Jump to content

கூட்டமைப்பின் ஏற்பாட்டினில் போலி அறிக்கை! அம்பலப்படுத்தியது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!!


Recommended Posts

யாழ்  பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பெயரினை துஸ்பிரயோகம் செய்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அப்பட்டமான போக்கிலித் தனத்தை வெளிப்படுத்தி நிற்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

தற்போதைய சூழல் தொடர்பினில் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் தாயகம்.தேசியம்.சுயநிர்ணயமெனும் கோசங்களை வலியுறுத்தி ‘ பொங்குதமிழ்’ பிரகடனம் ஊடாக தமிழ் மக்களின் அங்கிகாரத்திற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நீண்டதொரு பாதையை கடந்தே வந்துள்ளது.

நடந்தது இன அழிப்பு என்பதில் மாற்றுக்கருத்தேயில்லையென்பதுடன். சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி அண்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்புக்களையும் இணைத்து நடத்தியபோராட்டம் மிகப் பெரும் அவதானிப்பை பெற்றிருந்தது.

Uni%20%20arikkai.JPG

இத்தகையை சூழலில் தமிழ்த்தேசிய அரசியலில் மாற்றமொன்றை வேண்டி நிற்கும் சூழலில் தமது வங்குரோத்து அரசியல் பொய்த்துப்போகும் அச்சத்தினில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒரு சில மாணவர்களை பயன்படுத்தி ஒட்டுமொத்த மாணவ சமூகத்தையும் விலைபேசி விற்க துணிந்துள்ளதை அம்பலப்படுத்தவேண்டியுள்ளது.

ஓரு புறம் போதைப்பொருள் பயன்பாட்டிற்கான கடுமையான பிரச்சாரங்களை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு இன்னொருபுறம் சாராயத்திற்காகவும். ஒரு சில ஆயிரம் ரூபாய்களிற்காகவும் பல் கலைக்கழக மாணவர்களில் சிலரை விலைபேசுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாததொன்று.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பெயரினை பயன்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கையினை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இதனை வெளியிட்டவர்களையும். பின்னணியிலிருந்தவர்களையும் விரைவில் அம்பலப்படுத்துவோம்.

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் பங்காக இருக்கும் ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பவை இத்தேர்தல் தொடர்பினில் விடுத்துள்ள உறுதி மிக்க முடிவை வரவேற்பதுடன் அதுவே எமது தரப்பினது நிலைப்பாடு என்பதை ஆணித்தரமாக அறியத்தருகின்றோம என்றுள்ளது.

முன்னதாக இன்று போலி ஊடக அறிக்கை தொடர்பினில் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களும் ஒன்று கூடி ஆராய்ந்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஊடகவியலாளர் மாநாடொன்றை யாழ்.ஊடக அமையத்தினில் நடத்தவும் ஏற்பாடாகியிருந்தது.
எனினும் கூட்டமைப்பினரால் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து அவர்கள் பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து பின்வாங்கியிருந்தனர்.

http://www.pathivu.com/news/42287/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கைதானாம் போலி.

இது எப்படி இருக்கு.

காத்தான் குடி கிப்ஸ் சாரம் போல ஆயிட்டு தமிழ் அரசியல். எல்லாம் போலிகள் மயம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது போலி என்று இதுவரை யாரும் அறிவிக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் நான் அறிவிச்சிட்டனே.

பதிவை நம்பலாம் என்னை நம்பக் கூடாதோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் நான் அறிவிச்சிட்டனே.

பதிவை நம்பலாம் என்னை நம்பக் கூடாதோ ?

ஊர் பேர் தெரியாதவர்கள் விடும் அறிக்கைகளை கவனத்தில் எடுப்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் இந்த செய்தியை அப்படித்தான் எடுத்து கொண்டோம்.

 I have made my point.

வாசிப்பவர்களுக்கு விளங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்டிக்கிறோம் என்று கடிதத்தலைப்பு. இது கண்டிக்கின்றோம் என்றாவது வந்திருக்கவேண்டும். அறிக்கை போலி என்றால் கடிதமும் போலியாகத்தான் இருக்கும்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதொண்டுமில்லை கிருபன், 

இது பதிவு ஒபிசிலயே தயாரிச்ச உள்ளூர் தயாரிப்பு. புரூப்ரீடிங்கில சொதப்பீட்டினம்.

Well spotted!?

Link to comment
Share on other sites

அதுதான் நான் அறிவிச்சிட்டனே.

பதிவை நம்பலாம் என்னை நம்பக் கூடாதோ ?

:grin:

அதொண்டுமில்லை கிருபன், 

இது பதிவு ஒபிசிலயே தயாரிச்ச உள்ளூர் தயாரிப்பு. புரூப்ரீடிங்கில சொதப்பீட்டினம்.

Well spotted!?

அவர்களின் அறிவுக்கு ஏற்றமாதிரித்தான் எழுத்தும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது லங்காஸ்ரியில் வந்த சுத்துமாத்து கடிதத்துக்கு வந்த பதில் கடிதம் போலத்தான் இருக்கு..சின்ன பாம்புக்கு சின்ன தடி :( 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.