் ஒழுங்காக இருக்குது. யாராவது சொல்லமுடியுமா எப்படி தமிழ் எழுத்துக்களை பெரிதாக பார்ப்பது எண்டு.

நான் பொதுவாக கூகிள் chrome பாவிப்பது இல்லை. ஆனால் நீங்கள் இங்கு எழுதியபின் முயற்சித்து பார்த்தேன் எனது கணணியில் தமிழ் எழுத்து மற்றைய இணணய உலாவிகளில் வருவது போலவே வருகிறது கூகிள் chrome இலும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.