Jump to content

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்தளவுக்கு சமணர்கள் சிங்களவர்கள் போல சைவர்களை (இந்துக்களை) வதைத்துள்ளனர்.

வெப்பு நோயால் பாதிக்கப்பட்ட பாண்டிய மன்னனின் வெப்புநோயைத் தீர்த்து அவனை சமணத்தின் கோரப்பிடியில் இருந்து மீட்டதாக உள்ளது.

சூலை நோயைப் போக்கப் பாடிய தோத்திரம்..

கூற்றாயினவாறு விலக்ககிலீர்

கொடுமை பல செய்தன நானறியேன்

ஏற்றாயடிக்கே இரவும் பகலும் பரியாது வணங்குவனெப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றி கைப்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேனடியேன் னதியைக் கெடில

வீரட்டானத் துறையம்மானே’

சமணத்தைத் தழுவிய அப்பர் பின்னர் சூலை நோயால் பாதிக்கப்பட்டு தமக்கை திலகவதியாரின் சிவபக்தியால் குணம் பெற்று..சைவத்தைத் தழுவியதும் சமணர்கள் அவரை...நஞ்சூட்டிக் கொல்ல முனைந்தனர்

சுண்ணாம்பறையில் அடைத்து கொடுமைகள் பல செய்தனர்..மதம் கொண்ட யானையை ஏவிவிட்டனர்..கல்லோடு கட்டி கடலிப் போட்டனர்..இப்படியெல்லாம் சமணர்கள் சைவர்களை வதைத்தெடுத்தனர். அப்போதுதான் அப்பரைச் சந்தித்து ஞானசம்பந்தர் சமணர்களினால் பட்ட துன்பங்களைக் கேட்டு ஆற்றாமையில் இப்படிப் பாடினார் போலும்.

நாம் இன்று சிங்களப் படையினரைத் திட்டுவது போல. ஆனால் இன்று அது காமவெறியாக இங்கு சித்தரிக்கப்படுவது கொடுமையோ கொடுமை. இந்து மத சைவத்தின் எதிர்ப்பின் பாலான திரிபுச் செய்திகளே இந்த காமவெறிக் கதைகள். இதைத்தான் பெரியார் என்ற சமய விரோதியும் வெறியரும் தனது அரசியலுக்காகச் செய்தார். :icon_idea:

(மேலே தரப்பட்ட தோத்திரம் சூலை நோக்கிப் பாடிய தோத்திரம். பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்க்க அப்பரால் சம்பந்தர் அழைக்கப்பட்டு வெந்நீற்றுப் பதிகம் பாடினார். இவை மேலே கருத்தில் எடுக்கப்பட வேண்டியவை.. அங்கு வசனம் ஒன்று மேலேறி வந்துவிட்டது.)

நன்றி கிருபன்!

இந்தப் பாடலைத்தான் தேடினேன். நீங்கள் தந்து விட்டீர்கள்.

மற்றைய மதங்களை மதிக்க வேண்டும் என்றும்,அனைத்து மதங்களும் ஒரே வழியையே காட்டுகின்றன என்றும் இன்றைய நாகரீக உலகில் சொல்லப்படுகின்ற பொழுது

மற்றைய மதங்களை வதைத்து, இலட்சக்கணக்கானோரை கொலை செய்து, நாட்டை விட்டு விரட்டி அடித்து விட்டு

அதைப் பற்றி பெருமையாக சைவநெறிப் புத்தகங்களில் கற்பிக்கிறோம் என்றால்.......

வெட்கம்! வெட்கம்!

சமணர்கள் இந்துக்கள் என்பதற்காக அவர்களைக் கொடுமைப்படுத்திய போதும் அவர்கள் பதிலுக்கு கொடுமை செய்யாது கடவுளை வேண்டினர். சமணர்களுக்கு நல்ல பாடம் கற்றுக் கொடு என்று.

இன்று பெளத்த சிங்கள பேரினவாதம் எப்படி நடக்கிறதோ அதைவிட மோசமாக சமணம் மற்றைய மதத்தவர்களின் உரிமைகளை மிதித்துள்ளது. அந்த வகையில் உரிமைக்குரல்..ஆற்றாமைக்குரல் என்று தோத்திரங்கள் பல வழிகளில் வெளிப்பட்டுள்ளன.

இங்கு வெட்கப்பட வேண்டியது நஞ்சூட்டிக் கொல்லுதல் பாதாள சுண்ணாம்பறையில் அடைத்தல் போன்ற நாசியக் கொள்கைகளை கையாண்ட சமணர்களின் வரலாற்றை மறைத்தலே ஆகும்.

இந்து மதம் எப்போதுமே நெகிழ்வுப் போக்குள்ள மதமாகவே இருந்து வருகிறது. அந்த வகையிலேயே அது விமர்சனங்களையும் கடந்து நிமிர்ந்து நிற்கிறது. சைவமும் இந்துவின் அம்சமாக எழுந்து நிற்கிறது. ஈழத்தில் அந்நிய மத ஆதிக்கங்களில் இருந்து தமிழர்களை மீட்டதில் சைவத்துக்கு முக்கிய பங்குண்டு. ஆங்கில மோகத்தின் காலத்திலேயே ஆறுமுக நாவலர் போன்ற சைவத் தொண்டர்களே இந்துக்கல்லூரிகள் அமைத்து தமிழ் மொழி மூலக் கல்வியை ஊட்டினர். இன்றேல் இன்று தமிழர் என்ற அடையாளம் இருந்திருக்குமோ என்பது கேள்விக் குறிதான்.

அப்படிப்பட்ட சைவத்தை சமணர்கள் அழிக்க முனைந்து அழிந்தே போயினர் என்பது..மற்றைய மதங்களை மிதித்து தானுயருதல் என்பது நடக்காத போலித்தனம் என்பதையே சொல்லி நிற்கிறது. எல்லா மதங்களையும் அவற்றின் உரிமைகளையும் மதிக்கும் பாதுகாக்கும் தன்மை வளர வேண்டும் தமிழர்கள் மத்தியில். :D

Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply

சமணர்களும், பௌத்தர்களும் ஒரு போதும் பலத்காரத்தின் மூலம் யாரையும் தங்களுடைய மதத்தில் சேர்க்கவில்லை. அவர்கள் அகிம்ஸையை போதித்து தமது கொள்கைகளை பரப்பினார்கள்.

பௌத்தம், சமணம் தோன்றிய பொழுது இந்து "மதம்" இருக்கவில்லை.

அவர்களுக்கு போட்டியாக இந்துமதத்தை ஆரம்பித்தவர்கள்தான் அவர்களை கொலை செய்தார்கள்.

நீங்கள் தந்த பாடல் அப்பர் தன்னுடைய வயிற்றுவலியின் போது பாடியது.

சைவ சமயம் சமணர்கள் செய்த கொடுமையாக சொல்வது அப்பரை துன்புறுத்தியது மட்டுமே.

வேறு யாரையும் அவர்கள் துன்புறுத்தியதாக சைவ சமயமோ, வேறு எந்த நூல்களோ எந்தக் குறிப்புக்களையும் தரவில்லை.

முடிந்தால் நீங்கள் அப்பர் தனக்கு நேர்ந்ததாக பாடியவைகளை விட, வேறு குறிப்புக்களை தாருங்கள்! பார்ப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்

தொடர்ந்து இந்து மதம் கொலை செய்தது, கொள்ளை செய்தது என்று எழுதித் திருப்தி காணும் ஒருவராக இருந்தால் தாராளமாக வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளலாம். அதை விடுத்து சமணம், வைணவ காலத்தில் இந்து மதம் இல்லை என்ற மாயையை ஏற்படுத்துவது சரியான விடயமல்ல. அப்போது இந்து மதம் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு வழிபாட்டு விதமாக இருந்தது. ஆதிசங்கரர் தான் ஒன்றாக்கினார். அதற்கு முன் சனாதான தர்மம் என்ற பெயரைக் கொண்டிருந்தது. இப்போது இந்து மதம் என்ற பெயரை நாம் வழங்குகின்றோம்.

நாம் எப்போது இருந்து அதை அவ்வாறு பெயர் சொல்லி அழைத்தோம் என்றோ, அதற்கு வழிபாட்டு முறைகள் இல்லை என்ற பாணியில் எழுதுவதன் மூலமோ, மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி கருத்தில் வெற்றி கொள்ளலாம் என்று முயற்சிக்க வேண்டாம்.

--------

அப்பரின், சம்பந்தரின் வரலாற்றைப் படிக்காமல் எமுதுகின்றீர் போலும். ஏற்கனவே சொன்னது போல, கூலை நோய் பின்னர் மட்டுமல்ல, பல ஆலயங்களை மூடி விக்கிரஙகங்களை மறைத்து, வைத்ததையும், சம்பந்தர் பாண்டியனுக்கு வெப்பு நோய் தீர்க்கும்போதும் இடம் பெற்ற சமணர்களின் துன்புறுத்தல்கள் என்று ஏராளம் இருக்கின்றன. உமக்காக விரைவில் எடுத்துத் தருகின்றேன்.

மேலும் கழுவில் சம்பந்தர் சமணர்களை ஏற்றினார் என்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் இது வரைக்கும் தாங்கள் தரவில்லை என்பதையும் இச்சமயத்தில் ஞாபகப்படுத்துகின்றேன்.

Link to comment
Share on other sites

சமணருக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி என்னுடைய முதலாவது இணைப்பிலேயே தந்திருக்கிறேன். இங்கே உசாத்துணையாக சொல்லப்பட்டிருக்கின்ற நூல்கள் அனைத்தும் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டவர்கள் எழுதியது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரியபுராணத்தில் இது குறித்த குறிப்புக்கள் உண்டு. (இது சைவர்கள் கொடுக்கின்ற ஒப்புதல் வாக்குமூலம்)

பௌத்த பெண்களை வல்லுறுவு செய்தது குறித்த தேவாரத்தை கிருபன் தந்திருக்கிறார்.

கழுவிலேறிய சமணர்கள்!

'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'

-சதாசிவ செட்டியார் தேவாரப் பதிகங்கள் சென்னை

1925இ pயபந 18

'அரசர் குலச்சிறையாரை நோக்கி 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'

ஏ.ஜி.கோமதி அம்மாள் திருத் தொண்டர் பெரிய புராணம் சைவம் வளர்த்த அரசி கோவில்பட்டி

1948இ Pயபந 18

'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'

க. வெள்ளைவாரணன் பன்னிறு திருமறை வரலாறு அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

1972இ Pயபந 144

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி அவர்கள் சொத்து சுதந்திரம் கோயில் குளம் மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'

-அ.பொன்னம்பலம் அப்பரும் சமபந்தரும் சென்னை

1983இ Pயபந 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம் சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'

'விபூதி கோமயம் பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'

-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை திருவிளையாடற் புராணம் சென்னை

1925இ Pயபந 494.

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால் கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?

'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும் காக்கைகளும் நரிகளும் நாய்களும் தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'

'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் உ.வே.சா.பதிப்பு சென்னை

1937இ Pயபந 1195.

'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'

பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.

'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம் திருவிளையாடற்புராணம் தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும் மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'

மயிலை சீனி வேங்கடசாமி சமணமும் தமிழும் பக்கம் அறுபத்தெட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை

மிகுத்தபல முடனோத மகிழ்வோனே

வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள

விளைத்ததொரு தமிழ்பாடு புலவோனே

செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது

திருக்கையினில் வடிவேலை யுடையோனே

திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான

திருத்தணிகை மலைமேவு பெருமாளே.

விரித்த = விரிவாக. அருணகிரிநாதன் உரைத்த = அருணகிரி நாதன் பாடியுள்ள. தமிழ் எனும் மாலை = திருப்புகழ் என்னும் தமிழ் மாலையை. மிகுத்த பலமுடன் = மிகுத்த பலமுடன். ஓத மகிழ்வோனே = ஓத மகிழ்பவனே.

வெடித்த = (பொறாமையினாலும், அவமானத்தாலும்) துடித்த. அமணர் = சமணர்கள். கழு ஏற = கழுவில் ஏறவும். ஒருத்தி கணவனும் = ஒப்பற்ற மங்கயர்க்கரசியின் கணவன் (கூன் பாண்டியன் என்னும் நெடுமாறன்). மீள்ள = (திருநீறிடும் வழிக்கு) மீண்டும் வரவும். விளைத்தது ஒரு = வழி செய்த ஒப்பற்ற. தமிழ் பாடு புலவோனே = (தேவாரத் தமிழ்ப் பாடல்களைச் (சம்பந்தராக வந்து) பாடிய புலவனே.

செருக்கி இடு = ஆணவத்துடன். பொரு சூரர் = சண்டை செய்த அசுரர்களின். குலத்தை = குலத்தை. அடி அற = அடியோடு அற்றுப் போக. மோதும் = மோதித் தாக்கிய. திருக்கையினில் = அழகிய கையில். வடிவேலை = கூரிய வேலாயுதத்தை. உடையோனே = உடையவனே

அருணகிரி நாதர் என்னும் புலவன் பாடிய திருப்புகழ் மாலையைப் பலமுடன் ஓத மகிழ்பவனே. அவமானத்தால் உயிர் துடித்து அமணர் கழு ஏறவும், மங்கயர்க்கரசியின் கணவனான கூன் பாண்டியன் மீண்டும் சைவ சமயத்துக்கு வரவும், ஒப்பற்ற தேவாரப் பாக்களைத் தமிழில் பாடிய சம்பந்தராகிய புலவனே. ஆணவத்துடன் போருக்கு வந்த அசுரர்கள் குலத்தை அடியோடு அழியும்படி செய்த வேலைக் கையில் ஏந்தியவனே. அழகு விளங்கும் தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. காமுகனாகிய எனக்கு உன் திருவடிகளைப் பாட குண சீலம் தந்து அருள வேண்டுகின்றேன்.

சபேசன் தருவது சில வரலாற்றுத் திரிபுரைகள்...அவை முழுத் திரிவு. சமணர்கள் தாங்கள் சைவர்களின் முன் தோற்றுவிட்டதாலும் சமணம் தழுவிய பாண்டியன் சைவத்துக்கு மாறியதாலும் சமணர்கள் தாம் செய்த கொடுமைக்காக கழுவேறினர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆக அந்தக் காலத்தில் கழுவேற்றல் குற்றங்களுக்கான தண்டனையாக இருந்துள்ளது. சமணர்கள் சைவர்களுக்கு எதிராகப் புரிந்த குற்றத்துக்காகவும் வெட்கம் தாழாதும் கழுவில் ஏற்றப்பட்டனர் அல்லது ஏறி மடிந்தனர் என்பதுதான் உண்மை. சைவர்கள் அவர்களை அழிக்கவில்லை. தீவிர சமணக் குற்றவாளிகள் அல்லாதோர் சைவத்தைக் கடைப்பிடித்து நல்வழி வந்துள்ளனர். :icon_idea:

Link to comment
Share on other sites

வாதில் தோற்றதும் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டார்கள் என்று பல குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

தானாகவே கழுவில் ஏற முடியாது

யாராவது ஒருவர் ஏற்றிவிட வேண்டும்.

சமணர்கள் கெஞ்சி மண்டாடிக் கேட்டுக் கொண்டதால், சைவர்கள் இரக்கப்பட்டு ஏற்றி விட்டிருப்பார்கள்.

என்னே, சைவர்களின் இரக்க குணம்!

விளக்கெண்ணெய் தடவிய கூரான கழுமரங்களில் உட்கார வைத்து இரு கால்களையும் பிடித்து இழுத்து ஒரு மனிதனைக் கொல்வதையே "கழுவில் ஏற்றுதல்" என்று சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

ஏதோ ஒன்று கேட்க, ஏதோ ஒன்று சொல்வார்கள்.

நான் சைவத்தின் சித்தாந்தம் குறித்து ஏதாவது கேட்டேனா? அல்லது சைவத்தின் சித்தாந்தங்கள் என்று சொல்லப்படுபவைகள் பற்றியும், அவைகள் தோன்றின விதம் பற்றியும் எனக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா?

நான் இவைகளை கேட்டேனா?

இவைகளை எல்லாம் அறியாதவர் என்பதில் உங்கள் மீது எனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை... காரணம் சைவம் சொல்லும் சித்தாந்தங்களும் நெறிகளும் உங்களுக்கு எல்லாம் தேவை படுகிறது அதனால் சைவம் வேணும்... ஆனால் உங்களுக்கு சைவம் எண்ற மதம் வேண்டாம்... அப்படித்தானே...!

உங்களின் மதம் இல்லாவிட்டால், அதாவது வாழ்க்கை நெறி இல்லாவிட்டால் உங்களின் மதிப்பு என்ன ஆகும் என்பதின் சுருக்கத்தைத்தான் அங்கு தரப்பட்டது... அதைக்கூட விளங்க முடியாத அளவில் இருக்குது உங்களி மத எதிர்ப்பு வெறி....!

Link to comment
Share on other sites

வாதில் தோற்றதும் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டார்கள் என்று பல குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

தானாகவே கழுவில் ஏற முடியாது

யாராவது ஒருவர் ஏற்றிவிட வேண்டும்.

சமணர்கள் கெஞ்சி மண்டாடிக் கேட்டுக் கொண்டதால், சைவர்கள் இரக்கப்பட்டு ஏற்றி விட்டிருப்பார்கள்.

என்னே, சைவர்களின் இரக்க குணம்!

விளக்கெண்ணெய் தடவிய கூரான கழுமரங்களில் உட்கார வைத்து இரு கால்களையும் பிடித்து இழுத்து ஒரு மனிதனைக் கொல்வதையே "கழுவில் ஏற்றுதல்" என்று சொல்வார்கள்.

கழு மரம் எண்டால் கறுப்பு நிற மரத்தில் ஏற்றி நிக்க வைக்கிறது எண்டெல்லே நினைத்தேன்...! ( சிங்கள ஊரிலை இருந்த தாக்கம்)

ஆனால் வேறு ஒருவராலும் சைவர்கள் அல்லது இந்துக்கள் தாக்கப்படவில்லை அல்லது அளிக்கபடவில்லை எண்று உங்களால் அடித்து சொல்லமுடியுமா..???

அல்லது ஆதியும் அனாதியுமானதாய் நீங்கள் சொல்லவரும் சமண மத்துக்கும் ,பௌத்துக்கும் தமிழர்களின் பண்டைய வளிபாட்டு முறைகளில் இருந்து மருவி வந்த்தாக காட்டும் ஆதாரங்களை உங்களால் காட்ட முடியுமா..??? தனீச்சையாக வரவேண்டிய மதங்கள் அட்டூளியத்தில் மூலம் உள்நுளைந்தால் அதேவளியில் திருப்பி அனுப்பி இருப்பார்கள்... அதை சரி பிழை சொல்லி மனிதவுரிமைகளை போதிக்க அப்போ அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகள் போதிக்கவில்லையாம்...

உலகமெல்லாம் மதவாதநடவடிக்கைகள் வரலாற்றில் நடந்தேறின. அதில் தமிழர்களுக்கு நடந்ததாக சொல்லப்பட்ட அனீதிகள் அதன் வளியில் அப்போதையவர்கள் எதிர் கொண்டனர்...

சமணர்காலத்தில்தான் தேவாரம், திருப்பதிகங்கள் கொண்ட சுவடிகள் எல்லாம் பாதுகாப்பாக வைத்த இடங்களில் இருந்து பலதும் செல் அரித்து அளிந்து போயின... இண்று மிஞ்சியவற்றைத்தான் நீங்கள் எல்லாம் பன்னிரு திருமுறைகளாய் படிச்சுக்கொண்டு இருக்கிறீயள்... அப்படி எண்றால் அடக்கு முறைக்குள் இருந்து சைவம் வெளிவந்து இருக்கிறது இல்லையா. வரும் போது விதிமுறைகளுடன் வரவில்லை என்னும் தவறை மீண்டும் செய்யாமல் அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதில் தோற்றதும் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டார்கள் என்று பல குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

தானாகவே கழுவில் ஏற முடியாது

யாராவது ஒருவர் ஏற்றிவிட வேண்டும்.

சமணர்கள் கெஞ்சி மண்டாடிக் கேட்டுக் கொண்டதால், சைவர்கள் இரக்கப்பட்டு ஏற்றி விட்டிருப்பார்கள்.

என்னே, சைவர்களின் இரக்க குணம்!

விளக்கெண்ணெய் தடவிய கூரான கழுமரங்களில் உட்கார வைத்து இரு கால்களையும் பிடித்து இழுத்து ஒரு மனிதனைக் கொல்வதையே "கழுவில் ஏற்றுதல்" என்று சொல்வார்கள்.

வரிசையாக நின்ற கழுவேறி மாண்டனர் என்கிறது திருப்புகழ்...

தற்கொலை செய்திருக்கிறார்கள் போல.......

அலை நெருப்பு எழ வட வரை பொடிபட சமணர்கள் குலம்

அணி கழு பெற நடவிய மயில் வீரா

அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர

அவர் அவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே.

அலை = கடல். நெருப்பு எழ = தீக் கொப்புளிக்க. வட வரை பொடிபட = வடக்கிலுள்ள (கிரவுஞ்ச) மலை பொடியாக. சமணர்கள் குலம் = சமணர்களின் கூட்டம். அணி = வரிசையாக அமைக்கப்பட்ட. கழுப் பெற = கழுவில் ஏற. நடவிய மயில் வீரா = (சம்பந்தராக வந்து) நடத்திய மயில் வீரனே.

அரன் அரிப் பிரமர்கள் = அரன், திருமால், பிரமன் மூவரும். முதல் வழி பட = முன்பு வழிபட்டுப் போற்ற. பிரியமும் வர = அவர்கள் மேல் அன்பு பூண்டு. அவரவர்க்கு = அவரவர்க்கு. ஒரு = ஒப்பற்ற ஒரு. பொருள் புகல் பெரியோனே = பிரணவப் பொருளை உபதேசித்த பெரியவனே.

சிலை = வில். மொளுக்கு என = மொளுக்கென்று. முறிபட = முறிந்து விழ. மிதிலையில் = மிதிலை நகரில். சநக மன் அருள் = சனகன் ஆகிய அரசன் அருளிய. திருவினை = இலக்குமி போன்ற சீதையை. புணர் = மணம்புரிந்து உறவுகொண்ட. அரி திரு மருகோனே = திருமாலின் அழகிய மருகனே.

திரள் வருக்கைகள் = திரண்டுள்ள பலா. கமுகுகள் = கமுகு மரங்கள். சொரி = சொரிகின்ற. மது = தேன். கதலிகள் = வாழை இவை எல்லாம். வளர் = வளர்கின்ற. திருவிடைக் கழி மருவிய = திருவிடைக்கழி என்னும் தலத்தில் வீற்றிருக்கும். பெருமாளே = பெருமாளே.

கடல் தீ மூள, கிரவுஞ்ச மல பொடிபட, சமணர்கள் கூட்டம் கழு ஏற திருவிளையாடல்களைச் செய்த மயில் வீரனே. அரன், அரி, பிரமன் ஆகிய மூவருக்கும் பிரணவப் பொருளை உபதேசித்தவனே. மிதிலையில் சனக ராஜனின் வில்லை முறித்துச் சீதையை மணந்த திருமாலின் மருகனே. பலா, கமுகு, வாழை ஆகிய மரங்கள் செழிப்புற்று வளரும் திருவிடைக்கழியில் வீற்றிருக்கும் பெருமாளே. விலை மாதர்கள் மீது நான் வசப்படாமல் இருக்க அருள் புரிவாயாக.

ஆக திருப்புகழ் பாடியவருக்கே சமணர்களின் அட்டகாசம் தெரிந்துள்ளது. கழுவேறினர் என்பதுதான் மீண்டும் நிலைநிறுத்தப்படுகிறது. ஆக சமணர்கள் செய்த அட்டூழியத்துக்கு அவர்களே தண்டனை பெற்றார்கள். கிட்லரைப் போலவே அழிந்தார்கள்..நாசிகள்..! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருணகிரிநாதர் என்ற நாயனார் ஆயிரம் ஆயிரம் பெண்களின் அற்பத்தனமான பாலியல் சுகம் கண்ட ஆணாதிக்க வெறியன் என்பது உங்களுக்கு தெரியுமா.

விபச்சாரியிடம் சுந்தமூர்த்திக்காக தூது போன சிவனின் ஒழுக்கம் என்ன? சுந்தரமூர்த்தி நாயனார் ஆணாதிக்க இந்து மதத்தை பாதுகாக்க மக்களுக்கு எதிராக, பார்ப்பனருக்காக பொய்யும் புரட்டுகளையும் கூறித்திரிந்த போது, இரண்டாவது வைப்பாட்டியாக விபச்சாரி மீது ஆசை கொள்ள, அவள் மறுக்க, சிவன் தரகுவேலை பார்த்து கடவுளின் பெயரில், சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆணாதிக்க காமத்தை தீர்த்து வைத்தார். இதை நாம் போற்றலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருணகிரிநாதர் என்ற நாயனார் ஆயிரம் ஆயிரம் பெண்களின் அற்பத்தனமான பாலியல் சுகம் கண்ட ஆணாதிக்க வெறியன் என்பது உங்களுக்கு தெரியுமா.

விபச்சாரியிடம் சுந்தமூர்த்திக்காக தூது போன சிவனின் ஒழுக்கம் என்ன? சுந்தரமூர்த்தி நாயனார் ஆணாதிக்க இந்து மதத்தை பாதுகாக்க மக்களுக்கு எதிராக, பார்ப்பனருக்காக பொய்யும் புரட்டுகளையும் கூறித்திரிந்த போது, இரண்டாவது வைப்பாட்டியாக விபச்சாரி மீது ஆசை கொள்ள, அவள் மறுக்க, சிவன் தரகுவேலை பார்த்து கடவுளின் பெயரில், சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆணாதிக்க காமத்தை தீர்த்து வைத்தார். இதை நாம் போற்றலாமா?

அருணகிரிநாதர் சாச்சா கவிஞர் கண்ணதாசன் போன்றவர். கண்ணதாசனுக்கு இந்த விபச்சாரிகளுடன் நிறையவே தொடர்புகள். அருணகிரிநாதரின் பல திருப்புகழ்களில் தான் விபச்சாரிகளினால் பட்ட துன்பங்களின் வெளிப்பாடும் அதைப் போன்று சமூகத்தில் பிறருக்கு எழக்கூடாது என்ற போதனைகளும்..அதற்காக முருகக் கடவுளை அவர் வேண்டி நிற்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலே தரப்பட்ட திருப்புகழ்களிலும் அவை இருந்தன. ஆனால் அவை இப்போதைய கருத்துக்கு அவசியமில்லை என்பதால் தவிர்க்கப்பட்டுள்ளன.

தனி நபர் ஒழுக்கத்தின் படி நோக்கின் 13 வயதுச் சிறுமியை திருமணம் செய்த பெரியார் என்ற பகுத்தறிவற்ற மிருகத்துக்கெல்லாம் மரியாதையே கொடுக்கவே கூடாது. அதுமட்டுமன்றி 70 வயதில் 25 வயதுப் பெண்ணை இரண்டாம் தாரமாக மணம் முடித்தவர் பெண்களுக்காக குரல் கொடுக்க என்ன தகுதி இருக்கிறது. ஒரு அபலைப் பெண்ணின் உணர்வுகளோடு விளையாடிய அவரின் கொள்கைகளை மக்கள் உதாரணமாகத்தான் கொள்ள வேண்டுமா என்ற வினவலும் எழ அதிக காலம் செல்லாது. :unsure::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஜைனம் என்ற மின்னூல் காணக்கிடைத்தது.

தமிழர்களின் தலைவர் எனப் பலரும் போற்றும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அணிந்துரை வழங்கிய இந்நூலை நீங்களும் படித்து உண்மைகளைத் தெளிந்து கொள்ளுங்கள். (கருணாநிதி முட்டாள் என்று வாதம் செய்ய யார் யார் வருவார்கள் என்றும் தெரிகின்றது.)

http://www.jainworld.com/JWTamil/jainworld...l_jainam_0.html

அருணகிரிநாதர் சாச்சா கவிஞர் கண்ணதாசன் போன்றவர். கண்ணதாசனுக்கு இந்த விபச்சாரிகளுடன் நிறையவே தொடர்புகள். அருணகிரிநாதரின் பல திருப்புகழ்களில் தான் விபச்சாரிகளினால் பட்ட துன்பங்களின் வெளிப்பாடும் அதைப் போன்று சமூகத்தில் பிறருக்கு எழக்கூடாது என்ற போதனைகளும்..அதற்காக முருகக் கடவுளை அவர் வேண்டி நிற்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலே தரப்பட்ட திருப்புகழ்களிலும் அவை இருந்தன. ஆனால் அவை இப்போதைய கருத்துக்கு அவசியமில்லை என்பதால் தவிர்க்கப்பட்டுள்ளன.

தனி நபர் ஒழுக்கத்தின் படி நோக்கின் 13 வயதுச் சிறுமியை திருமணம் செய்த பெரியார் என்ற பகுத்தறிவற்ற மிருகத்துக்கெல்லாம் மரியாதையே கொடுக்கவே கூடாது. அதுமட்டுமன்றி 70 வயதில் 25 வயதுப் பெண்ணை இரண்டாம் தாரமாக மணம் முடித்தவர் பெண்களுக்காக குரல் கொடுக்க என்ன தகுதி இருக்கிறது. ஒரு அபலைப் பெண்ணின் உணர்வுகளோடு விளையாடிய அவரின் கொள்கைகளை மக்கள் உதாரணமாகத்தான் கொள்ள வேண்டுமா என்ற வினவலும் எழ அதிக காலம் செல்லாது. :unsure::o

விபச்சாரிகளைக் கொல்வது சரியென்போம். விபச்சாரிகளிடம் உறவு கொண்டு ஞானத்தை அடைந்தோரைக் கொண்டாடுவோம். என்னே கொள்கை! என்னே கொள்கை.. புல்லரிக்கின்றது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஜைனம் என்ற மின்னூல் காணக்கிடைத்தது.

தமிழர்களின் தலைவர் எனப் பலரும் போற்றும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அணிந்துரை வழங்கிய இந்நூலை நீங்களும் படித்து உண்மைகளைத் தெளிந்து கொள்ளுங்கள். (கருணாநிதி முட்டாள் என்று வாதம் செய்ய யார் யார் வருவார்கள் என்றும் தெரிகின்றது.)

http://www.jainworld.com/JWTamil/jainworld...l_jainam_0.html

விபச்சாரிகளைக் கொல்வது சரியென்போம். விபச்சாரிகளிடம் உறவு கொண்டு ஞானத்தை அடைந்தோரைக் கொண்டாடுவோம். என்னே கொள்கை! என்னே கொள்கை.. புல்லரிக்கின்றது..

இந்த நூல் சமகாலத் தேவைக்கு ஏற்ற வகையில் புனையப்பட்டுள்ளது. கருணாநிதியின் நாத்தியக் கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் புனைந்து செருகிய பல அம்சங்கள் அவற்றில் உள்ளன போலும். ஏலவே இந்த நூலைப் படித்து விட்டுத்தான் விவாதத்துக்குள் இறங்கி இருக்கின்றனர். ஆக...கருணாநிதி போன்ற நாத்தியக் கோமாளியாரின் புனைகதைகள் இங்கு வைத்து சமணர் காலத்தோடு வாழ்ந்தவர்களின் படைப்புக்களை மலினப்படுத்தும் நோக்கம் ஈடேறாது.

யார் இந்தக் கருணாநிதி. பெரியார் அண்ணா என்று அவர்களை வாலைப் பிடித்துத் திரிந்த அரசியலுக்காக நாத்தியக் கொள்கை கொண்ட ஒரு கோமாளித் தலைவர். சங்கராச்சாரியாரியை வைத்து அரசியலும் நடத்தியவர்.சாதிக் கட்சிகள் அமைத்துக் கூட்டணி வைப்பவர். கருணாநிதியை போற்றுபவர்கள் இருக்கலாம். எம்மைப் பொறுத்தவரை கருணாநிதி ஒரு வேடதாரி. தனது சுயலாபத்துக்காக தனது புகழுக்காக எதையும் திரிக்க கூடியவர். ஆணாதிக்க சிந்தனை குறைந்தது 3 மனைவிகளைக் கொண்ட ஒரு சமூகக் கோமாளி என்பதே பொருத்தமாக இருக்கும்.

இந்து சமய எதிர்ப்பாளர்கள் தங்களின் நாத்தியகப் பிரச்சாரங்களுக்காக சமணத்தை பெளத்ததை முன்னிலைப்படுத்துவது இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாக தீர்க்கப்படாமலே தொடர்ந்து வரும் ஒரு தொடர்கதை. அதில் இப்போ கருணாநிதியின் பங்கோடு இதுவும் இங்கு வந்து சேர்ந்துள்ளது.

அவரை விட அவர் சார்ந்தோரை விட சமணர் கால அல்லது அதற்கு சமீபத்திய சைவ மக்களால் எழுதப்பட்ட நூல்களே சைவத்தின் சிறப்பை திறம்படக் கூற முடியும். சமணர்களின் நாசியச் செயற்பாடுகளே சைவத்தின் வீழ்ச்சிக்கும் தழைப்புக்கும் காரணம். தமிழர்கள் சைவத்தோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்பதாலே கருணாநிதி போன்ற நாத்தியக் கோமாளிகள் கூட இன்னும் கோயில் வருமானத்தை நம்பி கடவுளை நம்பி நேரம் நாளிகை கணித்து ஆட்சி அமைத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நாத்தியம் கருணாநிதி நாத்திகன் என்று சொல்லப்பயன்பட்டதுடன் இப்படியான புரட்டுக்களை எழுதவும் அதனை வைத்து தனது நாத்தியகத்தை விளம்பரப்படுத்த முடிந்ததே அன்றி சமூகத்தில் பெரிதாக எதனையும் வெட்டி விழுத்தவில்லை என்பதற்கு தமிழகத்தில் மூலைக்கு மூலை கடவுளுக்கு கோயில் என்று போய் நடிகைகளுக்கே கோயில் கட்டும் நிலை தோன்றியதைக் காட்டலாம். :o:unsure:

(கருணாநிதியை அவரின் கொள்கை ரீதியாகப் பார்க்கையில் கோமாளியாகத்தான் தெரிகிறது. அவரிடம் அரசியல் நிர்வாகத்திறமை இருக்கலாம்..ஆனால் அவரின் இரட்டை அணுகுமுறைகளுக்கு ஈழத்தமிழர்களை ஆதரித்த வைகோவைப் பார்த்து புலிகளுக்கா தன்னைக் கொலை செய்ய வந்துள்ளதாக அறிவித்து கட்சியில் ஸ்ராலினை முன்னிலைப்படுத்திய நன்றி கெட்ட கோமாளி மனிதன். அந்த வகையில் அவர் தனது விளம்பரத்துக்காக நன்மைக்காக எதையும் செய்யக் கூடியவர் என்பதையும் நினைவூட்டுதல் தகும்.)

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி கிருபன்,

யாழ்ப்பணத்து ஆறுமுக நாவலர் செய்த தகிடுதத்தம் ஒன்றை இவ்வாறு ஆதாரத்தோடு எழுதி உள்ளார், இப்படி எத்தினை சூழ்ச்சிகளால் வரலாற்றுத் திரிப்புக்களால் இவர்கள் சைவத்தைப் பரப்பினார்கள்?

அவ்விளக்கங்களில் பாரதநாட்டிலும் குறிப்பாகத் தமிழகத்தில் தத்துவ ¡£தியாக அமைந்திருந்த அறுசமயங்களைப்பற்றிப் பின்வரும் பாடலில்.

"அறுசமயங்களென்ப வான கையாயிகத்தோ

டுறையும் வைசேடிகம் மேலுள்ள லோகா

குயிலிமீமாம்ச மென்று குறித்தவை யன்றி நல்ல

நெறியுள அருகப் புத்தம் நீதியென்றோது மன்றே"

என விளக்கியுள்ளார் இவ் அறுசமயங்களையே பண்டைய இலக்கியங்கள் பலவும் கூறியுள்ளன. அதுமட்டுமல்ல சேந்தன் திவாகரத்தில் 12வது தொகுதியும் இவ் ஆறு சமயங்களே எனப்பட்டுள்ளன. இவ்வராற்றுப் பாடல் நிகண்டில் பழைய ஓலைச் சுவடிகளிலும், சூடாமணி நிகண்டை முதன் முதல் அச்சிட்ட நூலிலும் இன்றும் காணலாம்.

யாழ்ப் பாணம் திரு ஆறுமுக நாவலர் அவர்கள் பிற்காலத்தில் தோன்றியதும், தத்துவங்காணுததுமாகிய தம் சமயமாகிய சைவ சமயத்தைச் சூடாமணி நிகண்டில் நுழைக்க வேண்டி, தாம் சூடாமணி நிகண்டை அச்சிடுவதாகப் பறைசாற்றிக் கலைக் கொலைக் செய்துள்ளக் கோரச் செயலை நேர்மை உள்ளம்படைத்த எந்தத்தமிழரும் வருந்தாமலிருக்கமாட்டார். அவர் செயலை பாருங்கள்.

நாம் மேலே கண்ட அறு சமய விளக்கப் பாடலை நீக்கி விட்டு கீழே காணும் இரு பாடல்களைத் தாமே இயற்றிச் சேர்ந்து சூடாமணி நிகண்டை வெளியிட்டுள்ளார்.

"அ¡¢யவுட் சமயமாறே யாவன சைவந் தூய்மை

பெருக பாசுபத்தோடு பிறங்கு மாவிரமற்றும்

கருதிய வீடுபேறு காட்டு களா முகந்தான்

மருளயவால மிக்க வைரவம்என் னலாகும்"

"அறுபுறச் சமயந்தானே யறையும்லோ காயதம்பின்

உறைதரு பெளத்தமேயோ ருகதமீமாம்சமோடு

குறிபெறு ம்¡யாவாதங் கூறிய பஞ்சராதரம்

நெறிபேறு மிவையே யென்ன நிகழ்த்துவர்நூல்

வல்லோரே"

பண்டைய காலந்தொடர்ந்து அறுசமயம் எனப்போற்றிவரும் வரலாற்றுக்கு மாறாக உட்சமயம் புறச்சமயம் எனப்பி¡¢த்துப் போலிப் பாடல்களை இயற்றி வரலாற்றையே பாழாக்கியுள்ளார். வரலாறு மட்டுமின்றி நிகண்டின் மூலத்தையும் மறைத்துள்ளார். இச்செயல் தமிழ்த்தாயின் உருவத்தையே சிதைத்தற்கொப்பாகும் எனில் மிகையன்று. நாவலர் செய்த சூழ்ச்சி அவருக்கே இழுக்கை தேடிவிட்டது. தம் சமயத்தின் உட்சமயங்களாக இணைத்துக்கொண்ட சமயங்கள் இன்று பெயருக்கேனும் காணமுடியாது மறைந்து மாய்ந்து போனவை. பாசுபதம், மாலிரதம் (கபாலிகம்) காளாமுகம், வாமம் ஆகிய ஐந்துமாம். இவைகளின் கொள்கைகளையும், வேடங்களையும், எலும்பு மாலைகளையும், மண்டையோடிகளையும், ஊனையும், கள்ளையும் பற்றி மகேந்திரபல்லவ மன்னர் எழுதிய மத்த விலாசபிரஹசனம் என்ற நாடகத்தில் காணலாம் இத்தகையாரை நாவலர் தம் சைவ சமயக் கூட்டணியாகச் சேர்த்துக் கொண்டதை ஒரே வார்த்தையில் கூறவேண்டுமானால் கூடா நட்புஎன உரைத்து விடலாம். தன்வினையே தன்னைசுடும் என்ற பழமொழிக்கு இலக்காகிவிட்டார் நாவலர் அவர்கள் நிகண்டாசி¡¢யர் மேலே கண்ட ஐந்து சமயங்களும் சைவத்தின் உட்சமயங்கள் எனப் பாடிவிட்டிருந்தால் சைவ உலகம் கண்டனக்குரல் எழுப்பி இருக்கும். நாவலர் இயற்றிப் புகுத்தியதால் ஒன்றும் பேசாது ஏற்றுக் கொண்டு அச்சிட்டு வெளியிட்டும் வருகின்றனர்.

http://www.jainworld.com/JWTamil/jainworld...l_jainam_6.html

இவ்வாறெல்லாம் தம் சமயத்திற்கு ஊறு தேடிக்கொண்ட நாவலர் அவர்கள் கடவுள் இலக்கணத்திலும் தம் காழ்ப்பைக் காட்டியுள்ளார். நிகண்டாசி¡¢யர் மண்டல புருடர் கடவுளின் இலக்கணத்தை.

"கடையிலா ஞானத்தோடு காட்சி வீ¡¢யமே இன்பம்

இடையுறு நாமமின்மை விதித்தக் கோத்திரங் களின்மை

அடைவிலா ஆயுவின்மை அந்தராயங் களின்மை

உடையவன் யாவன் மற்றில் வுலகினுக் கிறைவனாமே"

எனக் கடவுளின் இயல்பைக் கூறி இத்தகைய இலக்கணத்தையுடையவரே உலகுக்கு இறைவனாவான் எனப் பாடியுள்ளார். இப்போ¢லக்கணத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாத நாவலர் மேலே உள்ள பாடலின் கடைசி வா¢யை மாற்றி உடையவன் இறைவனென்று உரைக்கும் ஆருகத நூலே' எனத்திருத்தி வெளியிட்டுவிட்டார். இச்செயல் கடவுளைத் தூய்மையுடையதாகத் கொள்ளாது தம் சமயக் கடவுளாகிய ருத்ரன் போல் இருக்க வேண்டுமென்பதையே காட்டுகிறதல்லவா? இக்கொடுஞ்செயலைத் தமிழை வளர்கிறோம் எனப் பேசி வரும் எந்த அறிஞரும் கண்டிக்கவில்லை. அதற்கு மாறாக ஆறுமுக நாவலா¢ன் போலிக் கவிகளையே திரும்பத் திரும்ப அச்சிட்டு வெளியிடுகின்ற பா¢தாபக் காட்சியைத்தான் காண்கிறோம். இது போன்றே சிவனுக்கும் எண் குணங்களுண்டென இரு செய்யுள்கள் இயற்றி நிகண்டில் நுழைத்துள்ளார். இவ்விரு போலி செய்யுட்களுக்காக நிகண்டில் இருந்த பஞ்சு அடித்தல் நெய்தல் ஆகிய தொழில்களை விளக்கும் இரு பாடல்களை எடுத்து விட்டார். இத்தகு செயலை ஜைன அறவோர்கள் உலகியல் வழக்கங்களையும் அறநெறிகளையும், வரலாற்றுச் சிறப்பையும் கண்ணாடிபோல் காட்டியுள்ள கருத்துக் கருவூலங்களின் ஆக்கப் பணியை அழிக்கும் தொழில் அல்லது கலைக் கொலை யென்றே கூறலாம். இச்செயல் போதாதென்று இவருக்கு பின் தோன்றிய சிலர் ஜைன நூல்களைச் சிதைத்துள்ள செய்திகளையும் பாருங்கள்.

கி.பி. பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் விளைவித்த சமயப் பூசல் காரணமாக ஜைன அறவோர்கள் இயற்றியருளிய பல அரும் பெரும் நூல்கள் அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் திரு. ஆறுமுக நாவலர், நிகண்டை திருத்தி வேறு செய்யுள் இயற்றிய நுழைத்திருப்பதை முன்னரே கண்டோம் எஞ்சியிருக்கும் சில நூல்களின் கடவுள் வாழ்த்தைத் திருத்தி மத மாற்றம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகப் பதினென்கீழ்க் கணக்குகளில் சிலவும், நெல்லிலக்கம் போன்ற சில கணித நூல்களும் இக்கதிக்கு உள்ளாகியுள்ளன. கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் தாம் இயற்றிய கலிங்கத்துப்பரணி என்னும் நூலில் தாம் ஜைன சமயத்தைச் சார்ந்தவர் என்பதை விளக்கிப் பதினோரு பாடல்கள் இயற்றிய உலகறியச் செய்துள்ளார் இந்நூலை அச்சிட முனைந்து அந்நூலாசி¡¢யர் வரலாற்றை எழுதியவர் ஜெயங்கொண்டார் ஜைன சமயத்தில் தோன்றியவராயினும் பின்னர் சைவம் தழுவி விட்டார் என அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.

திவாகரம் பிங்கலந்தை ஆகிய இரண்டு நிகண்டுகளும் ஜைன அறவோர்களால் இயற்றப்பட்டவைகளே. திவாகரம் இயற்றிய அறவோர் திவாகர் என்பதை யாவரும் அறிவர். இப்பேரறிஞர் திவாகரம் இயற்றுவதற்கு காரணமாய் இருந்தவர் சேந்தன் என்ற மன்னராகும். திவாகர் தன்னை ஆதா¢த்த சேந்தனை மறவாது தம் நூலுக்கு சேந்தன் திவாரம் எனும் பெயர் சூட்டியதோடு நூலின் ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும் சேந்தனைப் பாராட்டிப் பாடியுள்ளார் குறிப்பாக,

'செந்தமிழ் சேந்தன்'

'அம்பற்கதபதி சேந்தன்'

'கற்றநாவினன் கேட்ட செவியினன்'

'முற்ற உணர்ந்த மூதறிவாளன்'

'வட நூற்கரசன் தென்தமிழ்க் கவிஞன்'

'கவியரங்கேற்றும் உபயக்கவிப் புலவன்'

என்றெல்லாம் புகழ்ந்து நன்றியறிதலைக் காட்டியுள்ளார் இப்புகழுரைகளால் சேந்தன் வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமைப் பெற்ற பேரறிஞன் என்பது புலனாகிறது. இவ்வுண்மையை சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவர் தம் நூலின் சிறப்பையும் அரங்கேற்றிய இடத்தையும் குறிப்பிட்டு விளக்குகையில்,

"நாமான் புரைக்கும் குறையென்னினு

நாம வென்வேல்

தேமா ணலங்கற் றிருமா னெடுஞ் சேந்தனென்னூர்

தூமான் டமிழின் கிழவன் சுடரார மார்பிற்

கோமா னவையுட் டெருண்டார் கொளப்பட்ட

தன்றே"

என்னும் பாடலில் வரும் தமிழிற் கிழவன் என்னும் சேந்தனும் திவாகரர் குறிப்பிடும் "கற்றநாவினன் கேட்ட செவியினன்" எனப் புகழும் சேந்தனும் ஒருவரே என்பதில் ஐயமில்லை. எனவே தோலாமொழித்தேவரும் கிவாகரரும் சமண காலத்வர் ஆவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரப்படும் இணைப்புக்களே சைவத்தை சீரழித்த ஜைன மதத்தை ஆதரிக்கும் இந்து எதிர்ப்புவாதிகளால் புனையப்பட்டவை. சம்பந்தரும் அப்பரும் காலத்தோடு வாழ்ந்து பதிவுகளை இட்டனர். அதுபோன்று அருணகிரிநாதரும் சமணப்பாதிப்புக்களை திருப்புகழெங்கும் சொல்லி தமிழ் கடவுள் என்று சொல்லப்படும் முருகனின் பெருமைகளைச் சொல்கின்றார்.

ஆறுமுகநாவலர் செருகியது என்று சொல்லிக் கொள்வோர் ஏன் ஜைன இணையத்தளம் நடத்துவோர் அல்லது ஜைன மத விசுவாசிகள் அவற்றை தங்களுக்கு ஏற்ற வடிவில் செருகி இருக்க முடியாது..ஏன் அதை குறிப்பிட மறுக்கின்றனர்.

நாவலர் சைவத்தைத் தமிழோடு வளர்த்தவர். ஈழத்தில் சைவத்தின் இருப்புக்கும் தமிழின் இருப்புக்கும் அவரின் பங்களிப்பு முக்கியமானது. நாவலர் சிலையைத் தூக்கி எறிந்தவர்களே பின்னர் அதை நல்லை முருகன் கோவிலுக்கு அருகில் உள்ள மண்டப்பத்தில் கொண்டு வந்து சேர்த்தனர்.

ஆக இந்த நாவலர் வெறுப்பு..சைவ வெறுப்பு..இந்து வெறுப்பு எல்லாம் பழைய புளித்துப்போன சமாச்சாரங்கள். இதை சைவமும் இந்து சமயமும் பல சந்தர்ப்பங்களில் சந்தித்துதான் தழைத்துள்ளது. சமணர்களின் நாசியத்துக்குள் சிக்கிச் சீரழிந்த சைவம் இன்றும் தழைத்திருக்கிறது என்றால் அதற்கு சைவ சமயக் குரவர்களும் அருணகிரிநாதர்..நாவலர் போன்ற சைவப் பெரியார்களுமே காரணம். பல இடைச்செருகல்களைக் களைந்து சைவத்தின் வரலாற்றை தூய்மைப்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. இன்றைய இணைய உலகில் நாத்திகர்களும் சைவ இந்து விரோதிகளும் பார்ப்பர்ணிய கொள்கைகளால் பாதிக்கப்பட்டோரும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களைச் சார்ந்தோரும் இதர பிற மதத்தவரும் இந்து மதத்தை அழித்தொழிக்க முனைகின்றனர். நிச்சயம் அதற்கான முயற்சியில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ மனித நாகரிகத்தில் இந்து மதத்தின் பங்களிப்பு என்பது முக்கியமானது என்ற வகையில் அதன் வரலாறு பல வகையிலும் விரோதிகளின் இடைச்செருகலால் சீரழிந்திருப்பதை சீர்செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.

அந்த வகையில் எல்லா மதங்களும் போல இந்துவும் அதன் சைவமும் பாதுகாக்கப்படவும் அதனைப் பின்பற்றுவோரின் உரிமைகள் காப்பளிக்கப்படவும் உரியன செய்யப்பட வேண்டும். :unsure:

Link to comment
Share on other sites

சம்பந்தர் பற்றி சொல்லப்பட்டுள்ள முக்கியமான தகவல்...

'அப்பர்-சம்பந்தர் காலத்துக்குச் சற்று முன்னர் திருவாரூ¡¢லும், இத்தகைய சைவ-சமணர் கலகம் ஏற்பட்டுச் சமணர் துன்புறுதப்பட்டுத் துரத்தப்பட்டதோடு அவருடைய நிலைகளும், மடங்களும், பள்ளிகளும்பாழிகளும் அழிக்கப்பட்டன. இந்தச் செய்தியையும் பொ¢யபுராணம் கூறுகிறது. இப்போது திருவாரூர் திருக்குளம் மிகப் பொ¢யதாகவும், பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகவும், இருக்கிறது. இத்துணை பொ¢ய குளம் தமிழ் நாட்டிலே வேறு எங்கும் கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால் தண்டியடிகள் நாயனார் என்னும் சைவ அடியார் இருந்த காலத்திலே திருவாரூ¡¢ல் சமணர் செல்வாக்குடனும், ஆதிக்கத்துடனும் வாழ்ந்திருந்தனர். இந்த குளம் மிகச் சிறியதாக இருந்தது. அந்தச் சிறு குளத்தின் நான்கு கரைகளிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது, அந்தச் சிறிய குளத்தைப் பொ¢ய குளமாகத் தோண்ட வேண்டுமென்று தண்டியடிகள் என்னும் சைவநாயனார் முயற்சி செய்தார். இந்தச் செய்தியைப் பொ¢யபுராணம் கூறுகிறது.

"செங்கண் விடையார் திருக்கோயில்

குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு

எங்கும் அமணர் பாழிகளாய்

இடத்தால் குறைபாடெய்துதால்

அங்கந் நிலைமை தனைத் தண்டி

யடிகள் அறிந்தே ஆதரவால்

இங்கு நானிக் குளம் பெருகக்

கல்ல வேண்டும் என்றெழுந்தார்"

குளமோ மிகச் சிறியது. குளத்தின் கரைகளிலே சமணருடை நிலங்களும், கட்டடிடங்களும் உள்ளன. குளத்தைப் பொ¢ய தாகத்தோண்ட வேண்டுமானால், குளக்கரையச் சூழ்ந்திருந்த சமணருடைய நிலங்களையும், கட்டிடங்களையும் இடித்துத்தகர்த்தல் வேண்டும். முதலில் குளத்தைப் பொ¢யதாகத் தோண்டுகிறார். அப்போது சமணர், தங்கள் நிலங்களும், கட்டிடங்களும் தோண்டப்பட்டு இடிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? அவர்கள் தடுக்கிறார்கள். வழக்கம்போல கலகம் ;ஏற்படுகிறது. சேக்கிழார் வாக்குப்படி "தண்டியடிகளால் அமணர் கலகம் விளைந்தது" கலக்கம் மட்டும் நிகழவில்லை கலகம் நடந்தது. ஏனென்றால் சிவபெருமான் அரசன் களவில் தோன்றிச் சமணரை அழிக்கச் சொல்கிறார், அரசன் சமணரை ஊரைவிட்டே துரத்திய பின்னர், அவர்களுடைய கட்டிடங்கள¨யும், நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பொ¢ய குளமாகத் தோண்டினான். இதனைப் பொ¢ய புராணம்

"அன்ன வண்ணம் ஆரூரில்

அமணர் கலக்கம் கண்டவர் தாம்

சொன்ன வண்ணமே அவரை

ஓடத் தொடர்ந்து துரந்ததற் பின்

பன்னும் பாழிப்பள்ளிகளும்

பறித்துக் குளஞ் சூழ் கரைபடுத்து

மன்னனவனும் மனமகிழந்து

வந்து தொண்டர் அடி பணிந்தான்"

இவ்வாறெல்லாம் சமணர்களைக் கழுவேற்றுதல், யானைகளால் மிதிப்பித்தல், ஊரைவிட்டுத்துரத்துதல் நிலபுலன்களைக் கவர்தல் முதலிய கலகங்களும், கொடுமைகளும், சச்சரவுகளும் போராட்டங்களும் நிகழ்ந்து வந்தன. சமயப் போர் இல்லை சமயவெறி!

இவ்வாறு நிகழ்த்திய கொடும் செயல்கள் கணக்கில் இவ்வாறெல்லாம் துன்பங்களும், கொடுமைகளும் நிகழ்ந்தபடியினாலே நாளடைவில் சமண சமயம் செல்வாக்கு இழந்து நிலை குன்றியது. துன்பங்களைப் பொறுக்க முடியாத சமணர்களின் பெரும்பான்மையோர் மதம் மாறினார்கள். அ·தவாது சமண சமயத்தைவிட்டு சைவர்களாகவும், வைணவர்களாகவும் மாறிவிட்டார்கள். தமிழ் நாடெங்கும். இவ்வாறே பலாத்காரம் செயலால் ஜைனசமயத்தவர்க்குத் தீங்கிழைத்துள்ளனர். மதுரையில் நடந்த கொடுஞ்செயலை மங்களகரமான அருஞ்செயலெனப் பொ¢யபுராணத்தில்,

"பூமியன் மதுரை யுள்ளான்

புறத்துனர் அறணர் கேரும்

பாழியும் அருகர் மேவும்

பள்ளியும் ஆன எல்லாம்

கீழுறப் பறித்துப் போக்கிக்

கிளரொளித் தூய்மை செய்தே

வாழியாப் பதிகள் எல்லாம்

மங்கலம் பொலியச் செய்தார்"

எனப்பாடி மகிழ்ந்துள்ளார் சேக்கிழார்.

இக்கோரச் சம்பவங்களைப் பற்றி 1850-ம் ஆண்டில் விளங்கிய புலவர் பெருந்தகை வேங்கடசாமி நாயகர் அவர்கள் நாம் இயற்றிய "இந்துமத ஆபாச தரிசினி" என்ற நூலில் சம்பந்தர் சமணத்தை அழித்தக் கொடுமை" என்ற தலைப்பில் மணமுடைந்து வருந்தி பாடியுள்ள பாக்கள் நம் உள்ளத்தை உருக்கும்.

"நத்திமச் சோழன் நாட்டிய சமண் மதத்தை

வைத்திட வவருங்கூடி வஞ்சகர் தமக்குள்ளாகிப்

பற்றியே கற்காணத்திற் பதைத்திட வனேகம்பேரைச்

செற்றிட வாடிக்கொன்றே சமயத்தைப் பறக்கடித்தார்"

"உறுத்திட வூ¡¢ல்நின்ற வுற்சவச் சிலையுடைத்தார்

பெருந்திட விருந்த கோயிற் பிணக்கற விடித்தார்மேலும்

ஒறுத்திட வோடியோடி யொருங்கற வழித்தாரையோ

நிறுத்திய பொதுநோக்காமல் நிலையழி சோழன் செய்தான்.

இவ்வாறு பல பாக்கள் உள்ளன.

இத்தகு பகைமை உணர்ச்சிக்கு காரணம் வேண்டுமல்லவா? இக் காரணம் வாசகர்களுக்கு புதிதல்ல. திரு. மயிலை சீனு வேங்கடசாமி அவர்கள் போன்ற பல வரலாற்று ஆசி¡¢யர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள். பகுத்தறிவாதிகள் நேர்மை எழுத்தாளர்கள் பலரும் பலகாலமாக எழுதிவரும் வரலாற்றுச் செய்திதான். எனினும் அவ்வரலாற்றைக் கொண்டுதான் உண்மையை நிலைநாட்ட வேண்டியுள்ளது. எனவே அப்பண்டைய வரலாற்றின்படி மிகமிகப் பழங்கால முதல் தொடர்ந்துவரும் பகைமை உணர்ச்சியே காரணமாகும் என்பதை இனி காண்போம்.

ஆ¡¢யர்கள் பாரத நாட்டில் குடியேறிய வரலாறும். அவர்கள் வாழ்க்கை வரலாறும் பாரத நாட்டு வரலாற்று நூல்கள் அனைத்திலும் கண்டுள்ளோம். ஆ¡¢யர்கள் பாரத நாட்டில் குடியேறுவதற்கு முன் இங்கு அஹிம்சா தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட அறநெறி சமுதாயம் சிறப்புற்று விளங்கியிருந்தது. இச்சமுதாயம் பகவான் விருஷபதேவரால் அமைக்கப் பெற்றது. சாதி சமயம். உயர்வு தாழ்வு என்ற பேதமற்ற அறநெறிக் கொள்கையைக் கொண்ட தென்பதை முன்னரே அறிந்துள்ளோம் புதிதாக பாரத நாட்டில் நுழைந்த ஆ¡¢யர் கொள்கைகளை இங்குள்ள அஹிம்சாவாதிகள் ஏற்றுக்கொள்ளாது எதிர்த்தார்கள். பகைமை மூண்டது. இந்திரன், வாயு, வருணன் முதலான சடங்குகள் அற்றவர்களாய் கொலை, ஊனுண்ணல், கள்குடித்தல் அற்றவர்களாய் கொலை, ஊனுண்ணல், கள்குடித்தல் போன்ற தீய பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களாய் விளங்கும் பாரத மக்களைத் தங்கள் வழியில் திருப்பித் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டப் பல விதங்களிலும் ஆ¡¢யர்கள் முயற்சித்து வந்துள்ளார்கள் என்பதற்கு அவர்கள் வேதங்களே சான்றாகும். அவ்வேதங்களில் பாரத மக்களை வேதப் பகைவர் என்றும் வேள்வியை நிந்திப்பவர்களென்றும் பல்வேறு குற்றங்களைச் சாட்டிப் பொதுவாகப் பாரத மக்களை தஸ்யுக்கள் என்றும் இராக்கதர் என்றும் வெறுத்துள்ளார்கள். அத் தஸ்யுக்களை அடியோடு அழிக்குமாறு தங்கள் தெய்வமாகி இந்திரனை வேண்டிக் கொண்டுள்ளார்கள். இப்பகைமைக்கு சான்றாக ¡¢க் வேதத்தில் 1-33-5வது சுலோகத்தில், "இந்திரனே! தஸ்யுக்களை எங்குமில்லாமல் செய்த அவர்களை முதுகுகாட்டி ஓடச் செய்யுங்கள் எனவும், சுலோகம் 13-3-7ல் இந்திரனே! இந்த தஸ்யுக்களோடு யுத்தம் செய்து இந்நாட்டிற்கு வெளியே ஓட்டிவிடக்கடவீர். அன்றியும் இந்த தஸ்யுக்களின் தலைவனை எங்கிருந்தேனும் பிடித்துக்கொண்டு வந்து சுட்டொ¢த்து அழிக்கவும்" என்பன போன்ற பல சுலோகங்களை அவ்வேதங்களில் காணலாம்.

இனி தமிழகவரலாற்றை ஆராய்வோம். மேலே கண்ட வேதப்பகை பாரத நாடெங்கும் நிலவியிருந்தது. அக்கால முதல் தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. தமிழ் நாட்டிலும் அப்பூசல் இல்லாமலில்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் திருஞான சம்பந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஞான சம்பந்தர் வைதீக பிராமணர். வேதவழி நின்று வேள்வி செய்யும் பிராமண வகுப்பைச்சார்ந்தவர். ஞானசம்பந்தர் தன் தந்தையார் பு¡¢யும் வேத வேள்விக்குச் சிவபெருமானிடம் பொருள்வேண்டி தேவாரம் பாடியுள்ளார். தமிழகத்தில் வேத வேள்வியாகிய கொலை வேள்வியை அஹிம்சா வாதிகளான தமிழக ஜைனர்களும் புத்த சமயத்தவர்களும் எதிர்த்தனர். ஞான சம்பந்தர் எதிர்பாராத இந்த எதிர்பார்ப்பைக் கண்டு கோபங் கொண்டார். ரிக் வேதத்திலுள்ள சுலோகங்கள் நினைவுக்கு வந்தன. அவ் வடமொழி சுலோகங்களை தமிழாக்கம் செய்து சமணர்களைப் பழித்துப் பாடினார் அத் தேவாரப் பாக்களை கேளுங்கள்.

"வேத வேள்வியை நிந்தனை சேய்துழல்

ஆதமில்லி அமணொடு தேரரை

வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே"

"வேட்டு வேள்வி செய்யும் பொருளை விளி

மூட்டு சிந்தை முரட்ட மண் குண்டரை

ஓட்டி வாது செய்யத் திருவுள்ளமே."

"அந்தணாளர் பு¡¢யும் அருமறை

சிந்தை செய்யா அருகர் சிரங்களை

சிந்தவாது செயத் திருவுள்ளமே"

இத் தேவாரப் பாடல்களும், ¡¢க் வேத சுலோகங்களும் ஒன்றை ஒன்றுப் பின்னிப் பிணைந்திருப்பதைக் காண்கிறோம் கருத்துக்களும், குறிக்கோளும் ஒன்றாகவே பா¢ணமிக்கின்றன. எனினும் ஒரு வேறுபாடு. ¡¢க் வேதம் ஜைனத்தை அழிக்க இந்திரனை வேண்டுகின்றது. ஞான சம்பந்தர் பாடல்கள் சிவபெருமானை வேண்டுகின்றன. இவ் வேறுபாடன்றி வேத வேள்விப் பகைவர்களை அழக்கவும், ஓட்டவும் இரண்டும் முனைந்து நிற்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஜைன மத எச்சசொச்சங்களால் சைவத்தை விமர்சிக்க என்று எழுதப்பட்டுள்ளமை தெரிகிறது. சமணர்கள் ஜைனர்கள் பெளத்தர்கள் அடிப்படையில் இந்துத்துவக் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் சைவத்தின் ஆட்சிப்பீட ஆளுமையைக் கண்டு அஞ்சி அதை அழிக்க முனைந்தனர்.

இப்போ நல்லா இட்டுக்கட்டு வரலாறுபடைக்கின்றனர் என்பதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்களுக்கிடையில் உள்ள குழப்பமே சான்றுபகர்கிறது.

தேவாரங்கள் திருமறைகள் திருப்புகழ் என்பன அவற்றின் மூலவடிவத்தில் இருந்து பெறப்பட்டவை. அந்த வகையில் அவற்றில் செருகல்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆக சமணர்களினது கொடுமைகளை தேவாரங்கள் குறிப்பாக சம்பந்தரினதும் அப்பரினதும் தேவாரங்கள் உச்சரிப்பதால் இந்த ஜைன தளத்தில் இருவருக்கும் எதிராக போலிப் புனைகதைகள் பல செருகப்பட்டுள்ளன. ஏனோ அருணகிரிநாதர் போன்றோரை விட்டு வைத்துவிட்டனர். அல்லது இன்னும் எமது பார்வைக்குக் கிட்டவில்லையோ தெரியவில்லை.

சைவத்தின் இருப்பை எந்தப் புனைகதையும் அழிக்க முடியாது என்பதற்கு சைவம் வரலாற்றோடு தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளமையும் சைவச் சான்றுகள் அகழ்வுகளில் மூலம் ஆதாரமாக்கப்பட்டுள்ளமையும் அதனை வாழ வைக்கும். அத தொன்மையைப் பேசும். :unsure:

Link to comment
Share on other sites

ஞானசம்பந்தர் பாடிய பாக்களில் சமண பெளத்தர்கள் சைவ சமயத்தின் பகைவர்கள் என்றோ சைவ சமயத்தைப் பழிக்கின்றவர்கள், என்றோ எங்கும் பாடவில்லை. வேள்வியை எதிர்ப்பவர்கள், அந்தணாளர்க்கு அடிமையாகாதவர்கள் என்பன போன்ற குற்றச்சாட்டுக்களையே சமண பெளத்தர் போ¢ல் சாட்டிப் பாடியுள்ளார். எனவே ஞான சம்பந்தா¢ன் குறிக்கோள் வேத வேள்வியைப் பரப்புவதேயன்றி சைவ சமயத்தை¨ப் பரப்புவதல்ல என்பது தெளிவு. இவ்வுண்மையை சமயக் கண் கொண்டு பாராது வரலாற்றுக் கண் கொண்டு ஆராயும் அறிஞர்களும், நேர்மையுள்ளம் படைத்தப் புலவர்களும் ஒருமுகமாக ஒப்புக்கொள்வார்கள் என்பது திண்ணம், மேலும் சைவ சமயம் வேத வேள்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தொ¢யவில்லை. ஞான சம்பந்தர் பொருள் திரட்டிப் பசுக்களை கொன்று ஆங்காங்கு வேள்விபு¡¢வதையும் இக்கொலை வேள்வியைத் தில்லைவாழ் சிவபெருமானும், அடியார்களும் ஆதா¢ப்பதாகவும்

"பறப்பை படுத் தெங்கும் பசுவேட் டொ¢யோம்பும்

சிறப்பர் வாழ் தில்லை"

எனப் பாடியுள்ளார். இப் பா¢தாபச் செயலைக் கண்டு தில்லை திருவாய்மொழி பாடிய புலவர்.

"பொ¢தாய முத்தியை பல்லோர்க் கருளும் நற்பிள்ளை பெற்றும்

அ¡¢தாப பொன்கொண்டு சீர்காழி அந்தணனாம் கிழவன்

பா¢தாபமின்றி பசுவதைத்தான் என்ன பாவம் அந்தோ எ¡¢தாங்கி நின்ற என் அப்பனே.... ... ..."

என வருந்திப் பாடிக் கண்டித்துள்ளார். இப் பாடலில் உள்ளக் கருத்தை ஆராயின் ஞானசம்பந்தர் சிவபெருமான் போ¢ல் பழிபோட்டும், பக்தி மார்க்கப் பிரசாரம் எனக் காட்டிக்கொண்டும் சைவ சமயத் தமிழர்களின் ஆதரவோடு வேத வேள்வியை பரப்பிவரும் மறைமுகமான சதியே என்பதை களங்கரை விளக்கம் போல் காட்டுகிறது. அது மட்டுமல்ல. இந்த வேதவிள்விக் கண்டனப் பாவிலே இழையோடிச் செல்லும் ஒரு அ¡¢ய வரலாறும் அடங்கியுளளது. பழம்பெரும் பகையை உள்ளத்தேகொண்டும்,வேத வேள்வியை வெற்றிகரமாக தமிழ் நாட்டில் பு¡¢ந்து வரும் பக்திமார்க்கப் போர்வையில் சைவ சமயத் தமிழர்களைக் தவறானபாதையில் திருப்பி ஜைன சமயத்தலைவர்களை எதிர்த்து போராடத்தூண்டி விட்டுள்ளார் ஞானசம்பந்தர் என்பதையும் அறிகின்றோம்.

Link to comment
Share on other sites

சமணரின் அறத்தின் சின்னமானா காளை ,சிவபிரானின் நந்தியானது எப்படி?

இத்தகு சிறப்புகளுடன் விளங்கிவந்த அறத்தின் சின்னமாகிய காளை மிகமிகப் பிற்காலத்தில் சைவ சமயத்தவர், அறநெறி நினைவை மறைக்க வேண்டி எருதை சிவபெருமானின் வாகனமாகக் கற்பித்து வழிபாடியற்றி வரலாயினர். சமயப் பூசல் தோன்றிய காலத்தில் பகவான் விருஷபதேவர் கோயில்களைக் கைப்பற்றிச் சிவன் கோயில்களை மாற்றியதோடு பரம்பரையாக மக்கள் அழைத்து வந்த நந்தி என்ற பெயரையும் உருத்தையும் அப்படியே வைத்துக் கொண்டார்கள். நாளாவட்டத்தில் நந்தி எனில் அறம் என்று பெயர் மாய்ந்து சிவபெருமான் வாகனம் எனப் பெயர் பெற்றது. இவ் வரலாற்றை உறுதிப்படுத்தும் ஓர் உண்மையைக் காண்போம். சைவசமயத்தவர் ஜைன கோயில்களைக் கைப்பற்றியது போன்றே ஜைன மடங்களையும் பிடித்துக் கொண்டனர். ஜைன மடங்களுக்கு நந்தி மடம் என் றே பெயர். அம்மடாதிகளுக்கு கைலாயகி¡¢ நந்தி பரம்பரை என்றம் வழங்கலாயிற்று. அதாவது பேதமற்ற அறநெறிகளை வளர்க்கும் பரம்பரை என்பதாகும். ஜைன மடங்களைக் கைப்பற்றிய பின்னர் சைவ மடாதிபதிகள் தங்களைச் சிவபெருமான் பரம்பரை எனக் கூறாமல். இயற்கையாகவே ஜைனர்கள் வழங்கிய கைலாயகி¡¢ நந்தி பரம்பரை என்றே அழைத்துக் கொள்ளுகின்ற அற்புதத்தை அம்மடாதிகளின் வரலாற்றால் அறியலாம். கைலாயங்கி¡¢ நந்திபரம்பரை எனில் கைலாயத்தில் வீடுபேறுபெற்ற பகவான் விருஷபதேவா¢ன் அறநெறியை பரப்பும் மடங்கள் அல்லது பள்ளிகள் ஆகும். மக்கள் உள்ளங்களில் ஆழப்பதிந்துள்ள இவ்வா¢ய பெயரை மாற்றவியலாமல் கைலாயகி¡¢ நந்தி பரம்பரை என்ற பெயரையே தங்களுக்கும் சூட்டிக் கொண்டனர். இதுபோன்று பல செய்திகள் உள்ளன. இங்கே எடுத்துக்காட்டாக இரண்டு வரலாறுகளைக் காண்போம்.

நன்னிலம் தாலுக்காவில் புகலூர் என்பது ஒரு ஜைனத் திருப்பதி. பகவான் வர்த்தமான தீர்த்தங்கரர் கோயில் அது அக்கோயிலை சைவ சமயத்தவர். கைப்பற்றியதோடு அவ்வூர் ஜைனப் பெருமக்களையும் சைவசமயம் புகும்படி பலாத்காரம் செய்தார்கள். அதற்கு உடன்பாடாத சிலர் ஊரை விட்டே ஓடிவிட்டனர். சிலர் சைவ சமயம் புகுந்து திருநீறு பூசிக் கொண்டனர். தாங்கள் தங்கள் மதம் மாறினாலும், வர்த்தமானர் சிலையை நீக்கி லிங்கத்தை வைத்தாலும் அதன் பெயரை மாற்ற இசையாமல் வர்த்தமானிஸ்வரன் என்ற பெயரை லிங்கத்துக்குச்சூட்டி வழிபடலானார்கள். இவ்வரலாற்றுண்மையைத்; திருஞானசம்பந்தர் தேவாரத்தில் காணலாம். அவ்வூர் மக்களின் விருப்பத்திற்கிணங்க வர்த்தமானீஸ்வரனே! வர்த்தமானீஸ்வரனே! எனப்பதினோரு பாட்டுக்கள் பாடியுள்ளார்.

சேலம் ஜில்லாவில் தருமபுரம் என்ற பெயரோடு ஒரு ஊரே இருக்கிறது. இப்பொழுது தருமபுரம் ஜில்லாவாகக் காட்சி அளிக்கிறது. தருமபுரம் என்ற பெயரே ஜைனக்கிராமம் என்பது சொல்லாமலே விளங்கும்.

இவ்வூ¡¢ல் மல்லிநாத தீர்த்தங்கரர் கோயில் சிறப்புடன் விளங்கியிருந்தது. இக்கிராம ஜைனப் பெருமக்களைச் சைவ சமயம் புகச்செய்து கோயிலையும் கைப்பற்றிக் கொண்டனர். கோயிலைத்தங்கள் வசமாக்கிக்கொண்டாலும் அப்பகுதிமக்கள் மல்லிநாத சுவாமி என்று அழைத்துப் போற்றும் வழக்கத்தை மாற்ற விரும்பாமல் மல்லகார்ச்சுனர் எனப் பெயர் சூட்டி வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு யான் எழுதத் துணிவு உண்டானதற்குச் சான்று வேண்டுமல்லவா? அக்கோயிலின் கற்களே பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அத்தெய்வீக அகச்சான்றைப் பாருங்கள். அக்கோயிலின் கல்வெட்டுக் செய்திகளில் மல்லிதீர்தங்கரை வழிபாடு இயற்றி அறவுரை யாற்றி வந்த ஜைன அறவோர்களின் திருப்பெயர்கள் காட்சி அளிக்கின்றன.

விநயசேன பட்டாரர். கனகசேன பட்டாரர், ஆகிய இரு முனிவர்களுடன் பல அறவோர்கள் அங்கே தவமியற்றி வந்ததாகக் கல்வெட்டு செய்திகள் பொறிக்கப் பெற்றுள்ளன. இவ்வாற பலஜைனர் கோயில்கள் சைவ, வைணவக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன. இவைகளைப்பற்றி எழுதுவதாயின் 500 பக்கங்கள் கொண்ட தனி நூலே எழுதிவிடலாம்.

அறத்தின் சின்னமாகிய காளையைச் சிவபெருமான் வாகனமாக கற்பித்தது போன்றும், தீர்த்தங்கரர் பெயர்களில் ஈஸ்வரன் என்றும், அர்ஜ்ஜுனர் என்றும் சேர்த்துக் தங்கள் சிவலிங்கத்துக்கும் பெயர்கள் சூட்டி ஜைன கோயில்களைக் கைப்பற்றிக் கொண்டது போன்றும் ஜைன அறவோர்கள் பெயர்களைத் தங்கள் நாயன்மார்களுக்குச் சூட்டிக்கொண்ட வரலாறும் உண்டு.

http://www.jainworld.com/JWTamil/jainworld..._jainam_15.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைச் சமயத் தோற்றத்திற்க்கு மானுடவியல் அறிஞர் பல்வேறு காரணங்களைக் காட்டுக்கின்றன. அவற்றுள் ஆவி உலக்ககோட்பாடு, இயற்கைக் கோட்பாடு,முன்னோர் வழிபாட்டுக் கோட்பாடு என்பன சிறப்பாக்க சுட்டத்தக்கவை. தமிழர் தம் பண்டைச் சமயக்கூறுகளுள், ஆவி வழிபாட்டு கூறும், இயற்கை வழிபாட்டுக் கூறும், முன்னோர் வழிப்பாடுக் கூறும் கலந்து இயைந்தே உள்ளன.

சமய வாழ்வின் தொடக்க லையினை பிரெஞ்சு சமுகவியல் அறிஞர் எமில் துர்க்கேம், குலக்குறியே, அதனைச் சார்ந்த நம்பிக்கையே சமயமாக வளர்ச்சி கொண்டது என்கிறார். ஆஸதிரேலியாவில் வாழும் அருண்டா பழங்குடிமக்களை ஆதாரமாகக கொண்டு தம் கொள்கையை அவர் உருவாக்கி விளவாக்கி விளக்கினார்.மக்கள் ஒரே மாதிரியாகப்போய்க் கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கையில் சலிப்பு அடைகிறார்கள்.

அந்தச் சலிப்பில் இருந்து விடுதலை பெற எல்லோரும் ஒன்று ஆட்டம் பாட்டம் கழ்த்துகிறார்கள். இந்த ஆட்டப்பாட்டம் ஆரவாரத்தோடு வெறித்தனமாக அமைகிறது. எனவே அதில் கலந்துக் கொள்ள ஆவேசம் வருகிறது.கொஞ்ச நேரத்தில் வந்த ஆவேசம் அடங்க ஆட்டம்பாட்டம்கள் ன்றுபோகின்றன.

எப்படி இந்த ஆவேசம் வருகிறது, எப்படி அது போகிறது என்று அவர்கள் எண்ணத் தொடங்கிறார்கள். ஏதோ ஒரு நுட்பமானஅருவருமான மறைமுக சக்திதான் காரணமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். அது வெளியே இருந்து மக்கள் உடலில் புகும்போது மக்களுக்கு ஆவேசம் வந்துவிடுகிறது. விலகிப் போகும் போது ஆவேசம் போய்விடுகிறது.

இந்தச் சக்தியை அருண்டா மக்கள் எமானாஎ என்று குறித்தனர். அதனைப் பூசித்து வழிப்பட்டனர்.அந்த உருவத்தைப் புனிதமாகக் கருதி வழிப்பட்டனர்.அதனை ஒட்டியே பூசைகள் சடங்குகள் தோன்றின.அந்த உருவமே குலக்குறினதஒதமெண எனப்படும். உருவங்கள் மட்டும் அல்லாமல் தாவரங்கள், விலங்குகள், இய்ற்கைப் பொருள்கள் முதலியனவும் சக்தியின் இருப்பிடமாகக் கருதப்பட்டு,புனிதப்பொருள்கள

Link to comment
Share on other sites

அதே இணயத் தளத்தில் இருந்து ஒரு ஆங்கிலக் கட்டுரை, ஆரியரான பார்பனீய வேதம் சார்ந்த அடக்குமுறையே சமணத்தையும் பவுததையும் தோற்றுவித்ததாகக் கூறுகிறது.ஆரியரான பார்ப்பனரின் அடக்குமுறையால் வெறுப்புற்ற மக்கள் சமணத்தையும் பவுததையும் தளுவினர் என்று கூறுகிறது. :unsure::o

Indo-Aryans: Who are they?

The original abode of these of the Indo- Aryans (meaning noble ones) have divided the historians, but its accepted by all that they came from out side India. Some have proposed that due to the similarity of Sanskrit (the script of the Indo-Aryans), Greek, Latin and Gothic, the ancestors and forefathers of the speakers of these languages at one time lived together (the European theory). Others have proposed that they had an Austrian-Hungarian connection. However the most accepted theory is that they came from Central Asia (what is now Iran). There are many striking similarities between the Indo-Aryan culture and those of the Central Asian culture. Iran means ‘ Land of the Aryans’. The ancient writings of the Persian language of Avesta (as known to us through the writings of Zarathustra) and the Hindu Vedas (the very ancient religious scriptures of the Indo-Aryans) share many gods and beliefs.

The gods worshipped in the Vedas resemble the gods of the ancient Central Asia, headed by the powerful Indra. Also popular was the fire god of Agni. Varuna and Mitra (gods of the night and day sky respectively) have been identified with Persian gods. Surya, the sun god is also mentioned in ancient Persian Avesta. Fire- worship was common to both these groups. Like the Iranian Avesta, the Vedas refers to the thirty-three gods. A rock inscription found at Boghaz Koi (western Asia) dated 1400 BC commemorating a treaty between the kings of Hittities and Mitanni invokes the blessings of Aryan gods of Varuna, Indra and twins Nasatya (Asvins).

It is now believed that before these Indo Aryans invaded India, they had settled in the present Afghanistan for many centuries, since the religious scriptures of the Indo- Aryans (Vedas) mentions many names of the rivers in Afghanistan.

--------------------------------------------------------------------------------

Invasion of India by the Indo Aryans

The tall, fair skinned Indo- Aryans in their fast horse driven chariots created terror and panic among the local inhabitants – Dravidians. Dravidians had no answer to the destructive power possessed by the invading and marauding Indo- Aryans. Indo Aryans also sought the help of their equally destructive gods- especially Indra. The ancient religious scripture of the Indo –Aryans (Vedas) termed the Dravidians as dark skinned Dasa or Dasyus who were their ubiquitous foes. Numerous Vedic hymns refer to the use of horses and chariots with spokes which must givens the Indo- Aryans a tremendous advantage over the local people. The Rig-Veda (the earliest of the Vedas) is dominated by hymns praising the Aryan gods of Agni and Indra for giving them victories and wealth plundered from the local Dasas through warfare. Below is a hymn from the RIG-VEDA denigrating the original inhabitants of India.

He (Indra), self-reliant, mighty and triumphant, Brought low the dear head of the wicked Dasas(dravidians). Indra the vritra-slayer, fort destroyer Scattered the Dasa(dravidians) hosts who dwelt in darkness He slaughtered the Dasas and cast down their forts of iron (RIG VEDA)

In Rig Veda (III: 34:9) it states that Indra killed the Dasyus and gave protection to the Aryan color, and arrogantly proclaimed “ let those who have no weapons suffer sorrow.” Rig Veda (IV: 28:3-4) praises Indra for killing thousands of the abject tribes of Dasas with his arrow and taking great vengeance with “ murdering weapons.” Another hymn mentions how sixty thousand Dasas were slain.

In the another hymn of Rig-Veda, the dasyus are condemned for being “ riteless, void of sense, inhuman and urges Indra to slay them.

He, much invoked, hath slain Dasyus (local inhabitants) After his wont and laid them low with arrows. The mighty thunderer with his fair- complexioned friends Won the land, the sun light and the waters (Rig Veda)

Fire god, Agni is also praised profusely for having burnt the forts of the dark skinned dasas(dravidians).

“ For fear of thee forth fled the dark-hued race, scattered abroad, Deserting their possessions, when glowing. Agni didst light up and rend their castles.”

In conclusion, the Indo Aryans who invaded the land of original inhabitants of India plundered and murdered the local inhabitants. They sought the help of their beloved gods to destroy the Dravidians – whom they described as short, dark, mean inhumans and void of sense. By the time the Indo-Aryan invasion was concluded, thousands of citizens of the great Indus valley civilization had been murdered. The rest surrendered, and assimilated with the Aryans forming the lowest strata of the Aryan society- the Sudras.

--------------------------------------------------------------------------------

Vedas and its impact on Indian Society

Vedic literature is one of the most important legacies of the Aryans. The Vedic literature can be divided broadly in to Surti and Smriti literature. Surti literature is considered that type of literature which was not composed but revealed by the Aryan gods to few sages, and then passed on orally from one generation to the other. On the other hand Smriti literature is one which was reduced to writing by memory of the sages. Vedic literature can be divided in to early Vedic literature (Vedas) and later Vedic literature (Puranas, Epics and Dharma sastras).

The Vedas (meaning knowledge) are the most important scriptures of the Indo Aryans written in Sanskrit. It is said that their favorite Gods whispered the early Vedas in the noble ears of the Aryans. There are four Vedas and it is believed they were written from 2500 BC to 500BC.

RIG-VEDA: Considered to be the oldest and the most important. Essentially the Rig-Veda is dominated by hymns praising the Aryan Gods for giving them victories and wealth plundered from the local Dasas through warfare. It was rig Veda that for the first time mentioned the class system in India (unheard in the Indus Valley civilization).

The Brahman (representing priests) was his mouth Of both his arms was the Rajanya (representing King, head of the warrior or Kshatriya caste) made. His thigh became the Vaisya (representing the merchants, craftsmen and farmers), From his feet the Sudra was produced (representing the Dasas – the original inhabitants of Indus Valley).

The Aryan caste system (varna) essentially differentiated between the light –skinned Aryans, who made the top three castes of priestly Brahmins, warrior Kshatriyas and artisan Vausyas and the dark-skinned Dasas (original inhabitants), who were the servant Sudras. Sudras like women could not own property, and only rarely did they rise above the service positions. The Aryan society was highly patriarchial, and thus status of the women declined. Women did not attend public assemblies and could not inherit property of their own. Polygamy, adultery and prostitution were generally accepted during certain rituals.

SAMA VEDA: It contains the melodies or music for the chants used from the Rig-Veda for the sacrifices. Sama Veda was extensively used in the SOMA ritual for which the plant with inebriating and hallucinogenic qualities was imported from the mountains to the heartland of India. The singing of the Sam Veda used the seven tones of the European scale.

YAJUR VEDA: It is a collection of hymns for ritual formulas for the priests to use in the sacrifices. By the time Yajur Veda was in place, the priest class ( Brahmin caste) had become the most powerful class in the society. By instituting more elaborate sacrifices for their wealthy patrons, the Brahmin class not only grew in numbers but also accumulated wealth. They also instituted the shameless horse sacrifice – the parts of the horse symbolized different aspects of the universe – which culminated with exhibiting three symbols of the lotus leaf, the frog (for rain) and the golden man (for sun) representing the Aryan dominance over India and its waters.

The SOMA sacrifice was the most important sacrifice of the Aryans, and could take up to twelve years. The highly intoxicating Soma plant was brought from the Himalayas and animals were slain and cut up in the rites before their meat was eaten. Yajur Veda also refers to the Purusha (person) sacrifice symbolizing human sacrifice.

ATHARVA VEDA: It is primarily magical spells and incantations for various ailments and diseases. The Aryans looked down on doctors and medicines, probably because the natives were more skilled in these than they. Since these magical rituals were only conducted by the Brahmin caste, they became even more powerful and wealthy. Cows by right belonged exclusively to the Brahmins. Brahmins were also excluded from all the taxes.

BY 1800 BC the entire north India had been aryanized. They called their land - bordered to the north by the Himalayas and to the south by the Vindhaya ranges (close to the Maharastra –Madya Pradesh border) - the Aryavartta (sacred land of Aryans). Like the Dasas of the north India, there were local inhabitants south of the Vindaya mountains. They were mainly Nagas. Initially the Aryans found it difficult to cross the Vindhaya ranges. However by 1500 BC the Aryans had crossed the Vindhaya mountains. It is believed that the local inhabitants fought them hard, but eventually lost to Aryans. The Vedas are full of exaggerated cruel tales of Nagas, describing them as Raksasas and making fun of their long grown hair- since barber caste was unknown to the local people.

--------------------------------------------------------------------------------

Hinduism equals Brahminism?

By 500 BC, the priestly class of Brahmins had become the most powerful people of the society. In fact they were even more powerful than the kshatriyas (Kings and warriors). Brhamins by introducing the ignorant and stupid ritual in Hinduism not only made them powerful but also fattened their pockets. Brahmins now began to lay more stress on the rituals and the spirit and purpose of worship was lost. Brahmins forced the poor people to perform not only the costly Yagnas but also the shameful animal sacrifices. They cursed those people who did not obey them with their demands.

Brahmins made Hinduism complex and complicated with various theories on Moksha, Karma and re- birth. The local Dasas (original inhabitants) who were known as the Sudras were not allowed near the Hindu temples. Brahmins recited the rituals in Sanskrit, which the local population did not understand. In fact they fiercely guarded the Sanskrit language as their exclusive property, and did not allow any one outside their caste to learn it.

It was such disgusting and abominable behavior of the Brahmins that led to the degeneration of Hinduism. It was the Brahmin orthodoxy and barbarity that gave rise to all the religions and the major self- respect movements that arose in India. Jainism (Lord Mahavira 599- 527BC) and Buddhism (Lord Buddha 563 BC) came in to existent primarily because people were sick and tired of the rituals and the power exerted by the Brahmins.

Both Jainism and Buddhism completely omitted idol worship and rituals. In 1500, Guru Nanak formed Sikism, partly because of the Brahmin influence on the society. When the first Muslims invasion of India took place somewhere around 1000AD, millions of low caste Hindus (mainly Sudras) converted to Islam, mainly to escape from the Brahmin brutality. In fact Muslims would have never been successful in India had the Brahmins and Hinduism had treated all its citizens equally.

When Periayar started his Self respect movement in Tamil Nadu around 1924, and offered his ‘rationalism’ and his rejection of Hindu gods, he was only rejecting the Brahmins and their language; his rejection of the North India; his rejection of caste; his rejection of the disregard the fair Aryan north people had for the dark people of the south. Even today at the Kanchi Atheenam in Tamil Nadu – citadel of Tamil Nadu Brahminism – non Brhamins are not allowed to eat with the Brahmins.

--------------------------------------------------------------------------------

Whispering of Vedas into Aryan ears

The Basic foundations of Hinduism are the Vedas. The Vedic culture was an integral part of the Indo- Aryans by the time they had arrived in India. We all know that the Indo Aryans came to India mainly from the Central Asia. So, is it right for us to say that Hinduism was born in India? Was Hinduism was born outside India and later developed to its present stage in India? It is mind boggling for any one with minimum intelligence to understand why the Hindu gods whispered all the sacred Vedas only in to the ears of the Aryans. Why did not the Hindu gods whisper such sacred and knowledgeable Vedas in to the ears of the peace loving and docile local inhabitants of India- Dravidians? Why did these Hindu gods wait for the arrival of the destructive and brutal Aryans before they secretly whispered in to their ears only?

--------------------------------------------------------------------------------

Hindu Epics and Puranas

All most all the Hindu epics and Puranas depict the original inhabitants of India as dark, cruel, barbaric and vicious people. Every single Hindu gods and goddesses have Aryan like features, including the popular south Indian deity – lord Muruga. Most of the Hindu Epics and Puranas have Aryan Gods – like Indra- pleading to their Hindu gods to destroy their enemies – invariably these are Dravidian like figures who are portrayed as cruel and barbaric. All the ten Hindu Avatars (god –incarnate) – including the last and the yet to come Kalki avatar- are Aryan like figures, and most of their battles have been against the dark, ugly evil figures.

One has to wonder why there was not even one Avatar who was born to bring justice to all those people who had suffered so much due to Brahmin brutality and cruelty. It is now believed by the historians that the Aryans had borrowed the Shiva (Rudra) and Shakthi cult from the original inhabitants , and incorporated in Hinduism. Even here, while Siva has been portrayed like an Aryan figure while Shakthi (Kali) is depicted as a many-tongued, blood thirsty with bulging eyes. No other Aryan goddesses have met the same fate.

If Hinduism belongs to all those people who follow it (this includes the Sudras), why is that the '‘ sacred thread ‘ ceremony even today exclusively belongs only to the three castes of the Aryans (namely the Brahmins, Kshatriyas and vaishyas)? Why is that the Vedas have said that the holiest of holy passage, the Gayatri Mantra – addressed to the old solar god Savitr- can only be spoken by the three higher classes of the Aryans?

--------------------------------------------------------------------------------

Hinduism: native or alien to India?

It is not the intention of this article to bring disrespect or cast malice on the Hindu religion. Sure, the Hinduism has many good things to offer to the people. But those who practice Hinduism should seriously question some of the major principles and beliefs of Hinduism. Is it not foolish for the Dravidians to go to temples, lit camphor and prostrate in front of the very same gods, who have been praised and sung for having destroyed them? Is it not utter ignorance on our part to chant the Vedic gods’ names, when the very same gods are praised by the Aryans for butchering and slaughtering our fore- fathers? Is it not ironic that we follow a religion that categorized its own people based on color, and placing the original inhabitants of India at the bottom of the society simply because of their dark skin?

Even the name ‘Hindu’ is a corrupt form of Aryanism. The Indus River was called Sindhu river in the ancient times. The Persians pronounced the word Sindhu as Hindu, and called all those who lived there as Hindus. In conclusion one must wonder whether Hinduism is a forefront for the propagation of Brahminism or the Aryanism.

http://www.tamilnation.org/forum/shanranjit/hinduism.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரிய திராவிட பார்ப்பர்னியப் பாகுபாடுகளுக்கு அப்பால் தமிழர்களும் சைவமும் வரலாற்றுப் பிணைப்போடு இருந்திருக்கிறது என்பது நிரூபணமாகிறது.

தமிழர்கள் எமக்கு எமது வரலாற்றை அறிய ஆரிய திராவிட பார்ப்பர்னிய கோசங்கள் அவசியமில்லை என்பதும் தெளிவாக்கப்படுகிறது.

ஜைனர்கள் பெளத்தர்கள் தமிழர்களின் இசை ஆடல் கலைகளை வெறுத்து ஒதுக்க முயன்றுள்ளனர் என்பதும் சைவத்தின் மீதிருந்த வெறுப்பே அதைச் செய்யத் தூண்டி இருக்கிறது என்பதும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி தொல்காப்பியத்திலேயே சிவன் பற்றிய குறிப்பு அடங்கி இருப்பதும் உதாரணத்தோடு சொல்லப்பட்டுள்ளது.

ஏலவே நாம் குறிப்பிட்டது போல ஆரிய திராவிட கோசங்களுக்கு அப்பால் தமிழரின் வரலாறு தனித்து நோக்கப்பட வேண்டியது அவசியமாகிறது என்பது மீண்டும் நிலைநிறுத்தப்படுகிறது.

ஆரியர் வருகை பற்றிய வரலாறே கேள்விக் குறியாகி இருக்கும் இவ்வேளையில் தமிழர்களின் வரலாறு பரந்து விரிந்த ஒரு நிலைக்குரியதாக நிரூபிக்கப்படக் கூடிய நிலையும் உண்டு.

அது சைவம் சாந்து உள்ளமையும் தவிர்க்க முடியாதது. அந்த வகையில் மதம் எமது இருப்புக்கான அடையாமாகி உள்ளதை யாரும் புறக்கணிக்க முடியாது.

தமிழர்களின் மதமாக ஜைனத்தையும் பெளத்தத்தையும் உச்சரிப்பவர்கள் நானிக் குனியுங்கள்.

அத்தோடு இதையும் படியுங்கள்....

Demise of Aryan Invasion Theory

Conclusion

So, What are the facts?

Now, based on what has been presented above, following facts about an ancient and glorious period of India clearly emerge:

1. The Aryan Invasion and Racial theories, and Aryan-Dravidian conflicts are a 19th century fabrication by some European scholar. They are being exploited even now for political reasons.

2. The hymns of Rigveda had been composed and completed by 3700BC, this can be scientifically proved.

3. The language of the Indus script is related to Sanskrit, the language of Vedas.

4. The Indus valley civilization should be aptly called as Saraswati Vedic civilization, as the new evidences and right interpretation of the archaeological findings indicate.

5. There is now strong evidence that the movement of the ancient Aryan people was from east to west, and this is how the European languages have strong association and origin in the Vedic Sanskrit language.

6. The ending of Indus Valley and the Saraswati civilization was due to the constant floods and drought in the Indus area and the drying up of the Saraswati river. This had caused a massive emigration of the habitants to safer and interior areas of the Indian subcontinent and even towards the west.

7. There was no destruction of the civilization in the Indus valley due to any invasion of any barbaric hordes.

8. The Vedic literature has no mention of any invasion or destruction of a civilization.

9. There is no evidence in any of the literature which indicate any Aryan-Dravidian or North-South divide, they were never culturally hostile to each other.

http://www.tamilnation.org/heritage/agrawal.htm

Link to comment
Share on other sites

ஆன்மா என்பது குறித்து எனக்கு பல கேள்விகள் உண்டு. இதில் சைவத்தின் சிந்தாந்தங்கள் எனக்கு எதுவுமே இல்லை. மற்றைய மதங்கள் சொல்லாத ஒன்றை, அல்ல எமது தமிழ் இலக்கியங்கள் சொல்லாத ஒன்றை 7ஆம் நூற்றாண்டிற்கு பின்பு உருவாகிய சைவ சித்தாந்தம் சொல்லிவிடவில்லை.

பௌத்தமும், சமணமும் தோன்றிய பின்புதான் இந்துங்களுக்கு "மதம்" என்கின்ற ஒன்றும் "கோட்பாடுகள், சித்தாந்தங்கள்" போன்றவைகளும் தேவை என்று விளங்கியது. அது வரைக்கும் யாகங்கள் செய்து கொண்டும், ஆபாசக் கதைகள் பேசிக் கொண்டும், உயிர்க் கொலைகள் செய்து கொண்டும்தான் பார்ப்பனர்கள் திரிந்தார்கள்.

பௌத்தம், சமண மதங்களை பார்த்து உயிர்க் கொலைகளை இன்றைக்கு விட்டுவிட்டாலும் இந்துக்கள் அருவருப்பானதும், ஆபாசமானதுமான மந்திரங்களை விடவில்லை.

இங்கே இன்னும் ஒன்றையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்து மதமோ, பௌத்தமோ, சமணமோ எதுவும் தமிழர்களின் மதங்கள் அல்ல.

காலத்திற்கு காலம் தமிழர்கள் அனைத்து மதங்களிலும் இருந்திருக்கிறார்கள்.

"மதம்" என்ற அடையாளத்தோடு உலகில் முதலில் உருவாகியது பௌத்த மதம். பின்பு சமண மதம்.

ஆகவே தமிழர்கள் முதலில் சேர்ந்த "மதம்" என்றால் பௌத்தம் என்றோ, சமணம் என்றோ சொல்லிக் கொள்ளலாம்.

ரிக் வேதம் கிமு 3700ஆம் ஆண்டை சேர்ந்தது என்று இது வரை அறிவியில்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

சமஸ்கிருதத்திற்கும் மற்றைய சிந்துவெளியில் பேசிய மொழிக்கும் எவ்வித தொடர்பு இல்லை என்றுதான் மொழியியலாளர்கள் சொல்கிறார்கள்.

நீங்கள் தந்த இணைப்பில் கட்டுரையாளர் தவறான தகவல்களை தந்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மதம்" என்ற அடையாளத்தோடு உலகில் முதலில் உருவாகியது பௌத்த மதம். பின்பு சமண மதம்.

ஆகவே தமிழர்கள் முதலில் சேர்ந்த "மதம்" என்றால் பௌத்தம் என்றோ, சமணம் என்றோ சொல்லிக் கொள்ளலாம்.

இந்த ஒன்றே போதும் உங்களின் நோக்கம் என்ன என்பதும் வரலாற்றை அறிவியலூடு அறியமுற்படாத உங்கள் சிந்தனையையும் சொல்கிறது. இப்படியே புலம்பித் திரியுங்கள். இதற்கு மேல் உங்களுக்குப் பதில் சொல்லிப் புரியுமா என்பது சந்தேகமே.

பல தடவைகள் அகழ்வுச்சான்றுகளோடு சொல்லியாயிற்று சைவத்துக்கு உரிய லிங்க வழிபாடும் விலங்குகள் வழிபாடும் சிலைகளும் சிந்து வெளியில் இருந்ததென்று. அந்த வழிபாட்டு முறைகளுக்கும் தமிழருக்கும் உள்ள நெருக்கமும் விளப்பட்டுள்ளது. ஏலவே அது தொடர்பில் பல ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ள முன்னைய விவாதக் களங்களில். தொல்காப்பியம் சொல்லி இருப்பதும் ஆதாரத்தோடு கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. இதற்கும் மேலே என்ன ஆதாரம் தேவையோ...? இது திட்டமிட்டு குழப்பங்களை விளைவிக்க என்று நீங்கள் ஏற்படுத்திய சிறுபிள்ளை விளையாட்டு என்றே தோன்றுகிறது.

எனி நீங்கள் இல்ல புத்தன் பிறந்துதான் மதம் வந்தது என்றால்...அப்படியே சொல்லிக் கொண்டு சிங்கள பெளத்த பேரினவாதிகளின் பின்னால் போய் உண்ணாவிரதமிருங்கள். பெளத்தமே ஆதியானது. தமிழர்கள் பெளத்தத்தைத் தழுவி சிங்களவராவதால் மட்டுமே இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம். அதுபோக இலங்கையின் தேசிய மதமாக பெளத்தம் அமைதே சிறப்பு ..அதைத் தமிழர்கள் எதிர்ப்பது வரலாற்றை அறியாத மூடத்தனத்தில் என்று சொல்லி பிக்குகளோடு கூட அமருங்கள். இங்கே நின்று புலம்புவதில் பயனில்லை. கொஞ்சம் அறிவியல் சிந்தனையும் வரலாற்றைப் பகுத்தாயிற சிந்தனையும் தேவை இவற்றைக் கையாள...!

மொழியிலளார்கள் என்றால் யார் எங்கே என்ன ஆதாரங்களோடு விளக்கினர் என்று சொல்லுங்கள் அப்போதுதான் அவர்கள் செய்த குறறுபடிகளைக் கண்டறிய முடியும். சும்மா கதையளப்பது நேர விரயமே தவிர.. பயனில்லை

:unsure: :P
Link to comment
Share on other sites

"மதம்" என்பதற்கு உங்களின் வரவிலக்கணம் என்ன என்று சொல்லுங்கள்!

நான் சொன்னதன் அர்த்தம் உங்களுக்கு ஓரளவு புரியும்.

சிறிலங்காவில் சிங்களவர்கள் மத்தியில் இருப்பது பௌத்த மதம் அன்று. அப்படி நான் பார்க்கவில்லை.

என்னுடைய பார்வையில் இந்து மதத்தின் ஒரு பிரிவாகத்தான் சிறிலங்காவில் பௌத்தம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.