Jump to content

ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக வருகிறது புது இயங்கு பொறி!


Recommended Posts

ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக வருகிறது புது இயங்கு பொறி!

 

லகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் 96 சதவிகிதத்திற்கும் அதிகமான போன்கள் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்ட் இயங்கு பொறியை கொண்டே செயல்படுவதாக ஐ.டி.சி. (IDC-International data corporation) என்ற தொழில்நுட்ப வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் உலகை ஆண்டு கொண்டிக்கும் இந்நிறுவனங்களுக்கு போட்டியாக, புதிய இயக்கு பொறியை அறிமுகப்படுத்த இருக்கிறது மோசிலா (Mozila).

4.jpg

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை (கூகுள் குரோமின் வருகைக்கு முன்பு) கணினிகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த தேடு பொறியாக விளங்கியது மோசிலா பயர்பாக்ஸ். அதில் தான் பெற்றிருந்த செல்வாக்கை இழந்த காரணத்தினால், தற்போது ஸ்மார்ட் போன்களில் பக்கம் தன் சிலிக்கான் தலையைத் திருப்பியுள்ளது இந்நிறுவனம். அடுத்து வருகின்ற 2016ல் H5OS என்ற தனது இயங்கு பொறியை அறிமுகப்படுத்தும் முடிவில் உள்ளது இந்த நிறுவனம்.

இதுகுறித்து மோசிலாவின் முன்னாள் தலைவரான சீனாவைச் சேர்ந்த லீ கோங் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இப்பொழுது பயன்பாட்டில் இருக்கும் இயங்கு பொறிகள் எல்லாவற்றையும்விட அதிக சக்தி வாய்ந்த, எளிமையான H5OS என்ற இயங்கு பொறியை வருகின்ற 2016 ஆம் ஆண்டில் மோசிலா அறிமுகப்படுத்தப் போகிறது. இது, ஸ்மார்ட் போன்களின் உலகில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

5.jpg

இந்த இயங்கு பொறி, ஆண்ட்ராய்டுடன் ஒப்பிடும்போது அதிக வேகத்துடனும், குறைவான சக்தியை (energy) மற்றும் இடத்தை (storage) பயன்படுத்தும் திறனுடனும் அமைத்திருக்கும். மேலும், இது மிகமிக எளிமையான, அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது" என்றார்.

எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத வகையில் வடிவமைக்கப் பட இருப்பதாக கூறப்படும் இந்த இயங்கு பொறி, எந்த வகையான மொபைல் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படுமாம். இது அனைத்து வகையான தொடுதிரை, டி.வி., கார், டேப்லெட், வாட்ச் போன்றவற்றில் எளிமையாக பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்படுமாம்.

ஏற்கனவே ஸ்மார்ட் போன் உலகில் தன் கால்களை பதிக்க நினைக்கும் லினக்ஸ் நிறுவனத்தின் உபுன்டு (ubuntu), சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்களில் பயன்படுத்தப்படும் டிசன் (Tizen), ஹவாய் (huawei) நிறுவனத்தின் ஓ.எஸ் போன்றவை  பெரிதாக பிரபலம் அடையாத நிலையில், புதிதாக மோசிலா வேறு தனது H5OS இயங்கு பொறி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

மோசிலாவின் இந்த அறிவிப்பு தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும், ஸ்மார்ட் போன் திரைகளுக்குள் நடந்து கொண்டிருக்கும் இந்த மறைமுகப் போட்டியில் மோசிலா வெளியிடும் இயங்கு பொறி வேகம் எடுக்குமா?

http://www.vikatan.com/news/article.php?aid=50978

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.