Jump to content

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"மதம்" என்பதற்கு உங்களின் வரவிலக்கணம் என்ன என்று சொல்லுங்கள்!

நான் சொன்னதன் அர்த்தம் உங்களுக்கு ஓரளவு புரியும்.

சிறிலங்காவில் சிங்களவர்கள் மத்தியில் இருப்பது பௌத்த மதம் அன்று. அப்படி நான் பார்க்கவில்லை.

என்னுடைய பார்வையில் இந்து மதத்தின் ஒரு பிரிவாகத்தான் சிறிலங்காவில் பௌத்தம் இருக்கிறது.

பெளத்தம் தொடர்பான உங்களின் நிலைப்பாடையே இந்த வரி தகர்த்துவிட்டுள்ளதே. இந்து சமயத்தின் கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்த மதம் என்று நீங்கள் வாதிட்ட பெளத்த மதம் எப்படி இந்து சமயத்தின் பிரிவானது.

சிங்களத்தில் தமிழ் சார்ப்புச் சொற்கள் இருக்கின்றது என்பதற்காக சிங்களம் தமிழின் சகோதரமொழி என்று பிரகடனம் செய்யலாமா...??!

ஆக நீங்கள் சொல்வது படி பார்த்தால் சிங்களவர்களும் தமிழர்களே. அல்லது தமிழர்களும் சிங்களவர்களே.. அப்படியா..??! :o:unsure:

Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெளத்தம் தொடர்பான உங்களின் நிலைப்பாடையே இந்த வரி தகர்த்துவிட்டுள்ளதே. இந்து சமயத்தின் கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்த மதம் என்று நீங்கள் வாதிட்ட பெளத்த மதம் எப்படி இந்து சமயத்தின் பிரிவானது.

சிங்களத்தில் தமிழ் சார்ப்புச் சொற்கள் இருக்கின்றது என்பதற்காக சிங்களம் தமிழின் சகோதரமொழி என்று பிரகடனம் செய்யலாமா...??!

ஆக நீங்கள் சொல்வது படி பார்த்தால் சிங்களவர்களும் தமிழர்களே. அல்லது தமிழர்களும் சிங்களவர்களே.. அப்படியா..??! :o:unsure:

அப்படிக் கிடையாது. சிறிலங்கா அரசு சொல்வது போல "எந்தப் பேயோடு சேர்ந்தாவது.............." என்பது போல, இந்து மதத்தைக் கொச்சைப்படுத்த ஏதோடும் ஒற்றுமை பேசுவார் சபேசன்.

Link to comment
Share on other sites

நான் சொன்னதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

புரிந்து கொள்வது மாதிரி தெளிவாக நானும் சொல்லவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

இலங்கையில் பௌத்தம் "இந்து மதம்" போன்றுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பௌத்த மதத்தின் கொள்கைகள் எதுவுமே இலங்கையில் உள்ள பௌத்தத்தில் இல்லை.

எப்படி சில இடங்களில் சிவன் முதன்மைக் கடவுளாக, விஸ்ணு முதன்மைக் கடவுளாக உள்ளனரோ, அதே போன்று சிறிலங்காவில் புத்தர் முதன்மைக் கடவுளாக இருக்கின்றார். மற்றைய நடைமுறைகள் அனைத்தும் இன்றைய இந்து மதம் போன்றே இருக்கின்றன. அதேயளவு துணைக் கடவுள்கள், புராணங்கள், சாதியம் என்று எல்லாவற்றையும் இந்து மதம் போன்று அவர்கள் வைத்துள்ளார்கள்.

சிறிலங்காவில் உள்ள "பௌத்த மதம்" இந்து மதத்தில் உள்ள சைவம், வைணவம் போன்ற பிரிவுகளில் ஒன்று போலவே காட்சி அளிக்கிறது.

ஆகவே நான் சிறிலங்காவில் பௌத்த மதம் இருப்பதாக ஏற்றுக் கொள்வதில்லை. என்னுடைய பார்வையில் சிங்களவர்களும் இந்துக்கள்தான். மதத்தின் பெயரைத்தான் மாற்றிச் சொல்கிறார்கள்.

நான் ஏற்கனவே சிங்களவர்களும் திராவிடர்கள்தான் என்று சொல்லி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பௌத்தம் "இந்து மதம்" போன்றுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பௌத்த மதத்தின் கொள்கைகள் எதுவுமே இலங்கையில் உள்ள பௌத்தத்தில் இல்லை.

எப்படி சில இடங்களில் சிவன் முதன்மைக் கடவுளாக, விஸ்ணு முதன்மைக் கடவுளாக உள்ளனரோ, அதே போன்று சிறிலங்காவில் புத்தர் முதன்மைக் கடவுளாக இருக்கின்றார். மற்றைய நடைமுறைகள் அனைத்தும் இன்றைய இந்து மதம் போன்றே இருக்கின்றன. அதேயளவு துணைக் கடவுள்கள், புராணங்கள், சாதியம் என்று எல்லாவற்றையும் இந்து மதம் போன்று அவர்கள் வைத்துள்ளார்கள்.

சிறிலங்காவில் உள்ள "பௌத்த மதம்" இந்து மதத்தில் உள்ள சைவம், வைணவம் போன்ற பிரிவுகளில் ஒன்று போலவே காட்சி அளிக்கிறது.

பெளத்ததுக்கும் இந்து மதத்துக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உண்டு என்பது தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்து மதத்தின் வழி வந்ததுதான் பெளத்தமே..! புத்தர் பிறந்ததே இந்து மதம் கோலோஞ்சிய நேபாளத்தில். புத்தர் இந்து வேதங்களில் ஒன்றான யோக வழி நின்றே துறவடைந்ததாக வரலாறுகள் சொல்கின்றன.

நீங்கள் சிலர் உங்கள் கற்பனைகளை யாரேனும் சொல்லிய மூடக்கதைகளை இங்கு கருத்தாக்கி உங்களின் மூடநம்பிக்கைகளை மற்றவர்களின் நம்பிக்கையாகக் காட்டி பகுத்தறிவு பேசுகின்றீர்கள் என்பதும் நிகழ்காலத்தைவிட்டு நீங்கள் அதிக தூரம் பின்னோக்கி உள்ளதும் தெளிவாகி இருக்கிறது. :P :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரிக் கருணாநிதியையும் முட்டாள்களுக்குள் அடக்கியாகிவிட்டது. அதுசரி வெறுங்குருவி சொன்னால் எல்லாம் சரிதான். :icon_idea::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரிக் கருணாநிதியையும் முட்டாள்களுக்குள் அடக்கியாகிவிட்டது. அதுசரி வெறுங்குருவி சொன்னால் எல்லாம் சரிதான். :icon_idea::(

வாதத்தைப் பற்றிப் பேசாமல் ஏன் யாரோ ஒருவர் பற்றி இங்கு பேச வேண்டும். அதுவும் இங்கு வாதத்தில் சம்பந்தப்படாதவரைப் பற்றி. கள அங்கத்துவ தனிநபர்கள் பற்றிய குழப்பமான கருத்துக்களை இங்கு வைப்பதை தவிர்ப்பது நல்லது என்பது கள நிர்வாகிகளால் சுட்டிக்காட்டப்பட்டும் நீங்கள் மற்றும் சிலர் அதைத் தொடர்வது களத்தின் ஏக போக உரிமையை நீங்கள் கொண்டிருப்பதான எண்ணப்பாட்டையே தோற்றுவிக்கிறது. இதை தவிர்த்துக் கொள்ளலாமே.

நீங்கள் எப்படி அருணகிரிநாதரை விமர்சிக்க முடியுமோ அதே போன்று வெளியே காட்டிக்கொள்ளாமல் நடிகைகளுடன் கும்மாளம் அடித்த.. அடிக்கும்... 3 தடவைகள் ஊரறியத் திருமணம் செய்த கருணாநிதி போன்ற "பெரியார் வழிவந்த பகுத்தறிஞர்களை" அவர்களின் அறிவுபூர்வமான இச்செயல்களை...அங்கீகரிக்க வேண்டுமோ..?? சேர் ஐசைக் நியூட்டன் கதவில் குட்டிப் பூனைக்கும் பெரிய பூனைக்கும் தனித்தனி துவாரம் வைத்தது என்பதை அவர் விஞ்ஞானி என்பதற்காக அறிவியல் ரீதியான என்று கொள்ளலாமோ..??! :P :icon_idea:

Link to comment
Share on other sites

கலைஞர் நிகண்டில் நடந்து இடைச்செருகல் பற்றிக் கூறி உள்ளார்.

கலைஞர் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியலிலும் நடந்து கொள்வது பற்றி யாரும் விமர்சிக்கலாம்.

ஆனால் தமிழறிஞர் கலைஞர்; நிகண்டில் நடந்த இடைச் செருகல் பற்றிக் கூறும் போது, நிகண்டு பற்றி தெரிந்தவர்கள் அதற்கு மறுப்புக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ஒரு பேச்சுக்கு கலைஞர் கூறுவது பொய்யென்று வைத்துக் கொண்டாலும், நிகண்டு பற்றி நாமும் அறிந்து அதன் பிறகு பதில் கூறுவதே முறை.

இதுவரை எந்த தமிழறிஞரும் அதற்கு மறுப்பு கூறவில்லை என்பதை நாம் இங்கே சிந்திக்க வேண்டும்.

எமக்கு தெரியாத ஒன்றில் "அப்படி இருக்கவே இருக்காது" என்று நாவலர் மீது கொண்டிருக்கும் குருட்டு நம்பிக்கையில் முடிவு எடுப்பது பகுத்தறிவு அல்ல.

இன்றைக்கு ஈழத்தில் நடக்கும் பிரச்சனைக்கு நாவலர் போன்றவர்கள் விட்ட தவறுகளும் ஒரு காரணம் என்று நான் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?

பௌத்தமா, இந்து மதமா முதல் தோன்றியது என்ற கேள்விக்கு "மதம்" என்றால் என்னவென்று தெரிந்தால்தான் விடை கிடைக்கும்.

நான் முன்பே சொல்லி உள்ளேன்.

"மதம்" என்று அடிப்படையில் முதலில் தோன்றிய மதம் "பௌத்த மதமே"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மதம்" என்று அடிப்படையில் முதலில் தோன்றிய மதம் "பௌத்த மதமே"

நீங்கள் எதனடிப்படையில் மதம் என்று துணிந்து பெளத்தத்தை முதல் தோன்றிய மதமாகக் கொண்டீர்கள் என்று விளக்குங்கள். அப்புறம் உங்களின் மதம் பற்றி விளக்கமாகச் சொல்வார்கள். :icon_idea::icon_idea:

Link to comment
Share on other sites

பௌத்தம் தோன்றுவதற்கு முன்பு இந்தியாவிலும் சரி, வேறு நாடுகளிலும் சரி, "மதம்" என்ற ஒன்று இருக்கவில்லை.

உலகம் முழுவதும் கடவுள் நம்பிக்கை, பயம் பேய்கள் பற்றிய பயம் போன்றன இருந்தன. கடவுள் வழிபாடு இருந்தது. உருவ வழிபாடுகள் இருந்தன. நெருப்பு, நீர், கிணறு, காற்று என்று எல்லாம் வழிபடுகின்ற வழக்கம் இருந்தன. சிறிய சிறிய வித்தியாசங்கள் இருந்தனவே தவிர வணங்கப்பட்ட கடவுள்களும், கொண்டாடப்பட்ட விழக்களும், நோக்கங்களும் ஒரே மாதிரியே இருந்தன.

இந்திய துணைக் கண்டத்தில், சிந்து வெளியில் இருந்தது "இந்து மதம்" என்று சொல்வதானால், உலகம் முழுவதும் "இந்து மதம்" இருந்தது என்று சொல்லிவிடலாம்.

சிந்து வெளியில் கிடைத்த கற்களைக் காட்டி, அதை லிங்கம் என்று ஏமாற்றுகின்ற வேலையை சிலர் செய்கிறார்கள். ஆனால் அது லிங்கம் அல்ல என்று அவர்களுக்கே நன்கு தெரியும்.

அப்படி அதை லிங்கம் என்று வைத்து "ஆண்குறி" வழிபாடு சிந்து வெளியில் இருந்ததை ஏற்றுக் கொண்டாலும், சில ஆபிரிக்க நாடுகளில் இருந்த "பெண்குறி" வழிபாடு போன்ற ஒன்றாக இருக்க முடியுதே தவிர, அது "இந்து மதமாக" இருக்கு முடியாது.

வெறும் வழிபாடுகள் மட்டும் "மதம்" என்று ஆகி விடாது.

மதம் என்பதற்கு ஒரு தனித்துவமான சித்தாந்தம், வழிகாட்டல், ஒருங்கிணைப்பு, கடவுள் நோக்கிய பார்வை, தனித்துவமான வழிபாட்டு முறை என்று நிறைய இருக்க வேண்டும்.

அதனாற்தான் பழங்குடிகளின் வழிபாட்டு முறைகளை "மதம்" என்ற ஒன்றிற்குள் அடக்குவதில்லை. அதற்கு தனித்துவமான அடையாளங்கள் இருப்பதில்லை. பொதுவாக "பழங்குடிகளின் மதம்" என்று சொல்வார்கள்.

இவ்வாறு கட்டுப்பட்டில்லாத வழிபாட்டு முறைகள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவையாக இருந்தன. அதில் உருவ வழிபாடுகள் இருந்தன. சிலர் மக்களை கடவுளைக் காட்டி அச்சுறுத்தி அடக்கி வைத்திருந்தார்கள். ஆபாசமான முறையில் வழிபாடுகளை செய்தார்கள். மதங்கள் தோன்றுவதற்கு முன்பு இப்படித்தான் உலகம் முழுவதும் இருந்தது. இன்றும் இருப்பது கவலைக்குரிய விடயம்.

பௌத்தம் என்பதுதான் ஒரு வழிகாட்டலோடு, ஒருங்கிணைப்போடு, மதக் கோட்பாட்டோடு உலகில் தோன்றிய முதலாவது "மதம்".

பௌத்தம் தோன்றிய பிறகுதான் தாம் நினைத்தபடி ஆடிக் கொண்டிருந்தவர்கள் தங்களுக்கும் ஒரு "மதம்" வேண்டும் என்று நினைத்தார்கள்.

அதன்பிறகுதான் அவசரம் அவசரமாக இந்து மதம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை அமைத்து, கோட்பாடுகள், சித்தாந்தங்கள் என்று உருவாக்கினார்கள்.

ஆனால் அது சரியான முறையில் உருவாக்கப்படவில்லை. அதனாற்தான் இந்திய உயர்நீதிமன்றம் கூட "இந்து மதம்" என்பது ஒரு "மதம்" இல்லை என்று தீர்பளித்திருக்கிறது.

அகராதிகளிலும் இந்து மதத்திற்கு அர்த்தம் "இந்தியாவில் வாழுகின்ற பௌத்தர், ஜைனர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் இல்லாதவர்" என்று எழுதியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தம் தோன்றுவதற்கு முன்பு இந்தியாவிலும் சரி, வேறு நாடுகளிலும் சரி, "மதம்" என்ற ஒன்று இருக்கவில்லை.

உலகம் முழுவதும் கடவுள் நம்பிக்கை, பயம் பேய்கள் பற்றிய பயம் போன்றன இருந்தன. கடவுள் வழிபாடு இருந்தது. உருவ வழிபாடுகள் இருந்தன. நெருப்பு, நீர், கிணறு, காற்று என்று எல்லாம் வழிபடுகின்ற வழக்கம் இருந்தன. சிறிய சிறிய வித்தியாசங்கள் இருந்தனவே தவிர வணங்கப்பட்ட கடவுள்களும், கொண்டாடப்பட்ட விழக்களும், நோக்கங்களும் ஒரே மாதிரியே இருந்தன.

இந்திய துணைக் கண்டத்தில், சிந்து வெளியில் இருந்தது "இந்து மதம்" என்று சொல்வதானால், உலகம் முழுவதும் "இந்து மதம்" இருந்தது என்று சொல்லிவிடலாம்.

சிந்து வெளியில் கிடைத்த கற்களைக் காட்டி, அதை லிங்கம் என்று ஏமாற்றுகின்ற வேலையை சிலர் செய்கிறார்கள். ஆனால் அது லிங்கம் அல்ல என்று அவர்களுக்கே நன்கு தெரியும்.

அப்படி அதை லிங்கம் என்று வைத்து "ஆண்குறி" வழிபாடு சிந்து வெளியில் இருந்ததை ஏற்றுக் கொண்டாலும், சில ஆபிரிக்க நாடுகளில் இருந்த "பெண்குறி" வழிபாடு போன்ற ஒன்றாக இருக்க முடியுதே தவிர, அது "இந்து மதமாக" இருக்கு முடியாது.

வெறும் வழிபாடுகள் மட்டும் "மதம்" என்று ஆகி விடாது.

மதம் என்பதற்கு ஒரு தனித்துவமான சித்தாந்தம், வழிகாட்டல், ஒருங்கிணைப்பு, கடவுள் நோக்கிய பார்வை, தனித்துவமான வழிபாட்டு முறை என்று நிறைய இருக்க வேண்டும்.

அதனாற்தான் பழங்குடிகளின் வழிபாட்டு முறைகளை "மதம்" என்ற ஒன்றிற்குள் அடக்குவதில்லை. அதற்கு தனித்துவமான அடையாளங்கள் இருப்பதில்லை. பொதுவாக "பழங்குடிகளின் மதம்" என்று சொல்வார்கள்.

இவ்வாறு கட்டுப்பட்டில்லாத வழிபாட்டு முறைகள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவையாக இருந்தன. அதில் உருவ வழிபாடுகள் இருந்தன. சிலர் மக்களை கடவுளைக் காட்டி அச்சுறுத்தி அடக்கி வைத்திருந்தார்கள். ஆபாசமான முறையில் வழிபாடுகளை செய்தார்கள். மதங்கள் தோன்றுவதற்கு முன்பு இப்படித்தான் உலகம் முழுவதும் இருந்தது. இன்றும் இருப்பது கவலைக்குரிய விடயம்.

பௌத்தம் என்பதுதான் ஒரு வழிகாட்டலோடு, ஒருங்கிணைப்போடு, மதக் கோட்பாட்டோடு உலகில் தோன்றிய முதலாவது "மதம்".

பௌத்தம் தோன்றிய பிறகுதான் தாம் நினைத்தபடி ஆடிக் கொண்டிருந்தவர்கள் தங்களுக்கும் ஒரு "மதம்" வேண்டும் என்று நினைத்தார்கள்.

அதன்பிறகுதான் அவசரம் அவசரமாக இந்து மதம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை அமைத்து, கோட்பாடுகள், சித்தாந்தங்கள் என்று உருவாக்கினார்கள்.

ஆனால் அது சரியான முறையில் உருவாக்கப்படவில்லை. அதனாற்தான் இந்திய உயர்நீதிமன்றம் கூட "இந்து மதம்" என்பது ஒரு "மதம்" இல்லை என்று தீர்பளித்திருக்கிறது.

அகராதிகளிலும் இந்து மதத்திற்கு அர்த்தம் "இந்தியாவில் வாழுகின்ற பௌத்தர், ஜைனர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் இல்லாதவர்" என்று எழுதியுள்ளார்கள்.

இதில் நீங்கள் வழமையான உங்கள் கற்பனைகளை மட்டுமே தந்துள்ளீர்கள். மதம் என்பதற்கான நடைமுறையில் உள்ள உலக வரைவிலக்கணம் என்ன...???! அதன் அடிப்படையில் எப்படி பெளத்தம் உலகின் முதல் மதமானது என்பதைச் சொல்லுங்கள்.

உங்கள் கற்பனையை நாம் கேட்கவில்லை. அது கேட்டுச் சலித்தும் விட்டது. அதனால் பயனும் ஏதும் இல்லை. எனவே மதம் என்பதற்கான நடைமுறை வரைவிலக்கணம் என்ன..அதனடிப்படையில் பெளத்தம் எப்படி உலகின் முதல் மதமாகக் கருதப்பட முடியும். அதற்காக அது கொண்டுள்ள தன்மைகள் என்னென்ன...??! அதைக் கூறினால் மட்டும் போதுமானது. :icon_idea:

Link to comment
Share on other sites

மதம் என்பதற்கு ஒரு தனித்துவமான சித்தாந்தம், வழிகாட்டல், ஒருங்கிணைப்பு, கடவுள் நோக்கிய பார்வை, தனித்துவமான வழிபாட்டு முறை என்று நிறைய இருக்க வேண்டும்.

இவைகள் இந்து மதத்தில் இல்லை.

பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற "மதங்களில்" இருக்கின்றன.

அப்படி இந்து மதத்தில் இருந்தால் அவைகள் குறித்து "இந்துவான" நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

குறுக்கிடுவதட்கு மன்னிகவும்.ஏனப்பா இவ்வளவு சண்டை?பேசாமல் எல்லாரும் பெளத்த மததிற்க்கு மாரி விடுங்கோ 'புத்தம் சரணம் கச்சாமி' என்டு, இங்கேயும் சண்டை இருக்காது, நாட்டிலயும் சண்டை இருக்காது, இலங்கை ஒரு பெளத்த நாடு என்பதை எல்லோரும் சேர்ந்து மெய்பிப்பொம், பிறகு, இந்த சண்டை எல்லாம் இருக்காது, வேனுமெண்டால், நாங்களும் சிங்களவரும் சேர்ந்து, முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் மாத்துவோம். இந்த பகுத்தறிவு முதலிலே எங்களுக்கு வந்திருந்தால், 'திரிகோணமலை புத்த்ர் சிலை விவகாரமே' வந்திருகாதே? நாங்களாவே சிலையை கொண்டே அரச மரம் உள்ள எல்லா இடத்திலும் வைதிருப்போமே? :P

Link to comment
Share on other sites

இலங்கையில் முதலில் சிங்களவர்கள் பௌத்தத்திற்கு மாற வேண்டும்.

அப்படிச் செய்தாலும் பிரச்சனை தீர்ந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முதலில் சிங்களவர்கள் பௌத்தத்திற்கு மாற வேண்டும்.

அப்படிச் செய்தாலும் பிரச்சனை தீர்ந்து விடும்.

எதுக்கும் விண்ணுலகிற்கு ஒரு கோல் போட்டு புத்தரிடம் எதுப்பா பெளத்தமதம் என்று கேட்டுவிட்டு செய்யுங்கள். காரணம் புத்தர் தனது கொள்கைகளை மதமாகப் பின்பற்றுவார்கள் என்று கனவும் கட்டிருக்கமாட்டார். அவர் ஒரு தத்துவஞானி அவ்வளவே. அவரின் போதனைகளை வைத்து மதமாக்கியது பின்னால் வந்த உங்கள் போன்றோரின் வேலை அந்தளவும் தான் உலக உண்மை. :D:icon_idea:

Link to comment
Share on other sites

பௌத்தத்தில் விண்ணுலகம் என்பது இல்லை

தலதாமாளிகை பல்லிலையும், மயிரிலையும் அந்த வெள்ளரசிலையும்தான் இருகாமே...???? இல்லை அதையும் விளுந்து விளுந்து கும்பிடுகினமே அதுதான் கேட்டனான்..???

உலகத்திலையே பழமையான மரமும், மத தலைவரின் ஜீன்களை சுமந்து நிக்கும் அதுகளை யாராவது ஆராட்ச்சி செய்து நிறூபித்தவையோ எண்டு ஒருக்கா விசாரிச்சு சொல்லுறீறோ..??? :D:):lol:

Link to comment
Share on other sites

உலகிலேயே பௌத்தத்துக்கு முதல் வேறு மதங்கள் தோண்றவில்லை என்பவர் பௌத்தர்கள் பொய் சொல்லவில்லை என்பதை நிறூபிக்க வேண்ணும்... மற்றவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பவரின் கடமையும் கூட...! :D

Link to comment
Share on other sites

தல,

சிங்கள பேரினவாதிகள் கடைப்பிடிப்பது பவுத்தம் அல்ல,

இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்ப வேண்டாம்.

பவுத்தம் சிங்களவருடையது அல்ல, சிங்களவர் பவுத்தத்தைத் தழுவி அதனை ஒரு இனவாதக் கோட்பாடாக மகாவம்சத்தினூடாக

மாற்றி உள்ளனர்.சிங்களவர்கள் உண்மையான பவுதர்களாக இருந்தால் இலகையில் இனப்பிரச்சினையே ஏற்பட்டிருக்காது.

வட பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பவுத்த ஆலயங்கள் தமிழ் பவுத்தருடையவை, தமிழ் நாட்டிலும் அவ்வாறே.

Link to comment
Share on other sites

இலங்கை இண்றுவரை பல பௌத்த சபைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட பௌத்த நாடாகத்தான் இருக்கிறது.... நாங்கள் இண்று காணும் பௌத்தம் என்பது வேறு உண்மையான பௌத்தம் வேறு எண்று சொல்வது எல்லாம் சும்மா...! இண்றும் கூட பல மகாசங்கங்களும் பௌத்தத்தின் பலபிரிவுகளும் இருக்கின்றன... அப்படி எண்றான் பௌத்தம் எப்படி பிரிந்து போனது எண்றாவது சொல்வீர்களா..??? பிடிந்து போகின்றது எண்றால் அடிப்படையில் ஏதாவது பிழை இருந்து இருக்க வேணுமே...??? அப்படி என்ன பிழை இருக்கிறது....!

இப்போ இலங்கை பற்றி சொல்ல வேணும்... இலங்கையில் ஆயிரம் ஆயிரமான ஆண்டுகளாய் சாதியம் தலைவிரித்து ஆடுகிறதே...??? (தமிழர்களிலும் பார்ர்க்க) உடரட்ட, ரஜரட்ட, கெமுனு, எண்டெல்லாம் பிரிவுகள் இருக்கிறதே... பல மகா சங்கங்கள் இருக்கின்றனவே, பல ஏற்றத்தாள்வுகள் இருக்கின்றனவே..! அதுக்கு எல்லாம் இந்து சமயமும், சைவமும், அதன் உட்பிரிவுகளும், வேதங்களும், தான் காரணம் எண்று சொல்லப்போகிறீர்களா..???

முதலில் இந்து எண்றும் பார்ப்பணர் என்பது எல்லாத்தையும் விட்டு மற்றவர்களையும் பாருங்கள்... நீங்கள் செருப்புடனாவது இருக்கிறீர்கள்... மற்றவர்கள் அதுவும் இல்லாமல் நிக்கிறார்கள்....

Link to comment
Share on other sites

இந்து மதமும் ஆரியமும் இல்லாமல் இந்திய உபகண்டத்தில் வரலாறு இல்லை.இருப்பதைத் தான் சொல்ல முடியும்.

வடக்கே நேபாள மவோக்களில் இருந்து தெற்கே பெரியார் வரை போராடுவது உந்த ஆரியர் உருவாக்கிய பார்ப்பனீயம் என்னும் சாதிய சமூகக் கட்டுமானத்திற்கு எதிராகத் தான்.இந்த கட்டுமானத்தை நிறுவியது இந்து மதமும் பார்ப்பனர் உருவாக்கிய வேதமூம் தான்.இதற்கு எதிராகத் தான் கவுத்தமர் போரிட்டார்.சமூக அவலங்களுக்கு எதிராகத் தான் அவர் போதனைகள் இருந்தன.பின்னர் அது மதமாகி நிறுவனப்பட்டு போனது.மற்ற மதங்களைப் போலவே கவுத்தமர் என்ன சொன்னார் என்பதை விட்டு விட்டு அவரைக்கடவுள் ஆக்கி .விக்கிரகமாக்கி ,விகாரைகளைக் கட்டி வழி பட்டனர்.ஆனால் அவரின் சிந்தனைகளை மட்டுமே தமது வாழ்வியலின் ஒழுக்க நெறியாக்கி உள்ள பவுத்தர்களும் உண்டு.இவர்களில் தமிழர்களும் அடங்கும்.என்னைப் பொறுத்தவரை நான் எந்த நிறுவனப்படுத்தப்பட மதங்களையும் பின் பற்றுவதில்லை.ஆனால் கொவுதமர் என்ன சொன்னார் யேசு என்ன சொன்னார் நபிகள் என்ன சொன்னார் சித்தர்கள் என்ன சொன்னார்கள் என்பவற்றை வாசித்து அறிந்துள்ளேன்.அவர்கள் மனித சிந்தனையாளர்கள் என்ற வகையில்.இவைகளில் இருந்து எனக்குச் சரி எனப்பட்டதை நான் ஏற்றுக்கொண்டு எனக்கென வாழ்வியல் நியதிகளை உருவாக்கி வைத்துள்ளேன்.ஆகவே நான் எந்த நிறுவனப்படுத்தப்பட்ட மதத்தையும் சேராதவன்.

மற்றப்படி உலகம் எவ்வாறு தோற்றம் பெற்றது உயிர்கள் எவ்வாறு தோன்றின என்பவற்றை பொறுத்த மட்டில் விஞ்ஞானரீதியாக கண்டு பிடிக்கப்பட்டவற்றை நம்புபவன்.விஞ்ஞான ரீதியாக இன்னும் விளங்கப்படுத்த முடியாதனவை தெரியாதனவாக இருந்து விட்டுப்போகட்டும்.அவற்றுற்க

Link to comment
Share on other sites

கலானிதி தம்பையா என்று நினைக்கிறேன் அவர் ஒரு புத்தகம் எழுதினார் 'புடிசம் பிற்றேயிட்' என்று அதாவது வஞ்சிக்கப்பட்ட புத்த மதம் என்று. அதில் ஆய்வு ரீதியாக எவ்வாறு சிறிலங்காவில் புத்த மதம் திரிபு படுத்தப்பட்டு புத்தரின் போதனைகள் சிதைக்க படுள்ளதை ஆதார பூர்வமாக எடுத்துக் காட்டி இருந்தார்.எங்காலும் இணயத்தில் தட்டுப் பட்டால் இணைக்கிறேன்.இதற்கு கடுமையான எதிர்ப்பு சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து வந்தது.சிறிலங்காவில் இந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Given Buddhism's presumed non-violent philosophy, how can committed Buddhist monks and laypersons in Sri Lanka today actively take part in the fierce political violence of the Sinhalese against the Tamils?

Stanley Jeyaraja Tambiah's Buddhism Betrayed? seeks to answer this question by looking closely at the past century of Sri Lankan history and tracing the development of Buddhism's participation in such ethnic conflict and collective violence. Tambiah analyses the ways in which this participation has, over time come to alter the very meaning of Buddhism itself as a lived reality.

Even before Sri Lankan independence, Buddhist activists and ideologues—monks and laypersons, educators and politicians - accused the British raj of "betraying" Buddhism and spoke of a need to restore Buddhism to its rightful place in the life and governance of the country. Tambiah sympathetically portrays and critically assesses the ways in which these views gave rise to discriminatory anti-Tamil policies. He details the increasingly volatile nature of the participation of monks in national politics from its first stirrings in the 1940s to its final phase, when some monks themselves become parties to violence. The successive transformations of "political Buddhism" and what some vocal Buddhist monk ideologues now conceive as an ideal Buddhist-administered society are outlined and evaluated.

Buddhism Betrayed? skilfully combines detailed scholarship with the author's own passionate plea for an end to hostilities. In the eloquent essay on the "burdens of history" in Sri Lanka that concludes the book, Tambiah examines the Sinhalese Buddhists' alleged long-term historical consciousness, with its anti-Tamil sentiments as portrayed in chronicles written by monks over the centuries, and advances countervailing evidence in Sinhalese history of tolerant assimilation and incorporation of peoples and traditions from South India.

http://www.tamilnation.org/books/Eelam/buddhismbetrayed.htm

Link to comment
Share on other sites

இந்து மதமும் ஆரியமும் இல்லாமல் இந்திய உபகண்டத்தில் வரலாறு இல்லை.இருப்பதைத் தான் சொல்ல முடியும்.

வடக்கே நேபாள மவோக்களில் இருந்து தெற்கே பெரியார் வரை போராடுவது உந்த ஆரியர் உருவாக்கிய பார்ப்பனீயம் என்னும் சாதிய சமூகக் கட்டுமானத்திற்கு எதிராகத் தான்.இந்த கட்டுமானத்தை நிறுவியது இந்து மதமும் பார்ப்பனர் உருவாக்கிய வேதமூம் தான்.இதற்கு எதிராகத் தான் கவுத்தமர் போரிட்டார்.சமூக அவலங்களுக்கு எதிராகத் தான் அவர் போதனைகள் இருந்தன.பின்னர் அது மதமாகி நிறுவனப்பட்டு போனது.மற்ற மதங்களைப் போலவே கவுத்தமர் என்ன சொன்னார் என்பதை விட்டு விட்டு அவரைக்கடவுள் ஆக்கி .விக்கிரகமாக்கி ,விகாரைகளைக் கட்டி வழி பட்டனர்.ஆனால் அவரின் சிந்தனைகளை மட்டுமே தமது வாழ்வியலின் ஒழுக்க நெறியாக்கி உள்ள பவுத்தர்களும் உண்டு.இவர்களில் தமிழர்களும் அடங்கும்.என்னைப் பொறுத்தவரை நான் எந்த நிறுவனப்படுத்தப்பட மதங்களையும் பின் பற்றுவதில்லை.ஆனால் கொவுதமர் என்ன சொன்னார் யேசு என்ன சொன்னார் நபிகள் என்ன சொன்னார் சித்தர்கள் என்ன சொன்னார்கள் என்பவற்றை வாசித்து அறிந்துள்ளேன்.அவர்கள் மனித சிந்தனையாளர்கள் என்ற வகையில்.இவைகளில் இருந்து எனக்குச் சரி எனப்பட்டதை நான் ஏற்றுக்கொண்டு எனக்கென வாழ்வியல் நியதிகளை உருவாக்கி வைத்துள்ளேன்.ஆகவே நான் எந்த நிறுவனப்படுத்தப்பட்ட மதத்தையும் சேராதவன்.

சைவம் எப்போ தோண்றியது என்பதையும் விட நீங்கள் சொல்லும் பௌத்தம் அதனிலும் பிந்தான் வந்தது என்பதை ஒத்துக்கொண்டதையிட்டு மகிழ்ச்சி....

புத்தர் சொன்ன பகுத்தறிவில் எனக்கு எந்த விதமான மாற்று கருத்தும் கிடையாது... மனிதன் சுயமாக சிந்திக்க வேணும் எண்றுதான் சைவ சித்தாந்தங்களும் சொல்கின்றன...

நீங்கள் எல்லாம் சொல்வது போல ஏற்றத்தாள்வுகளை எண்றுமே இந்து மதம் சொல்லிக்கொடுக்க வில்லை... கடவுளில் எந்த அவதாரமும் பார்பணனாகவோ உயர்குடி மன்னனாகவோ இருந்தது இல்லை... ( வெங்கடாசலப்பதி எனப்படும் விஸ்னு 9 அவதாரங்களில் இருண்டில் ஐங்காராக வந்தாராம்) சுடலை காப்பவனும், மாடு மேய்ப்பவனும், மீனவனும், வேடனும் , இப்படி பல அவதாரங்கள் எல்லாமே கறுப்பு நிறமுடைய உருவத்தினர் நீங்கள் சொல்லும் ஆரிய உருவத்தை கொண்டதாக எங்குமே சொல்லப்பட்டு இருக்க வில்லை...

பிராமணன் என்பதன் உண்மை அர்த்தம் பிரம்மம் அறிந்தவன் என்பதாகும்.... கல்வியில் சிறந்து விளங்கியவன் என்பதாகவும் சொல்கிறது சமஸ்கிருத விளக்கம். முற்காலத்தில் ஒற்றை பிராமணனில் விளிப்பது தரித்திரம் என்றார்கள் அதை இப்போதும் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள்... அதன் உண்மையான அர்த்தம் பிராமணர்கள் தரித்திரர்கள் என்பதாகும். அதாவது கோயில்களிலும் மடங்களிலும் பணி செய்து சாப்பிட்ட அவனுக்கும் குடும்பத்துக்கும் மிஞ்சிய பட்டம் அது.... பிராமணர் ஒருவன் அரிசியை சமைத்து சாப்பிட்டால் அதுக்கு அவன் சமஸ்கிருத்தில் சொல்லும் சொல் பிரசாதம். பிராமணன் அல்லாதவன் அரிசியை சமைத்து உண்டால் அதுக்கு பெயர் சாதம். எல்லாருக்கும் ஏதோ பிராமணன் உயர்வாக கூறிக்கொண்டு சாப்பிடுகிறான் என்பதாகத்தான் படும். ஆனால் அது உண்மையானது அல்ல பிரசாதம் எண்றான் அதன் அர்த்தம் தானம் என்பதாகும்... நீங்கள் கொடுத்த தானத்தை சாப்பிடுபவந்தான் பிராமணன்...

அப்படி வறுமை என்பது இப்போதும் பல பிராமண குடும்பங்களின் வளமை... காரணம் பூசை புணர்ஸ்காரங்களையும் விட்டால் அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது... தெரிந்தாலும் செய்ய விடமாட்டார்கள் மற்றவர்கள்...! கல்வி கற்பது மட்டுமே வறுமையின் மத்தியிலும் அவர்களால் முடிந்தது... இண்று எல்லா திசைகளிலும் அவர்கள் கோலோச்சுகிறார்கள் எண்றால் அதன் காரணம் பிராமணக்குடும்பங்கள் கற்று இருக்கின்றன. பிள்ளைகளுக்கும் கற்பிக்கிறார்கள்.....!

இந்து மதத்தில் மற்றவர்கள் உயர்வடைய வளி இல்லை என்பது எல்லாம் இல்லை அப்படி உயர்ந்தவர்கள் பலர்... கல்வியும் அறிவும் மனிதனை வளப்படுத்தும்.. மதம் மனிதனை வளிப்படுத்தும்... அதில் பார்ப்பண எதிர்ப்பு என்பது வீணான பொல்லாங்கு.. அவர்களை விட உயரமாக எல்லாராலும் வரமுடியும்.. வரமுயற்ச்சி செய்ய வேணும் அப்போ அவர்களாக உங்களோடு வந்து சேர்ந்து கொள்வார்கள்.....!

இல்லை உங்களை வகைப்படுத்தும் பார்ப்பான் எண்றும் அவனை ஒடுக்க வேணும் எண்று நினைப்பீர்கள் எண்றால். உங்களை எல்லாம் உலகத்தில் ஒரு மூலையில் இருந்து வகைப்படுத்தி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியதையும்.... லண்டனில் கூட இனத்துவேசம் கொண்டு எங்களை எல்லாம் ஒதுக்கி வைக்கும் வெள்ளை இனத்தவர்களையும் சேர்த்து ஒடுக்குங்கள். புண்ணியமாக போகும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலால் உணவு உண்ணாதவர்கள் திறமைசாலிகளாக இருப்பார்கள் என்று ஒரு விஞ்ஞான ஆய்வு சொல்கின்றது. பிராமணர் ஏன் அறிவாளிகளாக விளங்குகின்றார்கள் என்று விவாதிப்பவர்கள் இந்த ஆய்வையும் உங்களுக்கு சாதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.. <_<

http://news.bbc.co.uk/1/hi/health/6180753.stm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலால் உணவு உண்ணாதவர்கள் திறமைசாலிகளாக இருப்பார்கள் என்று ஒரு விஞ்ஞான ஆய்வு சொல்கின்றது. பிராமணர் ஏன் அறிவாளிகளாக விளங்குகின்றார்கள் என்று விவாதிப்பவர்கள் இந்த ஆய்வையும் உங்களுக்கு சாதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.. <_<

http://news.bbc.co.uk/1/hi/health/6180753.stm

இதென்ன கதையா இருக்குது...பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையாய்..பெண்களின் ஐகியு குறைவாக் காட்டி இருக்கினம்....

"Men who were vegetarian had an IQ score of 106, compared with 101 for non-vegetarians; while female vegetarians averaged 104, compared with 99 for non-vegetarians." :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.