Jump to content

வித்தியாசமான ருசியுடைய சில இறால் குழம்பு ரெசிபிக்கள்!!


Recommended Posts

கடல் உணவுகளில் மீனிற்கு அடுத்தப்படியாக மிகவும் ஆரோக்கியமானது என்றால் அது இறால் தான். இந்த இறாலை பலவாறு சமைத்து சாப்பிடலாம்.
 
அதில் ஒன்று தான் இறால் குழம்பு. இந்தியாவில் இறால் குழம்பானது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி சமைப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
 

இங்கு அப்படி சில வித்தியாசமான ருசியுடைய இறால் குழம்புகள் மற்றும் அதன் செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றில் எது பிடித்துள்ளதோ, அவற்றை விடுமுறை நாட்களில் சமைத்து ருசியுங்கள்.

செட்டிநாடு இறால் குழம்பு!!!
09-prawn-curry-300_zpshfnwohaz.jpg

 தேவையான பொருட்கள்:

இறால் - 400 கிராம்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

பூண்டு - 5 பல் (அரைத்தது)

பச்சை மிளகாய் - 5

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தேங்காய் - 1/2 கப் (துருவியது)

எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் இறாலை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும்.

பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.

பின் அதனை எடுத்து ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

தேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்,

பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும்.

பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

இப்போது சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

தொடரும்
Link to comment
Share on other sites

மல்வானி இறால் குழம்பு 
 

 

மல்வானி இறால் குழம்பு ஒரு மகாராஷ்டிரா ஸ்டைல் ரெசிபிக்களில் ஒன்று. இந்த மல்வானி ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் தேங்காயை அதிகம் பயன்படுத்துவது தான்.

01-1438416539-2-malvaniprawncurry_zpsvke

இப்போது அந்த மல்வானி இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம்

புளிச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 3-4 பற்கள் (தட்டியது)

தேங்காய் பால் - 1 கப்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்ழுன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்

 

மசாலாவிற்கு...

தேங்காய் - 1/2 கப் (துருவியது)

வெங்காயம் - 2 (நறுக்கியது)

மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

பச்சை ஏலக்காய் - 2

பட்டை - 1

வரமிளகாய் - 2

கிராம்பு - 3

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் அதில் சிறிது உப்பு தூவி, பிரட்டி தனியாக வைத்து விட வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய், சோம்பு, மல்லி, வெந்தயம் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் வெங்காயம் மற்றும் தேங்காய சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, இறக்க வேண்டும்.

கலவையானது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாகவும் மென்மையாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்த்தும், தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிட்டு, இறாலை போட்டு, குறைவான தீயிலேயே 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் புளிச்சாற்றினை ஊற்றி, கரம் மசாலா தூவி கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மல்வானி இறால் குழம்பு ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/malvani-prawn-curry-recipe-004016.html

தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கடல் உணவுகளில் மீனிற்கு அடுத்தப்படியாக மிகவும் ஆரோக்கியமானது என்றால் அது இறால் தான்...

தவறு....

இறாலில் கொலஸ்ரோல் அதிகம் என்று சனம் சொல்லுதே?

உண்மை தான் நிழலி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறாலில் கொலஸ்ரோல் இருந்தால் அதுக்கு இறால்தானே கவலைப் பட வேண்டும்...! தினமுமா சாப்பிடப் போறிங்கள், ஏதோ மாதத்தில் இரண்டொரு தடவை சும்மா ஜமாயுங்கோ...! :)

மறக்காமல் இறாலைக் கழுவும்போது அதன் முதுகில் இருக்கும் நூல் போன்ற வஸ்துவை அகற்றி விட்டு அப்படியே மூளோடும் , முன்அன்டனாவோடும் சேர்த்து பிரை பண்ணினால் சுப்பராக இருக்கும்..! :)

Link to comment
Share on other sites

இறாலில் கொலஸ்ரோல் அதிகம் என்று சனம் சொல்லுதே?

இறாலில் கொலஸ்ரோல் அதிகம்தான்.

 கடல் உணவுகளில் மீனிற்கு அடுத்தப்படியாக மிகவும் ஆரோக்கியமானது என்றால் அது இறால் தான்...

தவறு....

 

உண்மை நானும் இந்த வரிகளை முதலில் நீக்கிவிட்டுதான் இங்கு பதிய யோசித்தேன்.

Link to comment
Share on other sites

மராத்தி ஸ்டைல் இறால் குழம்பு
 
 
 இதுவரை இறாலைக் கொண்டு பலவாறு சமைத்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மராத்தி ஸ்டைல் இறால் குழம்பை சுவைத்ததுண்டா? இல்லையெனில், இந்த வாரம் உங்கள் வீட்டில் மராத்தி ஸ்டைல் இறால் குழம்பை செய்து சுவைத்துப் பாருங்கள்.
11-marathi-prawn-curry_zpsxfewqh4b.jpg
இந்த குழம்பு மிகவும் காரமாக இல்லாமல் சற்று புளிப்பாக இருந்தாலும், வித்தியாசமான சுவையில் இருக்கும். 
 
தேவையான பொருட்கள்:
 
இறால் - 1/4 கிலோ
 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 
பச்சை மிளகாய் - 5 (அரைத்தது)
 
கறிவேப்பிலை - சிறிது
 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
 
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
 
தக்காளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
 
புளிச்சாறு - 1 கப்
 
துருவிய தேங்காய் - 1 கப்
 
கொத்தமல்லி - சிறிது
 
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
 
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
 
பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 2-3 நிமிடம் குறைவான தீயில் நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
 
இறாலின் நிறம் மாற ஆரம்பிக்கும் போது, அதில் தக்காளி சாறு சேர்த்து மீண்டும் குறைவான தீயில் 2-3 நிமிடம் வேக வைத்து, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
 
குழம்பானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் புளிச்சாறு சேர்த்து குறைவான தீயில் 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
 
இறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, 2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், மராத்தி இறால் குழம்பு ரெடி!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரசர் உள்ள ஆக்கள் இறால் சாப்பிடக்கூடாது. குளிசை போட்டும் சொல்லுக்கேளாது...:grin: :innocent:

Link to comment
Share on other sites

பூண்டு இறால் குழம்பு
 
 இந்த வாரம் பூண்டு இறால் குழம்பை முயற்சி செய்யுங்கள். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். இப்போது அந்த பூண்டு இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

01-garlicprawncurry_zpsk0hnnhog.jpg

 தேவையான பொருட்கள்:

இறால் - 250 கிராம்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 4 (நறுக்கியது)

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட வேண்டும்.

அடுத்து ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 1 நிமிடம் வேக வைத்து, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.

இறாலானது நன்கு வெந்ததும், அதனை இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பூண்டு இறால் குழம்பு ரெடி!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலஸ்ட்ரோல் இருக்குது, கொழுப்பு இருக்குது எண்டு 500, 600 வருசத்துக்கு மேல சாப்பிட்ட தேங்காய் பாலை கண பேர் இங்க தொடுறதே இல்லை.

உங்க, இப்ப சுப்பர் மார்க்கெட் எல்லாம் ப்ரெஷ் தேங்காய் பால் கொலஸ்ட்ரோல் எதுவும் இல்லா, உடலுக்கு நல்ல, தாவர உணவு எண்டு விக்கினம். 

அதெப்படி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருப்பது ஒரு சிறிய கிராமம். வீட்டில் சொதி வைப்பது வழமை. ஏழெட்டு வருடங்களுக்கு முன் பசுப்பால், பின்பு கிறீம் பால் இப்ப இரு வருடங்களாக இங்கு தேங்காய், ரின் தேங்காய்ப் பால், தேங்காய்ப் பூ பைக்கட் மரவள்ளிக் கிழங்கு, வாழைக்காய்  எல்லாம் எப்போதும் தாராளமாய் வாங்க முடியுது.(ஆபிரிக்கன் உபயம்). பிறகென்ன கோக்கனட் மில்க்கில்தான் சொதி கொதிக்குது...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலஸ்ட்ரோல் இருக்குது, கொழுப்பு இருக்குது எண்டு 500, 600 வருசத்துக்கு மேல சாப்பிட்ட தேங்காய் பாலை கண பேர் இங்க தொடுறதே இல்லை.

உங்க, இப்ப சுப்பர் மார்க்கெட் எல்லாம் ப்ரெஷ் தேங்காய் பால் கொலஸ்ட்ரோல் எதுவும் இல்லா, உடலுக்கு நல்ல, தாவர உணவு எண்டு விக்கினம். 

அதெப்படி ?

ஒருகாலத்திலை இருதய வருத்தத்தை பணக்கார வருத்தம் எண்டு சொன்னவையள். :)

இப்ப இது தலையிடி மாதிரி நோர்மல் வருத்தமாய் வந்துட்டுது. :(

உதுக்கு என்ன சொல்ல வாறியள்..:cool:

Link to comment
Share on other sites

புதினா இறால் குழம்பு
 
 ஒரு புதுவிதமான ரெசிபியான புதினா இறால் குழம்பை செய்யலாம். இவை மிகவும் சுவையுடன் இருப்பதோடு, விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால், அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
24-mintprawncurry-600_zps1g35koei.jpg
சரி, இப்போது அந்த புதினா இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!
 
 தேவையான பொருட்கள்:
 
இறால் - 200 கிராம்
 
புதினா - 1 சிறிய கட்டு (சுத்தம் செய்தது)
 
கொத்தமல்லி - 1/2 கட்டு (சுத்தம் செய்தது)
 
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
 
வெங்காயம் - 2 (நறுக்கியது)
 
பூண்டு - 5 பற்கள்
 
பச்சை மிளகாய் - 1-2
 
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
 
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
 
தேங்காய் பால் - 100 மி.லி
 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
 
உப்பு - தேவையான அளவு
 
எண்ணெய் - தேவையான அளவு
 
தண்ணீர் - 1 1/2 கப்
 
செய்முறை:
 
இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
 
பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
 
பின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும்.
 
இப்போது சுவையான புதினா இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/prawn-curry-with-mint-003086.html
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகாலத்திலை இருதய வருத்தத்தை பணக்கார வருத்தம் எண்டு சொன்னவையள். :)

இப்ப இது தலையிடி மாதிரி நோர்மல் வருத்தமாய் வந்துட்டுது. :(

உதுக்கு என்ன சொல்ல வாறியள்..:cool:

முதலில ஆடு, கோழி ஊரில தீபாவளி, வருஷம் சாப்பாடு.  அதால சாதாரண ஆக்களுக்கு இருதய வருத்தம் இல்லை. எனக்குத் தெரிந்து அங்க கொலஸ்ட்ரோல் அறிவு குறைவாகவே இருந்தது. 

அங்க பணக்கார வருத்தம். இங்கே ? இங்கே கோழி, ஆடு என்று தினமும், தின்றால் வரும் தானே. பிறகு தேங்காயில பிழையைப் பிடிக்கிறது. 

இதய வருத்தத்தில் போனவரின் எட்டு செலவுக்கே தண்ணி, இறைச்சி அடிச்சு கவலையைக் கொண்டாடும் கூட்டம்.

உதுக்கு நாம என்னத்தை சொல்லுறது ?

 

Link to comment
Share on other sites

இறால் குடைமிளகாய் குழம்பு
 
  பொதுவாக கடல் உணவுகளில் இறால் மிகவும் சுவையாக இருக்கும். இறாலுக்கு என்றே நிறைய பிரியர்கள் உள்ளனர். இத்தகைய இறாலை இதுவரை தனியாகத் தான் குழம்பு செய்திருப்போம்.
03-prawncapsicumcurry_zpstlrplpkp.jpg
ஆனால் இப்போது அவற்றை ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்திருக்கும் குடைமிளகாயுடன் சேர்த்து குழம்பு செய்யப் போகிறோம். அதிலும் சற்று வித்தியாசமாக, கோடையில் அதிகம் கிடைக்கும் மாங்காயையும் சேர்த்து செய்யலாம். சரி, அந்த சுவையான இறால் குடைமிளகாய் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்:
 
இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
 
வெங்காயம் - 1 (நறுக்கியது)
 
பூண்டு - 8 பல் (நறுக்கியது)
 
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
 
தக்காளி - 1 (நறுக்கியது)
 
புளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
 
பச்சை மாங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
 
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
 
 பச்சை மிளகாய் - 2
 

-எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சற்று அதிகமாக எண்ணெய் ஊற்றி, இறாலைப் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும்.

பின்பு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து, 3 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.

பிறகு தக்காளி, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் கலவை ஒன்று சேரும் வரை வதக்கவும். பின் புளி சாறு மற்றும் துருவிய மாங்காய் சேர்த்து, 3-4 நிமிடம் கிளறி, 2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு குழம்பை கொதிக்க வைக்க வேண்டும்.

இறுதியில் குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள இறாலை சேர்த்து 8-10 நிமிடம் கொதிக்க வைத்து, இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான இறால் குடைமிளகாய் குழம்பு ரெடி!!! இதனை சூடான சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/prawn-capsicum-curry-summer-002971.html

Link to comment
Share on other sites

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி
 
 இந்தியாவில் கொங்கன் ஸ்டைல் உணவுகள் மிகவும் பிரபலமானது. அத்தகையவற்றில் கடல் உணவுகளில் ஒன்றான இறாலை வைத்து செய்யப்படும் கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு மிகவும் சுவையானது. அந்த கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பை வீட்டிலேயே ஈஸியான முறையில் சமைக்கலாம்.
18-konkanprawnrecipe_zpsqwdw3vmi.jpg
இப்போது அந்த கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்:
 
இறால் - 1 கிலோ (சுத்தம் செய்து கழுவியது)
 
வெங்காயம் - 3 (பெரியது, நறுக்கியது)
 
தக்காளி - 3 (பெரியது, நறுக்கியது)
 
கொத்தமல்லி - 1 கட்டு (நறுக்கியது)
 
பூண்டு - 3 டீஸ்பூன் (நறுக்கியது)
 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
 
புளி சாறு - 1 டீஸ்பூன்
 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
 
கிராம்பு - 2
 
பட்டை- 1/2 இன்ச்
 
உப்பு - தேவையான அளவு
 
எண்ணெய் - தேவையான அளவு
 
செய்முறை:
 
ஒரு சிறு பாத்திரத்தில் சுத்தமாக கழுவிய இறால், பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, 15-30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு மற்றும் பட்டை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
 
அடுத்து ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
 
பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து 5 நிமிடமோ அல்லது இறால் சுருங்கி, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.
 
பின் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி சேர்த்து, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Link to comment
Share on other sites

இறால் மலாய் குழம்பு
 
 
 பலருக்கு இறால் மிகவும் பிடிக்கும். பெரும்பாலானோர் இறாலை வறுவல் போன்று செய்து சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அதனை குழம்பு போன்று செய்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். அதிலும் பெங்காலியில் பிரபலமான இறால் மலாய் குழம்பாக செய்து சாப்பிட்டால், அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
 
10-malaicurry_zpswsz54wqc.jpg
இங்கு அந்த இறால் மலாய் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.
 
தேவையான பொருட்கள்:
 
இறால் - 1 கிலோ (சுத்தம் செய்தது)
 
வெங்காயம் - 1 + 1 (நறுக்கியது மற்றும் பேஸ்ட் செய்தது)
 
பூண்டு - 8 (பேஸ்ட் செய்தது)
 
பச்சை மிளகாய் - 2 + 6 (நீளமாக கீறியது மற்றும் பேஸ்ட் செய்தது)
 
தேங்காய் பால் - 1 கப்
 
கடுகு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
 
உப்பு - தேவையான அளவு
 
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 
 
செய்முறை:
 
முதலில் சுத்தம் செய்யப்பட்ட இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 3-4 நிமிடம் குறைவான தீயில் பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பிறகு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
 
அடுத்து அதில் அரைத்து பேஸ்ட் செய்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
 
பின் கடுகு பேஸ்ட், சிறிது உப்பு சேர்தது கிளறி, மீண்டும் குறைவான தீயில் 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
 
இறுதியில் தேங்காய் பால் ஊற்றி, 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு, பின் வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து, 7-8 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், இறால் மலாய் குழம்பு ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/prawn-malai-curry-006537.html
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறால் பண்ணையில வேலை போலக் கிடக்கு...!   ஆயினும் நல்ல பதிவுகள்...!!  :)

Link to comment
Share on other sites

நன்றி இணைப்புக்கு சகோ! தொடருங்கள் :)

இறால் பண்ணையில வேலை போலக் கிடக்கு...!    

ஏன் இந்தக் கொலை வெறி சுவிக்கு?:grin: நீங்களும் இணையுங்கள் நல்ல றெசிப்பிகளை :0

சமையல் திரி இணைத்தால் பச்சை பரிசாக வழங்கப்படும் சகோ சுவி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மகிழ்ச்சியில் கூறியது மீனா!  இறால் றெசிப்பி ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் சுலபமாய் சமைக்கக் கூடியதாகவும் உள்ளது...!

Link to comment
Share on other sites

  • 2 years later...
prawn pepper masala fry 1
96678f26f352ec7db2edf1c01cd462ab?s=112&d 

புதினா இறால் குழம்பு

தேவையான பொருட்கள்:

  • இறால் – -200 கிராம்
  • புதினா – -1 சிறிய கட்டு (சுத்தம் செய்தது)
  • கொத்துமல்லி – -1/2 கட்டு (சுத்தம் செய்தது)
  • இஞ்சி – -1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  • வெங்காயம் – -2 (நறுக்கியது)
  • பூண்டு – -5 பற்கள்
  • பச்சை மிளகாய் – -1-2
  • சீரகப் பொடி – -1/2 டீஸ்பூன்
  • மல்லித் தூள் – -1/2 டீஸ்பூன்
  • தேங்காய்ப் பால் – -100 மி.லி
  • எலுமிச்சைச் சாறு – -2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – -தேவையான அளவு
  • எண்ணெய் – -தேவையான அளவு
  • தண்ணீர் – -1 -1/2 கப்

செய்முறை:

  1. இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லிப் பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
    பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய்ப் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
  4. பின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும்.
  5. இப்போது சுவையான புதினா இறால் குழம்பு ரெடி! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

http://koottanchoru.com/புதினா-இறால்-குழம்பு/

 

 

 

ஏர்வாடி இறால் சுக்கா

 

sl52698886.jpg

என்னென்ன தேவை?

இறால் - 200 கிராம்,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 25 கிராம்,
நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எண்ணெய் - 100 மி.லி.,
பச்சைமிளகாய் - 5,
சோம்பு தூள் - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்.

 

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பச்சைமிளகாய், இறால், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சோம்பு தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இறால் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

http://www.dinakaran.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.