Jump to content

ஓர் பேரிழப்பும் அதன் உளவியல் தாக்கமும் ... அஞ்சரன் முகடு சஞ்சிகை


Recommended Posts

வித்தியாவின் இழப்பு என்பதற்கு அப்பால் ,அதில் இருந்து குடும்பம் மீண்டு வருவதும் அல்லது அவள் நினைவில் மண்டு போவதுமாக ,நித்தம் நித்தம் கண்ணீரும் சோறுமாக அவள் பேச்சும் குறும்பும் விளையாட்டு சீண்டலும் என்று ஒரே ஆரவாரம் ,சிரிப்பொலியுடன் இருந்த வீடு இன்று பெரும் சோக முகில்களை தாங்கி இருண்டு எப்பொழும் விம்மி வெடிக்கும் கனத்த இதயத்துடன் ,அன்பான அவளது குரல் இல்லாது செவிகள் இனிமையான ஒலிகளை கூட கேட்க மறந்து கிடக்கிறது ...........

இவற்றுக்கு எல்லாம் அப்பால் அந்த கொடும் துயரின் பிடியின் இறுக்கத்தில் இருந்து தளர்வுகள் வரும் போது எல்லாம் ,சுற்றி உள்ள சமூகம் சரி இணையங்கள் ஊடகங்கள் என்று ஏதாவது ஒன்று ,அந்த ரண வேதனையை மீண்டும் பெரும் ஈட்டி கொண்டு தாக்குவது சொல்லனா துன்பம் ......
தங்களுக்குள் எழும் சுய இன்ப கேள்விகளை வித்தியா என்னும் பிஞ்சின் மீது எறிவதும் கானது என்று அவள் குடும்பம் மீதும் அள்ளி தெளிப்பது கூட ஒரு சில மனிதர்களுக்கு பேரின்பத்தின் திளைப்பை கொடுகிறது போலும் ......

பெற்ற பிள்ளையை பெரும் போரின் பிடியிலும்,பொருளாதார கஷ்டத்தின் மத்தியிலும் தன் நோய் இயலாமையை கூட பொருள் படுத்தாது கட்டைக்கனக்காக சைக்கிள் மிதித்து தந்தை பெரும் கனவுடன் வளர்த்த மகளை ஆளாகி தேவதைபோல் அலங்கரித்து ,தன் சுமைகளை ஒற்றை ஆளா அவள் சுமப்பாள் பாரு என்று செருக்குடன் வாழ்த் அந்த தாய் தந்தை மனநிலை எப்படி துடிக்கும் பதைக்கும் என்று கூட அறியாத சில மூடர்கள் அவர்களை பெரும்பாலும் மனிதர்களாகவே எடுக்க கூடாது ,பிள்ளையின் பிரிவின் ஊடாக உங்களுக்கு வீடு தந்ததாம் காசு தந்ததாம் என்று நலம் விசாரிக்கும் சாட்டில் விடுப்பு கேட்கும் தருணங்கள் உலகில் இவர்களும் வாழ்கிறார்கள் என்றே சாபிக்கும் ....
ஒரு நாள் பொழுது ஓயாது ஒலிக்கும் தொலைபேசியில் ,எவர் அன்பு விசாரிக்க எடுக்கிறார் ,எவர் வம்பு அளக்க எடுக்கிறார் ,எவர் வழக்கின் போக்கை கேட்க எடுக்கிறார் என்று குழம்பியே தொலைபேசியை கையில் எடுக்க வேண்டிய ஒரு பதட்டமான மன சூழலை உருவாக்கி விடுகிறது இந்த நல்ல மனிதர்கள் வேஷம் போடும் அயோக்கியர்கள் கேள்விகள் .........

சங்கங்கள் ,அமைப்புகள் ,நிறுவனங்கள் எல்லாம் உணர்ச்சி பெருக்கில் வித்தியா குடும்பத்துக்கு உதவி செய்கிறோம் என்று அவளின் இறுதி நாள்களில் ஒலிவாங்கி முன் ஓலம் இட்டுவிட்டு போய் விட்டார்கள் .....
அவர்களின் ஓலங்களில் சிக்கி தவிப்பது என்னமோ அவளின் குடும்பமே ,ஊருக்கும் பேருக்கும் புகழுக்கும் வசித்து விட்டு போனவர்களுக்கு தெரியாது ,சுற்றி இருந்து விடுப்பு பார்க்கும் சமூகம் சீட்டு கணக்கு போல் இதை எழுதி வைக்கும் அல்லது மனப்பாடம் செய்யும் என்று .......

அங்கிருத்து இவ்வளவு வந்ததாம் ,இங்கிருத்து இவ்வளவு வந்ததாம் ,அவர் கொடுத்ததாம் இல்லை இவரும் சேர்த்து கொடுத்ததாம் கிட்டத்தட்ட நல்ல காசு வந்திருக்கும் என்று பேசும் ,மனிதர்களாக உலாவும் விஷ ஜந்துக்கள் அறியமாட்டார் அவர்கள் நாளை என்ன சமைப்பார்கள் என்று .......

நித்தம் அவள் பிரிவு கொடுக்கும் வேதனையை விட இந்த பரிகசிக்கும் மனிதர்கள் கொடுக்கும் வலி மிக கொடியது ,வித்தியா குடும்பம் அன்றும் இன்றும் இருக்கும் நிலை ஒன்றுதான் மறுத்தால் இப்பொழுது வித்தியா இல்லை என்பதே தவிர மற்றும்படி அவர்களின் வாழ்க்கை சம ஓட்டமே ,யாழில் ஒரு வாடகை வீட்டுக்கு கூட சிரமப்படும் நிலையில் இருந்துகொண்டு வந்த லட்சங்களை என்ன செய்வார்கள் இவர்கள் என்று பின்னாடியே சுற்றும் பேய்களை என்னவென்று சொல்வது ......

வீடுதரலாம் என்று சொல்பவர்கள் நேரில் போனால் ,ஓ நீங்க வித்தியா குடும்பமா பொலிஸ் கேஸ் விசாரணை என்று ஆக்கள் அடிக்கடி வந்து போவீனம் அதாலால் உங்களுக்கு வீடு தருவது எங்களுக்கு கடினம் என்று சொல்லும் போதும் நாம் இவர்களை நினைத்து கவலை கொள்வதா இல்லை வித்தியாவை நினைத்து கண்ணீர் விடுவதா அதன் மன அழுத்தம் உளைச்சல் எத்தகையது .....
நீதியை கேட்கும் கேட்க போராடும் அல்லது போராடுறம் என்று சொல்பவர்கள் முதலில் ,சம தர்மம் ஊடக தர்மம் கொண்டாவது நீதிக்கு வாய்ப்பு கொடுங்கள் ,நீங்கள் போடும் புகழ் தேடிய வெளிச்சத்தில் வித்தியா என்னும் மெல்லிய ஒளி தெரியாமல் போய் விடும் மனிதநேயத்தின் பெருமான்களே ....

நீங்கலாக வந்து கைகளை கொடுத்து விட்டு ,இதில் எனக்கு எந்த இலாபமும் வாராது எதுக்கு மினக்கேடுவான் என்று நினைத்து ,பொய்களை பலிகளை உதிர்த்து விட்டு ,உங்கள் சித்து விளையாட்டுகளை காட்டி விட்டு நீங்கள் போய் விடுவீர்கள் அடுத்த வருமானம் நோக்கி ஆனால் நாம் அதே திண்ணையில் இருந்து நீங்கள் எங்களுக்கு உதவி என்னும் பெயரில் பெரும் உபாதை கொடுத்ததை நாம் யாரிடம் சொல்லி அழுவோம் ...

ஆகவே மன அழுத்தத்தின் உச்சிக்கு செல்லும் வேளைகளில் ,குற்றம் இழைத்தவர்களை கூட மன்னிக்கலாம் ஆனால் இந்த வீம்பு பேசி விசரை கிளப்பும் மூதேவிகளை கொன்று போட்டால் என்ன என்று மனம் சிலவேளை சந்நிதம் ஆடுவது தவிர்க்க முடிவதில்லை ........

கண்களில் கண்ணீரும் இன்றி இருக்கும் அவர்களை விட்டு விடுங்கள், உங்கள் உதவிகள் என்னும் முள்கள் கொண்டு கீறி கிழிக்காது ,சமூக நீதிகளே.

 

11165288_443420022485434_4530665943597037025_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அஞ்சரன்.

Link to comment
Share on other sites

வணக்கம் அஞ்சரன்.

வணக்கம்  அண்ணே ...

 

நன்றி வருகைதந்த  அனைவருக்கும் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கு இழப்புக்களால்  ஏற்படும்  உளவியல் தாக்கங்களும் தொடரும் விரக்தி நிலையும் மற்றவர்களுக்குத் தெரியாது.அவை சடங்களாகவே உணரப்படுகின்றன. உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே மனிதப் பண்பு.
பல இடங்களில் அது தமிழர்களிடம் இல்லாமற் போய் விடுகின்றது.

Link to comment
Share on other sites

ஒருவருக்கு இழப்புக்களால்  ஏற்படும்  உளவியல் தாக்கங்களும் தொடரும் விரக்தி நிலையும் மற்றவர்களுக்குத் தெரியாது.அவை சடங்களாகவே உணரப்படுகின்றன. உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே மனிதப் பண்பு.
பல இடங்களில் அது தமிழர்களிடம் இல்லாமற் போய் விடுகின்றது.

நன்றி வாத்தியார் வருகை தந்தமைக்கு. ...பக்கத்து வீட்டுக்காரனே அப்படி இருக்கும் போது வெளியே எப்படி பேசுவர் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.